Aggregator
‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்
‘பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க மாட்டேன்’ - டிரம்புடனான பேச்சுவார்த்தையின் பின் நெதன்யாகு ஆவேசம்
01 Oct, 2025 | 12:39 PM
![]()
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார்.
நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார்.
அவர் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பேசியபோது, "போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கு ஒருபோதும் தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரச் சில நாட்கள் எடுக்கும் என்றும், அதன்பின்னர் தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு!
கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு!
கொழும்பு நீச்சல் கழகத்திற்கு (Colombo Swimming Club) எதிராக, கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 8 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனின் தந்தை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
பாடசாலை மாணவனின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாவது,
எனது மகன் கொழும்பு நீச்சல் கழகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது எனது மகன் நீச்சல் தடாகத்தில் விளையாடியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து எனது மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில் மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
மகனுக்கு எவ்வளவு நேரம் ஒட்சிசன் வழங்கப்பட்டது, அம்புலன்ஸ் எப்போது வந்தது என வைத்தியர்கள் கேட்ட கேள்விகளுக்கு எங்களிடம் பதில் இல்லை.
ஏனென்றால், கொழும்பு நீச்சல் கழகத்தின் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் சரியான தகவல்களை எங்களிடம் வழங்கவில்லை. அவர்களிடம் சிசிடிவி கமராக்களும் இல்லை.
எனது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு நீச்சல் கழகத்தின் கவனக்குறைவே காரணம்.
எனவே நான் இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தேன்.
எனது மகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய பாடசாலை மாணவனுக்கு மூளை பாதிப்பு ; தந்தை பொலிஸில் முறைப்பாடு! | Virakesari.lk
சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்
சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு காவல்துறையா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?

பட மூலாதாரம், Getty Images
கட்டுரை தகவல்
மோகன்
பிபிசி தமிழ்
1 அக்டோபர் 2025, 01:52 GMT
கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
"ஒருநபர் ஆணையம் விசாரணையை அறிக்கை கிடைத்த பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்படும்," எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
கரூரைப் போலவே, கடந்த ஜனவரியில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 37 பேரும் (பிபிசி புலனாய்வில் 82 பேர் பலியானது தெரியவந்தது) பெங்களூருவில் ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர்.
இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் யார்யார் தண்டிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரூரில் என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105, 110, 125 பி, 223 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியது போன்றவற்றை குறிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
அனுமதி பெறும் நடைமுறை என்ன?
ஒரு கட்சி அல்லது அமைப்பு பொது நிகழ்ச்சி நடத்த விரும்புகிறதென்றால் அவர்கள் முதலில் விருப்பமான இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தகவல்கள் என்னென்ன?
நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்?
நிகழ்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள்
எந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி நடத்தப்படும்?
என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்?
எத்தனை வாகனங்கள் வரும், வாகனங்களுக்கான நிறுத்துமிடம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பார்ட் 4 என்கிற பதிவு பராமரிக்கப்படும். அதில் அந்த சரகத்திற்கு உட்பட்ட கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கின்ற இடத்தில் நிகழ்ச்சியை சுமூகமாக நடத்த முடியுமா என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து அனுமதி வழங்கப்படும்.
பரப்புரையைத் தாண்டி பேரணி நடத்தப்படுகிறது என்றால் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி.
"பேரணி எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிவடைகிறது, எத்தனை மணிக்கு தொடங்கி எப்போது முடிவடையும், எந்த வழித்தடத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது, எத்தனை பேர் வர உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை வழங்க வேண்டும். காவல்துறை அந்த இடங்களின் தன்மை, போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான சாத்தியமான இடையூறுகள் போன்றவற்றை ஆராய்ந்து தான் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்." என்றார் அவர்.
ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்ன?
நிகழ்ச்சிக்காக அனுமதி பெறுகிற போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு என்கிறார் கருணாநிதி.
அரசியல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், அதனை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
"நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பிடம், நிழற்குடை, போதுமான இடவசதிகள், நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை சமாளிக்க தன்னார்வலர்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார் கருணாநிதி.
ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வெவ்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்வது, நேரலை செய்வது போன்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ளலாம் என்று சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.

