Aggregator

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months ago
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையை கைவிட மாட்டோம்; டொனால்ட் ட்ரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லிங்க் சேவையை வெள்ளை மாளிகை கைவிடாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் நல்ல சேவை வழங்குவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அவர், எலான் மஸ்கிடம் வாங்கிய டெஸ்லா காரை, வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றவுள்ளதாகவும் கூறினார். தங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது, அவருக்கு நல்வாழ்த்துக்கள் மட்டுமே கூற விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://akkinikkunchu.com/?p=328494

அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு?

3 months ago
ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து இனவெறி விமர்சனங்கள்: கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டனம் June 11, 2025 கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் இனவெறி விமர்சனத் தாக்குதல்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. அத்துடன், இதுபோன்ற தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளன. கனேடிய தமிழ் கூட்டு, கனேடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் மீதான இனவெறி விமர்சனங்களை கண்டித்துள்ளன. இந்த விமர்சனங்கள், அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் கனேடியர்கள் மீது தவறான மற்றும் நியாயமற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஹரி ஆனந்தசங்கரி, அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே இந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த முடிவு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே எடுக்கப்பட்டது என்று கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/ஹரி-ஆனந்தசங்கரியை-குறிவை/

கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு

3 months ago
படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது. 1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmbswlflj01qzqpbsxxezh4a0

கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு

3 months ago

படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் ஞாபகார்த்த நிகழ்வு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஞாபகார்த்த நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் இடம்பெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வின் போது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர உள்ளிட்ட பொலிஸ்  உயரதிகாரிகள், பொலிஸார் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmbswlflj01qzqpbsxxezh4a0

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல்

3 months ago
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் வடக்கு சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உற...அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மன...சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்க...

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல்

3 months ago

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மனுத் தாக்கல்

வடக்கு

சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்தச் சபைகளில் ஒன்று தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக நாளை கூடவிருக்கும் நிலையில், இன்று இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவரும் அந்தந்தச் சபை எல்லைப் பரப்புக்குள் தம்மை ஒரு வாக்காளராகப் பதிவு செய்வதற்குத் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புரிமைகளையும் இரத்துச் செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவைப் பரிசீலித்து உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடியதாக இடைக்காலத் தடை விதிக்கும் படியும் மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த இரு மனுக்களும் இன்று நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பில் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ முன்னிலையாகி வழக்கின் விபரத்தை எடுத்துரைப்பார். 

சாவகச்சேரி நகர சபை மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரண்டு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உற...
No image previewஅகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக மன...
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தேர்வான இருவர் அந்தந்த உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகப் பதவியேற்பதற்க...

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி ஜேர்மனிக்குப் பயணம்! புரளியை கிளப்புகின்றார் கம்மன்பில தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த நெடியவனை சந்திக்கவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என்று சமூகவ லைத்தளங்களில் கருத்துகள் வெளியாவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஜேர்மனியில் சான்சலர்தான் அரசாங்கத்தின் பிரதானி. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜேர்மனியப்பயணத்தின் போது சான்சலர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இல்லை எனக் கூறப்படுகின்றது. அப்படியானால் இந்தப் பயணத்தில் வேறு நோக்கம் இருக்கக்கூடும். எமது நாட்டில் ஜனாதிபதிதான் அரசதலைவர். எனவே, அவர் வெளிநாடு சென்றால் அந்த நாட்டிலுள்ள அரச தலைவரை சந்திக்கவேண்டும். ஐரோப்பாவிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட விஜயமா இது என்ற கேள்வியும் எழுகின்றது. புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான நெடியவன் ஜேர்மனிக்குச் செல்லவுள்ளார். அவர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்தால் அது பெரும் பிரச்சினையாகக் கூடும் என்பதால், நெடியவனைச் சந்திக்கவே ஜனாதிபதி ஜேர்மனிக்குச் சென்றுள்ளார் என சில அரசியல்வாதிகளும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரசியல் களத்தில் உலா வரும் கதைகளே இவை. இவற்றின் உண்மைத்தன்மை என்னவென்பதை ஜனாதிபதியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் - என்றார். https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_அமைப்பை_சேர்ந்த_நெடியவனை_சந்திக்கவே,_ஜனாதிபதி_ஜேர்மனிக்குப்_பயணம்!#google_vignette

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்!

