Aggregator

சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை - அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

1 month 1 week ago
சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம் 03 Feb, 2026 | 04:50 PM (நா.தனுஜா) கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை. எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல' எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 'கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது' எனவும் அவர் விசனம் வெளியிட்டார். அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார். அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார். 'அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல. அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன. ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/237733

சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை - அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

1 month 1 week ago

சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை -அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்

03 Feb, 2026 | 04:50 PM

image

(நா.தனுஜா)

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 'குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை.

எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

'கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது' எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.

அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்.

'அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல.

அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன.

ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/237733

ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்?

1 month 1 week ago
ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 31 நிமிடங்களுக்கு முன்னர் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார். ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் பேசுகையில், "அந்த கட்டுரையில் நரவனே, தன்னுடைய நினைவுக்குறிப்பான அப்புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஐந்து வரிகளை மட்டும் வாசிக்க நான் விரும்புகிறேன்." என தெரிவித்தார். வெளியாகாத புத்தகம் ஒன்றின் பகுதிகளை எப்படி வாசிக்கலாம் எனக்கூறி பாஜக தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஆளும்கட்சியினரை பார்த்து ராகுல் காந்தி, "பயங்கரவாத்கத்தை எதிர்த்து சண்டையிடுவதாக அவர்கள் (ஆளுங்கட்சியினர்) கூறுகின்றனர், ஆனால் ஒருவர் கூறிய மேற்கோள் குறித்து அஞ்சுகின்றனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவர்களை பயமுறுத்துகிறது, என்னால் பேச முடியவில்லை. அவர்களுக்கு அச்சமில்லை என்றால் என்னை வாசிக்க அனுமதிக்கட்டும்." என்றார். ஊடக செய்திகளின்படி, ராகுல் காந்தி குறிப்பிட்ட அப்புத்தகம் 2024ம் ஆண்டு விற்பனைக்கு தயாராக இருந்தது. ஆனால், அப்புத்தகம் குறித்து இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது. 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான செய்தியில், அப்புத்தகம் மீதான விசாரணை முடியும் வரை அதன் பகுதிகளையோ அல்லது மின்னணு பிரதிகளையோ யாருக்கும் வழங்கக் கூடாது என அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனமான பெங்குயின் ரேண்டம் ஹவுஸுக்கு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் சில மட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகவும், அப்போதிருந்து விசாரணை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஜெனரல் நரவனே ராணுவத் தளபதியானார். யார் இந்த மனோஜ் முகுந்த் நரவனே? ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பணியாற்றினார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிய காலகட்டம் மற்றும் கல்வான்பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா பத்தற்றத்தை எதிர்கொண்ட காலகட்டத்தில் அவர் இந்திய ராணுவத்தை வழிநடத்தினார். புனேவின் கியான் பிரபோதினி பள்ளியில் மனோஜ் நரவனே ஆரம்ப கல்வி பெற்றார். அதன்பின் இந்திய ராணுவத்தில் அதிகாரியானார். போர்க்களத்தைத் தாண்டி கல்வி மீதும் அவருக்கு நாட்டம் இருந்தது. அவர் இந்தோரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக இயல் பிரிவில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். அவருடைய தந்தை முகுந்த் நரவனே விமானப் படை அதிகாரியாக இருந்தவர். மனோஜ் நரவனேவின் மனைவி ஓர் ஆசிரியர். இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். 