Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 240 online users.
» 0 Member(s) | 237 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,316
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,640
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  தமிழீழம் - பொதுஅறிவு
Posted by: மேகநாதன் - 11-26-2005, 08:01 PM - Forum: போட்டிகள் - Replies (268)

காலப் பொருத்தம் கருதி பின்வரும் கேள்விகள்......

1) <i><b>தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்தவர் யார்?</b></i>

2)<i><b>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக "சயனைற்" அருந்தி வேரச்சாவடைந்த மாவீரன் யார்?</b></i>

நட்பு உள்ளங்களும்...
இவ்வாறான <b>"தாயகப் பொது அறிவு"</b>க் கேள்விகளைக் கேட்கலாமே...
பயனுறுதியான் தகவல் பகிர்வாக இருக்கும்...

Print this item

  அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலி உறுப்பினர்கள்...
Posted by: selvanNL - 11-26-2005, 04:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

[size=18]<b>அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலிகள் கடத்தப்பட்டு வெட்டிக் கொலை</b>

<b>அரச தரப்பு அரசியல்வாதியின் ஆயுதக் குழு மீது சந்தேகம்</b>

<b>அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சென்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான லெப். கேணல் சுரேஸும் மற்றொருவரும், கடத்தப்பட்டு பின் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை, ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும் கத்திவெட்டுக் காயங்களுடனும் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட முன்னர் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுமுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

திங்கட்கிழமை மாலை அக்கரைப்பற்றில் முஸ்லிம்களைச் சந்திப்பதற்காகவும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் புலிகளின் அரசியல் துறை உறுப்பினர்களான இவ் இருவரும் அக்கரைப்பற்றுக்கு சென்றுள்ளனர். எனினும் மாலை 4 மணிக்குப் பின்னர் இவர்கள் காணாமற் போயுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றும் அது சாத்தியப்படாது போய்விட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டின் இரு புறங்களிலும் இருவரது உடல்களும் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஒருவரது சடலம் கழுத்தில் சுருக்கிடப்பட்டும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயமும் உடலின் பல பகுதிகளிலும் கத்திவெட்டுக்காயங்களும் காணப்பட்டன.

மற்றையவரது உடலில் கத்திவெட்டுக் காயங்களும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டதுடன் கைகள் இரண்டும் பின் புறம் கட்டப்பட்டிருந்தன.

இருவரும் கொல்லப்பட முன்னர் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உடல்களில் தென்பட்டதாக அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் பற்றி புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறுகையில்,

முஸ்லிம் பகுதிக்கு அவர்களைச் சந்திக்கச் சென்ற இருவரும் மாலை 4 மணிவரை எம்முடன் தொடர்பிலிருந்தனர். அதன் பின்னர் இவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

அரச தரப்பு அரசியல் வாதியொருவரின் ஆயுதக் குழுவே இவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளதாகக் கருதுகின்றோம். தமிழ் - முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவரும் அந்த அரசியல் வாதியே இதனுடன் தொடர்புடையவரெனக் கருதுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொலை செய்யப்பட்ட லெப்.கேணல் சுரேஷ் ( 26 வயது - வாழைச்சேனை), லெப்.வெள்ளை (22 வயது - விநாயகபுரம், திருக்கோவில்) ஆகியோரது உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினால் மட்டுமே ஒப்படைக்க முடியுமென அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறிவிட்டது.

பாதுகாப்பு காரணங்களால் அவர்களால் அங்கு வர முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் அதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுக்கவே, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இதில் தலையிட்டன. எனினும் அவர்களது வேண்டுகோள்களும் ஏற்கப்படவில்லை.

இறுதியில் கண்காணிப்புக் குழுவுடன் வந்த போராளிகள் உடல்களை அடையாளம் காட்டிய பின்பே உடல்கள் ஒப்படைக்கப்படன.

