"மூன்று கவிதைகள் / 02"
'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்'
என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்
அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன்
அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன்
கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்?
வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன்
கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன்
கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன்
எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்?
பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன்
கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
'என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே'
என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே
கண்ணுக்குள் பொத்திவைத்த காதல் தேவதையே
எண்ணத்தில் உன்னைத்தவிர யாரும் இல்லையே
கன்னத்தில் தந்திடவா ஓசையில்லா முத்தம்!
வெண்ணிலாவில் தழுவியது விழிக்குள் நிற்குது
அன்னநடையில் வந்தது இன்பம் பொழியுது
திண்ணையில் உறங்கியது தினமும் வாட்டுது
தேன்குடிக்க வண்ணமலரைச் சுற்றி வருகுது!
பெண்மையின் அழகினைக் கண்ட பின்பே
மண்ணில் பிறந்ததின் பயனை உணர்ந்தேன்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
...................................................
'கொட்டித் தீராதக் காதல்'
கொட்டித் தீராதக் காதல் இதுவோ
முட்டி மோதாத அன்பு நட்போ
கட்டிப் பிடிக்காத அழகு உடலோ
எட்டிப் பார்த்து ஏங்குவது எனோ?
ஒட்டி உடையில் பெண்மை கண்டேன்
வெட்டிப் பேச்சில் வெகுளி பார்த்தேன்
சுட்டி விடையில் அனுபவம் அறிந்தேன்
தட்டிக் கழித்து பாராமுகம் எனோ?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
"மூன்று கவிதைகள் / 02"
https://www.facebook.com/groups/978753388866632/posts/30743827355265842/?