Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 283 online users.
» 0 Member(s) | 280 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,607
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,639
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,069
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,495
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005..
Posted by: selvanNL - 11-27-2005, 12:11 PM - Forum: தமிழீழம் - Replies (47)

[size=16][b]தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005,

தமிழீழ நேரம் 17.32க்கும் Idea

Print this item

  தேசிய நினைவெழுச்சி நாள் 2005
Posted by: selvanNL - 11-27-2005, 11:33 AM - Forum: புலம் - Replies (11)

<span style='color:red'><b>தேசிய நினைவெழுச்சி நாள் 2005</b>

[size=15]கள உறவுகளே,,புலத்திலே

<img src='http://img112.imageshack.us/img112/8815/photo14bz.jpg' border='0' alt='user posted image'>

[size=11]தம்மினம் வாழவே தமைக்கொடை செய்தவர் தமிழ் புலி மாவீரர்</span> Idea

<span style='font-size:17pt;line-height:100%'>ஒத்துழைப்புக்கு நன்றி.</span>

Print this item

  தமிழீழத்தின் முப்படைகளும் உசார் நிலையில்
Posted by: iruvizhi - 11-27-2005, 11:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<img src='http://img454.imageshack.us/img454/9602/passingouttrinco93ij.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழத்தின் முப்படைகளும் உசார் நிலையில் உள்ளன என்று வடபோர் முனைக் கட்டளைப் பணியகத்தைச் சேர்ந்த தளபதி லோறன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பளையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர் பெற்றோர் சிறப்பிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய சிறப்புரை:

சிங்கள தேசம் எம்மீது திணிக்கின்ற போரைத் துணிவுடன் எதிர்கொள்வதற்காக தமிழீழத்தின் முப்படைகளும் எந்நேரமும் உசார் நிலையில் உள்ளன.

கடந்த காலங்களில் எமது மண் மீதும் மக்கள் மீதும் குண்டுகளைப் போட்டு அழித்தவர்கள், பாடசாலைகள் மீது குண்டுகளை வீசி மாணவர்களை சின்னாபின்னமாக்கியவர்கள் இலட்சக்கணக்கான மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து அகதிகளாக வெளியேற்றியவர்கள் எமது மண்ணிலிருந்து வெளியேறப் போகும் காலம் நெருங்கிவிட்டது.


ஆகவே எம்மண் சுதந்திரம் பெறும்வரை எமது தேசியக் கொடி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்று அங்கு பறக்கும் காலம்வரை எமது தேசம் விடுதலை அடையும் காலம் வரை நாம் துணிவுடன் எந்தவகையிலும் போராடத் தயாராகவே உள்ளோம் என்றார் அவர்.

தமிழீழ மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனொரு கட்டமாக நேற்று முன்தினம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள 130 மாவீரர்களின் பெற்றோர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரி மண்டபத்தில் பச்சிலைப் பள்ளி பிரதேச மாவீரர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் பளை கோட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சந்தனா தலைமையில் தொடங்கியது.

தொடக்க நிகழ்வாக பொதுச் சுடரினை யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை வடபோர் முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றிவைத்தார்.

பொது மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன், பச்சிலைப்பள்ளி உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் அணிவித்தனர்.

மாவீரர் செயற்பாட்டுக்குழுப் பொறுப்பாளர் நகுலன் வரவேற்புரையினை நிகழ்த்தினார். வர்த்தக சங்கத் தலைவர் அமீர் நினைவுரையினை நிகழ்த்தினார்.

அரசியல்துறையைச் சேர்ந்த தமிழ்விழி, லோறன்ஸ், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பெற்றோர்கள் சிறப்பிப்பு நிகழ்வில் பளை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொறுப்பாளர்கள், போராளிகள் எனப் பலரும கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நன்றி சூரியன்.கோம் http://sooriyan.com/index.php?option=conte...id=2557&Itemid=

Print this item

  ஊர்காவற்றுறையில் இளைஞர் சுட்டுக்கொலை
Posted by: sri - 11-27-2005, 08:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

யாழ். தீவகம் ஊர்காவற்றுறையில் இனந் தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


நேற்றிரவு மாவீரர் நாள் செயற்பாடுகளுக்கு ஒழுங்குகள் செய்து விட்டு இளைஞர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இருளில் மறைந்திருந்த இனந் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பாட்டியைச் சேர்ந்த மார்க்கண்டு சசிக்குமார் எனும் இந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
puthinam

Print this item

  ஆருக்குச் சொல்லி அழ..............
Posted by: thiru - 11-27-2005, 08:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

<b>ஆருக்குச் சொல்லி அழ........</b>

சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்திகள் தொடர்பில் அந்த ஊடகத்தின் நிருவாகத்தினர் கரிசனைகாட்டி -உறுதிப்படுத்திய- சரியான தகவல்களை வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து நான் எழுதிய மை காயமுன்னரே இன்னொரு சம்பவம்.

