![]() |
|
அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலி உறுப்பினர்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலி உறுப்பினர்கள்... (/showthread.php?tid=2269) |
அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலி உறுப்பினர்கள்... - selvanNL - 11-26-2005 [size=18]<b>அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலிகள் கடத்தப்பட்டு வெட்டிக் கொலை</b> <b>அரச தரப்பு அரசியல்வாதியின் ஆயுதக் குழு மீது சந்தேகம்</b> <b>அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சென்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான லெப். கேணல் சுரேஸும் மற்றொருவரும், கடத்தப்பட்டு பின் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை, ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும் கத்திவெட்டுக் காயங்களுடனும் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட முன்னர் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுமுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை மாலை அக்கரைப்பற்றில் முஸ்லிம்களைச் சந்திப்பதற்காகவும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் புலிகளின் அரசியல் துறை உறுப்பினர்களான இவ் இருவரும் அக்கரைப்பற்றுக்கு சென்றுள்ளனர். எனினும் மாலை 4 மணிக்குப் பின்னர் இவர்கள் காணாமற் போயுள்ளனர். இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றும் அது சாத்தியப்படாது போய்விட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டின் இரு புறங்களிலும் இருவரது உடல்களும் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஒருவரது சடலம் கழுத்தில் சுருக்கிடப்பட்டும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயமும் உடலின் பல பகுதிகளிலும் கத்திவெட்டுக்காயங்களும் காணப்பட்டன. மற்றையவரது உடலில் கத்திவெட்டுக் காயங்களும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டதுடன் கைகள் இரண்டும் பின் புறம் கட்டப்பட்டிருந்தன. இருவரும் கொல்லப்பட முன்னர் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உடல்களில் தென்பட்டதாக அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் பற்றி புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறுகையில், முஸ்லிம் பகுதிக்கு அவர்களைச் சந்திக்கச் சென்ற இருவரும் மாலை 4 மணிவரை எம்முடன் தொடர்பிலிருந்தனர். அதன் பின்னர் இவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அரச தரப்பு அரசியல் வாதியொருவரின் ஆயுதக் குழுவே இவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளதாகக் கருதுகின்றோம். தமிழ் - முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவரும் அந்த அரசியல் வாதியே இதனுடன் தொடர்புடையவரெனக் கருதுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, கொலை செய்யப்பட்ட லெப்.கேணல் சுரேஷ் ( 26 வயது - வாழைச்சேனை), லெப்.வெள்ளை (22 வயது - விநாயகபுரம், திருக்கோவில்) ஆகியோரது உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினால் மட்டுமே ஒப்படைக்க முடியுமென அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறிவிட்டது. பாதுகாப்பு காரணங்களால் அவர்களால் அங்கு வர முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் அதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுக்கவே, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இதில் தலையிட்டன. எனினும் அவர்களது வேண்டுகோள்களும் ஏற்கப்படவில்லை. இறுதியில் கண்காணிப்புக் குழுவுடன் வந்த போராளிகள் உடல்களை அடையாளம் காட்டிய பின்பே உடல்கள் ஒப்படைக்கப்படன. இருவரது உடல்களும் பின்னர் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.</b> http://www.thinakural.com/New%20web%20site...Important-3.htm வீரச்சாவடைந்த விடுதலைபுலி உறுப்பினர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. - மேகநாதன் - 11-26-2005 செல்வன், என்னங்க நடக்குது..... செய்திப் பகிர்வுகளில் "அவதானம்" தேவை... உங்கள் நல்லெண்ணம்,மதிக்கத்தக்கதுதான்... என்றாலும் இச் செய்தி (குறித்த மாவீரர்களின் வீரச்சாவு)பழைய செய்தி...... "அமைதி"க் காலத்தில் இழப்புக்கள் துயரமானவையே..... - Sriramanan - 11-26-2005 மேகநாதன் தவறு செல்வனிடம் மட்டுமல்ல, தினக்குரல் இணையத்திலும் தான். அவர்கள்தான் பழைய செய்தியை அப்படியோ இன்றும் போட்டுள்ளனர். அதனைப் சரியாகப் படித்துப் பார்க்காது விட்டது மட்டுமே செல்வனின் பிழை. - selvanNL - 11-26-2005 தினக்குரலில் வந்த செய்தியை நான் பார்த்து அது பழைய செய்தி தான் என நினைத்து திகதியை பார்த்த பொழுது இன்றைய செய்தித்தாள் என அறிந்தேன்,அப்போதும் எனக்கு சந்தேகம் வந்து செய்தியை இரண்டு 3 முறை வாசித்தேன், 3 நாட்களுக்கு முன்னம் வந்த செய்தியில் தமிழ் தேசத்துரோக கும்பலால் காட்டிக்கொடுக்கப்பட்டு இலங்கை புலனாய்வு குழுவால் அரிசி ஆலை ஒன்றினில் வைத்து கொலைசெய்யப்பட்டதாக செய்தி வந்தது, அதனால் தான் சரியாக புரிந்து கொள்ளாமல் பிரசுரித்துவிட்டேன்,,, இதை சுட்டிக்காட்டிய மேக நாதன், சிறீரமணனுக்கு நன்றிகள், மட்டுறுத்தினர்களுக்கு ஒரு வேண்டுகோள், இச்செய்தியை பழைய செய்தியுடன் இனைத்துவிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்,
- மேகநாதன் - 11-26-2005 சிறி ரமணன், செல்வனில் பிழை பிடிக்க நான் கருத்து இடவில்லை... "ஊகச் செய்திகள்" பரவும் அவலத்தையே சுட்டினேன்..... செல்வன் உள்ளிட்ட பலரும் பயனுடைய செய்திகள் பலவற்றைப் பகிர்வதைப் பார்த்திருக்கிறேன்: பாராட்டியும் இருக்கிறேன்.... |