Aggregator

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

3 months ago
பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த காலத்தில் அவர்களின் பசியையும் அவர்களை தேடி வருவோரின் பசியையும் போக்க அக்ஷயபாத்திரம் மிக உதவியாக இருந்தது. அது யுதிஷ்ட்டிரனுக்கு சூரியன் அன்பளிப்பாக வழங்கியது. ஆனால் , ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே அது உணவை அளிக்கும். அன்றைய தேவை முடிந்து அதை தேய்த்து வைத்துவிட்டால் மறுநாளே அதன் மூலம் உணவை வரவழைக்க முடியும். ஒருமுறை, ஹஸ்தினாபுரத்தில் இருந்த கௌரவர்களின் அரண்மனைக்கு தனது சீடர்களுடன் வருகை தந்தார் ரிஷி துர்வாசர். மிக கோபக்காரர் என்று பெயர் பெற்றவர் அவர். அவரை மிக மரியாதையுடன் நடத்திய துரியோதனன், அவருக்கும் அவரது சிஷ்யர்களுக்கு சிறந்த விருந்தை அளித்தான். அதனால் மனமகிழ்ந்தார் துர்வாசர். அவர் கிளம்பும் சமயத்தில், அவரிடம் அவர்கள் வனத்தில் இருக்கும் பாண்டவர்களையும் சந்தித்து அவர்களுக்கும் ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான். அப்படியே செய்வதாக அவரும் வாக்களித்தார். வனத்தில் இருக்கும் பாண்டவர்களால் அறுசுவை விருந்து அளிக்க இயலாது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பது துரியோதனின் எண்ணம். அவனுக்கு அளித்த வாக்குப்படியே ஒரு நாள் உச்சி பொழுது கடந்தபின், வனத்தில் இருந்தது பாண்டவர்களின் வசிப்பிடத்தை அடைந்தனர் துர்வாசரும் அவரது சீடர்களும். திரௌபதியை அழைத்த துர்வாசர் அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் நீராடி வருவதற்குள் உணவை தயார் செய்து வைக்குமாறும் கூறிவிட்டு அருகில் இருந்த நீர்நிலைக்கு சென்றனர். அன்று அனைவரும் உணவு அருந்திவிட்டக் காரணத்தினால் அக்ஷயபாத்திரத்தை தேய்த்து கழுவி வைத்து விட்டாள். என்ன செய்வதென்று புரியாமல், எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தித்தாள். சில நிமிட நேரத்தில் அங்கே வந்த கிருஷ்ணன்,” திரௌபதி! என்னை எதற்கு அழைத்தாய்? எதுவாக இருந்தாலும் சில நிமிடங்கள் காத்திருக்கட்டும். நான் மிகுந்த பசியில் உள்ளேன். ஏதாவது உணவு கொண்டு வா!” என்றான். தானே உணவு இல்லாத பிரச்சனைக்கு அவனை அழைக்க அவனோ உணவு கேட்டால் எங்கே செல்ல என நடந்ததைக் கூறினாள் பாஞ்சாலி. அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணன் “கவலைப்படாதே! அந்த பாத்திரத்தைக் கொண்டு வா!” எனக் கூறினான். அவள் கொண்டு வந்த அக்ஷயபாத்திரத்தை கவனமாக பார்த்தவன் அதில் ஓரத்தில் ஒட்டியிருந்த ஒரு துணுக்கு சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு “அனைவரின் பசியும் ஆறட்டும்” எனக் கூறினான். பாத்திரத்தை ஒழுங்காகக் கழுவாமல் கிருஷ்ணனுக்கு எச்சில் உணவை அளித்தமைக்கு தன்னையே நொந்துக் கொண்டாள் அவள். அந்த ஒரு துணுக்கை சாப்பிடப்பின் பீமனை அழைத்த கிருஷ்ணன் ஆற்றுக்கு சென்று ரிஷியையும் அவரது சீடர்களையும் அழைத்து வருமாறு கட்டளையிட்டான். அவன் ஆற்றுக்கு சென்றே அதே நேரம் குளித்துக் கரையேறிய சீடர்கள் அனைவரும் அப்பொழுதுதான் உணவருந்தியது போன்று உணர்ந்தனர். அதை அவர்கள் கூறியதை கேட்ட துர்வாசரும் தனக்கும் அவ்விதமே இருப்பதாக கூறி, இந்நிலையில் பாண்டவர்களை சந்திக்க வெட்கி, பீமனிடம் தங்கள் வயிறு நிறைந்து விட்டதாகாக் கூறி அங்கிருந்தே அனைவரையும் ஆசிர்வதித்து விடைபெற்றனர். கிருஷ்ணனின் அருளால் தங்களுக்கு வந்த ஆபத்தை வென்ற பாண்டவர்கள் அவனை வணங்கினர். அஷ்டவக்கிரர் பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது பல ரிஷிகள் இருந்த தவம் செய்த இடங்களுக்கு சென்றனர். அவர்கள் சென்ற இடத்தின் புனிதத்தையும் அங்கிருந்த ரிஷிகளின் வரலாற்றையும் அவர்களுக்கு ரிஷி லோமேசர் உபதேசித்தார். அவர்கள் உத்தாலக்கரின் ஆசிரமத்துக்கு சென்ற பொழுது அவரின் வரலாற்றை கூறினார். உத்தாலக்கருக்கு இருந்த பல சிஷ்யர்களில் ஒருவர் ககோலா. காகோலா மிக அறிவு கூர்மை வாய்ந்தவர் எனக் கூற முடியாதெனினும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பவர். அவரது நடவடிக்கைகளால் மகிழ்ந்த உத்தாலக்கர், தனது மகளை அவருக்கு மணமுடித்தார். ககோலாவின் வேத அறிவு எந்த அளவிற்கு மோசமானதென்றால், அவரின் தவறான உச்சரிப்பினைக் கேட்டு தாயின் வயிற்றில் கர்ப்பப்பையில் இருந்த கரு நெளியுமாம். அப்படி பல முறை நெளிந்ததால் பிறக்கும் பொழுதே உடல் எட்டு இடங்களில் கோணலுடன் பிறந்தார். அதனால் ” அஷ்டவக்கிரர் ” என அழைக்கப்பட்டார். ஒருமுறை யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல். ஜனகரின் அரசவையை சேர்ந்த வந்தி என்ற அறிஞரிடம் வாதத்திற்கு சென்றார் ககோலா. அந்த வாதத்தில் தோற்பவர் கடலில் மூழ்கி உயிரிழக்க வேண்டும் என்பதே பந்தயம். அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே ககோலா தோல்வியுற்று தனது உயிரை நீத்தார். அவருக்கு முன் பல அறிஞர்கள் இவ்விதம் தங்கள் உயிரை நீத்துள்ளனர். உடலில் குறியுடன் பிறந்தாலும், அஷ்டவக்கிரர் மிகுந்த ஞானத்துடனும் அறிவுடனும் விளங்கினார். இளம் வயதிலேயே வேத, வேதாந்தங்களை கரைத்துக் குடித்து ஞானியாக விளங்கினார். இதற்கு இடையில், மிதிலாவின் அரசனான ஜனகர் மிகப் பெரிய யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். யாகம் நடைபெற்றக் காலத்தில் அவரது அரசவையில் பலவித விவாதங்கள் நடைபெறும் எனவும் அறிவித்தார். தனது தருணத்தை உணர்ந்த அஷ்டவக்கிரரும் அங்கே சென்றார். அரசு ஊர்வலம் வந்துக் கொண்டிருந்த பாதைக்கு சென்றவர், அரச பரிவாரங்களுக்கு நடுவே நடக்க துவங்கினார். அதைக் கண்ட காவலாளிகள் அவரை ஒதுங்க சொல்ல “எளியவர்களுக்கும், முடியாதவர்களுக்கு வழி விட வேண்டியது அரச தர்மம் இல்லையா?” என வினவினார். ஜனகர் அந்த நாளின் மிகப் பெரிய ஞானிகளில் ஒருவர். இல்லற தர்மத்தில் இருந்தாலும் அதில் மூழ்கி விடமால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்ந்தவர். அஷ்டவக்கிரர் சொன்னதைக் கேட்டவுடன் அவரது சிறப்பை அறிந்துக் கொண்ட ஜனகர், அவருக்கு வழி விட்டார். மேலும், அவர் மிதிலைக்கு வந்ததன் காரணத்தை அறிந்துக் கொண்டே வந்தியுடன் விவாதத்திற்கு ஏற்பாடும் செய்தார். சில நாட்கள் நீடித்த அந்த விவாதத்தின் முடிவில் அஷ்டவக்கிரர் வந்தியை தோற்கடித்தார். தோல்வியை ஒப்புக் கொண்ட வந்தியும் நதியில் மூழ்கி தனது உயிரை நீத்தார். தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கிய அஷ்டவக்கிரர், பிற்காலத்தில் ஒரு முனிவரின் வரத்தால் தனது உடல் குறை நீங்கப் பெற்றார். https://solvanam.com/2025/05/11/பெரும்-பசியை-ஆற்றிய-ஒரு-ப/

