'கருணை பொழியும் கதிர்காம முருகா'
'கருணை பொழியும் கதிர்காம முருகா'
கருணை பொழியும் கதிர்காம முருகா
கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா!
கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன்
கண்கள் இரண்டும் அழகில் மயங்குது!
சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள்
சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்!
சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட
சங்கமம் ஆகிறாள் இதயத்தில் இன்று!
கண்களில் ஒரு காதல் தேடல்
கரை புரண்டு ஓடுது மனதில்!
கதிரவன் ஒளியில் அவள் மட்டுமே
கந்தன் கடம்பனாய் என்னை அழைக்கிறாள்!
உன்னைக் காண தனிமை ஏங்குதே
ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே!
வள்ளி நீயோ முருகன் நானோ
வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
'கருணை பொழியும் கதிர்காம முருகா']
https://www.facebook.com/groups/978753388866632/posts/32280545221594040/?

