2 months 4 weeks ago
மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை - ஜனாதிபதி
Dec 6, 2025 - 08:03 PM

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.
வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.
மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்லாவை மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார்.
கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார்.
https://adaderanatamil.lk/news/cmiue951x02gao29nsdh4o4hm
2 months 4 weeks ago
அனுபவ பேட்டர்களை கூட குழப்பும் 'கவண்' உத்தி பும்ராவுக்கு வந்தது எப்படி? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 6 டிசம்பர் 2025, 10:23 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "அவர் ஓடும் விதம் மற்ற எல்லோரும் ஓடுவதை விடவும் வித்தியாசமானது. அவருடைய கடைசி கட்ட 'ஆக்ஷனும்' வித்தியாசமாக இருக்கும். நான் அவரது பந்துவீச்சை போதுமான அளவு எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு ஒத்துப்போக எனக்கு சில பந்துகள் அவகாசம் எடுக்கவே செய்கிறது" ஆஸ்திரேலிய பேட்டரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டு சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், ஜஸ்ப்ரித் பும்ராவையும் அவரது பந்துவீச்சு முறை பற்றியும் இப்படிச் சொல்லியிருந்தார். பும்ராவின் வேரியேஷன்கள், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தி, துல்லியம் மற்றும் சீரான செயல்பாடு அவரை நம்பர் 1 டெஸ்ட் பௌலராக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பும்ராவின் 'வித்தியாசமான பௌலிங் ஆக்ஷனே' பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்டர்கள் பலரும் கூறியுள்ளனர். மெதுவாக ஓடிவந்து, முதுகை முன்னே அதிகமாகவும், பக்கவாட்டில் கொஞ்சமாகவும் வளைத்து, கைகளை முழுமையாக நீட்டி அவர் பந்துவீசும் முறை சற்றே தனித்துவமான ஒன்று. இது அதிகம் காயம் ஏற்படுத்தக்கூடிய முறை என்று ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தாலும், வெகுவிரைவிலேயே பும்ராவின் ஆயுதமாக மாறிவிட்டது. அந்த பந்துவீச்சு முறையை 'டீகோட்' செய்த பல முன்னணி வீரர்களும் வல்லுநர்களுமே, அதுவே அவருக்கு மிகப் பெரிய பலம் என்று கூறியிருக்கிறார்கள். விளம்பரம் பும்ராவின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 6), அந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை எப்படி அவரது பலமாக விளங்குகிறது என்று பார்ப்போம். குழப்பம் ஏற்படுத்தும் 'வேகம் இல்லாத சிறிய ரன் அப்' வழக்கமாக பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் ரன் அப் அதிக தூரம் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஓடிவரும் வேகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால், பும்ராவின் ரன் அப் குறுகிய தூரம் கொண்டது. அதேசமயம் மெதுவானதும் கூட. இது பேட்டர்களின் தயார் நிலையை சோதிப்பதோடு, அவர்களுக்கு எதிர்பாராத சவாலைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் இங்கிலாந்தின் இரு முன்னாள் கேப்டன்கள். இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின்போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பும்ராவின் பந்துவீச்சு பற்றி அலசியிருந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது '10 அடிக்கு ஒரு பாம்பு': உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா? தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி 'குளியலறையில் லைஃப் பாய் சோப்': பிரெஷ்னேவ் இந்தியா வந்த போது சோவியத் முன்வைத்த விசித்திரமான கோரிக்கைகள் 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்துவீசுவதற்கு முன்பான ரன் அப்பில், மற்ற வேகப்பந்துவீச்சாளர்களைப் போல் பும்ரா அதிக தூரமோ, அதிக வேகமாகவோ ஓடுவதில்லை அப்போது பேசிய நாசர் ஹுசைன், "நீங்கள் (ஒரு பேட்டராக) எப்போது நகரப் போகிறீர்கள் என்று யோசிக்கும் போது பும்ராவின் 'ஸ்டட்டரிங் ரன் அப்' (நின்று நின்று ஓடுவது போன்ற ரன் அப்) சிக்கலை ஏற்படுத்தும். அவர் ஓடி வருவதைப் பார்த்தால், அந்தப் பந்து ஏதோ காலிங்வுட் வீசும் வேகத்தில் (சற்றே மிதமான வேகத்தில்) வரும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஏன் சில சமயம் அவர் ஓடிவருவதைப் பாதியில் நிறுத்தப் போகிறாரா என்றுகூட நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியிருக்கப் போவதில்லை" என்று கூறினார். பெரும்பாலான பேட்டர்களுக்குமே 'டிரிகர் மூவ்மெண்ட்' என்பது இருக்கும். அதாவது, அவர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக தங்கள் ஸ்டான்ஸில் இருந்து சிறிய அளவு நகர்வார்கள். பந்துவீச்சாளர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது, அவர்கள் இந்த நகர்வைத் தொடங்குவார்கள். பெரும்பாலான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை வழக்கமான பாணியில் இருக்கும் என்பதால் அவர்களுக்குப் பிரச்னை இருக்காது. இந்த இடத்தில்தான், பும்ராவின் வித்தியாசமான ரன் அப், அவர்களைக் குழப்பிவிடும். அதனால்தான் ஸ்மித் போன்ற அனுபவ வீரருக்கே, ஒவ்வொரு முறையும் பும்ராவை எதிர்கொள்ளும்போது சில பந்துகள் அவகாசம் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் மெதுவாக ஓடிவருவதைப் பார்த்துவிட்டு, பந்தை வேகமாக எதிர்கொள்வதும் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த ஆண்டு, டெய்லி மெயில் பத்திரிகையில் பும்ரா பற்றி எழுதியிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டுவர்ட் பிராட், "பும்ரா மிகவும் அமைதியாக, மெதுவாக, 'shuffle' செய்து ஓடும்போது அங்கே ஆற்றல் அதிகம் உண்டாகப்படுவதில்லை. அதனால் அங்கு பில்ட் அப்பே இல்லை. அப்படியிருக்கும் போது திடீரென்று பந்து பெரும் வேகத்தில் உங்களை நோக்கி வரும்போது பெரும் குழப்பம் ஏற்படுத்தும். இதுவே மற்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பாருங்கள், நல்ல வேகத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கிரீஸை நோக்கி ஓடிவருவார்கள். அப்போது ஒரு பேட்டருக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். பும்ரா விஷயத்தில் அது நேரெதிராக இருக்கிறது" என்றார். இதன்மூலம் உளவியல் ரீதியாக