இப்போது நான் இங்கு குறிப்பிட விளையும் சம்பவம் வித்தியாசமானது.

எமது தமிழ்மக்களால் அதிகளவில் விரும்பி வாசிக்கப்படும், மதிக்கப்படும் ஒரு இணையத்தள செய்தி ஊடகம் 'புதினம்'. இத்தளத்தில் கூறப்படும் செய்திகளில் , கண்ணோட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யாது இலங்கைத்தீவில் வெளியாகும் தமிழ்த் தினசரிகள் அப்படியே தமது பதிப்புகளில் வெளியிட்டுவருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி.

தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான கட்டுரைகள் செய்திகளுடன் வெளியாகும் இத்தளத்தில் நேற்றையதினம் (26-11-2005) பிரசுரமான செய்தி ஒன்று எனது கவனத்தைக் கவர்ந்தது.

http://www.eelampage.com/?cn=22055

அச்செய்தி வருமாறு,

Quote:தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர் ஈந்த மாவீரார்களின் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழீழத் தாயகங்கள் எங்கும், உலகத் தமிழர் வாழுமிடங்களிலும் பேரெழுச்சியுடன் நாளை நடைபெற உள்ளன.


தமிழீழம் எங்கும் உள்ள 21 துயிலும் இல்லங்களிலும் தாயக நேரம் 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் மற்றும் ஆலயங்களில் மணிகள் ஒலிப்பதுடன் அகவணக்க நிகழ்வுகள் நடைபெறும்.

1982 ஆம் ஆண்டு முதலாவது மரவீரர் லெப். சங்கர் (சுரேஸ்) செ.சத்தியநாதன், சிங்கள இராணுவ சுற்றிவளைப்பின் போது நடைபெற்ற நேரடிச் சமரில் காயம் அடைந்து சுமார் இரண்டு மைல்கள் வயிற்றில் காயத்துடன் தப்பி ஓடி நண்பர்களைச் சென்றடைந்தார்.

எதிரியிடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்ற புலிகளின் மரபிற்கேற்ப இவரும் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியினால் எதிரியை முறியடித்து ஆயுதத்தையும் காப்பாற்றி தனது நண்பர்களிடம் கையளித்தார்.

வயிற்றில் காயம் பட்ட நிலையிலும் உடனடியாக சிகிச்சை பெற முடியாதநிலமை அப்போது இருந்தது.

இன்றைய காலத்தைப் போன்று உடனடியாக சிகிச்சை பெற முடியாத நிலையில் இராணுவத்தினரின் தேடுதல்கள் மற்றும் காட்டிக் கொடுப்புக்கள் என பலவிதமான இடையூறுகளும் இருந்தன.

ஆனாலும் ஏனைய போராளிகளின் முயற்சியும் சங்கரின் உறுதியும் காரணமாக இவர் ஒருவார காலத்தில் தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அதிக இரத்தப்பெருக்கு மற்றும் நாள் சென்ற காரணத்தினால் தலைவரின் மடியில் தமிழ் மக்களுக்காக தனது இன்னுயிரை ஈர்ந்தார்.

இந்த நாளே தமிழ் மக்கள் தமது மாவீரர் செல்வங்களை நினைவு கூரும் ஒரு உணர்ச்சி பூர்வ நாளாக நினைவுகூரும் நாளும் ஆகும். இந்த நாளே மாவீரர் நாளாகவும் நடைபெறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

<b>நன்றி;</b> புதினம்.கொம்

<img src='http://img516.imageshack.us/img516/5024/untitled0bj.th.png' border='0' alt='user posted image'>

இச்செய்தியில் <b><span style='color:red'>''தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த நாளை 1990 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாளாகப் பிரகடணப்படுத்தி வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.''என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து அவதானம் செலுத்துமாறு நான் அந்த ஊடகத்தின் ஆசிரியருக்கு ஒரு சிறுகுறிப்பினை உடனடியாகவே அனுப்பிவைத்திருந்தேன்.

