| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 282 online users. » 0 Member(s) | 279 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,639
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| தொண்டைமானாறு கடற்பரப்பில் அபூர்வ நிகழ்வு |
|
Posted by: adsharan - 11-28-2005, 12:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு நேற்றுக் காலை 7.30 மணியள வில் தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது.
நீர்நிலைகளில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலேசென்று கருமுகிலாவதே வழக்கம். ஆனால், மிக அபூர்வ நிகழ்வாக வளி மண்டலத்தில் ஏற்படும் அழுத்த ஏற்பாடுகள் காரண மாக திரவநிலையிலேயே நீர் முகிலை யடைவது இடம்பெறுகிறது.
இது போன்ற ஒரு நிகழ்வே நேற்று தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றது. இதன்போது மிகப் பாரிய காளான் போன்று முகிலும் மேலே சென்ற நீரும் தோற்றமளித்தன என்று நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர்.
http://www.uthayan.com/pages/news/today/16.htm
|
|
|
| அரசியல் கேலிச் சித்திரம் |
|
Posted by: AJeevan - 11-28-2005, 11:49 AM - Forum: நகைச்சுவை
- No Replies
|
 |
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/04/20040404033349chandrika_tunga_203_2_jpg.jpg' border='0' alt='user posted image'>
கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிசெய்துவந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
தற்போது பதவியிலிருந்து இறங்கினாலும் மீண்டும் ஏதோ ஒரு பதவியில் தொங்கிக் கொள்ள முயல்வதை
<b>லக்பிம</b> சிங்கள பத்திரிகை கேலிக்குரியதாக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள
<b>அரசியல் கேலிச் சித்திரம்</b>............
<img src='http://img380.imageshack.us/img380/5921/cartoonlarge4gx.jpg' border='0' alt='user posted image'>
[b]<span style='color:blue'>ஓய்வெடுக்க அவ்வளவு நல்லதாய் ஒரு சாய்வுக் கதிரை இருக்க
எதுக்கு மெடம் இந்த குட்டி இருக்கைக்கு (ஏறுறீங்க)மல்லுக்கட்டுறீங்க?
</span>
|
|
|
| இந்தியா கொல்கத்தா ரசிகர்களின் அடாவடித்தனம்,, |
|
Posted by: Danklas - 11-28-2005, 07:55 AM - Forum: விளையாட்டு
- No Replies
|
 |
அண்மையில் நடந்த முடிந்த இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா நாடுகளுக்கு இடையிலானா 4வது கிரிக்கட் போட்டியில் இந்திய கொக்கத்தா ரசிகர்கள் செய்த நாகரிகமற்ற ஒரு செயல் உலக நாடுகளிற்கு இந்தியாமக்களின் நாகரிகமற்ற செயலை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கின்றது,
பொதுவாக இரண்டு நாடுகள் கிரிக்கட் கால் பந்து விளையாடும்பொழுது அந்த நாட்டு ரசிகர்கள் தங்களின் நாடு வெல வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருப்பார்கள், உதாரணத்துக்கு கால்பந்தை எடுத்துக்கொண்டால், இரண்டு உள்ளூர் கழகங்கள் விளையாடும்பொழுது தங்களுக்குள் அடிப்பட்டுக்கொள்ளும் ரசிகர்கள், அந்த நாட்டு அணி வேறோரு நாட்டு அணியுடன் விளையாடும்பொழுது ஒட்டு மொத்த ரசிகர்களும் முதல் நடந்த சண்டை சச்சரவுகளை மறந்து தங்கள் நாட்டு அணி வெற்றி பெறவேண்டும் எண்டு துடிப்பார்கள், இது உலக நாடுகளில் பொதுவாக நடைபெறும் நிகழுவு, வரலாறு..
ஆனால் இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள்? எல்லாத்துக்குமே சண்டை, பொறாமை, எரிச்சல், ஒரு மாநிலம் நல்லா இருந்தால் மற்ற மாநிலக்காரனுக்கு பிடிக்காது, எப்படியாவது ஏதாவது ஒண்டுக்குள் சிக்கவைத்து நொங்கெடுப்பது அவங்களுக்கு கை வந்த கலை, ஆனால் இங்க என்ன நடந்தது எண்டால் ஒரு விளையாட்டில் இவர்கள் செய்ததை பாருங்கள்..
கொல்கத்தா ரசிகர்கள் இந்திய அணிக்கு அமோக ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள், இந்திய அணியின் முன்னாள் கப்டன் சவ்ராவ் கங்குலிக்கு (ஒரு தனி நபருக்காக)அணியில் இடம் கொடுக்கவில்லை எண்ட உடன் அவர்கள் என்ன செய்தார்கள்? தட்ஸ் தமிழில் வந்த செய்தியை வாசியுங்கள்..
கொல்கத்தா வீரரான கங்குலி அணியில் இடம் பெறாததால் உள்ளூர் ரசிகர்கள் கோபத்தில் இருந்தனர். அவர்கள் போட்டி தொடங்கியதிலிருந்தே இந்திய வீரர்களை பார்த்து கேலி செய்து கொண்டிருந்தனர். இத தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ரசிகர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர். பயிற்சியாளர் கிரேக் சேப்பலை எதிர்த்து மோசமாக வார்த்தைகளால் திட்டினர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய வீரர்கள் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டனர்.