ஒரு பேட்டரை பும்ராவின் ரன் அப் குழப்புகிறது என்கிறார் பிராட். பும்ராவின் டெலிவரி ஸ்டிரைட் (Delivery Stride - பந்தை வீசுவதற்கு முன்பான கடைசி அடி) சிறிதாக இருப்பதால் அவரால் சமநிலையைத் தக்கவைக்க முடிகிறது, கட்டுப்பாட்டோடு இருக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இன்று நம்பர் 1 டெஸ்ட் பௌலராகத் திகழ்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா ஆற்றலை உருவாக்கும் பௌலிங் ஆக்ஷன் அதேசமயம், மெதுவாக ஓடிவரும் ஒருவரால் எப்படி பந்தை வேகமாக வீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது. "பெரும்பாலான பௌலர்கள் 60% ஆற்றலை அவர்களின் வேகமான ரன் அப் மூலம் உருவாக்குகிறார்கள். ஆனால், பும்ரா தான் ஓடிவருவதன் மூலம் 30% ஆற்றலையும், தன் பௌலிங் ஆக்ஷன் மூலம் 70% ஆற்றலையும் உருவாக்குகிறார்" என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளெமிங். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியொன்றில் இப்படிக் கூறியிருந்த ஃபிளெமிங், பும்ரா தன் ரன் அப்-ன் கடைசி சில அடிகளில் வேகத்தை உருவாக்குகிறார் என்றும் குறிப்பிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி 7 ஸ்போர்ட் நிகழ்ச்சியொன்றில் அலசியிருந்த ஃபிளெமிங், அந்த பந்துவீச்சு முறையால் அவர் உடல் கவண் போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்று ஃபிளெமிங் கூறினார். "பும்ராவின் முன்கால் வேகத்தைக் குறைக்கும்போது, உடல் மற்றும் தோள்பட்டை இலக்கை (பேட்டர்) நோக்கி கவண் போல் செலுத்தப்படுகிறது" என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்கிறார் டேமியன் ஃபிளெமிங். பும்ரா பந்துவீசும்போது அவரது முழங்கை மடக்கப்படாமல் நீண்டிருக்கும். இந்த நிலையை ஹைப்பர்-எக்ஸ்டென்ஷன் (hyperextension) என்கிறார்கள். இந்த நிலையில் பும்ராவுடைய முழங்கையின் வேகம் குறையும்போது, முன்கையின் வேகம் அதிகரித்து, அது கவண் போல் செயல்பட்டு பந்தை முன்னே செலுத்தத் தொடங்குகிறது என்றார் ஃபிளெமிங். மூன்றாவது கட்டமாக அவருடைய மணிக்கட்டும் இதேபோன்ற வேலையைச் செய்வதாக அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகையாக நீண்டிருக்கும் பும்ராவின் கையும், வளைந்துகொடுக்கும் அவரது மணிக்கட்டும் கவண் போல் செயல்பட்டு பந்தை இலக்கை நோக்கி செலுத்துகின்றன என்கிறார் டேமியன் ஃபிளெமிங் "பும்ராவின் மணிக்கட்டு நம்பமுடியாத அளவுக்கு வளைந்துகொடுக்கிறது (flexible). இதை நீங்கள் சர்வதேச பௌலர்களிடம் அதிகம் பார்க்க முடியாது. இங்கே உள்ளங்கையின் வேகம் குறையத் தொடங்கும்போது, மணிக்கட்டின் வேகம் கூடி அது கவண் போல் பந்தைத் தள்ளுகிறது" என்று ஃபிளெமிங் கூறினார். இப்படி பும்ராவின் பந்துவீச்சு முறை அவரது உடலின் மூன்று பகுதிகளை கவண் போல் பயன்படுத்துவதால் அவருடைய பந்தில் வேகம் உருவாகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் கைகள் பந்துவீசும்போது மடங்கியே இருக்கும். பும்ரா இந்த இடத்தில் மாறுபடுகிறார் விரைவாக கீழே இறங்கும் பந்து பெரும்பாலான பௌலர்களைக் காட்டிலும் பும்ராவின் பந்து சீக்கிரமாக ஆடுகளத்தில் பிட்ச்சாகிவிடும். அதனால் பேட்டர்கள் அதைக் கணிப்பது மிகவும் கடினமாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார் ஐஐடி கான்பூரின் விண்வெளி பொறியியல் பேராசிரியர் சஞ்சய் மிட்டல். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அது பின்னோக்கி சுழன்றுகொண்டே (back spin) செல்கிறது. அப்போது மேக்னஸ் விளைவு (Magnus effect) காரணமாக பந்தில் மேல்நோக்கி விசை ஏற்படுத்தப்படுகிறது. "பேக் ஸ்பின்னுடன் நகரும் கிரிக்கெட் பந்தில் இருக்கும் மேக்னஸ் விசை, பந்தை காற்றில் அதிக நேரம் மிதக்க வைக்கிறது. இது பேட்டர்கள் பந்தை அடிப்பதை எளிதாக்குகிறது" என்கிறார் சஞ்சய் மிட்டல். அதேசமயம், பும்ரா பந்தை அதீதமாக பின்னோக்கி சுழலச் செய்வதால், அவர் தலைகீழ் மேக்னஸ் விளைவை உருவாக்குகிறார் என்றும், அதனால் பந்து விரைவாக பிட்ச் ஆகி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு பந்தை ரிலீஸ் செய்வது, அந்தப் பந்து விரைந்து ஆடுகளத்தில் பிட்ச்சாகக் காரணமாகிறது என்கிறார்கள் வல்லுநர்கள் "பும்ராவால், 1000 ஆர்பிஎம் சுழற்சி வேகம் மற்றும் மிகவும் நிலையான சீம் பொசிஷனுடன் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். இது கிரிக்கெட் பந்திற்கு கிட்டத்தட்ட 0.1 சுழல் விகிதத்தை அளிக்கிறது. ஐஐடி கான்பூரின் தேசிய காற்று சுரங்கப்பாதை வசதியில் உள்ள சுழலும் கோளத்தில் (Rotating sphere at the National Wind Tunnel Facility) செய்யப்பட்ட சோதனைகள், இந்த சுழல் விகிதம் பந்தில் தலைகீழ் மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பும்ராவின் அதீத வேகத்தில் நகரும் ஒரு கிரிக்கெட் பந்தில், கீழ்நோக்கிச் செல்லும் விசை செயல்படும்போது, பந்து கூர்மையாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளைக் கணிப்பதில் சிரமப்படுகிறார்கள்" என்று சஞ்சய் மிட்டல் எழுதியிருந்தார். சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு (கவண் போல் என்று ஃபிளெமிங் குறிப்பிட்டது) பந்தை ரிலீஸ் செய்வதுதான் அவரது பந்துகளில் பின்னோக்கிய சுழற்சியை அதிகப்படுத்துகிறது. இது வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பின்னோக்கிய சுழற்சியையும் அதிகப்படுத்துகிறது. அதனால், பந்து விரைவாக பிட்ச் ஆகிறது. ஆக, பும்ராவின் உடல் கவண் போல் செயல்படுவது, வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பந்தை வேகமாக கீழே இறக்கி அவரது பந்துவீச்சை மேலும் தனித்துவமாக்குகிறது. பட மூலாதாரம்,Getty Images குறையும் இடைவெளி, குறையும் நேரம் பும்ராவின் இந்த பௌலிங் ஆக்ஷன் இன்னொரு விதத்திலும் பேட்டர்களுக்கு சவாலாக விளங்குகிறது. பெரும்பாலான பௌலர்கள் பந்தை விடுவிக்கும்போது அவர்கள் கை பௌலிங் கிரீஸுக்கு நேர் கோட்டிலோ அல்லது சற்று முன்னரோ இருக்கும். ஆனால், பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம், அவரது பந்துவீச்சு கையான வலதுகை வெகுதூரம் முன்தள்ளி இருக்கிறது. மிகையாக நீட்டப்பட்ட பும்ராவின் கை (hyperextended arm) காரணமாக, அவர் பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளி பந்தை விடுவிக்கிறார். இதனால் பந்துக்கும் பேட்டருக்குமான இடைவெளி குறைவதோடு, பேட்டர் எதிர்பார்ப்பதை விட பந்து சீக்கிரமே வந்துவிடுகிறது. அதனால், அவர்கள் அதற்கு வினையாற்றுவதற்கான நேரம் குறைகிறது. அதனால் அவர் வீசும் வேகத்தை விட அதிக வேகத்தில் பந்துவீசுவதாக பேட்டர்கள் உணர்கிறார்கள். இதுபற்றிய ஆர்தர்டன் மற்றும் மார்க் வுட் இடையிலான உரையாடலில், ஒரு தருணத்தில் வுட்டை விட 47 செ.