தென்றலாய் வந்தது வசந்தகாலம்!
***************************************
பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே
இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே
உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே
இயற்கையின்..
படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே.
கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே
விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே
கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே
அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே
பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும்
பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும்
வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே
நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி
நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது
நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழுதுகள்
தாய் தந்தை உறவோடு தமிழ் பூத்த நேரங்கள்-நாம்
கூட்டுக் குடும்பங்களாய் குதுகழித்த காலங்கள்.
முல்லை பூ தடவிமுத்தமிட்டு நீ செல்வாய்-மரங்களை
செல்லமாய் ஆட்டிவிட்டு செய்யாததுபோல் நீ நடிப்பாய்
கல் நெஞ்சுக்காரரையும் கரையவைத்து மகிழ்விப்பாய்
காலமெல்லாம் எம் வாழ்வில் கலந்து நீ உயிர் தருவாய்.
கவிஞர்-பசுவூர்க்கோபி.