அது வருமாறு,</span>

Quote:ஆசிரியருக்கு

இந்தச் செய்தியில் தமிழீழ மாவீரர் நாள் முதன்முதலாக 1990ல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது மனத்திலுள்ள நினைவுப்படிமங்களின் பிரகாரம் இது 1989ல் ஆரம்பமானதாக எண்ணுகிறேன்.

இதுகுறித்துத் தங்களது ஆவணங்களில் சரிபார்த்துக்கொள்ளப்
பணிவுடன் வேண்டுகிறேன்;.

பணிவுடன் திருமகள்

<span style='color:red'>ஆனால் அந்தக் குறிப்பினை நான் அனுப்பிவைத்த பிற்பாடு மேற்படி செய்தியில் நிருபரது பெயர் , செய்தி இடப்பட்ட நேரம் ஆகியன மாற்றப்பட்டதைத் தவிர வேறெந்த மாற்றத்தையும் நான்
காணவில்லை

<img src='http://img516.imageshack.us/img516/2687/untitled25ix.th.png' border='0' alt='user posted image'>

[size=18]ஆக, ஒரு முக்கியமான- தமிழர்களது வாழ்வின் இன்றியமையாத ஒரு வரலாற்று நிகழ்வு தொடர்பான- விடயத்திற்கு இந்த இணையத்தளத்தினர் கொடுக்கும்[b]முன்னுரிமை</b> இவ்வளவுதானா?

நான் ஆசிரியருக்குக் குறிப்பினை அனுப்பி <b>ஏறத்தாள 08 மணித்தியாலங்களுக்கு மேலாகியும்</b>இதுகுறித்து கருத்தினைச் செலுத்த ஆசிரியருக்கு நேரம் போதவில்லையா??

நான் இதுவிடயமாகத் தேடிப் பெற்ற தகவல் வருமாறு,</span>

[quote]<b>'விடுதலைப் புலிகள்</b>
குரல் 18 <b>கார்த்திகை 1990

எமது இலட்சிய உறுதிக்கு உரமூட்டிய தியாகிகள்
மாவீரர்களைக் கௌரவித்து தலைவர் பிரபாகரன் அஞ்சலிச் செய்தி,

'நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள் என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்தபோதெல்லாம் எனது இதயம் வெடிக்கும், ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கிறது." இவ்வாறு தமிழீழத்தின் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் [b]இரண்டாவது மாவீரர் நாளையொட்டி </b>


இந்த எட்டுமணிநேரத்திற்குள் எனது மனப்பதிவிலிருந்த விடயத்தைத் தேடி ஆதாரத்துடன் உறுதிப்படுத்திக்கொண்டேனாயின், ஏன் அதனை இந்த இணையத்தள ஆசிரியரால் செய்யமுடியாது போய்விட்டது?

தமிழர் மத்தியில் மதிக்கப்படும் -பொறுப்புடன் செயற்படவேண்டிய -ஒரு ஊடகமே இவ்வாறு அசிரத்தையைக் காண்பித்தால் இதை 'ஆருக்குச் சொல்லி அழ?'

<b>வேதனையுடன் திருமகள்</b>

Print this item

  யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார்
Posted by: Vaanampaadi - 11-27-2005, 06:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>யுத்தத்தை உடன் ஆரம்பியுங்கள் களத்தில் நின்று போராடத் தயார்
பிரபாவின் பிறந்ததின வாழ்த்துச் செய்தியில் யாழ்.மக்கள் </b>

த. தனுஷன்

தமிழீழத் தேசியத் தலைவரின் 51ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குடாநாட்டின் பல்வேறு அமைப்புகளிடம் இருந்தும் வாழ்த் துச் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. குடா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் உடனடியாக விடுதலைக்கான இறுதி யுத்தத்தை ஆரம்பிக்குமாறும் களத்தில் நினறு போராட நாம் தயாராக இருக்கிறோம் எனவும் குடாநாட்டில் உள்ள பல அமைப்புகள் தமது வாழ்த்துச் செய்திகளில் தெரிவித்துள் ளன.

