புதிய பதிவுகள்

Subscribe to புதிய பதிவுகள் feed
Updated: 56 min 32 sec ago

Press freedom fears as Sri Lanka considers new media code

1 hour 31 min ago
Wednesday 19 June 2013 08.42 BST

Roy Greenslade

A new code of ethics for the media proposed by the Sri Lankan government could have a chilling effect on free speech, according to the organisation Human Rights Watch (HRW).

The code, put forward two days ago (17 June) by the country's ministry of mass media and information, comes at a time when the Colombo government has clamped down on Sri Lanka's once vibrant media.

Ominously, the minister, Keheliya Rambukwella, said that the code was intended to create a "salutary media culture" because the actions of unnamed media outlets had "led to many problems."

The code prohibits the publication of 13 types of substantive speech including content that vaguely "offends against expectations of the public, morality of the country, or tend to lower the standards of public taste and morality."

It also includes any content that "contains material against the integrity of the executive, judiciary, and legislative", which could be interpreted as barring criticism of the government.

The code further restricts content that "contains criticism affecting foreign relations," which could lead to sanctions for reporting on international criticism of Sri Lankan government actions.

Brad Adams, HRW's Asia director, said: "The government's proposed media code is part of a sustained campaign to control the media and curtail dissent.

"Sri Lankan journalists are already under enormous pressure not to be critical of the government, and the vagueness of this code will likely lead to greater self-censorship to avoid government retaliation."

It is unclear when the code will be presented to parliament, what legal effect it will have if passed, or what sanctions would be imposed for non-compliance.

The Press Complaints Commission of Sri Lanka already has drafted code of practice that has been endorsed by the International Federation of Journalists and its affiliates in Sri Lanka.

The Sri Lankan media has faced various threats in recent years. On 3 April, masked armed men set fire to the office of Uthayan, a leading Tamil opposition newspaper whose journalists have previously been assaulted.

In June 2012, the police raided the offices of the Sri Lanka Mirror, a news website, and the opposition Sri Lanka X News website, confiscating computers and documents and arresting nine people.

Last year, at least five news websites critical of the government were closed by the authorities.

And violence remains a real fear for journalists, which is only heightened by impunity for perpetrators. There have been no significant developments in the 2010 disappearance of Prageeth Ekneligoda, a contributor to Lanka E-news, nor in the murder of Sunday Leader editor Lasantha Wickrematunge, who was shot dead near a police station in 2009.

Source: Human Rights Watch

http://m.guardian.co.uk/media/greenslade/2013/jun/19/press-freedom-srilanka

தமிழர் நாம் ஒன்றுபட சிங்களம் நேற்று களம் அமைத்து கொடுத்துள்ளது

3 hours 17 min ago

 

kaadaiyan.jpg
முள்ளிவாய்க்களில் எம் இனத்தை அடித்து கொன்றழித்த சிங்களம் நாடு கடந்தும் அடிக்கிறது என்றால் உலகத்தில் தமிழன் என்ன அனாதையா?  பிரிந்து கிடக்கும் தமிழினமே ஒன்றாக நீயிருந்தால் காலால் உன் தங்கையை,அக்காவை உன் உடன் பிறந்தவளை இப்படி காலால் சிங்களவன் உதைவானா படை பெரிதென்றால் கிட்ட வந்திருக்க மாட்டான் ஒன்றுமை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? ஜனநாயக வழியை சிங்களதேசம் வன்முறை வழியால் எதிர்கிறது. தமிழன் அகிம்சையின் வழிவந்தவன் தீலீபனை ஈன்ற தமிழ் சிங்களவனின் வன்முறைக்கு ஜனநாயக வழியில் மீண்டும் மீண்டும் முறியடிப்போம்.அதற்க்கு எம்மை நாம் தாயார் படுத்த வேண்டும் அதாவது ஒன்றாக நாம் நிற்பதே தயார் படுத்தலாகும். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இலங்கை அணி விளையாடாவும் உள்ளது. எனவே அதன் முன்னால் மற்றுமொரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த இளைஞர்கள் முடிவுசெய்துள்ளார்கள். தமிழர்களின் ஒற்றுமை அங்கே பறை சாற்றுங்கள் நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை சுகந்திர போராட்ட இனம் என்பதை பறை சாற்றுவோம். அமைப்பு பேதமின்றி தமிழன் என்று ஒரு அமைப்பின் கீழ் அணிதிரளுவோம் இதிலும் இணையா தமிழன் எப்போது ஒன்றுபடுவான் தமிழர் நாம் ஒன்றுபட சிங்களம் நேற்று களம் அமைத்து கொடுத்துள்ளது. ஒன்றுபடுவோம்.
 
சரவணை மைந்தன்
 
 
 

 


மகிந்த & co வின் குண்டர் இராச்சியம் எங்குபோய் முடியுமோ?

6 hours 27 min ago

Mahinda-Cartoon1.jpg

 
 

'நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!' 'சிங்கள மகா ஜனதாவ' இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன.

http://tamilworldtoday.com/?p=17590

சிங்கள ரசிகையுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாருக்கான்.

6 hours 31 min ago

இந்திபட நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் ஒருவர்.

ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர்.

இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை  சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார்.

ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது ஷாருக்கான் தனது 70 வயது இலங்கை ரசிகையை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்த சிங்கள இனத்தவரின் பிறந்தநாளை ஷாருக்கான் கொண்டாடியது தமிழ் அமைப்புகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானுக்கு தமிழ் ரசிகர்கள் பலர் உள்ளனர். அதை மனதில் வைத்து அவர் செயல்பட வேண்டும் என்றும், மேலும் அவருக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16107:shah-rukh-khan-celebrated-the-birthday-with-fans&catid=39:cinema&Itemid=107

மேடையில் ஆடும் 13வது திருத்தச் சட்டம்! (சமகாலப்பார்வை)

6 hours 51 min ago

இன்று இலங்கையில் எங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றியே பேச்சு! இது அரசியலமைப்பின் ஒரு திருத்தச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அது பிறந்த போது கிடைக்காத பரபரப்பும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.

 

ஆட்சி பீடத்திலுள்ள கட்சிகளிடையெ கருத்துக்கள் வெடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திரமுன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பன 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழீழம் அமைவதற்கு அடித்தளமாகிவிடும் எனத் துள்ளிக்குதிக்கின்றன.

