| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 776 online users. » 0 Member(s) | 772 Guest(s) Applebot, Bing, Google, Yandex
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,992
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,018
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,487
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,245
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,517
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,688
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,245
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,844
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,174
|
|
|
| THIRUVASAKAM IN SYMPHONY-MAESTRO ILAIYARAAJA -Tamilnet |
|
Posted by: Paranee - 06-17-2003, 01:15 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (12)
|
 |
இணையத்தில் சிக்கியது
நன்றி. தமிழ்நெற்
ஆங்கிலத்தில் இருக்கின்றது. மன்னித்துக்கொள்ளுங்கள்.
http://www.geocities.com/thiruvasakam_in_s...n_symphony.html
Those who know values of indian classical music and thiruvasakam will certainly go mad after reading this above website.
This is the first time a full fledged Indian classical music is being written in western standard classical notation format. This is not a fusion
music. Thiruvasakam, a divine Tamil literatute of south India is a great evidence for future humans to belive how civilized we are today. Its english
version was written by Rev. G.U Pope,Rome before a century. This symphony is going to be performed in 4 languages viz Tamil, English,
German and Hindiin October 2003 at Rome, Italy by a grand, Combined, Indian and Hungarian Orchestra.Please see the above website. There
is a plan to host the symphony apart from the plan of just sticking to rome,berlin and london but for that finance is a big weakness as the budjet
is fit for just 3 symphony concerts. Please convey this good message to the hindu soceity's in USA and some generous minds may contribute
to the project. .
SabarI
|
|
|
| மாற்று |
|
Posted by: sethu - 06-17-2003, 12:48 PM - Forum: குறும்படங்கள்
- Replies (77)
|
 |
மாற்று என்ற பதிய குறும்படம் ஒன்று மிகவிரைவில் வர இருப்பதாக அறிகின்றேன். ஈழத்தமிழர்களின் புதிய படைப்பாம் தகவல் தெரிந்தவர்கள் அறியத் தரவும்
|
|
|
| படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? |
|
Posted by: mathe - 06-16-2003, 09:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (194)
|
 |
ஜடிஸசெய்தி
"யாழ் நகர மையப்பகுதிக்குள் வைத்து 14-6-03 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் பொறுப்பாளர் சுபத்திரன் அல்லது ரொபேட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்". ஜஃடிஸ
ஜஉழடழசசிறீசநனஸ...... இத்திய இராணுவமும் கூலிகளும் கோரத்தாண்டவமாடிய எண்பத்தெட்டாம் ஆண்டு காலப்பகுதிக்குள் ..... எனது நினைவுகளை எனது ஊரில் நடைபெற்ற மனதை விட்டகலாத சம்பவத்தோடு ........
எனது ஊரான நெல்லியடியில் கடைகளெல்லாம் உள்ளடக்கிய சந்திப்பகுதியில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து முகாமிட்டிருந்து பலபடு பாதகச்செயல்களை வடமராட்சிப் பகுதிகளில் செய்துகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவன் தான் இந்த சுபத்திரன் எனூம் அரக்கன்.
அன்றொரு நாள் ... வடக்கு கிழக்கு முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் எனூம் அரக்கன் நெல்லியடிப் பகுதிக்கு வருவதாகவும் அதையொட்டி பொதுக்கூட்டம் என்ற பெயரில் இந்தத்க்கும்பலினால் இராணுவ முகாமினூள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டு ஊரிலுள்ள அரச ஊழியர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டுமென உத்தரவும் இடப்பட்டிருந்தது. ஆனான் அப்பொதுக்கூட்டத்துக்கு சகலதரப்பாலும் புறக்கணிக்கப்பட்டு பகிஸ்கரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அரக்கனோ தனது கூலிகளுக்கு.....
