1 month 2 weeks ago
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
1 month 2 weeks ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன். 'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன். ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை. அர்ஜுனன் திகைத்தான். 'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன். அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார். "அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார். கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான். அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான். "கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்? இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை? நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன். அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன். அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார். அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார். கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது. எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன. அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன. படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு. இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன். நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும். அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன். இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய். இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்! தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய். என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். இருந்தாலும், உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது. அது தவறு. இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம் அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான். வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளை சரணடைந்தால், இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம். *மனதை கவர்ந்த பதிவு* 👉" சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!* 👉" பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!* 👉"தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!* 👉"பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!* 👉" இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!* *👉"பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!* 👉" செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!* 👉" வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!* 👉" பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.! *👉" இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!* *🙇" ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!* *🙏" மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*
1 month 2 weeks ago
வேண்டாம். இருக்கிறவர்கள். போதும். அவர்கள். சொல்வதில். 10%. தான். சரியாக. நடக்கிறது. இதை. ஒரு. குழந்தை. கூட. சொல்லும். படிக்க. தேவையில்லை.
1 month 2 weeks ago
Chandran Veerasamy · Suivre treoonpdSsh a0e203i:i16u2,16a110tc0H219à498a4681r7329 f6ft5l · இப்படியே போராடிக்கொண்டிருந்தால் ஒருபயனும் ஏற்படாது. இனி கெரில்லா யுத்த முறைகளைக் கையாள வேண்டும் என எண்ணி, யுத்த முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார். அங்குதான் 'எனது கால்கள் அநீதிகளை எதிர்க்க எல்லைகளைக் கடந்தும் பயணிக்கும்' என்று சொன்ன மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்தது தெரியாமல், அமெரிக்காவும், பாடிஸ்டாவும் கியூபாவில் ஆதிக்க வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஃபிடலும், சே-வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்குகிறார்கள். 1956 -ல் கியூபா புரட்சியாளர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். ஆனால் சே, ஃபிடல் காஸ்ட்ரோ, ஃபிடலின் தம்பி ரவுல் காஸ்ட்ரோ உட்பட 12 வீரர்கள் தப்பித்துச் சென்றனர். கிடைத்த வாய்ப்பில், இன்னும் பல இளைஞர்களைத் திரட்டிக் கெரில்லா யுத்தப் படை வீரர்களாக அவர்களையும் மாற்றினார்கள். 1959-ம் ஆண்டு 9,000 கெரில்லா யுத்த வீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவ வீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சி முறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறார் ஃபிடல். கியூபா விடுதலைக்குப் பெரும் பங்காற்றியவர் 'சே' என பின்நாளில் ஃபிடல் அறிவிக்கிறார். இப்போதும் உலக வழக்கத்தில் 'சே'வையும் ஃபிடலையும் இப்படிக் கூறுவார்கள்... 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச் சிறந்த தளபதி சே' என்று. இவர் பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடலுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல்கள் நடைபெறத் தொடங்கின. ஆனால் அதையெல்லாம் ஃபிடல் வெற்றிகரமாக முறியடித்தார். இதில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா ஃபிடலை எப்படியாவது தன் பக்கம் இழுத்துக்கொள்ளத் திட்டம் தீட்டியது. ஆனால், அனைத்துத் திட்டங்களுமே தோல்வியாகத்தான் இருந்தது. 'கியூபாவுக்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது' என அறிவித்தார் ஃபிடல். இதனால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதனால், கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் கியூபாவுக்கு ரஷ்ய அரசு கைகொடுக்கத் தயாரானது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய சம்மதித்தது அந்த நாடு. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமெரிக்கா, அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடலை கொல்லத் திட்டம் தீட்டியது. ஒரு முறை இருமுறையல்ல 650- க்கும் அதிகமான முறை ஃபிடலைக் கொல்ல முயற்சிகள் செய்தது C.I.A எனப்படும் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு. ரசாயனக் குண்டுகள் போடுவது, சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது, துப்பாக்கியால் சுடுவது, மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது, விஷ மாத்திரைகளைக் கொடுப்பது, விபத்தினை ஏற்படுத்துவது உள்ளிட்டத் திட்டங்களை செயல்படுத்தி 650-க்கும் மேற்பட்ட முறை ஃபிடலைக் கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் தப்பித்துக் கொண்டே இருந்தார். கொலைத் திட்டங்களில் ஒவ்வொரு முறையும் தப்பித்து வருவதால் ஃபிடலைப் பற்றி மக்களிடத்தில் தவறான கருத்துகளையும் பரப்பத் தொடங்கியது அமெரிக்கா. இதனால் அடிக்கடி மக்கள் முன் தோன்றி உரையாற்ற வேண்டிய அவசியம் ஃபிடலுக்கு இருந்தது. எப்படியாவது ஃபிடலைக் கொன்று, கியூபாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தீவிரக் கவனத்தைக் காட்டி வந்தது அமெரிக்கா. ஆனால், அவர்கள் செய்த சதிகள் அனைத்தையும் தூள் தூளாக்கினார் ஃபிடல். பிடலின் இந்த வாக்கியம் இப்போது மட்டுமல்ல எப்போதும் மிகப் பிரசித்தி பெற்றது 'படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒலிம்பிக் போட்டி இருந்தால், கண்டிப்பாக நான்தான் தங்கப் பதக்கம் வெல்வேன்.'........!
1 month 2 weeks ago
உக்கிரேன் மட்டுமல்ல உல்கெங்கிலும் உள்ள பொதுவான பிரச்சினை, சில தவறான புரிதல்களால் ஏற்படுகின்றது. தவறான புரிதல்கள் என கூறவருவது கற்பனைகளால் வடிவமைக்கப்பட்ட பொய்களை உண்மை என உறுதியாக நம்புவது, அதற்காக எதுவும் செய்ய முன்வருகின்ற நிலை, எமது சமூகத்தில் சாதியினை, மதத்தினை, ஆண் பெண் பாகுபாடுகளை சொல்லலாம். தற்போது உருவாக்கப்படும் தீர்வுகளில் தனிய இரஸ்சிய மொழி பேசும் மக்களின் நலன் மட்டும் பேணப்படலாம், ஆனால் அங்கு பல்லின மக்கள் வாழ்கிறார்கள், போலந்து, கங்கேரியர்கள், ருமேனியர்கள் என, அண்மையில் உக்கிரேன் வாழ் கங்கேரியர்களின் உரிமைகள் பேணப்படவேண்டும் என கங்கேரிய அதிபர் உக்கிரேனிய தரப்புகளிடம் கேட்டிருந்தார். தற்போது உருவாக்கப்படும் தீர்வு அனைத்து சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பேணும் வண்ணம் வடிவமைக்கப்படவேண்டும், அவ்வாறில்லாவிட்டால் அது ஒரு முழுமையான தீர்வாக இருக்காது என கருதுகிறேன். உதாரணமாக இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கோரும் போது முஸ்லீம் மக்களினது உரிமைகளுக்கான தீர்வு சேர்ந்தே எட்டபடவேண்டும், இல்லாவிட்டால் தற்போது சிறுபான்மையாக இருக்கும் தமிழ் மக்களால் எதிர்காலத்தில் அவர்களை விட சிறுபான்மையானவர்களின் உரிமை நசுக்கப்படும், இது ஒரு பொதுவான விடயம், சிறுபான்மையான தமிழர்களில் பலருக்கு இதில் வித்தியாசமான அபிப்பிராயம் இருக்கலாம். தற்போது உலகு திட்டமிட்டே உக்கிரேனியர்களின் தவறுகளை விடுத்து அவர்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுகிறது, இதற்காக எந்த தீவிரமான நிலைக்கும் செல்கிறது, இது அங்குள்ள மக்களுக்கிடையே மேலும் விரிசலையே ஏற்படுத்தும், உக்கிரேனியர்கள் யாருடைய நோக்கத்திற்காகவோ பல இளையவர்களின் உயிரினை கொடுத்துள்ளார்கள், உக்கிரேனியர்களை பயன்படுத்துபவர்கள் குறைந்த பட்சம் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தினையும் நேட்டோ உருப்புரிமையினயும் கொடுக்க நினைத்தால் யார் குறுக்கே வரமுடியும்? இவைகளை அனைத்தினையும் உள்ளடக்குவதே ஒரு முழுமையான தீர்வாக அமையலாம், உக்கிரேன் கிடைக்கும் இந்த தீர்வினை வைத்து மேற்கொண்டு தனக்கான மேலான தீர்வினை நோக்கி பயணிக்கவேண்டும், இடங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம் என எந்த தீர்வினையும் நடைமுறையில் எட்ட முடியாது. உக்கிரேனின் இந்த நிலைக்கு உக்கிரேனே காரணமாக இருக்கின்றது, தற்போது கூட 800000 ஆளணி கொண்ட உக்கிரேன் இராணுவம் பேணப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது, போர் தொடரவேண்டும் எனும் நிலையே உக்கிரேனை இயக்குபவர்களின் விருப்பாக உள்ளது, ஆனால் பதிலுக்கு உக்கிரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் உருப்புரிமை வழங்குவோம் என இதுவரை கூறவில்லை. ட்ரம்ப் தீர்வினை கொண்டுவர முயன்றாலும் அடிப்படை பிரச்சினையாக உள்ள இரஸ்சிய முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வு கொண்டுவராவிட்டால் தொடர்ந்தும் அப்பிராந்தியத்தில் அமைதியின்மை தொடர்ந்தும் நிலவும், உக்கிரேனியர்களை வைத்து நடத்த முடியாது ஏன புதிதாக இன்னொரு அயல் நாட்டினை இதே ட்ரம்ப் ஆட்சி ஏற்கனவே தெரிவு செய்திருக்கும். இந்த அதிகாரப்போட்டிக்கு காரணமானவர்களே அதற்கான தீர்வை ஏற்படுத்திவிட்டதற்காக அமைதிக்கான நோபல் பரிசு எதிர்பார்க்கும் முரணான நிலை, இது இக்கால உலகிய உலக ஒழுங்கின் அவல நிலை.