விமர்சனம் : இட்லி கடை!

3 months ago
விமர்சனம் : இட்லி கடை! 2 Oct 2025, 1:18 PM இது ‘பீல்குட் மூவி’யா?! தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. மூன்றாவது படம் தவிர மற்றனைத்திலும் அவர் நாயகனாக அல்லது ஒரு பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறார். ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஒருசேரத் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா? ’சிம்பிள்’ கதை! ‘இட்லி கடை’ படத்தின் கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி; மிக எளிய வார்ப்பில் அமைந்திருக்கின்றன. அமைதியும் இனிமையும் மிக்க கிராமத்திலேயே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வெளியூருக்குப் புறப்படுகிறார் ஒரு இளைஞன். சென்னை, பாங்காக் என்று அவரது பயணம் அமைகிறது. அந்த இளைஞனின் தாய் தந்தையோ ‘தாங்கள் நடத்தி வரும் இட்லிக்கடையைத் தங்களுக்குப் பின்னர் மகன் நடத்த வேண்டும்’ என்று பிரியப்படுகின்றனர். ஆனால், அவரோ அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார். பாங்காக்கில் அவர் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஒரு மகன், மகள். அந்தப் பெண் இந்த நபர் மீது காதல் கொள்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த இளைஞர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரது பெற்றோர் கிராமத்திலிருந்து விமானம் ஏறி பாங்காக்கில் நடைபெறுகிற திருமணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இல்லை. இந்த நிலையில், அவரது தந்தை திடீரென்று மரணமடைகிறார். அதனைக் கேட்டதும், ‘கல்யாணத்தை தள்ளி வைப்பது முடியாத காரியம். எப்படியாவது இறுதிச்சடங்குகளை முடிச்சுட்டி திரும்ப வந்துருங்க’ என்று மருமகனாக வரப் போகிறவரிடம் சொல்லி அனுப்புகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளர். தங்களிடம் வேலை செய்கிற நபரை அவருடன் அனுப்பி வைக்கிறார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபிறகு, அந்த இளைஞரை இன்னொரு இடி தாக்குகிறது. அவரது தாயும் மரணிக்கிறார். அடுத்தடுத்தாற்போல நிகழ்ந்த இரண்டு துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறபோது, ‘இப்போ பாங்காக் வரப்போறியா இல்லையா’ என அந்த நபரை அடித்து இழுத்துச் செல்லத் தயாராகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன். சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவருக்கு, இதர மனிதர்களைப் பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ துளியும் அக்கறை கிடையாது. அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞர் என்ன செய்தார்? தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அவர் வெளியேறினாரா? அந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகளும் இந்தியா வந்தனரா? அந்த கிராமத்தினர் அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்றார்களா என்று சொல்கிறது ‘இட்லி கடை’ படத்தின் மீதி. இந்தக் கதையில் பிரதான பாத்திரங்கள் அனைத்துமே தெளிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. நாயக பாத்திரம் மட்டுமே சிறிது குழப்பமானதாகக் காட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரொம்பவே சுயநலமானதாகத் தெரிகிறது. அதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருந்தால், இந்த ‘இட்லி கடை’ இன்னும் சுவையானதாக மாறியிருக்கும். இயக்குனராக ஜெயித்த தனுஷ்! தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் வழியே, ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’, ‘இதுதான் நானா’, ‘இவ்வளவு சகிப்புத்தன்மைக்குப் பின்னால் இருப்பது பணம் மீதுள்ள வேட்கையா’ என்கிற கேள்விகளைத் தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார் தனுஷ். ஆனால், படம் முடிந்தபிறகே அந்த பாவனைகளுக்கான பொருள் பிடிபடுகிறது. போலவே, நித்யா மெனனின் இருப்பு தொடக்கத்தில் செயற்கையாகத் தெரிகிறது. மெதுவாக, அவர் திரைக்கதையில் ஒரு அங்கமாக மாறுகிறார். திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி போன்ற படங்களில் தொடக்கம் முதலே தனது இருப்பை அவர் நிலைநாட்டியிருப்பார். இது போன்ற குறைகள் இப்படத்தின் நாயகன், நாயகி பாத்திரங்களில் தென்படுகின்றன. இன்னொரு நாயகியாக இதில் ஷாலினி பாண்டே வருகிறார். அவரது பாத்திர வார்ப்பில் குறைகள் இல்லை என்றபோதும், திரைக்கதையில் போதுமான இடம் அவருக்குத் தரப்படவில்லை. இந்த படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம் பாத்திரங்கள் மிக எளிமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர்களும் படத்தின் அங்கமாக மாறியிருக்கின்றனர். அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஓரம் கட்டுவது போன்று ‘கிளாஸ் பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார் சத்யராஜ். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் இதுவே ‘பெஸ்ட்’ . இவர்கள் போக இளவரசு, இந்துமதி, நரேன், சமுத்திரக்கனி, போலீஸ்காரராக வரும் பார்த்திபன், இட்லி கடைக்கு வரும் தாத்தா, ஊர்காரர்களாக வருபவர்கள் என்று பலர் இதிலுண்டு. கீதா கைலாசம், ராஜ்கிரண் பாத்திரங்களின் இளம்பிராயத்தைக் காட்ட பிரிகிடாவும் ஒரு இளைஞரும் நடித்துள்ளனர். அவர்களோடு வடிவுக்கரசியும் இடம்பிடித்திருக்கிறார். அவர்கள் வருகிற காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்டியிருக்கலாம். இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ். நீண்ட காலம் கழித்து தனது குடும்பத்தினரை இளவரசு பாத்திரம் சந்திக்கிற காட்சி, கன்றுகுட்டியாய் தந்தையே பிறந்திருப்பதாக தனுஷ் உணரும் காட்சி, வில்லனிடம் காசு வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பாத்திரம் தனுஷ் கடையை காலி செய்ததா இல்லையா என்பதைச் சொல்லும் காட்சி என ‘இட்லி கடை’யில் வரும் சில காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நம்மையும் அறியாமல் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. அந்த வகையில், சுமார் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிவைத்து ஒவ்வொரு பிரேமையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். வில்லன் வசிக்குமிடத்தைச் சுற்றி வளைத்த ஊர் மக்கள் ‘நாங்க உள்ள வந்தமா, உள்ள வந்தமா. அதே நேரத்துல நீங்களும் வெளியே போக முடியாது’ என வில்லனின் அடியாட்களை மிரட்டுகிற இடத்தில், தியேட்டரில் விசில் சத்தம் அள்ளுகிறது. இப்படித் தேவையான இடங்களில் ‘ஹீரோயிசம்’ புகுத்தியிருக்கிறார் இயக்குனர். பெரும்பாலான இடங்களில் ‘ட்ராமா’ தான் நல்லது என்று பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் காட்டியிருக்கிறார். அதனை ரசிப்பவர்களுக்கு ‘இட்லி கடை’ ரொம்பவே பிடிக்கும். அதனை ரசிக்காதவர்களுக்கு இது கேலி கிண்டலுக்கான ஒரு வஸ்து. படம் பார்ப்பவர்கள் திரையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு, ஒவ்வொரு பிரேமையும் எப்படி அளவெடுத்தாற்போல வடிக்க வேண்டும்; ஒவ்வொரு காட்சியையும் நூல் கோர்த்தாற் போலத் திரைக்கதையில் அடுக்க வேண்டுமென்பதில் ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் தனுஷ். பாங்காக்கின் பரபரப்பு, சங்கராபுரம் எனும் கிராமத்தின் நிதானம் இரண்டையும் திரையில் திறம்படக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக். பிரேமுக்குத் தேவையான பின்னணியை ‘செட்’ செய்து தருவதில் ‘ஜித்தன்’ஆக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி. இந்தக் கதையில் ராஜ்கிரண், கீதா கைலாசம், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலரது இருப்பு குறைவாகவே உள்ளது. அவற்றை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்ப்பதே திரைக்கதையைத் தொய்வானதாக ஆக்காமல் இருக்க உதவும் என்று நினைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா. அது சில இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை. ஆடை வடிவமைப்பு பெரிதாகக் கண்களை உறுத்தாவிட்டாலும், அந்தந்த காட்சிகளின் தன்மையோடு பொருந்தி நிற்கவில்லை. மற்றபடி ஒப்பனை, சண்டைக்காட்சி வடிவமைப்பு, நடனம், ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ‘எஞ்சாமி தந்தானே’, ‘என்ன சுகம்’, ‘என் பாட்டன் சாமி வரும்’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. திரைக்கதையோடும் பொருந்தி நிற்கின்றன. பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை அள்ளித் தந்திருக்கிறார் ஜி.வி.பி. உணர்வுமயமான காட்சிகளில் கண்களின் தளும்பும் நீரைக் கீழே தள்ளிவிடுவதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெல்டன்! ‘உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடும்’ என்று ’கவித்துவமாக’ ரசிகர்கள் உணர்கிற வகையில் பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார். ஒரு நாயகன் இயக்குனர் ஆகும்போது, தனது பாத்திரத்தை முன்னிறுத்துகிற கதையமைப்பையே தேர்வு செய்வார். ‘இட்லி கடை’யும் அப்படிப்பட்டதுதான். ஆனால், இதில் இதர பாத்திரங்கள் ‘ஸ்கோர்’ செய்ய நிறைய இடமிருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் அசத்தியிருக்கின்றனர். அனைத்துக்கும் மேலே, ஒரு எளிமையான உள்ளடக்கம் சிறப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. கூடவே, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வின் மாண்புகளைச் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு, ‘இட்லிக் கடை வச்சிட்டா அவங்க வாரிசுகளும் அதையே தான் பின்தொடரணுமா’ என்கிற விதமான கேள்விகள் எழக்கூடும். குலக்கல்வி போன்று குலத்தொழில் என்கிற முத்திரையைக் குத்த இது உதவுகிறதா என்ற சந்தேகம் எழலாம். அவற்றைத் தீர்க்க, இப்படத்தில் போதுமான விளக்கம் இல்லை. அது ஒரு பலவீனம் தான். ஆனால், அப்படியொரு காரண காரியத்தோடு இப்படம் உருவாக்கப்படவில்லை என்பதனை தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் உணர முடியும். அந்த ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டால், நல்லதொரு ‘பீல்குட் மூவி’ பார்த்த திருப்தியை ’இட்லி கடை’யில் நிறையவே தருகிறார் இயக்குனர் தனுஷ். https://minnambalam.com/dhanush-movie-idly-kadai-review/#google_vignette