3 months ago
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:- தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றிவருகின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற மருத்துவமனை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு இயங்குவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவருகின்றன. எனவே, இந்த நிர்வாகப் பிறழ்வுகளுக்கு எதிராகக்காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனையின் வினைத் திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்வரும் நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம் - என்றுள்ளது. https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனையில்__நிர்வாக_முறைகேட்டைக்_கண்டித்து_மருத்துவர்கள்_நாளை_போராட்டம்!#google_vignette

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்!

3 months ago

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்து மருத்துவர்கள் நாளை போராட்டம்!

301639556.jpeg

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நிலவும் நிர்வாக முறைகேட்டைக் கண்டித்தும், புற்றுநோய்ப் பிரிவை வினைத்திறனாக இயங்குவதற்கு வழிவகைகளை ஏற்படுத்துமாறு கோரியும் நாளை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித் துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் உள்ளதாவது:-
தெல்லிப்பழை மண்ணின் புகழ்பூத்த தெல்லிப்பழை மருத்துவமனை போர் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்டபோதிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அடுத்ததாக வடக்கு மாகாண மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவமனையாகக் காணப்படுகின்றது. அத்துடன், விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றிவருகின்றது. 

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத்திறனற்ற மருத்துவமனை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மருத்துவமனையில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் மருத்துவமனை ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இன்றுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன், மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவு இயங்குவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவருகின்றன.

எனவே, இந்த நிர்வாகப் பிறழ்வுகளுக்கு எதிராகக்காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மருத்துவமனையின் வினைத் திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட் வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்வரும் நாளை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட வுள்ளோம் - என்றுள்ளது. 

https://newuthayan.com/article/தெல்லிப்பழை_ஆதார_மருத்துவமனையில்__நிர்வாக_முறைகேட்டைக்_கண்டித்து_மருத்துவர்கள்_நாளை_போராட்டம்!#google_vignette

நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!

3 months ago
ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க் 11 JUN, 2025 | 03:11 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார். எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட்ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டன” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். பின்னணி என்ன? - அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார். வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் மீண்டும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. 2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/217172

”323 கொள்கலன்களில் பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் இருந்தன” - ராமநாதன் அர்ச்சுனா

3 months ago
சீஐடிக்கு அழைக்கப்படும் அர்ச்சுனா? Share This : சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதங்களே சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 323 கொள்கலன்களில் என்ன இருந்தது என்று எதிர்க்கட்சியினர் ஒன்றாக இருந்து கூறினால் மக்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் ஒருவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்த என்றும் இன்னுமொருவர் அவற்றில் போதைப் பொருள் இருந்தன என்றும் கூறுவதுடன் இன்னுமொருவர் அதில் வெடிகுண்டு இருந்தது என்றும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் இது தொடர்பில் மேலதிக சுங்க பணிப்பாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பான குழுவின் அறிக்கையும் நிதி அமைச்சினால் கையளிக்கும். கடந்த காலங்களில் சரியான அறிக்கைகளை சமர்ப்பித்து பொருட்களை கொண்டுவந்தவர்களுக்கு இது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான நடைமுறைகளை அறிவர். இதேவேளை இந்த விடயத்தில் கம்மன்பிலவின் கருத்தை ஒத்த பொய்யான கருத்தே அர்ச்சுனாவின் கருத்தும். இவர்கள் எதனை கூறினாலும் சுங்கத்தினால் கூறப்பட்டுள்ளவற்றை ஏற்றுக்கொள்கின்றோம். மற்றையவர்கள் கூறும் கருத்துக்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததும் அவர்கள் கூறுவது தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். https://www.samakalam.com/சீஐடிக்கு-அழைக்கப்படும்/

இரு கொவிட் மரணங்கள் பதிவு : சுகாதாரப் பிரிவு வெளியிட்ட தகவல்!

3 months ago
12 JUN, 2025 | 09:58 AM நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில், “இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம். இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217225

இரு கொவிட் மரணங்கள் பதிவு : சுகாதாரப் பிரிவு வெளியிட்ட தகவல்!

3 months ago

12 JUN, 2025 | 09:58 AM

image

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,

“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.

இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன. அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/217225

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் : கைதான இராணுவப் புலனாய்வாளர் ஷம்மிக்கு விளக்கமறியல்

3 months ago
பிரகீத் எக்னெலிகொட வழக்கு – பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது adminJune 11, 2025 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முக்கிய சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபா் இன்று இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஜனவரி 24 அன்று கடத்தப்பட்டார் இது சம்பந்தமான வழக்கு தொடர்பாக, சட்டமா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்ன உட்பட பத்து பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது அவர்களுக்கெதிரான விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையிலேயே இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் எக்னெலிகொட வழக்கின் முக்கிய சாட்சியான சுரேஸ் குமாா் என்பவரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் குமாரரத்ன பலமுறை மிரட்டியதாகவும் , பிரிகேடியாின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி பலமுறை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகார சபையின் விசாரணை அதிகாரி முறையிட்டுள்ளாா் அத்துடன் 2025 ஜூன் 6ஆம் திகதியன்று, முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரால் அதே தொலைபேசி எண்ணிலிருந்து சாட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளாா். இந்தநிலையில் சாட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் ஆராயப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளதை விசாரணைப் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார். இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, ஓய்வுபெற்ற பிரிகேடியர் சம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், நடந்து வரும் விசாரணைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதியன்று, நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணையில் அவரை முன்னிலைப்படுத்துமாறும் திருகோணமலை நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2025/216668/

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் : கைதான இராணுவப் புலனாய்வாளர் ஷம்மிக்கு விளக்கமறியல்

3 months ago
12 JUN, 2025 | 09:26 AM (நமது நிருபர்) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இவ்வழக்குடன் தொடர்புபட்டதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளடங்கலாக 10 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பாரில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பலர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியவர்களாவர். இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சாட்சியாளரான சுரேஷ்குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன அச்சுறுத்தியதாக சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணைப்பிரிவின் தலைவர் நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார். ஷம்மி குமாரரத்னவின் தனிப்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பலமுறை சுரேஷ்குமார் அச்சுறுத்தப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் விடயங்களைப் பரிசீலித்த திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/217221

ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் : கைதான இராணுவப் புலனாய்வாளர் ஷம்மிக்கு விளக்கமறியல்

3 months ago

12 JUN, 2025 | 09:26 AM

image

(நமது நிருபர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப்பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் எனும் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி காணாமலாக்கப்பட்டார். அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவர் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வழக்குடன் தொடர்புபட்டதாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன உள்ளடங்கலாக 10 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்ற ட்ரயல் அட்பாரில் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட பலர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப்பிரிவில் பணியாற்றியவர்களாவர்.

இந்நிலையில் இவ்வழக்கில் பிரதான சாட்சியாளரான சுரேஷ்குமாரை ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன அச்சுறுத்தியதாக சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபையின் விசாரணைப்பிரிவின் தலைவர் நேற்றைய தினம் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

ஷம்மி குமாரரத்னவின் தனிப்பட்ட கையடக்கத்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பலமுறை சுரேஷ்குமார் அச்சுறுத்தப்பட்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் விடயங்களைப் பரிசீலித்த திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஷம்மி குமாரரத்னவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

https://www.virakesari.lk/article/217221

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

3 months ago
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை! adminJune 12, 2025 இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய் வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/216677/

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

3 months ago

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

adminJune 12, 2025

65-1.jpg?fit=1170%2C940&ssl=1

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான  உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் நேற்றைய தினம் புதன்கிழமை (11.06.25) மாவட்ட செயலகத்தில்  வைத்து  வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா 90 ஆயிரம் ரூபாய்
வீதம் வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய ஆறு பேருக்கு கொடுப்பனவு  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2025/216677/

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
ஜனாதிபதி அநுரவுக்கும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு 12 JUN, 2025 | 08:56 AM ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதன்கிழமை (11) பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217217

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு!

3 months ago
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் தெரிவு! adminJune 12, 2025 சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ் இந்து மாணவர்கள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியட்நாம் நாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 14 தொடக்கம் 19 வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு பிரிவு 3ல் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் யாழ் இந்து மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 500 மாணவர்களிடையே இவ்நான்கு மாணவர்களும் தெரிவாகியுள்ளனர். https://globaltamilnews.net/2025/216681/