மீ முன்தள்ளி பந்தை பும்ரா ரிலீஸ் செய்ததாகக் குறிப்பிட்டார் ஆர்தர்டன். "அந்தப் பந்து நான் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு 47 நொடிகள் முன்பாகவே என்னை தாக்கும்" என்று நகைச்சுவையாகப் பதிவு செய்திருந்தார் வுட். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளியே பந்தை ரிலீஸ் செய்கிறார் ஜஸ்ப்ரித் பும்ரா எந்த பேட்டரும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கிரீஸிலிருந்து ரிலீஸ் ஆகும் பந்துக்கே ஆடிப்பழகியிருப்பார்கள். வெகு சில வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சற்று முன்னர் வருவார்கள். பும்ராவை எதிர்கொள்ளும்போது அவர்கள் முற்றிலும் பழக்கப்படாத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களால் வேறொரு வேகத்தில் பந்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பல தனித்துவங்கள் நிறைந்ததால் தான் பும்ராவின் பந்துவீச்சைக் கணிப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது. இதுபற்றிப் பேசிய நாசர் ஹுசைன், "பும்ராவுடைய ரன் அப், அவருடைய ஆக்ஷன், மிகையாக நீண்டிருக்கும் கைகள், பந்தை வீசும்போது அவர் இருக்கும் நிலை... இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் பேட்டர்கள் குழப்பம் அடைவார்கள். அதனால் பும்ராவைப் பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ஆடுவதுதான் பாதுகாப்பானது" என்றும் அறிவுரை வழங்குகிறார். இந்த தனித்துவங்கள் போக இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோயர் பால்கள் என பல வேரியேஷன்களை வைத்திருக்கும் பும்ரா, அதைத் துல்லியமாகவும் செயல்படுத்துகிறார். 'இந்த பௌலிங் ஆக்ஷன் எப்படி வந்தது என்றே தெரியவில்லை' இன்று பெரிய அளவு பேசப்படும் இந்த வித்தியாசமான பௌலிங் ஆக்ஷன் தனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் பும்ரா. இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடனான ஒரு உரையாடலில் இதுபற்றிப் பேசியிருந்த அவர், "எனக்கு இந்த பௌலிங் ஆக்ஷன் எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பயிற்சியாளர்கள் என்று யாரும் இல்லை. அதனால் அப்போது நான் யாரையெல்லாம் பார்க்கிறேனோ, அவர்களைப் போல பந்துவீசிப் பார்ப்பேன். அவை அனைத்தும் சேர்ந்து இப்படியொரு ஆக்ஷன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார். இந்த முறையால் தன் உடல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் அதைத் தொடர்ந்ததாகவும் பும்ரா கூறினார். "அப்போது(சிறு வயதில்) பவுண்டரி எல்லைகள் சிறிதாக இருக்கும். அதனால் என்னால் அதிகம் ஓடமுடியாது. அப்போதெல்லாம் நான் இன்றுபோல் நடக்கவில்லை. ஓடிக்கொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான் ஆற்றலை சேமிக்கலாமே என்று கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டம் என்று மாற்றிக்கொண்டேன். அதனால் வேகம் குறையவில்லை எனும்போது அதையே பின்பற்றத் தொடங்கினேன்" என்றார் பும்ரா. அப்படி ஆற்றலை சேமித்ததன் மூலம் பெரிய ஸ்பெல்கள் வீசும் ரஞ்சி போன்ற போட்டிகளில் மற்ற பௌலர்களை விட தான் சற்று புத்துணர்வாக இருந்ததாகவும் கூறினார். இந்த முறை அங்கு நன்றாகத் தனக்கு உதவியதால், அதையே சர்வதேச அரங்குக்கும் எடுத்துவர முடிவு செய்ததாகவும் கூறினார் பும்ரா. அவர் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த பந்துவீச்சு முறையை எந்த பயிற்சியாளரும் பெருமளவு மாற்றவில்லை என்பது. இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் உடன் கடந்த ஆண்டு நான் கொண்டிருந்த உரையாடலில், அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார். "எந்தவொரு வீரரின் இயற்கையான இயல்பையும் நாம் விருப்பத்துக்கு மாற்றிவிடக்கூடாது. பயிற்சி கொடுப்பதன் முக்கிய சாராம்சம், அவர்களை மேம்படுத்துவதுதான். நாங்கள் பும்ராவிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை உணர்ந்தோம். அதை எப்படி சரியாகக் கையாள்வது, எப்படி காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வது, அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். பும்ராவின் பௌலிங் ஆக்ஷனை மாற்ற நினைத்ததே இல்லை" என்று பரத் அருண் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c075dy3grxyo
2 months 4 weeks ago
ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு : மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு 06 Dec, 2025 | 03:34 PM வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சனிக்கிழமை (06) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் அச்சமயம் இருந்த தாய், தந்தை, மகள் ஆகியோர் இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களாவர். வழமை போன்று தனது பெற்றோர்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை (05) காலை எழும்பவில்லை என சந்தேகமடைந்த மகள் உடனடியாக தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். இதன் போது குறித்த வீட்டில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து கசிந்த வாயுவினால் ஏதோ இடம்பெற்றுள்ளதை உணர்ந்த நிலையில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232608
2 months 4 weeks ago
Published By: Digital Desk 1 06 Dec, 2025 | 12:25 PM நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது. பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர். அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/232599
2 months 4 weeks ago
Published By: Digital Desk 1
06 Dec, 2025 | 12:25 PM

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலையடுத்தான பேரிடரில் இதுவரையான காலப்பகுதியில் 586,464 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 2,082,195ஆக பதிவாகியுள்ளது.