விமர்சனம் : இட்லி கடை!

3 months ago

விமர்சனம் : இட்லி கடை!

2 Oct 2025, 1:18 PM

idly-kadai-rview.jpg

இது ‘பீல்குட் மூவி’யா?!

தமிழில் பாக்யராஜ், பாண்டியராஜன், டி.ராஜேந்தர், பார்த்திபன் என்று வெகு சிலரே தாம் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வெற்றிகளைச் சுவைத்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்றவர்கள் அம்முயற்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னொருபுறம் நாயகர்களாக விளங்கிய சிலர் நடிப்பைத் தாண்டி தமது திறமைகளை வெளிக்காட்ட அல்லது இதர சில காரணங்களுக்காக இயக்குனர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், அர்ஜுன், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் என்று அந்தப் பட்டியலும் கொஞ்சம் பெரியதுதான். அந்த வரிசையில் இடம்பெறுகிற இளைய நட்சத்திரங்களில் ஒருவர் தனுஷ்.

பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து நான்காவதாக அவர் தந்திருக்கும் திரைப்படம் ‘இட்லி கடை’. மூன்றாவது படம் தவிர மற்றனைத்திலும் அவர் நாயகனாக அல்லது ஒரு பாத்திரமாக இடம்பிடித்திருக்கிறார்.

‘இட்லி கடை’ திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஒருசேரத் தனுஷ் வெற்றி பெற்றிருக்கிறாரா?

’சிம்பிள்’ கதை!

image-3-1024x576.png

‘இட்லி கடை’ படத்தின் கதையும் சரி, கதாபாத்திரங்களும் சரி; மிக எளிய வார்ப்பில் அமைந்திருக்கின்றன.

அமைதியும் இனிமையும் மிக்க கிராமத்திலேயே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்கிற பெற்றோரின் ஆசையைப் புறந்தள்ளிவிட்டு, பணம் சம்பாதிக்கிற வேட்கையில் வெளியூருக்குப் புறப்படுகிறார் ஒரு இளைஞன். சென்னை, பாங்காக் என்று அவரது பயணம் அமைகிறது.

அந்த இளைஞனின் தாய் தந்தையோ ‘தாங்கள் நடத்தி வரும் இட்லிக்கடையைத் தங்களுக்குப் பின்னர் மகன் நடத்த வேண்டும்’ என்று பிரியப்படுகின்றனர். ஆனால், அவரோ அவர்களைத் தவிக்க விட்டுவிட்டு வேறு ஊரில் வாழ்ந்து வருகிறார்.

பாங்காக்கில் அவர் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளருக்கு ஒரு மகன், மகள். அந்தப் பெண் இந்த நபர் மீது காதல் கொள்கிறார்.

இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

அந்த இளைஞர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவரது பெற்றோர் கிராமத்திலிருந்து விமானம் ஏறி பாங்காக்கில் நடைபெறுகிற திருமணத்தில் கலந்துகொள்ளத் தயாராக இல்லை.

இந்த நிலையில், அவரது தந்தை திடீரென்று மரணமடைகிறார்.

அதனைக் கேட்டதும், ‘கல்யாணத்தை தள்ளி வைப்பது முடியாத காரியம். எப்படியாவது இறுதிச்சடங்குகளை முடிச்சுட்டி திரும்ப வந்துருங்க’ என்று மருமகனாக வரப் போகிறவரிடம் சொல்லி அனுப்புகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளர். தங்களிடம் வேலை செய்கிற நபரை அவருடன் அனுப்பி வைக்கிறார்.

image-5-1024x426.png

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபிறகு, அந்த இளைஞரை இன்னொரு இடி தாக்குகிறது. அவரது தாயும் மரணிக்கிறார்.

