Aggregator

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம்; ஒருவர் உயிரிழப்பு

2 months 4 weeks ago

Published By: DIGITAL DESK 3

11 AUG, 2025 | 10:23 AM

image

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

துருக்கி உள்விவகார அமைச்சர் அலி யெர்லிகாயா,

"இடிபாடுகளுக்குள் சிக்கிய 81 வயது முதியவர் மீட்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமாக இல்லை.

இந்த பூகம்பத்தில் சிந்திர்கி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 16 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அவற்றில் நான்கு குடியிருப்புகளும், நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடங்களும் அடங்கும்.

ஆறு பேர் வசித்து வந்த மூன்று மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரும் இடிபாடுகளுக்குள் சிக்கினார் என தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி இரவு 7:53 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவுகோலில் 3.5 முதல் 4.6 வரை சுமார் 20 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

துருக்கி பல புவியியல் பிளவுக் கோடுகளால் சூழப்பட்டுள்ளமையினால் பல பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தென்மேற்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 53,000 பேர் உயிரிழந்தனர். இந்த பூகம்பம் பண்டைய நகரமான அந்தியோக்கியாவின் தளமான அன்டக்யாவை பேரழிவிற்கு உட்படுத்தியது.

அதேவேளை, ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் 5.8 ரிச்டர் அளவுகோலில் ஏற்பட்ட பூகம்பத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 69 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222294

கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி

2 months 4 weeks ago
கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி 11 August 2025 ரஸ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். யுக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத்தில் கோரியபடி, அது ட்ரம்ப்-புடின் உச்சி மாநாடாகவே நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புட்டினை பொறுத்தவரையில், செலேன்ஸ்கியை நேரடியாக சந்திக்க விரும்பாமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கியேவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என்று யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார். https://hirunews.lk/tm/413993/agreement-without-kiev-is-tantamount-to-dead-ends-zelensky

கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி

2 months 4 weeks ago

கியேவ் இல்லாத ஒப்பந்தம் இறந்த முடிவுகளுக்கு சமம் - செலென்ஸ்கி

11 August 2025

ரஸ்யாவுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுவார்த்தையிலும் கியேவும் இடம்பெற வேண்டும் என்று ஐரோப்பிய நட்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அலஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சந்திப்பை நடத்தவுள்ளார். 

இதற்கு முன்னோடியாகவே இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போலந்து, பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஆணையகத் தலைவர்கள் கூட்டாக இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர். 

யுக்ரைன் ஜனாதிபதியும் பங்கேற்கும் வகையில் சந்திப்பை நடத்துவதற்கு ட்ரம்ப் தயாராகவே உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

எனினும் இப்போதைக்கு, ரஸ்ய ஜனாதிபதி ஆரம்பத்தில் கோரியபடி, அது ட்ரம்ப்-புடின் உச்சி மாநாடாகவே நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

புட்டினை பொறுத்தவரையில், செலேன்ஸ்கியை நேரடியாக சந்திக்க விரும்பாமையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் கியேவ் இல்லாத எந்தவொரு ஒப்பந்தமும் இறந்த முடிவுகளுக்கு சமம் என்று யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார்.

https://hirunews.lk/tm/413993/agreement-without-kiev-is-tantamount-to-dead-ends-zelensky

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலின் திட்டங்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் 11 August 2025 காசா நகரத்தை "கட்டுப்பாட்டில் கொண்டு வரும்" இஸ்ரேலின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கான, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர். எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான "சிறந்த வழி" இது மாத்திரமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில் திட்டமிட்ட தாக்குதல் நகர்வு மிக விரைவில் ஆரம்பிக்கும் என்றும் அது நகரும் என்றும் "காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிக்கும்" என்றும் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளே பட்டினியால் வாடுகின்றனர். மாறாக இஸ்ரேல்,காசா மக்களை பட்டினியில் வைத்திருப்பதாக கூறப்படுவதை அவர் மறுத்துரைத்தார். இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்தினால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளன. இஸ்ரேலின் இந்த திட்டம், பணயக்கைதிகளை பாதுகாக்க எதுவும் செய்யாது, மேலும் அவர்களின் உயிருக்கு மேலும் ஆபத்தையே விளைவிக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன. எனினும் அமெரிக்கா இஸ்ரேலைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், தமது நாடு அயராது உழைத்து வருவதாக அமெரிக்க தூதர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்த திட்டம், பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர். https://hirunews.lk/tm/413994/various-countries-condemn-israels-plans

முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம்

2 months 4 weeks ago
முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம் முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது. முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முத்துஐயன்கட்டுக்-கொலை-சுமந்திரன்-கண்டனம்/175-362663

முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம்

2 months 4 weeks ago

முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கண்டனம்

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது  அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை  தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக்  கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். (a)

https://www.tamilmirror.lk/செய்திகள்/முத்துஐயன்கட்டுக்-கொலை-சுமந்திரன்-கண்டனம்/175-362663

தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! - கஜேந்திரகுமார்

2 months 4 weeks ago
தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு! ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம். இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புகள் எனப்பலரும் ஒன்றிணைந்து இணக்கத்துடன் கடிதத்தைத் தயாரித்து ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாகத் தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்டப் பேச்சுகளும் நடைபெற்றன. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களைக் கூறியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்தக் கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்தலைவரே குழம்புகிறார் என்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட் டத்தில் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கூறினார். அதன்படி, இந்தக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும் அதில் வெட்டித் திருத்தம் செய்வதென்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கடிதத்தின் தரத்தைக் குறைக்க முடியாது, தரத்தைக் கூட்டுவதாக இருந்தால் தாமதித்தாலும் பரவாயில்லை என எமது தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்ளுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார். அதற்குப் பிற்பாடும் 7ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க இணங்கியிருந்தோம். தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில் சந்திக்கலாம் என்றும் நாங்கள் கூறினோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம். ஆனால் அவர்களே திட்டமிட்ட பொய்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் கட்டாயம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார். https://newuthayan.com/article/தமிழ்த்தேசியப்_பயணத்துக்கு_தமிழரசு_இணக்கப்பாடில்லை!#google_vignette

தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை! - கஜேந்திரகுமார்

2 months 4 weeks ago

தமிழ்த்தேசியப் பயணத்துக்கு தமிழரசு இணக்கப்பாடில்லை!

1945358886.jpeg

ஐ.நா.வுக்கான கடித விவகாரத்தில் பொய்யுரைப்பு; கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

ஐ. நா.வுக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியே பொய்யுரைத்துள்ளது. தமிழ்க் கட்சிகளிடையே இப்போது இணக்கப்பாட்டை ஏற்படுத்தத் தவறினால் தமிழ்த் தேசியம் அழியும் நிலை ஏற்படும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள் தொடர்ந்தும் முயற்சிப்போம்.

இவ்வாறு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசியக்கட்சிகள், சிவில் அமைப்புகள் எனப்பலரும் ஒன்றிணைந்து இணக்கத்துடன் கடிதத்தைத் தயாரித்து ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ளோம்.

இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து தாமும் கையொப்பம் வைப்பதாகத் தெரிவித்திருந்தது. அதற்கமைய ஆரம்பகட்டப் பேச்சுகளும் நடைபெற்றன. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களைக் கூறியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இந்தக் கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்தலைவரே குழம்புகிறார் என்றும் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட் டத்தில் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் அந்தக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் கூறினார்.

அதன்படி, இந்தக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும் அதில் வெட்டித் திருத்தம் செய்வதென்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் கடிதத்தின் தரத்தைக் குறைக்க முடியாது, தரத்தைக் கூட்டுவதாக இருந்தால் தாமதித்தாலும் பரவாயில்லை என எமது தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நடத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்ளுக்குள் பேசப்பட்ட விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார்.