1 month 2 weeks ago
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025
இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது.
இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை.
ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான்.
புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர். ஒவ்வொரு சுடரும் ஒரு கதை.
அங்கே அவள் நின்றிருந்தாள்.
சாம்பிராணி நிறச் சேலையில், கரும்பச்சை மேல்சட்டையுடன் —
முகத்தில் சோகமில்லை, ஆனால் ஒரு பெரும் அமைதி.
அந்த அமைதி தான் அவனைத் திடீரென தடுத்து நிறுத்தியது.
“நீங்க…” என்றவாறு அவள் பார்வை அவன்மேல் தங்கியது.
“நான் ஆதித்தன்…” என்றான் மெல்ல.
“நான் இங்கே வணங்க வரவில்லை … தேட வந்தவன்.”
அவள் மெதுவாக ஒரு விளக்கைத் தன் முன்னால் வைத்து ஏற்றினாள்.
“தேடுபவர் எல்லாம் இழந்தவர்கள்தான்,” என்றாள்.
“சிலர் மனிதரைத் தேடுவார்கள்… சிலர் தங்களைத் தாங்களே தேடிவிடுவார்கள்…”
ஒளி அவள் முகத்தில் விழ, அவள் ஒரு நிழலும் ஆனாள்… ஒரு தீபமும் ஆனாள்.
“எவர் நினைவுக்கு?” என்று அவன் கேட்டான்.
“எனக்குத் தெரியாத ஒருவருக்கு…
ஆனால் அவர் இல்லையென்றால், நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்,” என்றாள்.
ஒரு கணம் —
வானம் இன்னும் கருமையானது போல தோன்றியது.
பிறகே — அருகிலிருந்த நூறு தீபங்களும் ஒன்றாக மினுங்கின.
அந்த ஒளி —
அவனுக்குள் புதைந்திருந்த தந்தையின் முகத்தை எழுப்பியது.
அண்ணனின் குரலினை ஒலிக்க வைத்தது.
அம்மாவின் வாசத்தை மீட்டுக் கொண்டுவந்தது.
“நீங்க பயப்படவில்லையா ?” என்றான்.
“இல்லை,” என்றாள்.
“தீபம் எரிய பயந்தா, இருளே ராஜா ஆகிவிடும்…”
அவன் சிரித்தான்.
மூன்று வருடங்களாகச் சிரிக்க மறந்த உதடுகள் —
இன்று கார்த்திகையின் காரணமாக சிரித்தன.
அவள் பெயர் தீபிகா.
ஒரே எழுத்தை மாற்றினால் போதும் —
அவளே ஒரு தீபம்.
அவள் தன் கைகளால் இன்னொரு விளக்கை ஏற்றி அவனிடம் கொடுத்தாள்.
“இது உங்களுக்கல்ல,” என்றாள்,
“உங்களுக்குள் இன்னும் வாழ்கிறவர்களுக்கு…”
அவன் கண்களில் நீர் தேங்கியது.
அதே நீரில்தான் —
ஒரு காதல் முளைத்தது.
அது உடனடியான காதல் இல்லை.
அது தோன்றி வளர்ந்த தீபக்குஞ்சு.
மௌனத்தில் ஏற்பட்ட உறவு.
கண் மொழியில் உருவான
இரு உள்ளங்களும் இணைந்த நிலை
வலியில் மலர்ந்த நம்பிக்கை.
தூரத்தில் ஒரு பழைய பாடல் ஒலித்தது :
"விளக்கேற்றும் இரவினிலே
விழிகளில் விழுந்த கனவினிலே
அகம் திறக்கும் அன்பினிலே
உலகம் மறந்த தருணமிதே..."
அவர்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்தனர்.
மற்ற எந்தச் சொற்களும் தேவையில்லை.
இந்த கார்த்திகை தீபம் —
ஆதித்தனுக்கு, அகதி என்ற அடையாளத்தை அழித்தது.
தீபிகாவுக்கு, புதுவாழ்வு என்ற அர்த்தத்தைக் கொடுத்தது.
நூறு தீபங்கள் முன்
இரு இதயங்கள்
ஒரே சுடரில்
ஒன்றாயின.
2025 நவம்பர் 27
அன்று எரிந்த தீபம்…
இன்னும்
அவர்களின் உள்ளத்தில்
அணையாமல்
எரிகிறது.
விளக்கின் சுடர் காற்றில் ஆடியது.
ஆனால்
அது அணையவில்லை.
அந்த இரவின் அமைதி — சொற்கள் இல்லாத சங்கீதம்.
நூற்றுக்கணக்கான உயிர்களின் மௌன ஒலி காற்றில் நின்று கொண்டிருந்தது.
ஆதித்தனும் தீபிகாவும் ஒன்றாக நிற்பதாலோ,
அல்லது அவர்களைச் சுற்றி திரண்ட நினைவுகளாலோ,
இந்த மண் ஒரு கணம் உயிர்பெற்றது போலவே இருந்தது.
“நீங்க எங்கிருந்திங்க?” என்று தீபிகா திரும்பவும் கேட்டாள்.
“பல இடங்களில்…” என்றான் அவன்.
“ஆனா எந்த இடத்திலும் இல்லை.”
அவளுக்குப் புரிந்தது.
இது ஒரு அகதியின் பதில்.
நாட்டை இழந்த ஒரு ஆணின் வாக்கியம்.
அவள் சொன்னாள்:
“நீங்க இங்கே இருக்கிங்கன்னு மட்டும் தான் இப்போ முக்கியம்.”
அந்த வார்த்தைகள் காற்றை அல்ல, அவன் உள்ளத்தைக் குத்தியன.
முதன்முறையாக — அவன் “உள்ளே” உணர்ந்தான்.
அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
தீபங்கள் இடையே அமைந்த அந்த குறுகிய பாதை — இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தது.
ஒவ்வொரு விளக்கும் கடந்து செல்லும் போது தீபிகா ஒரு பெயரைச் சொன்னாள்.
ஒரு சகோதரன்…
ஒரு காதலன்…
ஒரு சிறுவன்…
ஒரு தாய்…
ஆதித்தனுக்கு தெரியாத முகங்கள்.
ஆனால் அவன் உணர்ந்து கொண்டிருந்த வலி.
“நீங்க இங்கே ஒவ்வொருவருக்கும் விளக்கு ஏற்றுறீங்களா?” என்றான்.
“இல்லை…”
“நான் என் எதிர்காலத்துக்காக ஏற்றுறேன்,” என்றாள்.
அவன் திடீரென நின்றான்.
“எதிர்காலம்?”
“ஆமா…
இந்த மாதிரி ஒரு நாள்ல
என் குழந்தை
விளக்கு ஏத்த வேண்டாம்னு எதிர்காலம்.”
அந்த ஒரு வாக்கியம்
அவனுக்குள் ஒரு நாடு உருவாக்கியது.
அவன் கண்களில் ஒரே நேரத்தில் இருளும்,
ஒரே நேரத்தில் ஒளியும் பளிச்சிட்டன.
முதல் முறையாக,
அந்த மண்ணை அவன் மன்னித்தான்.
அந்த வானத்தை அவன் ஏற்றுக் கொண்டான்.