 

இடதுசாரிகள், முஸ்லிம்காங்கிரஸ் ஆகியன 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாமலே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ மாகாண சபைகளிடம் காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை சிங்கள மக்கள் விரும்பமாட்டார்களாதலால் எல்லாம் இருந்தது இருந்தபடியே இருக்கட்டும் எனக் கூறிவிடுகிறார்.

 

ஆனால் இன்றைய அரசுத் தலைவரும், இலங்கையின் ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ஷ இப்பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு திட்டவட்டமான கருத்தையும் தெரிவிப்பதில்லை. எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் அவரவர் விருப்பத்துக்கு மேடையேற்ற அனுமதித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படாமல் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது எனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட ஏறக்குறையப் பத்துக்கு மேற்பட்ட இனவாத அமைப்புக்கள் மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான பிரசாரங்களை நடத்திவருகின்றன.

 

ஏற்கனவே காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பாக மாகாண சபைகளிடம் எந்த ஒரு அதிகாரமும் வழங்கப்படவில்லை.

பொலிஸ் அதிகாரம் என்பது இலங்கையின் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்படும் ஒரு பதில் பொலிஸ் மா அதிபரின் கையிலேயே மாகாணப் பொலிஸின் கட்டுப்பாடு இருக்கும். அதாவது, ஜனாதிபதியின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்தின் கீழ் செயற்படும் ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டிலேயே மாகாணப் பொலிஸ் இயங்கும். அப்படியான நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் உண்டு எனக் கூற முடியுமா? மேலும் 13வது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பொலிஸ் ஆணைக்குழு, பொது நிர்வாக சேவை ஆணைக்குழு என்பவற்றின் கீழேயே பொலிஸ் திணைக்களமும் பொது நிர்வாக சேவையும் இயங்கும். அப்படியானால் இவற்றின் மீது மாகாண சபைக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும்?

 

மாகாணசபைகளின் காணி அதிகாரம் என்பன வார்த்தைகளால் பேசப்பட்ட போதும் அவை என்ன என்பது எவருக்குமே தெரியாது. மாகாண சபைகளுடன் எவ்வித தொடர்புமின்றி ஜனாதிபதி செயலணிக்குழு காணிகள் வழங்கும் அதிகாரத்தை தானே அரச அதிபர் மூலம் செயற்படுத்தி வருகின்றது. காணி அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட காணி சுவீகரிப்புப் பிரிவு தமிழ் மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி என்ற பேரில் வேறு தேவைகளுக்காகவும் சுவீகரித்து வருகிறது. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் பொறுப்பில் இயங்கும் நகர அபிவிருத்திச் சபை பொதுமக்களை அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றிவிட்டு அந்நிய நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது.

 

இப்படியான நிலையில் காணி தொடர்பாக மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் எவை என்பதைச் சுழியோடினாலும் கூட கண்டுபிடிக்க முடியாது.அதாவது இன்றுள்ள நிலைமையில் கூட மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ், பொது நிர்வாகம் தொடர்பாக எவ்வித செயற்பாட்டு அதிகாரங்களும் இல்லை.இப்படியாக இல்லாத அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி விமல் வீரவன்சவும் ஹெல உறுமயவும் ஏனைய இன வெறி அமைப்புக்களும் போராட்டங்களை நடத்திவருகின்றன என்றால் என்ன அர்த்தம்.

 

 

முதலாவது – சிங்கள மக்களை இன மேலாதிக்கப் போக்கிலிருந்தும், தமிழ் மக்களுக்கு எதிரான இன வெறிச் சிந்தனையிலிருந்தும் இறங்கவிடாமல் பாதுகாப்பது. அதற்கான சஞ்சீவியாக அவர்கள் உபயோகிப்பது நாடு பிரிந்து தனிநாடு அமைந்துவிடும் என்பது தான். தனி நாடு அமையுமோ இல்லையோ என்பதை விட இவர்கள் தனிநாட்டுப் பூச்சாண்டியைக் கைவிடப் போவதில்லை. விலை வாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு, எரிபொருள் மின்சார விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் கொதிப்படைந்து அரசுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்கத் தனிநாட்டுப் பூச்சாண்டி காட்டி அவர்களைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷ, அவர்களுக்குப் போதிய ஊக்கமளித்துத் தட்டிக்கொடுப்பார்.

 

இரண்டாவது – இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் வலுத்துவருகின்றன. எனவே அரசுக்கு எப்படியோ ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்க வேண்டியுள்ளது. எவ்வித அதிகாரப் பகிர்வையும் கொண்டிராத, ஆளுநரின் கட்டளைக்கு அப்பால் விரலைக் கூட அசைக்க முடியாத மாகாண சபையின் தேர்தலை நடத்தி 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கிவிட்டதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி உண்டு. வடக்கு மாகாண சபை தமிழர் கைக்கு கிடைத்தால் தமிழர்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து விட்டதாகக் கூற முடியும். ஆனால் 13வது திருத்தத்தின் போலித்தன்மையை மறைக்க, அது ஏதோ தமிழர்க்கு அள்ளிக் கொடுப்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்பு மூலம் ஏதோ மாகாண சபைகள் மூலம் பெரும் விமோசனம் கிட்டப் போவது போன்ற ஒரு மாயை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

 

இந்தியாவும் இதை ஒரு வரப்பிரசாதமாகக் காட்டி தமிழர் தரப்பை ஏற்றுக்கொள்ளும்படி தூண்டலாம். அது மட்டுமன்றி அரசுடன் நிற்கும் தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் கூட இந்த மாகாண சபைத் தேர்தலை தங்கள் துரோகங்களை மறைக்கும் ஒரு கவசமாகவும் பயன்படுத்த முடியும்.

 

எனவே இன்று மேடையேற்றப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கூக்குரலும் பறிக்கப்படக்கூடாது என்ற ஒப்பாரியும் ஒரு மூலஸ்தானத்திலிருந்து பிறப்பெடுத்தவை ஒரே நோக்கத்தைச் செயற்படுத்த முன் வைக்கப்படுபவை.

 

இந்த நேரத்தில் தமிழ் மக்களின் கடமை என்ன என்ன கேள்வி எழத்தான் செய்கிறது. அடிப்படையில் இத்தகைய போலியான சர்ச்சைகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மாகாண சபை ஏற்கனவே பற்கள் பிடுங்கப்பட்டு கிழடு தட்டிவிட்டது. அது மட்டுமின்றி அது சுயம் என்பது இல்லாத ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்ட வெறும் பொம்மை. அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை. எனினும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அதில் தமிழர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது முக்கியமாகும். அப்படி இல்லையெனில் அரசோ, அரசின் அடிவருடிகளோ ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழ் மக்கள் அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டனர் எனப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பாகிவிடும்.