பேரிடரில் சிக்கி இதுவரை 607 பேர் உயிரிழந்துள்ளதுடன், 214 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதேநேரம், 4,164 வீடுகள் முழுமையாகவும் 67, 505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் 1,211 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
43,715 குடும்பங்களை சேர்ந்த 152,537 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
https://www.virakesari.lk/article/232599
2 months 4 weeks ago
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் ; ஜனாதிபதி 06 Dec, 2025 | 05:26 PM அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார். மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார். மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார். கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும். அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232623
2 months 4 weeks ago
இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் ; ஜனாதிபதி
06 Dec, 2025 | 05:26 PM

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.
மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார்.
கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும்.
அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






https://www.virakesari.lk/article/232623
2 months 4 weeks ago
இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி, ருத்துராஜ் சதங்கள் Published By: Vishnu 03 Dec, 2025 | 07:11 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்றுவரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது. ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தியுள்ளார். ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார். கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதெச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும். ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இந்தியா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப் பெற்றார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த முதலாவது சதம் இதுவாகும். வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.) இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர். கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது. https://www.virakesari.lk/article/232366 RESULT 2nd ODI (D/N), Raipur, December 03, 2025, South Africa tour of India India 358/5 South Africa (49.2/50 ov, T:359) 362/6 South Africa won by 4 wickets (with 4 balls remaining) Player Of The Match Aiden Markram, SA 110 (98)
2 months 4 weeks ago
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் written by admin December 6, 2025 “வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு! சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்: வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பேரிடர்களுக்கு மூல காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன? யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்: நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும். உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது. வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும். 🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்: உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் இதில் தூர்வாரப்படும். 🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்: “யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.” யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்! https://globaltamilnews.net/2025/223694/
2 months 4 weeks ago
நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்
written by admin December 6, 2025

“வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன்.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார்.
‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு!
சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்:
“அண்மைக் கால அனர்த்தங்களை ‘இயற்கையின் கோபம்’ என்று கடந்து செல்வதை விட, ‘இயற்கையை நாம் கையாளத் தவறியதன் விளைவு’ என்று புரிந்து கொள்வதே சிறந்தது. மழைநீர் வழிந்தோட வேண்டிய பாதைகளை அடைத்துவிட்டு, வெள்ளம் வருகிறது என்று கவலைப்படுவது அர்த்தமற்றது.”
🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன?
யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்:
நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும்.
உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது.
வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும்.
🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்:
🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்:
“யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.”
“பொறியியலாளர்கள் திட்டங்களை வரைவார்கள், ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள்தான். வழுக்கையாற்றின் முக்கியத்துவத்தை உங்கள் பகுதி மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்,” என ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்!


https://globaltamilnews.net/2025/223694/
2 months 4 weeks ago
உலகம் முழுவதும் பிரித்தானியா அடாத்தாக அந்த மக்களைக் கொலை செய்து கொள்ளையடித்து இன்னமும் பல நாடுகளிடம் கப்பம் வாங்கிக் கொண்டிருக்கும் நாட்டிலிருந்து அந்தந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.
2 months 4 weeks ago