அடுத்தடுத்தாற்போல நிகழ்ந்த இரண்டு துக்க நிகழ்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறபோது, ‘இப்போ பாங்காக் வரப்போறியா இல்லையா’ என அந்த நபரை அடித்து இழுத்துச் செல்லத் தயாராகிறார் அந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன்.

சிறு வயது முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவருக்கு, இதர மனிதர்களைப் பற்றியோ, அவர்களது மனநிலை பற்றியோ துளியும் அக்கறை கிடையாது. அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த அந்த இளைஞர் என்ன செய்தார்?

தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அவர் வெளியேறினாரா? அந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகளும் இந்தியா வந்தனரா? அந்த கிராமத்தினர் அந்த இளைஞருக்கு ஆதரவாக நின்றார்களா என்று சொல்கிறது ‘இட்லி கடை’ படத்தின் மீதி.

image-4.png

இந்தக் கதையில் பிரதான பாத்திரங்கள் அனைத்துமே தெளிவாக வார்க்கப்பட்டிருக்கின்றன. நாயக பாத்திரம் மட்டுமே சிறிது குழப்பமானதாகக் காட்டப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரொம்பவே சுயநலமானதாகத் தெரிகிறது. அதனைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருந்தால், இந்த ‘இட்லி கடை’ இன்னும் சுவையானதாக மாறியிருக்கும்.

இயக்குனராக ஜெயித்த தனுஷ்!

தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகள் வழியே, ‘என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான்’, ‘இதுதான் நானா’, ‘இவ்வளவு சகிப்புத்தன்மைக்குப் பின்னால் இருப்பது பணம் மீதுள்ள வேட்கையா’ என்கிற கேள்விகளைத் தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார் தனுஷ். ஆனால், படம் முடிந்தபிறகே அந்த பாவனைகளுக்கான பொருள் பிடிபடுகிறது.

போலவே, நித்யா மெனனின் இருப்பு தொடக்கத்தில் செயற்கையாகத் தெரிகிறது. மெதுவாக, அவர் திரைக்கதையில் ஒரு அங்கமாக மாறுகிறார். திருச்சிற்றம்பலம், தலைவன் தலைவி போன்ற படங்களில் தொடக்கம் முதலே தனது இருப்பை அவர் நிலைநாட்டியிருப்பார்.

இது போன்ற குறைகள் இப்படத்தின் நாயகன், நாயகி பாத்திரங்களில் தென்படுகின்றன.

image-7.png

இன்னொரு நாயகியாக இதில் ஷாலினி பாண்டே வருகிறார். அவரது பாத்திர வார்ப்பில் குறைகள் இல்லை என்றபோதும், திரைக்கதையில் போதுமான இடம் அவருக்குத் தரப்படவில்லை.

இந்த படத்தில் ராஜ்கிரண், கீதா கைலாசம் பாத்திரங்கள் மிக எளிமையாக வார்க்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர்களும் படத்தின் அங்கமாக மாறியிருக்கின்றனர்.

அருண் விஜய் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரை ஓரம் கட்டுவது போன்று ‘கிளாஸ் பெர்பார்மன்ஸ்’ தந்திருக்கிறார் சத்யராஜ். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் இதுவே ‘பெஸ்ட்’

image-9.png

.

இவர்கள் போக இளவரசு, இந்துமதி, நரேன், சமுத்திரக்கனி, போலீஸ்காரராக வரும் பார்த்திபன், இட்லி கடைக்கு வரும் தாத்தா, ஊர்காரர்களாக வருபவர்கள் என்று பலர் இதிலுண்டு.

கீதா கைலாசம், ராஜ்கிரண் பாத்திரங்களின் இளம்பிராயத்தைக் காட்ட பிரிகிடாவும் ஒரு இளைஞரும் நடித்துள்ளனர். அவர்களோடு வடிவுக்கரசியும் இடம்பிடித்திருக்கிறார். அவர்கள் வருகிற காட்சிகளை இன்னும் கொஞ்சம் விலாவாரியாக காட்டியிருக்கலாம்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ்.

நீண்ட காலம் கழித்து தனது குடும்பத்தினரை இளவரசு பாத்திரம் சந்திக்கிற காட்சி, கன்றுகுட்டியாய் தந்தையே பிறந்திருப்பதாக தனுஷ் உணரும் காட்சி, வில்லனிடம் காசு வாங்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பாத்திரம் தனுஷ் கடையை காலி செய்ததா இல்லையா என்பதைச் சொல்லும் காட்சி என ‘இட்லி கடை’யில் வரும் சில காட்சிகள் நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நம்மையும் அறியாமல் கண்களில் நீரைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன.

அந்த வகையில், சுமார் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் குறிவைத்து ஒவ்வொரு பிரேமையும் இழைத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.

image-6.png

வில்லன் வசிக்குமிடத்தைச் சுற்றி வளைத்த ஊர் மக்கள் ‘நாங்க உள்ள வந்தமா, உள்ள வந்தமா. அதே நேரத்துல நீங்களும் வெளியே போக முடியாது’ என வில்லனின் அடியாட்களை மிரட்டுகிற இடத்தில், தியேட்டரில் விசில் சத்தம் அள்ளுகிறது.

இப்படித் தேவையான இடங்களில் ‘ஹீரோயிசம்’ புகுத்தியிருக்கிறார் இயக்குனர். பெரும்பாலான இடங்களில் ‘ட்ராமா’ தான் நல்லது என்று பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் காட்டியிருக்கிறார்.

அதனை ரசிப்பவர்களுக்கு ‘இட்லி கடை’ ரொம்பவே பிடிக்கும். அதனை ரசிக்காதவர்களுக்கு இது கேலி கிண்டலுக்கான ஒரு வஸ்து.

படம் பார்ப்பவர்கள் திரையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு, ஒவ்வொரு பிரேமையும் எப்படி அளவெடுத்தாற்போல வடிக்க வேண்டும்; ஒவ்வொரு காட்சியையும் நூல் கோர்த்தாற் போலத் திரைக்கதையில் அடுக்க வேண்டுமென்பதில் ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் தனுஷ்.

பாங்காக்கின் பரபரப்பு, சங்கராபுரம் எனும் கிராமத்தின் நிதானம் இரண்டையும் திரையில் திறம்படக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கௌசிக்.

பிரேமுக்குத் தேவையான பின்னணியை ‘செட்’ செய்து தருவதில் ‘ஜித்தன்’ஆக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் ஜாக்கி.

இந்தக் கதையில் ராஜ்கிரண், கீதா கைலாசம், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலரது இருப்பு குறைவாகவே உள்ளது. அவற்றை விலாவாரியாகக் காட்டாமல் தவிர்ப்பதே திரைக்கதையைத் தொய்வானதாக ஆக்காமல் இருக்க உதவும் என்று நினைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா. அது சில இடங்களில் ‘வொர்க் அவுட்’ ஆகவில்லை.

ஆடை வடிவமைப்பு பெரிதாகக் கண்களை உறுத்தாவிட்டாலும், அந்தந்த காட்சிகளின் தன்மையோடு பொருந்தி நிற்கவில்லை.

மற்றபடி ஒப்பனை, சண்டைக்காட்சி வடிவமைப்பு, நடனம், ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

image-8.png

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் ‘எஞ்சாமி தந்தானே’, ‘என்ன சுகம்’, ‘என் பாட்டன் சாமி வரும்’ பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. திரைக்கதையோடும் பொருந்தி நிற்கின்றன.

பின்னணி இசையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு காட்சியிலும் தனது பங்களிப்பை அள்ளித் தந்திருக்கிறார் ஜி.வி.பி. உணர்வுமயமான காட்சிகளில் கண்களின் தளும்பும் நீரைக் கீழே தள்ளிவிடுவதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெல்டன்!

