கவிதைக் களம்

"தர்மம் வகுத்த வழியில் நின்று"

1 month 3 weeks ago

"தர்மம் வகுத்த வழியில் நின்று"

"தர்மம் வகுத்த வழியில் நின்று

கர்வம் மறந்து ஆசை துறந்து

ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி

அர்த்தம் உள்ள உதவி செய்யின்

ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!"

"தாய் தந்தை இருவரையும் மதித்து

வாய்மை என்னும் பண்பு கொண்டு

ஆய்ந்து அறிந்து நிதானம் தவறாமல்

மெய்யாக மனிதம் போற்றி வாழ்ந்தால்

செய்த நன்மை தலை காக்கும்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

"வாராயோ வெண்ணிலாவே"

1 month 3 weeks ago

"வாராயோ வெண்ணிலாவே"

"வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல்

பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ

போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன்

தாராயோ உன்னை முழுதாக எனக்கு

வைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?"

"சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது

சேராத இதயமே வந்திடு என்னிடம்

சீராக சிறப்பாக வாழ்வு தந்து

தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி

பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

343947548_254432903811768_89062017967311

343953325_788442402650104_52623546176982


"நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!"

2 months ago

"நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!"

"நெருங்கி அருகில் நீ வந்தால்

நெடுநாள் கனவு நனவு ஆக

நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர

நெற்றியில் குங்குமம் நான் இட

நெருப்பாய் காதல் பற்றி எரிய

நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!"

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால்

நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல்

நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி

நெருக்கம் கொண்டு அருகில் வராமல்

நெடுநாள் கனவை சிதைப்பது எனோ?

நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

நெருநல் - நேற்று; சற்றுமுன்

நெறியிலாதார் - அசடர், கீழோர்

நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]

344156629_1405994663498645_2198598224582 344000987_922077352430554_43569990744850


தென்றலாய் வந்தது வசந்தகாலம்!

2 months 1 week ago

தென்றலாய் வந்தது வசந்தகாலம்!

***************************************

பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே

இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே

உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே

இயற்கையின்..

படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே.

கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே

விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே

கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே

அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே

பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும்

பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும்

வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே

நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி

நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது

நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழுதுகள்

தாய் தந்தை உறவோடு தமிழ்  பூத்த நேரங்கள்-நாம்

கூட்டுக் குடும்பங்களாய் குதுகழித்த காலங்கள்.

முல்லை பூ தடவிமுத்தமிட்டு நீ செல்வாய்-மரங்களை

செல்லமாய் ஆட்டிவிட்டு செய்யாததுபோல் நீ நடிப்பாய்

கல் நெஞ்சுக்காரரையும் கரையவைத்து மகிழ்விப்பாய்

காலமெல்லாம் எம் வாழ்வில் கலந்து நீ உயிர் தருவாய்.

கவிஞர்-பசுவூர்க்கோபி.

Checked
Sat, 07/05/2025 - 18:38
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/