அவர்கள் அருகே ஒரு சின்ன பையன் வந்து நின்றான்.
அவன் கைவிரலில் அழிக்காத மெழுகு.
“அண்ணா… உங்க விளக்கு அணையுது” என்றான்.
ஆதித்தன் சிரித்தான்.
“அது வெளிச்சம் முடிவதால இல்லை,
காற்று பயப்படுத்துறதால தான்.”
அருகே நின்ற தீபிகா ஒரு குச்சியை எடுத்து அவன் விளக்கை மீண்டும் ஏற்றினாள்.
அந்தச் சுடர் —
இருவர் உள்ளங்களையும் ஒன்றாக எரிய வைத்தது.
அது விளக்கின் சுடர் அல்ல.
அது நம்பிக்கையின் நெருப்பு.
அன்றிலிருந்து…
அவர்கள் தினமும் சந்திக்கவில்லை.
ஆனால்,
வாரம் ஒருமுறை,
அதே நினைவுத் திடலில்,
ஒரே நேரத்தில்,
விளக்குடன் வந்தனர்.
ஒன்றும் பேசாது,
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார்கள்.
பேசத் தொடங்கிய நாள்,
மழை பெய்த நாள்.
மண்ணின் ஈரம் மணந்த இரவு.
“நீங்க போர்ல யாரையாவது இழந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்டாள்.
அவன் தூரத்தை பார்த்தான்.
“இழக்காம இருக்கிறவங்க யாரு தீபிகா?”
“நான் என்னையே இழந்தேன்.”
அவள் மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்தாள்.
“அப்படின்னா, இப்ப நான் உங்க கண்ணாடி…”
“உங்களையே திரும்ப காட்டுறவன் மாதிரி…”
அவன் பேசவில்லை.
விசும்புதல் மட்டுமே பதிலாய் இருந்தது.
அந்த நாள்தான்,
கார்த்திகாவின் துணி நிறமான
சிவப்பும், மஞ்சளும்
அவனுக்குப் ‘கொடி’யானது.
அந்த இரவுதான்,
ஒரு கன்னத்தின் மீது
முதல் முத்தம் விழுந்தது.
அது ஆசையல்ல.
அது —
மீட்பு.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[[ஒரு வருடம் கழிந்தது
27 நவம்பர் 2026.
அதே இடம்.
ஆனால் இப்போது —
இரண்டு அல்ல,
மூன்று விளக்குகள்.
நடு விளக்கு —
புதிய உயிரின் சுடர்.
தீபிகா மெதுவாக கிசுகிசுத்தாள்:
“இது நம்ம நினைவுகளின் குழந்தை…”
ஆதித்தன் அந்த தீபத்தை பார்த்தவண்ணம் சொன்னான்:
“இது இனி மரணத்துக்கான நாள் இல்லை…”
“இது பிறப்பு நாளாகும்…”
அந்த வானத்தில்
ஒரு நட்சத்திரம் கூடுதலாகத் தோன்றியது.
அது மாவீரன் அல்ல.
அது —
வாழும் வீரன்]]
துளி/DROP: 1920 [சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025]
https://www.facebook.com/groups/978753388866632/posts/32568321442816415/?
1 month 2 weeks ago
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025 இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது. இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை. ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான். புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர். ஒவ்வொரு சுடரும் ஒரு கதை. அங்கே அவள் நின்றிருந்தாள். சாம்பிராணி நிறச் சேலையில், கரும்பச்சை மேல்சட்டையுடன் — முகத்தில் சோகமில்லை, ஆனால் ஒரு பெரும் அமைதி. அந்த அமைதி தான் அவனைத் திடீரென தடுத்து நிறுத்தியது. “நீங்க…” என்றவாறு அவள் பார்வை அவன்மேல் தங்கியது. “நான் ஆதித்தன்…” என்றான் மெல்ல. “நான் இங்கே வணங்க வரவில்லை … தேட வந்தவன்.” அவள் மெதுவாக ஒரு விளக்கைத் தன் முன்னால் வைத்து ஏற்றினாள். “தேடுபவர் எல்லாம் இழந்தவர்கள்தான்,” என்றாள். “சிலர் மனிதரைத் தேடுவார்கள்… சிலர் தங்களைத் தாங்களே தேடிவிடுவார்கள்…” ஒளி அவள் முகத்தில் விழ, அவள் ஒரு நிழலும் ஆனாள்… ஒரு தீபமும் ஆனாள். “எவர் நினைவுக்கு?” என்று அவன் கேட்டான். “எனக்குத் தெரியாத ஒருவருக்கு… ஆனால் அவர் இல்லையென்றால், நான் இன்று இங்கே இருக்க மாட்டேன்,” என்றாள். ஒரு கணம் — வானம் இன்னும் கருமையானது போல தோன்றியது. பிறகே — அருகிலிருந்த நூறு தீபங்களும் ஒன்றாக மினுங்கின. அந்த ஒளி — அவனுக்குள் புதைந்திருந்த தந்தையின் முகத்தை எழுப்பியது. அண்ணனின் குரலினை ஒலிக்க வைத்தது. அம்மாவின் வாசத்தை மீட்டுக் கொண்டுவந்தது. “நீங்க பயப்படவில்லையா ?” என்றான். “இல்லை,” என்றாள். “தீபம் எரிய பயந்தா, இருளே ராஜா ஆகிவிடும்…” அவன் சிரித்தான். மூன்று வருடங்களாகச் சிரிக்க மறந்த உதடுகள் — இன்று கார்த்திகையின் காரணமாக சிரித்தன. அவள் பெயர் தீபிகா. ஒரே எழுத்தை மாற்றினால் போதும் — அவளே ஒரு தீபம். அவள் தன் கைகளால் இன்னொரு விளக்கை ஏற்றி அவனிடம் கொடுத்தாள். “இது உங்களுக்கல்ல,” என்றாள், “உங்களுக்குள் இன்னும் வாழ்கிறவர்களுக்கு…” அவன் கண்களில் நீர் தேங்கியது. அதே நீரில்தான் — ஒரு காதல் முளைத்தது. அது உடனடியான காதல் இல்லை. அது தோன்றி வளர்ந்த தீபக்குஞ்சு. மௌனத்தில் ஏற்பட்ட உறவு. கண் மொழியில் உருவான இரு உள்ளங்களும் இணைந்த நிலை வலியில் மலர்ந்த நம்பிக்கை. தூரத்தில் ஒரு பழைய பாடல் ஒலித்தது : "விளக்கேற்றும் இரவினிலே விழிகளில் விழுந்த கனவினிலே அகம் திறக்கும் அன்பினிலே உலகம் மறந்த தருணமிதே..." அவர்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்தனர். மற்ற எந்தச் சொற்களும் தேவையில்லை. இந்த கார்த்திகை தீபம் — ஆதித்தனுக்கு, அகதி என்ற அடையாளத்தை அழித்தது. தீபிகாவுக்கு, புதுவாழ்வு என்ற அர்த்தத்தைக் கொடுத்தது. நூறு தீபங்கள் முன் இரு இதயங்கள் ஒரே சுடரில் ஒன்றாயின. 2025 நவம்பர் 27 அன்று எரிந்த தீபம்… இன்னும் அவர்களின் உள்ளத்தில் அணையாமல் எரிகிறது. விளக்கின் சுடர் காற்றில் ஆடியது. ஆனால் அது அணையவில்லை. அந்த இரவின் அமைதி — சொற்கள் இல்லாத சங்கீதம். நூற்றுக்கணக்கான உயிர்களின் மௌன ஒலி காற்றில் நின்று கொண்டிருந்தது. ஆதித்தனும் தீபிகாவும் ஒன்றாக நிற்பதாலோ, அல்லது அவர்களைச் சுற்றி திரண்ட நினைவுகளாலோ, இந்த மண் ஒரு கணம் உயிர்பெற்றது போலவே இருந்தது. “நீங்க எங்கிருந்திங்க?” என்று தீபிகா திரும்பவும் கேட்டாள். “பல இடங்களில்…” என்றான் அவன். “ஆனா எந்த இடத்திலும் இல்லை.” அவளுக்குப் புரிந்தது. இது ஒரு அகதியின் பதில். நாட்டை இழந்த ஒரு ஆணின் வாக்கியம். அவள் சொன்னாள்: “நீங்க இங்கே இருக்கிங்கன்னு மட்டும் தான் இப்போ முக்கியம்.” அந்த வார்த்தைகள் காற்றை அல்ல, அவன் உள்ளத்தைக் குத்தியன. முதன்முறையாக — அவன் “உள்ளே” உணர்ந்தான். அவர்கள் இருவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினர். தீபங்கள் இடையே அமைந்த அந்த குறுகிய பாதை — இரண்டு உலகங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக இருந்தது. ஒவ்வொரு விளக்கும் கடந்து செல்லும் போது தீபிகா ஒரு பெயரைச் சொன்னாள். ஒரு சகோதரன்… ஒரு காதலன்… ஒரு சிறுவன்… ஒரு தாய்… ஆதித்தனுக்கு தெரியாத முகங்கள். ஆனால் அவன் உணர்ந்து கொண்டிருந்த வலி. “நீங்க இங்கே ஒவ்வொருவருக்கும் விளக்கு ஏற்றுறீங்களா?” என்றான். “இல்லை…” “நான் என் எதிர்காலத்துக்காக ஏற்றுறேன்,” என்றாள். அவன் திடீரென