புதிய பதிவுகள்

Published By: DIGITAL DESK 210 JUN, 2025 | 06:44 PMimage(இராஜதுரை ஹஷான்)சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை.சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு
10 JUN, 2025 | 05:49 PMimageகடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை புதன்கிழமை (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக, காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்,
Published By: DIGITAL DESK 210 JUN, 2025 | 01:39 PMimageமன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் புதன் கிழமை (11) மன்னாரில் இடம் பெற உள்ள கவனயீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை
Published By: DIGITAL DESK 210 JUN, 2025 | 06:44 PMimage(இராஜதுரை ஹஷான்)சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை.சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது.வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/217113
டிரம்ப் - மஸ்க் மோதல்: மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்துபுளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்பட மூலாதாரம்,NASA/JOHNS HOPKINSபடக்குறிப்பு, புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்கட்டுரை தகவல்எழுதியவர், பல்லப் கோஷ்பதவி, அறிவியல் செய்தியாளர்2 மணி நேரங்களுக்கு முன்னர்டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது.நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன.ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடனான அரசு ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.சர்வதேச
முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுகபட மூலாதாரம்,GETTY IMAGESகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்15 நிமிடங்களுக்கு முன்னர்மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார்
நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025பதிவேற்றுனர்: திரு வேந்தனார்திகதி: 04 Jun, 2025breakingயேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி    அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025https://www.thaarakam.com/news/436c2aba-f27e-4714-9bee-63bdd7be0a6f
டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!June 9, 2025டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!— கருணாகரன் —இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத  அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்டுள்ள குணாம்ச மாற்றங்கள் என்ன? எவ்வளவு தூரத்துக்குப் படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.NPP யை ஆதரித்தால் அல்லது அதனுடன் அரசியல் ரீதியான உடன்பாடுகள் எதையாவது வைத்துக் கொண்டால், அது ஏனைய தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளைப் போலன்றி, அப்படியே தம்மை உள்வாங்கி விழுங்கி விடும், பிராந்திய
சூப்பர்பக்ஸ், பாக்டீரியாக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிபட மூலாதாரம்,GSTTகட்டுரை தகவல்எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்பதவி, மருத்துவம் மற்றும் அறிவியல் செய்தியாளர்8 ஜூன் 2025ஆபத்தான சூப்பர்பக்ஸ் தொற்றுகளை அழிக்க, உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட மலம் கொண்ட "poo pills" பயன்படுத்த பிரிட்டன் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.இந்த மாத்திரையில் பயன்படுத்தப்படும் மல மாதிரிகள் ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன. அவற்றில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பியுள்ளன.இதன் மூலம் குடலில் இருக்கும் சூப்பர்பக்ஸை வெளியேற்றிவிட்டு, அதற்கு பதில் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் கவலையை ஏற்படுத்த முடியும் என மருத்துவ பரிசோதனையின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன.ஆன்டிபயாடிக்கை மீறி செயல்படும் பாக்டீரியா தொற்றுகள் சூப்பர்பக்ஸ் என அழைக்கப்படுகிறது. சூப்பர்பக்ஸ்களால் ஆண்டுதோறும் பத்து லட்சம் மக்கள் உயிரிழப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தத் தொற்றுகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறை இது என்றே சொல்லலாம்.