பட மூலாதாரம், Karunanidhi
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி
காவல்துறையின் பொறுப்பு என்ன?
நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதோடு, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து முறையான பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் முதன்மையான கடமை என்கிறார் கருணாநிதி.
காவல்துறையின் பொறுப்புகளை விளக்கிய அவர், "கூட்ட நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவை தான் காவல்துறையின் முதன்மையான பொறுப்புகள். நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாது அதனை ஒட்டியுள்ள இடங்களை ஆராய்வதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும் காவல்துறையின் பணி" என்றும் தெரிவித்தார்.
நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு?
நெரிசல் ஏற்பட்டால் அதற்கு இரண்டு தரப்புக்குமே பொறுப்புண்டு என்கிறார் கருணாநிதி.
கடந்த கால கூட்ட நெரிசல் சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்.
"நிகழ்ச்சி நடத்துவது என்பது இரு தரப்பின் பொறுப்பு என்கிறோமோ அதே போல நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டால் அதை இரு தரப்பின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்." என்று கூறுகிறார் கருணாநிதி.
வருகின்ற கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறினால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் பொறுப்பாவார்கள் எனக் கூறும் அவர் காவல்துறையும் தனக்கு பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது என்கிறார்.
"காவல்துறைக்கு உளவு அறிக்கையின் மூலம் எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணிப்பு இருக்கும். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவார்கள் அல்லது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் காவல்துறை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது நிகழ்ச்சியின்போதோ தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பிலிருந்தும் ஒலி பெருக்கிகள் மூலம் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Hariparanthaman
படக்குறிப்பு, ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்
விசாரணை எப்படி நடக்கும்?
கூட்ட நெரிசல் வழக்குகளை விசாரிப்பதும் குற்றத்தை நிரூபிப்பதும் கடினமானது என இருவரும் ஒப்புக் கொள்கின்றனர்.
ஆனால் முன்பிருந்ததைவிட விசாரணை தற்போது நவீனமடைந்துவிட்டது என்கிறார் கருணாநிதி, "நிகழ்ச்சி நடத்த யார் பெயரில் அனுமதி பெறப்படுகிறதோ, யார் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளார்களோ அவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும். அதோடு கூட்ட நெரிசல் எதனால் நடைபெற்றது, அதற்கு யார் காரணம், யாராவது ஒருவரின் குறிப்பிட்ட செயல் காரணமா என்கிற நோக்கிலும் விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சியின் முழு காணொளி பதிவுகள் இப்போது கிடைக்கின்றன, நேரலை செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகள் உள்ளன, நேரடி சாட்சிகளின் பதிவுகள் உள்ளன. இவையெல்லாம் விசாரணையை எளிமையாக்கும்." என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நடத்திய பல நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஹரிபரந்தாமன்.
"சட்டப்பூர்வமாக பார்த்தால் கூட்ட நெரிசல் வழக்குகளும் சாலை விபத்து வழக்குகளைப் போன்றது தான். கடந்த ஆண்டு தான் மெரினாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் யாரும் விசாரிக்கப்பட்டதாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் அலட்சியம் தான் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அதனை நிரூபிப்பது கடினம்." என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
கூட்ட நெரிசலுக்கு பொறுப்பு காவல்துறையா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களா?
சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்
சிறுவர்களின் பாதுகாப்புக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் - பொலிஸ்
01 Oct, 2025 | 02:41 PM
![]()
அனைத்து சிறுவர்களுக்கும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த, வளமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவது எமது கடமையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின வாழ்த்துக்களை முன்வைத்து பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் நமது எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் நமது முக்கிய பொறுப்பாகும். சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், நற்பண்பு வளர்ச்சிக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதே இலங்கை பொலிஸின் நோக்கம்.
எல்லா சிறுவர்களும் நலமுடன், பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கமாகும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேற உதவுவதே எமது கடமை.
இன்று சிறுவர் தினத்தில், நாம் அனைவரும் குழந்தைகளுக்கு ஒரு நன்மையான, அன்பான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைந்திட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதே நோக்கத்தில், சமூகத்துடன் இணைந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
'45 அடி உயரம்' - 9 பேர் இறந்த எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்
30 செப்டெம்பர் 2025
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர்.
பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில், 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக சிஐடியூ மாநில துணைத் தலைவர் விஜயன் பிபிசியிடம் பேசுகையில், " சுமார் 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்துவிட்டது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்துவிட்டனர்." என்றார்.

பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோதி இரங்கல்
இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்." என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், இச்செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என மோதி தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.