Aggregator

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

1 month 2 weeks ago
ஓம், மிக முக்கியமானவர்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்களை பாதுகாப்பதும் அரசியல்வாதிகள் தான். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனை பாதுகாக்க…. மகிந்த, கோத்தா, ரணில்… என்று மூன்று ஜனாதிபதிகள் குத்தி முறிந்தார்கள். கடைசியில் அனுரா அரசில் கைது செய்யப் பட்ட போது… அவரின் வீட்டில் 385 உயர்தர மது பண போத்தல்கள் இருந்தனவாம். இவை எல்லாம் ஏதோ ஒரு குற்றச் செயலை மறைக்க கொடுக்கப் பட்ட லஞ்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது. இதனை விட… கோடிக்கணக்கில் பணமும் புழங்கி இருக்கும்.

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

1 month 2 weeks ago
பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

1 month 2 weeks ago
புழுகு மோடி அந்த நாடுகளின் பட்டியலை வெளியிடலாமே? விடுதலைப்புலிகளிடம் வலிய வந்து வாங்கிக்கட்டியதையும் சொல்லலாம். இலங்கை ஜனாதிபதியும் உப்பிடித்தான் கதை விட்டவர் உண்மையை, அவர்கள் செய்த கொடூரத்தை மறைக்க. பரவாயில்லையே, இலங்கைக்கு ஒன்றும் சளைத்தது இல்லை இந்தியா. எத்தனை அப்பாவிகளின் வீடுகளோ? காரணமானவர்களை அழிக்க முடியாவிட்டாலும் வீடுகளை அழித்து விட்டீர்கள். இனி பயங்கரவாதிகள் வாழவே முடியாது. குடிமக்களையும் அவர்களின் இல்லங்களையும் குண்டுபோட்டு அழித்து விட்டு, புலிகளையும் அவர்களின் முகாம்களையும் அழித்துவிட்டோம் என்பார்கள், பின் இராணுவத்திற்கு ஆள், பணம் சேர்ப்பார்கள். அதெப்படி என்று யாரும் கேட்க்கவுமில்லை, இவர்கள் சொல்லவுமில்லை.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

1 month 2 weeks ago
பன்னீர்செல்வம் நேற்று முதல்வர் ஸ்ராலினை போய் சந்தித்து இருக்கின்றார். தி. மு.க. வில் போய் சேரப்போகின்றார் போலுள்ளது.

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

1 month 2 weeks ago
எனக்கு தெரிந்தவரின் உறவினர் சீனியர் அவருக்கு டொக்டர் நன்றாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றார் இவருடைய வீட்டில் இருந்து இரண்டாவது பஸ் நிறுத்துமிடம் ஒன்று +அரை கிலோ மீட்டரில் உள்ளது ஒரு லேசான ஏற்றம். இவர் என்ன செய்வார் என்றால் அந்த பஸ் நிறுத்துமிடத்திற்கு பஸ்சில் செல்வார் அங்கே இருந்து இறக்கத்தை நோக்கி நடந்து வீடுவந்து சேர்வார்.

அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!

1 month 2 weeks ago
ஓம் தான் அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நினைத்தாராம் ஆனால் அது இஸ்ரேல்லின் Tel Aviv போல் தோன்றுகின்றதாம் இலங்கை காத்தான்குடியை பார்த்த போது இந்த பொய்யருக்கு எப்படியாம் தோன்றியது? அவுஸ்ரேலியாவில் புர்க்காக்களை தாடிகளை பார்க்கின்ற போது எப்படி தோன்றியதாம்?