இருவரது உடல்களும் பின்னர் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.</b>

http://www.thinakural.com/New%20web%20site...Important-3.htm

வீரச்சாவடைந்த விடுதலைபுலி உறுப்பினர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

Print this item

  இறுதி நேர இடமாற்றம்- மாவீரர் நாள் நிகழ்வு, ரொறன்ரோ
Posted by: அருவி - 11-26-2005, 01:32 PM - Forum: நிகழ்வுகள் - No Replies

ஞாயிறு 27 நவம்பர் அன்று ரொறன்ரோ மாநகரில் மாபெரும் அரங்கான Toronto Congress Centre இல் இரு பெரும் நிகழ்வாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.


<img src='http://img466.imageshack.us/img466/3152/heroesdaycanada7nl.jpg' border='0' alt='user posted image'>


http://www.eelatamil.net/sankathi/index.ph...d=455&Itemid=26

Print this item

  உசார் நிலையில் தமிழீழத்தின் முப்படை
Posted by: cannon - 11-26-2005, 11:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தமிழீழத்தின் முப்படைகளும் உசார் நிலையில் உள்ளன என்று வடபோர் முனைக் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த தளபதி லோறன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பளையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர் பெற்றோர் சிறப்பிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை:

சிங்கள தேசம் எம்மீது திணிக்கின்ற போரைத் துணிவுடன் எதிர்கொள்வதற்காக தமிழீழத்தின் முப்படைகளும் எந்நேரமும் உசார் நிலையில் உள்ளன.

கடந்த காலங்களில் எமது மண் மீதும் மக்கள் மீதும் குண்டுகளைப் போட்டு அழித்தவர்கள், பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி மாணவர்களை சின்னாபின்னமாக்கியவர்கள் இலட்சக்கணக்கான மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றியவர்கள் எமது மண்ணிலிருந்து வெளியேறப் போகும் காலம் நெருங்கிவிட்டது.

ஆகவே எம்மண் சுதந்திரம் பெறும்வரை எமது தேசியக் கொடி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்று அங்கு பறக்கும் காலம்வரை எமது தேசம் விடுதலை அடையும் காலம் வரை நாம் துணிவுடன் எந்தவகையிலும் போராடத் தயாராகவே உள்ளோம் என்றார் அவர்.

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனொரு கட்டமாக நேற்று முன்தினம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள 130 மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரி மண்டபத்தில் பச்சிலைப் பள்ளி பிரதேச மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் பளை கோட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சந்தனா தலைமையில் தொடங்கியது.

தொடக்க நிகழ்வாக பொதுச் சுடரினை யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.

பொது மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன், பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் அணிவித்தனர்.

மாவீரர் செயற்பாட்டுக்குழுப் பொறுப்பாளர் நகுலன் வரவேற்புரையினை நிகழ்த்தினார். வர்த்தக சங்கத் தலைவர் அமீர் நினைவுரையினை நிகழ்த்தினார்.

அரசியல்துறையைச் சேர்ந்த தமிழ்விழி, லோறன்ஸ், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பெற்றோர்கள் சிறப்பிப்பு நிகழ்வில் பளை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

http://www.eelampage.com/?cn=22040

Print this item

  கல்லறை கீதங்கள்
Posted by: Paranee - 11-26-2005, 09:53 AM - Forum: தமிழீழம் - Replies (7)

கல்லறை கீதங்கள்
மாவீரர் நாள் பாடல்கள் இணையத்தில் பெற முடியுமாயின் அல்லது நண்பர்கள் யாரிடமாவது கிடைக்கப்பெறுமாயின் தந்து உதவுவீர்களா ?
நட்புடன் பரணீதரன்

Print this item

  ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு
Posted by: Vaanampaadi - 11-26-2005, 08:50 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (1)

<b>ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் புதிய கட்டுப்பாடு</b>

துபாய்: குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குவைத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத் அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைபடி, ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் பட்டப்படிப்பு படித்திருப்பதோடு அவர்களின் மாத சம்பளம் ரூ. 61 ஆயிரத்து 650க்கு குறையாமல் இருக்க வேண்டும். குவைத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்திருக்க வேண்டும். டாக்டர்கள், ஆசிரியர்கள், நீதிபதிகள், கணக்கர் பணி செய்பவர்கள் உள்ளிட்ட 22 பணி செய்வோருக்கு மட்டும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த வியாழன் முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குவைத் நாட்டின் சாலைகளில் வாகன போக்குவரத்தை குறைக்கவும், பொதுமக்கள் அரசு பஸ்களை பயன்படுத்துவதை அதிகரிக்கவும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