Muthukrishnan Viswanaath 505264207_24114036841525017_138466397756பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !!கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்... எல்லை மீறிய பாலகிருஷ்ணன் !இனியும் பொறுத்துப் போதல் கூடாது !-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ். ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும்,
எழுத்தாளர் கருணாரன் 'NPP புரியாத புதிர் புரிந்தும் புரியாத பதில்' என்றொரு முகநூற் பதிவிட்டிருக்கின்றார். அதில் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார்.1. NPP மீது தமிழ்க் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. சிங்களக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. முஸ்லிம், மலையகக் கட்சிகளும் கடுப்பாக உள்ளன. இப்படி எல்லாத் தரப்புகளும் கடுப்பாக இருக்கும் அளவுக்கு உண்மையிலேயே NPP தீய சக்தியா? 2. அப்படித் தீய சக்தியான NPP யை மக்கள் எப்படி – எதற்காக ஆதரித்தனர்? 3. NPP யின் ஆதரவாளர்கள் இதைக்குறித்தெல்லாம் இன்னும் பேசாதிருப்பது ஏன்? 4. இதுவரையில் இனவாதம் பேசியவர்களை விடவும் இதுவரையில் இனவாதத்தை முன்னெடுத்த கட்சிகளை விடவும் NPP யினரிடம் இனவாதம் மேலோங்கி உள்ளதா? 5. NPP ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மக்களுக்கு ஆதரவானவை அதிகமா? எதிரானவை அதிகமா? 6. NPP செய்யத் தவறிய, தாமதித்த விடயங்கள் இருக்கலாம். ஆனால், அது செய்த (மேற்கொண்ட) விடயங்களில் பாரதூரமான எதிர்விளைவுகள் எவை? 7. ஊழல் குற்றச்சாட்டுகளோடு தொடர்புபட்டதாகச் சொல்லப்படும் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகளில் 10 பேர் வரையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்த மக்கள் அபிப்பிராயம் என்ன? அரசியற் தரப்புகளின் நிலைப்பாடு என்ன? 8. “NPP தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக அளவுக்கு அதிகமாக தமிழ் மக்களின் பக்கமாகச் சாய்கிறது” என்ற சிங்களக் கட்சிகளின்
Published By: DIGITAL DESK 330 MAY, 2025 | 04:46 PMimageபுகைத்தல் பாவனையினால் எமது நாட்டில் சுமார் 20,000 பேர் அகால மரணமடைகின்றனர்தினமும் 520 மில்லியன் ரூபா புகைத்தலுக்கு  செலவிடப்படுகின்றது. வருடத்திற்கு சுமார் 1.8 பில்லியன் சிகரட் வடிப்பான்களும் பிளாஸ்டிக் கழிவுகளாக சூழலுடன் இணைகின்றன.புகையிலை நிறுவனமானது மிகவும் நுட்பமான முறையில் இளைஞர்களை இலக்கு வைத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அவற்றை வெளிக்கொணர்ந்து புகைத்தலினால் ஏற்படுகின்ற விளைவுள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “புகையிலை தொழில்துறை தலையீடுகளை வெளிக்கொணருவோம்” என்பது இம்முறை சர்வதேச புகைத்தல் தடுப்பு தினத்தின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது. புகைத்தல் பாவனையினால் அகால மரணமடைகின்ற வாடிக்கையாளர்களை ஈடுசெய்வதற்காக இளைஞர்களையும், சிறுவர்களையும் புகையிலை நிறுவனம் இலக்கு வைத்து பல்வேறு விளம்பரங்களையும், சந்தைப்படுத்தல் நுட்பமுறைகளையும் புகையிலை நிறுவனம் மேற்கொள்ளுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. இவற்றினால் புகையிலை பொருட்களின் உண்மையான தாக்கங்கள் மறைக்கப்பட்டு புகைத்தல் பாவனையானது இளைஞர்கள் மத்தியில்
மே 19 போர் வீரர் நினைவஞ்சலி உரை: குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!கடந்த 19 ஆந் திகதி தலைநகர் கொழும்பு போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இலங்கையின் உள்நாட்டுப் போரில் (1979 - 2009) உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் 16 ஆவது தேசிய நிகழ்வு இடம்பெற்றது. அதில் பங்கேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியலில் ஒரு பெரும் சூறாவளியை கிளப்பியிருப்பதுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்களில் ஓரளவுக்கு பலவீனமடைந்திருந்த NPP இன் வாக்கு வங்கியில் அநேகமாக மேலும் ஒரு சரிவு ஏற்படுவதற்கு வழிகோலள முடியும். அடுத்து இந்த உரை நிகழ்த்தப்பட்டிருக்கும் காலம் (Timing) அரச தரப்புக்கு பெருமளவுக்கு உசிதமற்றதாகவே இருந்து வருகிறது என்ற விடயத்தையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் NPP பெற்றுக் கொண்ட அமோக வெற்றியையடுத்து சில காலம் பதுங்கிக் கிடந்த தீவிர தேசியவாத / இனவாத சக்திகள் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர்) ஓரளவுக்குப் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் 'இனம்' மற்றும் 'மதம்' போன்ற தேசாபிமான சுலோகங்களுடன் களமிறங்கியிருக்கும் ஒரு சூழ்நிலையலேயே சிங்களப் பொதுச் சமூகம் பூஜித்து வரும் 'ரணவிருவாக்களை' (War Heroes) வெறும் சிப்பாய்களாக (Soldiers) 'தரமிறக்கும்' விதத்தில் ஜனாதிபதி பேசியிருக்கிறார்.போரில் உயிர் நீத்த