 

இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை உணரப்படவேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நேர்மையாகக் குரல் கொடுக்கும் சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி அரசு சார்பான சக்திகளைத் தூக்கியெறிய வேண்டும். இங்கு கட்சிகளும் கட்சிகளின் கொடிகளுமல்ல முக்கியம். தமிழ் மக்களின் உரிமை நோக்கிய ஐக்கியமே இன்றைய தவிர்க்க முடியாத தேவை.

இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணரத் தவறினால் மீண்டும் அது ஒரு வரலாற்றுத் தவறை இழைத்த குற்றத்துக்கு ஆளாக வேண்டி வரும். தமிழ் மக்களால் ஒதுக்கப்படும் நிலையும் உருவாகலாம்.

 

தாயகத்தில் இருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

http://tamilleader.com/?p=14248

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் குடைசாய்ந்து விபத்து: இருவர் பலி, 70 பேர் காயம்

8 hours 15 min ago

1409084952images.jpg

பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ் குடைசாய்ந்து விபத்து: இருவர் பலி, 70 பேர் காயம்

நுவரெலியா - சீதா எலிய பிரதேசத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காயமடைந்துள்ளனர். 

பஸ் பாதையை விட்டு விலகி செங்குத்து சரிவு ஒன்றில் குடைசாய்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்: முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்

8 hours 17 min ago

1607891798sivaram.jpg

சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும்: முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்

 

 


கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சிவராம் கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, அங்கு சாட்சியமளித்த கொழும்பு பாமன்கடை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் பிரியந்த என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கூறியுள்ளார். 

சிவராம் கடத்தப்பட்ட போது தான் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகே தனது வண்டியுடன் நின்றிருந்ததாகக் அவர் கூறினார். 

சாம்பல் நிற ஜீப்பில் வந்த ஒரு குழுவே சிவராமைக் கடத்தியதாகவும், அவர்களை தான் தெளிவாகப் பார்த்ததாகவும், அவர்களை அடையாளம் காட்ட தன்னால் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வழக்கு குறித்த சந்தேக நபரான ஆறுமுகம் சிறிஸ்கந்தராஜா என்னும் புளொட் அமைப்பின் அங்கத்தவர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

(பிபிசி)  
 
 

அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்

8 hours 31 min ago
சமஸ்

எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த சரப்ஜித் சிங்?

நமக்கு சரப்ஜித் சிங் தொடர்பாக இரண்டு கதைகள் தெரியும். சரப்ஜித் சிங் ஓர் அப்பாவி. இந்தியா - பாகிஸ் தான் எல்லை அருகே போதையில் சுற்றித் திரிந்த சரப்ஜித் சிங்கைக் கைதுசெய்த பாகிஸ்தான், அவரை இந்திய உளவாளியாகச் சித்திரித்து சிறையில் அடைத்தது. ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் அவருக்குப் பங்கு இருப்பதாக ஜோடித்து மரண தண்டனை வழங்கியது. இது இந்தியக் கதை.

 

சரப்ஜித் சிங் ஒரு பயங்கரவாதி. இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் கைக்கூலியான அவர், 14 பேர் உயிர் இழக்கக் காரணமாக இருந்த 1990 லாகூர், பைசலாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் சதியில் முக்கியப் பங்காற்றிய குற்றவாளி. இது பாகிஸ்தான் கதை.

 

சரப்ஜித் சிங்கின் சடலம் தனி விமானத்தில் இந்தியா கொண்டுவரப்படும் வரை பாகிஸ்தான் சொன்ன கதையை உறுதியாக மறுத்தது இந்திய அரசு. அதாவது, சரப்ஜித் சிங் ஏதும் அறியாத அப்பாவி என்றது. ஆனால், சடலம் வந்த பின் நடந்த சங்கதிகள் இந்தியக் கதை மீதான நம்பகத் தன்மையைக் கிழித்து எறிந்தன. இந்த நாட்டில் இதற்கு முன் எந்த அப்பாவியின் மரணத்துக்கும் இவ்வளவு மரியாதை கொடுக்கப்பட்டதில்லையே?

 

சரப்ஜித் சிங் ஓர் உளவாளி என்பதை சரப்ஜித் சிங்\மரணத்துக்கு அளிக்கப்பட்ட மரியாதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில், டெல்லியில் அரசே கசியவிட்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. சரப்ஜித் சிங் இறந்த அடுத்த சில நாட்களில், நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்ட ஒரு செய்தி, ‘‘பாகிஸ்தானில் ‘ரா’ முன்னெடுத்த ‘ஒரு திட்ட’த்தில் பங்கேற்றவர் சரப்ஜித் சிங்; இந்தத் திட்டத்தை முன்னெடுத்த அதிகாரி பின்னாளில் உளவுத் துறையின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர்’’ என்று அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிடாமல் சொன்னது. இந்தியாவில் அரசின் கண்ணசைவு இல்லாமல் இப்படி ஒரு செய்தி வெகுஜன ஊடகங்களில் வெளியாக வாய்ப்பே கிடையாது. ஆக, இதுவரை இந்தியா சொன்ன கதை பொய்க் கதை

funeral-protest.jpg.

 

 

 

சீன, பாகிஸ்தான் போர்களுக்குப் பின் 1960களின் இறுதியில் தொடங்கப்பட்ட ‘ரா’ உளவுப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகப் பெரும்பான்மை இந்தியர் கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மை அல்ல. எப்படி அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’, இஸ்ரேலின் ‘மொஸாத்’ ஆகியவை சதி வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அப்படியே ‘ரா’வும் சதி வேலைகளில் ஈடுபடுகின்றது. எப்படி இந்தியாவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறதோ, அப்படியே ‘ரா’வும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைப் பின்னின்று இயக்குகிறது.