இவர் தானோ தையிட்டி விகாரையைப் பார்த்துவிட்டு வந்து அங்கே சகல கட்டடங்களும் சரியாகவே கட்டப்பட்டுள்ளன என்றார். அடுத்த ஒரு மாதத்தில் பதவி உயர்வு வந்ததாக சொன்னார்கள். இவர் தான் அவரோ தெரியவில்லை.
2 months 4 weeks ago
அடுத்த தேர்தலை மலையத்தில் நின்று வெல்லப் போகிறேன். இப்படிக்கு அர்ச்சுனா.
2 months 4 weeks ago
கால தாமதம் காரிய நஸ்டம்.
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 : மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் அ. குமரேசன் ஒரு இலக்கியப் புனைவின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அது முன்வைக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க மனமில்லாமல் அதைத் தாக்குவது ஒரு சமூக மூர்க்கம்தான், அதைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் வன்முறைதான். ஆனால், ஒரு புத்தகம் மனிதர்களின் இயற்கையான குணமே மூர்க்கம்தான் என்று கூறுகிறது; ஒழுங்குபடுத்தும் அரசியல் விதிகளையும் மத நெறிகளையும் கொச்சைப்படுத்துகிறது; வன்முறைகளை நியாயப்படுத்துகிறது; நம்பிக்கையின்மையைப் போதிக்கிறது என்றெல்லாம் கூறி அதற்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் அதைப் படிக்கக்கூடாது என்று அவர்களின் கைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டில் வெளியோன ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (ஈக்களின் எசமான் – Lord of the Flies) நாவல் இந்த மூர்க்கத் தடைகளை மீறி வாசகர்களின் கைகளுக்குச் சென்றது. அதை எழுதியவர் வில்லியம் கோல்டிங் (1911–1993). அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1983ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியதில் இந்த நாவலுக்கும் சிறப்பான பங்கிருந்தது. அதற்கு முன் ‘ரைட்ஸ் ஆஃப் பாஸேஜ்’ (பயணவழிச் சடங்குகள்) என்ற நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்தது. இவற்றுடன் ‘தி இன்ஹெரிட்டர்ஸ்’ (வாரிசுகள்), ‘பின்ச்செர் மார்ட்டின்’ (இது இந்த நாவலில் மையக் கதாபாத்திரத்தின் பெயர்) உள்ளிட்ட படைப்புகளும் சேர்ந்தே நோபல் விருதுக்குரிய இடத்தை நிறுவின. படைப்பாளிக்கொரு பின்னணி வில்லியம் கோல்டிங் (William Golding) இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் பிறந்தவரான வில்லியம் கோல்டிங் (William Golding) ஒரு நாவல் புனைவாளர், கவிஞர், நாடகாசிரியர். அவரது தந்தை ஒரு பகுத்தறிவாளர், அறிவியலாளர், அரசியல் இயக்க ஈடுபாட்டாளர். தாய் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமைக்காகப் போராடிய களச் செயல்பாட்டாளர். கோல்டிங் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின்படி கடற்படையில் சேர்க்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார். வளர்ந்த குடும்பச் சூழலிருந்து மாற்றுச் சிந்தனைகளையும், கட்டாயக் கடற்படைப் பணியிலிருந்து போரின் மோசமான விளைவுகளையும், பள்ளி ஆசிரியர் அனுபவத்திலிருந்து இளையோரின் குண இயல்புகளையும் கூர்மையாக உள்வாங்கினார். மனித வாழ்க்கையும், தத்துவக் கண்ணோட்டமும் சார்ந்த படைப்புகளை உருவாக்கியதில் இந்தப் பின்னணிகளுக்கும் அனுபவங்களுக்கும் அடிப்படையான பங்கிருந்தது என்று இலக்கிய உலகினர் குறிப்பிடுகின்றனர். தடைகளையும் கெடுபிடிகளையும் வென்ற அந்த நாவல் இன்று சிறந்ததொரு குறியீட்டுச் சித்தரிப்பாக, தத்துவப் படைப்பாக, அரசியல் புனைவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்களின் எசமான் எந்தப் ஈக்களைப் பறக்க விடுகிறது? எந்த எசமானை நடமாடவிடுகிறது? தீவில் சிக்கிய சின்னப் பையன்கள் இரண்டாம் உலகப் போர் பின்னணியில், அணுகுண்டுத் தாக்குதல்கள் வெடிக்கும் அபாயத்தில், பிரிட்டிஷ் அரசு பள்ளிச் சிறுவர்களை ஒரு விமானத்தில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுகிறது. ஒரு பள்ளியின் மாணவர்கள் செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி ஆளரவமற்ற, அழகானதொரு தீவில் விழுகிறது. உடன் பயணித்த ஆசிரியர்கள், விமானப் பணியாளர்கள் உள்பட பெரியவர்கள் அனைவரும் உயிரிழக்க, தப்பிப் பிழைக்கிறவர்கள் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே. என்ன செய்வது என்று கலங்கும் சிறுவர்களுக்கு, ஓரளவு முதிர்ச்சியுள்ளவனான ராஃப் தலைமைப் பொறுப்பேற்கிறான். முதலில் அனைவருக்குமிடையே ஒரு நாகரிகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முயலும் ராஃப், ஒரு சங்கை எடுத்து ஊதி, சிறுவர்களைக் கூட்டி கூட்டம் நடத்துகிறான். அப்போது பகுத்தறிவு கொண்ட, ஆனால் உடல் சார்ந்த இயலாமை உள்ளவனான பிக்கி, ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவருக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான். இருவரும் இணைந்து தீவில் ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றனர். தீவிலிருந்து தப்பிப்பதற்காக, கடலில் செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சமிக்கை நெருப்பைத் தொடர்ச்சியாக எரிய வைக்க முடிவு செய்கிறார்கள். பிக்கி அணிந்துள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டுகிறார்கள். பள்ளியில் பாடகர் குழு தலைவனாக இருந்தவனான ஜாக் மெரிடியூ அடங்காத அதிகாரப் பசி கொண்டவன். விலங்குகளிளை வேட்டையாடிக் கொல்வதில் ஆர்வமுள்ள அவனால் ‘ராஃப் தலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. சமிக்கை நெருப்பை எரிய வைப்பதை விட, காட்டுப் பன்றிகளை வேட்டையாடி உணவாகச் சுடுவதே முக்கியம் என அவன் வாதிடுகிறான். சிறுவர்களில் அதிகமானோர் அவனுடைய குழுவில் சேர்கின்றனர். பன்றிகளை வேட்டையாடுவதில் அவர்கள் மனிதத் தன்மையற்ற வன்மமும் மூர்க்கமும் மிக்க ரசனையை வளர்த்துக் கொள்கின்றனர். கொடூர விலங்கு பயம் தீவில் ஒரு கொடூரமான மிருகம் இருக்கிறது என்ற அச்சம் சிறுவர்களுக்கிடையே பரவுகிறது. முதலில் அது ஒரு கற்பனையாகத்தான் இருந்தது என்றாலும் படிப்படியாக அந்த அச்சம் உண்மையானது என்ற கவலை தொற்றுகிறது. ஜாக் அவர்களின் பீதியை