உங்களின் காலத்தில் விடுதலையை காணத்துடிக்கிறோம். பேரினவாதிகள் எவ் வாறு தீர்வை கொண்டுவருவார்கள்? நீங்கள் ஆணையிடுங்கள் நாங்கள் எதற்கும் தயார் என தமது வாழ்த்துச் செய்தியில் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

வீரகேசரி

Print this item

  இருவரது கைகளில் இலங்கையின் எதிர்காலம்
Posted by: Vaanampaadi - 11-27-2005, 06:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

வீரகேசரியின் ஆசிரியர் தலையங்கம் 27.11.2005

<b>இருவரது கைகளில் இலங்கையின் எதிர்காலம்</b>

நாட்டின் எதிர்காலம் குறித்து அக்கறை செலுத்துபவர்களும் சமாதானம் குறித்து எதிர்பார்ப்புகளுடன் இருப்பவர்களும் உட்பட இலங்கையின் அனைத்து சமூகங்களும் சர்வதேச சமூகமும் இருவரது உரையினை எதிர்­பார்த்து காத்திருந்தன. இவ் இருவரில் ஒருவர் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இரண்டாமவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.

இவ்விருவரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை குறித்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தபோதும் இறுதி நேரத்தில் இனவிவகார தீர்வு குறித்து தனது கடும் போக்கிலிருந்து யதார்த்தத்திற்கு இறங்குவாரென்ற எதிர்பார்ப்பு சமாதானம், தேசிய நலன் குறித்து சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ தனது மஹிந்த சிந்தனையில் இருந்து இம்மியளவும் விலகாத நிலையில் நாடாளுமன்றத்தில் புதிய அரசின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திச் சென்றுள்ளார்.

""ஐ.தே. முன்னணி அரசாங்கத்தின் சமாதான முயற்சி தோல்வி அடைவதற்கான காரணம் சமாதானப் பேச்சுவார்த்தையானது அரசாங்க கட்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையே ஆகும்.

இத்தகைய வெற்றியளிக்காத இருதரப்பு சமாதான முயற்சிக்குப் பதிலாக பிரச்சினையின் அனைத்து தரப்பினர்களாலும் திறந்த அடிப்படையில் பங்குபற்றக் கூடிய பேச்சுவார்த்தை செயற்பாடொன்று ஆரம்பிக்கப்படும்''என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

""இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்குமாறு திறந்த அடிப்படையிலும், நேர்மையாகவும்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிக்குஅழைப்பு விடுக்கப்படும்.

""சமாதான பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு சிறப்பு கவனம் செலுத்தப்படும். குறித்தவொரு காலகட்டத்திற்கு இணங்கியவாறு விரிவான உடன்பாடொன்றை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சமாதõனப் பேச்சுவார்த்தையானது திறந்த அடிப்படையிலும் ஒளிவு மறைவு இன்றியும் நடத்தப்படும்.

""இலங்கையின் சமாதானத்திற்காக ஒத்துழைப்பு வழங்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் ஏனைய மக்கள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் இலங்கையின் நட்பு நாடுகள் உட்பட சர்வதேச சமூகமும், அயல் நாடான இந்தியா உட்பட தெற்காசிய வலயத்திலுள்ள நாடுகளும் வழங்குகின்ற வசதிகள், இடையீடுகள் ஆகியவற்றை உரிய விதத்தில் ஒழுங்கு படுத்தி அந்த ஒத்துழைப்பின் பலத்தை சமாதான செயற்பாட்டிற்காக பெற்றுக் கொள்ளப்படும்.

""நாட்டின் அனைத்து இனங்களையும் பல்தரப்பு ஜனநாயகத்தின் சாதகமான பங்காளர்களாக அரசியல் அதிகாரத்தில் தொடர்புபடுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இலங்கையின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் ஒற்றையாட்சி கட்டமைப்பையும், மக்களின் தேசிய கூட்டமைப்பையும், மக்களின் தேசிய தனித்துவத்தையும் பேணுகின்ற விதத்திலான உயர்ந்த பட்ச அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் அமைப்பொன்று முன்மொழியப்படும்'' என நாடாளுமன்றில் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதுவரை சமாதான பேச்சுவார்த்தைகளில் இன விவகாரத்திற்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட ஐக்கிய இலங்கைக்குள்ளான சமஷ்டி ஆட்சி முறைக்கு சாவு மணி அடிப்பதை "மஹிந்த சிந்தனை' மாத்திரமல்ல நாடாளுமன்ற உரையும் தெளிவாக சுட்டி நிற்கின்றது.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதை இலங்கையின் வரலாறு திரும்ப திரும்ப உணர்த்தியுள்ளதுடன் அதற்காக இந்நாடு குருதியில் தோய்ந்த ஈரம் இன்றும் காயாமல் உள்ளதை யாவரும் அறிவர். அது மாத்திரமல்ல சொந்தங்களை பந்தங்களை இழந்தவர்களின் மரணவீட்டு சோகங்கள் இன்றும் முற்றாக மாறிவிட வில்லை. இந்நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் வரலாற்று படிப்பினைகளை குழிதோண்டிப் புதைத்து விட்டு மீண்டும் ஒற்றையாட்சி யுக இரும்பு கவசத்திற்குள் ஸ்ரீலங்காவை இறுக்கமாக நுழைத்து விட முயல்வதையே ஜனாதிபதியின் உரை உணர்த்தி நிற்கின்றது.