 

ஒருகாலத்தில் அண்டை நாடுகளை மேலாதிக்கம் செய்ய அங்குள்ள அரசுகளுக்கு எதிராக ‘ரா’ காய்களை நகர்த்தியது. பின்னர், அங்குள்ள ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதி உதவியும் வழங்கியது. சிக்கிம் அப்படித்தான் இந்தியாவோடு இணைந்தது. வங்கதேசம் அப்படித்தான் உருவானது. இலங்கையில் அந்த நோக்கத்தில்தான் தமிழ் ஆயுதக் குழுக்கள் பயிற்றுவிக்கப்பட்டன. தொண்ணூறுகளில் பயங்கரவாதத்தையும் ஓர் உத்தியாக ‘ரா’ கையில் எடுத்தது. 'ரா’வின் சிறப்புப் பிரிவான ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுத்த இந்தச் சதி வேலை கள் குஜ்ரால் காலத்தோடு முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய அரசு சொன்னது.

ஆனால், ‘‘ ‘சி.ஐ.டி. எக்ஸ்’ தொடர்ந்து செயல்படுகிறது. இப்போது அதன் செயல்பாடுகள் மேலும் பல மடங்கு விரிவடைந்திருக்கின்றன. இஸ்ரேலின் ‘மோஸாத்’துடனும் அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ’-வுடனும் இணைந்து தனித்தனியே பல திட்டங்களை ‘சி.ஐ.டி. எக்ஸ்’ முன்னெடுக்கிறது. இவற்றில் முக்கியமானது பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பது. பல்வாரிஸ்தான் இயக்கத்தைப் பின்னின்று இயக்குவதே ‘சி.ஐ.டி. எக்ஸ்’தான். இதில் ஆப்கனியர்களை இரண்டாம் படையாக இந்தியா பயன்படுத்துகிறது” என்று தொடர்ந்து கூறிவருகிறது பாகிஸ்தான்.

ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இந்தியாவைப் பார்த்து, வெளிப்படையாகவே கேட்டார்: ‘‘நீங்கள் 'ஐ.எஸ்.ஐ.' மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள். ஆனால், ஆப்கனில் கந்தஹாரிலும் ஜலாலாபாத் திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? உங்கள் ‘ரா’ என்ன செய்துகொண்டிருக்கிறது?”

 

முஷாரப்பின் கேள்வியை பல்வாரிஸ்தான் தேசிய முன்னணியின் தலைவர் அப்துல் ஹமீது கான் சொன்ன ‘‘எங்களுக்குத் தேவை பல்வாரிஸ்தான். இந்தியாவா, பாகிஸ்தானா என்று எங்களைக் கேட்டால், நாங்கள் இந்தியாவைத்தான் தேர்ந்தெடுப்போம்” என்ற வார்த்தை களோடும், உளவுப் பணியின்போது பிடிபட்டு, சித்திர வதைகளைச் சுமந்து, நடைப்பிணங்களாக நாடு திரும்பி, ஓய்வூதியத்துக்காக அலையும் நூற்றுக்கணக்கான இந்திய உளவாளிகளின் மத்தியில், சரப்ஜித் சிங்குக்கு அளிக்கப்பட்ட ‘வீரத் திருமகன்’ மரியாதையோடும் ஒப்பிட்டுப் பாருங்கள்... பதில் தெரியும்

 

http://www.kalachuvadu.com/issue-162/page09.asp

சூது கவ்வும்: அதர்ம தர்மம்

8 hours 32 min ago

    செல்லப்பா

தமிழ்த் திரைப்படங்கள்மீது நம்பிக்கை முற்றிலும் தூர்ந்து போகும்போது ஏதோவொரு படம் வெளியாகி நம்பிக்கையூட்டும். அந்த நிழலில் சில காலம் இளைப்பாற முடியும். சுப்ரமணியபுரம், ஆடுகளம் என்னும் அந்த வரிசையில் சூது கவ்வும் திரைப்படத்தை இருத்த முடிகிறது. நயன்தாராவுக்குக் கோயில் கட்டிய பகலவன், ஜாக்குவார் காரை ஓட்டிப்பார்க்கும் விருப்பத்தால் வேலையைப் பறிகொடுத்த சேகர், பெண்ணின் நயவஞ்சகத்திற்குப் பலியாகி வேலையிழந்த கேசவன், இல்லாத காதலியை இருப்பதாகப் பாவித்து இன்புறும் ஆள்கடத்தல்காரனான தாஸ் ஆகிய நால்வரும் சந்தித்துக்கொள்வதும் பின்னர் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும் தாம் சூது கவ்வும்.

 

நன்கு வாய்விட்டுச் சிரிக்கச்செய்யும் பல காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தை வெறுமனே நகைச்சுவைப் படம் என்னும் கூண்டுக்குள் அடைக்க மனம் ஒப்பவில்லை. வன்முறைச் சம்பவங்களற்ற, பாலியல் சித்தரிப்புகளற்ற, ‘விளிம்புநிலை மனிதர்கள்’ இல்லாத புதிய முயற்சி இப்படம். சமகாலச் சமூக அபத்தங்களின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மற்ற படங்களில் இருந்து இது வித்தியாசப்படுகிறது. இந்தப் படத்தின் மைய உத்தி மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல்ஹாசன் கையாண்டதுதான் என்றாலும் எக்ஸ்பிரஸைச் சூது கவ்வும் அநாயாசமாக முந்துகிறது. இயக்குநரை மீறிக் கமலிடம் துறுத்திக்கொண்டிருந்த அறிவுஜீவித்தனம் படத்தைப் புத்திசாலித்தனமாக்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால் இயக்குநர் நலன் குமரசாமியிடம் வெளிப்பட்டுள்ள குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும்

இதை ஒரு மாறுபட்ட படமாக்குகிறது

. soodhu-kavum.jpg

 

