ஊர்ப்புதினம்

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்

3 hours 9 minutes ago

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்

Published By: Vishnu

17 Mar, 2026 | 08:51 PM

image

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன்.

2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன.

குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர்.

இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்;

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/241233

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை

3 hours 31 minutes ago

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை

Published By: Vishnu

17 Mar, 2026 | 07:40 PM

image

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட உரையாற்றுகிறார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை முன்வைத்து ஜனாதிபதியின் உரை அமைகின்றது.

சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை முன்னிட்டு இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி வரவிருக்கும் வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்திலும் உரையாற்ற திட்டமிட்டுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/241230

இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

3 hours 45 minutes ago

இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

Published By: Digital Desk 3

17 Mar, 2026 | 05:06 PM

image

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/241211

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன்

4 hours 39 minutes ago

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன்

17 Mar, 2026 | 12:05 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது.

வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன

அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும்.

டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும்.

அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது.

எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம்.

இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது.

எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம், வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/241177

இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!

4 hours 45 minutes ago

இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

Mar 17, 2026 - 04:53 PM

இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்'  எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.


இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmuiwcmr000w356px10448qj

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

13 hours 12 minutes ago

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

 வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது.

பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது.

குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. 

அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 

வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். 

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். 

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என  மேலும் தெரிவித்தனர்

https://jaffnazone.com/news/55614

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!

13 hours 22 minutes ago

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!

Vhg மார்ச் 17, 2026

AVvXsEj2AxfP7HmAbyTALkf-kt_sFyobxQxf7qlFCuml6bNNDRDkXLeYeln73HYpqnSaFFVO16M3eYjwaUvRh3cqbRIgKMcXLNjqkyWXnLhDWqmr_gpILx1oqSuPziVS2TOntRqHmNEzvNp1DjRPS_xzhmhNoUc30G8BsowLZ9hAt6OMmhRmq-yMWFB4C6012JJ6

குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது.

AVvXsEhPiSjMATzdsd05Rn6-VGNUz0bXjmuF44e0NLwYKKtfMNEpi7rLXmsBX_zk_jAOuRX0fFD8Z2GVOwRGWnoDaLPtEoVIP2o-cWd_xme47t4s-tTNEWbl0lHmfbjddX7Fl8XtP7-A_XPuwECwUT67JNYmJva5rF5-yga_nwz4-ZY4b5JZQstDeZtPY_j3WgFd

AVvXsEgQFTwlhWCLER4HrOSrMLjylTr8mexC02NzGXyWlBpAEkPpW7GgnLDmZb_JsRtPBcH7LgWC1nD1hze5vmBIQnWJ0zIIFDvn1HY_qzD8Rp39MnwKZqmE4nlRJRKb7dzqfoOW-lrJPb3f8CHEjI6T9EEfjodCJR3Nvwn55luDIwgZ5g5DOVQIx0AyZLLJN036

இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். 

தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

https://www.battinatham.com/2026/03/blog-post_499.html

மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை

13 hours 31 minutes ago

மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை

17 March 2026

1773721387_6032778_hirunews.jpg

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கெலவல்ல தற்போது ஒரு கிலோகிராம் சுமார் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

https://hirunews.lk/tm/453648/middle-east-crisis-sri-lankas-fish-exports-freeze-domestic-fish-prices-fall

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

13 hours 33 minutes ago

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Published By: Vishnu

17 Mar, 2026 | 05:43 AM

image

வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 2013 பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைகடகளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.

குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், 2 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

குறித்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/241150

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

13 hours 35 minutes ago

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

Mar 17, 2026 - 11:40 AM

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

Update 12.00

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

https://adaderanatamil.lk/news/cmmu7qro9000h356psmwttfl1

இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

13 hours 36 minutes ago

இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

 

image_5601d178ff.jpg

பூ.லின்ரன்   

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள்   சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர்.

  இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர்.

 தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

"உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

  குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-நிறுவனங்களால்-300-க்கும்-மேற்பட்ட-கேபிள்-டிவி-உரிமையாளர்கள்-பாதிப்பு/175-374039

குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை

13 hours 40 minutes ago

குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை

image_cbf6d00d3f.jpg

 செ.தி.பெருமாள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

  நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்'   விடுதியை வந்தடைந்தனர்.

  இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது

https://www.tamilmirror.lk/மலையகம்/குருந்தூர்-மலையிலிருந்து-சிவனொளிபாத-மலைக்கு-நடைப்பயண-யாத்திரை/76-374042

யாழில் வீதி விபத்து: அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு

13 hours 48 minutes ago

யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

Published By: Vishnu

17 Mar, 2026 | 05:46 AM

image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/241149

அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக இரத்து - பொது நிர்வாக அமைச்சு

1 day 4 hours ago

அனைத்து அரச விழாக்களும் தற்காலிகமாக இரத்து - பொது நிர்வாக அமைச்சு 

16 Mar, 2026 | 07:39 PM

image

சகல அரச விழாக்கள், உற்சவங்கள், சம்மேளனங்களையும் தற்காலிகமாக இரத்து செய்யவும், பாரிய ஒன்றுகூடல்களை வரையறுக்கவும் பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் சிக்கல்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241137

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

1 day 4 hours ago

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

16 Mar, 2026 | 07:22 PM

image

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாகக் கூறி, போலியான சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களை எச்சரிக்கிறது.