இலங்கை தற்பொழுது இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கின்றது என்பது யதார்த்தமாகும். இதற்கு முடிவுகண்டு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் மூவினங்களையும் இணைப்பதற்காக இணைப்பு பாலமாகவே சமஷ்டி ஆட்சிமுறை முன்வைக்கப்பட்டது. சமஷ்டி ஆட்சி முறை கருத்தென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்ந்த சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் மூளையில் உதித்ததாகும். இறுதியில் அதனையே அவர் பண்டாசெல்வா ஒப்பந்தத்தின் மூலம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார். அந்த தோல்வியில் எழுந்ததே தமிழ் தேசியத்தின் அஹிம்சைப் போராட்டமும் அதற்குப் பின்னர் பீறிட்டுக் கிளம்பிய ஆயுதப் போராட்டமும் ஆகும்.

இத்தகைய ஒரு வரலாற்றை திசை திருப்பி ஒற்றையாட்சிக்குள் தீர்வைக்காண முயலும் செயற்பாடும் தமிழ் பேசும் மக்களின் தாயகக் கோட்பாட்டை மறுதலிப்பதும், சுயநிர்ணய உரிமையை கேள்விக் குறியாக்குவதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதுமில்லை. அதேவேளையில் இதுவரை நடைபெற்று இடை நடுவில் நின்று போன சமாதானப் பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிக்காது சமாதானப் பேச்சுவார்த்தையை யதார்த்தத்திற்கு முரணான தளத்தில் இருந்து ஆரம்பிக்க நினைப்பதும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்திற்கும் சாவு மணி அடிப்பதையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களென எவரும் எதிர்பார்க்க முடியாது.

அந்த வகையில் மேற்படி கோஷங்களுடனான செயற்பாடுகள் தமிழ் பேசும் மக்களின் இனங்களை வென்றெடுக்கப் போவதுமில்லை என்பதை வரலாறு விரைவிலேயே உணர்த்தி நிற்கும்.

ஜனாதிபதியின் உரையும் செயற்பாடுகளும் இவ்வாறு அமைய நாடும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து காத்திருக்கும் இன்னொருவரது உரை இன்று இடம் பெறவுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்து அவர்களது உள்ளக்கிடக்கை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படையாக வெளிக் கொணர்ந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடந்த வருட மாவீரர் தின உரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

""இடைக்காலத் தீர்வு மின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைப்பட்டுக் கிடக்க முடியாது.அதேசமயம் பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங்கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி எதிர்கால சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்தும் வாழ முடியாது. பொறுமைக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் எல்லைக் கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.''

""எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை'' என கடந்தவருட மாவீரர் தின உரையில் குறிப்பிட்டிருந்தார் பிரபாகரன்.

இப்படி கூறி ஒருவருடம் கழிந்து விட்டது. ஆனால், தென்னிலங்கை அரசியல் வாதிகளின் மனப்போக்கில் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், அபிலõஷைகள் குறித்து கிஞ்சித்தும் கவனமெடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

தென்னிலங்கை அரசியல் சக்திகள் தொடர்ந்தும் தமக்குள் பிரிந்து நின்று மாறி மாறி ஆட்சிப் பீடமேறி தமிழ் மக்கள் மீது சவாரி செய்யவே விரும்புகின்றன. இது எத்தனை நாட்களுக்கு தொடரப் போகின்றது?

