Aggregator
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுடன் அல்ஜீரியாவிலிருந்து காசா நோக்கி புறப்பட்டது வாகனப்பேரணி
ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுடன் அல்ஜீரியாவிலிருந்து காசா நோக்கி புறப்பட்டது வாகனப்பேரணி
Published By: RAJEEBAN
12 JUN, 2025 | 12:41 PM
சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பேர்க் காசாவிற்கு கடல்வழியாக செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை இஸ்ரேல் முறியடித்துள்ள அதேவேளை காசா முற்றுகையை உடைக்கும் நோக்கில் சுமார் 1500 பேர் கொண்ட வாகனப்பேரணியொன்று அல்ஜீரியாவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
அல்ஜீரியா துனிசியாவை சேர்ந்த 1500க்கும் அதிகமான பாலஸ்தீன ஆதரவாளர்கள் வாகனங்களுடன் லிபியா சென்றடைந்துள்ளனர்.
அல்ஜீரியாவிலிருந்து புறப்பட்ட இவர்கள் துனிசியாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்து லிபியாவை சென்றடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் மனிதாபிமான முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் காசவை சென்றடைவதே இவர்களது திட்டம்.
லிபியாவின் ஜவியா நகரை சென்றடைந்துள்ள இவர்கள் எகிப்து ஊடாக ரவா எல்லையை சென்றடைய திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் கார்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
லிபியாவின் திரிபோலி,மிஸ்ரட்டா, சேர்ட்டே,பெங்காசி ஊடாக இவர்கள் எகிப்தின் எல்லையான சலூம் சென்றடையவுள்ளனர். பின்னர் அவர்கள் கெய்ரோ ஊடாக ரபா எல்லைக்கு செல்லவுள்ளனர்.
அல்ஜீரியா துனிசியா அதிகாரிகள் தங்களிற்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக அல்ஜீரியாவை சேர்ந்த ஜமீலா ஷரிட்டா என்பவர் தெரிவித்துள்ளார்.
எல்லைகளை திறந்து காசா பள்ளத்தாக்கிற்குள் உணவுகள் செல்லும் நிலையை உருவாக்குவதே தங்களின் பயணத்தின் நோக்கம்என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் காசாவில் கடல்தரை வான்வழியாக ஆர்வலர்கள் வந்து சேருவார்கள் என இந்த வாகனத்தொடரணியை ஏற்பாடு செய்துள்ள டெர்க்கியா சயிபி தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு எதிரான வன்முறைகளால் நாங்கள் அச்சமடையப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன தேசம் குறித்த ஐநா மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் - நாங்கள் பதில்நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
பாலஸ்தீன தேசம் குறித்த ஐநா மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் - நாங்கள் பதில்நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்கா கடும் எச்சரிக்கை
Published By: RAJEEBAN
12 JUN, 2025 | 11:07 AM
பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் உயிர்காக்கும் முயற்சிகளிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலை தண்டிக்கும் விதத்திலான தடைகள் அரசியல் நடவடிக்கைகள் போன்றவைகளிற்கு சர்வதேச மாநாட்டில் ஆதரவு வழங்கப்படலாம் இதனை எதிர்க்கின்றோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை பாலஸ்தீன தேசத்திற்கான திட்டத்தினை முன்வைக்கும் மாநாட்டினை பிரான்சும் சவுதிஅரேபியாவும் அடுத்தவாரம் நியுயோர்க்கில் நடத்துகின்றன.
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
பலாலி பொலிஸார் நீதிமன்றத்தைக் தவறாக வழிநடத்துகிறார்கள் என சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
பலாலி பொலிஸார் நீதிமன்றத்தைக் தவறாக வழிநடத்துகிறார்கள் என சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு
Published By: DIGITAL DESK 2
12 JUN, 2025 | 09:16 PM
யாழ்ப்பாணம் , பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மல்லாகம் நீதவான் நீதிமன்றை தவறாக வழிநடத்துவதாக மன்றில் சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணங்களில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற கட்டளையை மீறி, தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போராட்டம் நடத்தியவர் சார்பாக மன்றில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, நா.காண்டீபன் ஆகியோர் சமர்ப்பனங்களை முன்வைத்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெறவிருந்த வேளை சிலரின் பெயர் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்று இருந்தன. நீதிமன்றினால் பெறப்பட்ட தடையுத்தரவை , சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்காது, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை , அங்கு வந்த பொலிஸார் அவர்களின் பெயர் விபரங்களை வாசித்து சென்று இருந்தனர். அதனூடாக சட்டத்தின் ஏற்பாடுகளை திருப்தி படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூற முடியாது என மன்றில் தெரிவித்திருந்தோம்.
அதேவேளை, தையிட்டி விகாரைக்கு பொறுப்பான "அமரபுர நிக்காய பீடம்" விகாரையில் பொசன் நிகழ்வுகளை நடாத்துவது இல்லை என கடந்த மே மாதம் 29ஆம் திகதியே பதில் பொலிஸ் மா அதிபர் , வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் பூரணை தின வழிபாட்டிற்கு வருகை தந்த பௌத்தர்களை போராட்டக்காரர்கள் இடை மறித்ததாகவும் , தமிழர்கள் விகாரையை இடித்து அழிக்க போகின்றார்கள் , பௌத்தர்கள் ஒன்றிணைந்து தையிட்டிக்கு செல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கடும் போக்கு சிங்கள இனவாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி , இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்று விக்க முயன்றனர். அவர்கள் தொடர்பில் பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற விடயத்தை மன்றில் சுட்டிக்காட்டி , அதற்கான ஆதாரங்களையும் மன்றில் சமர்ப்பித்துள்ளோம்.
பலாலி பொலிஸ் அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கி மன்றை தவறாக வழி நடத்துகிறார். என்ற விடயத்தையும் மன்றில் சுட்டிக்காட்டினோம். அதனை அடுத்து குறித்த வழக்கினை நீதவான் கிடப்பில் போட்டுள்ளார் என தெரிவித்தனர்.
அதேவேளை தையிட்டி விகாரையை தமிழர்கள் இடித்து அழிக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட பொதுபலசேன ராவண பலய, சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் தையிட்டி விகாரைக்கு வந்திருந்தார்கள் என்றும், அவர்களுக்கு பலாலி பொலிஸார் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு ; விகாரையை சூழவுள்ள காணிகள் விடுவிக்கப்படும் - இராமலிங்கம் சந்திரசேகர்
12 JUN, 2025 | 03:20 PM
தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை (12) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலர் பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்.
அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம் என்றார்.