"மூன்று கவிதைகள் / 08"
"மூன்று கவிதைகள் / 08"
'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?'
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்
மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன்
அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன்
மென்மையான தழுவல் இன்பம் பொழிய
உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்?
பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம்
கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம்
மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன்
விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன்
எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.................................................................
'மனதைத் தொடும் நினைவுகள்'
மஞ்சள் வெயில் பூத்த வானமும்
பனை மரங்களின் இனிய தாலாட்டும்
பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்
யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்
எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்
அன்பும் பண்பும் துளிர் விடும்!
வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்
காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்
வானுயர நிமிர்ந்த பனைமரமும்
மனதைத் தொடும் நினைவுகளே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.....................................................................
'சத்தியமே வெல்லும்'
சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும்
சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்!
சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது
சத்தம் போட்டு உண்மைச் சொல்!
சமூகம் இணைந்தால் நட்பு வளரும்
சராசரி மனிதனுக்கும் சத்தியம் நிலைக்கும்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"மூன்று கவிதைகள் / 08"
https://www.facebook.com/groups/978753388866632/posts/31286359797679259/?