Aggregator

இலங்கை பொறுப்புக்கூறுவதற்காக ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

3 months ago
அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:52 AM இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை புறக்கணிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ப்ரிஷ் வேண்டுகோள் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஜேர்மனியிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் இலங்கை ஜனாதிபதியை ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ் சந்திக்கும்போது எழுப்பவேண்டிய கரிசனைகள் நீண்டகாலத்தவை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கமும் தமிழீழ பிரிவினைவாத விடுதலைப்புலிகளும் 1983 முதல் 2009 வரை இலங்கையில் ஒரு கொடுரமான உள்நாட்டு போரில் ஈடுபட்டனர், அதில் இருதரப்பினரும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பரவலான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிமாதங்களில் அரசபடையினர் பொதுமக்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டனர், போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை பலவந்தமாக காணாமலாக்கினர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிறுவியுள்ளது. ஆனால் திசநாயக்க அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை, முன்னைய அரசாங்கங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பாதுகாத்தன, பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தன. இலங்கையர்களை ஒன்றிணைத்து பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும்நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்களிற்கு அவரது அரசாங்கம் தீர்வை காணவில்லை, கடந்த கால அநீதிகளிற்கு நீதி வழங்குவதை நோக்கி முன்னேறவில்லை. இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளை காட்டிவருகின்றன, பலகாரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் போக்கு பௌத்தமதகுருமாரும் பாதுகாப்பு படையினரும் பல இந்து ஆலயங்களை கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர். 2017 முதல் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடைந்துள்ளது. 27 மனித உரிமை தொழிலாளர் உரிமை சூழல் பாதுகாப்பு பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது. இலங்கை இந்த விடயத்தில் இன்னமும் பேரம் பேசுவதில் தோல்வியடைந்து வருகின்றது. ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டம், இது ஒரு மோசமான துஸ்பிரயோக சட்டமாகும், இது நீண்டகாலமாக சித்திரவதை மற்றும் தடுப்புக்காவலிற்கு காரணமாக விளங்குகின்றது. இது பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லீம்களை இலக்குவைக்கின்றது.. தேர்தலிற்கு முன்னர் அனுரகுமாரதிசநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். 2017 முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வாறான வாக்குறுதியை வழங்கிவந்துள்ளனர். இதேவேளை எந்த வித ஆதாரமும் இன்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துகின்றது. ஐக்கியநாடுகளில் இலங்கை குறித்த தீர்மான விடயத்தில் ஜேர்மனி முன்னர் தலைமை வகித்தது எனினும் 2020 ஆண்டிற்கு பின்னர் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது. பொறுப்புக்கூறலிற்கான அழுத்தத்தை பேணவும், ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்யவும், இலங்கை குறித்த தீர்மானம் இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்படுவது அவசியம். ஐநா முயற்சிகள் மற்றும் ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திசநாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை சீர்திருத்தங்களிற்கான தனது உறுதிமொழிகள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜேர்மன் சான்சிலர் வலியுத்த வேண்டும், இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. https://www.virakesari.lk/article/217245

இலங்கை பொறுப்புக்கூறுவதற்காக ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

3 months ago

அனுரகுமார அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை - பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

Published By: RAJEEBAN

12 JUN, 2025 | 11:52 AM

image

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய அட்டுழியங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்கான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜேர்மனி அழுத்தம் கொடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சூழ்நிலையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கை குறித்த நீண்டகால கரிசனைகளை புறக்கணிக்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜேர்மனிக்கான இயக்குநர் பிலிப்ப்ரிஷ் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் ஜேர்மனியிலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் அதிகாரத்தில் உள்ளனர், ஆனால் இலங்கை ஜனாதிபதியை ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மேர்ஸ் சந்திக்கும்போது எழுப்பவேண்டிய கரிசனைகள் நீண்டகாலத்தவை என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

hrw_german.jpg

இலங்கை அரசாங்கமும் தமிழீழ பிரிவினைவாத விடுதலைப்புலிகளும் 1983 முதல் 2009 வரை இலங்கையில் ஒரு கொடுரமான உள்நாட்டு போரில் ஈடுபட்டனர், அதில் இருதரப்பினரும் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உட்பட பரவலான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக யுத்தத்தின் இறுதிமாதங்களில் அரசபடையினர் பொதுமக்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டனர், போராளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை பலவந்தமாக காணாமலாக்கினர்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்,

பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிறுவியுள்ளது.

ஆனால் திசநாயக்க அரசாங்கம் அதன் முன்னைய அரசாங்கங்களில் இருந்து வேறுபட்டதாக தெரியவில்லை, முன்னைய அரசாங்கங்கள் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளை பாதுகாத்தன, பேரவையின் தீர்மானங்களை நிராகரித்தன.

இலங்கையர்களை ஒன்றிணைத்து பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும்நோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்களிற்கு அவரது அரசாங்கம் தீர்வை காணவில்லை, கடந்த கால அநீதிகளிற்கு நீதி வழங்குவதை நோக்கி முன்னேறவில்லை.

இலங்கை அரசாங்க நிறுவனங்கள் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடுகளை காட்டிவருகின்றன, பலகாரணங்களை முன்வைத்து நிலங்களை அபகரிக்கின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் போக்கு பௌத்தமதகுருமாரும் பாதுகாப்பு படையினரும் பல இந்து ஆலயங்களை கைப்பற்றி அவற்றை பௌத்த ஆலயங்களாக மாற்றியுள்ளனர்.

2017 முதல் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் பயனடைந்துள்ளது. 27 மனித உரிமை தொழிலாளர் உரிமை சூழல் பாதுகாப்பு பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.