நின்றான். “எதிர்காலம்?” “ஆமா… இந்த மாதிரி ஒரு நாள்ல என் குழந்தை விளக்கு ஏத்த வேண்டாம்னு எதிர்காலம்.” அந்த ஒரு வாக்கியம் அவனுக்குள் ஒரு நாடு உருவாக்கியது. அவன் கண்களில் ஒரே நேரத்தில் இருளும், ஒரே நேரத்தில் ஒளியும் பளிச்சிட்டன. முதல் முறையாக, அந்த மண்ணை அவன் மன்னித்தான். அந்த வானத்தை அவன் ஏற்றுக் கொண்டான். அவர்கள் அருகே ஒரு சின்ன பையன் வந்து நின்றான். அவன் கைவிரலில் அழிக்காத மெழுகு. “அண்ணா… உங்க விளக்கு அணையுது” என்றான். ஆதித்தன் சிரித்தான். “அது வெளிச்சம் முடிவதால இல்லை, காற்று பயப்படுத்துறதால தான்.” அருகே நின்ற தீபிகா ஒரு குச்சியை எடுத்து அவன் விளக்கை மீண்டும் ஏற்றினாள். அந்தச் சுடர் — இருவர் உள்ளங்களையும் ஒன்றாக எரிய வைத்தது. அது விளக்கின் சுடர் அல்ல. அது நம்பிக்கையின் நெருப்பு. அன்றிலிருந்து… அவர்கள் தினமும் சந்திக்கவில்லை. ஆனால், வாரம் ஒருமுறை, அதே நினைவுத் திடலில், ஒரே நேரத்தில், விளக்குடன் வந்தனர். ஒன்றும் பேசாது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பார்கள். பேசத் தொடங்கிய நாள், மழை பெய்த நாள். மண்ணின் ஈரம் மணந்த இரவு. “நீங்க போர்ல யாரையாவது இழந்திருக்கீங்களா?” என்று அவள் கேட்டாள். அவன் தூரத்தை பார்த்தான். “இழக்காம இருக்கிறவங்க யாரு தீபிகா?” “நான் என்னையே இழந்தேன்.” அவள் மெல்ல அவன் கைமீது தன் கையை வைத்தாள். “அப்படின்னா, இப்ப நான் உங்க கண்ணாடி…” “உங்களையே திரும்ப காட்டுறவன் மாதிரி…” அவன் பேசவில்லை. விசும்புதல் மட்டுமே பதிலாய் இருந்தது. அந்த நாள்தான், கார்த்திகாவின் துணி நிறமான சிவப்பும், மஞ்சளும் அவனுக்குப் ‘கொடி’யானது. அந்த இரவுதான், ஒரு கன்னத்தின் மீது முதல் முத்தம் விழுந்தது. அது ஆசையல்ல. அது — மீட்பு. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [[ஒரு வருடம் கழிந்தது 27 நவம்பர் 2026. அதே இடம். ஆனால் இப்போது — இரண்டு அல்ல, மூன்று விளக்குகள். நடு விளக்கு — புதிய உயிரின் சுடர். தீபிகா மெதுவாக கிசுகிசுத்தாள்: “இது நம்ம நினைவுகளின் குழந்தை…” ஆதித்தன் அந்த தீபத்தை பார்த்தவண்ணம் சொன்னான்: “இது இனி மரணத்துக்கான நாள் இல்லை…” “இது பிறப்பு நாளாகும்…” அந்த வானத்தில் ஒரு நட்சத்திரம் கூடுதலாகத் தோன்றியது. அது மாவீரன் அல்ல. அது — வாழும் வீரன்]] துளி/DROP: 1920 [சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025] https://www.facebook.com/groups/978753388866632/posts/32568321442816415/?
1 month 2 weeks ago
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ......... இரவிச்சந்திரன் & ஜெயலலிதா ........! 😍
1 month 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . ........! தமிழ் பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஊரறியாமல் மறைத்த போதும் ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி நெஞ்சுக்கு உன் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி பெண் : சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் சபை அறியாமல் நடக்கும் அது தலைமுதல் கால்வரை அளக்கும் இடை இடையே கொஞ்சம் சிரிக்கும் அது ஏழையின் பசிபோல் இருக்கும் இருக்கும் நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் ஆசையை பலநாள் அடக்கும் அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும் பெண் : ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும் அது ஆண்களுக்கு எங்கே இருக்கும் இருக்கும் ஆண் : நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி ஆண் : பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண்ணுக்கு ரகசியம் ஏது தலை பின்னலும் பேசிடும்போது பெண் : கண்ணுக்கு திரை கிடையாது அது கலந்த பின் விலகுவதேது …ஏது............! --- நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ---
1 month 2 weeks ago
"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்"
“🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“
ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும்
தமிழ் உலகம் நினைவுகூருகிறது
போரை அல்ல, அரசியலை அல்ல —
மக்களை, உயிர்களை, கனவுகளை!
சம உரிமைகளுக்கான .....
கண்ணியத்திற்கான .....
தாயகத்திற்கான .....
குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான ....
நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது
வெறுப்பின் தீயால் அல்ல
நம்பிக்கையின் ஒளியால் —
நாம் விளக்கை ஏற்றுகிறோம் —
உலகம் தங்கள் ஒளியைத்
தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்!
நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் -
திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்!
நாம் துக்கப்படுகிறோம் —
ஏனென்றால் நாம் மனிதர்கள்
மேலும் அவர்களும் மனிதர்கள்!
நாளையத் தலைமுறைக்கென்று
கண்ணீரிலே விதைத்த
மறக்க முடியாத கனவொன்று
எம் இதயத்தில் எழுகிறது!
அந்தக் கனவே —
நவம்பர் 27 தீபம்,
அணையாத நினைவு!
========================
“வன்னியின் குரல்கள்”
மாங்குளம் முதல் ஒட்டுசுட்டான் வரை
குழந்தைகள் வயல்களில் மகிழ்ந்தனர்
காற்றில் பறக்கும் தென்னோலை போல
கிளிநொச்சியில் கனவுகள் பின்னின!
பனை மரங்களின் கீழ் குடும்பங்கள் கூடி
புதுக்குடியிருப்பில் உண்டு பேசி பகிர்ந்தனர்
ஆனால் போர் ஒரு அழிப்பேரலையாக வந்தது
எல்லாவற்றையும் அடித்துச் சென்றது!
சுதந்திரபுரம் குண்டுகளால் நடுங்கியது
மந்துவில் மதிய வேளையும் இருட்டானது
வலையர்மடத்தில் கூடாரங்கள் நிரம்பி வழிந்தன
வட்டுவாகலில் உலகம் மறுபக்கம் திரும்பியது!
இறுதியாக —
முள்ளிவாய்க்கால் கைவிடப்பட்ட மக்களின்
இறுதி மூச்சானது!
இன்று நவம்பர் 27
வன்னியின் ஒவ்வொரு கிராமத்திற்கும்
ஒவ்வொரு நதிக்கும்
ஒவ்வொரு வயலுக்கும்
ஒவ்வொரு வீட்டிற்கும்
ஒரு தீபம் ஏற்றுகிறோம்!
ஏனென்றால்,
அவர்களின் மண் இரத்தம் சிந்தினாலும்
உண்மை இன்னும் நிலைத்திருக்கிறது —
உடைக்கப்படாமல், தோற்கடிக்கப்படாமல்.
======================================
“முள்ளிவாய்க்கால் மறவாத நினைவு”
உலகம் கண்களை மூடிய போது
முள்ளிவாய்க்கால் அமைதியாக அலறியது!
தாய்மாரின் வெற்றுக் கரங்களுக்கும்
தந்தையர் தோண்டும் கல்லறைகளுக்கும்
நிமிர்ந்து நின்ற பனை சாட்சியானது!
மே மாதம் 2009 இல்
உலகம் காணாத பெரும் துயரம்
சில நாட்களில் அரங்கேறியது!
இல்லாமல் போனவர்களின் பிரதிபலிப்பு
ஏரியில் தெளிவாய் தெரியுது
வானமும் சாட்சி சொல்லுது!
பென்சிளை பிடிக்கும் குழந்தைகள்
குண்டின் நெருப்பிற்கு மூச்சைப் பிடித்தன
அவர்களின் குற்றம் தமிழராகப் பிறந்ததே!
புகையில் மறைந்தன கிராமங்கள்
குடும்ப வரலாறும் சேர்ந்து எரிந்தன!
மனிதகுலம் அழித்ததை
பிரபஞ்சம் வைத்திருக்கும் என்று -
மக்கள் தங்கள் பெயர்களை
காற்றிடம், விண்மீன்களிடம், கிசுகிசுத்தனர்!
வன்னியின் இறுதி அலறல்கள்
ஒலியின் அலையில் கரைந்தபோது -
புதிய மௌனம் எழுந்தது!
முழு மக்களும் கத்திப் புரண்டு
கண்ணீருக்கு அப்பால் அழுதபோது
அந்த மௌனம் உருவாக்கியது!
=====================================
“🕯️ எமது வாக்குறுதி“
உங்கள் நினைவு மறையாது
உங்கள் கதைகள் கடலுடன் கரையாது
உங்கள் முகங்கள் மங்காது!
இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும்
ஒரு தீபம் எழும்பும்
ஒவ்வொரு கனவு முடியும்போதும்
ஒரு பாடல் தொடங்கும்
ஒவ்வொரு குரல் மௌனிக்கும்போதும்
ஒரு புதிய தலைமுறை பேசும்!
இதனால்தான் நவம்பர் 27 வாழ்கிறது
போரின் நினைவாக அல்ல —
மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது
மீண்டும் எப்போதும் அது மறக்கப்படாது
மீண்டும் எப்போதும் அந்த உண்மை அழிக்கப்படாது
என்ற ஒரு உறுதிமொழியாக!
====================================
“உலகம் பதிலளிக்க வேண்டிய நாள் இது ”
குற்றத்தை உலகம் பெயரிட
சங்கிலிகளை உடைத்து சத்தியம் மலர
பொய்களின் நிழலில் இருந்து
நீதி வெளியே வர -
முள்ளிவாய்க்கால் அமைதியாக இல்லை
அது பதிலுக்காக காத்திருக்கிறது!
உலகம் கண்களை மூடினாலும்
வன்னிமண் எலும்புகளை பாதுகாக்கிறது
யாரும் சேகரிக்கா விட்டாலும்
கடல் உடல்களை வைத்திருக்கிறது
ஐ.நா. மண்டபங்கள் செவியை மூடினாலும்
காற்று அழுகைகளைச் சுமந்து செல்கிறது!
நீதி ஒரு மெதுவான நதி என்றாலும்
ஆறுகள் தங்கள் பாதையை மறப்பதில்லை!
ஒரு நாள், முள்ளிவாய்க்கால்
உலக நீதிமன்றத்தில் பேசப்படும்
ஒரு நாள், மணல் பிளந்து
உண்மை புயலாக எழும்
ஒரு நாள், உலகம் வாய்திறந்து
மௌனத்திற்கு பதிலளிக்கும்!
அந்த நாள் வரும்போது
நாம் ஏற்றி வைக்கும் விளக்குகள்
நினைவால் மட்டுமல்ல
வெற்றியாலும் ஒளிரும்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"🕯️ The Flame of November 27"
------------------------------------------
“🕯️ Why We Light the Lamp?“
Every November 27, the Tamil world remembers
Not war, not politics —
But the people. The lives. The dreams.
The ones who left home in school uniforms
And never returned.
The ones who answered the call
Not out of hatred,
But out of hope —
Hope for equal rights,
Hope for dignity,
Hope for a homeland
Where children could grow without fear.
We light the lamp
Because the world refused to hold their light.
We whisper their names
Because justice refused to speak them.
We mourn
Because we are human —
And because they were too.
========================
“Voices of the Vanni”
From Mankulam to Oddusuddan,
the Vanni once bloomed
with fields of paddy
and laughter of children.
In Kilinochchi,
dreams were woven
like coconut leaves in the wind.
In Puthukkudiyiruppu,
families gathered under palm trees,
sharing meals, stories, futures.
But the war came like a wave—
sweeping everything.
In Suthanthirapuram,
the earth trembled with shells.
In Manthuvil,
the sky turned dark at noon.
In Valaiyarmadam,
tents overflowed with the wounded.
In Vattuvaagal,
the world turned its face away.
And at last—
Mullivaikkal,
the final breath of a people
cornered by fate
and abandoned by humanity.
Today, we light a lamp
for every village of the Vanni,
every river, every field, every home
scarred by the war.
For even if their soil still bleeds,
their truth still stands—
unbroken, undefeated.
================================
“Mullivaikkal and the Unbroken Memory“
When the world turned its eyes away,
The shores of Mullivaikkal learned to scream in silence.
Palm trees stood as witness-towers,
Watching mothers run with empty arms,
And fathers dig graves with trembling hands.
The lagoon held the reflection
Of a thousand fleeing shadows,
But the sky held the truth —
No place on earth
Has ever swallowed so much sorrow
In so few days.
Children who should have held pencils
Held their breath instead,
While shells carved fire
Into the crowded sands.
Their only crime:
Being born Tamil.
Villages disappeared in smoke,
Pages of family history burned,
Yet the people whispered their names
To the wind, to the stars,
Hoping the universe might hold
What humanity destroyed.
And when the final screams dissolved
Into the sound of waves,
A new silence rose —
The silence that forms
When an entire people
Has cried beyond tears.
=============================
“🕯️ The Promise We Carry“
We will not forget.
We will not allow the sea
To swallow their stories.
We will not allow time
To blur their faces.
For every child lost,
A lamp will rise.
For every dream ended,
A song will begin.
For every voice silenced,
A new generation will speak.
This is why November 27 lives in us.
Not as a memory of war —
But as a pledge:
Never again.
Never forgotten.
Never erased.
=================================
“The Day the World Must Answer”
Mullivaikkal is not quiet—
it is waiting.
Waiting for the world
to name the crime.
Waiting for truth
to break its chains.
Waiting for justice
to step out of the shadows.
The earth still holds the bones
the world refused to see.
The sea still keeps the bodies
no one came to collect.
The wind still carries the cries
that never reached the UN halls.
But justice is a slow river—
and rivers do not forget their path.
One day,
Mullivaikkal will be spoken
in the courtrooms of the world.
One day,
the truth buried in sand
will rise like a storm.
One day,
the world will answer
for the silence it kept.
And when that day comes,
the lamps we light
will glow not only with memory—
but with victory.
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
துளி/DROP: 1919 ["🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்"
https://www.facebook.com/groups/978753388866632/posts/32568135796168313/?