கங்குலி இல்லையேல் கிரிக்கெட் இல்லை என்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான காம்பீரும், பதானும் மைதானத்தில் இறங்கிய போது கோஷமிட்டனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர் பதான் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மீண்டும் சேப்பலை வெளியேற்று, இந்தியாவை காப்பாற்று என்று கோஷமிட்டனர்.
தெண்டுல்கர் வந்த போது தெண்டுல்கர் ஏய் ஏய் என்று கேலி செய்தனர். இதனால் அவரும் 2 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போது இன்னும் கேலி அதிகரித்தது. இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டனர். ஷேவாக் 30 ரன்னில் அவுட்டான போது கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ராகுல் திராவிட் மைதானத்திற்கு வந்ததில் இருந்தே அருக்கு எதிரான கோஷங்கள் விண்ணை பிளந்தன. அவர் 6 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது அவமானம் அவமானம் டிராவிட் ஒழிக என்று கோஷமிட்டார்கள்.
கங்குலிதான் ஹீரோ சேப்பல் முட்டாள் என்று எழுதப்பட்ட அட்டையை தூக்கி பிடித்தனர். இப்படி ரசிகர்களின் கேலி தொடர்ந்ததால் இந்திய வீரர்கள் நிலைத்து நிற்க முடியாமல் விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர்.
ஒரு வீராருக்காக இப்படி செய்து அணியின் மானத்தை வாங்கினதும் போதாமை தாய் நாட்டுக்கு செய்யிற, தேடிக்குடுத்த பரிசை பாருங்க....
|
|
|
| வணக்கம் |
|
Posted by: கந்தப்பு - 11-27-2005, 11:39 PM - Forum: அறிமுகம்
- Replies (37)
|
 |
வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால் நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்.
|
|
|
| மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்...* |
|
Posted by: SUNDHAL - 11-27-2005, 03:01 PM - Forum: மருத்துவம்
- Replies (8)
|
 |
மகிழ்ச்சியாக இருக்க பிhpட்டன் ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஆலோசனைகள்-
1. ஒவ்வொரு நாள் முடியும் போதும், குறைந்த பட்சம் 5 முறையாவது உங்களை நீங்களே வாழ்த்திக் கொள்ளுங்கள்.
2. நீங்கள் மிகவும் அன்பு செலுத்தும் நபருடன், வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி 1 மணி நேரமாவது உரையாடுங்கள்.
3. சில நண்பர்களுடன் நீண்ட நாள் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி, நோpல் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
4. தினந்தோறும் உங்களுக்கு நீங்களே டிhpட் கொடுத்து, மகிழ்ச்சியாக இருங்கள்.
5. ஒருநாளைக்கு, குறைந்த பட்சம் ஒருமுறையாவது நன்றhக சிhpயுங்கள்.
6. வாரத்தில், மூன்று முறை 1_2 மணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்யுங்கள்
7. தினந்தோறும், முன் பின் அறிமுகம் இல்லாத யாராவது ஒரு நபருக்கு ஹலோ சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் முகத்தில் மகிழ்ச்சியை காட்டுங்கள்.
8. டி.வி. பார்க்கும் நேரத்தை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.
9. கோபம், ஆவேசம், துவேஷத்தை வெளிப்படுத்துவதை கைவிட்டு, பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துங்கள்.
Thanks inakaran....
|
|
|
| விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழா |
|
Posted by: AJeevan - 11-27-2005, 02:51 PM - Forum: குறும்படங்கள்
- No Replies
|
 |
<b>விம்பம் அமைப்பின் குறுந்திரைப்பட விழா</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051126173314kitchan203.jpg' border='0' alt='user posted image'>
<i>கிச்சான் படத்தில் இருந்து ஒரு காட்சி</i>
மாற்றுச் சினிமா மற்றும் தரமான ரசனை போன்ற இலக்குகளை நோக்கிய சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் தமிழிலும் இத்தகைய மாற்றுச் சினமாவுக்கான முயற்சிகள் பல காலமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்படும் விம்பம் என்னும் அமைப்பு அண்மையில் இங்கு தமிழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை நடத்தியது.
இலங்கை இந்தியா மற்றும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்து இந்த விழாவுக்கு பல குறுந்திரைப்படங்கள் வந்திருந்தன.
நல்ல ரசனையை ரசிகர்கள் மத்தியில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தமது அமைப்பு நடத்திய இந்த விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து முப்பதுக்கும் அதிகமான குறுந்திரைப்படங்கள் வந்திருந்ததாகவும்இ அவற்றில் 13 படங்கள் திரையிடப்பட்டதகவும் கூறினார் விம்பம் அமைப்பின் உறுப்பினரான ஓவியர்இ நடிகர் கிருஷ்ணராஜா.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட <b>கிச்சான்</b> என்ற இலங்கைப் படத்தின் தயாரிப்பாளர் விமல்ராஜும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையில் இலங்கையரின் பிரச்சினைகளைப் பேசும் தனித்துவமான சினிமா ஒன்றுக்கான முயற்சிகள் மிகவும் உற்சாகமாக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறுகிறார்.
அதேவேளை இங்கு திரையிடப்பட்ட படங்களைப் பொறுத்தவரை அவை தயாரிக்கப்பட்ட இடங்களை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறான விடயங்களைப் பேசுவதாகவும் அவர் கூறினார்.
ரசனையைப் பொறுத்தவரை புலம்பெயர் மண்ணில் வாழும் அடுத்த சந்ததியினரின் ரசனை சற்று மேப்பட்டதாக இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ணராஜா.
- BBC tamil
http://udaru.blogdrive.com/archive/120.html
|
|
|
|