இலங்கை இந்த விடயத்தில் இன்னமும் பேரம் பேசுவதில் தோல்வியடைந்து வருகின்றது.

ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினை பயங்கரவாத தடைச்சட்டம், இது ஒரு மோசமான துஸ்பிரயோக சட்டமாகும், இது நீண்டகாலமாக சித்திரவதை மற்றும் தடுப்புக்காவலிற்கு காரணமாக விளங்குகின்றது. இது பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லீம்களை இலக்குவைக்கின்றது..

தேர்தலிற்கு முன்னர் அனுரகுமாரதிசநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தார். 2017 முதல் இலங்கையின் ஆட்சியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இவ்வாறான வாக்குறுதியை வழங்கிவந்துள்ளனர்.

இதேவேளை எந்த வித ஆதாரமும் இன்றி பொதுமக்களை கைதுசெய்து தடுத்துவைப்பதற்கு திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துகின்றது.

ஐக்கியநாடுகளில் இலங்கை குறித்த தீர்மான விடயத்தில் ஜேர்மனி முன்னர் தலைமை வகித்தது எனினும் 2020 ஆண்டிற்கு பின்னர் இதிலிருந்து பின்வாங்கியுள்ளது.

பொறுப்புக்கூறலிற்கான அழுத்தத்தை பேணவும், ஆதாரங்களை சேகரிப்பதை உறுதி செய்யவும், இலங்கை குறித்த தீர்மானம் இந்த ஆண்டின் இறுதியில் புதுப்பிக்கப்படுவது அவசியம்.

ஐநா முயற்சிகள் மற்றும் ஜிஎஸ்பிளஸ் வரிச்சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திசநாயக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை சீர்திருத்தங்களிற்கான தனது உறுதிமொழிகள் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜேர்மன் சான்சிலர் வலியுத்த வேண்டும், இதுபோன்ற வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.

https://www.virakesari.lk/article/217245

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

3 months ago
'பொசென் நிகழ்வு என்ற பெயரில் தையிட்டி விகாரைக்கு சென்ற சிங்கள ராவய அமைப்பின் செயலாளர், உறுப்பினர்கள்!; இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து; தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவேண்டும் - ரஜீவ்காந் 12 JUN, 2025 | 10:36 AM மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும். தாமதிக்காமல் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஜூன் 10ம் திகதி அன்று பொசன் நிகழ்வு எனும் போர்வையில் தையிட்டிக்கு வந்தவர்கள் யார் என்பதை நான் அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். முதலாவது மற்றும் இரண்டாவது படம் நேற்று முன்தினம் தையிட்டியில் எடுக்கப்பட்டது. சிங்களக் கடும் போக்கு தேசிய வாத சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளரே இதில் உள்ளவர்கள். பொதுபலசேன, ராவண பலய போன்ற கடும்போக்குத் தேசிய வாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே இவர்கள். தொடர்ச்சியாக அமைதியான முறையில் நாங்கள் செய்யும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பியிருக்கின்றார்கள், விளக்குகளை காலால் தட்டி இருக்கின்றார்கள், மாலைகளை கிழித்து எறிந்திருக்கின்றார்கள். நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று நேரடியாக மிரட்டி இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை 10ம் திகதி முழுமையான பொலீஸ் பாதுக்காப்புடன் வரவேற்று தையிட்டியின் சட்ட விரோத விகாரையினுள் வைத்திருந்தார்கள். இவர்கள் உள்ளேயும் காணிகளைத் தொலைத்தவர்கள் வெளியே வெயிலில் இருந்தார்கள். இவர்கள் இங்கு வழிபட வரவில்லை எமது கடந்தகால அனுபவ அடிப்படையில் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்தே அதிகம். இவர்கள் போன்றவர்கள் தங்கள் இனவாதத் தேவைக்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்துவார்கள் என நன்கு அறிந்த அரசாங்கம் இதற்கு எந்த தீர்வையும் முன்வைக்காது அமைதியாகவுள்ளது. https://www.virakesari.lk/article/217229

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

3 months ago
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது - என்ன நிலவரம்? பட மூலாதாரம்,FLIGHTRADAR24 12 ஜூன் 2025, 08:57 GMT புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதை ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக லண்டனின் கேட்விக் விமான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். இருப்பினும் வெளியாகியுள்ள படங்களில் விமானத்தில் நெருப்பு எரிவதையும் புகை எழும்புவதையும் காணலாம். விரிவான தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆமதாபாத் நான்காவது போலீஸ் மண்டல துணை காவல் ஆணையர் கண்ணன் தேசாய், விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,TEJAS VAIDYA/BBC "விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அது எந்த வகையான விமானம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். "விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார். விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10:08 மணிக்கு தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,BHUPENDRA PATEL/FB ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார். மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4qe1dz38no

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

3 months ago
இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 13:10 மணிக்கு விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விமானத்திலிருந்து சிக்னல்களை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில் தரையில் இருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் இருந்தது.

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

3 months ago

இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 13:10 மணிக்கு விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விமானத்திலிருந்து சிக்னல்களை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில் தரையில் இருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் இருந்தது.