‘உள்ளுக்குள் ஏதோ ஒன்று உருண்டோடும்’ என்று ’கவித்துவமாக’ ரசிகர்கள் உணர்கிற வகையில் பின்னணி இசையில் மாயாஜாலம் செய்திருக்கிறார்.

ஒரு நாயகன் இயக்குனர் ஆகும்போது, தனது பாத்திரத்தை முன்னிறுத்துகிற கதையமைப்பையே தேர்வு செய்வார். ‘இட்லி கடை’யும் அப்படிப்பட்டதுதான். ஆனால், இதில் இதர பாத்திரங்கள் ‘ஸ்கோர்’ செய்ய நிறைய இடமிருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் அசத்தியிருக்கின்றனர்.

அனைத்துக்கும் மேலே, ஒரு எளிமையான உள்ளடக்கம் சிறப்பான திரையனுபவத்தை வழங்குகிறது. கூடவே, எதிர்காலத் தலைமுறையினருக்கு வாழ்வின் மாண்புகளைச் சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது.

இந்த படத்தைப் பார்த்துவிட்டு, ‘இட்லிக் கடை வச்சிட்டா அவங்க வாரிசுகளும் அதையே தான் பின்தொடரணுமா’ என்கிற விதமான கேள்விகள் எழக்கூடும். குலக்கல்வி போன்று குலத்தொழில் என்கிற முத்திரையைக் குத்த இது உதவுகிறதா என்ற சந்தேகம் எழலாம்.

image-10.png

அவற்றைத் தீர்க்க, இப்படத்தில் போதுமான விளக்கம் இல்லை. அது ஒரு பலவீனம் தான்.

ஆனால், அப்படியொரு காரண காரியத்தோடு இப்படம் உருவாக்கப்படவில்லை என்பதனை தியேட்டரில் இருந்து வெளியேறுகையில் உணர முடியும்.  

அந்த ஒரு விஷயத்தைக் கடந்துவிட்டால், நல்லதொரு ‘பீல்குட் மூவி’ பார்த்த திருப்தியை ’இட்லி கடை’யில் நிறையவே தருகிறார் இயக்குனர் தனுஷ். 

https://minnambalam.com/dhanush-movie-idly-kadai-review/#google_vignette

புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா?

3 months ago

புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா?

3 Oct 2025, 9:04 AM

bussy.jpg

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. 

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புஸ்ஸி ஆனந்த்தும், நிர்மல் குமாரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு இன்று நீதிபதி ஜோதிராமன் முன் விசாரணைக்கு வருகிறது. 

இந்த வழக்கு விசாரணையின் போது அதிமுக, பாஜக வழக்குகளில் அதிகம் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் சார்பில் ஆஜராகி வாதாடவுள்ளார்.

அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவிடைக்குமார் ஆஜராகி வாதாடுகிறார்,

காலை 11 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது, 12 மணிக்குள் புஸ்ஸி ஆனந்துக்கு பெயில் கிடைக்குமா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிந்துவிடும்.

https://minnambalam.com/bussy-anand-anticipatory-bail-plea-today-trail/

புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா?

3 months ago
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா? 3 Oct 2025, 9:04 AM தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை போலீசார் கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புஸ்ஸி ஆனந்த்தும், நிர்மல் குமாரும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று நீதிபதி ஜோதிராமன் முன் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது அதிமுக, பாஜக வழக்குகளில் அதிகம் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் சார்பில் ஆஜராகி வாதாடவுள்ளார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் திருவிடைக்குமார் ஆஜராகி வாதாடுகிறார், காலை 11 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது, 12 மணிக்குள் புஸ்ஸி ஆனந்துக்கு பெயில் கிடைக்குமா அல்லது சிறை செல்வாரா என்பது தெரிந்துவிடும். https://minnambalam.com/bussy-anand-anticipatory-bail-plea-today-trail/

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

3 months ago
ஸ்ரீ லங்கா தீவு மக்கள் பல கோஸ்டிகளை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள் தான். புலம்பெயர் ஈழதமிழர்கள் கூவி கூவி அதிகம் விளம்பரம் செய்வது தற்போதைய இந்த கோஸ்டிக்கு தான்.

மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்;  ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன்

3 months ago
மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்; ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன் இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற 37 ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்; சமாதான காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைப் பற்றிய என் நீண்டகாலக் கவலைவை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கொடுங்கோண்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர். தற்போது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து நடைபெற்று வந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 2013 முதல், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, 2009 மே மாத இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம். எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். இந்நடவடிக்கைக்கு சீர்மை இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம். ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் தங்களை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர். நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதிர்ந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர், சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது. உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்றார். https://akkinikkunchu.com/?p=343176

மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்;  ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன்

3 months ago

மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும்;  ஜெனீவா கூட்டத் தொடரின் 37 ஆவது அமர்வில் சிறிதரன்

Sritharn-.webp

இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென ஐ.நா.வின் தீர்மானத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யும் அதேவேளை, இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜெனீவாவில் எடுத்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜெனீவாவுக்கு சென்றிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அங்கு நடைபெற்ற 37 ஆவது அமர்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர்;

சமாதான காலத்திலும் ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பைப் பற்றிய என் நீண்டகாலக் கவலைவை வெளிப்படுத்த விரும்புகிறேன். இத்தகைய பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் மனித உரிமைகளை ஒடுக்கக்கூடிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கொடுங்கோண்மையான விதிகளுக்கு பலியாகி வருகின்றனர்.

தற்போது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழி குறித்து நடைபெற்று வந்த முக்கியமான நீதித்துறை விசாரணைக்கான அரசாங்க நிதி நிறுத்தப்பட்டுள்ளது. சாட்சிகளின் மீதான அச்சுறுத்தல், பத்திரிகையாளர்கள் கைது போன்றவை தொடர்ச்சியாக நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

2013 முதல், ஒரு சுயாதீனமான, பன்னாட்டுத் தனித்துவமான விசாரணை அமைப்பை நிறுவ வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, 2009 மே மாத இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற கொடூர குற்றச்செயல்களைப் பற்றிய சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நிபுணத்துவமான விசாரணைகள் நடைபெறுவது அவசியம்.

எனவே, இலங்கை குறித்து ஒரு நாட்டுக்கே உரிய விசேட அறிக்கையாளர் நியமிக்கப்பட வேண்டுமென தீர்மானத்தில் இடம்பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இடைக்கால நீதி நடைமுறையின் ஒரு பகுதியாக, கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.

இந்நடவடிக்கைக்கு சீர்மை இருக்க வேண்டுமெனில், பொதுமக்கள் நீதிக்கான அணுகலை, இழப்பீட்டை, மேலும் விசாரணைகளில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுதல் அவசியம். ஏனெனில், தமிழர் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட்டுள்ளதால் மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் தங்களை இலங்கை அரசாங்கத்திடம் வெளிப்படுத்த அச்சப்படுகின்றனர்.

நானே கூட இலங்கை அரசாங்கத்தாலும், அதற்கு ஆதரவாக செயல்படும் இராணுவமல்லாத குழுக்களாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, பல சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்த குடும்பத்தினர் முதிர்ந்து வருகின்றனர், சிலர் உயிரிழந்து வருகின்றனர், சிலர் அச்சத்தில் வாழ்கின்றனர், மற்றவர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். எனவே, இப்பிரச்சினை மிகுந்த அவசரத்தன்மையுடையது. உடனடியான நீதி மற்றும் நடவடிக்கையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை எடுக்க வேண்டுமென தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர் என்றார்.

https://akkinikkunchu.com/?p=343176

சட்டவிரோத சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும் - ரங்க திஸாநாயக்க

3 months ago
03 Oct, 2025 | 10:15 AM சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும். அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226755

சட்டவிரோத சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய முடியும் - ரங்க திஸாநாயக்க

3 months ago

03 Oct, 2025 | 10:15 AM

image

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில்  விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும்.

அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/226755

பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்

3 months ago
பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன் October 3, 2025 உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார். இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை (01) கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில், இந்நிகழ்வுக்கு “பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. அத்தோடு, சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது “பாரம்பரியமான மனைவி ”(Traditional Wife) எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது. இளம் பெண்கள், வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள். இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில் 74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர். பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு, “Women Shot AI” எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர். இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது. இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு (content moderation) அவசியம் தான், ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவரின் வர்க்க நிலை அவருக்கு பாதுகாப்பையும் சிறப்பையும் தரலாம், ஆனால் அவரது மதம் அல்லது இனப்பெருக்கம் அவருக்கு அபாயத்தை உருவாக்கக்கூடும். பெண்கள் பல அடுக்குகளில் ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள். வன்முறையை நாம் திடீரென்று நிகழும் நிகழ்வாகக் கருதுகிறோம், ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் ஓர் தொடர்ச்சி. பாலியல் வன்முறை மிக அதிகம் பேசப்படும், ஆனால் அது தனியே நிகழ்வல்ல; அன்றாட வன்முறையின் ஓர் பகுதி. ஆசிரியர் மாணவனை அடிப்பது, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை அடிப்பது, அலுவலக அதிகாரிகளின் வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வது – இவை அனைத்தும் அன்றாட வன்முறைதான். கலாச்சார மதிப்புகள் பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் நடைமுறைகள், வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது சமூக பரிவு மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போரினால் கூட, மனிதாபிமானமற்ற கொடுமைகள் இயல்பானவை போலக் கருதப்படுகின்றன. சட்டமும் நீதி மன்றங்களும் சமூகமாக நாம் வன்முறைக்கு கடும் தண்டனைகளை (உதா: தூக்கு தண்டனை) கோருகிறோம். ஆனால், அத்தகைய தண்டனைகளுக்குப் பின்னரும் வன்முறை குறைவதில்லை. ஏனெனில் வேறுக்காரணம் – ஆண்மை பற்றிய சமூகக் கருத்தாக்கங்கள் கவனிக்கப்படுவதில்லை. சமூகத்தில் ஆண்களுக்கு வன்முறை, ஆணவம், ஆதிக்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. பெண்களை சம உரிமையுள்ள மனிதர்களாக பார்க்க மறுப்பதே, பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனப்போக்கையும், பாலியல் வன்முறையையும் உருவாக்குகிறது. சட்டமும், நீதி மன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவற்றும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது, வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால், நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும் வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது. பொருளாதாரம், பெண்ணியம், சமூகக் கண்ணோட்டங்கள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை மட்டும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யாது. ஏனெனில் அவை தற்போதைய சமத்துவமின்மைகளைப் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கும். உதாரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிந்தபின் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள், கடும் சுமைகளை ஏற்படுத்தின. பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர். பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்போது கூட, சமூக எதிர்பார்ப்புகள் அவர்களை “சமூகத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என நிர்பந்திக்கின்றன. “பெண்ணியம்” என்ற சொல்லையே பலர் பயன்படுத்த அச்சப்படுகிறார்கள். ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூட தன்னைப் பெண்ணியவாதி என்று சொல்லத் தயங்கினார். பெண்களின் கோபம் கூட “அவசியமற்றது” அல்லது “அதிகப்படுத்தல்” என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார். https://www.ilakku.org/women-are-being-erased-from-public-life-ambika-sarkunanathan/

பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்

3 months ago

பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்: அம்பிகா சற்குணநாதன்

October 3, 2025

83fb7884-ambika-satkunanathan.jpg

உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன. சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்  ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இலங்கையில் தெற்காசியப் பெண்களுக்கான ஊடக அமைப்பின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா  புதன்கிழமை (01) கொழும்பில் மண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்  ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வுக்கு “பெண்களின் குரல்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தாலும், அதே சமயம் மனக்கசப்பையும் தருகிறது. ஏனெனில் இன்று நாம் வாழும் காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன.

அத்தோடு,  சமூக ஊடகம் போன்ற கருவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை நிலைநாட்டுவதற்கும், பெண்களைப் பொது வாழ்க்கை, தொழில், வீட்டை கடந்து பொது விருப்பங்களை செய்வதை தடுக்க தூண்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டொக் போன்ற தளங்களில் தற்போது “பாரம்பரியமான மனைவி ”(Traditional Wife) எனப்படும் புதிய போக்கு பரவலாகியுள்ளது.

இளம் பெண்கள், வேறு பெண்களை தொழில், பொருளாதார சுயாதீனம், பொது வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு  வீட்டு வேலைகளை முன்னிலைப்படுத்த பரிந்துரைக்கிறார்கள்.

இதை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2023 அறிக்கையுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய ரீதியில்  74.8 கோடி பேர் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக வேலைவாய்ப்பில் ஈடுப்படவில்லை. அதில் 70.8 கோடி பெண்களும், வெறுமனே 4 கோடி ஆண்களும் அடங்குகின்றனர்.

பெண்கள் குழந்தை பராமரிப்பு, விசேடதேவையுடையவர்கள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, வீட்டுப் பணி போன்றவற்றில் அசாதாரண அளவில் சுமையைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதனால் தான் இன்றைய தலைப்பு மனக்கசப்பைத் தருகிறது. 2025 ஆம் ஆண்டு வந்துவிட்டது ஆனால் இன்னும் பெண்களின் குரலை வலுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு, “Women Shot AI” எனப்படும் யூடியூப் சேனல் ஒன்று உருவானது. அதில் பெண்கள் தலையில் சுடப்படுவதை காட்டும் ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் மட்டுமே இருந்தன. அதை 4O4 Media வெளிப்படுத்திய பின்னர் அதனை யூடியூப் நீக்கியது. ஆனால் அதற்குள் 2 இலட்சம் பார்வையாளர்கள் அதை பார்த்துவிட்டனர். இந்தக் காலத்தில் கூட, இப்படிப்பட்ட வன்முறைச் சித்திரங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதே கவலைக்குரியது.

இதற்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும்? உள்ளடக்கக் கட்டுப்பாடு (content moderation) அவசியம் தான், ஆனால் அது போதுமானதல்ல. பெண்களின் சமத்துவத்தைத் தடுக்கின்ற வரலாற்று, அமைப்பு, கட்டமைப்பு தடைகள் தற்போது புதிய வடிவங்களில் – குறிப்பாக சைபர் வன்முறை போன்றவற்றில் – வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரே நபரின் அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் (பாலினம், மதம், இனப்பெருக்கம், வர்க்கம் போன்றவை) இணைந்து சமத்துவமின்மையை ஆழப்படுத்துகின்றன. உதாரணமாக, ஒருவரின் வர்க்க நிலை அவருக்கு பாதுகாப்பையும் சிறப்பையும் தரலாம், ஆனால் அவரது மதம் அல்லது இனப்பெருக்கம் அவருக்கு அபாயத்தை உருவாக்கக்கூடும். பெண்கள் பல அடுக்குகளில்  ஒதுக்கப்படுவதையும் எதிர்கொள்கிறார்கள்.

வன்முறையை நாம் திடீரென்று நிகழும் நிகழ்வாகக் கருதுகிறோம், ஆனால் அது அன்றாட வாழ்க்கையின் ஓர் தொடர்ச்சி. பாலியல் வன்முறை மிக அதிகம் பேசப்படும், ஆனால் அது தனியே நிகழ்வல்ல; அன்றாட வன்முறையின் ஓர் பகுதி. ஆசிரியர் மாணவனை அடிப்பது, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை அடிப்பது, அலுவலக அதிகாரிகளின்  வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்வது – இவை அனைத்தும் அன்றாட வன்முறைதான்.