பெரு நகரில் வாழும் சராசரி இளைஞர்களின் உலகம் அப்படியே பதிவாகியுள்ளது. தாகமெடுக்கும்போதெல்லாம் பீர் குடிக்கும் இளைஞர்கள் ஆக்ஸிஜனைவிட அதிகமாக நிகோடினைச் சுவாசிக்கின்றனர். இவர்களுக்கு அறச் சிக்கல்கள் எழுவதேயில்லை. அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வேலை குறித்து படத்தில் வெளிப்படும் தியரியைச் சதாசர்வகாலமும் மரபில் மூழ்கிக் கிடக்கும் பொதுமனம் புரிந்துகொள்வது துர்லபம். பொதுச்சமூகம் உயர்வாகக் கருதும் பல விஷயங்கள் இப்படத்தில் எள்ளலுக்கு ஆளாகியுள்ளன. நடிகர்கள் மட்டுமன்றி நடந்தது என்னன்னா அருமைப்பிரகாசம், துரும்பிலும் இருப்பவரில் வரும் நேர்மைக் குசும்பு என நலனின் குறும் படங்களில் இடம்பெற்ற சில விஷயங்கள் சூது கவ்வும் படத்தில் தலைகாட்டுகின்றன. சினிமா கிறுக்கைச் சித்தரித்த ஒரு படம் எடுக்கணும், சொதப்பலான படமெடுப்பைக் கூறும் உண்மையைச் சொன்னா, நெஞ்சுக்கு நிதி, என்கவுண்டர் பற்றிய தோட்டா விலை என்ன, ஒரு வீட்டில் பேய் இருந்துச்சாம் போன்ற பல குறும்படங்களில் தனித்தனியே கிடந்த பல உத்திகளை இயக்குநர் நலன் இப்படத்தில் ஒன்று சேர்த்துள்ளார். நேர்த்தியான திரைக்கதை ரசிகர்களை எந்தவகையிலும் குழப்பக் கூடாது என்பதற்கு உதாரணம் இப்படம். திரைக்கதையில் சீரான தொடர்பு உள்ளது. படத்தின் பிற்பகுதியில் வரும் கோடம்பாக்கம் தாதாவுக்கு முற்பகுதி யிலேயே குறிப்பு உண்டு. படத்தில் மிக இக்கட்டான சமயத்தில் விரைவாகக் காரைக் கடத்தும் போதும் அதை எங்கே விட்டுச்செல்வோம் என்பதை உரிமையாளரிடம் தெரிவித்துவிட்டே செல்கிறார்கள் தாஸ் அண்ட் கோ.

 

பல காட்சிகளில் தீவிரமான விஷயங்களை இயல்பாகத் தெரிவித்துவிட்டுக் காட்சி நகர்ந்துவிடுகிறது. அருமைப் பிரகாசம் அம்மா தந்த பணம் ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழும்போது அதைப் பிடிப்பதற்காக ஓர் எளியவரின் வேட்டியைப் பணம் கொடுத்துப் பெறும் காட்சி ஒட்டுமொத்தச் சமூகத்தின் இழிநிலையையும் மவுனமாகக் கேள்விக்குள்ளாக்குகிறது. பிரத்யேகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கப்படாத அந்தக் காட்சியை அலட்சியமான பார்வையாளன் எளிதில் தவறவிட்டுவிடுவான். ஆனால் அது ஆழமான சமூக விமர்சனம். இதைப் போன்ற சிறிய விஷயங்களில் வெளிப்பட்டிருக்கும் புரிதல்கள் படத்தின்மீது மரியாதைகொள்ளச் செய்கிறது. தாங்கள் கடத்த திட்டமிட்ட அருமைப்பிரகாசத்தை மற்றொரு குழுவினர் காரில் கடத்திச் செல்லும் காட்சியில், ‘அவங்க பின்னாடியே வர்றாங்க’ எனக் கூறப்படும்போது தாஸ், ‘நாம முன்னால போறோம்’ என்பார். ‘ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்’ எனக் கேட்கையில் ‘நிறைய வித்தியாசம்’ என்பார். அதே போல், தாஸ் நண்பர்களுடன் போலீஸ் வேனில் அமர்ந்திருக்கும் காட்சியில், “குற்றவாளிகளைத் தான் என்கவுண்டரில் போட முடியும் நிரபராதிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்பார். இத்தகையவை நகைச்சுவைப் படத்திற்கான வசனங்கள் அல்ல. வீரியமான சமூக விமர்சனத்தின் வெளிப்பாடு இவை.

soodhu-kavum1.jpg

 

அருமைப்பிரகாசத்தின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அதைப் பிரதி எடுக்க ஆட்டோவில் செல்லும் காட்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்களது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற மிதப்பின் கணத்தில் வீடியோ கேசட் தவறி விழுந்து சிதையும்போது பின்னணியில் ஒலிக்கும் டன்ட ணக்கா நாம் கொள்ளும் அபத்தமான நம்பிக்கைகளைக் கேலி செய்கிறது. நேர்மையான அமைச்சரின் இடத்தைக் கள்ளத் தனத்தைப் பிசிறு தட்டாமல் செயல்படுத்தும் அமைச்சரின் மகனே பறித்துக்கொள்ளும்போது அறம் குறித்த வரையறைகள் காலாவதியாகின்றன. அறம் குறித்த நிலைப்பாடு ஆளாளாளுக்கு வேறுபடுவதை மிகவும் நுட்பமாக இத்திரைப்படம் காட்சிப் படுத்தியுள்ளது. நேர்மை என்பது புகழுக்கான உத்தி என்பதை நாசூக்காக உணர்த் தும் இப்படம் ஊழலையும் நேர்மையையும் ஒரே தட்டில் வைக்கிறது. நலனின் ஒரு படம் எடுக்கணும் குறும்படத்தில் வரும் ஒரு வசனம்: “முடிந்தவரை இம்ப்ரூவ் பண்ணிட்டு பெர்பெக்ஷனை நோக்கி போயிட்டேயிருக்கணும்” என்பது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை நலனுக்கு அது முற்றிலும் பொருந்திப்போகிறது.

 

இந்தப் படம் பல காட்சிகளில் லாஜிக்கை மீறியுள்ளது. லாஜிக்கை மீறாமல் எந்தத் திரைக்கதையையும் உருவாக்க முடியாது. எதற்காக, எதை உணர்த்துவதற்காக லாஜிக்கை மீறுகிறோம் என்பதுதான் முக்கியமானது. பாக்யராஜின் வெற்றிப்படமான அந்த 7 நாட்களில் மிகப் பெரிய லாஜிக் மீறல் இருக்கும். ஆனால் திரைக்கதையின் பலத்தின் முன்னே அது பலவீனமாகியிருக்கும். காதலனுடன் சேர்த்துவைப்பதாகத் தெரிவித்துத் தான் ராஜேஷ் அம்பிகாவை மரண வாசலில் இருந்து அழைத்துவருவார். ஆனால் இறுதிக்காட்சியில் அம்பிகாவை ராஜேஷ் காதலனுடன் அனுப்பிவைக்க மாட்டார். அங்கு லாஜிக்கை மீறிய திரைக்கதை தான் வெற்றிபெற்றது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பொறுத்தவரை லாஜிக் மீறல் குறித்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் படத்தில் பெரும்பாலான வெளிப்படைக் காட்சிகள் உள்ளுறைக் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. இப்படி ஓர் அமெச்சூர்தனமான ஆள்கடத்தல்காரனா என்று கேள்வி எழுந்தால், இதற்கே இப்படி ஆத்திரப்படுகிறீர்களே உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அபத்தங்கள் என்னும் பதில் கேள்வி அங்கே தொக்கி நிற்கிறது. அத்தகைய கேள்விகளை உருவாக்குவதுதான் முக்கியம் எனும்போது லாஜிக்குகளை மீறுவது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