அதற்குப் பிற்பாடும் 7ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க இணங்கியிருந்தோம். தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில் சந்திக்கலாம் என்றும் நாங்கள் கூறினோம். நாங்கள் வெளிப்படைத்தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம். ஆனால் அவர்களே திட்டமிட்ட பொய்களைக் கூறி வருகின்றனர். தமிழ்த்தேசியம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கிப் பயணிக்கவேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும் கட்டாயம் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார். 

https://newuthayan.com/article/தமிழ்த்தேசியப்_பயணத்துக்கு_தமிழரசு_இணக்கப்பாடில்லை!#google_vignette

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

2 months 4 weeks ago
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு! adminAugust 11, 2025 முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம் திகதி இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டுவந்த 32வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் (09.08.25) முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். நீதவானின் முன்னிலையில் சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், தடயவியல் காவற்துறையினரால் தடயவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மரணத்திற்கான தெளிவான காரணம் குறிப்பிடப்படாமல் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளது. https://globaltamilnews.net/2025/219108/

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்

2 months 4 weeks ago
வட்டல்/ பட்டல்/ தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

2 months 4 weeks ago
இதே நிலமைதான் உக்ரேனிலும்.....செலென்ஸ்கிக்கு எதிரான போரட்டங்கள் வெளியே சொல்லப்படுவதில்லை. அதை விட கொடுமை என்னவென்றால் உக்ரேனில் நடக்கும் ஊழல்களுக்கு எதிரான போராட்டம். சொல்லி வேலையில்லை.அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செல்லப்பிள்ளை உக்ரேனில் ஊழல் பிரச்சனை???? அமெரிக்கர்கள் எப்படி தங்கள் நாட்டிற்காக நெஞ்சின் மேல் கைவைத்து தேசிய கீதம் பாடுகின்றார்களோ அதே போல் அல்ல இன்னும் வலிமையாக நெஞ்சின் மேல் கை வத்து தேசிய கீதம் பாடுகின்றார்கள்.இதைப்பற்றி பளிங்கு ஊடகங்கள் வெளியே சொல்லாது.ரஷ்யர்கள் வலிமையானவர்கள். வலு உள்ளவர்கள். நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். ஒவ்வொரு நாட்டிலும் எதிர்கட்சி ஆளும் கட்சி என கொள்கைகள் இருக்கும். அதையெல்லாம் நாட்டின் நிலைமை சாட்சிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது.

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்

2 months 4 weeks ago
லெப். வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார்: → 'பிரித்தானியாக்காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்துதீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை." நிகழ்படம்: கட்டு வள்ளம், கட்டும் முறை.. இக்கட்டு வள்ளங்கள் TROY போரிலும் பயன்பட்டுள்ளது என்பதை கிரேக்க நாட்டு அகழ்வாராச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.. மேலும் இதன் எச்சங்கள் கிரேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வயது 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் படிமங்களுடன் & 100+ பெயர்களும்

2 months 4 weeks ago
கூடுதல் செய்திகள்: →சீனர்களின் சுங் வகைக் கப்பல்களுக்கு தமிழர்கள் வழங்கிய பெயர் - 'தூங்கு நாவாய்' → 1575இல் கோழிக்கோடு நகரத்தில் கப்பல்கள்:

