Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
இல‌ங்கை ம‌க‌ளிர் ஒரு ஓவ‌ரில் மூன்று முன்ன‌னி விக்கேட்டை எடுத்து இருந்தா..................விளையாட்டை மேல் ஓட்ட‌மாய் நேர‌டியாக‌ பார்த்துட்டு இருந்தேன்...............6விக்கேட் போன‌ கையோட‌ இன்னும் ஒரு விக்கேட்டை எடுத்து இருந்தா இந்தியா ம‌க‌ளிர‌ 200ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி இருக்க‌லாம் , முத‌ல் ம‌ழை வ‌ந்து கிட்ட‌ த‌ட்ட‌ ஒன்ட‌ர‌ ம‌னித்தியால‌ம் விளையாட்டு த‌டை ப‌ட்ட‌ட்து , இர‌ண்டாவ‌து த‌ட‌வை ம‌ழை வ‌ந்து ஒரு ஓவ‌ர் மீண்டும் குறைக்க‌ப் ப‌ட்ட‌து இந்தியா ம‌க‌ளிர் இல‌ங்கை ம‌க‌ளிர்க‌ளை விட‌ திற‌மையா விளையாட‌க் கூடிய‌வை , நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி👍.............................

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 month 1 week ago
உண்மை!இப்படிப்பட்ட உளவியல் பாதிப்புள்ள ஒருவரால் எப்படி மக்களை வழிநடத்த முடியும்.முதலில் விஜை ரசிகர்மன்றத்தலைவரை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தூக்கி விட்டு விஜயகாந் பண்ருட்டி இராமச்சந்திரனை வைத்திருந்தது போல அரசியல் அறிவு கொண்ட அரசியல் சாணக்கியரை பொதுச்செயராளராக அமர்த்த வேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
நான் அந்த‌ கால‌த்தில் இருந்தே ம‌க‌ளிர் கிரிக்கேட்டை பார்த்து வ‌ருகிறேன் க‌ந்த‌ப்பு அண்ணா செம்பாட்ட‌ன் சொல்ல‌ வ‌ருவ‌து போன‌ மாத‌ம் இந்தியா ம‌க‌ளிர் எதிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் விளையாடின‌ ஒரு விளையாட்டில் 400க்கு மேல‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் ர‌ன்ஸ் அடிச்சு இருந்தின‌ம் அடுத்து ஆடிய‌ இந்தியா 413 ர‌ன்ஸ் அடிச்சால் வெற்றி , இந்தியா ம‌க‌ளிர் விட்ட‌ பாடு இல்லை ஒரு க‌ட்ட‌த்தில் 413 ர‌ன்ஸ் அடிச்சு வெல்லும் வாய்ப்பு இருந்த‌து , ஆனால் க‌ட‌சியில் விக்கேட்ட‌ தொட‌ர்ந்து இழ‌க்க‌ வெற்றி அவுஸ்ரேலியா 43ர‌ன்ஸ்சால் வென்று விட்டினம் தொட‌ர்ந்து உல‌க‌ கோப்பையில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி வெல்வ‌தில் என‌க்கு பெரிய‌ விருப்ப‌ம் கிடையாது இந்த‌ முறை இந்தியாவில் ந‌ட‌ப்ப‌தினால் இந்தியா ம‌க‌ளிர் கோப்பைய‌ வெல்ல‌ முய‌லுவின‌ம்...............எனது தெரிவு இந்தியா ம‌க‌ளிர்🙏👍.....................

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 month 1 week ago
உண்மை தான் கரூரில் அப்படி செய்திருந்தால் பழனிசாமியும் பாஜகவும் திமுக பொலிஸ் அநீதி என்று தீவிரமாக குரல் கொடுத்து விஜய் இரசிகர்கள் வாக்கை அள்ள முயற்சிப்பார்கள். கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள். பழனிசாமியும் பாஜகவும் பொலிஸ் பாதுகாப்பு குறைபாடு தான்இறப்பு துயரத்திற்கு காரணம் என்கின்றார்கள்