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

1 month 2 weeks ago
பொதுவாக மூளைக்கு என்ன நடக்கிறது என்பது (மற்ற உடல் பகுதியில் இருந்து) அறிவிக்கப்பட்ட பின்பே, மூளை எதை செய்ய வேண்டும் (குறிப்பிட்ட பகுதிக்கு) என்பதை அறிவுறுத்தும். உ.ம். ஆக இயங்கும் போது காலோ கையோ அடிபடப்போவது மூளைக்கு தெரியாது. அடிபட்ட உடன் மூளைக்கு செல்லும் சமிக்கியை, குறித்த அங்கத்தை அந்த இடத்தில் விலத்துமாறு அறிவிப்பது. இப்படியானதே நாம் துள்ளுவது, பின்னோக்கி அங்கத்தை அசைப்பது, இழுப்பது போன்றவை. இங்கே சொல்லப்பட்டு இருப்துக்கு ஒப்பானது மலம் வெளியேற்ற்ற வேண்டிய உணர்வு வருவது. அதை மூளை அதுவாக செய்வது இல்லை, குறிப்பிட்ட பகுதி (மலம் நிரம்பி விட்டது) அகன்று, இழுபட்டு உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு (ஏதோ (மலம்) நிரம்பி விட்டது) என்பதை அறிவுறுத்த, மூளை பின்பு குறிப்பிட்ட பகுதி தசைகளுக்கு (சுருங்க அல்லது இளக) அறிவிப்பது, அதாவது மலம் வெளியேற்ற வேண்டிய உணர்வு உருவாகுவது. ஆம் , பொதுவாக மூளை எத்தனிக்கும் பாதுகாக்க. ஆனால் வந்த வருத்தமோ, நோயோ ஏதோ, வெளி (மருத்துவ) உதவி இன்றி மூளை எதிர்ப்பதை, பாதுக்காக்க எத்தனிப்பதை மேவும் (பொதுவாக நடப்பது, உடனடியாக என்று இல்லை காலம் எடுத்து புற்றுநோயில் போல) என்றால் ஆக குறைந்தது உடம்பின் எதாவது ஒரு பகுதியை தற்கலிகமாகவேனும் பகுதியாக செயல் இழக்க வைக்கும், அத்துடன் உடம்பில் நோய் போன்றவற்றால் உருவாகும் ஒருபகுதி தாக்கம் மற்றவற்றையும் பாதிக்கும் ( இயந்திரங்கள் போல). இங்கே ஜஸ்டின் சொன்ன உதாரணம் போல ஆனால், மூளை எத்தனிப்பது, எதீர்ப்பது போதுமானது என்றோ , வந்த வருத்தமோ, நோயோ அதை மீறாது என்பது மூளைக்கே தெரியாது. எனவே மருத்துவத்தை இயலுமான அளவு விரைவாக நாட வேண்டும். சும்மா எழுதுவது, அரைகுறையாக விளங்கி.

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

1 month 2 weeks ago
தம் இனத்திற்கான போராட்டத்திலா 10 மில்லியன் மக்களை நவீன விஞ்ஞான நுட்பங்களெல்லாம் பாவித்து நாசிகள் கொன்றார்கள்?😂 ஹன்னா அரெண்ட் - நாசிகளின் காலத்தில் வாழ்ந்த ஒரு தத்துவாசிரியர் - கீழ் வருமாறு சொல்லியிருப்பது உங்களைப் போன்ற நோக்கர்களுக்குச் சரியாகப் பொருந்துகிறது: “The ideal subject of totalitarian rule is not the convinced Nazi or the convinced Communist, but people for whom the distinction between fact and fiction (i.e., the reality of experience) and the distinction between true and false (i.e., the standards of thought) no longer exist.” சுருக்கமாகத் தமிழில்: கொடூர சர்வாதிகாரிகள் இலகுவாக தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது சர்வாதிகாரிகளின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டோரயும், எதிர்ப்போரையும் அல்ல! நல்லது கெட்டது, உண்மை போலி இடையேயான வேறுபாடு புரிந்து கொள்ளாத மக்களைத் தான்!

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

1 month 2 weeks ago
பிரித்து மேய வெளிக்கிட்டால்......🙃 ஒரு வகையில் தாம் தம் நாடு தம் இனம் தம் மண் என போராடுபவர்கள் எல்லோரும் நாசிகளாகவே தெரிவர். 🧐

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

1 month 2 weeks ago
நீங்கள் சொல்வதும் உண்மைதான், இருந்தும் என்ன செய்வது “ சல்லி ஒன்றே சர்வ ரோக நிவாரணி” என்ற மனநிலையிலிருந்து இன்னும் விடுபட முடியவில்லை.

