"மூன்று கவிதைகள் / 23"
"மூன்று கவிதைகள் / 23"
'பொங்குக பொங்கல்'
கற்ற அறிஞர்கள் வரலாறு பாட
கற்புக் கன்னிகள் கோலம் போட
உற்றார் உறவினர் கதிரவனை வணங்க
ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!
மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர்
புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில்
பொது வெளியில் தோரணம் ஆட
பதுமை கூடி பொங்குக பொங்கல்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
...........................................................................
"மின்னலாய் ஒரு பின்னல்"
[ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்]
ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே
உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்!
செல்வம் பூட்டி வைப்பதல்ல
தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
..............................................................................
"மூவெழில் மூன்று"
காற்றின் இசையில் கனவுகள் மலர,
நினைவுகள் வான் உயர,
அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
.....................................................................
துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?

