| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 568 online users. » 0 Member(s) | 565 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,000
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,024
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,494
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,521
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,717
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,250
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,866
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,929
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,184
|
|
|
| அன்னையர் தினம் |
|
Posted by: Manithaasan - 05-07-2003, 04:47 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (1)
|
 |
அன்னையர் தினம்
கருவில் உருவான காலமுதல் காதலித்து
உருவமொடு உணர்வு தந்தென்னை
உலகிற் பிறப்பித்த அம்மா!
விருப்போடு பாலூட்டித் தாலாட்டி
தெருப் புழுதி நானாடி வந்தாலும்
அருவருப்பின்றி
வாவெந்தன் செல்லத் திரவியமே யென்றணைத்து
அமுதூட்டிச் சீராட்டியெனை வளர்த தாயே...
நீயறியாக் கல்வியெலாம் நான்கற்க வேண்டுமென
பள்ளிசெல்ல எனைப் பணித்த பாரதியே..
கல்வியொடு கலையார்வம் கொண்ட என்மனமறிந்து
தடையேதுமின்றி வழிவிட்ட அம்மா..
வாலிபத்தின் வாயிலுக்கு நான்வந்த வேளையிலே
படிப்பித்தே னென்றெனக்கு விலையேதும் வைக்காமல்
மிடியேதுமின்றி நீயாய் உன்துணையைத் தேடென்று
வரமளித்த தாயே..
புலம்பெயர்ந்து வந்தாலும்..
நாலுபேர் மெச்சும் வாழ்வு
மணியான தெய்வம் அம்மா
நீ தந்த வாழ்வுதானே!
அம்மாவுன் மலர்ப்பாதம் என்றுமென்; மனதிருக்கும்
இம்மாநிலத்தில் நான் வாழும் காலமெலாம்..அம்மா
எனக்கென்றும் அன்னையர் தினம் தாயே!
|
|
|
| நடமாடும் கணணி |
|
Posted by: Kanani - 05-04-2003, 04:43 PM - Forum: நகைச்சுவை
- Replies (6)
|
 |
நடமாடும் கணணி
கையில் எடுத்துச்செல்லக்கூடிய கணணி விற்பனைக்குண்டு
வெறும் 2 500 ரூபா மட்டுமே
தொடர்பு மேகண்ணா :wink:
|
|
|
| ஒரு பார்வை |
|
Posted by: Manithaasan - 04-29-2003, 09:35 PM - Forum: புலம்
- Replies (18)
|
 |
ஒரு பார்வை
பாரிஸ் குளோபல் தமிழ் விஷனின ; முதலாவது தயாரிப்பான
நேயாலயாவின் ஒரு பார்வை
மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது
பாரிஸ் நிரூ (நிர்மலன்) இசையமைத்த இனிய மெட்டுக்கு கவிஞர்கள் நிரஞ்சனா மங்களேஸ் எழுதியவரிகளை தென்னிந்தியப்பாடகர்கள்
உன்னி கிருஸ்ணனூம் சுஜாதாவும் பாடியுள்ளார்கள்
ஒளிப்பதிவை சுகந்தனூம் படத்தொகுப்பை சுதாகரும் நேர்த்தியாக கையாள பின்னணி இசையை தமிழ்ச்செல்வன் அமைத்துள்ளார்
கலைஞர் பரா கதை வசனமெழுதி இயக்கியுள்ள ஒருபார்வையில் பாரிஸ் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
புலம்பெயர் தமிழரின் திரைப்பட முயற்சியில் திருப்புமுனையாக ஒருபார்வை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|
|
| கணனிப்பிரச்சினைகள் |
|
Posted by: Selan - 04-26-2003, 08:07 PM - Forum: கணினி
- Replies (85)
|
 |
அன்றாடம் எமது கணனியில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கு நீங்கள் எவ்வாறு தீர்வு கண்டீர்கள் என்பது பற்றி பரிமாறிக்கொள்வோமா?
எனக்கு நடந்த சம்பவங்களை நான் கூறிக்கொள்கிறேன் அதே போல் மற்றவர்களும் கூறமுன்வாருங்கள்.
அதே போல் எனக்கு ஏற்படும் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கும் உங்கள் உதவிகள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன்.
அதற்கான உதவியை எங்கள் கணனி விற்பனர்களான கணனிப்பித்தன் இளைஞன் போன்றவர்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்விர்பட்டால் சிரிப்பீர்கள் எனது கணனி அனூபவ ஆரம்பகாலத்தில் வைரஸ் என்றால் என்னவென்று புரியாது இருந்தேன்.