காசாவில் 60000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் 18500 பேர் சிறுவர்கள் - பெயர் விபரங்களை வெளியிட்டது வோசிங்டன் போஸ்ட்

1 month 2 weeks ago
Published By: RAJEEBAN 01 AUG, 2025 | 04:01 PM ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது. காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம். மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள். இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது. ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களை இலக்குவைப்பதை நியாப்படுத்துவதற்கு இஸ்ரேல் கூறும் காரணம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹமாசின் பிரசன்னத்தை காரணம் காட்டி பொதுமக்களை பெருமளவில் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன. ஒக்டோர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட பயங்கரமான தாக்குதலை நான் மீண்டும்மீண்டும் கண்டித்துவந்துள்ளேன் என தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆனால் மிகப்பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவையும் எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது,சமீபகாலத்தில் நாங்கள் சந்தித்த எதனையும் விட இழப்புகள் அளவில் மிகப்பெரியவை என அவர் தெரிவித்துள்ளார். சிலர் உறக்கத்தில் படுக்கையில் கொல்லப்பட்டார்கள், சிலர் விளையாடிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.பலர் தாங்கள் நடைபழகுவதற்கு முன்னரே புதைக்கப்பட்டார்கள். உலகிலேயே சிறுவர்களிற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது. யுத்தத்தின் போது பாலஸ்தீன சிறுவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவருக்கும் அதிகம் என்ற அளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு வகுப்பில் நிறைந்திருக்கும் மாணவர்கள் இரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை நினைத்து பாருங்கள் என யுனிசெவ்வின் நிறைவேற்று இயக்குநர் கதரின் ரசல் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்தார். சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து கேட்டவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் சிறுவர்களையும் போரில் நேரடி தொடர்பற்றவர்களையும் இலக்குவைக்கவில்லை என தெரிவித்தது.பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,சர்வதேச சட்டங்களை பின்பற்றியே இஸ்ரேலிய இராணுவம் செயற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர். போரின்; போது கொல்லப்பட்டவர்களின் பட்டியை தயாரிப்பதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மருத்துவமனை மற்றும் பிரேத அறை தகவல்களை பயன்படுத்துகின்றது.கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் தகவல்களை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்கின்றது.காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சிதைந்துபோயுள்ளதால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களை பெறுவது மிகவும் கடினமான விடயம். ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வது சாத்தியமற்றது என்றாலும் காசாவின் சுகாதார அமைச்சு வழமைக்கு மாறான உயர்தர உடனடி இறப்பு பதிவினை மேற்கொள்கின்றது என லண்டன் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கல் ஸ்பகட் தெரிவிக்கின்றார். இவர் ஆயுதமோதல்களின் உயிரிழப்புகளை பதிவு செய்யும் சர்வதேச அமைப்பின் உறுப்பினராக உள்ளார். காசாவின் சுகாதார அமைச்சு உயிரிழப்புகள் பதிவினை மிகவும் கவனமாகவும் கடுமையான விதத்திலும் முன்னெடுக்க முயல்கின்றது என அவர் தெரிவிக்கின்றார். காசாவின் சுகாதார அமைச்சு ஜூலை 15ம் திகதி வெளியிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த வோசிங்டன் போஸ்ட் அவற்றை வயதின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியது. மொவீன் சுகைல்பருக்கு ஆறு வயது அவன் எதிர்காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கும் சிறுவர்கள் நல மருத்துவராக வரவிரும்பினான்.