Dinamalar

Print this item

  என் நண்பன் என் கடவுள்
Posted by: தூயா - 11-26-2005, 06:05 AM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (17)

என் நண்பன் என் கடவுள்

அமைதியான ஒரு காலை நேரம். எப்போது தான் எம் மண்ணின் எல்லைக்கோட்டை சென்றைடைவேன் என எதிர்பார்த்து எதிர்பார்த்து கொழும்பில் இருந்து புறப்பட்டதுக்கு, இப்பொழுதான் சுவாசம் சீராக ஓடுவது போல இருக்கின்றது.

புளியங்குளம் தாண்டி, இதோ தமிழீழத்தின் இதயமான வன்னிக்குள்ளும் வந்தாயிற்று. எத்தனை ஆண்டுகள் இதற்காக ஏங்கி இருக்கின்றேன்...இதை சற்றும் புரிந்துகொள்ளாமல் பக்கத்தில் இந்த வயோதிப பெண்மணி. வெளியே மதிப்பாய் அழைத்து பழகிய போதும். உள்மனது "இந்த கிழவின்ட தொல்லை தாங்க முடியலையே" என கரித்து கொட்டியது.

அட இது என்ன கதை என்று கேட்கிறீர்கள் போல!!. ஆமிக்காரன்ட செக்கிங் பொயின்றில இவ வந்த வான் பழுதடைய, என்ட அப்பர் பாவம் பார்த்து எங்கட வானில கூட்டி வந்திட்டார். வந்ததில இருந்து வாய் மூடவில்லை. எப்படி தான் இப்படி ஓய்வில்லாமல் பேசுகின்றாவோ தெரியாது.

சரி கதைக்கிறது தான் கதைக்கிறா நல்லதா ஏதும் சொல்லுதா?? அதுவும் இல்லை. தனக்கு 4 மகனாம். பெண்ணை பெறாததால் தப்பித்து கொண்டாவாம். இதில எங்கட அம்மா அப்பாவை பார்த்து ஒரு "பாவமா ஒரு பார்வை". ஏன் என்றால் என்னை பெற்றுவிட்டார்களாம்.

லண்டனில 2 மகனாம், கனடாவில 2 மகனாம். அங்கும் இங்கும் மாறி மாறி பறந்து கொண்டு இருக்கிறாவாம்.

இப்ப இவக்கு என்ன கவலை என்றால் வன்னியில இவவை புலிகள் பிடித்து காசு கேட்க போகினமாம். அட நான் சொல்லலைங்க. இந்த கிழவி சொல்லுது. தன்ட மகன்மார் நல்ல பெடியளாம். "என்ட மகன்கள் நல்லா உழைச்சு 2 வீடு வாங்கி இருக்காங்கள். சில பெடியள் மாதிரி இந்த புலிக்கு கொடிக்கம்பம் தூக்கிறன் என்று போறதில்லை. என்ற வளர்ப்பு அப்படி".... இதில மனிசி தன்னுடைய வளர்ப்பை பற்றி வேறு சொல்லுது.

இவட தொல்லை தாங்க முடியாம "இந்த மனிசி நிறைய கதைக்குது. வானில இருந்து தள்ளிவிடலாம் போல இருக்கு" இது கூட வந்த என் பெரியம்மாவின் மகன், என் அண்ணன். ரகசியமாக என் காதில் அவன் சொல்ல, எனக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, மனிசி எங்களை பார்த்த பார்வை இருக்கே.....

இன்னும் சிறுது தூரம் தானே என அப்பா எங்கள் அனைவரையும் சமாதானபடுத்தின போது, "அண்ணே ஒரு 1/2 மணித்தியாலம் நிண்டு போட்டு போவமே" என சாரதி கேட்க. ஓர் கடையின் பக்கத்தில் வான் நின்றது.