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 month 1 week ago
https://www.facebook.com/share/p/1CgNcrNBrr/?mibextid=wwXIfrவிஜயின் முதல் பிரச்சாரக்கூட்டம் பற்றி எழுதும் போதே கூட்டத்தை பார்த்து பயமாக இருக்கிறது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்று எழுதியிருந்தேன். விஜய்க்கு கூடுகிற கூட்டம், மற்றும் கட்டுப்பாடற்ற அவரது ரசிகர்கள் செய்யும் காரியங்களை பார்த்த பலரும், இது போன்ற அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். அதே போலவே கரூர் சம்பவம் மனதை உலுக்கி விட்டது. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சம்பவமாக பதிந்து விட்டது. விஜய்க்கு கூடும் கூட்டம் தான் அவருடைய அரசியல் முதலீடு. கட்டுப்பாடில்லாத கூட்டம் கூடுவதை விஜயும் விரும்புகிறார். அதனால் தான் எந்த இடத்திலும் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் விரும்புவதில்லை. ரசிகர்கள், தொண்டர்கள் துன்பப்படுவதையோ, பொதுமக்கள் துன்பப்படுவதையோ பற்றி விஜய் கவலைப்படுவதே இல்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்சியில் எந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அருஜுனா, ஜான் சொல்வதை தான் அவர் நம்ப போகிறார். அப்படியே தெரிந்தாலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, ரசிகர்களை ஒழுங்குபடுத்த விஜய் விரும்பவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ரசிகர்களும் நாம் இப்படி நடந்து கொள்வதை தான் விஜயும் விரும்புகிறார் என்று நினைத்து மேலும் மேலும் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கலெக்ஷன் ரிப்போர்ட் சொல்வதை போல், களத்தில் என்ன நடந்தாலும் மாஸ் காட்டிட்டோம் என்பது மட்டும் தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் பிரச்சாரமாக இருக்கிறது. விஜய் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை தன்னுடைய அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவாக காட்டிக்கொள்வதற்கு தான் விஜய் முயற்சி செய்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் பேச வேண்டிய இடத்தில மட்டும் வேனில் இருந்து வெளியே வருகிறார். உதாரணமாக கரூரையே எடுத்துக் கொண்டால் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசவேண்டிய இடத்திற்கு வர வேண்டும். பைபாஸிலேயே மிகப்பெரிய கூட்டம் நிற்கிறது. அங்கேயே அவர் வேனில் இருந்து வெளியே வந்து கை காட்டியிருந்தால் விஜயை பார்த்த சந்தோஷத்தில் பாதி கூட்டம் கலந்திருக்கும். ஆனால் விஜய் அதை செய்வதில்லை. திருச்சியிலும் அதுதான் நடந்தது. வேனிற்குள்ளேயே அமர்ந்து கொள்வதால் பொது மக்களால், ரசிகர்களால் அவரை பார்க்க முடிவதில்லை. இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவர் பேசற இடத்துல அவரை பார்த்துட்டு போயிடுவோம் என்று மொத்த கூட்டமும் அவர் வாகனத்தின் பின்னாலேயே வருகிறது . நாமக்கல்லில் இருந்து அவர் பின்னால் வந்த கூட்டம், பைபாஸ் சாலையில் நின்றிருந்த கூட்டம், அவர் பேசும் இடத்தில ஏற்கனவே காத்திருக்கும் பெருங்கூட்டம் என அனைத்தும் சேர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமாக மாறுகிறது. எல்லா கூட்டமும் ஒரே இடத்தில கூடிய பிறகு விஜய் வெளியே வருகிறார். இதைத்தான் விஜய் விரும்புகிறார். குறைந்த பட்சம் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசும் இடம் வரை வேனில் நின்று கொண்டு கையசைத்து வந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. ஆனால் அதை செய்ய விஜய்க்கு மனமில்லை. விஜயுடைய ஒரே டார்கெட் கூட்டம். அதனால் தான் தாமதமாக வருகிறார். காவல்துறை என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலை தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் திருச்சியில் தடையை மீறி ரோட் ஷோ நடத்தினார். சாலையில் இறங்கிய பிறகு யாராலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது விஜய்க்கும் தெரியும். ஒருவேளை காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் விஜய் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வார். அந்தளவு சுயநலமாக சிந்திக்கிறார். அதே போல் தன் ரசிகர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விஜய் தயாராக இல்லை. ஏனென்றால் அவரது ரசிகர்கள் செய்யும் முட்டாள்தனங்கள் கூட அவருக்கு விளம்பரமாக மாறும் காலமிது. இப்படிப்பட்ட ஒரு கூட்ட த்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை விஜய் பெருமையாக நினைக்கிறார். சமூக வலைத்தளங்களில் நான் பார்த்த வரையில் ஒரு விஜய் ரசிகர் கூட இறந்து போன 40 உயிர்களுக்காக கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் விஜய்க்கு கெட்ட பெயர் வந்து விடுமா? கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமா? விஜயுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடுமா என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுயநலமான தலைவனுக்கு சுயநலமான தொண்டர்கள். இதோடு அரசியலை விட்டு ஒதுக்கினால் தமிழ்நாடு தப்பிக்கும்.ஏனென்றால் விஜயால் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது. https://www.facebook.com/share/v/17CgqSJ4mm/?mibextid=wwXIfr