அதிசயக்குதிரை

3 months ago
Baskar Jayraman Mookkammal oorpdStens0tg ,i001a9c21g4h g1g24l9i10fajgi6h688:95tugf4n93i · கேரளாவில் கள்ளுக்கடைகள் (Toddy Shops) கேரளாவில் கள்ளுக்கடைகள் பிரபலமானவை. தமிழ்நாட்டில் கள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் இது ஒரு சட்டப்பூர்வமான மற்றும் பாரம்பரிய பானமாக கருதப்படுகிறது. கேரளாவில் கள்ளுக்கடைகள் தொழிலாளர்களிடையே ஒரு பிரபலமான சந்திப்பு இடமாக இருந்து வருகிறது. மாலை நேரங்களில் பலர் அங்கு வந்து கள் அருந்துவது வழக்கம். கேரள கள்ளுக்கடைகளில் கள்ளுடன் சேர்த்து பல்வேறு வகையான அசைவ உணவுகளும் கிடைக்கும். இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் அமைந்து, மோர் அல்லது கள் போன்ற பானங்களுடன் பல்வேறு வகையான கறி விருந்து, மீன் பொழிச்சது (வாழை இலையில் சுட்ட மீன்), கருமீன், நெத்திலி வறுவல், மீன் வறுவல், பன்றி கறி, மற்றும் வாத்து கறி, கப்பா கிழங்கு, இடியாப்பம் போன்ற உணவுகள் மிகவும் பிரபலமானவை. புரோட்டா, தோசை, சப்பாத்தி போன்றவையும் கிடைக்கும். பானம்: கள் என்பது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு இயற்கையான பானம். கேரளத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் கள்ளுக்கடைகள் பரவலாகக் காணப்படுகின்றன. பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிகளவு கள் கிடைக்கிறது. கள்ளுக்கடைகள், மதுக்கடைகள் போல இல்லாமல், குறைந்த விலையில் பானங்களை வழங்குவதோடு, உணவு மற்றும் பிற பானங்களையும் வழங்குகின்றன. மொத்தத்தில், கேரளா கள்ளுக்கடைகள் கேரளாவின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், அங்கு கள்ளு என்பது ஒரு பாரம்பரிய பானமாக பார்க்கப்படுகிறது........ !