ஆடம்பர கார்களை வைத்திருக்கும் வர்த்தகராகவும் வர ஆசைப்பட்டான், உறவினர்களை பொறுத்தவரை அவன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் சிந்தனையும் உடைய ஒருவன். நவம்பர் 2023 இல் தொடர்மாடியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் இவன் கொல்லப்பட்டான், அந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் என அந்த சிறுவனின் உறவினரான அட்காம் சுகேபெர் தெரிவித்தார். அவன் தனது காதுகளை மூடிக்கொண்டே தனது இறுதி மூச்சை விட்டான் என நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் விமானங்களின் சத்தத்தை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவன் அவ்வாறே செய்வான் என சுகேபெர் தெரிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையையே முற்றாக மாற்றியுள்ள காயங்களை சந்தித்துள்ளனர். காசாவில் பல மருத்துசேவையில் தொண்டராக ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் சமெர் அட்டெர் தான் அடையாளம் காணமுடியாதபடிகருகிய சிறுவர்களின் உடல்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஏனையவர்கள் அங்கங்களை இழந்துள்ளனா அல்லது தலையில் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் என தெரிவித்த அவர் 'இந்த காயங்கள் உடல்ரீதியாக செயல் இழக்கச்செய்பவை, உணர்வுரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவவை" என தெரிவித்தார். ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் காசா நகரத்தில் உள்ள மருத்துமவனையில் தாக்குதலொன்றின் பின்னர் பெருமளவு நோயாளர்கள் தரையில் காணப்படுவதை பார்த்ததை நினைவுகூர்ந்தார் அத்தார், அந்த மருத்துவமனையில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகள் முற்றாக தீர்ந்துவிட்டன. 30 வயது நோயாளியின் வாய் மூக்குதுவாரத்திலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்ததையும் பார்த்தாக குறிப்பிட்ட அத்தார்,ஒரு சிறுவனி மண்டையோடு பிளந்திருந்தது வயிற்றிலும் பெரும் காயங்கள்,அந்த சிறுவனிற்கு அருகிலிருந்த அவனது இரண்டு சகோதாரர்கள் சிறுவனை காப்பாற்றுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களில் ஒருவரின் கரத்தை இறந்துகொண்டிருந்த சிறுவனின் கரங்களில் எடுத்துவைத்தேன் மற்றைய சிறுவனின் கரத்தினை அந்த சிறுவனின் நெஞ்சில் எடுத்துவைத்துவிட்டு மன்னிக்கவேண்டும் அவன் இறக்கப்போகின்றான் அவனது உயிர் பிரியும் வரை இங்கே இருங்கள் என தெரிவித்தேன் என நினைவுகூர்ந்த அத்தார் தான் காயப்பட்ட மற்றைய நோயாளியை பார்க்க சென்றதாக குறிப்பிட்டார். ஜூலை 13ம் திகதி மத்திய காசாவில் குடிநீரை சேகரிப்பதற்காக நின்றிருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டது, பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் சிறுவர்கள். இந்த தாக்குதலுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் வெடிபொருள் இலக்கிலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என குறிப்பிட்டது. தாகத்துடன் நீர் எடுக்கப்போன சிறுவர்கள் உயிரற்ற சடலங்களாக தங்கள் வீடுகளிற்கு திரும்பினார்கள் என அந்த பகுதியில் வசிக்கும் சம்பவத்தை நேரில் பார்த்த ரமடான் நசார் தெரிவித்தார். தமிழில் - ரஜீவன் https://www.virakesari.lk/article/221542