இதற்கான பதிலையும் தென்னிலங்கை அரசியல் சக்திகளே தீர்மானிக்க வேண்டும். அந்த தீர்மானத்திலேயே சுபிட்சம் நிறைந்த சமாதானம், அமைதி கொண்ட இலங்கையை எதிர்காலத்தில் காண முடியும்.மொத்தத்தில் இருவரது கைகளில் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.

வீரகேசரி

Print this item

  வாழ்த்துப்பாடல்
Posted by: hari - 11-27-2005, 06:11 AM - Forum: தமிழீழம் - Replies (4)

தமிழீழத்தேசியத் தலைவரின் பிறந்த நாளையொட்டி ரி.ரி.என் தமிழ் தொலைக்காட்சி இணையம் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலிசையாக காட்சிவடிவமைத்து வெளியிட்டுள்ளது. கடல் கடந்து வேற்றுமண்ணில் வாழும் இதயங்கள் தேசியத்தலைவரின் கனவுகளை வென்றெடுப்போம் என உள்ளத்தில் எழுந்த வரிகளை சிறார்கள் உணர்வுகளோடு எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல்.......

இங்கே அழுத்தவும்

Print this item

  தீபங்களே! தியாகங்களே!!
Posted by: hari - 11-27-2005, 04:28 AM - Forum: கவிதை/பாடல் - No Replies

<b>தீபங்களே! தியாகங்களே!!</b>
<img src='http://www.tamilcanadian.com/eelam/maaveerar/tmp/maveerar1.JPG' border='0' alt='user posted image'>

ஒளிவீசி நிற்கின்ற தீபங்களே -எங்கள்
உயிரோடு வாழ்கின்ற தியாகங்களே!
விழியெங்கும் நிறைகின்ற உருவங்களே! - எங்கள்
வேட்கைக்கும் வேள்விக்கும் கரு நீங்களே!

விதையாகி மண்ணிலே வீழ்ந்தபோதும் - நீங்கள்
விழுதாகி நிற்பதைக் காலம்சொல்லும்!
புதையுண்ட மரணங்கள் என்றபோதும் - எங்கள்
பொன்னுலகில் நீங்களே உதய கீதம்!

மலர்வளையம் உமக்குயாம் வைத்தபோதும் - எங்கள்
மனப்பொழிலில் வாடாத மலர்கள் நீங்கள்!
பல மெழுகு வர்த்திகள் எரிந்தபோதும் - எங்கள்
பரம்பரைக்(கு) அணையாத தீபம் நீங்கள்!

விலையற்ற உயிர்தந்த வள்ளல் நீங்கள் - உங்கள்
விழுப்புண்கள் எம்மவர்தம் கேடயங்கள்!
மலைமுட்டத் துயருற்று மருண்டபோதும் - எங்கள்
மனம்வருடும் ஆறுதல் வாசகங்கள்!

அடியெடுத்து வைக்கின்ற சுவடுதோறும் - எங்கள்
அன்பான தழுவல்கள் நீங்களன்றோ?...
நெடியதொரு விடுதலைப் பயணமெங்கும் - எங்கள்
நிரந்தரத் துணையாட்கள் நீங்களன்றோ?..

எண்ணிக்கை யில்லாத உயிர்களன்றோ? - எங்கள்
எண்ணத்தில் வேர்விட்ட பயிர்களன்றோ?...
மன்னிக்க இயலாத குற்றமன்றோ? - அந்த
மாற்றார்கள் கொய்த(து) எம் கொற்றமன்றோ?..

மழலையரும் மங்கையரும் மாசிலாரும் - அன்று
மறுகினார்: கருகினார்: மறப்பதுண்டோ?...
அழலோடு அழலாக அமரரானார் - அந்த
அருமந்த உறவுகள் இறப்பதுண்டோ?...

இறப்பொன்றும் இல்லாத எம் உறவுகாள்! - எங்கள்
இதயத்தில் தினந்தோறும் உம் நினைவுநாள்!
புறப்பட்டு வாருங்கள், எம்மோடுதான்! - தமிழர்ப்
புத்துலக வீதிகளில் நடைபோடத்தான்!....

தொ. சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)

Print this item

  மாவீரர் நாள் .
Posted by: Netfriend - 11-27-2005, 12:38 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<img src='http://www.eelavision.com/gallery/5001-8781.jpg' border='0' alt='user posted image'>
http://img479.imageshack.us/img479/6775/th...haliarbd7vi.jpg
உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.

Print this item