உயிரினங்களைத்தாங்கும் நூண்கிருமியா இது? அப்படி இருக்க சந்தர்ப்பம் இருக்காது இது எல்லாம் கட்டுக்தை என்று நினைத்தேன். சிலருடன் வாக்குவாதம் கூட நடத்தினேன் பின்பு அதுபற்றி புத்தகங்களை படித்து படிப்படியாக அறிந்து கொண்டேன்.
இப்படி பல சொல்லலாம் மற்றவர்களுக்கும் பயன்படும் விதத்தில் அதை பின்பு எழுதுகிறேன்.
மற்றவர்களும் தங்கள் அனூபவங்களை கூறுங்கள்
|
|
|
| மிகப்பெரிய File களை எவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்புவது |
|
Posted by: Mohan - 04-26-2003, 10:13 AM - Forum: இணையம்
- Replies (13)
|
 |
பரீட்சார்த்தமாக இது இங்கு தரப்படுகின்றது.
சமீபத்தில் நண்பர் ஒருவர் பெரிய fileகளை எவ்வாறு அனூப்பலாம் என்று என்னிடம் விளக்கம் கேட்டார்.
யாழ் இணைய வாசகர்களுக்கும் இது பயன்படும் என்ற காரணத்தினால் இங்கு அதனைத் தருகின்றேன்.
இதற்கு பலவழிகள் இருக்கின்றன. நான் எனக்கு தெரிந்த வழிமுறைகள் சிலவற்றினை இங்கு குறிப்பிடுகின்றேன். இதுபற்றி மேலும் விபரம் தெரிந்தவர்கள் இங்கு விளக்குங்கள்.
சாதாரணமாக மின்னஞ்சல் மூலம் 2ல் இருந்து 10 MB வரையான Fileகளையே அனூப்பமுடியும். இது இணைய வழங்குநரிற்கிடையே வித்தியாசமான அளவாக இருக்கின்றது. குறிப்பிட்ட அளவினை மீறிய அளவில் fileகளை அனூப்ப முடியாது. சிலவேளைகளில் பெரிய file களை அனூப்புவதற்கு உங்கள் இணைய வழங்குநரோ அல்லது பெரிய fileகளைப் பெறுவதற்கு பெறுபவரின் இணைய வழங்குநரோ அனூமதி மறுக்கலாம்.
இங்கு நண்பரின் பிரச்சையை எடுத்துக் கொள்கின்றேன். அவர் 4 MB file இனை மட்டும் ஒரே தடவையில் அனூப்பலாம். ஆனால் அவரிடம் இருந்த ஒரு படம் சுமார் 25 MB அளவினைக் கொண்டது. இந்த file இனை winrar என்னூம் program பாவித்து 4 MB யிற்கு மேற்படாதவாறு பல file களாக செய்யும்படி கூறினேன்.
படம் 1 அளவு
படம் 2 winrar என்ற program இனை install செய்தபின் குறிப்பிட்ட படத்தின் மீது mouse இனால் right click செய்யும் போது பார்க்கக்கூடியது
படம் 3 படத்தின் அளவினை எழுதுங்கள். இங்கு 4 000 000 என்று குறிப்பிட்டுள்ளது 4 MB ஆகும். தேவைப்படும் அளவினை எழுதிக் கொள்ளலாம்.
அத்துடன் SFX என்பதில் click செய்துவிடுங்கள். இதன் மூலம் பெறுபவர் winrar என்ற program இல்லாமலே இந்த file களைத் திறந்து பார்க்கக்கூடியதாக இருக்கும்.
படம் 4 நீங்கள் Ok என்பதில் அழுத்தியபின் வருவது.
படம் 5 25 MB file 7 ஆகப்பிரிக்கப்பட்டுள்ளது. இனி இதனை நீங்கள் தேவைப்படுவோருக்கு ஒவ்வொன்றாக அனூப்பலாம். பெறுபவர் அனைத்தினையும் பெற்றுக்கொண்டபின்னர் இதனைத் திறந்து ஒரு file லாக மாற்றிக் கொள்ளலாம்.
இது தனிய ஒரு file இனை அனூப்புவதற்கு மட்டுமல்ல, ஏராளமாக fileகனை இந்த pசழபசயஅ பாவித்து இலகுவாக அனூப்பலாம்.
வேறு முறைகளும் இருக்கின்றன. பின்னர் அதுபற்றி எழுதுகின்றேன்.
|
|
|
|