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
மோனுக்கும் சேர்த்து 80 ரூபாய் பாஸ். கஸ்டப்பட்டு உழைச்ச காசு 🤣. ஆனால் இப்பவெல்லாம் app தானே. ஆட்டம் நடக்காவிடில் (மினிமம் 15 ஓவர் full refund க்கு, 30 ஓவர் 50% refund க்கு) அவர்களாகவே refund ஐ பாங்கில் போட்டு விடுவார்கள். அலைய வேண்டி வராது. என்ர லக்குக்கு 4ம் நாள், 16 ஓவர் அல்லது 31 ஓவர் விளையாட்டு நடக்கும் என நினைக்கிறேன்🤣. இப்படித்தான் போன WTC final, 5ம் நாள், ஒவல் ஹாஸ்பிடாலிட்டி டிக்கெட் இலவசமாக கிடைத்தது. இந்தியாவின் 6 விக்கெட்டை லஞ்சுக்கு முன்பே ஊதி தள்ளி விட்டது அவுஸ். வார நாட்களில் மகனை ஸ்கூல் கட் அடித்து கூட்டி போகலாம், ஆனால் வீட்டில அவன் என்ன பிழை விட்டாலும், கால் தடக்கி விழுந்தாலும் அதைத்தான் காரணம் என்பார்கள் 🤣.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months ago
தக் லைஃபும் தாக்குதல்களும் jeyamohanJune 12, 2025 அன்புள்ள ஜெ, உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையனின் திரைவிமர்சனம் உங்கள் பார்வைக்கு. இணையத்தில் எழுதிக்குவிக்கப்பட்ட பலநூறு விமர்சனங்களுக்கு நேர் எதிரான விமர்சனம் இது. ஆனால் சென்ற சில நாட்களாக இத்தகைய விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முன்பு கடல் வந்தபோதும் இப்படி ஆக்ரோசமான எதிர்விமர்சனங்களும் டிரோல்களும் வந்தன. ஆனால் இன்று ஒரு சாரார் அது அபாரமான ஒரு படம் என்று சொல்வதைக் கேட்கமுடிகிறது. கடல் சினிமாவின் மூலவடிவம் நாவலாக வெளிவந்துள்ளது என்று அறிந்தேன். வாசிக்கவேண்டும். ராஜ் Thug Life: ஒரு திரையனுபவம் நேரம் போனதே தெரியவில்லை. அபாரமான படம். உண்மையில் டிரோல் செய்கிறவர்களும் நானும் ஒரே படத்தை தான் பார்த்தோமா என்றே படம் முழுதும் தோன்றியது. கமல் தான் மகா நடிகன் என்று போகிற போக்கில் காட்டிவிடும் இடங்கள் அநேகம். சிறை விடுதலைக்குப் பின் திரிஷாவை சந்திக்கும் அந்த காட்சி கவிதை. நடிகன், கலைஞன் என்றால் அவன் தான். கமலின் பல படங்களில் நாம் கமல் என்கிற தனி மனிதனின் வாழ்வின் கூறுகளை காண முடியும். Kamal’s movie have autobiographical traces. கமல்–திரிஷா–சிம்பு பற்றி அநேக கிண்டல்கள் ஆனால் வாழ்விலும், இலக்கியத்திலும் கானும் கவித்துவ முரண் அவர்கள் பிணைப்பு. திரிஷா மீது பெரும் காதலும் மனைவியான அபிராமி மீதும் மாறா காதல் அதிசயமல்லவே நம்மை சுற்றிய வாழ்விலும் காண்பது தானே அது? வரலாற்றிலும் உதாரணங்கள் உண்டே? மகாத்மா முதல் முத்தமிழ் அறிஞர் வரை பார்த்தது தானே அது? திரைக்கதை எல்லாம் நேர்த்தியாகவே இருந்தது. கமல் ஒரு சினிமா ரசிகனாக தனக்கு இப்படம் முதலில் பிடித்தது என்றது உண்மை. இந்த படத்தை கழுவி ஊற்றுபவர்கள் என்னமோ காலையில் Bicycle Thief பார்த்து மதியம் பதேர் பாஞ்சாலி பார்த்து இரவு ஈரானிய திரைப்படத்தில் லயிப்பது போல் பேசுகிறார்கள். எல்லா படத்திலும் நிறை குறைகள் இருக்க தான் செய்யும் இதிலும் உண்டு. அதற்காக என்னமோ குப்பையை கொடுத்து விட்டது போல் எழுதி தள்ளுகிறார்கள். ஐயோ இத்தனை கஷ்டப்பட்டார்களே, இவ்வளவு கோடி செலவாச்சே என்று உங்களை பாராட்ட சொல்லவில்லை உண்மையாகவே மணி, கமல், ரஹ்மான் மீது ஒரு பரவலான ஒவ்வாமை இணைய உலகில் இருக்கிறது. பலருக்கு இம்மூவர் மீது தனித்தனியாகவோ கூட்டாகவோ வன்மமும் குரோதமும் இருக்கிறது. நாயகனோடு படம் நன்றாகவே கனெக்ட் ஆகிறது. நாயகன் வந்த போது அதை வணிகத்தில் வீழ்த்தியது ரஜினி போட்ட குப்பை ஒன்று. காலப் போக்கில் தான் நாயகன் பாராட்டபட்டது. வரலாறு முக்கியம். இந்திய திரையிசையின் துருவ நட்சத்திரமாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் விளங்குகிறார் அல்லா ராக்கா ரஹ்மான். பாடல்களுக்கு பின்னணி இசையும் ஓர் சுகானுபவம். ரஹ்மான் திரையிசைக்கு கொடுக்கும் உழைப்பு அபாரம் அவர் ஈடுபடுத்தும் டெக்னீஷியன்கள் ஒரு army. ஆம் அது தான் சர்வதேச தரம். தனி ஆவர்த்தனம் செய்யலாம் தான் ஆனால் அது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு ஒப்பானது. ரஹ்மானின் இசைக்கு சரியான விமர்சனம் எழுத நிச்சயம் தமிழகத்தில் ஆளே இல்லை. இந்தியாவிலும் எனலாம். கமலுக்கும் ரஹ்மானுக்கும் ஒரே பிரச்சனை தான். They are creative giants lost in a sea of mediocrity and given that they subject themselves to commercial needs they attempt to bow and scrape before intellectual pygmies. கமலின் பல பேட்டிகளும் உரையாடல்களும் சமீப காலத்தில் ஆசுவாசத்தையே தருகிறது அதற்கு முக்கிய காரணம் அவரை (ஏன், ராஜா, ரஹ்மான் கூட தான்) உருப்படியாக பேட்டி எடுக்க கூட ஒருவரில்லை. அந்த ஆடியோ லாஞ்ச் தொகுப்பாளர்கள் கமல், ரஹ்மானின் கால் தூசுக்கு சமானம், இந்த கும்பலை வைத்துக் கொண்டு தான் அவர்கள் சரக்கை சந்தைக்கு கொண்டு வர வேண்டி இருக்கிறது. படம் முடிந்து வெளியே வருகிறேன் ஒரு கும்பல் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டிருந்தது. படத்தில் கடுமையாக தாக்கப்பட்ட கமல் மலை உச்சியிலிருந்து தொலைவில் தெரியும் பௌத்த குடியிருப்பை பார்த்துக் கொண்டு எப்படி அடைவது என்று யோசிப்பார் அப்போது ஒரு பனிச் சரிவு அவரை அங்கு கொண்டு சேர்க்கும். இதை ஒருவன் கிண்டலடிக்கிறான், “ஆமா பெரிய லாஜிக்கா காமிக்கறாங்களாம்” என்று. இதே ஆள் மூன்று வாரம் முன்பு தாம் க்ரூஸைன் சாகசங்களுக்கு விசிலடித்திருப்பார். படம் எனக்கு நிச்சயம் பிடித்தது. எல்லா நடிகர்களும் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வையாபுரி“நடித்த” படம் என்றால் ஹே ராமும் இதுவும் தான். அது தான் கமல் எனும் கலைஞன் மற்றவர்களின் திறனை வெளிக்கொணரும் வகை. கமலின் வாரிசாக சிலம்பரசனை நான் நினைத்த காலமுண்டு அந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. எம்.