| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 1377 online users. » 0 Member(s) | 1375 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,959
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 9,906
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,448
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,234
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,511
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,510
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,216
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,657
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,915
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,160
|
|
|
| நன்றி ஓன்று சொல்ல |
|
Posted by: Paranee - 04-24-2003, 02:27 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (12)
|
 |
பூ விழுந்த மனசு கவிதை தொகுப்பிலிருந்து ஓரு கவிதை
அழகே
சுகமாய் நீ அங்கே
சுமையுடன் நான் இங்கே
அருகில் இருந்திருந்தும் நாம்
அகன்றே வாழந்திருந்தோம்
அதனால்தானோ இன்றுவரை
நாம் பிரிந்தே இருக்கின்றோம்.
என்னை பிடிக்கவில்லை உனக்கு
என் இதயம் பிடிக்கவி;ல்லை உனக்கு
என் கவிதை பிடிக்கின்றது
என் கனவுகள் பிடிக்கின்றது
ஏன் அவை உன்னை புகழ்வதாலா
கன்கள் காட்டிநின்றாய்
உன்தன் இதழ்கள் குவித்து வைத்தாய்
என் உள்ளம் கொள்ளைபோக
நான் கைகள் விரித்து நின்றேன்
அதனால்தானோ
நீ கவிதை கேட்கின்றாய்
என்தன் கனவைக்கேட்கின்றாய்
இளமை சோதிக்கின்றாய்
என்தன் நட்பை கேட்கின்றாய்
கள்ளமில்லா உன்தன்
சின்ன உள்ளத்தினூள் நானூம்
சில மணிநேரம் இருக்ககேட்டேன்
இல்லையில்லை என்று
நீயும் எட்டி உதைக்காத குறையாய் சொன்னாய்
நாணித்தலைகுனிந்தே நானூம்
வீதியெங்கும் அலைந்தேன்
சோகத்தீயில் உள்ளம்
தன்னை தேற்றிக்கொள்ள எண்ணி
வார்த்தை தடாகத்தினூள்
முக்குளித்துக்கொண்டது
உன் அருகில் நின்ற நாட்கள்
உன்னை அருகிவைத்த நாட்கள்
எனக்கு கவிதை தந்ததம்மா
நானூம் ஒரு கவிஞனாகிகொண்டேன்
விலாசமற்ற எனக்கு நீயும்
உலகை விலாசமாக்கி எனக்குள்
புதிய பரிணாமத்தை தோற்றுவித்துக்கொண்டாய்
நான் கனவில் கைகோர்த்து
நிஜத்தில் புன்னகைத்து
உள்ளத்தால் அழுதுகொள்கின்றேன்
நன்றி ஓன்று சொல்ல உனக்கு
என்னில் வார்த்தை ஓ;ன்றும் இல்லை
தமிழில் கடன்கேட்டும்
வார்த்தை போதுமாகிவிடவில்லை
உன் விழிகள் பார்த்த எனக்கு
வேற்று மொழிகள் அறியவில்லை
அதனால் பஞ்ச வாழ்வில்
நானூம் நொந்து சாகின்றேன்
|
|
|
| ஜேர்மனி செய்திகள் |
|
Posted by: Manithaasan - 04-21-2003, 11:08 PM - Forum: புலம்
- Replies (171)
|
 |
சென்ற19ம் திகதியேர்மனி
டூயிஸ்பேர்க்நகரத்தில்
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது
;
|
|
|
| புதிய பிரிவுகள் |
|
Posted by: Mohan - 04-16-2003, 06:22 PM - Forum: களம் பற்றி
- Replies (2)
|
 |
இங்கு குறிப்பிட்டுள்ள பிரிவுகள் தவிர வேறு பிரிவுகள் இணைக்கலாம் என்று நீங்கள் கருதினால் அதுபற்றி தெரிவியுங்கள். பொருத்தாமாக இருப்பின் அவைகளையும் இங்கு இணைக்கலாம்.
|
|
|
| விசப்பாம்பு |
|
Posted by: Guest - 04-15-2003, 07:21 AM - Forum: நகைச்சுவை
- Replies (1)
|
 |
ஒருவருக்கு பாம்பு கடித்து 2 நாட்கள் தாமதித்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்தார்களாம்.பாம்பு கடி வாங்கியவரும் சற்று உற்சாகமாகவே பேசிக்கnhண்டே வந்தவராம்.
வைத்தியர் காயத்தை பார்த்துவிட்டு சொன்னாராம்.
ஐயோ உது நாகமெல்லோ கடிச்சிருக்கு.எவ்வாறு இப்படியிருக்கிறீர்கள் என்று திகைக்க வைத்தியரின் சொல்லைக்கேட்டு அதுவரை உற்சாகமாகவிருந்த நோயாளி மயங்கி இறந்துபோனார்.
நாகம் கடித்தவர் அதுவரை எவ்வாறு உயிருடனிருந்தார் என்பது பலருக்கு ஆச்சரியமாகவிருந்தது.
பலருக்கு தெரியாத விடயம் நாகம் கடித்தபொது அதைக்கண்ட ஒரு வழிப்போக்கன் உது சும்மா சாரைப்பாம்பு ஒன்றும் செய்யாது என்று சொன்ன ஒரு சொல்லே.
|
|
|
| இது ஒரு புது முயற்சி |
|
Posted by: Mohan - 04-14-2003, 04:02 PM - Forum: அறிமுகம்
- Replies (124)
|
 |
நன்றி, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் இரண்டுவிதமான எழுதும் முறைகள் இங்கு இணைக்கப்பட்டுள்னதென. இங்குவரும் பலரும் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுவதையே அடிப்படையாகக் கொண்டபடியால் பாமினியில் இருந்து யுனிகோட்டுக்கு மாறும்படி default செய்திருந்தேன். நீங்கள் ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவராக இருப்பின் profile ற்குச் சென்று english2unicode என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
நீங்கள் தந்த முகவரி எழுத எழுத மாறும் முறை நன்றாக உள்ளது. ஆனால் உங்கள் முறையில் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால் எழுதுவது சிரமமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
சில மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. பதிந்தவர்கள் உங்கள் நாட்டு மொழியினைத் தேவைப்படின் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
|
|
|
| புதிய தளம் பற்றிய விளக்கங்கள் |
|
Posted by: Mohan - 04-14-2003, 09:02 AM - Forum: களம் பற்றி
- Replies (58)
|
 |
இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும்.
சில அறிவித்தல்கள்
இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.
வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.
தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும்.
நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும்.
பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள்
உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும்.
|
|
|
|