அங்க தானே சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. ஏதாவது சாப்பிட கிடைக்குமா என அப்பாவும், பெரியப்பாவும் கடைக்கு போக நாங்கள் எல்லாம் வானை விட்டு இறங்கினம். இந்த பெண்மணியும் இறங்கினவ "கனடா, லண்டன் என்றால் இப்படி இருக்குமா? என்னமா வேர்க்குது. ச்சா...." என்று இவ முடிக்க முதல்

"யார் அது ராசம் அக்காவே" என அழைத்தபடி ஒரு பெண்மணி அருகில் வர, இவர் நெளியா ஆரம்பித்தார்.

வந்தவ நல்ல ஒரு கதைகாரி போல "இஞ்ச பாரன் ஆர் என்று, இந்த மண்ணில கால் வைக்க மாட்டன் என்று போனனி, இப்ப மகன்மார் துரத்திவிட்டதும் வந்திட்டியா?"

ராசம் அக்காவை இப்ப பார்க்கணுமே. இதை தான் சொல்லுவார்களா "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என.

இதுக்கு மேல எதுக்கு இவவிண்ட கதை...

மறுபடி வான் நகர ஆரம்பிக்க, இப்படியான மனிதர்களுடன் பார்க்கும் போது நான் எவ்வளவு மேல் என நினைக்க தோன்றியது.

15 வருடங்களுக்கு முன் அயல்நாடு சென்று ஆரம்ப பள்ளி, உயர்பள்ளி, பல்கலைக்கழகம் முடித்து இதோ ஒரு மருத்துவராகி வேலைக்கும் போகிறேன். அரிச்சுவடி படித்த ஊரை மறக்க முடியாமல் தான் இதோ இப்பொழுது நான் இங்கே.

எம் மண்ணில், எம்மக்களுக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தில் அப்பா அம்மாவுடன் இங்கு நான் பிறந்த வீட்டிலேயே இருக்க வந்துள்ளேன்.

இப்படியானவர்களுடம் பார்க்கும் போது நான் எவ்வளவு மேல். கர்வம் எனும் அரக்கன் என்னுள்ளும் சிறிது தலைகாட்ட தொடங்கி இருந்தான். ஆனால் இன்னும் இரண்டு தினக்களில் அவ்வரக்கன் ஒரு கடவுளால் சூரசம்காரம் செய்யப்படுவான் என நான் அறிந்து இருக்கவில்லை.

வன்னியில் இருந்து வான் யாழை நோக்கி ஓட தொடங்கி இருந்த போது வானில் "அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்" என்ற திரைப்பட பாடல் ஒலிபரப்பானது.

10 வயதில் இம்மண்ணைவிட்டு அழுதுகொண்டே நான் போன போது.... மறந்து வீட்டில் வைத்துவிட்ட பொம்மைக்காக அழுகிறேன் என நினைத்து "பொம்மையை விட்டுட்டு போறேன் என்று அழுகிறாயா? நான் கவனமா வைத்து இருப்பேன்.நீ வந்ததும் உன்னிடம் தருகிறேன்" என கூறி அனுப்பியவன் தான் என் நண்பண் "நிலவன்".

என்னைவிட 2 வயது கூடியவன். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்தவர்கள்.
பெற்றோர்கள் நண்பர்கள். அதனால் உறவுகளை விட நான் அதிகம் பழகியதும் நேசித்ததும் அவர்களை தான்.

நான் பிறந்த நேரம் அவன் கதைக்க ஆரம்பித்து இருந்தான். சிசுவாய் என்னை பார்த்தவன் தன் மழழை மொழியால் "நிலா" என "நிலவன்" என்ற தன் பெயரை சொல்லி அழைத்தானாம். அப்படிதான் என் பெயர் நிலா ஆனது.