காசாவில் 60000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - அவர்களில் 18500 பேர் சிறுவர்கள் - பெயர் விபரங்களை வெளியிட்டது வோசிங்டன் போஸ்ட்

1 month 2 weeks ago

Published By: RAJEEBAN

01 AUG, 2025 | 04:01 PM

image

ஜூலை மாத நடுப்பகுதியில் பொதுமக்களை போராளிகளுடன் வித்தியாசப்படுத்தி பார்க்காத காசாவின் சுகாதார அமைச்சு யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் பெயர்களையும் வயதினையும் வெளியிட்டது.

காசாவின் சுகாதார அமைச்சின் பட்டியல் மாத்திரமே கொல்லப்பட்டவர்கள் குறித்த உத்தியோகபூர்வமான ஆவணம்.

gaza_washinton_post.jpg

மிக நீண்ட இந்த ஆவணத்தில் சிறுவர்களின் பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. 900க்கும் அதிகமானவர்கள் தங்கள் முதலாவது பிறந்த நாளிற்கு முன்னர் கொல்லப்பட்டவர்கள்.

இஸ்ரேல் பொதுமக்களின் உயிரிழப்பினை குறைக்க முயல்வதாக தெரிவிக்கின்றது.

ஹமாசின் உறுப்பினர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் செயற்படுகின்றனர் என இஸ்ரேல் தெரிவிக்கின்றது, மருத்துவமனைகள், வீடுகள், பாடசாலைகள் இடம்பெயர்ந்தவர்களிற்கான முகாம்களை இலக்குவைப்பதை நியாப்படுத்துவதற்கு இஸ்ரேல் கூறும் காரணம்.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹமாசின் பிரசன்னத்தை காரணம் காட்டி  பொதுமக்களை பெருமளவில் கொல்லும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தெரிவிக்கின்றன.

ஒக்டோர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட பயங்கரமான தாக்குதலை நான் மீண்டும்மீண்டும் கண்டித்துவந்துள்ளேன் என தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆனால் மிகப்பெருமளவு உயிரிழப்புகளையும் அழிவையும் எவற்றாலும் நியாயப்படுத்த முடியாது,சமீபகாலத்தில் நாங்கள் சந்தித்த எதனையும் விட இழப்புகள் அளவில் மிகப்பெரியவை என அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் உறக்கத்தில் படுக்கையில் கொல்லப்பட்டார்கள், சிலர் விளையாடிக்கொண்டிருந்தவேளை கொல்லப்பட்டார்கள்.பலர் தாங்கள் நடைபழகுவதற்கு முன்னரே புதைக்கப்பட்டார்கள்.

உலகிலேயே சிறுவர்களிற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா என ஐக்கியநாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவிக்கின்றது.

யுத்தத்தின் போது பாலஸ்தீன சிறுவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவருக்கும் அதிகம் என்ற அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு வகுப்பில் நிறைந்திருக்கும் மாணவர்கள் இரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை நினைத்து பாருங்கள் என யுனிசெவ்வின் நிறைவேற்று இயக்குநர் கதரின் ரசல் இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்தார்.

gaza_child22222.jpg

சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து கேட்டவேளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாங்கள் சிறுவர்களையும் போரில் நேரடி தொடர்பற்றவர்களையும் இலக்குவைக்கவில்லை என தெரிவித்தது.பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுக்கின்றோம்,சர்வதேச சட்டங்களை பின்பற்றியே இஸ்ரேலிய இராணுவம் செயற்படுகின்றது என அவர்கள் தெரிவித்தனர்.

போரின்; போது கொல்லப்பட்டவர்களின் பட்டியை தயாரிப்பதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மருத்துவமனை மற்றும் பிரேத அறை தகவல்களை பயன்படுத்துகின்றது.கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஊடகங்களின் தகவல்களை ஆராய்ந்து அவற்றையும் சேர்த்துக்கொள்கின்றது.காசாவின் மருத்துவ கட்டமைப்பு முற்றாக சிதைந்துபோயுள்ளதால் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களை பெறுவது மிகவும் கடினமான விடயம்.

ஒவ்வொரு மரணத்தையும் பதிவு செய்வது சாத்தியமற்றது என்றாலும் காசாவின் சுகாதார அமைச்சு வழமைக்கு மாறான உயர்தர உடனடி இறப்பு பதிவினை மேற்கொள்கின்றது என லண்டன் பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கல் ஸ்பகட் தெரிவிக்கின்றார்.

இவர் ஆயுதமோதல்களின் உயிரிழப்புகளை பதிவு செய்யும் சர்வதேச அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.

காசாவின் சுகாதார அமைச்சு உயிரிழப்புகள் பதிவினை மிகவும் கவனமாகவும் கடுமையான விதத்திலும் முன்னெடுக்க முயல்கின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

காசாவின் சுகாதார அமைச்சு ஜூலை 15ம் திகதி வெளியிட்ட புள்ளிவிபரங்களை ஆராய்ந்த வோசிங்டன் போஸ்ட் அவற்றை வயதின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தியது.

மொவீன் சுகைல்பருக்கு ஆறு வயது அவன் எதிர்காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த சிறுவர்களிற்கு சிகிச்சை வழங்கும் சிறுவர்கள் நல மருத்துவராக வரவிரும்பினான்.ஆடம்பர கார்களை வைத்திருக்கும் வர்த்தகராகவும் வர ஆசைப்பட்டான், உறவினர்களை பொறுத்தவரை அவன் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும் சிந்தனையும் உடைய ஒருவன்.