....... மறு நாள் காலை சந்தையும் கடைப்பகுதிகளும் வியாபாரத்திற்காக களைகட்டத்தொடங்கிய நேரம் ....... இந்த சுபத்திரனூம் சில கூலிகளும் கடைவீதிக்கு கைகளில் ஆயுதங்களுடன் வருகின்றார்கள். ஏற்கனவே திட்டமிட்டமாதிரி சில பெரிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவர்களினால் அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் மூன்று வர்த்தகர்களே இவர்களின் கையில் ......... அம்மூவரையும் யாழ் நகரை நோக்கி பருத்துறை வீதியில் கூட்டிவரப்பட்டு (எனது வீட்டைக்கடந்து 15 யார் தூரத்தில் எங்களது கண்களுக்கு முன்னாலேயே) அவர்களது வாயினூள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தக் கோரச் சம்பவத்தில் "திருமகள் சிவசோதி. சுப்பிரமணியம். கோப்பிராசம் எனூம் பிரபல வர்த்தகர்களே கொல்லப்பட்டவர்களாவார்கள்....ஜஃஉழடழசஸ
1. இந்த வர்த்தகர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் :?:
2. இரத்த வெறிபிடித்த ஈவிரக்கமற்ற கூலிகளின் இச்செயலுக்கு யாராவது நியாயம் கற்;பிப்பார்களா :?: ..............
கடவுளே இப்படி எத்தனை எத்தனை அவலங்கள் இந்திய இராணுவமும் அதனூடன் சேர்ந்து இயங்கிய இக்கூலிகளும் எம்மக்களுக்குப் புரிந்தார்கள்.
ஜஉழடழசசிறீனயசமசநனஸஇந்த பாதக செயல்களையெல்லாம் செய்த ஈனர்களில் ஒருவரான சுபத்திரன் எனூம் அரக்கன் சுட்டுக்கொல்லப் பட்டதானது படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? ஜஃஉழடழசஸ
|
|
|
| புதிய களம் |
|
Posted by: yarlmohan - 06-15-2003, 09:51 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (6)
|
 |
அனைவருக்கும் வணக்கம்,
நீண்ட கடும் முயற்சியின் பின்னர் இப்புதிய யுனிகோட் எழுத்துருவிலமைந்த கருத்துக்களத்தினைத் திறந்துள்ளோம்.
தொடர்ச்சியாக நாம் எடுத்து வந்த முயற்சிகள் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும், யாழின் கடின உழைப்புத்தான் இக்கருத்துக்களத்தினை மிக விரைவாக உங்கள் முன் கொண்டு வர உதவியது. எனினும் உங்களில் பலரின் ஒத்துழைப்பு கூடியவரை பிழைகளைத் தவிர்த்து இதனைக் கொண்டுவர உதவியது. இன்னும் இதனைச்சிறப்பாக செய்ய முடியும் என்றாலும் நேரம் ஒரு பிரச்சனையாக அமைவதால் பலதினையும் தவிர்க்க வேண்டியுள்ளது.
புதிய கருத்துக்களத்தில் ஓர் ஒழுங்கு முறையையும், இறுக்கமான போக்கினையும் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளேன்.
இதன்படி
- தலைப்புக்களுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் முற்றாக நீக்கப்படும்.
- அத்துடன் கருத்துப்பிரிவுகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்கள் பொருத்தமான பிரிவுகளுக்கு இடம்மாற்றப்படும்.
- நிபந்தனைகளை மீறும் கருத்துக்கள் கூடியவரை, மிகவிரைவாக மாற்றியமைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.
இது வரை காலமும் கருத்துக்களத்தில் உதவிக்கு "யாழ்" அவர்களையும் இணைத்து கருத்துக்களத்தினை நிர்வாகித்து வந்திருந்தேன். இப்புதிய களத்தில் நான், யாழ் ஆகியோர் பொறுப்பாளர் நிலையினையும் மேலும் உதவிக்கு பரணீ, இளங்கோ ஆகியோரையும் இணைத்துள்ளேன். இதில் பரணீ, இளங்கோ ஆகியோரின் செயற்பாடுகள் பின்வருமாறு அமையும்
- தேவைப்படும் கருத்துக்களை அதன் அர்த்தம் கெடாத வகையில் மாற்றியமைப்பார்கள். (கள நிபந்தனைகளை மீறி வரும்பேதே இதனைச் செய்வார்கள்)
- தேவைப்படும் கருத்துக்களை இடம் மாற்றி விடுவார்கள். (பிரிவுகளுக்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பொருத்தமான பிரிவுகளுக்கு இடம்மாற்றி விடுவார்கள்)