சாதகமாக்கிக்கொண்டு, தன்னால்தான் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லி, ராஃபிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறான். ஒரு வேட்டைக்காரன் போலத் தனது முகத்தில் வண்ணக் கோடுகள் வரைந்து மிரளவைக்கும் சடங்குகளை நடத்துகிறான். சமிக்கை நெருப்புப் பராமரிப்பை விட்டுவிட்டு, ஜாக் குழுவினர் வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தீவுக்கு அருகாமையில் வரும் ஒரு கப்பல், அந்த நெருப்பு அணைந்துவிட்டதால், மக்கள் இருப்பதற்கான சமிக்கை கிடைக்காத நிலையில் திரும்பிவிடுகிறது. இது நாகரிகத்தோடு அணுகும் ராஃப், வன்மம் நிறைந்த ஜாக் இருவருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்துகிறது. பகுத்தறிவுள்ள பிக்கி, ஆன்மீகச் சிந்தனை கொண்ட சைமன் என சிலர் மட்டுமே இப்போது ராஃப் குழுவில் நிற்கின்றனர். “கொடூர விலங்கு என்பது வெளியே இல்லை, நம் மனதில்தான் இருக்கிறது,” என உணரும் சைமன் அதைப் பிற சிறுவர்களிடம் சொல்கிறான். “எனக்குள்ளேயும் அந்தக் கொடிய விலங்கு இருக்கிறது,” என்ற பொருளில் பேசுகிறான்.. ஆனால் அவன்தான் அந்தக் கொடூர விலங்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளும் ஜாக் குழுவினர் அவனை ஈவிரக்கமின்றித் தாக்கிக் கொல்கின்றனர். இப்படியாகப் போகும் கதையில், சிலர் மட்டுமே எஞ்சியிருக்க, பிக்கி சங்கை ஊதி மீண்டும் சிறுவர்களை ஒன்றுகூட்டிப் பகுத்தறிவுடன் பேச முயல்கிறான். அதை ஏற்க முடியாத ஜாக் குழுவினர் ஒரு பாறையை உருட்டி அவனையும் கொல்கின்றனர். நாகரிகத்தின் முழு அழிவையும், அநாகரிக வன்மத்தின் வெற்றியையும் குறிப்பது போல, அந்த ஒற்றுமைச் சங்கு உடைந்து நொறுங்குகிறது. இப்போது தனியாக விடப்படுகிறான் ராஃப். அவனை வேட்டையாட முயல்கிறது கும்பல். அவனைச் சுற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறது. உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறான். குழுவினர் துரத்துகின்றனர். இறுதியாகக் கடற்கரையை வந்தடைகிறவனை அங்கே முகாமிட்டிருக்கும் கடற்படைத் தலைவர் மீட்கிறார். சிறுவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர், தீவில் நடந்த அட்டூழியங்களைக் கேட்டு உறைந்து போகிறார். அவரைக் கண்டதும் ராஃப், ஜாக் உள்பட எல்லோரும் மறுபடி சிறுவர்களாக மாறி அழத் தொடங்குகிறார்கள். எசமான் யாரெனில்… எஞ்சிய சிறுவர்கள் மீட்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அவர்களை மீட்பவரே ஒரு போர்க் கப்பலின் தலைவர்தான். பெரியவர்களின் உலகம் ஏற்கெனவே வேறு வகையான வன்முறை அரசியலால் கட்டப்பட்டிருப்பதைக் கதை உணர்த்துகிறது என்று திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆயுதமோகிகள் மானுட மாண்புகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றவாளிகளே என்று சாடுகிறது. போர் வேண்டாம் எனும் இலக்கியக் குரலாக ஒலிக்கிறது. ஆதியில் மனிதர்கள் மூர்க்கத்தனமாக இருந்தார்கள் (இன்றும் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்!), படிப்படியாக மாறினார்கள் என்பது உண்மை. அந்த மாற்றத்தைத்தான் நாகரிகம் என்று கூறுகிறோம் என்பதும் உண்மை. அந்த நாகரிகத்தின் காவல் இல்லாமல் போகுமானால், மனிதப் பரிணாமத்தின் மாண்புகள் மறையும், புதைந்து போன தீமைகள் மேலெழும் என்ற எச்சரிக்கைச் சங்கையும் இந்த நாவல் ஊதுகிறது என இணையவழித் திறனாய்வுகள் மூலம் அறிய முடிகிறது. அழுகிப்போன பொருள்களின் மீது ஈக்கள் மொய்க்கும். நாவலில், தரையில் ஊன்றப்பட்ட ஒரு குச்சியில் செருகப்பட்டிருக்கும் ஒரு பன்றித் தலையை ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்களைப் போல தீமைகள் எங்கும் பரவியிருப்பதைச் சொல்ல முயல்கிறது நாவல். சுயநலமும் வன்மமும் குடியேறிய மனம்தான் அந்த ஈக்களின் எசமான். ஏன் சிறுவர்கள்? ஏன் ஆண்கள்? தீவுக் காட்டுக்குள் சில வழிபாட்டு முறைகளைத் தொடங்குவதாகச் சித்தரித்திருப்பதும், சைமனின் கருத்து ஏற்கப்படாததும் மதத்தின் தோல்வியைக் குறிக்கின்றன, ஆகவேதான், போர் மோக அரசியல் சிந்தனையாளர்களோடு, மதவாதிகளும் இந்த நாவலை எதிர்த்தார்கள் போல! வாழ்க்கை அனுபவத்தின் பிரதிநிதிகளான பெரியவர்களின் வழிகாட்டலும், பாலினத் துணைகளான பெண்களும் இல்லாதபோது மூர்க்கத்தின் இருண்மையில் மூழ்க நேரிடும் எனக் காட்டுவதே ஆண்கள் மட்டுமே உள்ள அந்தக் கூட்டம். அதே போல், இத்தனை தலைமுறைகள் கடந்தும் மனிதர்கள் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் காட்டாட்சி செய்வோர் சிறுவர்கள் என்ற சித்தரிப்பு. இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1963இல் பிரிட்டன் தயாரிப்பபாகக் கறுப்பு வெள்ளையில் வந்த முதல் படம் நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற வரவேற்பைப் பெற்றது. 1990இல் ஹாலிவுட் தயாரிப்பாக, இங்கிலாந்துச் சிறுவர்களை அமெரிக்கர்களாக மாற்றிச் சித்தரித்த பல வண்ணப் படம், நாவலின் ஆழத்தைத் தொடத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே நாவல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. படக்கதைப் புத்தகம், கார்ட்டூன் படம் என்ற வடிவங்களையும் இந்த நாவல் எடுத்திருக்கிறது. ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற நாவல், தீங்குகளுக்குத் தீர்வு காணப் போராடுகிற சக்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கருத்தும் பகிரப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தில் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு கருத்துகளின் “போர்” நிற்காமல் தொடரும்தான் இல்லையா! https://bookday.in/books-beyond-obstacles-20-about-william-goldings-lord-of-the-flies-written-by-a-kumaresan/
2 months 4 weeks ago
சொக்கப் பனையாகத்தான் இருக்க வேண்டும். ஆண்பனையின் பூவை எரித்து கரியாக்கி செய்வார்கள்.
2 months 4 weeks ago
எல்லோருக்கும் நன்றிகள்! இது 144 பகுதிகள் . இன்னும் தொடரும். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள் !