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 month 1 week ago
பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பணம் adminSeptember 30, 2025 யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன், மொத்த விற்பனை வியாபாரத்தையும் விருந்தினர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர், யாழ். மாவட்டச் செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/220984/

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

1 month 1 week ago
தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு! adminOctober 1, 2025 தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25) பிறப்பித்தார். மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார். 2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, காவற்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லொரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். சம்பத் மனம்பேரி மற்றும் நெரஞ்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கல்ப பெரேரா, தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அதனால் இன்று (30.09.25)நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறினார். அவர் சிறையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த அறிக்கையை வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார். நான்காவது குற்றவாளியான நெரஞ்சன் பெரேரா சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ராகுல் ஜெயதிலகே, தனது கட்சிக்காரர் ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். சம்பத் மனம்பேரி https://globaltamilnews.net/2025/221001/

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

1 month 1 week ago

தமிழ் தொழிலதிபரைக் கடத்தி கப்பம் பெற்ற வழக்கிலும் சம்பத் மன்னம் பேரி மீது குற்றச்சாட்டு!

adminOctober 1, 2025

Sambath.jpeg

தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லொறியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியை உடனடியாகக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, அதற்கான பிடியாணையை செவ்வாய்க்கிழமை (30.09.25)  பிறப்பித்தார்.

மித்தெனிய பகுதியில் இரண்டு ஐஸ் கொள்கலன்களை மறைத்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரான சம்பத் மனம்பேரி, கொழும்பு  மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியதை அடுத்து நீதிபதி இந்த பிடியாணையை பிறப்பித்தார்.

2009 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் நாரஹேன்பிட்ட சந்திக்கு அருகில் கொள்ளையடிக்கும் பொதுவான நோக்கத்துடன் ஒரு சட்டவிரோதக் கூட்டத்தின் உறுப்பினர்களாகச் செயல்பட்டதாகக் கூறி, காவற்துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு, செல்லதுரை கொலவேந்நாதன் என்ற தொழிலதிபரை மிரட்டி, அவரது வசம் இருந்த சுமார் 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அரிசி லொரி, பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சம்பத் மனம்பேரி மற்றும் நெரஞ்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு நான்கு பிரதிவாதிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கல்ப பெரேரா, தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அதனால் இன்று  (30.09.25)நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் கூறினார்.

அவர் சிறையில் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த அறிக்கையை வழங்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.

நான்காவது குற்றவாளியான நெரஞ்சன் பெரேரா சார்பில் முன்னிலையான  வழக்கறிஞர் ராகுல் ஜெயதிலகே, தனது கட்சிக்காரர் ஐஸ் என்ற போதைப்பொருளை வைத்திருந்ததற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்புடைய உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

சம்பத் மனம்பேரி

https://globaltamilnews.net/2025/221001/

'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?

1 month 1 week ago
தமிழ்நாட்டு காவல் துறை கரூர் பிரிவு இங்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமைக்கு உள்ளாகியிருக்கிறது. காவல்துறை dossier இல் உள்ள அதிகபட்ச High Risk பிரிவையும் தாண்டிய uncivilized hooligan mobs எனும் பிரிவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்ற எந்த instruction உம் அவர்களிடம் இல்லை. உண்மையாகவே இது imposition of Section 144 of the Code of Criminal Procedure (CrPC) in India, போன்ற ஒரு Procedure ஐ பாவித்து கையாளப்படவேண்டிய mobs. உண்மையிலேயே காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அணில் குஞ்சுகளின் மொகரைகளை பெயர்த்திருந்தாலொழிய இந்த stampede கரூர் இல்லாவிட்டாலும் வேறு எங்கேயாவது மிக விரைவில் நடந்திருக்கும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
போட்டிகளைப் பாருங்கள். அசந்து போவீர்கள். அவுஸ்ரேலியா, இங்கிலாந்து பெண்கள் எல்லாம் நெருப்பு. தொடர்ந்து கதைப்பம். இப்பிடியும் பம்பரம் விடலாம். பார்ப்போம். ஏதாவது ஒரு போட்டியை என்றாலும் முழுதாகப் பாருங்கள். பிறகு தொடர்ந்து பார்ப்பீர்கள். எல்லாப் பிள்ளைகளையும் இந்தப் போட்டித் தொடரில் அறிந்து கொள்வோம்.

