1 month 2 weeks ago
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி, சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து புதன்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அத்துடன் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். இதே போன்று அண்மை நாட்களில் வேறு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். https://madawalaenews.com/32520.html
1 month 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 2 weeks ago
பாரத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்துள்ளது!🤣
1 month 2 weeks ago
வாழ்த்துக்கள்..
1 month 2 weeks ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருணன்.
1 month 2 weeks ago
புதிதாக புது மியுசிக் போட மற்றவர்களால் இயலவில்லை அதனால் தானே அவர் பாடலை களவெடுத்து அப்படியே போடுகின்றனர்
1 month 2 weeks ago
புடின் உக்ரேனை இணைக்க ஆசைபட்டதை பார்த்து ட்ரம் கனடாவை இணைக்க ஆசைபட்டதை பார்த்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆசை வந்து சிந்து பகுதி மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று சொல்லியுள்ளார். இலங்கையுடன் இணைந்து தான் தான் வட கிழக்கு உள்ளது. அகன்ற இந்தியா காண வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவுடன் இலங்கை வடகிழக்கை இணைக்கும் அகன்ற இந்தியா 🤣 ஆசை பிஜேபி தவைர்களுக்கு இருந்ததாக சொல்கின்றார்கள். ஜேவிபியும் இந்தியாவுக்கு இந்த நோக்கம் இருப்பதாக சொல்லி இருக்கின்றதாம். --- @Kandiah57 ஐரோப்பிய பாதகாப்பு மிகவும் முக்கியம் அதுவும் ரஷ்யா போன்ற மோசமான ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து
1 month 2 weeks ago
மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! 🎂 இனிய 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள், அருணன்! லண்டன் மண்ணில் உதித்த அழகன் கண்களில் மின்னும் புன்னகை நதி ஆண்டுகள் பறந்தாலும் மங்காத பாசம் விண்மீனாய் எங்கள் குடும்பத்தின் ஒளி!🌸 காழ்ப்புணர் வில்லா வாழ்க்கை கொண்டவனே ஆழ்ந்த அன்பின் மறு உருவமே தாழ்ந்த எண்ணம் அற்ற சுடரே யாழ்ப்பான வேரின் செடியே நீடூழிவாழ்க!🌸 அறிவும் ஆற்றலும் இணைந்து என்றும் அழகு தெய்வமாய் பிரகாசிக்கும் அருணனே அடக்கமும் பணிவும் இரண்டையும் கொண்டு அருமையான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!🌸 பன்னிரண்டு ஆண்டுகள் சென்றது போலவே இன்பம் என்றும் உன்னச் சூழ சின்ன அனிகா சேர்ந்து விளையாட வான் எங்கும் பிறந்தநாள் ஒலிக்கட்டும்! 🌸 தாத்தா, கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் 🎂 Happy 12th Birthday, Arunan! Born as dawn lit London skies, A spark of joy in gentle eyes. Years have flown, yet bright you stay, A shining star in life’s ballet. From Jaffna roots your story grew, Through England’s dreams, life shaped anew. Now Swiss hills echo your name, In two sweet tongues, you play the same. A mind that learns, a heart so kind, With light of wisdom intertwined. Let courage lead, let laughter flow, Let love and kindness ever grow. Dear Arunan, twelve years today, May sunshine light your every way. With sister Anikka by your side, May life forever bloom with pride! 💫🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna Joyeux 12ᵉ Anniversaire, Arunan ! Né à l’aube sous le ciel de Londres, Une étincelle de joie dans tes yeux tendres. Les années passent, tu brilles toujours, Étoile rayonnante des plus beaux jours. Des racines de Jaffna ton histoire s’élève, Par les rêves d’Angleterre, ta vie s’achève. Maintenant les collines suisses murmurent ton nom, En deux douces langues, tu fais ton son. Un esprit curieux, un cœur sincère, La lumière du savoir t’éclaire. Que le courage te guide, que le rire t’entoure, Et que l’amour grandisse chaque jour. Cher Arunan, douze ans aujourd’hui, Que le soleil éclaire tes nuits et tes vies. Avec ta sœur Anikka à tes côtés, Que la fierté et la joie soient à jamais partagées ! 🎈 With love and blessings from Granddad, Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna மூத்த பேரனுக்கு 12ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! / 🎂 Happy 12th birthday to our eldest grandson! https://www.facebook.com/groups/978753388866632/posts/32547543381560888/?
1 month 2 weeks ago
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு
written by admin November 25, 2025

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார்.
இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘
பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
https://globaltamilnews.net/2025/223052/
1 month 2 weeks ago
இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/
1 month 2 weeks ago
வணக்கம் ஐயனே, இந்த நூலின் இரண்டாம் Volume கிடைக்குமா? நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் முதல்1000 சொச்சம் பக்கங்கள் உள்ளன. இன்னும் 700 பக்கங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது? நன்றி
1 month 2 weeks ago
வேறு. வழி. ஏதாவது. உண்டா ?. எதிர்க்கமால். விட்டால். எற்றுக்கொண்டால். என்ன. நடக்கும். அதனால. ஐரோப்பிய ஓன்றியத்துக்கு. ஏதாவது. நன்மைகளுண்டா. ? உங்களை. விட. ஐரோப்பியா. ஓன்றிய. தலைவர்களுக்கு. அரசியல் அறிவு. கூட. உண்டு. ரஸ்யாவல். ஐரோப்பிய. ஒன்றியத்துக்கு. எண்ணையும். எரி வாயுவும். விற்க்கமால். வழ முடியுமா ? முடியுமாயின். விற்பனையை. நிறுத்த வேண்டியது தானே. ௳,,! ஏன். நிறுத்தவில்லை. ?
1 month 2 weeks ago
அதுசரி, ஏன் மூஞ்சூரொன்று இப்ப குறுக்கால ஓடுது? மஹிந்தவின் காலத்தில், அநிஞாயத்திற்கு அவர்களுக்கு முட்டுக்கொடுத்து நிஞாயப்படுத்தியவர், இப்போ ஏன் மாற்றிப்பேசுகிறார்? எல்லோருக்கும் திடீரென்று அனுரா மேல் பாசம் வந்திட்டுது! இவர் கூறும் காரணங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதே.
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
1 month 2 weeks ago
Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது.
1 month 2 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 50 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இயக்கர்கள் பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரா?' டாக்டர் சுவாமிநாத ஐயரின் [உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்ற உ. வே. சாமிநாதையர் / Mahamahopadhyaya Dr V. Swaminatha Aiyar] கூற்றுப்படி, பாரம்பரியமாக சைன நெறி என்று அறியப்படும், ஒரு பண்டைய இந்திய சமயமான, சைனம் (Jainism) மதத்தில், 24 தீர்த்தங்கரர்களில் (ஆன்மீக ஆசிரியர்கள் அல்லது துறவிகள்) ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இயக்கர் (யக்கா மற்றும் யாக்கினி என்று அழைக்கப்படுபவர்கள்) இருந்தனர் என்று அறியப்படுகிறது. கேப் கொமோரின் (Cape Comorin / இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரியை ஆங்கிலத்தில் cape comorin என்பர்) அருகே சில இடங்களில் யாக்கி அல்லது யக்ஸி க்குப் பதிலாக, இன்று அது 'இசக்கி' என்று அழைக்கப்படுகிறது. சமண சமய சாத்திரங்கள் 24 யட்சினிகள் குறித்து பேசுகிறது. இந்த யட்சினிகள் சமணர் கோயில்களில் காணப்படுகிறது. மேலும் 'யக்ஷி ' என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக இன்று மாறிவிட்டது. பண்டைய தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஆரம்பகால ஆளும் பழங்குடியினரில் இயக்கர்கள் ஒருவராக இருந்ததாகவும், கிறிஸ்தவ சகாப்தம் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்பே அவர்கள் அழிந்து விட்டதாகவும் இராமாயணம், மகாவம்சம் மற்றும் புராணங்களில் இருந்து நாம் அறிகிறோம். மேலும் 'இசக்கிமுத்து' என்பது தமிழ்நாட்டில் மிகவும் பொதுவான பெண் பெயர் ஆகவும், இயக்கச்சி என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயராகவும் உள்ளதைக் கவனிக்கவும். மேலும் மகாவம்சத்தின் 10 ஆம் அத்தியாயத்தின் 86 முதல் 88 வரையுள்ள வசனங்களைப் பார்க்கவும் [கடந்த காலத்தில் மன்னன் பண்டுகாபயனுக்கு உதவிய அடிமைப் பெண் ஒரு யாக்கினியாக மீண்டும் பிறந்தார். நன்றியுள்ள மன்னன் நகரத்தின் தெற்கு வாசலில் அவளைக் குடியேற்றினார். அரச அரண்மனைக்குள்ளும் அவர் யாக்கினியை பெண்குதிரை வடிவில் வைத்திருந்தார். ஆண்டுதோறும் அவர் அவர்களுக்கும் மற்ற இயக்கர்களுக்கும் பலியிடுதல்களைச் செய்து வந்தார்; ஆனால் திருவிழா நாட்களில் அவர் யக்கா சித்தராஜனுடன் [yakkha Cittaraja] சமமான உயரத்தில் அமர்ந்திருந்தார். மேலும் அவர்களுக்கு முன்பாக தெய்வங்களும் மனிதர்களும் நடனமாடின.] அங்கு யக்கா சித்தராஜா மன்னன் பாண்டுகாபயனுக்கு இணையாக அமர்ந்திருந்தார். அதாவது இவனின் ஆட்சியில் இயக்கர்களுக்கென தனி விழாக்கள் எடுத்தும் அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் இடமளித்தும் அவர்களை நண்பர்களாக கொண்டும் அரசாண்டதாகத் தெரிகிறது. மேலும் மன்னன் இந்த கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி அடைந்ததுடன், அவர் தெய்வீக மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இயக்கர்களுக்கும் மரியாதை செலுத்தி, மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தார் என்றும் தெரியவருகிறது. ஆனால் ஒன்றை மீண்டும் நினைவு படுத்துங்கள். இந்த இயக்கர்களைத்தான், விஜயன் இலங்கைக்கு வரும் முன், புத்த சமயம் அங்கு வாழவென, முற்றாக இலங்கையில் இருந்து தீபவம்ச, மகாவம்ச புத்தர் வெருட்டி அகற்றினார்? Part: 50 / Appendix – Dipavamsa / 'Is Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon?; Quote: ‘Yaksi devata. Dr. Swaminatha Aiyar in a note informs us that in the Jaina books, every one of the twenty four Tirthankaras [a saviour and supreme preacher of the dharma (righteous path)] was served by a Yakka and a Yakkini. This name is current as Issaki in places round about Cape Comorin. we know from history and legends as testified to Ramayana and Mahavamsa that Yakkas were one of the early ruling tribes in ancient South India and Ceylon, and died out some time before the commencement of the Christian era’. Unquote It may also be added that Issakimuttu is a very common female name in Tamil Nadu. Iyakkachchi is the name of a place in the Kilinochchi District of the Northern Province of Sri Lanka. Also see the verses 86 to 88 of the chapter 10 of the Mahavamsa [The slave-woman who had helped him in time past and was re-born of a yakkhini, the thankful (king) settled at the south gate of the City. Within the royal precincts he housed the yakkhini in the form of a mare. Year by year he had sacrificial offerings made to them and to other (yakkhas); but on festival-days he sat with the yakkha Cittaraja beside him on a seat of equal height, and having gods and men to dance before him, the king took his pleasure, in joyous and merry wise.] to see how the Yakkha Cittaraja was treated by the king Pandukabhaya. Yakkha Cittaraja was seated on par with the king Pandukabhaya. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 51 தொடரும் / Will follow துளி/DROP: 1916 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 50] https://www.facebook.com/groups/978753388866632/posts/32546205285028031/?
1 month 2 weeks ago
இன்னுமா அமெரிக்க அதிபர் சொல்வதை இந்த உலகம் நம்பி கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்........................🤣. நாளைக்கு விடிந்தால் அவர் என்ன சொல்லுவார் என்று எங்களுக்கு மட்டும் இல்லை, அவருக்கே தெரியாது...................😜. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ஒரு விடயத்தை கடுமையாகச் சொல்லியிருந்தார். பாகிஸ்தானில் இருக்கும் சிந்து பகுதியை இந்தியாவுடன் இணைக்கப் போவதாக அவர் சொல்லியிருந்தார். பாகிஸ்தானின் சிந்து பகுதியில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றார்கள் என்று அவர் சொல்லியிருந்தார். சிந்து நதியின் புனிதம் பற்றியும் சொல்லியிருந்தார். ரஷ்யா உக்ரேனை இணைக்கலாம். அமெரிக்கா கனடாவை இணைக்கலாம். இந்தியா சிந்துவை இணைக்கலாம்................. இலங்கையில் வடக்கை தெற்கு இணைக்கலாம்...........🙃.
1 month 2 weeks ago
அப்படியாயின் 'வாருங்கள்.............. வணக்கம்...............' என்று நான் உங்களை வரவேற்பது முறையில்லை................... நீங்கள் தான் என்னை வரவேற்க வேண்டும்..................🤣. வணக்கம் நித்தி. நான் இங்கு களத்தில் போன வருடம் இணைந்தேன்...............
1 month 2 weeks ago
🤣.................... முபாறக் மஜீத்துக்கு பகிடிகள் நன்றாகவே வருகின்றது............👍. அவர்கள் தொல்பொருட்களை தேடி ஆய்வு செய்யவில்லை. புதிதாக செய்து கொண்டிருக்கப்படும் புத்த பெருமானின் சிலைகளையும், முளைத்துக் கொண்டிருக்கும் வெள்ளரசு மரங்களுக்கும் புதுப்புது இடங்கள் தேடுகின்றார்கள். இந்த விடயம் தெரியாமல் என்னுடைய ஊர்ச் சந்தியில் அரச மரத்தை நாங்களாவே வைத்துள்ளோம். பழைய மரம் பட்டுப் போக, இப்பொழுது புதிய மரமொன்றை வைத்துள்ளோம். ஏதோ ஒரு விடிகாலைப் பொழுதில் அந்த அரச மரத்தையும் அவர் ஆட்கொண்டு விடுவார் போல.................. 'இது யசோதராவின் மரம்.............' என்று ஒரு அறிவிப்பை அந்த இடத்தில் எழுதி வைத்தால், அந்தப் பக்கமே அவர் எட்டிப் பார்க்க மாட்டார் போல............🤣.