2 months 4 weeks ago
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02 அத்தியாயம் 2 - நகுலேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரத்தில் உள்ள பண்டைய தொடர்புகள் மறுநாள் காலை, சூரியன், அனலியின் வீட்டிற்கு அருகில் இருந்த யாழ்ப்பாணக் குளத்தின் மீது உதயமாகி, வானத்தை காவி மற்றும் ரோஜா நிறங்களில் குளிப்பாட்டியது. ஆரனும் அனலியும் கீரிமலையை நோக்கி ஒன்றாகப் பயணித்தனர். அங்கு, காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, தீர்த்தத் திருத்தலமான நகுலேஸ்வரம் கோயில் பெருமையுடன் நின்றது. இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும் [பல ஆலமரங்களைப் போல அல்லாமல், கல்லால மரத்திற்கு விழுதுகள் இல்லை. இது ஒரு அரிய வகை மரமாகும்], தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் [இந்துக் கோவில்களில் கருவறை அல்லது மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை அல்லது மதில் பகுதி] ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர் என்பது வரலாறாகும். மல்லிகை மற்றும் கடல் உப்பு கலந்த நறுமணத்தால் காற்று நிரம்பியிருந்தது. அங்கே யாத்ரீகர்கள் [பயணிகள்] வெறுங்காலுடன் நடந்து, சிவனிடம் பிரார்த்தனை செய்தனர். புனித கீரிமலை தீர்த்தக் கேணி அருகே ஆரன் குளிர்ந்த நீரைத் தொடக் குனிந்து, “இந்த நீரூற்று கூட நினைவாற்றலைக் கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள், இல்லையா?” என்றான். அனலி (சிரித்துக்கொண்டே): “ஆம். புராணக்கதைகள் முனிவர்களும் மன்னர்களும் இங்கு நீராடியதாகக் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, தட்சிண கைலாச புராணம் யாழ்ப்பாணத் திருநாகுலேஸ்வரத்தைக் குறித்து, “வடகைலாசத்தில் சிவன் எவ்வாறு நிலைபெற்றானோ, அதுபோல் தென்கடலோரத் தலங்களில் நாகுலேஸ்வரத்தில் அவன் அருளுருவாகத் திகழ்கிறான்.” என்று சொல்வதுடன், அந்த புராணத்தின் படி, நாககுலர் வழிபட்ட சிவலிங்கம் தான் இன்றைய திருநாகுலேஸ்வரம் ஆகும். இதனால் தான், இத்தலம் தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று போற்றப்படுவதுடன், அத்தகைய புராணக் குறிப்பினால், யாழ்ப்பாணம் மட்டும் ஒரு நகரமல்ல, பண்டைய சைவ மரபின் உயிரோடு வாழும் சாட்சியம் என உணரலாம் என்று ஒரு விரிவுரையை ஆரனுக்கு நடத்தினாள். ஆரன் தண்ணீரைப் பார்த்தான். ஒரு கணம், அவன் தனது பிரதிபலிப்பை மட்டுமல்ல, தனக்கு முன் இருந்த எண்ணற்ற தலைமுறையினரையும் - போர்வீரர்கள், கவிஞர்கள், துறவிகள் - ஒரு காலத்தில் அவன் நின்ற இடத்தில் நின்றதையும் காண்பதாக உணர்ந்தான். பின்னர், அவர்கள் திருகோணமலைக்கு நீண்ட பயணம் சென்றனர், அங்கு கடல் முடிவில்லாமல் நீண்டு, கருப்பு பாறைகளில் மோதியது. கோணேஸ்வரம் கோயில் சுவாமி பாறையில் [Swami Rock / Kōṇāmalai] ஒரு ரத்தினம் போல உயர்ந்து, அதன் கோபுரம் வானத்தை முத்தமிட்டது. அனலி, மென்மையான தொனியில், “இந்தக் கோயிலும் ஒரு காலத்தில் தட்சிண கைலாசம் [Dakshina Kailasam], அதாவது தெற்கு கைலாசம் என்று அழைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இதை அழிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது இருந்தது என்பது வரலாறு. 7 ஆம் நூற்றாண்டில், இந்த ஆலயத்தைப் புகழ்ந்து, பெருமையை பறைசாற்றி, திருஞானசம்பந்தர் ஒரு நீண்ட தேவாரம் பாடினார் எனறால், அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது இருந்தது தெரியவருகிறது. ஆனால் இடிக்கப்பட்ட பிறகும், அதன் ஆன்மாவை அடக்கம் செய்ய அவர்களால் முடியவில்லை.” என்றாள். அதன் பின், அனலி அதில் ஒரு தேவாரத்தை ஆரனுக்கு படித்துக் காட்டினாள். நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. "தட்சிண கைலாசம்" என்பது பல கோயில்களைக் குறிக்கும் ஒரு பெயர், இது "தென் கைலாசம்" என்று பொருள்படும். கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், ஆந்திர நாட்டில் உள்ள திருக்காளஹஸ்தி மற்றும் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, இலங்கையில் உள்ள திருகோணமலை போன்ற பல்வேறு இடங்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரன்: “அப்படியானால் கற்களை உடைத்து கடலுக்குள் விழுத்தினாலும், அந்த இடத்தின் ஆன்மா இன்னும் அங்கு உயிர்வாழ்கிறது?” ஆச்சரியமாகக் கேட்டான் அனலி (அவனது கண்களைப் பார்த்து): “நம்மைப் போலவே. நம் மக்கள் நிலங்கள், வீடுகள், உயிர்களை இழந்துள்ளனர். ஆனால் தமிழ் ஈழத்தின் ஆன்மா இன்னும் சுவாசிக்கிறது. அதனால்த்தான் புலம்பெயர்ந்தோர், குறைந்தது விடுமுறையிலாவது, திரும்பி வர வேண்டும். உலகிற்கு நாம் அழிக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதற்காக.” என்றாள். "ஆரன், இது உடைக்கப்பட்டது முதல் தடவை அல்ல, முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் (பொ.பி. 277 - 304) என்ற மகாவம்சத்தின் பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாகவே இருக்கலாம். அதாவது கி பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டிலும் இது இருந்துள்ளது மட்டும் அல்ல , அது அழிக்கப்பட்டதும் தெரிய வருகிறது" என்று மேலதிக விளக்கத்தை அனலி கூறினாள். ஆரன், அவளின் அந்த வார்த்தைகள் தனக்குள் ஆழமாக ஏதோ ஒன்றைத் தூண்டுவதை உணர்ந்தான். 