GxN_jnIWgAA8XEM.jpg

நவம்பர் 2023 இல் தொடர்மாடியொன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் இவன் கொல்லப்பட்டான், அந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் என அந்த சிறுவனின் உறவினரான அட்காம் சுகேபெர் தெரிவித்தார்.

அவன் தனது காதுகளை மூடிக்கொண்டே தனது இறுதி மூச்சை விட்டான் என நான் நினைக்கின்றேன் ஏன் என்றால்  விமானங்களின் சத்தத்தை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவன் அவ்வாறே செய்வான் என சுகேபெர் தெரிவித்தார்.

மேலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையையே முற்றாக மாற்றியுள்ள காயங்களை சந்தித்துள்ளனர்.

gaza_children.jpg

காசாவில் பல மருத்துசேவையில் தொண்டராக ஈடுபட்ட அமெரிக்காவை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் சமெர் அட்டெர் தான் அடையாளம் காணமுடியாதபடிகருகிய சிறுவர்களின் உடல்களை பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஏனையவர்கள் அங்கங்களை இழந்துள்ளனா அல்லது தலையில் கடும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர் என தெரிவித்த அவர் 'இந்த காயங்கள் உடல்ரீதியாக செயல் இழக்கச்செய்பவை, உணர்வுரீதியாக பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவவை" என தெரிவித்தார்.

ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பத்தில் காசா நகரத்தில் உள்ள மருத்துமவனையில் தாக்குதலொன்றின் பின்னர் பெருமளவு நோயாளர்கள் தரையில் காணப்படுவதை பார்த்ததை நினைவுகூர்ந்தார் அத்தார், அந்த மருத்துவமனையில் நோயாளர்களிற்கான படுக்கை வசதிகள் முற்றாக தீர்ந்துவிட்டன. 30 வயது நோயாளியின் வாய் மூக்குதுவாரத்திலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்ததையும் அவர் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்ததையும் பார்த்தாக குறிப்பிட்ட அத்தார்,ஒரு சிறுவனி மண்டையோடு பிளந்திருந்தது வயிற்றிலும் பெரும் காயங்கள்,அந்த சிறுவனிற்கு அருகிலிருந்த அவனது இரண்டு சகோதாரர்கள் சிறுவனை காப்பாற்றுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களில் ஒருவரின் கரத்தை இறந்துகொண்டிருந்த சிறுவனின் கரங்களில் எடுத்துவைத்தேன் மற்றைய சிறுவனின் கரத்தினை அந்த சிறுவனின் நெஞ்சில் எடுத்துவைத்துவிட்டு மன்னிக்கவேண்டும் அவன் இறக்கப்போகின்றான் அவனது உயிர் பிரியும் வரை இங்கே இருங்கள்  என தெரிவித்தேன் என நினைவுகூர்ந்த அத்தார் தான் காயப்பட்ட மற்றைய நோயாளியை பார்க்க சென்றதாக குறிப்பிட்டார்.

ஜூலை 13ம் திகதி மத்திய காசாவில் குடிநீரை சேகரிப்பதற்காக நின்றிருந்தவர்கள் மீது இஸ்ரேல் வான்தாக்குதலை மேற்கொண்டது, பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் அனேகமானவர்கள் சிறுவர்கள்.

இந்த தாக்குதலுக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தெரிவித்த இஸ்ரேலிய இராணுவம் வெடிபொருள் இலக்கிலிருந்து சற்று தொலைவில் விழுந்தது என குறிப்பிட்டது.

தாகத்துடன் நீர் எடுக்கப்போன சிறுவர்கள் உயிரற்ற சடலங்களாக தங்கள் வீடுகளிற்கு திரும்பினார்கள் என அந்த பகுதியில் வசிக்கும் சம்பவத்தை நேரில் பார்த்த ரமடான் நசார் தெரிவித்தார்.