- அவ்வப்பிரிவுகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் செய்வார்கள் (உதாரணமாக எழுதியவர் கேட்கும் பட்சத்தில் எழுத்துப்பிழைகளை மாற்றிவிடுதல் போன்ற செயற்பாடுகள்)
ஆகையினால் நிபந்தனைகளுக்கு அமைய எழுதுவதுடன், கூடியவரை பிழைகளைத் தவிர்த்து எமக்கு ஒத்துழைப்பு தருவதுடன், தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான நல்ல பயன்தரு கருத்துக்களை இக்களம் ஊடாக வழங்கி அறிவினை வளர்க்க, சந்தேகங்களை தீர்க்க, தகவல்களை தெரியப்படுத்த, இலைமறைகாய்களாக இருப்பவர்களை வெளிக்கொணர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
நட்புடன்
மோகன்
|
|
|
| Moderator என்பதற்கான தகுதி என்ன? |
|
Posted by: yarlmohan - 06-15-2003, 09:49 PM - Forum: களம் பற்றி
- Replies (3)
|
 |
எனக்கு உதவி தேவையாக இருந்தது. இவ்வாறு Moderator இணைத்துக் கொண்டால் எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும் என்பதால் நீண்டகாலமாக இதைப்பற்றி யோசித்துக் கொண்டு வந்தேன். பரணீ, இளங்கோ ஆகியோருடன் நட்பு ரீதியாக
தொடர்புகள் இருந்தமையால் இவர்கள் எனக்கு உதவிசெய்வார்கள் அந்தத் திறன் அவர்களிடம் உண்டு என்று அறிந்து அவர்களை இணைத்துக்கொண்டேன். மேலும் இங்கு கருத்துக்களத்தில் இருந்து ஒரு சிலரை Moderator ஆக
இணைத்துவிடுவோம் என்று யோசித்திருந்தாலும் அது சிலர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று தற்போது தவிர்த்துள்ளேன். வருங்காலத்தில் இங்கு கருத்தாடுபவர்கள்கூட Moderator ஆக வரலாம். அதுபற்றி பின்னர் ஒரு சந்தரப்பத்தில் கதைக்கலாம்.
|
|
|
| களம்பற்றிய சில கருத்துக்கள். |
|
Posted by: yarlmohan - 06-15-2003, 09:47 PM - Forum: களம் பற்றி
- Replies (79)
|
 |
இங்கு 3 விதமான Templeteகள் இணைக்கப்பட்டுள்ளன. பாமுனி பாவிக்கும் ஒருவர் எதுவித மாற்றங்களையும் செய்யாது கருத்துக்களை எழுதலாம். இதுவே மிகவும், இலகுவான வழிமுறை என்று நான் கருதுகின்றேன். ஆகையில் கூடியவரை பாமுனியினைப் பாவிக்க முயற்சியுங்கள். அடுத்ததாக Bamini2unicode என்றொரு template உள்ளது. பாமுனி பாவிக்காதவர்கள், பாமினி போன்ற எழுத்துருக்களில் எழுதி பரீட்சயம் உள்ளவர்கள் இதனை profile என்பதில் சென்று மாற்றிவிட்டு எழுதலாம். இங்கு எழுதுவதற்கு இரண்டு பெட்டிகள் உள்ளன. வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் எழுதும்போது இடதுபக்க பெட்டியில் உடனுக்குடன் யுனிகோட் எழுத்துரு அமைப்புக்கு மாறுவதைக் காணலாம். இதனைப் பாவிப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஒரு சிறு தவறு நீங்கள் எழுதிய கருத்தினை முற்றாக இல்லாது செய்துவிடும். அதாவது நீங்கள் வலது பக்கத்தில் உள்ளபெட்டியில் எதாவது எழுதிவிட்டு பின்னர் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் ஒரு மாற்றத்தைச் செய்துவிட்டு மீண்டும் வலது பக்க பெட்டியில் எதாவது எழுதினால் இடது பக்கத்தில் உள்ள பெட்டியில் நீங்கள் செய்த மாற்றம் இல்லாது போய்விடும். அடுத்து இவ்வாறு Bamini2unicode பாவிப்பவர்கள் தலையங்கங்களை எழுதுவதற்கும் வலது பக்க பெட்டியில் எழுதியபின்னர் இடது பக்கப்பெட்டியில் மாறியுள்ளதை copy செய்து தலையங்கத்திற்குரிய இடத்தில் paste செய்தல் வேண்டும்.
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதுபவர்கள் English2unicode எனும் template இனைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே Bamini2unicode ற்கு குறிப்பிட்ட விளக்கம் இதற்கும் பொருந்தும் என்பதால் அதனைப் பார்க்கவும்.
|
|
|
|