புதிய பதிவுகள்

WSJ: ஈரானில் நடைபெறும் நடவடிக்கைக்குப் போதிய ஆதரவளிக்காத சில நேட்டோ நாடுகளைத் தண்டிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.Iryna Vakuliuk - 9 ஏப்ரல், 03:14WSJ: ஈரானில் நடைபெறும் நடவடிக்கைக்குப் போதிய ஆதரவளிக்காத சில நேட்டோ நாடுகளைத் தண்டிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்16940தனது கருத்தின்படி, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்குப் போதுமான ஆதரவை வழங்காத சில நேட்டோ உறுப்பு நாடுகளைத் தண்டிக்கும் திட்டம் ஒன்றை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.ஆதாரம்: தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் , அமெரிக்க நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி.விவரங்கள்: தகவல்களின்படி, அத்தகைய நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்று, ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கைக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கிய நாடுகளுக்கு அவர்களை மீண்டும் நிலைநிறுத்துவது
டிரம்பின் ஈரான் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அதற்கான செலவை ஐரோப்பா ஏற்க நேரிடுமோ என அஞ்சுகிறது.காசா முதல் உக்ரைன் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வரை, சிதறியவற்றைச் சேகரிக்கும் பொறுப்பை ஐரோப்பாவிடம் விட்டுச்செல்லும் பழக்கம் டொனால்ட் டிரம்புக்கு உண்டு.அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான்-போர்-அரசியல்-டிரம்ப்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 6, 2026 அன்று வெள்ளை மாளிகையில் ஈரானில் நிலவும் மோதல் குறித்துப் பேசுகிறார். | கென்ட் நிஷிமுரா / AFP via Getty Imagesஏப்ரல் 8, 2026 மாலை 7:21 CETநிக்கோலஸ் வினோகூர் எழுதியதுபிரஸ்ஸல்ஸ் ― டொனால்ட் டிரம்ப் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அதைச் சரிசெய்யவோ, அல்லது குறைந்தபட்சம் அதைச் சமாளிக்க ஒரு பெரும் விலையைக் கொடுக்கவோ ஐரோப்பா அழைக்கப்படுகிறது.அமெரிக்க அதிபர் ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த பின்னர், ஹோர்முஸ்
ஈரான் யுரேனியத்தை செறிவூட்டாது என்றும், அமெரிக்கா அனைத்து "அணுத் தூசியையும்" தோண்டி அகற்றும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.அலோனா மஸுரென்கோ - 8 ஏப்ரல், 14:58ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டாது என்றும், அமெரிக்கா அனைத்து அணுத் தூசியையும் தோண்டி அகற்றும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: ஒயிட் ஹவுஸ் ஆன் எக்ஸ் (ட்விட்டர்)31073ஈரானுடன் அமெரிக்கா நெருக்கமாகப் பணியாற்றி, இணைந்து அனைத்து அணுத் தூசியையும் தோண்டி அகற்றும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், சுங்க வரிகள் மற்றும் தடைகளை நீக்குவது தொடர்பான 15 அம்சங்களில் பலவற்றுக்கு ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.ஆதாரம்: ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப்மேற்கோள்: " மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றத்தைக் கண்டடைந்துள்ளதாக நாங்கள் தீர்மானித்துள்ள ஈரானுடன், அமெரிக்கா நெருக்கமாக
உயர் பாதுகாப்பு வலயங்களை மீளாய்வு செய்யுமாறும் எல்லைகளை தேவைக்கேற்ப புதுப்பிக்குமாறும் பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் 09 Apr, 2026 | 02:28 PMimage( இணையத்தள செய்திப் பிரிவு )தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, திங்கட்கிழமை 07 பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உயர் பாதுகாப்பு வலயங்கள் இயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லையென்றும், எனவே தற்பொழுது காணப்படும் பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அவ்வாறான உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளில் மாற்றங்களைச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களுக்கே பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.பாதுகாப்பு முகாம்கள் அல்லது வெவ்வேறு தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் தனியார் காணிகள் மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், மீண்டும் கையளிக்கக் கூடிய தனியார் காணிகளை வழங்குவதற்கும், அவ்வாறு வழங்குவதற்கு முடியாதுள்ள காணிகளுக்காக நியாயமான நஷ்ட ஈட்டை வழங்கி அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.