தமிழில் - ரஜீவன்

https://www.virakesari.lk/article/221542

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

1 month 2 weeks ago
உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி 29 JUL, 2025 | 05:00 PM அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன. இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம் காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார். முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார். "இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்' உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் "மற்ற குழந்தைகளைப் போல இருக்கவோ நிற்கவோ முடியாது" என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார். "எனக்கு வேறு வழியில்லை, என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது. ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து பிபிசியிடம் பத்திரிகையாளர் அகமது அல்-அரினி இவ்வாறு தெரிவித்தார் "நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது" எலும்புகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள் "நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று அகமது கூறினார். காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள் அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்' என்று அல்-அரினி பிபிசியிடம் கூறினார். வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார். 'இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.' நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையே என தெரிவிக்கின்றார் அல்-அரினி. அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார். "காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது. சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: "குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்." அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது. துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல. "நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன். "காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார். நான் இங்கே சுற்றிசுற்றி வந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221295

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

1 month 2 weeks ago

உலகின் மனச்சாட்சியை நோக்கி கேள்வி எழுப்பும் - காசாவில் கடும் பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள சிறுவனின் புகைப்படம் சொல்லும் கதை என்ன? பிபிசி

29 JUL, 2025 | 05:00 PM

image

அவனிடம் எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன அவனது முதுகெலும்பு மற்றும் விலா எலும்புகள் வெளியே தெரிந்தன.

இது ஒன்றரை வயது சிறுவன் முகமது ஜகாரியா அய்யூப் அல்-மதூக். அவனது புகைப்படம்   காசாவிற்கான மனிதாபிமான விநியோகங்கள் தற்போது  செயலிழந்துள்ளதால் காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலையின் மிகவும் இதயத்தைவருத்தும்  படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஜூலை 21 (7) 2025 அன்று காசாவில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரத்தில் தனது தாயாருடன் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் காசா மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில், புகைப்படக் கலைஞர் அகமது அல்-அரினி இந்த சிறுவனை புகைப்படம் எடுத்தார்.

முகமதுவின் தாயார் ஹெடயா அல்-முட்டா, தான் அனுபவிக்கும் கஷ்டங்களைப் பற்றி பிபிசியிடம் கூறினார்.

gaza_child_shocking_1.jpg

"இப்போது அவர் மூன்று கிலோகிராம் எடை கொண்டவர், இதற்கு முன்பு அவர் ஒன்பது கிலோகிராம் எடை கொண்டவர். அவர் வழக்கம் போல் உணவுண்டார் , ஆனால் உணவு பற்றாக்குறை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் மோசமான உணவுக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்'

உணவுப் பற்றாக்குறையால் முகமதுவால் "மற்ற குழந்தைகளைப் போல இருக்கவோ நிற்கவோ முடியாது" என்றும் அவரது முதுகு வளைந்து முதுகெலும்பு வீங்கியிருப்பதாகவும் ஹெடயா விளக்குகிறார்.

"எனக்கு வேறு வழியில்லை, என் கணவர் போரில் கொல்லப்பட்டார் இங்கே எனக்கு கடவுளைத் தவிர வேறு யாரும் உதவ முடியாது. நான் தனியாக இருப்பதால் அவருக்கு உணவளிக்க முடியாது. ஆனால் அவருக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூட இல்லை. நான் சோர்வாக இருக்கிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்

உலகின் மனிதாபிமானத்தை நோக்கி கேள்வி எழுப்பும் இந்த படத்தை எடுத்ததன் நோக்கம் குறித்து  பிபிசியிடம்  பத்திரிகையாளர் அகமது அல்-அரினி இவ்வாறு தெரிவித்தார்

"நான் நீண்ட நேரம் எடுத்த படங்களை எடுத்தேன் ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ஒரு முறை எடுக்கும்போது நிறுத்தி என் மூச்சை இழுத்து பின்னர் தொடர வேண்டியிருந்தது" 

எலும்புகள் மாத்திரம் எஞ்சியிருக்கும் குழந்தைகள்

"நான் இந்த சிறிய முகமதுவின் படத்தை எடுத்தேன் அவன் தன் தாயுடன் தனியாக இருந்தான். வடக்கு காசாவில் உள்ள அவர்களின் வீடுகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்" என்று அகமது கூறினார்.

காசா பகுதியில்சிறுவர்கள் குழந்தைகள்  அனுபவிக்கும் கடுமையான பசியை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்' என்று அல்-அரினி பிபிசியிடம் கூறினார்.