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

1 month 1 week ago
ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி! ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449151

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

1 month 1 week ago

a61d1bf2-5e49-4af1-b43c-a94c2c7ec609.jpg

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார்.

டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1efbeedd-f355-437f-a68e-e7eef0714840-486x600.jpg?resize=375%2C463&ssl=1  949be411-4777-43cb-999e-4194e89ba92d.jpg?resize=615%2C463&ssl=1 06123f24-0092-49d8-9740-7ca7c2262047.jpg?resize=600%2C526&ssl=1 a61d1bf2-5e49-4af1-b43c-a94c2c7ec609.jpg?resize=600%2C330&ssl=1

5a1d72d6-3adf-4c4b-bd78-af7c1dddca7b.jpg?resize=445%2C600&ssl=1

https://athavannews.com/2025/1449151

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

1 month 1 week ago
செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்! செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டாட்சி ஊழியர்களின் புதிய பணிநீக்கங்களை அச்சுறுத்துவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தார். செனட் ஜனநாயகக் கட்சியினர், அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் குடியரசுக் கட்சி சட்டமூலத்தை நிராகரித்து. கூட்டாட்சி நிதியுதவியை ஏழு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டமூலத்தின் மீதான 55-45 வாக்குகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையான 60 வாக்குகளை விட குறைவாக இருந்தது. சட்டமியற்றுபவர்கள் வருடாந்திர செலவின சட்டமூலங்களில் தங்கள் பணிகளை முடிக்கும் வரை, கூட்டாட்சி நிதியை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்கும் நடவடிக்கையை செனட் நிறைவேற்றவில்லை என்றால், அரசாங்க செலவினம் புதன்கிழமை (01) அதிகாலை 12.01 மணிக்கு காலாவதியாகிவிடும். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் அமெரிக்க பணிநிறுத்தத்தைத் தூண்டும். குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் தற்போது சுகாதாரச் செலவுகள் தொடர்பாக ஒரு பக்கச்சார்பான மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது உடனடி பணிநிறுத்தத்தைத் தூண்டுகிறது, இது தேசிய சேவைகளை சீர்குலைத்து, கூட்டாட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும். இது அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமான தரவுகளின் ஓட்டத்தை எதிர்மறையாக பாதிக்கும். நள்ளிரவில் அரசாங்க நிதி காலாவதியான பின்னர், வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலகம் ஒரு ஆணையை வெளியிடும், இது முறையான பணிநிறுத்தத்தைத் தூண்டும். இதன் மூலம், இராணுவப் படைகள் உட்பட அத்தியாவசிய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்வார்கள். மேலும் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிரந்தர பணிநீக்கங்களை முடிவு செய்யாவிட்டாலும், 750,000 கூட்டாட்சி ஊழியர்கள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ட்ரம்ப் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை நோக்கியோ அல்லது முகத்தை காப்பாற்றும் ஒரு வழியை நோக்கியோ பணியாற்றத் தயாராக இல்லை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மாறாக, பணிநிறுத்தம் நடந்தால் அவரது நிர்வாகம் “நிறைய” கூட்டாட்சி தொழிலாளர்களை விடுவித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். https://athavannews.com/2025/1449145

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

1 month 1 week ago

New-Project-4.jpg?resize=750%2C375&ssl=1

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது.

அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டாட்சி ஊழியர்களின் புதிய பணிநீக்கங்களை அச்சுறுத்துவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தார்.

செனட் ஜனநாயகக் கட்சியினர், அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் குடியரசுக் கட்சி சட்டமூலத்தை நிராகரித்து.

கூட்டாட்சி நிதியுதவியை ஏழு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டமூலத்தின் மீதான 55-45 வாக்குகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையான 60 வாக்குகளை விட குறைவாக இருந்தது.