2020ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் ஜெனரல் நரவனேவின் ராணுவப் பணியில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில், "2020ம் ஆண்டு ஜூன் மாதம் ரோந்துப் புள்ளி 14-ல் (Patrolling Point) பதற்றம் உச்சகட்டத்தை அடைந்ததாக, அதிகாரபூர்வ ராணுவ பதிவுகள் மற்றும் ராணுவம் வழங்கிய முந்தைய தகவல்கள் கூறுகின்றன. மோதல் தடுப்பு மண்டலத்திலிருந்து (buffer zone) தங்கள் கூடாரங்களை நீக்குவதற்கு சீன ராணுவம் மறுத்தது. கர்னல் சந்தோஷ் பாபுவால் வழிநடத்தப்பட்ட இந்திய துருப்புகள், சீன ராணுவத்தை தடுத்து நிறுத்த நகர்ந்தபோது, வன்முறை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜெனரல் நரவனே இந்தியாவின் உத்தியில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இந்திய ராணுவம் தற்காத்துக்கொள்ளும் கொள்கையை மட்டுமே கடைபிடித்தது (defensive policy), ஆனால் நரவனே அச்சுறுத்தல் சமயங்களில் எதிரிகளை தாக்கும் கொள்கையை கடைபிடிக்குமாறு (offensive defence) செய்தார். அந்த செய்தியில், "நரவனே கைலாஷ் மலைத்தொடரில் இந்திய டாங்கிகளை நிறுத்துமாறு செய்தார், இது சீன ராணுவம் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியது. 2020ம் ஆண்டு ஜூன் 16 இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்ததால், அந்நாள் தன்னுடைய பணியில் 'சோகமான நாள்' என நரவனே விவரித்தார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 2023ம் ஆண்டில் வெளியான புத்தகத்தின் பகுதிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் நரவனே ஆட்சிக் காலத்தில் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின்படி, "2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட ராணுவ மோதலை இப்புத்தகம் விவரிக்கிறது. அதில், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் அக்னிபத் திட்டம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான உரையாடலும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிடிஐ செய்தி முகமை அப்புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டதாக அச்செய்தி கூறுகிறது. ஆகஸ்ட் 31 அன்று மாலை நடந்த சம்பவங்களும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான், இந்த சம்பவம் குறித்த கட்டுரை கேரவன் இதழில் வெளியாகியுள்ளது. அப்புத்தகத்தின் சில பகுதிகள் குறித்து கேரவன் இதழில் வெளியான பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாசிக்க நினைத்தார். அதன்பின், ஆகஸ்ட் 31 மாலை என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ள கேரவன் கட்டுரையின் பக்கங்களை காங்கிரஸ் கட்சி தன் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தது. நரவனேவின் சாதனைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். லண்டன் ஸ்பீக்கர்ஸ் பியூரோ அமைப்பின்படி (முன்னணி பேச்சாளர் முகமை), நரவனேவின் பணி காலத்தில் சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India) முயற்சியின் கீழ், பல முக்கிய ஆயுத கொள்முதல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இது, இந்திய ராணுவம் ஆயுதங்களை சொந்தமாக தயாரிக்கவும் வெளிநாட்டு ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் ஊக்கமளித்தது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்கள் பயிற்சி பெற அனுமதித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் நரவனே, இது ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய படியாக கருதப்படுகிறது. ராணுவ தளபதியாவதற்கு முன்பாக கொல்கத்தாவில் கிழக்கு கட்டளையகத்தின் (Eastern Command) தலைமை பொறுப்பை வகித்தார். இலங்கையில் ஆபரேஷன் பவான் நடவடிக்கையின்போது அங்கு நிறுத்தப்பட்ட இந்திய அமைதிப்படையின் ஒரு உறுப்பினராகவும் ஜெனரல் நரவனே இருந்தார். மேலும் மியான்மர் தூதரகத்திலும் மூன்றாண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார். நரவனே பலமுறை தன் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் படைப்பிரிவை வழிநடத்தியதற்காக சேனா பதக்கம், நாகாலாந்தில் அசாம் ரைஃபிள் (வடக்கு) பிரிவின் ஐஜியாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம், அதிநவீன தாக்குதல் படைப்பிரிவான ஸ்டிரைக் கார்ப்ஸை (Strike Corps) வழிநடத்தியதற்காக அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் ராணுவப் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக பணியாற்றியதற்காக பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை அவர் வென்றுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkj6nj310o