கலாச்சார மதிப்புகள் பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் நடைமுறைகள், வன்முறையை சாதாரணமாக்குகின்றன. இது சமூக பரிவு மற்றும் ஒற்றுமையை சீர் குலைக்கிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போரினால் கூட, மனிதாபிமானமற்ற கொடுமைகள் இயல்பானவை போலக் கருதப்படுகின்றன.

சட்டமும் நீதி மன்றங்களும்

சமூகமாக நாம் வன்முறைக்கு கடும் தண்டனைகளை (உதா: தூக்கு தண்டனை) கோருகிறோம். ஆனால், அத்தகைய தண்டனைகளுக்குப் பின்னரும் வன்முறை குறைவதில்லை. ஏனெனில் வேறுக்காரணம் – ஆண்மை பற்றிய சமூகக் கருத்தாக்கங்கள்  கவனிக்கப்படுவதில்லை.

சமூகத்தில் ஆண்களுக்கு வன்முறை, ஆணவம், ஆதிக்கம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. பெண்களை சம உரிமையுள்ள மனிதர்களாக பார்க்க மறுப்பதே, பெண்களை ஒரு பொருளாகக் கருதும் மனப்போக்கையும், பாலியல் வன்முறையையும் உருவாக்குகிறது.

சட்டமும், நீதி மன்றங்களும் கூட நடுநிலையாக இல்லை. அவற்றும் ஆணாதிக்கம், வர்க்கம், மதம் போன்ற பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கூட பெண்கள் ஊழியர்களுக்கு எதிரான, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் சிக்கியுள்ளது. இது, வேறு காரணங்களைத் தீர்க்காவிட்டால், நீதியை வழங்க வேண்டிய அமைப்புகளும்  வலுப்படுத்தும் என்பதை காட்டுகிறது.

பொருளாதாரம், பெண்ணியம், சமூகக் கண்ணோட்டங்கள்

பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்றவை மட்டும் பாலின சமத்துவத்தை உறுதி செய்யாது. ஏனெனில் அவை தற்போதைய சமத்துவமின்மைகளைப் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கும். உதாரணமாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போர் முடிந்தபின் பெண்களுக்கு வழங்கப்பட்ட நுண் கடன்கள், கடும் சுமைகளை ஏற்படுத்தின. பலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்டனர்.

பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும்போது கூட, சமூக எதிர்பார்ப்புகள் அவர்களை “சமூகத்துக்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்” என நிர்பந்திக்கின்றன. “பெண்ணியம்” என்ற சொல்லையே பலர் பயன்படுத்த அச்சப்படுகிறார்கள். ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூட தன்னைப் பெண்ணியவாதி என்று சொல்லத் தயங்கினார்.

பெண்களின் கோபம் கூட “அவசியமற்றது” அல்லது “அதிகப்படுத்தல்” என்று குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அந்தக் கோபமே அநீதிக்கு எதிரான இயல்பான, நியாயமான பதிலாகும் என்றார்.

https://www.ilakku.org/women-are-being-erased-from-public-life-ambika-sarkunanathan/

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
பையன் முன்பும் ஒரு திரியில் எழுதி இருந்தவர், அவரது தனிமையை கலைத்து மாற்றம் வரவே இந்த போட்டிகளில் பங்குபற்ற வேண்டுகோள் விடுத்தேன். அதோட பையன் இல்லாத போட்டித் திரிகளில் கலகலப்பிருக்காதே!

பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!

3 months ago
பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்! October 3, 2025 பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர். உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது. https://www.ilakku.org/terrorist-attack-on-jewish-synagogue-in-britain/

பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!

3 months ago

பிரிட்டனில் யூதர்களின் தேவாலய வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்!

October 3, 2025

பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

உள்ளுர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார்.  இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர். அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்” என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் குற்றவாளியை பொலிஸார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மார்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக பிரிட்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

https://www.ilakku.org/terrorist-attack-on-jewish-synagogue-in-britain/

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

3 months ago
அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும் முருகானந்தன் தவம் தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன், அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான போராளிகளில் அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில் தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி திலீபன். 1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில் கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான உண்ணா விரதம் என்ற அகிம்சை வழி ஆயுதத்தைக் கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார். 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தார். திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள், சரியாகக் காலை 10.48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல் கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் கடந்த 17ஆம் திகதி மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றனர். இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும் இருக்கும் நிலையில் அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி. திலீபன் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக இருக்கையில் திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு அஞ்சலி செலுத்த யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே நல்லூரில் திலீபன் நினைவுத்தூபியை நிர்மாணித்துப் பராமரித்தவர்கள். ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல் புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது. அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன் நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு எந்த உரிமையும் இல்லை. அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் , திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை. தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று செயற்பட்டுள்ளனர். அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால் கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர். தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும் இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம் சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர். ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல் . திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திலீபனை உரிமை கொண்டாடி அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அசிங்க-அரசியலும்-அடாவடி-அரசியலும்/91-365653

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

3 months ago

அசிங்க அரசியலும் அடாவடி அரசியலும்

முருகானந்தன் தவம்

தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் அரசின் ,நீதிமன்றங்களின், படைகளின் தடைகள், அடக்கு முறைகள், அடாவடிகள் எதுவுமின்றி அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இம்முறை இவ்வாறாக அரச தரப்புக்களின் அடக்கு முறைகள் அடாவடிகள் இல்லாதபோதும் தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அடாவடிகள், அடக்கு முறைகளுடன் நடந்து முடிந்துள்ளதுதான் தமிழ் மக்களை விசனப்படுத்தியுள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி  அகழ்வு இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் விரட்டியடிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்புக்கள், கண்டனங்கள், கவலைகள், விமர்சனங்கள் தணிவதற்குள் தியாகி  திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த  அமைச்சர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியமை இவ்வாறு விரட்டுபவர்களின் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதுடன்,  அரசியல் அடாவடித்தனத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.

தமிழரின் போராட்ட வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான போராளிகள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறான  போராளிகளில்  அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கையிலேந்தி, காந்திய வழியில்  தமிழ் மக்களின் விடிவிற்காய் காந்திய தேசமான இந்தியத் தேசத்திற்கு எதிராக  நீரின்றி, உணவின்றி பட்டினியால் உயிர் துறந்த ஒருவர் தான் தியாகி  திலீபன்.

1987இல் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு,கிழக்கில்  கால்பதித்தது. தன்னினம் பகைவனால் அழிக்கப்பட்டு, இந்திய வல்லாதிக்க அரசின் கூட்டுச்சதிக்கு இலக்காகி சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்ட திலீபன் தான் உயிரிலும் மேலாக நேசித்த மக்களின் விடியலுக்காக மகாத்மா காந்தி இவ்வுலகிற்கு விட்டுச் சென்ற போராட்ட வழிமுறையான   உண்ணா விரதம்  என்ற  அகிம்சை வழி  ஆயுதத்தைக்  கையில் எடுத்து அகிம்சையின் தாய் வீடான  
இந்தியத் தேசத்திடமே 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத அறப்போரைத் தொடுத்தார்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி  நல்லைக் கந்தனின் முன்றிலிலே மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,சிறைச் சாலையிலும் தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் யாவரும் விடுவிக்கப்பட வேண்டும்,

அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், ஊர்க்காவல் படைக்கு வழங்கப்பட்ட ஆயுதம் யாவும் மீளப்பெறப்பட வேண்டும், தமிழ்ப் பிரதேசத்தில் புதிதாக பொலிஸ்  நிலையங்கள் திறக்கப்படும் முயற்சிகள் முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து தனது சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை  திலீபன்  ஆரம்பித்தார்.