1983 இல் ஏற்பட்ட கொழும்பு இனக்கலவரத்தால், அந்தக் கொடுமையை நேராக பார்த்து, அதில் இருந்து ஒருவாறு தப்பி, சரக்கு கப்பலில், தம் தம் பெற்றோருடன் யாழ் போனபின், இலங்கையை விட்டு நிரந்தரமாக கனடா போய், அதன்பின் இன்றும் விடுதலையிலாவது திரும்பி வரத் துணியாத தனது பெற்றோரையும், பாட்டி, பாட்டாக்களையும் அவன் நினைத்தான். இப்போது அவன் புரிந்துகொண்டான் - வெளிநாட்டில் வாழ்ந்து துக்கப்படுவது போதாது. உண்மையான நினைவுச் செயல் - திரும்பி திரும்பி வருவது, இங்கே நின்று நிலத்திற்கு மீண்டும் உயிர் ஊதுவது. சுவாமி பாறையின் விளிம்பில் அவர்கள் ஒன்றாக நின்றபோது, கீழே உள்ள கடல் ஒரு நித்திய சாட்சியைப் போல கர்ஜித்தது. ஆரன்: “அனலி, இந்தக் கடல் பேசுவதை நீ எப்போதாவது உணர்ந்தாயா?” அனலி (லேசாகச் சிரித்தபடி): "இந்தக் கடல் வெறும் நீல நிறம் மட்டுமல்ல .... அது நினைவுகளால் நிரம்பியுள்ளது ... ஒவ்வொரு அலையும் ஒரு காலத்தில் இழந்த ஒன்றைத் திருப்பித் தருகிறது — ஒரு பண்டைய வரலாறு - நமது முன்னோர்களின் குரல்கள் - நம் இதயங்களுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் காதல் .... ஆமாம், அவை கரையில் நின்று ஒரு நொடிக்கேனும் எங்களைத் தழுவும். மீண்டும் அலை பின்வாங்கினாலும், அந்த நொடியின் அர்த்தம் நித்தியமாகவே நம்முள் வாழ்கிறது.” அவள் அவன் முகத்தை நெருக்கமாக பார்த்துக்கொண்டு, தன் இரு கைகளையும் நீட்டினாள். அவன், அவள் கையைத் தொட்டபோது, அவனுக்கு மண்ணின் நெருப்பைத் தொட்டது போல் இருந்தது. அது வெப்பமாகவும் அதேநேரம் நிதானமாகவும், ஆழ்வேர்கள் போல இந்தத் தீவின் உள்ளத்தோடு இணைந்திருந்தது. அந்தத் தொடுதலின் நொடியில், அவன் இனி அந்நியன் அல்ல, பாரம்பரியத்தின் சிதைந்த துணுக்குகளைத் தேடும் அலைந்து திரியும் அகதி மகனும் அல்ல. ‘இது என் நிலம், இது என் மூச்சு, இது என் வீடு என முதல் முதல் உணர்ந்தான். என்றாலும் அவன் அனலியின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. கரையை தொட்ட அலைகள், அடுத்தகணம் திரும்பிப் போவதுபோல, மெதுவாக கொஞ்சம் விலகி நின்றான். அங்கே ராவணனின் சிலை, சுவாமி பாறையின் விளிம்பில், அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றது. ஆரனுக்கும் அனலிக்கும் - அந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் - இடையிலான தொடர்பு, சிதறடிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பண்டைய தாயகத்திற்கும் இடையிலான தொடர்புக்கும் மேலாக பின்னிப் பிணைந்திருப்பதாக இருவரும் உணர்ந்தாலும், எனோ, வெளிப்படையாக, குறிப்பாக ஆரன் காட்டிக் கொள்ளவில்லை. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலில், காடுகள், மலைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள கிராமங்களுக்குப் பின்னால், மாலை சூரியன் மறைந்தது. அப்பொழுது அலைகள் மீது தங்க ஒளி விழுந்து, உருகிய செம்பு போல அவற்றை வரைந்தது. ஆரன், அனலியின் அருகில் குன்றின் மீது நின்று, முடிவில்லா கடலைப் பார்த்தான். "உனக்குத் தெரியுமா ஆரன்," என்று அவள் மெதுவாகச் சொன்னாள், "இங்கிருந்து, கப்பல்கள் ஒரு காலத்தில் தமிழகம், கம்போடியா, சீனாவுக்குக் கூடப் பயணித்தன. இந்தக் கடல் வர்த்தகத்தை மட்டுமல்ல, நாகரிகங்களுக்கிடையில் காதல் கடிதங்களையும் கொண்டு சென்றது." என்று அனலி, தனது சக்கர தோடு கழுத்தைத் தொட, சடை பின்னல் அவிழ்ந்து விழ, சலங்கைக் கால் இசை எழுப்ப, மென்மையான புன்னகையுடன் கூறினாள். அவன் அவளை, அவள் தலை முதல் கால் வரை ஏறிட்டுப் பார்த்தான். முதல் முறையாக, அனலி அவன் கண்களில் ஒரு பிரகாசத்தைக் பார்த்தாள். அவள் இதயம் மகிழ்ச்சியில் நடுங்கியது. என்றாலும், வெளியே எந்த உணர்வையும் காட்டாமல், வெறும் ஒரு வழிகாட்டிபோல, “ஆரன் ... என் அப்பா உனக்கு வரலாறு கற்பிக்க என்னை அனுப்பினார். ஆனால் அதற்கு பதிலாக ... நான் உன்னுடன் ஒரு புதிய கதையை எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று எதோ ஒன்றைச் சொல்லாமல் சொன்னாள். ஆரனின் குரல் கிட்டத்தட்ட உடைந்தது. “அனலி, நான் என் வேர்களைத் தேடித்தான் இங்கு வந்தேன். ஆனால் அது இப்ப நீயும் தான் அதில் ஒன்று என்ற உணர்வு அரும்புகிறது. என்னால் அதை இனியும் மறைக்க முடியவில்லை" என்று அவளைத் தன் மார்பில் அணைத்தான். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது சோகம் அல்ல - ஆழமான, இனிமையான, ஆனால் பயமுறுத்தும் மகிழ்ச்சி ஒன்று. அப்பா என்ன சொல்வாரென்று ! அவள் தனக்குள் கிசுகிசுத்தாள், “இந்தப் பயணத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்று அப்பா என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் - நம் நிலம் உயிருடன் இருக்கிறது, என் இதயமும் கூட ... " ஆரன் மெதுவாக தன் கைகளை எடுத்தான். ஆனால், அவள் விலகவில்லை. தெய்வங்கள் தாங்களாகவே தங்கள் ஆசீர்வாதத்தை வழங்குவது போல், தொலைவில் கோயில் மணிகள் ஒலித்தன. அந்த மணி ஓசையிலும், அனலியின் தந்தையின் வார்த்தைகளும் சேர்ந்து ஒலித்தன. "அனலி, ஆரன் நான் உங்களை நம்புகிறேன், நீங்கள் இருவரும் எங்கள் நிலத்தின் வரலாற்றைக் - கற்றுக்கொடுக்க - கற்றுக்கொள்ள - போகிறீர்கள், அந்த பொறுப்பு இருக்கட்டும்" ஆனால், அவர்கள் ஒன்றாகப் பயணித்தபோது - கோயில்களில் கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, கடற்கரைகளில் நடந்தபோது, இழப்பு, புலம்பெயர்வு, மற்றும் நம்பிக்கை பற்றிப் பேசும்போது - அவர்கள் தங்களுக்குள் ஆழமான இன்னும் ஒன்றையும் கண்டுபிடித்தனர். வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? நம்பிக்கை நட்பாக மாறியது. நட்பு நெருக்கமாக மாறியது. மெதுவாக, அவர்கள் இருவருமே திட்டமிடாமல், காதல் மலர்ந்தது. ஆனால் அதை எல்லை தாண்டாமல், வெளியே காட்டாமல் பார்த்துக்கொண்டனர். நல்ல காலம், அக்காவின் மகள் வந்தது அதற்கு பெரும் உதவியாக, ஒரு காவலாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1929 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02] https://www.facebook.com/groups/978753388866632/posts/32698811869767371/?
2 months 4 weeks ago
நிவாரணத்தில் ஊழலுக்கு இடமில்லை – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் DilukshaDecember 6, 2025 11:54 am 0 வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி, 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிகளில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளர்களுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 25,000 ரூபா பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம். இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். https://oruvan.com/there-is-no-room-for-corruption-in-relief-jaffna-district-government-agent/