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

1 month 1 week ago
வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல் Feb 3, 2026 - 07:21 PM வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

1 month 1 week ago

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

Feb 3, 2026 - 07:21 PM

வாடகை வீடு தொடர்பான சட்டமூலம் குறித்து வௌியான தகவல்

வாடகை அடிப்படையில் வீடுகளை வழங்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமூலத்தின் நோக்கங்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) விளக்கமளித்தார். 

இந்த சட்டமூலத்தின் நோக்கமாக அமைவது வீட்டு உரிமையாளர் மற்றும் அந்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் இடையே உள்ள உறவைப் பாதுகாப்பதாகும் என அமைச்சர் கூறினார். 

அதன்படி வாடகை அடிப்படையில் வீடொன்றை வழங்கும்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும் என்றும், எந்த வகையிலாவது அந்த ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமாக செயல்பட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 

இன்றைய தினத்திலிருந்து மேலும் ஒரு மாத காலம் இந்த சட்டமூலத்திற்காக மக்கள் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. அந்த கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு இதை மேலும் திருத்தம் செய்ய முடியும். இறுதி வடிவத்திற்கு அதன் பின்னரே செல்ல முடியும். 

இந்த சட்டமூலத்தைக் கொண்டு வருவதன் எதிர்பார்ப்பு சட்டரீதியான பிணைப்புக்கு, இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்பாளர் இடையிலான உறவை உறுதிப்படுத்துவதாகும். அதில் இருதரப்புக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

சில இடங்களில் இந்த செயல்முறையில் வீட்டு உரிமையாளருக்குப் பிரச்சினைகள் வருகின்றன, அவர் சட்டத்தின் முன் தஞ்சம் கோர முடியாத சந்தர்ப்பங்கள் உள்ளன. அதேபோல் வாடகை குடியிருப்பாளர் அநீதிக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் உள்ளன. இந்த வாடகை குடியிருப்பாளர் மற்றும் வீட்டு உரிமையாளர் என்ற இருதரப்பையும் பாதுகாத்துக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சட்டம் இது. 

இந்தச் சட்டம் பொருந்துவதே ஏதேனும் இருதரப்பினர் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்த ஒப்பந்தத்திற்குப் புறம்பாக யாராவது செயல்பட்டால், அவ்வாறு அநீதிக்கு உள்ளாகும் நபர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. ஒப்பந்தத்திற்கு வெளியே சென்று காலம் தாழ்த்தி இருந்தால் இந்தச் சட்டம் பொருந்தாது, அதற்குப் பொருந்துவது சாதாரண சட்டமாகும். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் அந்த ஒப்பந்த காலத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. 

அதாவது ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, இரண்டு மாதங்களுக்கு முன் வெளியேற முடியும் என்று ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் துண்டித்தோ, நீரைத் துண்டித்தோ, பல்வேறு விதமாக துன்புறுத்தல்கள் செய்தோ அனுப்ப முயன்றால் அல்லது இந்த வகையில் அநீதிக்கு உள்ளானால், அந்த நபர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cml6npmel04sgo29nfa1475t7

ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

1 month 1 week ago
ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு Feb 3, 2026 - 06:28 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml6lu35004seo29nn817abfi

ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

1 month 1 week ago

ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Feb 3, 2026 - 06:28 PM

ஈஸ்டர் தாக்குதல் -  மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (3) ரிட் கட்டளை ஒன்றை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய போதே, ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

தம்மிக்க கணேபொல, மாயாதுன்ன கொரயா, பி. குமாரன் ரட்ணம், சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினாலேயே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும், புதிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், கோட்டை நீதவான் நீதிமன்றில் உள்ள குறித்த தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்தது. 

இம்மனுவின் பிரதிவாதிகளாக அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் குற்றவியல் ரீதியாக கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட பிரதிவாதிகள் தனக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் 2022 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அந்தத் தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் திருப்தியடைந்த நீதவான், நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முடிவுகளை சாட்சியங்களாகக் கருத முடியாது எனச் சுட்டிக்காட்டும் மனுதாரர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தனிப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நீதவான் எடுத்துள்ள முடிவு சட்டத்திற்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

அதற்கமைய, தனக்கு எதிராக பிரதிவாதிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவை வலுவிழக்கச் செய்யும் வகையில் ரிட் கட்டளை ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மனுவை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cml6lu35004seo29nn817abfi

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 1 week ago
புரியுது உங்க‌ளின் வேத‌னை................அர்ச்சுனாவால‌ முர‌ளித‌ர‌ன் த‌ப்பினார் இல்லையேன் அவ‌ரும் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருப்பார்........................

சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

1 month 1 week ago
சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? பட மூலாதாரம்,AFP via Getty Images கட்டுரை தகவல் பீட்டர் ஹோஸ்கின்ஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது. சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. பட மூலாதாரம்,Getty Images 60% வாகனங்களில் இந்த வசதி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின்படி, டிக்கி தவிர ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறமும் கைப்பிடியை அணுகுவதற்கு வசதியாக 6 செ.மீ x 2 செ.மீ x 2.5 செ.மீ-க்கு குறையாத அளவில் ஒரு உள்நுழைந்த இடம் இருக்க வேண்டும். காரின் உள்ளே, கதவை எப்படித் திறப்பது என்பதைக் காட்ட குறைந்தபட்சம் 1 செ.மீ x 0.7 செ.மீ அளவுள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, சீனச் சந்தையில் நுழைவதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்கள், அவற்றின் வடிவமைப்புகளை மேம்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறும். மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் கார்களை உள்ளடக்கிய சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'சீனா டெய்லி' நாளிதழ் மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60% வாகனங்களில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள் சீனச் சந்தையில் விற்கப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் தொழில்துறையில் அந்த நாட்டின் பெரும் இருப்பு காரணமாக, இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images டெஸ்லாவில் பிரச்னையா? டெஸ்லாவின் கதவு கைப்பிடிகள் ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் சொந்த விதிகளை பரிசீலித்து வருகின்றனர். நவம்பரில் டெஸ்லாவின் மின்சாரத்தில் இயங்கும் கதவு கைப்பிடிகள் திடீரென வேலை செய்யாமல், காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியது. நிறுவனத்தின் முதன்மை மாடலான டெஸ்லாவின் 2021 மாடல் Y கார்களில் உள்ள கைப்பிடிகள் குறித்து ஒன்பது புகார்கள் வந்ததாகவும் அது தெரிவித்துள்ளது. இதில் நான்கு சம்பவங்களில், கார் உரிமையாளர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க கார் ஜன்னலை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp87gy2x12mo

சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

1 month 1 week ago

சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

பட மூலாதாரம்,AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • பீட்டர் ஹோஸ்கின்ஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மின்சார வாகனங்களில் மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தால் பிரபலப்படுத்தப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய வடிவமைப்பின் பயன்பாட்டை நிறுத்திய முதல் நாடாக மாறியுள்ளது.

சீனாவில் ஷாவ்மி மின்சார வாகனத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டு விபத்துகள் உட்பட பல ஆபத்தான சம்பவங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் மின்சார வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷாவ்மி மின்சார வாகன விபத்துகளில் ஆற்றல் தடைபட்டதன் காரணமாக கதவுகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அரசு ஊடகங்களின்படி, புதிய விதிமுறைகளின் கீழ், கார்களின் கதவுகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் இயந்திர ரீதியாகத் திறக்கும் வசதி (காரின் கதவை மின்சாரம் இல்லாவிட்டாலும் கைப்பிடி, கம்பி அல்லது சாவி போன்ற முறையில் திறக்க முடியும்) இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

இந்தப் புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

60% வாகனங்களில் இந்த வசதி

தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின்படி, டிக்கி தவிர ஒவ்வொரு பயணிகள் கதவின் வெளிப்புறமும் கைப்பிடியை அணுகுவதற்கு வசதியாக 6 செ.மீ x 2 செ.மீ x 2.5 செ.மீ-க்கு குறையாத அளவில் ஒரு உள்நுழைந்த இடம் இருக்க வேண்டும்.

காரின் உள்ளே, கதவை எப்படித் திறப்பது என்பதைக் காட்ட குறைந்தபட்சம் 1 செ.மீ x 0.7 செ.மீ அளவுள்ள அடையாளங்கள் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, சீனச் சந்தையில் நுழைவதற்கான இறுதிக்கட்டத்தில் இருக்கும் கார்கள், அவற்றின் வடிவமைப்புகளை மேம்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெறும்.

மின்சார வாகனங்கள், ஹைப்ரிட் கார்கள் மற்றும் எரிபொருள் செல்கள் மூலம் இயங்கும் கார்களை உள்ளடக்கிய சீனாவின் புதிய ஆற்றல் வாகன சந்தையில் மறைக்கப்பட்ட கைப்பிடிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள 'சீனா டெய்லி' நாளிதழ் மேற்கோள் காட்டிய தரவுகளின்படி, அதிகம் விற்பனையாகும் முதல் 100 புதிய ஆற்றல் வாகனங்களில் சுமார் 60% வாகனங்களில் இந்த வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சீனச் சந்தையில் விற்கப்படும் மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும், உலகளாவிய கார் தொழில்துறையில் அந்த நாட்டின் பெரும் இருப்பு காரணமாக, இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சீனா உலகம் முழுக்க பிரபலமாக உள்ள மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்?