பெண்ணே இல்லாத திரைக் கதையில் வணிகத்திற்காகவும் சுவாரசியத்திற்காகவும் ஷாலு என்னும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியிருக்கும் விதம் புத்திசாலித்தனமான உத்தி. சின்னச் சின்ன குறும்பு நடிவடிக்கைகளால் பார்வையாளர்களை எளிதில் ஈர்த்துவிடுகிறார் ஷாலு. ஒரு கட்டத்தில் அதை ஓரங்கட்டிவிட்டு அப்படியே விட்டுவிடவுமில்லை இயக்குநர். இறுதியில் ஷாலு போன்ற ஒரு பெண்ணை தாஸ் கடத்துகிறார். அமைச்சரின் மகள் அவர். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது.

 

ஆனால் பார்வையாளனிடம் படம் தொடர்கிறது. வழக்கமாகப் பணம் கொடுத்தால் தாஸ் ஆளை விட்டுவிடுவார். இப்போது அது நடக்குமா? ஏனெனில் தாஸின் ஷாலு அவள். ஒரு காலத்தில் தாஸுடன் ஷாலுவின் பிம்பம் இருந்தது. இப்போது அவரிடம் ஷாலுவே இருக்கிறார். ஆனால் பிம்பத்தில் தாஸைச் சந்தோஷப்படுத்திய ஷாலு நிஜத்தில் அவரைக் குஷிப்படுத்த முடியாது. ஏனெனில் அவருக்கு தாஸ் வெறும் கடத்தல்காரன். இந்தச் சிக்கல் தான் நமது வாழ்க்கை. இதை இப்படியும் உணர்த்தலாம் என்பதே மரபூறிய மண்டையில் உறைக்காது.

 

soodhu-kavum-heroine.jpg

 

சினிமா, அரசியல், சோதிடம், செய்தி அலைவரிசை எனக் கிடைத்த எந்த இடத்தையும் இயக்குநர் விட்டுவைக்கவில்லை. சின்ன சின்ன இடங்களில் கூடத் தனது முத்திரை பதிக்கத் தவறவில்லை நலன். செய்தி அலைவரிசையின் அடிப்பகுதியில் வார்த்தைகளாக நகரும் ராஜ கம்பீரம் திடீர் மரணம், பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தமிழில் படமெடுக்க ஆர்வம் போன்ற செய்திகளே அதற்கு எடுத்துக்காட்டுகள். நேர்மையாக இருப்பது தவறல்ல, ஆனால் அதற்கு ஓர் எல்லை உண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் அது உளவியல் சிக்கல் தான். ஞானோதயம் கதாபாத்திரம் லஞ்சம் வாங்க மறுப்பது சரி. ஆனால் மகனை மீட்க கட்சி தந்த நிதியைத் திரும்பக் கொண்டுபோய்க் கொடுப்பதைக் கட்சியாலேயே சகித்துக்கொள்ள முடியாது என்பதுதான் எதார்த்தம். நீதிமன்றக் காட்சி களில் வழக்கமாக வாய்மையே வெல்லும் எனக் காந்தி

படம் மாட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒரே ஒரு திருவள்ளுவர் படம் மட்டும்தான். அவர் உலகப் பொதுமறை எழுதியவர், திருக்குறளில் எல்லாச் சிக்கலுக்கும் தீர்வு உண்டு என்பதால் அது தீவிர எள்ளல்.

விறைப்புடன் வசனம் பேசிய டி. எஸ். பி. சௌத்ரி, அனல் பரப்பிய அலெக்ஸ் பாண்டியன், கழுத்து நரம்பு வெடிக்கப் பேசிய வால்டர் வெற்றிவேல் எனத் தமிழகத்து முன்னோடி போலீஸ் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் பிரம்மா தந்தது ஊமை அடி. தாஸைப் பொறுத்தவரை ஆள்கடத்தல் என்பது ஆத்மார்த்தம் தரும் வேலை. ஆள்கடத்தலை எந்தக் குறுக்குப்புத்தியும் இல்லாமல் மிகவும் நேர்மையாகச் செயல்படுத்துகிறார் தாஸ்.

 

ஆனால் ஊழல் மிகுந்த அரசியல்வாதி சட்டத் திற்குட்பட்ட ஆட்சி நடத்துகிறார். இந்த முரணில் வெளிப்படும் புத்தி சாதுர்யம் திரைக்கதையை மெரு கேற்றியுள்ளது. படித்தவர்களின் திமிர், அறியாமை, பேராசை ஆகியவற்றைக் கேசவன் கதாபாத்திரம் மூலம் அம்பலப்படுத்துகிறார் இயக்குநர். அமைச்சர் மகன் அருமைப்பிரகாசத்தைக் கடத்தும் முடிவுக்கும், அது சொதப்புவதற்கும் மறைமுகக் காரணம் கேசவன் தான். திரைக்கதையில் கதாபாத்திரங்கள், வசனங்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள் தங்களுக்கான கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். விஜய் சேதுபதி தாஸ் கதாபாத்திரத்தை நூறு சதவிகிதம் உயிரோட்டமாக்கியுள்ளார். வங்கியில் மேலாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு பந்தாவாகத் திரும்பும் ஒரு காட்சி போதும், 'மாமா பின்ற மாமா' எனச் சொல்ல வைக்கிறார். நம்பிக்கையூட்டும் நடிகராக விஜய் சேதுபதி தென்படுகிறார்.