ஜி.ஆரின் வாரிசாக ரஜினியும் சிவாஜியின் வாரிசாக கமலும் வந்தனர். ரஜினி வாரிசாக விஜய் வந்தார் அடுத்து வேறு யாராவது வரக் கூடும் ஆனால் கமலின் இடம், நாளை அவர் இறந்தால், வெற்றிடம் தான். கமல் மரணம் பற்றி அதிகம் பேசியது “உத்தம வில்லன்” படத்தில், அதன் பிறகு இப்போது. ஓ ஆரம்ப காட்சிகளில் அச்சு அசல் குருதிப்புனல் கமலை காணலாம். இன்னும் ஒரு முறை கூட திரையரங்கில் பார்க்கலாம். அரவிந்தன் கண்ணையன் (முகநூலில்) அன்புள்ள ராஜ், ஒரு கமல் ரசிகராக உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் சொல்லவிருப்பதை பொதுவாக திரையுலகுக்குள் உள்ள எவரும் சொல்ல மாட்டார்கள். அது உருவாக்கும் எதிர்வினைகளைச் சந்திப்பது மிகக்கடினம். நான் முழுச்சினிமாக்காரன் அல்ல, எழுத்தாளன், ஆகவே சொல்லலாம். (நாம் சொல்வதை எவரும் கவனிக்க மாட்டார்கள்.) கங்குவா, ரெட்ரோ, தக்லைஃப் என பல சினிமாக்கள் தொடர்ச்சியாக திட்டமிட்டு வீழ்த்தப்படுகின்றன. முதன்மைக் காரணம் அரசியல். அரசியல் இயக்கங்கள் இன்று இணையத்தில் ஒற்றைப்பெரும் அமைப்பாகத் திரண்டுள்ளன.ஒரு படத்துக்காக அவர்கள் திரளவில்லை, தொடர்ச்சியாக ஆண்டுமுழுக்க ஒற்றைத்தரப்பாக திரண்டு செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அந்த பெரிய அமைப்பு ஒரு சினிமாவை அழிக்க நினைத்தால் அவர்களுக்கு அது ஒருநாள் வேலைதான். அரசியலமைப்புகளின் பிரச்சாரங்களை பொதுமக்கள் நம்புவதில்லை. ஆனால் அரசியலமைப்புகள் சினிமாக்களை வீழ்த்த செயல்படக்கூடும் என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஆகவே இவற்றை பொதுமக்களின் கருத்தாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் தக்லைப் திரையரங்கில் வெளியாகி வெறும் இருபது நிமிடங்கள் ஆவதற்கு முன்னரே மிகக்கடுமையான பலநூறு எதிர்விமர்சனங்கள், டிரோல்கள், வெளியாகிவிட்டன. அனைவருமே படத்தை அமெரிக்காவில் பார்த்தோம், துபாயில் பார்த்தோம் என்று எழுதினார்கள். முதல்காட்சி முடிவதற்குள்ளேயே படம் பற்றிய எதிர்மறை கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான். சூரியாவுக்கும் இதே பிரச்சினைதான். இதில் பல நடைமுறை நுணுக்கங்கள் உள்ளன. ஒரு தரப்பு படத்தை வீழ்த்த முயன்றால் இன்னொரு தரப்பு தூக்க முயலலாமே என்று கேட்கலாம். அது சாத்தியமே இல்லை. எவரானாலும் ஒரு நுகர்வுப்பொருளைப் பற்றி எதிர்மறைச் சித்திரத்தை மட்டுமே உருவாக்கமுடியும். நேர்நிலைச் சித்திரத்தை உருவாக்க முடியாது. ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் மட்டுமல்ல, தடுப்பு நிலைபாடுகூட எடுக்கமுடியாது. கமல்ஹாசனுக்கும் ரசிகர்படை உண்டு, அரசியல்தரப்பும் உண்டு, அவர்கள் செயலற்றவர்கள். அவர்கள் வேண்டுமென்றால் இன்னொரு படத்தை வீழ்த்தலாம். சிறிய படங்களை இப்படி வீழ்த்தமுடியுமா என்றால் அது சாத்தியமல்ல. சிறிய படங்களுக்கு இந்தவகை தாக்குதல்கள் விளம்பரம்தான் ஆகும். பெரிய படங்களை மட்டுமே தாக்கி வீழ்த்தமுடியும். பெரிய படங்கள் ஏற்கனவே பெரிய அளவில் பிரமோ செய்திருப்பார்கள். ஆகவே அனைவரும் அதைக் கவனிப்பார்கள். அந்தக் கவனத்தை அப்படத்தைத் தாக்குபவர்கள் மிக எளிதாக தங்கள்மேல் திருப்பிக்கொள்கிறார்கள்.அதாவது படத்தை தாக்குபவர்கள் அப்படம் அளிக்கும் விளம்பரத்தைப் பயன்படுத்தியே அதை வீழ்த்துகிறார்கள். சென்ற சில ஆண்டுகளில் பிரமோவே செய்யப்படாமல் வெளிவந்த படங்கள் சத்தமில்லாமல் தப்பித்துக் கொண்டன. சரி, அப்படியென்றால் பிரமோ செய்யாமலிருக்கலாம் என்றால் மிகப்பெரிய படத்தில் அது பெரிய ‘ரிஸ்க்’. ஏனென்றால் அத்தகைய படங்களுக்கு தொடக்கவிசை மிக முக்கியம். மிக அரிதான கதைக்கருவும், மிக வேறுபட்ட திரைக்கதையும் கொண்ட ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றால் எந்த அளவுக்கு எதிர்மறை விமர்சனம் செய்தாலும் எடுபடாது. அதனால் அந்தப்படம் மேலும் ஆதரவைத்தான் பெறும். ஆனால் நூறு இருநூறு கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஒரு மிகப்பெரிய வணிகப்படத்தை அப்படி எடுக்க முடியாது. அனைவருக்கும் உகந்த படமாக அமையவேண்டும் என்றால் அதற்கு ஒரு சராசரித்தன்மை அவசியம். பொதுவாக கதைக்கரு, கதைக்களம் எல்லாமே கொஞ்சம் அறிமுகமானதாகவே இருக்கவேண்டும். கதைசொல்லும் முறை, நடிப்பு போன்ற சிறிய மாற்றங்களே சாத்தியம் ஹாலிவுட்டின் எந்தப் பெரிய படத்தைப் பார்த்தாலும் இதைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய சுவாரசியமான, நடுத்தரத் தன்மை கொண்ட ஒரு படத்தை எதிர்மறையாகச் சித்தரித்து, கேலி செய்து வீழ்த்திவிட முடியும். இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இப்படி வீழ்த்தப்பட்டன. அத்தனை நடிகர்களும் அடிபணிந்தனர். அண்மையில் எம்புரானுக்குப்பின் மோகன்லால் காலடியிலேயே விழுந்து விட்டார். இங்கும் அந்த வகையான உச்சகட்ட அழுத்தம்தான் உள்ளது. இங்கும் தாக்குப்பிடிப்பது கடினம் என்பதே என் எண்ணம். தக் லைப் எனக்குப் பிடித்திருந்தது. ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் ஆணவமும் அதன் விளைவான துரோகமும் ஊடாடும் சித்திரத்தை அளிக்கிறது. நீண்ட காலக் கதை. ஆகவே பல இடைவெளிகள் கொண்ட படம். வெவ்வேறு இடங்களில் தொடர்ச்சிகளை தொட்டுத்தொட்டு செல்கிறது. கொஞ்சம் கவனமாகப் பார்க்கப்படவேண்டிய படம். ஆனால் அக்கவனத்தை சிதறடித்துவிட்டால் மொத்தமாகவே பார்வையாளனிடமிருந்து அகன்றுவிடக்கூடியது. ஜெ https://www.jeyamohan.in/218316/