அவன் வீட்டில் அவன் தான் ஒரு பிள்ளை. எங்கள் வீட்டில் நான் ஒரு பிள்ளை. சிறு வயதிலேயே என் மேல் மிகவும் ஆசையாக இருப்பான். பொம்மர் அடித்து பங்கருக்குள் போனாலும் என்னை தான் முதலில் தேடுவான். நானும் அப்படித்தான்.

பள்ளிக்கு போக ஆரம்பித்த போதும், பாடசாலையில் என்னை யாரும் கேலி செய்தால் அவர்கள் நிலவனிடம் அடி வாங்குவது உர்றுதி.

அன்பாய் இருந்தாலும் படிப்பில் எங்களுக்கும் கடும் போட்டி நிலவும். அப்படி ஒரு நாள் போடியின் போது தான் நாங்கள் ஒரு பந்தயம் போட்டோம். "நீயா நானா நன்றாக படித்து பெரிய ஆளாக வருவது என்று பார்ப்போமா?"

கோவம் வந்தாலும் சரி, மகிழ்ச்சி என்றாலும் சரி அவன் என்னை "போடி லூசு" என்றும், நான் அவனை "போடா லூசு" என்றும் அழைத்து அடித்துகொள்வோம்.

அவனுக்கு மருத்துவராக வேண்டும் என ஆசை. எனக்கு அவனை போட்டியில் வெல்ல வேண்டும் என ஆசை.

காலத்தின் கோலத்தால் நாங்கள் வெளிநாடு சென்றுவிட்டோம். நிலவன் குடும்பம் அங்கேயே இருந்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் எனக்கு கடிதம் அனுப்புவான். அனைத்தையும் எழுதி இருப்பான். ஒ/ல் இல் நல்ல மதிப்பெண் பெற்று ஏ/எல் படித்து கொண்டிருத போது அவன் கடிதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு தடவை வர தொடங்கியது. பின்னர் 2,3 மாதங்களுக்கு ஒன்று. இப்படியே 3 வருடங்கள் உருண்டோட நானும் ஏ/எல் இல் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் பயில பல்கலைக்கழகம் சென்று இருந்தேன். அதன் பின்னர் அவன் கடிதம் வராமலே போயிற்று. என்னை பெற்றவர்களிடம் கேட்ட போது "நாடு பிரச்சனையில இடம் மாறி இருப்பினம்" என கூறினார்கள். படிப்பு சற்று சவாலாக இருக்கவே நானும் கடிதம் பற்றி அவ்வளவு சிந்திப்பதில்லை. எனது படிப்பு முடிந்து மருத்துவராக நான் பதவியேற்ற பின்னர் தான் என் மனதில் சிறு குழப்பம்.

இரவில் தூக்கத்தில் என் மனமே என்னிடம் ஏதோ சொல்லுவது போல இருக்கும்.

"நிலா இதுவா உன் நாடு? இங்கு என்ன செய்கிறாய்?" என பல கேள்விகள் மனதுக்குள் நச்சரித்தன.

அதன் பலனாய் தான் இப்பயணம். தாய் மண்ணை பார்ப்பதிலும் பார்க்க , என் நிலவனை பார்க்க போகிறேன் என்பது தான் பெரிதாக இருந்தது. ஏன் எனில் இன்று நான் மருத்துவராக இருப்பதற்கு கரணம் அன்று அவன் போட்ட பந்தயம்.

எங்கள் வீட்டை அடந்தட் போது நான் முதலில் போனது நிலவன் வீட்டுக்கு தான்.நிலவனப்பா தான் வாசலிலே இருந்தார். தூரத்தில் எனை கண்டதுமே "நிலாம்மா" என குரல் உடைய கத்தினார். சிறு பிள்ளை போல் ஓடிச்சென்று அவர் பின்னால் போய் கழுத்தை சுற்றி கைகளை போட்டு முத்தம் கொடுத்த போது ஏனோ அவர் கண்கள் பனித்து இருந்தன. ஆனந்தத்தில் நான் கூட தானே கண்களில் நீர் வர நின்று இருந்தேன்.