போர் முயற்சிகளுக்கான உக்ரைன் மக்களின் ஆதரவு சரிந்தது

2 months 4 weeks ago
இந்த உக்கிரேன் இரஸ்சிய யுத்தத்தின் அடிப்படை நேட்டோ விரிவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அமெரிக்காவினது நிலைதான், 2014 நடுநிலையான உக்கிரேன் ஆட்சியினை இரஸ்சிய சார்பு ஆட்சி என கூறி தீவிர வலது சாரிகளின் ஆதரவுடன் தூக்கியெறியப்பட்டு அதன் பின்னர் ஒரு நீண்டகால அடிப்படையில் இரஸ்சியாவிற்கு எதிராக உக்கிரேனில் ஒரு களம் அமைப்பதற்காக போர் பயிற்சி ஆயுத தளபாட வசதி என போரிற்காக உக்கிரேன் தயார்படுத்தப்பட்டது. அமெரிக்கா முன்னர் 20% உலக வர்த்தகம், உலக சர்வதேச நாணயம், என அனைத்து பொருளாதார ரீதியில் உலகு தங்கியிருக்கும் நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் ஒரு புறம் 800 மேற்பட்ட இராணுவ தளங்களுடன் ஒரு பெரிய சாம்ராஜம் நடத்தும் அமெரிக்காவிற்கு எதிராக இரஸ்சியாவினால் எதுவும் செய்து விட முடியாது எனும் உறுதி நிலையில் ஒரு நம்பிக்கையுடன் போரிற்கான முஸ்தீபுகளின் மூலம் இரஸ்சியாவினை போரிற்குள் தள்ளி அதனை உடைத்துவிடலாம் என நம்பியிருந்தது. நடைமுறையில் இரஸ்சியர்கள் இவ்வகையாக அமெரிக்க எதிர்ப்பிற்கு அமைதியாக அடிபணிந்துவிடுவார்கள் என தவறாக மதிப்பிட்டிருக்கலாம். இந்த போரினை ஐரோப்பா மூலம் அமெரிக்கா தொடர்ந்தும் நடத்தும் எனவே நம்புகிறேன், ஆனால் அமெரிக்காவின் அமைதி முயற்சி என்பது ஒரு நாடகம் என கருதுகிறேன். அமெரிக்காவிற்கு இந்த போரிற்கான தேவை தொடர்ந்தும் உள்ளது, அது பொருளாதார இராணுவ ரீதியான தேவைகளாக உள்ளது, தற்போது பேசப்படுவது போல நிரந்தர போர் முடிவிற்கு வராது ஆனால் உக்கிரேன் பலப்படுத்த ஒரு தற்காலிக ஓய்வு தேவை. இந்த போர் முடிய வேண்டுமாயின் ஒன்று போரில் இரஸ்சியா தோற்கடிக்கப்பட்டு மேற்கின் கைகளுக்கு செல்லவேண்டும் அல்லது உக்கிரேன் தோற்க வேண்டும். தற்போதய முயற்சிகள் உக்கிரேனை தோல்வியிலிருந்து காக்க முயற்சிக்கும் நடவடிக்கைகள். ஆனால் நீண்ட போரை தொடர்ந்து நடத்தக்கூடிய வகையில் இந்த வளர்ந்த 7 நாடுகளும் இல்லை என கூறுகிறார்கள், அமெரிக்க நாணயம் தரமிறக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்க நாணயங்களையும் பணமுறிகளையும் அதிகளவில் சேமிப்பில் வைத்திருக்கும் ஜப்பானது கடன் 252% அதன் மொத்த தேசிய உற்பத்தியில் எட்டும் என எதிர்பார்க்கிறார்கள், அமெரிக்காவின் கடன் 134% அதே 5 வருடங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது (ஐ எம் எப் இன் தரவுகளின்படி 2029 இல் debt to GDP UK 110%, ITALY 145%, FRANCE 115%, இதில் ஜேர்மனியும் கனடாவும் மட்டுமே நல்ல நிலையில் உள்ளன). Currency Devaluation முன்பு சில நாடுகளில் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள் 1950 இல் பிரான்ஸ் மற்றும் 1990 இல் இத்தாலியிலும் நடந்த நாடுகளாகும். நிலமை இப்படி மோசமாக மாறுவதனால் போரினை முடிவிற்கு கொண்டுவர முயற்சிக்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் போரினை சமாதானமாக முடிக்க முயற்சித்தால் அது இரஸ்சியாவின் விருப்பமான உக்கிரேன் நடு நிலையான நாடு எனும் கொள்கையினை ஏற்கவேண்டும் அதற்கு மேற்கு தயாராக இருக்காது என கருதுகிறேன்.

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

2 months 4 weeks ago
1000 இற்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலியர்களை கொடூரமாக கொன்று குவித்த பாலஸ்தீன பயங்கரவாதிகள் முற்றாக துடைத்தழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் கங்கணம் கட்டி நிற்கும் செயலானது வரவேற்கத்தக்கது. விரைவில் முழு இஸ்ரேலையும் மீட்டிட வாழ்த்துக்கள். எக்காலத்திலும் புனித இஸ்ரேலிய மண்ணில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் இருக்கக் கூடாது. நான் மக்கள் கொல்லப்படுவதற்கு மிகவும் வருந்துகிறேன், எனினும் பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட்டே ஆக வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