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

3 months ago
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு! Veeragathy Thanabalasingham on June 11, 2025 Photo, REUTERS உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன. முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் ஆய்வாளர் கடந்த வாரம் கூறியதைப் போன்று முறைமையை அரசாங்கம் மாற்றுகிறதா அல்லது அரசாங்கத்தை முறைமை மாற்றத் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. தென்னிலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி நிருவாகங்களை அமைக்க முடியாமல் இருப்பதை போன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பெரும்பாலான சபைகளில் முதலாவதாக வந்த இலங்கை தமிழரசு கட்சியினாலும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சபைகளில் தமிழ் கட்சிகள் மாத்திரம் நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பதாக தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய பல தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னென்றும் இல்லாத வகையில் பெற்ற வெற்றி தங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரிய ஆபத்தாக அமையப்போகிறது என்று அஞ்சிய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் கேட்டார்கள். தென்னிலங்கையின் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அக்கறையற்ற அணுகுமுறை தமிழ் கட்சிகளின் வேண்டுகோளை தமிழர்கள் பெருமளவுக்கு கருத்தில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவது போன்று தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக நிராகரித்து விட்டதாக ஒருபோதும் கூறமுடியாது. வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெளிவான சான்று. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டை என்று கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு (135 ) கட்சிக்கு அடுத்ததாக கூடுதல் ஆசனங்களை (81) தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றியது. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருட காலப்பகுதியில் தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தை வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்குவதை விடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்ற முறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வழிமுறைகளில் முன்னெடுக்கத் தவறிய தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் மீண்டும் முழுமையாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியாது. கடந்த ஆறு மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதில் மனப்பூர்வமான நாட்டத்தை காட்டியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததை விடவும் கூடுதலான ஆதரவை வடக்கு, கிழக்கில் பெற்றிருக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகடடுவதற்கு தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்றும் அந்தப் பாடத்தை உகந்த முறையில் புரிந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் அவற்றின் போக்கை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பெரிய அனர்த்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் எந்த பாடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து அவர்கள் தங்களது பழைய பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் தமிழ் கட்சிகள் ஒத்துழைத்துச் செயற்படும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. உள்ளூராட்சி நிருவாகங்களில் ஒத்தழைத்துச் செயற்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு நாளடைவில் தமிழ்க்கட்சிகளின் பரந்தளவிலான ஒற்றுமைக்கு வழிவகுக்க முடியும் என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், கூட்டணிகளை அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களது கட்சி அரசியல் நலன்களிலேயே தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான கரிசனை காட்டுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரேமாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் மாத்திரமே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது. வடக்கில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தால் சில வேளைகளில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்தாக அமையக்கூடிய எந்தவொரு நிகழ்வுப் போக்கிற்கும் எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த ஆபத்தைக் கடந்து விட்டால் தங்களது பழைய போக்கிற்கு திரும்பிவிடுவார்கள். இன்று வடக்கில் நடப்பது அதுதான். வடக்கு தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இரு முகாம்களாக பிரிவுபடும் திசையை எடுத்திருக்கிறது. ஒன்று தமிழரசு கட்சியும் அதற்கு ஆதரவான சக்திகளும். மற்றையது தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு ஆதரவான சக்திகளும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக விளங்கிய தமிழரசு கட்சி தற்போது கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், தங்களைத் தவிர கொள்கையில் நேர்மையானவர்கள் இலலை என்ற நம்பிக்கையில் இதுகாலவரை மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டணி அமைப்பதில் அக்கறை காட்டுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விளங்குகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக சில குழுக்களை இணைத்துக் கொண்டு தமிழ் தேசிய பேரவை என்ற அவதாரத்தை எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கிறது. புதிய கூட்டணிக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதே புதிய கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்ற போதிலும், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓரணியில் செயற்படப்போவதாக உறுதிபூண்டு உடன்படிக்கையில் கடந்தவாரம் கைச்சாத்திட்டதுடன் கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் செய்திருக்கிறார்கள். இந்த உடன்படிக்கைக்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஒத்துழைத்துச் செயற்படும் சாத்தியம் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். ஆனால், தாங்கள் கணிசமான ஆசனங்களை கைப்பற்றிய சில உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சி மறுத்ததை அடுத்து அவர்கள் தமிழ் தேசிய பேரவை பக்கம் சென்றிருக்கிறார்கள். அதேவேளை, தமிழரசு கட்சி உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அவர்களால் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு தமிழரசு கட்சி உட்கட்சித் தகராறுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தலில் சிவஞானம் சிறீதரனிடம் தோல்வி கண்ட எம்.ஏ. சுமந்திரன் மத்திய செயற்குழுவின் ஆதரவுடன் கட்சியை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கின்ற போதிலும், சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் கட்சியை நிருவகிப்பவர் போன்றே பெரும்பாலும் நடந்துகொள்கிறார். தமிழரசு கட்சி சுமந்திரனின் வழிகாட்டலில் செயற்படுவதை கட்சிக்குள் உள்ள சிறீதரன் அணியினர் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் விரும்பவில்லை. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்காத அவர்கள் தமிழரசு கட்சி சிறீதரனின் தலைமையின் கீழ் வருவதை பெரிதும் விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உட்கட்சித் தகராறுக்கு தீர்வைக் காண்பது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை பொறுத்த விடயம். ஆனால், தமிழரசு கட்சி சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அதற்கு விமோசனம் இல்லை என்று அவரை விரும்பாதவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் பெரிய வெற்றி அவரின் எதிராளிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் முன்னரங்கத்தில் சுமந்திரனே நின்றார். குறிப்பாக, யாழ்ப்பாண குடாநாடடுக்குள் தமிழரசு கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருந்தால் அவரை கட்சிக்குள்ளும் தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுக்குவது சுலபமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இந்தப் பின்புலத்திலேயே வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியின் நிருவாகங்களை அமையவிடாமல் தடுப்பதற்கான வியூகங்களை நோக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று அணிகளே தமிழர் தரப்பில் முக்கியமானவையாக களத்தில் இருந்தன. தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்வதில் அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருந்தது. தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தோன்றியிருக்கும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக ஏன் இந்த மூன்று அணியினராலும் ஒரு சுமுகமான ஏற்பாட்டுக்கு வரமுடியாது? கட்சி அரசியல் போட்டியையும் ஆளுமை மோதல்களையும் தவிர இதற்கு வேறு என்ன காரணத்தை இவர்களால் கூறமுடியும்? குறைந்தபட்சம் உள்ளூராட்சி நிருவாகங்களிலேயே ஒத்துழைத்துச் செயற்ட முடியாத இவர்களிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒன்றிணைந்த அணுகுமுறையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் தமிழரசு கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், வடக்கில் தற்போதைய புதிய அணிசேருகைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கவும் கூடும். வடக்கு அரசியலில் பல வருடங்களாக நிலவும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கான நிழல் யுத்தம் ஒன்று இந்த நிகழ்வுப் போக்குகளில் உட்கிடையாக இருக்கிறது. அதுபோக, வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது. வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12126