 

 

நம்பிக்கை கண்ணன் ஒரு காட்சியில் கூறுவார்: “நீங்க செய்யுறது தப்பு தான்; ஆனால் அதில் ஒரு நேர்மை இருக்கிறது. அமைச்சர் செய்தது சரிதான்; ஆனால் அதில் ஒரு துரோகம் உள்ளது” என்று. இந்த நகை முரணை அறக்கோட்பாடுகளால் எளிதில் விளக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் சூது கவ்வும் லாவகமாக விளக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி. திரையரங்கில் பார்வையாளர்களை ரசித்துச் சிரிக்கவைக்கும் பல வசனங்கள் கிரேஸி மோகன் கதாபாத்திரங்கள் தங்களுக்குள் நிகழ்த்தும் இயல்பான உரை யாடல் பார்வையாளனுக்கு உற்சாகத்தைத் தருகிறது. அலுவலகங்களுக்கு மட்டும்தான் ஞாயிறு விடுமுறையா? ஆள்கடத்தலுக்கும் விடுமுறைதான் என்பது தாஸுக்கு இயல்பானது. ஆனால் பார்வை யாளர்களுக்கு அது ரசனையான நகைச்சுவையாகிறது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் அனைத்தும் அவற்றின் அதிகாரம் களைந்த நிலையிலே பயன் படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர், காவல் துறை அதிகாரி போன்ற அனைவரும் மனிதர்களாக மட்டுமே வலம் வருகின்றனர்.

 

 

இசை, ஒளிப்பதிவு போன்றவை தேவைக்கேற்பப் பயன்பட்டுள்ளன. காசு, பணம், துட்டு, னீஸீமீஹ் பாடல் வண்ணமயமாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையே. தமிழ்த் திரையுலக மேதைகள் எல்லாம் வறட்டுத்தனமான படங்களைத் தொடர்ந்து உருவாக்கும் நேரத்தில் யாரோ ஓர் இளம் இயக்குநர் புத்துணர்ச்சியான படத்தைத் தரும் போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. முதல் படத்துடன் தனது முத்திரையை நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் நலன் தொடர்வது தமிழ்த் திரையுலகிற்கு நலம்பயக்கும்.

 

http://www.kalachuvadu.com/issue-162/page40.asp

வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் : கோதபாய

8 hours 40 min ago
வட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் : கோதபாய

 

kotta.jpgவட மாகாணத்தில் அனைத்து இன மக்களும் வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

போராளிகளுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ : சிரியா அதிபர் எச்சரிக்கை

8 hours 43 min ago
போராளிகளுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ : சிரியா அதிபர் எச்சரிக்கை

 

asad.pngசிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அந்த பேட்டியில் பஷர் அல் ஆசாத் கூறியுள்ளதாவது:-

எனது ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கலகக்காரர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை அளித்தால், நாளடைவில் கொல்லைப்புறம் வழியாக அந்த நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கும்.

 

தற்போதைய செயல்களுக்காக பின்நாளில் அந்த நாடுகள் எல்லாம் பெரும் விலையை தர வேண்டியதாகி விடும். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.

இந்த தீவிரவாதிகள் பிரிவினை கொள்கையுடன் ஐரோப்பிய நாடுகளின் அரசுக்கு எதிராக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபடுவார்கள்.

 

எனது மக்களுக்கு எதிராக நான் ரசாயன ஆயுதங்களை உபயோகிப்பதாக குற்றம் கூறும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள், தங்களது கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் அதை உலக மக்களின் முன்பு நிரூபிக்க வேண்டும்.

 

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி எங்கள் ராணுவம் 150 பேரை கொன்றுவிட்டதாக இந்த நாடுகள் அபத்தமான பொய்யை கூறி வருகின்றன.

 

ரசாயன ஆயுதம் என்பது, ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான மக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை பயன்படுத்தி 150 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று இந்த நாடுகள் குற்றம் சாட்டுவதை வைத்தே இவர்கள் கூறுவது அபத்தமான பொய்தான் என்பது உலகிற்கு தெரியும்.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

சென்னையில் உள்ள முக்கிய இடங்களின் ஊர் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ?

9 hours 33 min ago
 
 
 
 
Chennai---Feedtamil.jpg
 

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :

சென்னை: -

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.


மதராஸ் :-

முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.


கோடம்பாக்கம் -

கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.


மாம்பலம்:

மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :-

ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.


சைதாப்பேட்டை: சதயு புரம் :

சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.


கிண்டி:-

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.


பரங்கிமலை:-
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).


சேத்துப்பட்டு:

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.


எழுமூர்:

இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.


ராயபுரம்:

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.


சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :

சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.


தண்டையார்பேட்டை :

பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.


புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:

புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.


அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:

ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.


செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :

செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.


பெருங்களத்தூர் :

பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.


பல்லாவரம்:

பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.


பரங்கிமலை:-

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.


பூந்தமல்லி :

பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.


நந்தம்பாக்கம்:

நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.


ராமாபுரம்:

ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.


போரூர்:

முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.


குன்றத்தூர்:

குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).


ஸ்ரீ பெரும் பூதூர்:

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.


சுங்குவார் சத்திரம்:

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.


நந்தனம்:-

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.


யானை கவுணி :

திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.


மாதவரம்:

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.


வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:

முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.


ஈக்காட்டுதாங்கல் :

ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......


முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.


முகலிவாக்கம் :

கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.


அயனாவரம்:

அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

 

http://www.feedtamil.com/2013/06/blog-post_6171.html

 

டெல்லி மேல்சபை தேர்தல் ; சோனியாகாந்தியுடன் டி.ஆர்.பாலு சந்திப்பு

9 hours 51 min ago

தமிழகத்தில் இருந்து டெல்லி மேல்-சபை தேர்தலில் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட 4 வேட்பாளர்கள் தங்களுடைய 151 எம்.எல்.ஏ.க்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள்.


 அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராஜாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிப்பதன் மூலம் 5-வது வேட்பாளரான இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.  ஆறாவது வேட்பாளர் பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழியும், தே.மு.தி.க. சார்பில் இளங்கோவனும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெற்றிக்காக தி.மு.க. வும், தே.மு.தி.க.வும் காங்கிரஸ் கட்சி தலைமையை நாடி உள்ளனர்.
 