பட மூலாதாரம்,Getty Images

டெஸ்லாவில் பிரச்னையா?

டெஸ்லாவின் கதவு கைப்பிடிகள் ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் ஐரோப்பிய அதிகாரிகளும் தங்கள் சொந்த விதிகளை பரிசீலித்து வருகின்றனர்.

நவம்பரில் டெஸ்லாவின் மின்சாரத்தில் இயங்கும் கதவு கைப்பிடிகள் திடீரென வேலை செய்யாமல், காருக்குள் குழந்தைகள் சிக்கிக்கொண்டதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் ஒரு விசாரணையைத் தொடங்கியது.

நிறுவனத்தின் முதன்மை மாடலான டெஸ்லாவின் 2021 மாடல் Y கார்களில் உள்ள கைப்பிடிகள் குறித்து ஒன்பது புகார்கள் வந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

இதில் நான்கு சம்பவங்களில், கார் உரிமையாளர்கள் இப்பிரச்னையைத் தீர்க்க கார் ஜன்னலை உடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp87gy2x12mo

சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

1 month 1 week ago
சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை Feb 3, 2026 - 06:09 PM 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://adaderanatamil.lk/news/cml6l5vos04sdo29nn7uk8u67

சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

1 month 1 week ago

சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

Feb 3, 2026 - 06:09 PM

சிறுமி துஷ்பிரயோகம் - குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பான வழக்கின் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. 

2020 தொடக்கம் 2021 வரை மூன்று தடவைகள் குற்றம் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 27 வயதுடைய நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

அத்துடன் குற்றவாளிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நட்டஈட்டை செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் மேலும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

https://adaderanatamil.lk/news/cml6l5vos04sdo29nn7uk8u67

"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" / "Independence is not just a flag or a date"

1 month 1 week ago
"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல். — கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் "Independence is not just a flag or a date" 78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions: Are women safe? Are children free from fear? Is justice equal? Is land returned? Is memory a crime? For many—especially Tamil-speaking people— freedom remains selective, justice delayed, and reconciliation conditional. True independence begins when: truth is not silenced, law is not weaponised, and every citizen lives without fear. Until then, February 4th is not just a celebration— it is a reminder of unfinished freedom. — Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"] https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?

"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" / "Independence is not just a flag or a date"

1 month 1 week ago

"சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"

காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது:

பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா?
நீதி சமமானதா?
நிலம் திருப்பித் தரப்படுகிறதா?
நினைவு கூறல் ஒரு குற்றமா?

பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு -

சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது,
நீதி தாமதமாகிறது,
மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது.

உண்மையான சுதந்திரம் தொடங்குவது:

உண்மை அடக்கப்படாதபோது,
சட்டம் ஆயுதமாகாதபோது,
பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது.

அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல -

நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல்.

— கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்

"Independence is not just a flag or a date"

78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions:

Are women safe?
Are children free from fear?
Is justice equal?
Is land returned?
Is memory a crime?

For many—especially Tamil-speaking people—

freedom remains selective,
justice delayed, and
reconciliation conditional.

True independence begins when:

truth is not silenced,
law is not weaponised,
and every citizen lives without fear.

Until then, February 4th is not just a celebration—

it is a reminder of unfinished freedom.

— Kandiah Thillaivinayagalingam
Athiady, Jaffna

துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"]