1 month 2 weeks ago
"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" “🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“ ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் தமிழ் உலகம் நினைவுகூருகிறது போரை அல்ல, அரசியலை அல்ல — மக்களை, உயிர்களை, கனவுகளை! சம உரிமைகளுக்கான ..... கண்ணியத்திற்கான ..... தாயகத்திற்கான ..... குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான .... நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது வெறுப்பின் தீயால் அல்ல நம்பிக்கையின் ஒளியால் — நாம் விளக்கை ஏற்றுகிறோம் — உலகம் தங்கள் ஒளியைத் தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்! நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் - திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்! நாம் துக்கப்படுகிறோம் — ஏனென்றால் நாம் மனிதர்கள் மேலும் அவர்களும் மனிதர்கள்! நாளையத் தலைமுறைக்கென்று கண்ணீரிலே விதைத்த மறக்க முடியாத கனவொன்று எம் இதயத்தில் எழுகிறது! அந்தக் கனவே — நவம்பர் 27 தீபம், அணையாத நினைவு! ======================== “வன்னியின் குரல்கள்” மாங்குளம் முதல் ஒட்டுசுட்டான் வரை குழந்தைகள் வயல்களில் மகிழ்ந்தனர் காற்றில் பறக்கும் தென்னோலை போல கிளிநொச்சியில் கனவுகள் பின்னின! பனை மரங்களின் கீழ் குடும்பங்கள் கூடி புதுக்குடியிருப்பில் உண்டு பேசி பகிர்ந்தனர் ஆனால் போர் ஒரு அழிப்பேரலையாக வந்தது எல்லாவற்றையும் அடித்துச் சென்றது! சுதந்திரபுரம் குண்டுகளால் நடுங்கியது மந்துவில் மதிய வேளையும் இருட்டானது வலையர்மடத்தில் கூடாரங்கள் நிரம்பி வழிந்தன வட்டுவாகலில் உலகம் மறுபக்கம் திரும்பியது! இறுதியாக — முள்ளிவாய்க்கால் கைவிடப்பட்ட மக்களின் இறுதி மூச்சானது! இன்று நவம்பர் 27 வன்னியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு வயலுக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தீபம் ஏற்றுகிறோம்! ஏனென்றால், அவர்களின் மண் இரத்தம் சிந்தினாலும் உண்மை இன்னும் நிலைத்திருக்கிறது — உடைக்கப்படாமல், தோற்கடிக்கப்படாமல். ====================================== “முள்ளிவாய்க்கால் மறவாத நினைவு” உலகம் கண்களை மூடிய போது முள்ளிவாய்க்கால் அமைதியாக அலறியது! தாய்மாரின் வெற்றுக் கரங்களுக்கும் தந்தையர் தோண்டும் கல்லறைகளுக்கும் நிமிர்ந்து நின்ற பனை சாட்சியானது! மே மாதம் 2009 இல் உலகம் காணாத பெரும் துயரம் சில நாட்களில் அரங்கேறியது! இல்லாமல் போனவர்களின் பிரதிபலிப்பு ஏரியில் தெளிவாய் தெரியுது வானமும் சாட்சி சொல்லுது! பென்சிளை பிடிக்கும் குழந்தைகள் குண்டின் நெருப்பிற்கு மூச்சைப் பிடித்தன அவர்களின் குற்றம் தமிழராகப் பிறந்ததே! புகையில் மறைந்தன கிராமங்கள் குடும்ப வரலாறும் சேர்ந்து எரிந்தன! மனிதகுலம் அழித்ததை பிரபஞ்சம் வைத்திருக்கும் என்று - மக்கள் தங்கள் பெயர்களை காற்றிடம், விண்மீன்களிடம், கிசுகிசுத்தனர்! வன்னியின் இறுதி அலறல்கள் ஒலியின் அலையில் கரைந்தபோது - புதிய மௌனம் எழுந்தது! முழு மக்களும் கத்திப் புரண்டு கண்ணீருக்கு அப்பால் அழுதபோது அந்த மௌனம் உருவாக்கியது! ===================================== “🕯️ எமது வாக்குறுதி“ உங்கள் நினைவு மறையாது உங்கள் கதைகள் கடலுடன் கரையாது உங்கள் முகங்கள் மங்காது! இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தீபம் எழும்பும் ஒவ்வொரு கனவு முடியும்போதும் ஒரு பாடல் தொடங்கும் ஒவ்வொரு குரல் மௌனிக்கும்போதும் ஒரு புதிய தலைமுறை பேசும்! இதனால்தான் நவம்பர் 27 வாழ்கிறது போரின் நினைவாக அல்ல — மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது மீண்டும் எப்போதும் அது மறக்கப்படாது மீண்டும் எப்போதும் அந்த உண்மை அழிக்கப்படாது என்ற ஒரு உறுதிமொழியாக! ==================================== “உலகம் பதிலளிக்க வேண்டிய நாள் இது ” குற்றத்தை உலகம் பெயரிட சங்கிலிகளை உடைத்து சத்தியம் மலர பொய்களின் நிழலில் இருந்து நீதி வெளியே வர - முள்ளிவாய்க்கால் அமைதியாக இல்லை அது பதிலுக்காக காத்திருக்கிறது! உலகம் கண்களை மூடினாலும் வன்னிமண் எலும்புகளை பாதுகாக்கிறது யாரும் சேகரிக்கா விட்டாலும் கடல் உடல்களை வைத்திருக்கிறது ஐ.நா. மண்டபங்கள் செவியை மூடினாலும் காற்று அழுகைகளைச் சுமந்து செல்கிறது! நீதி ஒரு மெதுவான நதி என்றாலும் ஆறுகள் தங்கள் பாதையை மறப்பதில்லை! ஒரு நாள், முள்ளிவாய்க்கால் உலக நீதிமன்றத்தில் பேசப்படும் ஒரு நாள், மணல் பிளந்து உண்மை புயலாக எழும் ஒரு நாள், உலகம் வாய்திறந்து மௌனத்திற்கு பதிலளிக்கும்! அந்த நாள் வரும்போது நாம் ஏற்றி வைக்கும் விளக்குகள் நினைவால் மட்டுமல்ல வெற்றியாலும் ஒளிரும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "🕯️ The Flame of November 27" ------------------------------------------ “🕯️ Why We Light the Lamp?“ Every November 27, the Tamil world remembers Not war, not politics — But the people. The lives. The dreams. The ones who left home in school uniforms And never returned. The ones who answered the call Not out of hatred, But out of hope — Hope for equal rights, Hope for dignity, Hope for a homeland Where children could grow without fear. We light the lamp Because the world refused to hold their light. We whisper their names Because justice refused to speak them. We mourn Because we are human — And because they were too. ======================== “Voices of the Vanni” From Mankulam to Oddusuddan, the Vanni once bloomed with fields of paddy and laughter of children. In Kilinochchi, dreams were woven like coconut leaves in the wind. In Puthukkudiyiruppu, families gathered under palm trees, sharing meals, stories, futures. But the war came like a wave— sweeping everything. In Suthanthirapuram, the earth trembled with shells. In Manthuvil, the sky turned dark at noon. In Valaiyarmadam, tents overflowed with the wounded. In Vattuvaagal, the world turned its face away. And at last— Mullivaikkal, the final breath of a people cornered by fate and abandoned by humanity. Today, we light a lamp for every village of the Vanni, every river, every field, every home scarred by the war. For even if their soil still bleeds, their truth still stands— unbroken, undefeated. ================================ “Mullivaikkal and the Unbroken Memory“ When the world turned its eyes away, The shores of Mullivaikkal learned to scream in silence. Palm trees stood as witness-towers, Watching mothers run with empty arms, And fathers dig graves with trembling hands. The lagoon held the reflection Of a thousand fleeing shadows, But the sky held the truth — No place on earth Has ever swallowed so much sorrow In so few days. Children who should have held pencils Held their breath instead, While shells carved fire Into the crowded sands. Their only crime: Being born Tamil. Villages disappeared in smoke, Pages of family history burned, Yet the people whispered their names To the wind, to the stars, Hoping the universe might hold What humanity destroyed. And when the final screams dissolved Into the sound of waves, A new silence rose — The silence that forms When an entire people Has cried beyond tears. ============================= “🕯️ The Promise We Carry“ We will not forget. We will not allow the sea To swallow their stories. We will not allow time To blur their faces. For every child lost, A lamp will rise. For every dream ended, A song will begin. For every voice silenced, A new generation will speak. This is why November 27 lives in us. Not as a memory of war — But as a pledge: Never again. Never forgotten. Never erased. ================================= “The Day the World Must Answer” Mullivaikkal is not quiet— it is waiting. Waiting for the world to name the crime. Waiting for truth to break its chains. Waiting for justice to step out of the shadows. The earth still holds the bones the world refused to see. The sea still keeps the bodies no one came to collect. The wind still carries the cries that never reached the UN halls. But justice is a slow river— and rivers do not forget their path. One day, Mullivaikkal will be spoken in the courtrooms of the world. One day, the truth buried in sand will rise like a storm. One day, the world will answer for the silence it kept. And when that day comes, the lamps we light will glow not only with memory— but with victory. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 1919 ["🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/32568135796168313/?
1 month 2 weeks ago
மாவீரர்களுக்கு வீர வணக்கம் ........!