2 months 4 weeks ago
இது "மூளை மலேரியா (cerebral malaria)". இலங்கை உட்பட பல நாடுகளில் காணப்படும் சாதாரண மலேரியா வகையை விட ஆபத்தானது. சாதாரண மலேரியாவை Plasmodium vivax என்ற ஒரு கல உயிரி உருவாக்கும். மூளை மலேரியாவை Plasmodium falciparum என்ற ஒரு கல உயிரி ஏற்படுத்தும். இந்த P. falciparum சஹாரா பாலைவனத்திற்குக் கீழான ஆபிரிக்க நாடுகளில் மிகவும் தீவிரமாக ஆட்களைக் கொல்லும் ஒரு தொற்று நோய். சாதாரண மலேரியாவிற்கு எதிராகப் பயன்படும் குளோரோகுயின் வகை மருந்துகள், மூளை மலேரியாவிற்கு பயன் தராது. Artemisinin எனப்படும் ஒரு புதிய மருந்து தான் பயன்படுத்த வேண்டும். இந்த மருந்தை ஒரு சீன மூலிகையில் இருந்து பிரித்தெடுத்த விஞ்ஞானிக்கு மருத்துவ நோபல் பரிசு கிடைத்தது. இலங்கையில் இருக்கும் அனோபிலிஸ் வகை நுளம்புகள் மூளை மலேரியக் கிருமியையும் காவக் கூடியவை என்பதால் மருத்துவத் துறை இது பற்றிக் கவனம் செலுத்த வேண்டும். ஆபிரிக்காவில் இருந்து வருவோருக்கு இரத்தப் பரிசோதனை விமான நிலையத்திலேயே செய்து, மலேரியாக் கிருமிகள் இருந்தால் சிகிச்சை முடியும் வரை தனிமைப் (quarantine) படுத்த வேண்டியிருக்கும்.

“LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை!

2 months 4 weeks ago
இங்கு பகிரப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தவறு ஏதும் இழைத்துள்ளதாக தெரியவில்லை. தனது கடமையை செய்துள்ளார். ஆனால் செய்தியை வழங்கும் ஊடகம் தனிநபர் மீது சேறு பூசும் வேலையை செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், தனக்கு பிடித்தமான விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. இதுபோலவே விடுதலை புலிகள் அமைப்பு மீது அபிமானம் வைப்பதும், மதிப்பதும், அவமதிப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கே அரச பணியாளர் ஒருவர் வேலைக்கு கள்ளம் அடித்துவிட்டு/தனக்கு கொடுக்கப்பட்ட பணியை பொறுப்பாக செய்யாமல் தனக்கு வேண்டியவர்கள் மூலம் மேலதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது தவறான செயல் மட்டும் அல்ல, சட்டவிரோதமான செயலும் ஆகும். இலங்கை அரசின் அகராதியில் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரச நிறுவனத்தின் கடிதம் ஒன்றில் பயங்கரவாதி என குறிப்பிடப்படுவது ஒன்றும் சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. தவிர, இந்த கடிதத்தை மருத்துவ அதிகாரி வினோதன் எழுதியன் பின்னால் அவருக்கு முறைப்பாடு செய்தவர்கள் யார் என தெரியாது. இங்கு தனது வேலை விடயத்தில் தனது வாழ்க்கை துணையை வைத்து அச்சுறுத்தல் கொடுத்தது மிக தவறான செயல். இதே பெயரில் உள்ள ஒரு முன்னாள் போராளி புலிகள் அமைப்பின் உறுப்பினர் தன்னை புலனாய்வு பிரிவின் முன்னைய பொறுப்பாளராக தெரிவித்து பல காணொளிகளை சமூக ஊடகத்தில் பிரசுரித்து உள்ளார். சம்பவத்தில் தொடர்புபட்ட பணியாளர் இவரது வாழ்க்கை துணையோ தெரியவில்லை. இலங்கையில் பொதுவாகவே அரச பணியாளர்கள் வேலை விடயத்தில் சோம்பேறித்தனம், வேலை செய்வதற்கு பஞ்சி. வாழ்க்கை துணையை முன்னாள் பயங்கரவாதி என விளித்தது இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும், இவ்வளவு ரோசக்காரி என்றால் ஆரம்பத்திலேயே தனது வேலையை ஒழுங்காக ஏன் செய்யவில்லை?