https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 1 week ago
அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது. அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 1 week ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 96 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வாசபா - எல்லாளன் உடனான ஒரு ஒப்பீடு: தமிழ் மன்னரான எல்லாளன் 44 ஆண்டுகள் (கிமு 205–161) ஆட்சி செய்தான். அதேபோல, மன்னன் வாசபா கூட, 44 ஆண்டுகள் (கிபி 67–111) ஆட்சி செய்தான். அவர்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை சுவாரஸ்யமானது. எல்லாளன் ஒரு நீதியுள்ள ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார், அதே நேரத்தில் வாசபா நீர்ப்பாசனம் மற்றும் பௌத்த நிறுவனங்களுக்கு அளித்த பங்களிப்புகளுக்காக அறியப்பட்டார். விதி மற்றும் மத நன்மைகள்: மகாவம்சம் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளில் புராணக் கூறுகளை உள்ளடக்கியது. நிகழ்வுகள் கர்மா மற்றும் தகுதியால் [karma and merit] ஏற்படுகிறது என்று கூறுகிறது. மதச் செயல்கள் காரணமாக வாசபாவின் ஆட்சிக்காலம் [அதனால் ஆயுட்காலமும்] 12 இல் இருந்து 44 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது என்ற கருத்து ஒரு உண்மைக் கணக்கை விட ஒரு புராணக்கதையாகும். பண்டைய வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் புத்த சமய நம்பிக்கை மற்றும் புத்தரின் அருள் போன்றவற்றை வரலாற்றில் புகுத்தி, அதை பெருமை படுத்திக் காட்டிட புராணங்கள் அல்லது கதைகள் மூலம் முயலுவது ஒரு வழமையாக காண்கிறோம். ஆனால், புத்தர் இப்படியான செயல்களில் நம்பிக்கையற்றவர், வெறுக்கிறார் என்பது எனோ இவர்களுக்கு புரிவதில்லை? வாசபா அல்லது வசபனின் மகன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] என்பவன் பருவக் காளையாக வளர்ந்திருந்தான். வசபன் அவனுக்கு ஏற்ற மனைவியைத் தேடிக் கொண்டிருந்தான். பெண்களின் சுப லட்சனங்களை அறிந்தவர்கள் செங்கல் தொழிலாளியிடம் வளர்ந்து வரும் பெண்ணைப் பற்றி, அரசனிடம் வந்து சொன்னர்கள். அரசன் அவளை அழைத்து வர ஆளனுப்பினன். செங்கல் தொழிலாளி "இவள் ஒரு ராஜகுமாரி" என்று வசபனிடம் கூறினன். சுபகராஜனுடைய மகள் என்பதைக் கூறி அடையாளமாக ராஜ முத்திரையைக் காட்டினன். இது கேட்டு மகிழ்வடைந்த மன்னன் அவளைத் தன் மகனுக்கு மணம் செய்து வைத்தான் என்று அத்தியாயம் 35 கூறுகிறது. வங்கனாசிக தீசனும் அவனது மனைவி, பின்னர் மகா மாதா [Mahamatta] என்று அழைக்கப்பட்டவளும் தமிழர்களாக இருக்கலாம்? இருப்பினும், வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மனைவி மகா மாதா இருவரும் தமிழர்கள் என்ற கூற்றைப் பொறுத்தவரை, இதை முழுமையாக ஆதரிக்க வலுவான வரலாற்று ஆதாரங்கள் குறைவு. நாளாகமங்கள் முதன்மையாக மன்னர்களின் அரசியல் மற்றும் மத அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன மற்றும் அவர்களின் இன தோற்றம் பற்றிய வரையறுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே வழங்குகின்றன. எனினும் அவர்களின் பெயரின் அமைப்பு, அவர்கள் வாழ்ந்த இடம், மற்றும் அவர்களின் செயல், உதாரணமாக விகாரைக்கு 'வள்ளி விகாரை' என்ற பெயரிடுதல் போன்றவை சான்றுகளாகின்றன. பண்டைய காலக் கதைகளின் படி, மன்னர் வாசபாவுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அவரது வம்சாவளியைப் பற்றிய கூடுதல் தரவுகளைக் வழங்குகின்றன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள தம்மன்னாவாவில், [Tammannava Inscription (Kurunegala District)] பிராமி எழுத்துக்களில் இரண்டாம் நூற்றாண்டின் பாறைக் கல்வெட்டு, தூதாக - மகாராஜா [Dutaga - Maharaja] என்ற ஆட்சியாளரைக் குறிக்கிறது, அவர் "பெரிய மன்னன் வஹாபா " [Vahaba] வின் (வாசபா) மகனாக அடையாளம் காணப்படுகிறார். மொனராகலா மாவட்டத்தின் புத்தலாவில் உள்ள ஹபேசாவில் உள்ள மற்றொரு கல்வெட்டு [Habessa Inscription (Buttala, Monaragala District)] , வாசபாவின் பேரனும் மன்னன் உத்தராவின் [King Uttara] மகனுமான நாகா [Naga] என்ற உப-ராஜாவைக் [துணை அரசனை] குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டுகள் வரலாற்றாசிரியர் பரணவிதான (1969) வாசபாவுக்கு மூன்று மகன்கள் இருந்ததாகக் கூற வழிவகுத்தன: தீசன் (வங்கனாசிக தீசன்), தூதாக மற்றும் உத்தரா. வாசபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இராச்சியம் இந்த மூவருக்கும் இடையில் பிரிக்கப்பட்டது என்றும் தீசன் தலைநகரான அனுராதபுரத்தை ஆட்சி செய்தான் என்றும்; தூதாக குருநாகல் பகுதியை ஆட்சி செய்தான் என்றும்; உத்தரா ருஹுணாவை ஆட்சி செய்தான் என்றும் முடிவு செய்தார். இந்தக் கோட்பாடு, வாசபாவின் மரணத்திற்குப் பிறகு, அவனது மகன்கள் தந்தையிடமிருந்து மகனுக்கு என்ற கடுமையான வாரிசுரிமையை, மற்ற எல்லா இலங்கை அரசுகளிலும் பின் பற்றியது போல பின்பற்றாமல், அதற்குப் பதிலாக மூவரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற பரணவிதானவின் கருத்து, மற்றும் பாரம்பரிய நாளாகமங்கள் (மகாவம்சம், தீபவம்சம் போன்றவை) தூதாக மற்றும் உத்தராவைப் பற்றிக் குறிப்பிடாததாலும் உலகளவில் அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால், சில வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர்களைக் காட்டிலும், பிராந்திய ஆட்சியாளர்கள் அல்லது உள்ளூர் இளவரசர்களைக் குறிக்கலாம் என்று வாதிடுகின்றனர். Part: 96 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Vannakatissa was Vasabha’s son and the king was looking for a suitable marriage partner for him. By another storey in the chapter 35, Vannakatissa is happened to marry the daughter of the previous king Subharajah. The Husband Vannakatissa and the wife, later Mahamatta, are both Tamils. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 97 தொடரும் / Will follow துளி/DROP: 2010 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 96 https://www.facebook.com/groups/978753388866632/posts/33615883958060153/?