சத்தம் கேட்டு நிலவனம்மா வெளியே எட்டி பார்த்தார். ஒரு கணம் மகிழ்ச்சியில் விரிந்த அவர் கண்கள் மறு வினாடியே ஏனோ சுருங்கி போனது.

"எங்கே அவன்? எத்தனை நாளாக எனக்கு கடிதம் போடவில்லை. அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டானா" என பொய் கோவம் காட்டியபடி வீட்டுக்குள் போன எனக்கு இப்படி ஒரு .... கண்கள் இருட்ட மயங்கி விழ போன என்னை யாரோ தாங்கி பிடித்ததுபோல் இருந்தது.

கண் விழித்த போது அவன் முகத்தை தான் பார்த்தேன். படத்தில் அழகாக சிரித்தபடி "கப்டன்.நிலவன்".

என் நண்பன் மாவீரன் ஆகி இருந்தான். அவன் உருவ படத்திற்ற்கு பக்கத்திலேயே ஒரு பெட்டி. அத என்னிடம் எடுத்து குடுத்த நிலவனம்மா கதறி அழ , அவரை அழைத்து அவைவரும் சென்று விட...நானும் அவனும் மட்டும்...

அதிர்ச்சியில் இருந்து மீளாததால் ஏனோ கதறி அழ எனக்கு தோன்றவில்லை. பெட்டியை உடைத்த போது அங்கு எனது பொம்மை, பல கடிதங்கள்.

ஏ/எல் படிக்கும் போது தன்னை தாய் நாட்டுக்காக இணைத்து கொண்டது முதல் அவன் கடைசி நாள் வரை அத்தனையும் கடித்ததில்..

பொம்மையுடன் ஒரு சிறு துண்டு காகிதம் "உன்னுடைய பொம்மை இதோ உனக்காக..நிலவன்"

அதற்கு மேல் என்னால் கதறி அழாமல் இருக்க முடியவில்லை.

"பந்தயத்தில் உன்னை தோற்கடிக்க வந்த என்னக்கு இப்படி ஒரு பரிசளித்து சென்று விட்டாயே" என கதறி அழ ஆரம்பித்து எப்போது நிறுத்தினேனோ தெரியாது.

ஆனால் அழுது முடித்திருந்த போது ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.

"எதற்காக அழ வேண்டும்? இங்கு என்ன சாவா நடந்து இருக்கின்றது? ஒரு சரித்திரம் அல்லவா அரங்கேறியிருக்கின்றது. என் நண்பன் மாவீரன், மரணத்தை வென்றவன். அவன் விட்டு சென்ற வேலையை, அவன் நடந்து சென்ற பாதையில் நானும் செல்வேன்".

அடுத்த நாள் காலையில் மருத்துவராக நான் என்ன உதவிகளை செய்யலாம் என அறிய வெளிய புறப்பட்ட போது அவன் நினைவு வர, அவனை வணங்கி திரும்பி நடக்க ஆரம்பித்த போது, மனம் ஏதோ சொல்ல நின்று அவனை பார்த்தேன்.

"அங்கிருந்து என்னை அழைத்து வந்தவன் நீதான் என எனக்கு தெரியும். போட்டியில் நீ வென்றுவிட்டாய் என நினைக்க வேண்டாம். உன் வழியே நானும் சென்று உன்னைப் போலே நானும் வருவேன்" என நான் கூற "போடீ லூசு" என அவன் கூறுவது போல இருக்க,

"நீ போடா லூசு" என சொல்லி நடக்க ஆரம்பித்த என் நடையில் முழுவதுமாய் அவன் தான் இருந்தான்.. என் நண்பன்..என் கடவுள்.


நிலவின் பயணம் ஆரம்பிக்க கதை முற்று பெறுகிறது.



எம் உயிர்காத்த மாவிரர்களுக்கு இக்கதையை சமர்ப்பிக்கின்றேன்.