சட்டமியற்றுபவர்கள் வருடாந்திர செலவின சட்டமூலங்களில் தங்கள் பணிகளை முடிக்கும் வரை, கூட்டாட்சி நிதியை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்கும் நடவடிக்கையை செனட் நிறைவேற்றவில்லை என்றால், அரசாங்க செலவினம் புதன்கிழமை (01) அதிகாலை 12.01 மணிக்கு காலாவதியாகிவிடும்.

இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் அமெரிக்க பணிநிறுத்தத்தைத் தூண்டும்.

குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் தற்போது சுகாதாரச் செலவுகள் தொடர்பாக ஒரு பக்கச்சார்பான மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இது உடனடி பணிநிறுத்தத்தைத் தூண்டுகிறது, இது தேசிய சேவைகளை சீர்குலைத்து, கூட்டாட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும்.

இது அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமான தரவுகளின் ஓட்டத்தை எதிர்மறையாக பாதிக்கும்.

நள்ளிரவில் அரசாங்க நிதி காலாவதியான பின்னர், வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலகம் ஒரு ஆணையை வெளியிடும், இது முறையான பணிநிறுத்தத்தைத் தூண்டும்.

இதன் மூலம், இராணுவப் படைகள் உட்பட அத்தியாவசிய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்வார்கள்.

மேலும் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிரந்தர பணிநீக்கங்களை முடிவு செய்யாவிட்டாலும், 750,000 கூட்டாட்சி ஊழியர்கள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ட்ரம்ப் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை நோக்கியோ அல்லது முகத்தை காப்பாற்றும் ஒரு வழியை நோக்கியோ பணியாற்றத் தயாராக இல்லை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

மாறாக, பணிநிறுத்தம் நடந்தால் அவரது நிர்வாகம் “நிறைய” கூட்டாட்சி தொழிலாளர்களை விடுவித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார்.

https://athavannews.com/2025/1449145

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு!

1 month 1 week ago
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவாலயம் உட்பட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. பிலிப்பைன்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செபு மாகாணத்தில் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் இரண்டாவது பரபரப்பான நுழைவாயிலான மக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. சான் ரெமிஜியோ உட்பட வடக்கு செபுவில் இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. அண்டை நகரமான போகோவில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், மருத்துவமனை நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் வலுவான பின் அதிர்வுகள் பல குடியிருப்பாளர்களை வெளியேற்றும் மையங்களிலும் தெருக்களிலும் தஞ்சம்புகுர கட்டாயப்படுத்தியது. நிலநடுக்க கண்காணிப்பு முகமைகள் நிலநடுக்கத்தின் ஆழத்தை சுமார் 10 கிமீ (6.2 மைல்) வரை வைத்து பல பின்அதிர்வுகளை பதிவு செய்தன, இது 6 ரிக்டர் அளவில் வலுவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் உள்ளது. அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவை. ஜனவரியில் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனினும், எந்த உயிரிழப்பும் இல்லை. 2023 இல், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எட்டு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449136

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு!

1 month 1 week ago

New-Project-2.jpg?resize=750%2C375&ssl=1

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு!

மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

Image

Image

இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவாலயம் உட்பட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.

பிலிப்பைன்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செபு மாகாணத்தில் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

நாட்டின் இரண்டாவது பரபரப்பான நுழைவாயிலான மக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.

சான் ரெமிஜியோ உட்பட வடக்கு செபுவில் இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது.

அண்டை நகரமான போகோவில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், மருத்துவமனை நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் வலுவான பின் அதிர்வுகள் பல குடியிருப்பாளர்களை வெளியேற்றும் மையங்களிலும் தெருக்களிலும் தஞ்சம்புகுர கட்டாயப்படுத்தியது.

நிலநடுக்க கண்காணிப்பு முகமைகள் நிலநடுக்கத்தின் ஆழத்தை சுமார் 10 கிமீ (6.2 மைல்) வரை வைத்து பல பின்அதிர்வுகளை பதிவு செய்தன, இது 6 ரிக்டர் அளவில் வலுவானது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

பிலிப்பைன்ஸ் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் உள்ளது.

அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவை.

ஜனவரியில் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

எனினும், எந்த உயிரிழப்பும் இல்லை.

2023 இல், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எட்டு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1449136

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

1 month 1 week ago
சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா? வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.