1 month 2 weeks ago
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: 55 பேர் பலி - சேதத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து வியாழக்கிழமைக்குள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 26 நிமிடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், 270க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளிவந்த படங்கள் அதிக அளவு புகை, தீப்பிழம்புகள், அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு நிலவும் குழப்பமான சூழ்நிலையைக் காட்டுகின்றன. வியாழக்கிழமை காலைக்குள், எட்டு குடியிருப்பு வளாகங்களில் நான்கில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீதமுள்ள வளாகங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் காலையிலும் புகையைக் காண முடிந்தது. வியாழக்கிழமை மாலைக்குள் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று தீயணைப்புத் துறை நம்புகிறது. ராய்ட்டர்ஸ் தகவலின் படி, ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் மொத்தம் 2,000 குடியிருப்புகள் உள்ளன. ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:51 மணியளவில் வாங் ஃபுக் கோர்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது, அதன் பிறகு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 45 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் தீயணைப்பு வீரர் வை-ஹோவும் ஒருவர். ஹாங்காங் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "ஹோ வை-ஹோவின் மறைவுக்கு தீயணைப்புத் துறை இயக்குநர் ஆண்டி யங் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு தீயணைப்பு வீரரும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள தாய் போ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும்போது, மூக்கைத் துளைக்கும் அளவுக்கு கடுமையான புகை நாற்றம் வீசுவதாக ஹாங்காங்கில் உள்ள பிபிசி செய்தியாளர் ஃபோப் காங் கூறுகிறார். "நாங்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும் வழியில், தீப்பிழம்புகளால் சூழப்பட்ட கட்டடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த ஏராளமான மக்களைக் கண்டோம். பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன, மேலும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைந்துகொண்டிருந்தன. தீயணைப்பு வீரர்கள் அதில் இருந்து ஆக்ஸிஜன் தொட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தனர்" என்றும் அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தாய் போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், அருகிலுள்ள மூன்று குடியிருப்புத் தொகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார். வெளியேற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள சமூக மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது. படக்குறிப்பு, சம்பவ இடத்தில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . அருகிலுள்ள கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு ஒரு உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அரசாங்கம் தற்காலிக முகாம்களையும் திறந்துள்ளது என, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹெர்மன் டியு குவான் ஹோ உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதற்கிடையில், "பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன, 30க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்கள் தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து வேறு திசையில் திருப்பி விடப்பட்டுள்ளன" என ஹாங்காங்கின் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது. தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் சூழலில், நேரடி போக்குவரத்து நிலையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிப்பவர் ஹாரி சியோங். வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஹாரி சியோங் என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், பிற்பகல் 2:45 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதாகவும், அருகிலுள்ள கட்டடத்தில் தீப்பிழம்புகள் மிகப்பெரியதாக இருந்ததாகவும் கூறினார். "நான் உடனடியாக திரும்பிச் சென்று என் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தேன். நான் எப்படி உணர்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று அவர் பகிர்ந்து கொண்டார். கட்டடங்களுக்கு இடையிலான தூரம் மிகக் குறைவாக இருந்ததா ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, குடியிருப்பு வளாகத்தின் எட்டு கட்டடங்களுக்கு இடையே மிகக் குறைந்த தூரம் மட்டுமே இருந்தது. ஹாங்காங்கில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பொதுவாகச் சிறிய அளவிலான, ஒன்றுக்கொன்று நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளுக்குப் பெயர் பெற்றவை. கட்டடங்களுக்கு இடையிலான இடைவெளியும் மிகவும் குறைவாக இருக்கும். நெரிசல் காரணமாக, இந்த தீ விபத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வாங் ஃபுக் வளாக குடியிருப்புகளில் ஒவ்வொரு வீடும் பொதுவாக 400 முதல் 500 சதுர அடிவரை பரப்பளவு கொண்டவை. இந்த வளாகம் கடற்கரைக்கு அருகில், ஒரு முக்கிய நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ளது. மேலும் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இங்கு மொத்தம் சுமார் 4,600 பேர் வசித்து வருகின்றனர். தீ பரவத் தொடங்கியது எப்படி ? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, கட்டடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. தீ வேகமாக பரவியதற்குக் காரணமாக, அருகிலுள்ள கட்டடங்களில் நடைபெற்று வந்த பழுது பார்க்கும் பணிகள் குறிப்பிடப்படுகின்றன. கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மூங்கில் கட்டமைப்புகள் இந்த கட்டடங்களின் வெளியே அமைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றொருவர் பொறியியல் ஆலோசகர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், கட்டடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வந்ததாகவும், ஜன்னல்களில் பொருத்தப்பட்டிருந்த பாலிஸ்டிரீன் பலகைகளின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கட்டடத் தொகுதிகளுக்கு இடையில் மூங்கில் கட்டமைப்புகள் நிறுவப்பட்டதாகவும், இதனால் தீ மற்ற கட்டடங்களுக்கும் பரவியிருக்கலாம் என்றும் நிர்வாகம் கூறுகிறது. இந்த தீ விபத்து எவ்வளவு தீவிரமானது ? இந்த தீ விபத்து 5 ஆம் நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது தீவிரத்தின் அடிப்படையில் வகை 1 முதல் 5 வரையிலான அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும். முன்னதாக, 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஹாங்காங்கில் கிரேடு 5 தீ விபத்து ஏற்பட்டது. அதில் நால்வர் உயிரிழந்தனர். "ஹாங்காங்கின் வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்" என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி ஹாங்காங்கில் சட்டமன்றக் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், தீ விபத்து காரணமாக பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பரப்புரைகளை ஒத்திவைத்துள்ளன. இதற்கிடையில், வாங் ஃபுக் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தாய் போ மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்படும் என்று ஹாங்காங்கின் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமையன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வியாழக்கிழமை வாங் ஃபுக் குடியிருப்பு வளாகத்தில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை எழுவதை காட்டும் ட்ரோன் படம். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, ஹாங்காங் அரசாங்கத்தின் கூற்றுப்படி, புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில் வாங் ஃபுக் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, தீயை அணைக்க சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், அவர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தை போ மாவட்ட கவுன்சிலர் முய் சியு-ஃபங் பிபிசி சீன சேவையிடம் கூறுகையில், சுமார் 95 சதவிகித மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகள் மக்களுக்காக தங்குமிடங்களை அமைத்துள்ளனர், அங்கு மருந்து மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றார். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் கட்டடத்தில் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருவதாகவும், மூங்கில் கட்டுமான அமைப்புகள் மற்றும் பாலிஸ்டிரீன் பலகைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதனால் தீ வேகமாக பரவியதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, வாங் ஃபுக் வளாகத்தில் வசிக்கும் ஜேசன் காங், தனது குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படுவதாக ராய்ட்டர்ஸிடம் கூறினார். "நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்," என்று அவர் பகிர்ந்துகொண்டார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு,சேதத்தின் அளவு இன்னும் தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் தற்காலிக தங்குமிடங்களுக்காக பல சமூக மையங்களையும், சில பள்ளிகளையும் திறந்துள்ளது. பட மூலாதாரம், Phoebe Kong/BBC படக்குறிப்பு, இப்பகுதி எட்டு கோபுர கட்டடங்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 31 மாடிகள் உயரம் கொண்டது. 2021 அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அவை தோராயமாக 4,600 குடியிருப்பாளர்களுக்கு 1,984 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளன. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இந்த கோபுர வளாகங்கள் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மூங்கில் கட்டமைப்புகளை புகைப்படத்தில் தெளிவாக காண முடியும். மேலும் அவை தீ வேகமாகப் பரவுவதற்கு பங்களித்ததாக நம்பப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y2w02vz93o
1 month 2 weeks ago
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்! 27 Nov, 2025 | 11:54 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும். இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231605
1 month 2 weeks ago
சீரற்ற வானிலை ; மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்!