தூயா
26/11/05

Print this item

  பொண்ணுங்களும் கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.....
Posted by: SUNDHAL - 11-26-2005, 04:19 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

ஆந்திராவில் பல்கலைக் கழக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவிகளை "ராகிங்'செய்த ஒன்பது மாணவிகள் பல்கலைக் கழகத்தில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:

ஆந்திரா காக்காத்தியா பல்கலைக் கழக ஹாஸ்டலில் சீனியர் மாணவிகள் சிலர் ஜூனியர் மாணவிகளை "ராகிங்' செய்வதாக கடந்த 22ம் தேதி புகார் வந்தது. இதில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் துணை வேந்தரிடம் புகார் செய்தனர்.

இதுகுறித்து விசாரிக்கும்படி பல்கலை., கல்லுõரி முதல்வர் எலையாவுக்கு துணைவேந்தர் <உத்தரவிட்டார். அன்றைய தினம் கல்லுõரி முதல்வர் நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்ற போது மாணவிகள் சிலர் "ராகிங்' செய்வதை கண்டார். அவர் இது பற்றி துணை வேந்தருக்கு புகார் செய்ததைத் தொடர்ந்து "ராகிங்'கில் ஈடுபட்ட ஒன்பது மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று பல்கலை., அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கிலம் மற்றும் நுண்ணுயிரியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் சிலர் ராகிங்கில் ஈடுபட்டது பற்றிய புகார் வந்ததையடுத்து நான்கு மாணவிகளுக்கு பல்கலை., அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இந்த சம்பவம் பற்றி பல்கலைக் கழக அதிகாரிகள் போலீசிடம் புகார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks:dinamalr...

Print this item

  புதிதாக இணைந்து கொண்டேன்......
Posted by: sshanmu4 - 11-26-2005, 02:17 AM - Forum: அறிமுகம் - Replies (26)

வணக்கம்
எல்லாம் நல்லாத்தான் இருக்கு

Print this item

  நலவாழ்வுக்கான உணவு கூம்பகம்/பிரமிட்
Posted by: KULAKADDAN - 11-26-2005, 01:37 AM - Forum: மருத்துவம் - Replies (13)

<img src='http://img463.imageshack.us/img463/7831/healthyfood6pg.jpg' border='0' alt='user posted image'>


இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது.
கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும்

<b>நாளாந்தம் உட்கொள்ளவேண்டியவை.</b>

<b>1. நீர்</b>
முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது.

ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும்

பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும்.

<b>ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன?</b>

* மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும்.
* உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
* உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது
* நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை
நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது.
*சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது
* குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது.

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை

<b>2. பழங்களும் மரக்கறிகளும்</b>

ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால
5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


<b>ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.?</b>

* மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும்
* விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம்.
* சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை
* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
* அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன.

<b>3 தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும்</b>

<b>ஏன் முக்கியத்துவமானது?</b>

* கொழுப்பு குறைவானது
* விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை.

* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை.
* உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது
* பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம்
* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

<b>4. அவரை இன உணவுகள்</b>

* மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை
* அதிகளவு புரத்ததை கொண்டவை
* கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை
* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும்

<b>அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும்.</b>


<b>5.1 நல்லின கொழுப்புணவுகள்</b>

நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான <b>தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid </b>ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை

உதாரணமன எண்ணெய் வகை : ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை

*உடலுக்கு சக்தியை வழங்குவதல்
*இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல்
* விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E
* மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை

<b>5.2 வாசனைப்பொருட்கள் </b>
மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும்
<b>முக்கியத்துவம்</b>
* தொற்றுக்களை குறைத்தல்
* குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன



<b>6. பாலும் முட்டையும்</b>

<b>முட்டை நாளுக்கு ஒன்று வீதமும்
பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும்</b>


இரண்டும்
* புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை
* மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

<b>அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது </b>

<b>7. மீனும் கடலுணவுகளும்</b>

வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் )

<b>8 இறைச்சிகள்</b>

வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும்.

<b>9. இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில்</b>

<b>சொக்லேட்</b>- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள்

<b>அற்ககொல்</b> - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது.

ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும்


<b>தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.</b>

Print this item