Nadarajah Kuruparan "இழக்கும் சந்தர்ப்பங்கள் மீண்டும் கிடைப்பதில்லை" "தவறுகள் தொடர்ந்தால் வரலாறு மன்னிக்காது" மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுமா? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் குறித்து NPP யிடமோ அதன் மூலக் கட்சியான JVPயிடமோ தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லைமாகாண சபை முறைமை என்பது ஒரு வெள்ளையானை என்பது அவர்களின் கருத்து. எனினும் அரசியல் அமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் இருப்பதனையும், தமிழ் மக்கள் அதனை போராடிப் பெற்றனர் எனவும் தோழர் அநுரமார திஸ்ஸநாயக்கா கூறியிருந்தார். இப்போ ஜனாதிபதியானதன் பின் அவர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவாரா என்பது தெளிவாகவில்லை.முன்னைய மாகாண சபைத் தேர்தலில் JVP போட்டியிட்டாலும் கொள்கை ரீதியாக மாகாண சபையை எதிர்த்தது. இதே நிலைப்பாட்டையே அகில இலங்கைத் தமிழ்காங்கிரசும், தமிழ்த்தேசிய முன்னணியும் கொண்டிருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவது ஆனால் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பது. இங்கே மாகாண சபை வெறும் கோதா அல்லது முட்டையா என்ற விவாதம் தொடரட்டும். ஆனால் அரசியல் அமைப்புச்சட்டத்தில் 13 ஆவது திருத்தத்தில் இருப்பது மாகாணசபை முறை மட்டுமே. இந்த அரசாங்கத்தின் புதிய அரசியல் அமைப்பு கதையை நம்பி மாகாண சபைமுறைமையினை தமிழ் கட்சிகள் விட்டுவிட வேண்டாம் என, இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் தயான் ஜெயத்திலக அண்மையில் கூறியிருந்தார்.1980களில்
அழிந்துபோன விலங்குகள்பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGESபடக்குறிப்பு,சித்தரிப்புப் படம்7 ஜூன் 2025ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
498611213_2457342941308496_7713594774289
மனிதன், திருமண முறை, ஒருதார மணம், பலதார மணம், மோனோகமி, பாலிகமிபட மூலாதாரம்,GETTY IMAGESகட்டுரை தகவல்எழுதியவர், க்ரவுட்சயின்ஸ் நிகழ்ச்சிபதவி, பிபிசி உலக சேவை9 ஜூன் 2025, 10:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்டேட்டிங் செயலிகள் முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கி, உறவுகளின் லேபிள்களும் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையாகவே ஒருதார மணம் செய்யும் தன்மை (மோனோகமி) கொண்டவர்களா என்கிற கேள்வி முன்பு எப்போதையும் விட பொருத்தமுள்ளதாகிறது.லண்டனில் வசிக்கும் ரோமானியரான அலினா 'பாலிஅமோரி' அனுபவம் பெற்ற பிறகு இதே எண்ணத்தில் தான் இருந்தார். பாலிஅமோரி என்பது சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரே நேரத்தில் பல நெருக்கமான உறவுகளில் இருப்பது."நான் சமீபத்தில் பாலிஅமோரி பின்பற்றும் ஒருவரைச் சந்தித்தேன், அவர் எப்போதுமே அப்படித்தான் இருந்துள்ளார்" என விவரித்தவர், நாம் ஏன் ஒரு சமூகமாக ஒருதார மணம் தான் விதி என ஏற்றுக் கொண்டோம் எனக் கேள்வி எழுப்புகிறார்.நம்முடைய பரிணாம வளர்ச்சி பாதை புரிந்து கொள்ள நமக்கு நெருக்கமான உயிரினங்களின் இனப்பெருக்க உத்திகளை ஆராய்வது உதவியாக இருக்கும்."கொரில்லாக்கள்
"வாராயோ வெண்ணிலாவே""வாராயோ வெண்ணிலாவே சொல்லாயோ காதல் பாராயோ என்னைத் அன்பாய் தழுவாயோ போராட்டம் வேண்டாம் பொறுமையாய் கேட்கிறேன் தாராயோ உன்னை முழுதாக எனக்குவைராக்கியம் விட்டு அருகில் வருவாயோ?""சோராத என்மனம் ஏங்கித் துடிக்குது சேராத இதயமே வந்திடு என்னிடம்சீராக சிறப்பாக வாழ்வு தந்து தீராத ஆசைகளை நிறைவு ஏற்றி பாராட்டி உன்னைத் பல்லக்கில் தூக்கவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்அத்தியடி, யாழ்ப்பாணம்]343947548_254432903811768_89062017967311
10 JUN, 2025 | 06:04 PMimageயாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் கலந்துகொண்டார்.இப்போட்டியின் இறுதி அங்கமாக நாளை காலை 8.30 மணிக்கு இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் ஒன்றில், சென். பற்றிக்ஸ் கல்லூரியும் சென். ஜோன்ஸ் கல்லூரியும், மற்றைய போட்டியில் யாழ்ப்பாணக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன எனவும் கூறப்படுகிறது.தொடர்ந்து, பகல் 1 மணியளவில் மூன்றாம் இடத்துக்கான போட்டியும் மாலை 3
கடற்புலிலெப்.கேணல் பிரசாந்தன்வின்சன் ஜெயச்சந்திரன்தருமபுரம், கிளிநொச்சி13420.jpghttps://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA=லெப்.கேணல் செல்விகணபதிப்பிள்ளை கலாதேவிநெடுந்தீவு, யாழ்ப்பாணம்19366.jpghttps://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=