27 Nov, 2025 | 11:54 AM

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் சில இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே, மின்சாரத்தடை ஏற்பட்டால் இலங்கை மின்சார சபையின் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231605
1 month 2 weeks ago
கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு Nov 27, 2025 - 12:43 PM அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது. காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://adaderanatamil.lk/news/cmih3k34u021yo29nsvvqsl5l 'பேராறு' குளத்தின் வான் கதவு திறப்பு; மன்னார் மாந்தை மேற்கு பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 02:09 PM https://www.virakesari.lk/article/231605 வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் 'பேராறு' குளத்தின் வான் கதவு ஒன்று நேற்று புதன்கிழமை (26) திறக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த குளத்தின் நீரானது மன்னார் மாவட்டத்தின் பறங்கி ஆறு ஊடாக பெருக்கெடுக்க வாய்ப்புள்ளது என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மேலும் பேராறு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர் பார்க்கப்படுகின்றது. எனவே பறங்கி ஆற்றின் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேய்ச்சல் தரைக்காக கால் நடைகளை கொண்டு சென்ற பண்ணையாளர்கள் தங்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களின் பாதுகாப்புக் கருதி திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொடர்பில் இருக்குமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/231629
1 month 2 weeks ago
2026 ரி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் 26 Nov, 2025 | 02:08 PM (நெவில் அன்தனி) பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தை முன்னின்று நடத்தவுள்ள வரவேற்பு நாடுகளான இலங்கை, இந்தியாவுடன் 8 நாடுகள் சுப்பர் சுற்றுக்கான முன்கூட்டிய நிரல்படுத்தலில் பெயரிடப்பட்டுள்ளன. உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுள்ள 20 அணிகளுக்கான தரிவரசையை ஐசிசி வெயிட்டுள்ளதுடன் ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழு நிலைகள் மற்றும் போட்டி அட்டவணை ஆகியன ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பிரசன்னத்துடன் மும்பையில் நேற்று உத்தியோகபூர்மாக வெளியிடப்பட்டது. சர்வதேச ரி20 கிரிக்கெட்டுக்கான அணிகள் தரவரிசையில் நடப்பு சம்பியன் இந்தியா (272 புள்ளிகள்), முன்னாள் சம்பியன்களான அவுஸ்திரேலியா (267) மற்றும் இங்கிலாந்து (258), நியூஸிலாந்து (251), தென் ஆபிரிக்கா (240), முன்னாள் சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் (236), பாகிஸ்தான் (235), மற்றும் இலங்கை (228) ஆகியன முதல் 8 இடங்களில் இருக்கின்றன. இதற்கு அமைய இந்த அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் X குழுவில் இந்தியா (X 1), அவுஸ்திரேலியா (X 2), மேற்கிந்தியத் தீவுகள் (X 3), தென் ஆபிரிக்கா (X 4) ஆகியனவும் Y குழுவில் இங்கிலாந்து (Y 1), நியூஸிலாந்து (Y 2), பாகிஸ்தான் (Y 3), இலங்கை (Y 4) ஆகியனவும் நிரல்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணிகளை விட வேறு அணிகள் சுப்பர் சுற்றுக்கு தெரிவானால் வெளியேறும் அணிகளின் இடங்களை அவை நிரப்பும். ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் மற்றைய 12 அணிகளின் தரவரிசை நிலைகள் வருமாறு: பங்களாதேஷ் (223 புள்ளிகள் 9ஆம் இடம்), ஆப்கானிஸ்தான் (220 புள்ளிகள் 10ஆம் இடம்), அயர்லாந்து (201 புள்ளிகள் 11ஆம் இடம்), ஸிம்பாப்வே (200 புள்ளிகள் 12ஆம் இடம்), நெதர்லாந்து (182 புள்ளிகள் 13ஆம் இடம்), நமிபியா 181 புள்ளிகள் 15ஆம் இடம்), ஐக்கிய அரபு இராச்சியம் (176 புள்ளிகள் 16ஆம் இடம்), நேபாளம் (176 புள்ளிகள் 17ஆம் இடம்), ஐக்கிய அமெரிக்கா (175 புள்ளிகள் 18ஆம் இடம்), கனடா (154 புள்ளிகள் 19ஆம் இடம்), ஓமான் (154 புள்ளிகள் 20ஆம் இடம்), இத்தாலி (115 புள்ளிகள் 28ஆம் இடம்) பத்தாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் இலங்கை, பாகிஸ்தான் ஆகியவற்றின் சகல போட்டிகளும் கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறும். ஒருவேளை, இந்த இரண்டு அணிகளும் இரண்டு அரை இறுதிகளுக்கு தெரிவானால் பாகிஸ்தானின் அரை இறுதிப் போட்டி இலங்கையிலும் வேறு ஒரு நாட்டுடனான இலங்கையின் அரை இறுதிப் போட்டி இந்தியாவிலும் நடைபெறும். பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தெரிவானால் அது இந்தியாவுடனான போட்டியாக இருந்தாலும் அப் போட்டி கொழும்பில் நடைபெறும். இலங்கையும் வேறு ஒரு நாடும் இறுதிப் போட்டிக்கு தெரிவானல் அப் போட்டியும் பெரும்பாலும் கொழும்பில் நடைபெறும். இந்தியாவும் வேறு ஒரு நாடும் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் தெரிவானால் அந்த இரண்டு போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். https://www.virakesari.lk/article/231491
1 month 2 weeks ago
சொந்த மண்ணில் சோடைபோனது இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது Published By: Vishnu 26 Nov, 2025 | 07:37 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்து சொந்த மண்ணில் சோடை போன இந்தியா, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்த கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் 30 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்தியா, குவாஹாட்டியில் இன்று நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா அடைந்த மிகப் பெரிய தோல்வி இதுவாகும். போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் புதிய விளையாட்டரங்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்வையாளர்கள் மத்தியில் சைமன் ஹாமரின் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. கடந்த 25 வருடங்களில் இந்திய மண்ணில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன் கடந்த 12 மாதங்களில் இந்தியா அடைந்த இரண்டாவது டெஸ்ட் தொடர் தோல்வி இதுவாகும். 2024 நவம்பர் மாதம் ஆரம்பமாகி 2025 ஜனவரி மாதம் நிறைவடைந்த 5 போட்டிகள் கொண்ட போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் பதில் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் தெரிவித்தார். 'ஓர் அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்வேண்டும். தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி பெருமை அடைந்தார்கள். அவர்கள் முழுத் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினர். இந்தத் தொடரில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு அதனைப் ஒரு படிப்பினையாகக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்' என ரிஷாப் பான்ட் மேலும் தெரிவித்தார். இந்தத் தொடரில் துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸிலும் முதலாவது டெஸ்டில் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்ற ஷுப்மான் கில் நீங்கலாக சகல விக்கெட்களையும் இழந்த இந்தியாவின் அதிகபட்ச மொத்த எண்ணிக்கை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட 201 ஓட்டங்களாகும். தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாதென்கிறார் கம்பீர் இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாது என தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்றுநரான பின்னர் இந்தியா 18 டெஸ்ட் போட்டிகளில் 10இல் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விகளுக்கான பழி தன்னிடமிருந்து தொடங்குவதாக கம்பீர் தெரிவித்தார். செயதியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், 'தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 0 - 2 என்ற தொடர் தோல்விக்கு அணியில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும். அனைவர் மீதும் பழி சுமத்தப்படலாம். ஆனால், அது என்னிடம் இருந்துதான் தொடங்கும்' என்றார். 'தனிப்பட்ட வீரர்களையோ வீரர்களின் அடி தெரிவுகளையோ குறை கூற முடியாது. ஒருபோதும் தனிநபரை குறை கூற மாட்டேன். நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். சுருக்கமாக சொல்லின் எமது அணி எப்போதும் கற்றுக்கொள்ளும் அணி. இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தமட்டில் இந்த அணி உயரிய இடத்துக்கு செல்வதற்கான நிலைமாற்றக் காலத்தில் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/231543
1 month 2 weeks ago
சிம்பாவே அணி இலங்கையணிக்கு சவாலாக உருவெடூத்துள்ளது, சிம்பாவே அணியும் இலங்கை அணி போல நிண்டகாலமாக விளையாடும் அணிதான், புதிதாக வரும் அணிகள் வெகு வேகமாக முன்னேறிவருகிறார்கள் சில அணிகள் பின் தங்கி விடுகிறன்றன, இல்லங்கை அணி தகுதி சுற்றினை இலகுவாக கடந்து விடும் என கருதுகிறேன்,
1 month 2 weeks ago
இம்ரான் கான் கொல்லப்பட்டாரா? - அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம் 27 Nov, 2025 | 01:13 PM கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் அடியாலா சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டது. இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்து, நேற்றை தினம் சிறைச்சாலை வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இம்ரான் கான் சிறைக்குள்தான் இருக்கிறார், அவர் வேறு எங்கும் மாற்றப்படவில்லை, அவர் தொடர்ந்து முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஜியோ நியூஸ், பாகிஸ்தான் டுடே முதலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சில நாட்களாக இம்ரான் கானை சந்திக்கச் சென்ற அவரது மூன்று சகோதரிகள் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (PTI) கட்சித் தொண்டர்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இம்ரான் கானை சந்திக்க சிறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த காரணத்தினால் அவர் சிறைக்குள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்நாட்டில் பரவத் தொடங்கியது. இம்ரான் கானை சந்திக்க விடாமல் சிறை நிர்வாகம் தடுப்பதில் சந்தேகம் கொண்டு சகோதரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறைச்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இம்ரான் கானின் உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று சகோதரிகள் கூறத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் சிறைச்சாலையில் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரவத் தொடங்கின. இந்த சமூக ஊடகப் பதிவுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிறைச்சாலை வளாகத்தில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெருமளவினர் திரண்டு கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிறைச்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இம்ரான் கானின் நிலை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என கட்சித் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ள இதேவேளை, இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்து, பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. எனினும், பாகிஸ்தான் அரசும் சிறை நிர்வாகமும், தற்போது பரவும் செய்திகளை மறுத்து வருகின்றன. இச்சூழ்நிலையில் இம்ரான் கானின் தங்கை நோரின் நிாயஸி கூறுகையில், “அண்ணன் இம்ரான் கானை பார்க்கவேண்டும் என்றுதான் சிறைக்கு சென்றோம். நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைக்கு வெளியில் போராடினோம். எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பஞ்சாப் மாகாண பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு 71 வயதாகிறது. எனது தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று என்னை வீதியில் தள்ளிவிட்டனர். இதனால் எனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். இம்ரான் கானை யாரும் சந்திக்காதவாறு அதிகாரபூர்வமற்ற தடையை பாகிஸ்தான் அரசு விதித்திருக்கக்கூடும் என்றும் அதனால்தான் கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231620