"மூன்று கவிதைகள் / 34"
"மூன்று கவிதைகள் / 34"
'கையோடு கைசேர்க்கும் காலங்களே!'
கையோடு கைசேர்க்கும் காலங்களே நீங்கள்
தையோடு பொங்கல் விழாவையும் சேர்த்து
மையோடு கண்களால் பேசும் தையலை
ஐயமின்றி மணக்கவே அருள்செய்வீர் இன்று!
பொன்னிறப் பூக்கள் புன்னகை பூக்கட்டும்
மங்கல நாணது கழுத்தில் தொங்கட்டும்
ஈருயிர் ஓருயிராகும் இனிய தருணமிதில்
இன்பம் பெருகிட இருவரும் இணைவோம்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
'மின்னலாய் ஒரு பின்னல்'
[வெற்றி, தோல்வி, வெறுப்பு, நட்பு]
வெற்றி தானாய் குதித்து வராது
தோல்வி கண்டு கலங்காதே!
வெறுப்பு மனிதனை சிதைக்கும்
நட்பு கொண்டு வாழப் பழகு!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்.
..........................................................
அழகு ஒரு மாயை
இன்று மின்னும் இந்த உடல் அழகு,
காலம் போக்கில் கரைந்து போகும்...
கண்ணில் தெரியும் இந்தத் தோற்றம்,
ஒருநாள் மெல்ல மறைந்து போகும்!
காமம் என்பது நெருப்பைப் போல,
கண்ணைத் மறைத்து அழித்துவிடும்...
உடல் மேல் கொள்ளும் மோகம் எல்லாம்,
உள்ளத்தை உருக்கிப் பிரித்துவிடும்!
அழியும் அழகை நம்பாதே - அது
அறிவை மயக்கும் ஓர் மாயை!
புறத் தோற்றம் என்றும் நிலைப்பதில்லை,
அது வெறும் கானல் நீர்ச் சாயை!
உடலைத் தாண்டி உயிரை நேசி,
உண்மைக் காதல் அதுவேதான்!
அழியா அன்பை இதயத்தில் வைத்தால்,
வாழ்வின் அர்த்தம் அதுவேதான்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
துளி/DROP: 2119 ["மூன்று கவிதைகள் / 34"
https://www.facebook.com/groups/978753388866632/posts/34567325406249332/?