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

3 months ago

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு!

Veeragathy Thanabalasingham

on June 11, 2025

https___archive-images.prod_.global.a201

Photo, REUTERS

உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் ஆய்வாளர் கடந்த வாரம் கூறியதைப் போன்று முறைமையை அரசாங்கம் மாற்றுகிறதா அல்லது அரசாங்கத்தை முறைமை மாற்றத் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

தென்னிலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி நிருவாகங்களை அமைக்க முடியாமல் இருப்பதை போன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பெரும்பாலான சபைகளில் முதலாவதாக வந்த இலங்கை தமிழரசு கட்சியினாலும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சபைகளில் தமிழ் கட்சிகள் மாத்திரம் நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பதாக தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய பல தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னென்றும் இல்லாத வகையில் பெற்ற வெற்றி தங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரிய ஆபத்தாக அமையப்போகிறது என்று அஞ்சிய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் கேட்டார்கள். தென்னிலங்கையின் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது.

அதிகாரத்துக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அக்கறையற்ற அணுகுமுறை தமிழ் கட்சிகளின் வேண்டுகோளை தமிழர்கள் பெருமளவுக்கு கருத்தில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவது போன்று தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக நிராகரித்து விட்டதாக ஒருபோதும் கூறமுடியாது. வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெளிவான சான்று. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டை என்று கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு (135 ) கட்சிக்கு அடுத்ததாக கூடுதல் ஆசனங்களை (81) தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றியது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருட காலப்பகுதியில் தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தை வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்குவதை விடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்ற முறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வழிமுறைகளில் முன்னெடுக்கத் தவறிய தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் மீண்டும் முழுமையாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியாது. கடந்த ஆறு மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதில் மனப்பூர்வமான நாட்டத்தை காட்டியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததை விடவும் கூடுதலான ஆதரவை வடக்கு, கிழக்கில் பெற்றிருக்க முடியும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகடடுவதற்கு தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்றும் அந்தப் பாடத்தை உகந்த முறையில் புரிந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் அவற்றின் போக்கை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பெரிய அனர்த்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் எந்த பாடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து அவர்கள் தங்களது பழைய பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் தமிழ் கட்சிகள் ஒத்துழைத்துச் செயற்படும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. உள்ளூராட்சி நிருவாகங்களில் ஒத்தழைத்துச் செயற்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு நாளடைவில் தமிழ்க்கட்சிகளின் பரந்தளவிலான  ஒற்றுமைக்கு வழிவகுக்க முடியும் என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், கூட்டணிகளை அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள்  தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களது கட்சி அரசியல் நலன்களிலேயே தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான கரிசனை காட்டுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரேமாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் மாத்திரமே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது.

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தால் சில வேளைகளில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்தாக அமையக்கூடிய எந்தவொரு நிகழ்வுப் போக்கிற்கும் எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த ஆபத்தைக் கடந்து விட்டால் தங்களது பழைய போக்கிற்கு திரும்பிவிடுவார்கள். இன்று வடக்கில் நடப்பது அதுதான்.

வடக்கு தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இரு முகாம்களாக பிரிவுபடும் திசையை எடுத்திருக்கிறது. ஒன்று தமிழரசு கட்சியும் அதற்கு ஆதரவான சக்திகளும். மற்றையது தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு ஆதரவான சக்திகளும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக விளங்கிய தமிழரசு கட்சி தற்போது கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், தங்களைத் தவிர கொள்கையில் நேர்மையானவர்கள் இலலை என்ற நம்பிக்கையில் இதுகாலவரை மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டணி அமைப்பதில் அக்கறை காட்டுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விளங்குகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக சில குழுக்களை இணைத்துக் கொண்டு தமிழ் தேசிய பேரவை என்ற அவதாரத்தை எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கிறது. புதிய கூட்டணிக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதே புதிய கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்ற போதிலும், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓரணியில் செயற்படப்போவதாக உறுதிபூண்டு உடன்படிக்கையில் கடந்தவாரம் கைச்சாத்திட்டதுடன் கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் செய்திருக்கிறார்கள்.