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்?! - எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்!

1 month 1 week ago
எப்ஸ்டீனமே இவ்வளவு இருந்திருக்கு… அப்ப அவரின் பாஸ் புட்டினிடம்?

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 month 1 week ago
இன்னொரு விடயம். மேலே எழுதபட்டுள்ளது மிக தந்திரமாக தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏதுவாக வரலாற்றை திரிக்கும் முயற்சி. புலிகள் அழிய முன்னோ, அழிந்து கொண்டிருக்கும் போதோ…புலிகள் அழிந்தால் தீர்வு கிடைக்கும் என சம்பந்தர் கூறியதில்லை. சங்கரி, டக்லஸ், கருணாதான் அப்படி கூறியவர்கள். சம்பந்தர் சொன்னது… புலிகள் அழிந்த பின், அவர்களின் அழிவுக்கு பின் தீர்வை தருவோம் என சொன்னோர்… சொன்னபடி தந்தால்…புலிகளின் அழிவை ஒரு நல்ல விடயமாக கருதலாம் என்பதே. இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. இந்தியாவில் போய் போனை ஆப் பண்ணி போட்டு குப்புற படுத்தது - இதை அத்தனை எம்பிகளும் செய்தார்கள். சிலர் இந்தியாவில், சிலர் இலண்டனில், ஈழவேந்தன் கனடாவில், சிலர் கொழும்பில்…. குப்புறபடுத்தார்கள்…எங்கே என்பதுதான் வித்தியாசம். பொன்னரும், சந்திரநேருவும், குதிரை கஜனும்…போரை நிறுத்த சொல்லி ஜெனிவாவில் தீக்குளிக்கவும் இல்லை, இலண்டனில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் இல்லை. இவ்வளவு ஏன், முடிவு நெருங்கியதை அறிந்த பின், புலிகளின் தளபதிகள் கூட குடும்பங்களை ஆமி, நேவியிடம் அனுப்பி வைத்தனர்.