திலீபனின் உண்ணாவிரத நாட்கள் கடந்தோடிய போதும், அந்தக் கோரிக்கைகள் எதுவும் காந்தி தேசத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம்  ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை அன்று, தியாகப்பயணத்தின் பன்னிரெண்டாவது நாள்,  சரியாகக்  காலை 10.48 மணிக்கு   திலீபன் உயிர் பிரிந்தது.  அன்றிலிருந்து இன்றுவரை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15ஆம் திகதி  முதல் 26ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் தமிழர் தேசம் மற்றும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில்தான், தமிழர் தேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் சொந்தமான திலீபனை தமது தனியுரிமையாக, தனிச் சொத்தாகச் சொந்தம் கொண்டாடி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  செய்து வந்த அரசியல் இம்முறை தமிழ் மக்களினது கடும் வெறுப்புக்கும் கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.   

வழக்கம் போலவே, இம்முறையும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகின. இதனையடுத்து தினமும் பெருமளவிலான மக்கள், மதத் தலைவர்கள்,அரசியல்

கட்சியினர் என வேறுபாடின்றி சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதில்   கடந்த  17ஆம் திகதி  மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் திலீபனுக்கு  அஞ்சலி செலுத்தச் சென்றனர்.

இதன்போது, அங்கிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என  தடுத்து நிறுத்தி முரண்பட்டுள்ளனர். அமைச்சரையும் அவரது குழுவினரையும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழ்த் தேசத்திற்காக, தமிழ் மக்களுக்காகா உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் அடங்கிய குழுவினரை அதிலும் அவர்கள் தமிழர்களாகவும்  இருக்கும் நிலையில்  அவர்களை அஞ்சலி செலுத்த விடாது தடுக்க,திருப்பியனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு என்ன உரிமையுள்ளதென்பதே   இன்று தமிழர் தேசத்தில் எழுந்துள்ள கேள்வி.

திலீபன்  அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானவனாக  இருக்கையில்  திலீபனை உரிமை கொண்டாடத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யார்? இவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்? இவர்களுக்கும் திலீபனுக்கும் என்ன தொடர்பு? திலீபனுக்கு  அஞ்சலி செலுத்த  யார் வரலாம் யார் வரக்கூடாது என்பதனை தீர்மானிக்க இவர்கள் யார்?என்பதே தமிழ்  மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகள்
 தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே  நல்லூரில்  திலீபன்  நினைவுத்தூபியை  நிர்மாணித்துப் பராமரித்தவர்கள்.

ஆனால், வீட்டிற்குள் ஒட்டகம் புகுந்து போல்  புகுந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று அங்குள்ளவர்களை எல்லாம் விரட்டிவிட்டு திலீபனின் நினைவுத்தூபி இடத்தை சர்வாதிகாரமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசத்தை  மீட்க வந்தவர்கள் போல, காட்டி அரசியல் செய்கின்றனர். இதுதான் இன்று தமிழ்  மக்களைத்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மீது விசனமும் வெறுப்பும் கொள்ள வைத்துள்ளது.

அமைச்சரும் அவரது குழுவினரும் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தவிடாது தடுக்கப்பட்டமை மிகவும் மோசமான செயல். ஏனெனில், தியாகி திலீபன்   நினைவிடம் என்பது ஒரு பொது இடம் அங்கு எதிரிகளுக்குக் கூட நினைவேந்தல் செய்ய உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுப்பதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு  எந்த உரிமையும் இல்லை.

அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகி  திலீபனது நினைவேந்தல் களம் அல்ல.தியாகி திலீபனின் நினைவிடத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வாதிகாரமாக  தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதனால் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகள்கூட  திலீபனுக்கு அஞ்சலி செலுத்த அங்கு சென்றால் தாமும் அவமானப்படுத்தப்படுவோம் ,

திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் காரணமாக செல்லத் தயங்குகின்றனர்.எனவே தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியினர் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார்கள் என்றவாறாக, மக்கள் தமது விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம். அதுதான் மனித மாண்பு. திலீபன்  போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் கூட  திலீபனின் தியாகத்தை மதித்து இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். ஒரு மாவீரனின் தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை.

தமிழ் மக்களின் இனமான உணர்வுகளை, போராளிகளின் தூய்மையான போராட்டத்தை அறியாதவரல்ல அமைச்சர் சந்திரசேகர், திலீபன் போன்ற தமிழ்த் தேசிய இனத்தின் உயர்ந்த நோக்கத்திற்காகத் தமிழ் மக்களுக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கியவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த  அவரை அஞ்சலி செலுத்த விடாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முட்டாள்கள் போன்று  செயற்பட்டுள்ளனர்.

அமைச்சர் அரசியல் நோக்கில் அங்கு வந்திருந்தால்  கூட அதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில்,  இவர்களும் தமிழ்த் தேசிய அரசியல் ஆதாயத்திற்காகத்தான் தியாக தீபம் திலீபனை உரிமை கொண்டாடுகின்றனர்.

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு வந்த போதும்  இதேபோன்றே செம்மணி மனித புதைகுழிப்பகுதிக்கு   அஞ்சலி செலுத்த வந்தபோதும் அமைச்சர் சந்திரசேகரும் அவரது எம்.பி.க்கள் குழுவினரும் விரட்டப்பட்டுள்ளனர். 

இவ்வாறு விரட்டியவர்கள் இதன் மூலம்  சாதிக்க நினைப்பது என்ன? . செம்மணிக்கு வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைக்கின்றனர்.

ஜனாதிபதி இனவாதி என்கின்றனர் .இது மிகவும் இழிநிலையான அரசியல்  .
திலீபன் நினைவேந்தல் விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. திலீபனின் நினைவேந்தலை பொறுத்த வரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்  திலீபனை உரிமை கொண்டாடி  அசிங்க அரசியல்.அடாவடி அரசியல் செய்கின்றனர். என்பதே உண்மை.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அசிங்க-அரசியலும்-அடாவடி-அரசியலும்/91-365653

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
அதுசரி. எங்க உங்கட பெயரைக் காணவில்லை. நீங்களும் பங்குபற்றி இருக்கவேணும். நடத்துகின்றேன் என்று உங்கள் நேரத்தை தியாகம் பண்ணத் தேவையில்லையே.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
வினா 4) 7 விக்கேற்றுக்களினால் வங்காளதேசம் அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. 5 போட்டியாளர்கள் சரியாக பதில் எழுதியிருக்கிறார்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் 2)கிருபன் - 9 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 9 புள்ளிகள் 4)நியூபேலன்ஸ் - 9 புள்ளிகள் 5)ஆல்வாயன் - 7 புள்ளிகள் 6)புலவர் - 7 புள்ளிகள் 7)வாதவூரான் - 7 புள்ளிகள் 8) ரசோதரன் - 7 புள்ளிகள் 9) வீரப்பையன் - 7 புள்ளிகள் 10) சுவி - 6 புள்ளிகள் 11) வாத்தியார் - 5 புள்ளிகள் 12)செம்பாட்டன் - 5 புள்ளிகள் 13)கறுப்பி - 5 புள்ளிகள் 14)ஈழப்பிரியன் - 5 புள்ளிகள் 15)வசி - 3 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 4, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் திருட்டுப்போன பசுமாடுகளில் ஒன்று இறைச்சிக்கு வெட்டி நிலையில் காத்தான்குடியில் தலை மீட்பு; இருவர் கைது இரு மாடுகள் மீட்பு

3 months ago
இந்த செய்தி போட்டதிற்காக காத்தான்குடியில் நாளை ஜூம்மா முடிந்ததும் ஆர்ப்பாடம் நடைபெறும் ...நாமெல்லாம் பத்தரை மாற்று தங்கமெல்லொ..