இந்த உடன்படிக்கைக்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஒத்துழைத்துச் செயற்படும் சாத்தியம் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

ஆனால், தாங்கள் கணிசமான ஆசனங்களை கைப்பற்றிய சில உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சி மறுத்ததை அடுத்து அவர்கள் தமிழ் தேசிய பேரவை பக்கம் சென்றிருக்கிறார்கள். அதேவேளை, தமிழரசு கட்சி உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அவர்களால் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு தமிழரசு கட்சி உட்கட்சித் தகராறுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தலில் சிவஞானம் சிறீதரனிடம் தோல்வி கண்ட எம்.ஏ. சுமந்திரன் மத்திய செயற்குழுவின் ஆதரவுடன் கட்சியை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கின்ற போதிலும், சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் கட்சியை நிருவகிப்பவர் போன்றே பெரும்பாலும் நடந்துகொள்கிறார்.

தமிழரசு கட்சி சுமந்திரனின் வழிகாட்டலில் செயற்படுவதை கட்சிக்குள் உள்ள சிறீதரன் அணியினர் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் விரும்பவில்லை. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்காத அவர்கள் தமிழரசு கட்சி சிறீதரனின் தலைமையின் கீழ் வருவதை பெரிதும்  விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உட்கட்சித் தகராறுக்கு தீர்வைக் காண்பது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை பொறுத்த விடயம். ஆனால், தமிழரசு கட்சி சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அதற்கு விமோசனம் இல்லை என்று அவரை விரும்பாதவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் பெரிய வெற்றி அவரின் எதிராளிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் முன்னரங்கத்தில் சுமந்திரனே நின்றார். குறிப்பாக, யாழ்ப்பாண குடாநாடடுக்குள் தமிழரசு கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருந்தால் அவரை கட்சிக்குள்ளும் தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுக்குவது சுலபமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இந்தப் பின்புலத்திலேயே வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியின் நிருவாகங்களை அமையவிடாமல் தடுப்பதற்கான வியூகங்களை நோக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,  தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று அணிகளே தமிழர் தரப்பில் முக்கியமானவையாக களத்தில் இருந்தன. தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்வதில் அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருந்தது. தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தோன்றியிருக்கும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக ஏன் இந்த மூன்று அணியினராலும் ஒரு சுமுகமான ஏற்பாட்டுக்கு வரமுடியாது? கட்சி அரசியல் போட்டியையும் ஆளுமை மோதல்களையும் தவிர இதற்கு வேறு என்ன காரணத்தை இவர்களால் கூறமுடியும்? குறைந்தபட்சம் உள்ளூராட்சி நிருவாகங்களிலேயே ஒத்துழைத்துச் செயற்ட முடியாத இவர்களிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒன்றிணைந்த அணுகுமுறையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த சுமந்திரன் மாகாண சபை தேர்தலில்  தமிழரசு கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், வடக்கில் தற்போதைய புதிய அணிசேருகைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கவும் கூடும். வடக்கு அரசியலில் பல வருடங்களாக நிலவும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கான நிழல் யுத்தம் ஒன்று இந்த நிகழ்வுப் போக்குகளில் உட்கிடையாக இருக்கிறது.

அதுபோக, வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது.

Thanabalasingam-e1742967550320.jpg?resizவீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12126

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
WTC FINAL : ரபாடா சாதனையால் பும்ராவை விமர்சிக்கும் ரசிகர்கள்! 12 Jun 2025, 9:39 AM லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (ஜூன் 11) தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா. இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்து இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை பின் தள்ளி அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா பவுலர்களில் ஆலன் டொனால்ட் மற்றும் நிட்டினியை தொடர்ந்து மூன்றாவது வீரராக இடம்பிடித்துள்ளார். அதே போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 50 விக்கெட்டுகள் அல்லது அதற்கும் மேல் எடுத்த பந்துவீச்சாளர்களில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் உடையவராக மாறியிருக்கிறார் காகிசோ ரபாடா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பவுலர் பும்ரா 64 விக்கெட்டுகளை 39.9 என்ற பவுலிங் ஸ்ட்ரைக் ரேட்டில் வீழ்த்தியது தான் இதுவரை சாதனையாக இருந்தது. அதனை 38 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் முறியடித்துள்ளார் ரபாடா. இதெற்கெல்லாம் மேலாக தற்போது நடைபெற்று வரும் பைனலில் ரபாடா 5 விக்கெட் வீழ்த்திய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பும்ரா அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாததை குறிப்பிட்டு அவரை விமர்சித்து வருகின்றனர். https://minnambalam.com/bhumrah-gets-outrage-after-rabada-fifer-in-wtc-25/

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

3 months ago
முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் June 12, 2025 10:49 am முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/a-buddhist-temple-shaped-structure-suddenly-created-in-the-mulliyawalai-area/

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

3 months ago

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025 10:49 am

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் இரு நாட்களுக்கு முன்னர் இரவோடு இரவாக பௌத்த சமயத்தை போதிக்கும் வகையில் மகிந்த தேரரின் இலங்கை வருகையும், பௌத்த மதத்தினை ஸ்தாபித்தலும் என தலைப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று புதன் கிழமை (11.06.2025) இரவு இனம் தெரியாதோரால் காட்சிப்படுத்தப்பட்ட பதாதை கிழித்தெறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3-2.jpg4.jpg

https://oruvan.com/a-buddhist-temple-shaped-structure-suddenly-created-in-the-mulliyawalai-area/