அதேநேரம், அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு முகாம்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எந்தளவு காணிகளைப் ஒதுக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.அத்துடன், 2026.04.09ஆம் திகதி பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட (357 ஆம் அத்தியாயமான) தரைப்படைச் சட்டத்தின் கீழ் 29ஆம் மற்றும் 155ஆம் பிரிவுகளின் கீழான ஒழுங்குவிதி, (358 ஆம் அத்தியாயமான) கடற்படைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதி மற்றும் (359 ஆம் அத்தியாயமான) வான்படைச் சட்டத்தின் 29 ஆம் மற்றும் 155 ஆம் பிரிவுகளின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன ஆராயப்பட்டு குழுவில் அங்கீகரிக்கப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.WhatsApp_Image_2026-04-09_at_11.16.05.jpWhatsApp_Image_2026-04-09_at_11.16.07.jpWhatsApp_Image_2026-04-09_at_11.16.07__1WhatsApp_Image_2026-04-09_at_11.16.02__1WhatsApp_Image_2026-04-09_at_11.16.02.jpWhatsApp_Image_2026-04-09_at_11.16.01__1WhatsApp_Image_2026-04-09_at_11.16.01.jpWhatsApp_Image_2026-04-09_at_11.16.00__1WhatsApp_Image_2026-04-09_at_11.15.58.jphttps://www.virakesari.lk/article/243117
WSJ: ஈரானில் நடைபெறும் நடவடிக்கைக்குப் போதிய ஆதரவளிக்காத சில நேட்டோ நாடுகளைத் தண்டிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.Iryna Vakuliuk - 9 ஏப்ரல், 03:14WSJ: ஈரானில் நடைபெறும் நடவடிக்கைக்குப் போதிய ஆதரவளிக்காத சில நேட்டோ நாடுகளைத் தண்டிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ்16940தனது கருத்தின்படி, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைக்குப் போதுமான ஆதரவை வழங்காத சில நேட்டோ உறுப்பு நாடுகளைத் தண்டிக்கும் திட்டம் ஒன்றை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.ஆதாரம்: தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் , அமெரிக்க நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி.விவரங்கள்: தகவல்களின்படி, அத்தகைய நாடுகளில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்று, ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கைக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கிய நாடுகளுக்கு அவர்களை மீண்டும் நிலைநிறுத்துவது இந்தத் திட்டத்தில் அடங்கியிருக்கலாம்.உதாரணமாக, வாஷிங்டன் ஸ்பெயின் அல்லது ஜெர்மனியில் உள்ள சில இராணுவத் தளங்களை மூடக்கூடும்.காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் சட்டப்படி தன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்பதால்
புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு : நாளை வாக்குப்பதிவு08 Apr, 2026 | 02:53 PMimageவட இந்திய மாநிலமான அசாம் - தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.‌இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
09 Apr, 2026 | 05:09 PMimage(இணையத்தள செய்திப் பிரிவு)பிரான்சில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.பாரிஸின் புறநகர் பகுதியான கயன்கோர்ட் நகரில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.பிலால் லுக்மான் தற்போது பிரான்சின் புகழ்பெற்ற 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்'  பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டத்துறை மாணவராகப் பயின்று வருகிறார். தனது 18 ஆவது வயதிலேயே வாக்காளராகவும், வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.தனது 15 மற்றும் 16 வயதிலேயே பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் உள்ளூர் மேயர் ஆகியோரின் அலுவலகங்களில் பயிற்சி பெற்று
இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்April 7, 2026— கருணாகரன் —இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, சமத்துவக் கட்சி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரும் காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர். 4e08b8f1-88cb-40bc-b22f-79b4841b0a0b.jpe
பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா?பெண்கள் நின்றுகொண்டு பிரசவிப்பதே ஆரோக்கியமானதா? அறிவியல் கூறுவது என்ன?பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்லூசி ஷெரிஃப்‎8 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்பெண்கள் மல்லாந்து படுத்தவாறு பிரசவிப்பது பொதுவாக அதிக ஆபத்தானது. ஆனால் இன்றும்கூட, இந்த முறையில்தான் பெண்கள் பிரசவிக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்று, நெடுங்காலத்திற்கு முன்பு, குறிப்பாக ஆண் மருத்துவர்களுக்கு மிகவும் வசதியானது என்று ஒரு பிரெஞ்சுகாரர் எடுத்த முடிவு.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள பெண்கள் படுத்துக்கொண்டு பிரசவிக்கவில்லை. மாறாக, அவர்கள் நிமிர்ந்த நிலையிலேயே பிரசவித்தனர். உதாரணமாக, கிளியோபாட்ரா மண்டியிட்டு பிரசவித்ததாக நம்பப்படுகிறது.பெண்கள் பிரசவத்திற்காக பிரத்யேக நாற்காலிகளையோ அல்லது இருக்கைகளையோ பயன்படுத்தினர் அல்லது பிரசவத்தின்போது குத்தவைத்து அமர்ந்தனர். குத்தவைத்து அமர்வது உண்மையில் உதவிகரமானது, ஏனெனில் அது இடுப்புப் பகுதியின் (குழந்தை கடந்து செல்லும் இடம்) அளவைக் குறைந்தபட்சம் 2.5செ.மீ வரை அதிகரிக்கக்கூடும். மேலும், நிமிர்ந்து நிற்பது
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...AVvXsEiTnyE6lEcV21t9pUUIZgq8Ju0kbOMFj_LxrjUKqOj_1JvF-eO-at9P1_b3tzx0Z28Itn3jYMsnMX-WDn7MGVi1zLX6_HIn8vTYEJud31lHYDbUByTiYtqz5Ri9yTgfGQEUjn_hwF224EcLMvMmnuJxeJ2vCdinlBbhmT0qUZ8NB218aTC5_wHDySi1F5sH=w400-h225 ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்Published By: Vishnu30 Mar, 2026 | 10:33 PMimage(நா.தனுஜா)படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக்  காட்டுகின்றது.large.IMG_0073.jpeg.3041e3e4a8ae92cbb170Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த  வேண்டத்தகாத  ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ.Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்21 Mar, 2026 | 11:47 AMimage(இணையத்தள செய்திப் பிரிவு )மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை
வெள்ளத்தில் மூழ்கும் யாழ்ப்பாணமும் அதன் பின்னணிகளும் – ந.லோகதயாளன்.written by admin December 13, 2020Jaffna-Vellam.jpg?fit=600%2C360&ssl=1யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசன்துறை வீதிக்கு மேற்குத் திசையில்
ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்பட மூலாதாரம்,NASAபடக்குறிப்பு,ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்கட்டுரை தகவல்ரெபெக்கா மொரெல்,அறிவியல் ஆசிரியர்,அலிசன் பிரான்சிஸ்,கெவின் சர்ச் (ஜான்சன் விண்வெளி மையம்)11 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஆர்டெமிஸ் 2-ல் பயணித்த விண்வெளி வீரர்களைத் தவிர வேறு எவருமே இதுவரை பூமியிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை.இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில், ஆர்டெமிஸ் 2 குழுவினர் புதிய சாதனையைப் படைத்தனர். மனிதர்கள் பூமியிலிருந்து பயணம் செய்த மிக அதிக தூரம் என்ற சாதனையை அவர்கள் முறியடித்தனர்.1970-ல் அபோல்லோ 13 குழுவினர் படைத்த 2,48,655 மைல்கள் (4,00,171 கிலோமீட்டர்) தூரம் என்ற சாதனையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் விஞ்சினர்.சந்திரனின் பின்புறம் பயணம் செய்தபோது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடைந்தது. இது 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) என்ற சாதனை தூரத்தை எட்டியது.ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம்
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம்தமிழில்: எழுத்துக்கினியவன்மதமாற்றம்1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம்.தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/).இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான்.இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள்.“வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள்.ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின.இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே
924714-diwali1.webpவாழ்க்கை என்பது இயற்கையிலேயே ஒரு அழகான பயணம். ஆனால், அந்தப் பயணத்தை நாம் ரசித்துப் பயணிப்பதை விட, நம்மைச் சுற்றி இருக்கின்ற அந்த ‘நூறு பேர்’ என்ன நினைப்பார்கள் என்பதிலேயே நம் முழுக் கவனத்தையும் செலுத்தி விடுகிறோம்.இந்த நூறு பேர் யார்?நம் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நம்மை மேலோட்டமாகத் தெரிந்த சில உறவுகள். இவர்களுக்காகவே நாம் எப்போதும் ஒரு முகமூடியை அணிந்து கொள்கிறோம். அவர்கள் நம்மை ‘நல்லவன்’ என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே, நம்முடைய நிஜமான ஆசைகளையும் உணர்வுகளையும் பல நேரங்களில் அடக்கி வைத்துக் கொள்கிறோம்.நம் அண்டை வீட்டார் ஒரு வசதியான பொருளை வாங்கினால், நமக்கும் அதை வாங்கத் துடிக்கும் அந்தப் போட்டி மனப்பான்மை இருக்கிறதே, அது உண்மையில் நமக்காக எழுந்தது அல்ல அந்த நூறு பேரின் முன்னிலையில் நாம் தாழ்ந்து போய்விடக் கூடாது என்ற பயத்தினால் உருவானது.கொஞ்சம் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.நம்முடைய கொள்ளுத் தாத்தாவின் பெயரோ, அவர் வாழ்ந்த விதம் பற்றியோ இன்று நமக்குத் தெரியுமா?அவர் அன்று யாருக்கெல்லாம் பயந்தாரோ, அந்த ஊரும் அந்த மக்களும் இன்று எங்கே இருக்கிறார்கள்?காலச்சக்கரம் சுழலச்
எப்போதும் தோற்பவர்கள்-----------------------------------------large.SearchingWoman.jpgஓடி ஒளிந்து விட்டுதிரும்பி வரும் போதுமூன்று நாட்கள் முடிந்து இருந்தனஅந்த அக்கா அங்கேயே மூன்று நாட்களாக இருந்தார்அவர் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த சுவரில்சிவப்பு நிறத் திட்டுகள் தெறித்து வழிந்து காய்ந்து கிடந்ததுஅங்கிருந்து தான் நானும்அந்த சுவரால் ஏறி விழுந்து ஓடியிருந்தேன்அந்த அண்ணனையும் எனக்கு தெரியும்ஓடாமல் அங்கேயே நின்றிருந்தால்நானும் சிவப்பாக அந்தச் சுவரில் தெறித்து காய்ந்து அப்படியே காணாமல் போயிருப்பேன்அக்காவின் தலைமுடி விரிந்து கிடந்ததுசபதம் போட்டு முடித்து அக்கா அள்ளி முடிக்கநாங்கள் பாண்டவர்கள் இல்லையேநாங்கள் தேசமற்ற ஆதரவற்ற பரதேசிகள்அடி மனதின் இருட்டுக்குள்இதையும் புதைத்து மறைத்து வைத்தாலும்எங்களுக்கு வெற்றி வெற்றி என்றும்அவர்களுக்கு தோல்வி தோல்வி என்றும்ஆரவாரிக்கும் குரல்கள் கேட்கும் போதெல்லாம்அந்த அக்கா இப்ப என்ன செய்கின்றாரோ என்றும் தோன்றும்இன்னும் பல நினைவுகளுடன்எவர் வென்றாலும்எவர் தோற்றாலும்தலை மூடிய இந்த மத்திய கிழக்கு பெண்மணியும்மிஞ்சிய நாட்களில் தேடிக்
தனி உலக மரதன் சம்பியன்ஷிப் ; உலக மெய்வல்லுநர் நிறுவனம் 2030இல் அறிமுகப்படுத்தவுள்ளது09 Apr, 2026 | 05:05 PMimage(நெவில் அன்தனி)வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப் போவதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) அறிவித்துள்ளது.standalone_marathon_from_2021.jpg2027, 2029 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து தனி உலக மரதன் சம்பியன்ஷிப் 2030 இல்   அறிமுகப்படுத்தப்படவுள்ளது.மரதன் ஓட்டம் மற்றும் பண்டைய ஒலிம்பிக் ஆகியவற்றின் பிறப்பிடமான ஏதென்ஸில், தனி உலக மரதன் சம்பியன்ஷிப் நடத்தப்படவுள்ளது.இது உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் (World Championship) போட்டிகளை மறு வடிவமைக்கும் ஒரு மூலோபாய திட்டமாகும்.இதற்கு அமைய 2031இலிருந்து உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் மரதன்
தனித்து விடப்படும் முதியவர்கள்NillanthanBy Nillanthan - 4 months agoLess than a minuteFacebookTwitterGoogle+WhatsappShare via EmailIMG-20251020-WA0017-1024x682.jpgபுலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். அவருடைய ஊரில் அவருக்குத் தூரத்து உறவான ஒரு முதிய பெண் தனித்து வசிக்கிறார்.பெரிய வீடு;வசதியான குடும்பம்;ஆனால் பிள்ளைகள் இல்லை. காசு உண்டு. ஆனால் பராமரிக்க ஆளில்லை. அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு படை முகாமில் இருப்பவர்கள் அவருக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால் அவர் பல நாட்கள் குளித்திருக்கவில்லை என்றும் அவருடைய சுத்தம் சுகாதாரத்தைத் தொடர்ச்சியாகக் கவனிப்பதற்கு அங்கே ஆட்கள் இல்லையென்றும் நண்பர் சொன்னார். அப்படியென்றால் அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒன்றில் அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம் அல்லது கட்டணத்தோடு முதியோரைப் பராமரிக்கும் இல்லங்களில் இணைக்கலாம்.போதியளவு பணம்