வடக்கு காசாவில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து மோதலால் முகமதுவும் அவரது தாயாரும் இடம்பெயர்ந்ததாகவும் அவர்களை முற்றிலும் வெறுமையான ஒவன் மாத்திரம் காணப்பட்ட கூடாரத்தில் பார்த்ததாகவும்அல்-அரினி கூறினார்.

'இது ஒரு கல்லறையை ஒத்திருக்கிறது.'

நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அந்த குழந்தை பிளாஸ்டிக் பையொன்றை ஆடையாக அணிந்திருப்பது தெரியும், இதற்கு காரணம் காசாவிற்குள் போதியளவு மனிதாபிமான பொருட்கள் செல்லாமையே என தெரிவிக்கின்றார் அல்-அரினி.

அவரது தாயார் மெல்லிய மற்றும் மெலிந்தவர் தனது பலவீனமான கையால் அவரது தலையைத் தாங்குகிறார்.

"காசா சுகாதார அமைச்சகம் கடந்த வாரத்தில்122 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 83 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

சமீபத்திய வாரங்களில் காசாவில் பணிபுரியும் மற்ற புகைப்பட பத்திரிகையாளர்களைப் போலவே அகமதுவும் துன்பத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை விளக்குகிறார்: "குழந்தைகள் பட்டினியால் இறக்கும் விதத்தையும் அவர்களின் உடலில் எலும்புகள் மாத்திரம் எப்படி எஞ்சியிருக்கின்றன  என்பதையும் பார்ப்பது என்னை மிகவும் பாதிக்கிறது; நான் ஒரு மனிதன்."

அதனால்தான் அகமது சொல்வது போல் முகமது மற்றும் ஹெடாயாவைப் பார்த்தபோது அவர்களின் படத்தை எடுக்க அவருக்கு சிறிது நேரம் பிடித்தது.

துரதிர்ஷ்டவசமாக முகமது அவர் பார்த்த ஒரே குழந்தை அல்ல.

gaza_child_shocking_2.jpg

"நான் இதுபோன்ற பலரைப் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். அடுத்த நாள் ஒரு மாதத்தில் 25 பவுண்டுகள் எடை இழந்த 17 வயது குழந்தையின் படங்களை எடுத்தேன்.

"காசாவில் மக்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை பஞ்சம் இல்லாவிட்டாலும் பயங்கரமான பசி இருக்கிறது நமக்கு கொஞ்சம் கிடைக்கும்போது மக்கள் நமக்காக போராடுகிறார்கள், சிலர் கொஞ்சம் பெற தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்

சில நேரங்களில் தனது வேலையைச் செய்வது அவருக்கு கடினமாக இருக்கும் என்று இந்த புகைப்படக் கலைஞர் கூறுகிறார்.

நான் இங்கே சுற்றிசுற்றி வந்து படங்களை எடுக்கின்றேன் பட்டினியால் நான் மயங்கி விழப்போகின்றேன் என மனதை உருக்கும் அந்த படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/221295

மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்

1 month 2 weeks ago
01 AUG, 2025 | 04:32 PM மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இதன் போது மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, காட்டாஸ்பத்திரி பகுதியில் வழிமறித்து பஸ்ஸில் ஏறிய ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பஸ்ஸில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது. காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாகவும் கடத்தியதற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை. மேலும், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221551

மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்

1 month 2 weeks ago

01 AUG, 2025 | 04:32 PM

image

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக  சென்று மீண்டும் தனியார் பஸ்ஸில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கடத்தல் சம்பவம்  நேற்று வியாழக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகி உள்ளது.

இந்த  சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றிற்காக முன்னிலையாகியதோடு, வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில்  மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

இதன் போது மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, காட்டாஸ்பத்திரி பகுதியில் வழிமறித்து பஸ்ஸில் ஏறிய ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களினால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரை தாக்கி பஸ்ஸில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த நபரை நடுக்குடா காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற நிலையில் கடுமையாக தாக்கிய நிலையில் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.

காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்ற குழுவினரே குறித்த நபரை நடத்தியதாகவும் கடத்தியதற்கான காரணங்கள் எவையும் வெளியாகவில்லை.

மேலும், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பேசாலை பொலிஸார் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/221551