 இந்நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
நடக்க இருக்கும் டெல்லி மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16098:senatorial-elections-in-delhi,-india-with-sonia-r-adjourned-meeting&catid=36&Itemid=102

லண்டன் வாழ் தமிழீழ மாணவர்கள் மீதான சிங்களவரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம்

11 hours 12 min ago

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் 17.06.2013 அன்று ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
 
தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இன அடக்குமுறைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தவகையான குரல்களும் சிங்கள இனவெறி ஆதிக்க சக்திகளினால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. இனவழிப்பின் விழிம்பில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் தமது இன்னல்களை வெளிப்படுத்த வழிதெரியாது அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நிலையில் தாயகத்தில் இனவழிப்புக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமது சொந்தங்களின் துயரங்களை அனைத்துலகலவில் அம்பலப்படுத்தி அம்மக்களது அடிப்படை சனனாயக உரிமைகளை மீள நிறுவுவதற்காக புலத்து தமிழர்கள் சனனாயக வழியிலான கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.
 
தாயகத்தில் சனனாயக வழிப்போராட்டங்களை மானிட தர்மத்திற்கு முரணாக அழித்தொழிக்க முயன்று கொண்டிருக்கும் சிங்கள இனவெறியாளர்கள் தற்போது புலம்பெயர் தேசத்திலும் தமது இனவாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதன் ஒரு வெளிப்பாடே ஓவல் மைதானத்தில் நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்
 
சிங்கள இனவெறி அரசின் இவ் எல்லை மீறிய பயங்கரவாதச் செயலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. சனனாயக விழுமியங்கள் ஒப்பீட்டளவில் செம்மையாக கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய தேசத்திலே எமது தமிழீழ மக்களின் அடிப்படை சனனாயக உரிமைகள் சிங்கள இனவெறியாளர்களினால் மிதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
 
சிங்கள ஆதிக்க சக்திகளின் இவ் எல்லை மீறிய பயங்கரவாதத்தை அனைத்துலகில் அம்பலப்படுத்துவதோடு தாயகத்தில் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நாம் அனைத்துலக அரங்கில் தொடர்ந்து போராடுவோம்.
 
அந்த வகையில் எதிர்வரும் 20.06.2013  அன்று Cardiff Wales Stadium  இல் சிங்களவெறியர்களின் அகங்காராச் சின்னமாக திகழ்கின்ற சிங்கள துடுப்பாட்ட அணியினர் பங்குபற்றுகின்ற நிகழ்வில் அவர்களது இனவெறித்தனத்தை அனைத்துலக அரங்கில் மீண்டும் அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்.
 
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16094:britain-s-savage-attack-on-london-life,-sinhalese,-tamils-%E2%80%8B%E2%80%8Bof-eelam-students-coordination-committee-denounced&catid=86:eezham&Itemid=104

வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

11 hours 14 min ago
வட மாகாணத்தில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நாட்டின் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கான பிரத்தியேக இடமாக இருக்கக் கூடாது .யுத்தத்தின் பின்னர் அனைத்து இனங்களுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த தாமதமின்றி வடக்கில் அனைத்து இன மக்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை  விடுத்துள்ளார்.
 
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் இந்த நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும்


யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் மாவட்டங்களில் சிங்கள மக்கள் காணி கொள்வனவு செய்யும் உரிமையை ஒடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை பிரச்சாரம் செய்து வரும் தரப்பினர் இன நல்லிணக்கம் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். ஏனைய இனத்தவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை தொடரும் வரையில் பிரிவினைவாதத்தை ஒழிக்க முடியாது.

பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழந்து வருகின்றனர். இதேபோன்று ஏனையவர்களும் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். -  http://onlineuthayan.com/News_More.php?id=894542113519138798#sthash.MnQeUH2M.dpuf

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை திடுக்கிட வைத்துள்ள சிறிலங்கா

11 hours 17 min ago

வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் தன்னைக் கலக்கமடையச் செய்துள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

 

நேற்றுமாலை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.

 

வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், 13வது திருத்தச்சட்டத்தின் முக்கியமான அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள திட்டங்கள், தன்னை திடுக்கிடச் செய்துள்ளதாகவும்,

 

முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு மாற்ற யோசனைகள், சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கும், ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கும், 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலமான அரசியல் தீர்வு ஒன்றுக்கு பரிந்துரைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் முரணானது.இந்தச் சந்திப்பில் சிறிலங்காவில் உள்ள தமிழ் சமூகத்தின் நலன்கள் குறித்து இந்திய பிரதமர் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார்.

 

 தமிழர்கள் கெரளவமான, சமத்துவமாக வாழ்வதற்கும், எதிர்கால நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.” என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=388872112019854829

தளபதிகள் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்: ஜகத் ஜயசூரிய

11 hours 29 min ago

வருங்கால தளபதிகள் அதிசிறந்த விளைவை பெறுவதற்காக உழைக்கும் அதேசமயம், இனி வரக்கூடிய சவால்களையும் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என புதிததாக ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பல உயர் இராணுவ அதிகாரிகள் இடையே உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இராணுவத்தில் சேவையாற்றும் சகலரின் முயற்சியாலும் எட்டப்பட்டுள்ள தராதரம், பண்புத்தரம், என்பவற்றை பேணுதற்கு ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

இராணுவத்தில் எப்போதும் கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனவும் இதை எக்காலத்திலும் தளரவிடக்கூடாது.

இராணுவத்துக்கு வருங்காலத்தில் வெளிநாட்டு அனுபவங்களை வழங்குவதற்காக ஐ.நா. படையில் பணிபுரிய வாய்ப்புகளும் வெளிநாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்' என்றார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71479-2013-06-19-06-33-13.html

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

11 hours 30 min ago
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வரும் அமீர் அலி முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வாகன விபத்தில் 8 பள்ளிமாணவர்கள் உட்பட 9 பேர் பலி

11 hours 30 min ago

புதுக்கோட்டை அருகே இன்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் எட்டு பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றனர்.

 

கைக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வல்லத்திராக்கோட்டையில் அவர்கள் பயிலும் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர். நெடுநேரமாகியும் பஸ் எதுவும் வராத நிலையில் அவர்கள் அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் பயணித்தனர்

அப்போது, புதுக்கோட்டையிலிருந்து எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து, அந்த வாகனத்தின் மீது மோதியது.

இதில் சரக்கு வாகனத்திலிருந்த 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும், மேலும் ஒரு மாணவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். வாகன ஓட்டுநரின் உதவியாளரும், மேலும் 3 மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததன் காரணமாகவே இப்படி அபாயகரமான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறதென கைக்குறிச்சி மக்கள் கூறுகின்றனர்

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/06/130619_tamilnadustudent.shtml

Pages