Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
எங்க‌ட‌ செல்ல‌ங்க‌ள் கோப்பைய‌ தூக்கின‌ம் நாங்க‌ள் ச‌ந்தோச‌த்தில் மித‌க்கிறோம் த‌லைவ‌ரே🙏❤️😍👍..................................... இந்த‌ சீமாட்டி அடிக்க‌ தொட‌ங்கினா செல்ல‌ம் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு நொறுக்குவா , நேற்று சீக்கிர‌மே அவுட் ஆகி விட்டா , இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவா தான் கூட‌ ர‌ன்ஸ் அடிப்பா என ந‌ம்புகிறேன் த‌லைவ‌ரே👍..................................

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

1 month 1 week ago
மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂

‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்

1 month 1 week ago
நீங்கள் சொல்வது சரியானது தான். அவர்களுக்கு குழந்தைகளையும் இழுத்து கொண்டு நேரில் சென்று உணவு தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து விஜய்யை பார்க்க வேண்டுமாம் 🙄

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
பையா உங்களின் பூஸ்ட் வார்த்தைகள் எனக்கு உற்சாகத்தைத் தருகின்றது . ......கந்தப்புவே எதிர்த்தாலும் முதலாவதா வந்து கல்லா கட்டுறம் .........! 👍

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 month 1 week ago
இவர்கள் பெங்களூரில் இருந்து கிளம்புமுன் தத்தமது ஜாதகத்தைக் கணித்திருக்க வேண்டும் ...........! 😇

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

1 month 1 week ago
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு! 01 Oct, 2025 | 01:16 PM (இணையத்தள செய்திப் பிரிவு) காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார். பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார். இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், "பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார். டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. https://www.virakesari.lk/article/226574

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

1 month 1 week ago

காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!

01 Oct, 2025 | 01:16 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக  தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.

பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், 

"பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

https://www.virakesari.lk/article/226574

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 month 1 week ago
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது! 01 Oct, 2025 | 12:46 PM இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/226569

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

1 month 1 week ago

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

01 Oct, 2025 | 12:46 PM

image

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/226569

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
க‌வ‌லைய‌ விடுங்கோ த‌லைவ‌ரே நீங்க‌ள் போட்டில‌ க‌ல‌ந்து கொண்ட‌து ம‌கிழ்ச்சி இந்த‌ உல‌க‌ கிண்ண‌ ம‌க‌ளிர் போட்டி யாழ் க‌ள‌த்தில் முத‌ல் முறை ந‌ட‌த்துவ‌தால் சிறு த‌டுமாற்றம் அடைந்து விட்டீங்க‌ள்............... போட்டியில் நீங்க‌ள் க‌ட‌சி இட‌மோ க‌ட‌சிக்கு முத‌ல் இட‌மோ அல்ல‌து அத‌ற்க்கு மேலை வ‌ந்தாலும் நீங்க‌ள் தான் வெற்றியாள‌ர்..............உங்க‌ளுக்கு ம‌க‌ளிர் கிரிக்கேட்டை ப‌ற்றி பெரிய‌ அனுப‌வ‌ம் இல்லாட்டியும் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து த‌னி கெத்து👍...............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
இண்டைக்கு நியுசிலாந் அணிக்கு பெரிய‌ அடி காத்து இருக்கு................50ஓவ‌ர் விளையாட்டில் நியுசிலாந் ம‌க‌ளிர் பெரிசா சாதிச்ச‌து கிடையாது அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் பெரிய‌ புள்ளியோட‌ வெல்லுவின‌ம்👍...........................

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 month 1 week ago
நான்சொன்னது சீமானின் விஐயலட்சிமி சம்பந்தப்பட்ட வழக்கில். மட்டுமே. தமிழக அரசு மத்தியரசு நீதிமன்றம். அனைத்தும். சீமான். சார்பாக. அவரது விருப்பம்போல். நடக்கிறது. மற்றும். பிரபாகரன். சீமானுக்கு. தலைவராக இருக்கலாம். ஆனால். சீமான். தலைவரின். சீடனாக. ்தொண்டனாக அவரை பின்பற்றுபவராக. அவரது அமைப்பில் படைவீரனாக. இருக்க முடியாது. ்்்்்எனது நண்பன். ஒருவன். புலிகள். காலத்தில். அவனது கடையில வேலை செய்த. பெண்ணுடன் தொடர்பிலிருந்து. பிள்ளை உண்டாகி விட்டது. பெண் சாதி குறைந்தவர். பெண்ணின். பெற்றேர். புலிகளிடம் புகார் அளித்து விட்டார்கள் அவனை புலிகள் கூப்புட்டு விசாரித்தார்கள். அவன் தான். தான். அப்பா என்று விட்டான். அவனது் குடும்பத்தில் ஒன்பது. பேர். சகோதரங்கள். மற்றவர்கள். வெளிநாட்டில். புலிகள். அவர்களை. காலியாணம். செய்ய. சொல்லி. தீர்ப்பு. வழங்கிவிட்டார்கள். அவனது. சகோதரங்கள். ஒரு கிழமையில். அவனை. ஜேர்மனிக்கு. எடுத்துவிட்டார்கள். இங்கே. அவனது அரசியல். தஞ்சம். எற்கப்பட்டு. பாஸ்போட். கொடுத்துவிட்டார்கள். வேலையும். எடுக்க உதவினார்கள். அவன். சகோதரங்களை விட்டு பிரிந்து. அவளை குப்பிட்டு. மேலும். ஒரு பிள்றையைப் பெற்று வாழ்கிறான் ஊராவர்கள். அவனுடன். உறவு கொண்டாடுவது இல்லை புலிகள். அமைப்பு. இவருக்கு என்ன. தீர்ப்பு வழங்கும்.?.?? டொன்மார்க். கார்த்திக். மனேகரன். இவர். தலைவரின். தமையனின் மகன். முகதூலைப்பாருங்கள். அங்கிருந்து. கோடி கோடியாகப். பணம் அனுப்புகிறார்கள். 2009 ஆண்டில். 25;000குரோணர். அவசார கால நாதி பெறப்பட்டது. அந்தப் பணம். சீமானுக்கு. போகிறது. நான் சொல்லவில்லை. தலைவரின். தமையன். மகன். கார்த்திக். பதிவிலுண்டு. இதை நான் சொல்லவில்லை. சீமான். விஐயலட்மி. வழக்கை மட்டுமே. குறிப்பிட்டேன்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
வ‌ய‌து கூட‌ தான் ஆனால் இவான்ட‌ ப‌ந்து வீச்சு என‌க்கு மிக‌வும் பிடிச்சு இருக்கு...................இந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ ப‌ல‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ஓய்வை அறிவிப்பின‌ம் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்லா விளையாடுகின‌ம் ஆன‌ ப‌டியால் அடுத்த‌ வ‌ருட‌ம் இவ‌ர்க‌ளின் இட‌த்தை இள‌ம் ம‌க‌ளிர் பிடிப்பின‌ம்👍.............................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 month 1 week ago
இன்னொரு முன்ன‌னி இந்தியா ம‌க‌ளிர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ வில்லை , அந்த‌ இள‌ம் ம‌க‌ளீரும் அணியில் இட‌ம் பிடித்து இருந்தால் இந்தியா அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருந்து இருக்கும்..............காய‌ம் கார‌ன‌மாக‌ அணியில் சேர்க்க‌ ப‌ட‌ வில்லை☹️.....................