வலைத்தள பயனர்களை தவறாக வழிநடத்தவும் அவர்களது தனிப்பட்ட நிதி தொடர்பான தகவல்களை திருடவும் நிகழ்நிலையில் மோசடிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை (Link) க்ளிக் செய்யவோ, அதிகாரபூர்வமற்ற வலைத்தளங்கள், செய்தி இணையத்தளங்கள் அல்லது சமூக ஊடகங்களின் மூலம் பகிரப்படும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவோ வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோசடியில் ஈடுபடுபவர்கள், இணையத்தள பயனர்களை ஏமாற்ற, வேண்டுமென்றே சிறிது மாற்றப்பட்ட எழுத்துப்பிழைகளை கையாளக்கூடும். ஆகையால், URLஇல் உள்ள வலைத்தள பெயர்கள் மற்றும் எழுத்துக்களை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு அதிகாரபூர்வ வலைத்தளமாக https://fuelpass.gov.lk என்பதே விளங்குவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு அறிவித்திருப்பதோடு, சைபர் தொடர்பான குற்றங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தால் குழுவில் https://www.cert.gov.lk/ புகாரளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/241135

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

1 day 4 hours ago

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனம் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்

16 Mar, 2026 | 07:56 PM

image

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் இந்த விடுமுறை நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241136

சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு!

1 day 7 hours ago

சீன மக்கள் குடியரசின் குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கிடையில் சந்திப்பு!

Published By: Digital Desk 1

16 Mar, 2026 | 10:00 AM

image

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர்.

இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாக பிரதி அமைச்சர் Zhang Yong தலைமையிலான பிரதிநிதிகள் குழு, 14ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை சந்தித்துள்ளனர்.

இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றங்கள், ஆட்கடத்தல், சைபர் குற்றங்கள் போன்ற இரு நாடுகளினதும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், அன்றையதினம் Zhang Yong தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கும் இடையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டார். அங்கு இரு நாடுகளினதும் குடிவரவு நிர்வாகம், திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வடகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32__2

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.33__2

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32__1

WhatsApp_Image_2026-03-16_at_09.52.32.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.31.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30.jp

WhatsApp_Image_2026-03-16_at_09.52.30__1

https://www.virakesari.lk/article/241075

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

1 day 14 hours ago

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

Published By: Vishnu

16 Mar, 2026 | 04:49 AM

image

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படக்கூடியதால், அதற்கான பொருத்தமான பரிந்துரைகளையும் முன்வைக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/241061

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர்

1 day 14 hours ago

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர்

Published By: Vishnu

15 Mar, 2026 | 10:33 PM

image

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

WhatsApp_Image_2026-03-15_at_21.27.535.j

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

WhatsApp_Image_2026-03-15_at_21.27.53.jp

2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இப்புதிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஆராய ஒரு குழுவினை நியமித்துள்ளோம். அக்குழுவின் அறிக்கையின்படி எதிர்கால நடவடிக்கைகள் அமையும்.

WhatsApp_Image_2026-03-15_at_21.27.52.jp

வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆரம்பப் பிரிவு வகுப்பறையில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் 35 மாணவர்கள் வரையும் உள்வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளக் கூடாது.

WhatsApp_Image_2026-03-15_at_21.27.51.jp

வகுப்பறைகளை அபிவிருத்தி செய்யும்போது, அவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைப் பொறியியல் பிரிவினர் தற்போது தயாரித்து வருகின்றனர். பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகளை மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளக் கூடியவையாகும்.

WhatsApp_Image_2026-03-15_at_21.27.49.jp

சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் அனைத்துப் புனரமைப்புப் பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே, கட்டமைப்புக் குழுக்களின் ஊடாக முறையான திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் அவற்றைச் சமர்ப்பியுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள்.

2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெற்றோரிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நிதி ஒதுக்கீடு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாகப் பாடசாலை வைபவங்களின் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தாத விதத்தில் அவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

பல வருடங்களாக ஆசிரியர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகப் பெருமளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசாரணையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாம் 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன.

அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாம் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். சம்பளப் பிரச்சினை ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனினும், பதவி நியமனம் வேண்டிப் போராட்டம் நடத்துபவர்கள், நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள்.

அவர்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் பதவியை ஏற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்ற ஒரு கருத்து நிலவி வருகின்றது. இதனால் ஒட்டுமொத்தக் கல்வித்துறையிலும் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

சிலர் அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காது, ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் அதற்கு இடமளிக்க இயலாது. இது ஒரு கௌரவமான சேவையாகும். ஆகையினால், அதிபர் சேவையின் தொழில்சார் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை பாராளுமன்றக் கல்விச் சபையூடாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தயார்படுத்தப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, அந்தந்தப் பிரிவுகளில் நிலவும் நிலைமைகளை எதிர்வு கூறி, கட்டமைப்புக் குழுக்கள் ஊடாக அத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாம் முன்மொழிந்துள்ளோம்.

அத்துடன், மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை காத்திராது, கோட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/241057

மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது

2 days 4 hours ago

மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது

image_505f09c78f.jpg

உர விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக QR குறியீடு (QR Code) நடைமுறையை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான முன்னோடித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்தார்.

உரங்களை விநியோகிக்கும்போது இத்தகைய QR முறைமையைப் பின்பற்றுவது அவசியமானது என்று குறிப்பிட்ட அமைச்சர், இதற்கான முன்மொழிவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என அமைச்சர் உறுதியளித்தார். இருப்பினும், சில தனியார் நிறுவனங்களும் கறுப்புச் சந்தை வியாபாரிகளும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட உரங்களின் விலையை அநியாயமாக உயர்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஒரு மூட்டை உரம் 12,000 முதல் 13,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது குறித்து மேலும் கூறியதாவது:

"அநியாயமான முறையில் விலையை உயர்த்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். நுகர்வோர் விவகார அதிகார சபையும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். உரத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்."

இந்தச் சிறுபோகத்தில் உரப் பிரச்சினை பெரிய அளவில் ஏற்படாது என்றும், எதிர்வரும் மே மாதம் சீனாவிலிருந்து ஒரு தொகுதி உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

மற்றுமொன்றுக்கும் QR முறைமை வருகிறது

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr