Aggregator

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி

3 months ago
நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைக்கான நிதி உதவி நீடிப்பு 13 JUN, 2025 | 08:54 PM (எம்.மனோசித்ரா) நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்கான ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில், இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது. இந்த நீடிப்பானது இரு நாடுகளுக்கும் இடையேயான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு உகந்ததாகவுள்ளது. இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக (மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் ரூபா) வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்வதன் மூலம் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் இந்த பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது. அத்தோட இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பு புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். படகு சேவைக்கான நிதி உதவி தொடர்வதானது, 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும், கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, மேம்பட்ட கடல்சார் இணைப்புக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்ததாகவுள்ளது. இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் மேலதிக வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்வது எதிர்காலத் திட்டங்களில் அடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217363

ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு

3 months ago
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன் 21 முதல் ஆரம்பம் Published By: VISHNU 13 JUN, 2025 | 10:42 PM ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், இலங்கையின் அணைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. https://www.virakesari.lk/article/217409

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இஸ்ரேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா இரான்? இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்ன செய்கிறது? பட மூலாதாரம், JACK GUEZ/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சேதமடைந்த கட்டடம் 56 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் இரானும் பதிலுக்குப் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இரானின் ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானில் விமான நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. என்ன நடக்கிறது? இஸ்ரேல் தாக்குதலும் இரானின் பதிலடியும் இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது. இதில், இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானிய புரட்சிகர காவல் படைத் தலைவரும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேலை ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. பட மூலாதாரம்,REUTERS/RONEN ZVULUN இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். ராமத் கானில் உள்ள ஷெபா மருத்துவமனையில் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கேயும் ஒருவர் கவலைக்கிடமாக இருக்கிறார். பட மூலாதாரம், ANADOLU VIA GETTY IMAGES 100க்கும் குறைவான ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தகவல் இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார். எக்ஸ் தளத்தில் அவர் தனது பதிவில், பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன அல்லது இலக்குகளை அடையத் தவறிவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார். "குறைந்த எண்ணிக்கையிலான கட்டடங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. அவற்றில் சில இரான் ஏவுகணைகளை இடைமறித்த போது வெளிப்பட்ட சிதறல்களால் நேர்ந்தவை," என்று அவர் கூறுகிறார். இரானில் இருந்து மேலும் ஏவுகணைகள் ஏவப்படலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,MAJID SAEEDI/GETTY IMAGES 2 இஸ்ரேலிய போர் விமானங்கள் வீழ்ந்தனவா? இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த கூற்று பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. இரானின் வான் பாதுகாப்பு அமைப்பு இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், இந்த போர் விமானங்களில் ஒன்றின் விமானி பிடிபட்டதாகவும் அவர் பெண் விமானி என்றும் இரானின் தஸ்னிம் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. விமானி பிடிபட்டதாக வெளியான இரானிய ஊடக அறிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இரானிய ஊடகங்களால் பரப்பப்படும் இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES இரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்? இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அங்குள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை அதன் பத்திரிகையாளர்களில் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. விமான நிலையப் பகுதியில் 'வெடிப்பு' ஏற்பட்டதாகக் கூறிய இரானைச் சேர்ந்த மெஹ்ர் செய்தி முகமை, அப்பகுதியில் இருந்து கனத்த புகை எழுவதைக் காட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e6w9n0xwno

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா டெஸ்ட் சாம்பியன் ஆகுமா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் மார்க்ரம் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜூன் 2025, 03:08 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் பவுமா - மார்க்ரம் ஜோடி தங்களின் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஏதேனும் மாயஜாலம் நிகழ்த்துமா அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும். ஸ்டார்க் அரைசதம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் 16, நேதன் லாயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். 3வது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டது. லேயான் 2 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார். ஸ்டார்க், ஹேசல்வுட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முதல் முறை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இருவரும் 18 ஓவர்கள் களத்தில் இருந்தனர். ஸ்டார்க் 2019ல் ஓல்ட் ட்ராபோர்டில் முதல்முறையாக அரைசதம் அடித்தபின் 2வது முறையாக நேற்று அரைசதத்தை 131 பந்துகளில் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். ஹேசல்வுட் 17 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார். ரபாடா 9 விக்கெட் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்த 74 ரன்களையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், யான் சென் 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி 282 ரன்கள் இலக்கை துரத்தி தென் ஆப்ரிக்க அணி நேற்று 3வது நாளில் உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது. மார்க்ரம், ரிக்கெல்டன் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய 2வது ஓவரில் ரிக்கெல்டன் 6 ரன்னில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிஅதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த முல்டர், மார்க்ரமுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். 12வது ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு சற்று நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. ஆனால் 18வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஸ்டார்க் பிரித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் முல்டர் 27 ரன்னில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக பேட் செய்து நங்கூரம் அமைத்தனர். இருவரையும் பிரிக்க கேப்டன் கம்மின்ஸ் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் அளிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், கேப்டன் பவுமா இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ஸ்மித் காயம் பவுமா 2 ரன்னில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பீல்டிங்கில் இருந்தார். பவுமா பேட்டில் இருந்து தெறித்த பந்தை ஸ்மித் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவரின் சுண்டுவிரலில் பட்டு சென்றது. இதில் ஸ்மித்தின் சுண்டுவிரல் எலும்பில் முறிவு ஏற்பட்டு கடும் வலியுடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். மார்க்ரம் - பவுமா வலுவான பார்ட்னர்ஷிப் பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கேப்டன் பவுமாவுக்கு திடீரென தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் ரன்கள் ஓடாமல் விக்கெட்டை நிலைப்படுத்தும் விதத்திலேயே பேட் செய்தார். மார்க்ரம் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபோது மார்க்ரம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். 25 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களை எட்டி வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது. இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடியும்பலன் கிடைக்கவில்லை. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததாலும், பந்து பேட்டை நோக்கி நன்கு வந்ததாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை. இருவரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது. மார்க்ரம், பவுமா இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தியதால், 25வது ஓவரில் 100 ரன்களை எட்டிய தென் ஆப்ரிக்கா, 52வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 200 ரன்களை எட்டியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமா மார்க்ரம் சதம் முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரமின் ஆட்டத்தில் இம்முறை தீர்க்கமான எண்ணம் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் கையாண்டார். பெரிதாக அவசரப்படாமல் லென்த் பந்துகளை லீவ் செய்து மார்க்ரம் ஆடியதால், தவறு செய்யவைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம் இரண்டாவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் சதம் அடித்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டை கழற்றி, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியை மார்க்ரம் வெளிப்படுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் அதிகளவு இருந்ததால், மார்க்ரமின் சதத்தை கரகோஷத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய 3 வேகப்பந்தவீச்சாளர்களும் மார்க்ரத்தை வெளியேற்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பந்துவீசியும் மார்க்ரம் அதை தவிடுபொடியாக்கி களத்தில் நங்கூரம் பாய்ச்சினார். மார்க்ரம் ஆஃப் சைடில் அருமையாக ஆடக்கூடியவர் என்பதால், ஆஃப் சைடில் விலக்கி வீசப்பட்ட பந்துகளை ரன்களாக மாற்ற அவர் தவறவில்லை, அவரின் சதத்தில் 65 ரன்கள் ஆஃப் சைடில் எடுக்கப்பட்டவை. மார்க்ரம் கடைசியாக 16 இன்னிங்ஸ்களுக்கு முன் சதம் அடித்திருந்தார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று தொடங்கும்போது சதம் அடித்திருந்த மார்க்ரம் மீண்டும் முடியும்போது பைனலில் சதம் அடித்துள்ளார். யாருக்கு சாதகம்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் முடியவே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆடுகளம் கடைசி இருநாட்கள் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை. தென் ஆப்ரிக்காவின் வரலாற்று சாதனை படைக்க எய்டன் மார்க்ரமின் அற்புதமான(102) சதம், கேப்டன் டெம்பா பவுவுமாவின்(65) பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக இருக்கும். இருவரும் 38 ஓவர்கள் பேட்டிங் செய்து 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் ஆடி வருகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மார்க்ரம் "சோக்கர்ஸ்" ஆவார்களா தென் ஆப்ரிக்கா? 3வதுநாள் ஆட்டநேர முடிவு வரை ஆட்டம் தென் ஆப்ரிக்க பக்கம் முடியவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இதுபோன்ற இக்கட்டான கட்டங்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. ஆதலால், கடைசி 2 நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தாலும் வியப்பில்லை. குறிப்பாக ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், நேதன் லேயான் ஆகியோரின் பந்துவீச்சு ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பிவிடும். தென் ஆப்ரிக்க அணி கிரிக்கெட் வரலாற்றில் பல நேரங்களில் நெருக்கடியான, அழுத்தமான தருணங்களில் அதை சமாளிக்க முடியாமல் வெற்றியை கோட்டைவிட்ட "சோக்கர்ஸ்" என்று பெயரெடுத்துள்ளது. இதை சாதகமாக வைத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று தங்கள் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியளித்தால், ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு தேவையான 69 ரன்களை சேர்க்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்யவும் முயற்சிக்கலாம். தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெப்ஸ், பெடிங்ஹாம் ஆகிய இரு விக்கெட்டுகள் வீழ்ந்தாலே அடுத்துவரும் பேட்டர்கள் பெரிதாக பேட் செய்யக்கூடியவர்கள் இல்லை. ஆதலால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் என்ன உத்தியோடு களமிறங்கப் போகிறார்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று இன்று தெரியும். இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மாயஜாலம் வெல்லுமா, அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygwddyx3no

இருளில் தேடும் தமிழ்ப்பூனை — கருணாகரன் —

3 months ago
இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்? இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும். உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே! ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர். இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத் தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது. விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல். இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன. அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது. ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது. https://arangamnews.com/?p=12082

இருளில் தேடும் தமிழ்ப்பூனை — கருணாகரன் —

3 months ago

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

June 13, 2025

இருளில் தேடும் தமிழ்ப்பூனை

— கருணாகரன் —

சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். 

இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது.  

அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்தது. இரண்டுக்கும் காரணம், நட்புச் சக்திகள் யார், எதிர்ச் சக்திகள் யார் என்று தெரிந்து கொள்ளாமல் இந்த மாதிரி வீறாப்புப் பேசுவதால் எதிர்விளைவுகளே ஏற்படும் என்பது. கடந்த காலத்திலும் இதுவே நடந்தது. நட்புச் சக்திகளை எதிர்தரப்பாகக் கருதி வசைபாடுவதும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் துரோகியாக்கி விலக்குவதும் ஒரு நோயாகும். இது உச்சமடைந்தே சக போராளி இயக்கங்களை நோக்கி விடுதலைப்புலிகள் துப்பாக்கி ஏந்தியது. இறுதியில் சிங்களப் பேரினவாதத் தரப்புக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு, அழிவைச் சந்தித்ததே மிச்சமாகும். 

இதிலிருந்தெல்லாம் யாரும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் சுமந்திரன் சற்று யதார்த்தமாகப் பிரச்சினைகளை அணுகக் கூடியவர்கள். துணிச்சலாகச் சில விடயங்களையேனும் பேசக் கூடியவர்கள். கொஞ்சமாவது ஜனநாயகத் தன்மையைப் புரிந்து கொண்டவர். தமிழரசுக் கட்சியில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடிய ஓர் ஆளுமை. அவரே இப்படிப் பேசுகிறார் என்றால்… துக்கப்படாமல் என்ன செய்ய முடியும்?  

இதையிட்டு ஏன் சிரிப்பு வந்தது என்றால், இந்த மாதிரிப் பேச்சுகளும் எச்சரிக்கைகளும் சவால்களும் சிலருக்கு உளக் கிளர்ச்சியை அளிக்கலாம். ஆனால், மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை. ஆகவே இதனால் பயனில்லை. மட்டுமல்ல, இதெல்லாம் வானத்தை நோக்கித் தீர்க்கப்படும் வெற்று வேட்டுகளுக்கு நிகரானவை. இப்படி எத்தனை வெற்று வேட்டுகளைப் பார்த்து விட்டோம் என்பதால் உண்டான சிரிப்பு. 

அரசியல் பேச்சுகள், அரசியல் தீர்மானங்கள், அரசியல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்களுக்கு நன்மையைத் தருவதாக அமைய வேண்டும். அப்படியிருந்தால்தான் அந்த அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு முன்னேற்றம் கிட்டும். அந்த அரசியலும் முன்னகர்வதோடு அதுமுன்னேற்றகரமானதாகவும் அமையும். அதற்கே பெறுமானமும் வரலாற்று மதிப்பும் ஏற்படும். 

இதற்கு நிதானமும் கூர்மையான நுண்மதியும் விரிந்த மனப்பாங்கும் அவசியம். முக்கியமாக ஜனநாயகப் பண்பு வேண்டும். அப்படியாயின், அந்த அரசியலை முன்னெடுப்போர்  வெளிப்படுத்தும் வார்த்தைகளும் எடுக்கப்படும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஜனநாயகப் பண்புடனிருக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் கையாளப்பட வேண்டும். இல்லையெனில் அனைத்தும் சிதைந்து விடும். 

ஈழப்போராட்டமும் ஈழத்தமிழரின் அரசியலும் சிதைந்து பின்னடைந்து, தோல்வி கண்டதற்குப் பிரதான காரணம், ஜனநாயக அடித்தளம் சிதைந்ததும் சிதைக்கப்பட்டதுமாகும். ஜனநாயகத்தைச் சிதைத்துக் கொண்டு எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு ஈடேற்றத்தையும் எவராலும் எந்தச் சக்தியாலும் செய்ய முடியாது. 

என்பதால்தான் உலகம் ஜனநாயகத்தை முதன்மையாக வலியுறுத்துகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிச்சட்டமே ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதன் மூலம் பெற்ற வெற்றிதான். 

ஆகவே ஜனநாயகச் சட்டத்திலிருந்துதான் நீங்கள் அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எதையும் வலப்படுத்த இயலும். ஜனநாயகச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும்போதும் அதைப் புறக்கணிக்கும்போதும் நீங்களே சிதைக்கப்படுகிறீர்கள். சூழலும் சிதைக்கப்படுகிறது. 

இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல், மிக உணர்ச்சி வசப்பட்டுச் சுமந்திரன் அந்த உரையை ஆற்றியிருந்தார். அந்த உரை, தற்போதைய நிலையில் கட்சியின் உறுப்பினர்களை மகிழ்வித்திருக்கலாம். ஆனால், அதற்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லை. வரலாற்றில் மட்டுமல்ல, சமகாலச் சூழலிலும்தான். 

ஏனென்றால், அது அவருடைய அலைவரிசையில் சேர்ந்தியங்க வேண்டிய இன்னொரு தமிழ்த்தேசியவாதத் தரப்பான தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைச் சாடியது; எதிர்நிலைக்குத் தள்ளியது. 

தேர்தல் அரசியலில் போட்டித் தரப்பை எதிரணியாகக் கருதிப் பேசுவதொன்றும் புதிதல்ல. ஆனால், அதற்கும் ஒரு எல்லை உண்டு. தேர்தல் அரசியலில் போட்டி எந்தளவுக்கு முதன்மை பெற்றிருக்குமோ அந்தளவுக்கு சுழிப்புகளும் தந்திரங்களும் இருக்கும். அதேபோல சமரசங்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளல்களுக்கும் இடமுண்டு. இதையெல்லாம் மனதிற் கொண்டே எதிரணியின் மீதான விமர்சனங்களையோ கருத்துகளையோ முன்வைக்க வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது சுமந்திரன் உட்பட தமிழ்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒருமுகப்பட்டு அறிவிப்புச் செய்தது, வடக்குக் கிழக்கில் NPP க்கான ஆதரவை வழங்கக் கூடாது. தமிழ்த்தரப்புகளே சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதாகும். இதில் விசேடமாகச் சுமந்திரன் இன்னொன்றையும் சொன்னார், ‘கூட்டாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதை விட தனித்தனியாகத் தேர்தலை எதிர்கொள்வோம். தேர்தலுக்குப்பின்னர் வெற்றியைப் பொறுத்து கூட்டாக ஆட்சியை அமைத்துக் கொள்வோம் என. 

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சுமந்திரன் கூறிய கருத்துகளை பலரும் ஏற்றுக் கொண்டனர். ஆகவே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சபைகளில் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அனைத்துத் தரப்பும் விட்டுக் கொடுப்பு – ஏற்றுக் கொள்ளல் – புரிந்துணர்வு போன்றவற்றின் அடிப்படையில் பேசியிருக்க வேண்டும். முதற்சுற்றுடன் முற்றுப் புள்ளியை வைத்துக் கொள்ளாமல், தொடர்ந்து நிதானமாகப் பேசியிருந்தால் இந்த மாதிரியெல்லாம் வார்த்தைகள் வெளிப்பட்டிருக்காது. நெஞ்சை நிமிர்த்தியிருக்க வேண்டியதில்லை. நமக்குச் சிரிப்பையும் துக்கத்தையும் வரவழைத்திருக்க வேண்டியிருந்திருக்காது. வேண்டிய அரசியற் சூழலையும் கெடுத்திருக்கத் தேவையில்லை. 

உண்மையில் இங்கே என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கிறது? கோமாளித்தனமும் முட்டாள் வேலைகளும்தானே!

ஏனென்றால், போரினால் தோற்கடிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கும் தமிழ்ச் சமூகத்தை அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்றவற்றில் அனைத்துத் தரப்புமாக இணைந்து வளர்த்தெடுக்க வேண்டிய சூழலில், ஆளாளுக்கு பகை கொண்டு எதிர்முனைப்படுவது முட்டாள்தனமன்றி வேறென்ன? 

இதற்கு நிதானமாகப் பல பரிமாணங்களில் செயற்பட வேண்டும். அதில் ஒன்றே உள்ளுராட்சி மன்றங்களுமாகும். உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவதென்பது, தமிழீழத்தைக் கைப்பற்றுவதோ அதற்கு நிகரான ஆட்சியை நிகழ்த்துவதோ அல்ல. பதிலாக இந்தச் சபைகளின் மூலம் மக்களுக்கான சேவைகளை செழிப்பான முறையில் வழங்கச் செய்வதே. இது ஒரு  மிகச் சிறிய எல்லைக்குட்பட்ட பணியே. வேண்டுமானால், சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் தமது கட்சியை வளர்த்துக் கொள்வற்குச் சில வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கு அப்பால் அரசியல் நன்மைகள் இல்லை. 

ஆனால், இங்கே நடப்பதோ தமிழீழத்துக்கான இறுதிப்போரைப் போலவே உள்ளது. 

இதெல்லாம் தமிழ்த் தேசியவாதத் தரப்புகளுக்கிடையிலான மோதல்களும் முரண்பாடுகளும். அதாவது யார் 22 மாற்றுத் தங்கம். யார் 24 மாற்று. யார் 18 மாற்று என்ற அடையாளப்படுத்தலின் விளைவு. இதற்கே இந்தப் போர்.

இதற்கு முன்பு, தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கும் அதற்கப்பாலான தரப்புகளுக்குமிடையிலேயே முரண்பாடுகளும் மோதல்களும் இருந்தன. தமிழ்த்தேசியவாதத்  தரப்பு அரசாங்கத்தையும் (ஆட்சியாளர்களையும்) சிங்கள பௌத்த பேரினவாதக் கட்டமைப்பையும் வெளிப்படையாக எதிர்த்தது. மறுதரப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அதை அரசோடும் சிங்களப் பௌத்தத் தரப்போடும் கலந்து பேசியே பெற முடியும் என்று நம்பியது. 

ஆகவே இரண்டினது வழிமுறையும் வேறு வேறாக இருந்ததால் அவற்றின் நடைமுறையும் வேறாகவே இருந்தது. இதனால் இரண்டு வகையான அரசியல் முறைமைகளை மக்களிடையே கொண்டிருந்தன. இதில் ஒன்றை ஒன்று எதிர்கொள்வதில் தீராத நெருக்கடியும் போட்டியும் நிலவியது.  

விளைவாக துரோகி – தியாகி என்று பொதுவெளியை அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தன இந்தத் தரப்புகள். உண்மையில் இந்த அசிங்கப்படுத்தலை தமிழ்த்தேசியவாதத் தரப்புகளே செய்தன. அதற்கு மறுதலையான தரப்பு அதைச் செய்யவில்லை. அதற்கான தேவையும் அந்தத் தரப்புக்கு இருக்கவில்லை என்பதை நாம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். 

தமிழ்த்தேசியவாதத் தரப்பினுடைய அரசியல் தடுமாற்றங்களும் அரசியல் குறைபாடுகளும் வரட்சியுமே அது தன்னைத் தியாகியாக – சுத்தமான பேர்வழியாக முன்னிறுத்திக் கொள்ள முனைந்ததற்குக் காரணமாகும். தன்னுடைய பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்கும் எதிர்த்தரப்பிற்கு வளர்ந்து வரும் செல்வாக்கை மறுதலிப்பதற்குமே எதிர்த்தரப்பைத் துரோகியாகச் சித்தரித்தது. இது எதிர்கொள்ள முடியாத நிலையின் (Unable to face) வெளிப்பாடாகும். 

ஆனால், மக்கள் இரண்டு தரப்பையும் ஆதரித்தே வந்துள்ளனர். இதுதான் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். அதிலும் தமிழ்த்தேசியவாதத் தரப்புகளுக்கே ஊடக ஆதரவு தாராளமாக இருந்தது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல, சிவில் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தின் பெருந்திரள், மத நிறுவனங்கள் மற்றும் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உள்ளிட்ட கல்விச் சமூகத்தினர், தமிழ்ப்பரப்பில் இயங்கும் அரசியல் நோக்கர்களும் பத்தியாளர்களும் எனப் பல தரப்புகளின் பேராதரவு தமிழ்த்தேசியவாதத் தரப்புக்கே இருந்தது. 

அதற்கு மறுதலையான தரப்புக்கு இவை எதுவுமே இல்லை. ஆனாலும் அவையும் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. செல்வாக்குச் செலுத்தின. அதாவது, ஆதரவுப் பரப்புரை கிடைக்காது விட்டாலும் பரவாயில்லை. மிகக் கடுமையான எதிர்ப்பரப்புரைகளின் மத்தியிலேயே அவை மக்களின் ஆதரவைப் பெற்றன. இது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கியமான ஓரம்சமாகும். 

அதாவது மக்கள் ஜனநாயக அடிப்படையில் அனைத்துச் சிந்தனைக்கும் – மாற்று வழிமுறைகளுக்கும் ஆதரவளித்தனர். சமூகம் என்பது அவ்வாறுதானிருக்கும். அது எப்போதும் ஒற்றைப் படையாக இருப்பதில்லை. அப்படி இருக்கவும் முடியாது. அப்படி ஒற்றைப்படையாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினால் அது ஜனநாயக அடிப்படையை மறுப்பதாகும். அது எதேச்சாதிகாரமாகும். ஆனால். அத்தகைய எதேச்சாதிகாரத்தையே தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் தொடர விரும்புகின்றன. இதற்கு அவை சொல்லும் நியாயமே – நியாயப்படுத்தலே – ‘ஏகபிரதிநிதிகள்‘, ‘ஏக பிரதிநிதித்துவம்‘ என்பது. 

இத்தகைய சிந்தனையும் அணுகுமுறையும் தவறு. சுமந்திரனின் அன்றைய பேச்சும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் கஜேந்திரன்களின் வெளிப்பாடுகளும் இதையே வெவ்வேறு விதமாகக் காட்டுகின்றன. 

இதைக் கட்டுப்படுத்துவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இல்லை. சிவில் சமூகத்தினரும் இல்லை. மதத் தலைவர்களும் இல்லை. மக்கள் அமைப்புகளும் இல்லை. ஊடகங்களும் இல்லை. பதிலாக கொம்பு சீவி விடுவதற்கே ஆட்கள் அதிகம். அல்லது கனத்த மௌனம்கொள்ளுதல்.

இதொன்றும் தமிழ் வரலாற்றுக்குப் புதியதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் தொடங்கி விட்டது. அப்பொழுது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மாறி மாறி துரோகிப் பட்டம் சூட்டி மகிழ்ந்தன.

அதற்குப் பிறகு இயக்கங்கள் துப்பாக்கியினால் விளையாடின. துரோக- – தியாகி அடையாளப்படுத்தல் தொடர்ந்தது. இந்த விளையாட்டுக்குத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகள் தம்மையே பலிகொடுக்க வேண்டியிருந்தது. 

2009 க்குப் பிறகு இது மெல்ல உள்ளடங்கிக் கிடந்தது. ஆனாலும் அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்லப் புத்துயிர் பெற்று இப்பொழுது உச்சமடைந்துள்ளது.

ஆனால், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாவடக்கம், கையடக்கம் (மனம்போன போக்கில் எதையும் எழுதக்கூடாது) வேண்டும். 

இதை ஊடகத்துறையினரும் புரிந்து கொள்வது அவசியம். 

இப்போது ‘துரோகி’ என்ற புனிதச் சொல்லுக்கான அர்த்தம் என்ன என்று அதை உச்சரிப்போர் சொல்ல வேண்டும். ஏனென்றால் எல்லோரும் துரோகிகளாகவே மாறி மாறிச் சித்திரிக்கப்படுகிறது. 

இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளுக்கு வலுவான எதிர்ச் சக்தியாக NPP உள்ளபோதும் இந்தக் கூத்துகள் நடப்பதுதான் சிரிப்புக்கிடமானது.

https://arangamnews.com/?p=12082

கோவிந்தன் கருணாகரத்துக்கு எதிராக நடவடிக்கை - ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி அறிவிப்பு

3 months ago
கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல சாணக்கியன் புரிந்துகொள்ள வேண்டும் மு.எம்.பி கோ.கருணாகரம் காட்டம் By kugen (கனகராசா சரவணன்) எனது கட்சியில் இருந்து என்னை இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நா.உ.சாணக்கியன் யாhர் ? கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி; தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை சாணக்கியன் புரிந்துகொண்டு ஏனையவர்களை தூற்றுவதை நிறுத்தி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என முன்னாள் நா.உ. கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் நா. உறுப்பினரும் ரொலே கட்சியின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார். மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதன் பேது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் என்பற்றி உண்மைக்கு பறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார் மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் 20 உறப்பினர் கொண்ட அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது. அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது ஆனால் தமிழரசு கட்சி இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. எனவே இந்;த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என யாராலும் ஊகிக்க முடியாது இருந்தபோதும் எமது கட்சி உறுப்பனர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார் எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இந்த இரகசிய வாக்கெடுப்பில் ரிஎம்வி கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள் வாங்கியது போல தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது மாவட்டதில் சகல பிரதேசசபையில் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை மண்முணை ஆரையம்பதி சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார.; அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார.; செங்கல பிரதேச சபைக்கு தவிசாளரை ஏனைய நா.உறுப்பினர்கள் தெரிவு செய்திருந்த போது அங்கு சாணக்கியன் வேறு ஒருவரை தெரிவு செய்ததாக அங்கு குழப்பம் ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது இந்த நிலையில் இவரால் முன்மொழிந்த உறுப்பினர் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவுக்கு சமூகமளிக்காமல் சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவே மண்முணை தென்ஏருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது கட்சி உறுப்பினர் வாக்களித்திருக்கு முடியாது என எப்படி இவர்களுக்கு தெரியும். உண்மையில் சாணக்கியன் என்னை தேடிவந்து பேசினார், தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் வினேர் அவ்வாறு மட்டக்களப்பு மாநகரசபை தெரிவு செய்யப்பட்ட முதல்வர் பிரதி முதல்வர் வந்து சந்தித்தனர் ஏன் இறுதி நேரத்தில் நேற்று எம்.சுமந்திரன் என்னுடன் தொலைபேசியல் தொடர்பு கொண்டார் இதன் போது அவர்கள் எல்லோருக்கும் உங்களுக்கு எதிராக வாக்களிகமாட்டோம் என கூறவில்லை ஆனால் இறுதிவரை சில கோரிக்கைகளை முன்வைத்தோம் ஆனால் அவர்கள் எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை எந்தவொரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வரவில்லை ஆனால் இன்று முஸ்லீம் காங்கிரஸ், சி.வி விக்கினேஸ்வரனுடன், மற்றும் சஜத் பிரேமதாஸவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன் டக்கிளஸ் தேவானந்தாவை தேடிச் சென்று ஆதரவு கேட்டுள்ளனர். இருந்த போதும் ஜனநாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 106 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் எங்களுடன் உடன்பாட்டிற்கு வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடிய இடங்களில் வாக்களித்து வருகின்றோம். கடைசிவரை சில கோரிக்கைகள் நிறைவேற்றலாம் என இருந்தோமே தவிர இவர்களுக்கு எதிரா நாங்கள் செயற்படவேண்டும் என்று இருக்கவில்லை எனவே மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாள் தெரிவில் திறந்த வாக்களிப்புக்கு கோரியிருந்தால் அந்த உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும் எனவே அதைவிடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை வைப்பதை சாணக்கியன் முதலில் தவிர்க்க வேண்டும் இன்று பிரதேச சபைகளை அமைப்பற்கு கூட பணரீதியான மற்றும் வேறு நலன் சார்ந்த பல டீல்கள் நடைபெறுகின்றது இன்று மாலை பட்டிப்பளை பிரதேச சபைக்கான தெரிவிற்கு நேற்று இரவு 1 மணிவரை ஒரு சில உறுப்பினர்களை சந்தித்து டீல் பேசியுள்ளனர் வாழைச்சேனையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது உறு;பினர் வாக்களித்தார் ஆனால் நா.உ. சாணக்கியன் தென்எருவில்பற்று பிரதேச சபையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நாங்கள் பயந்து தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாக பேசியுள்ளமை விசித்திரமானது எனவே இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு நாறுது என கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு கட்சியை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களை புதினம் பார்க்க வைக்கும் நீங்கள் என்னை எனது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு சாணக்கியன் யார்? என்ன அருகதை இருக்கின்றது கடசிக்கு மாறாக நான் நடந்தால் எனது கட்சி என்னு நடவடிக்கை எடுக்கும் நீயாhர் அதை கேட்பதற்கு உனக்கு அந்த அதிகாரத்தை யார் தந்தது? 43 வருடமாக ஒரே கட்சியில் ஒரே கொள்கையுடன் தமிழ் தேசியத்துக்காக ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அகிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் ஒரே கட்சியில் நான் பயணத்துக் கொண்டிருக்கின்றேன் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் தேசிம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை விடுத்து உங்கள் கட்சியில் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற நீங்கள் உட்படவர்களுக்கு உங்கள் கட்சியால் நடவடிக்கையை முதலில் எடுங்கள் ஏனைய கட்சியில் என்ன நடக்கின்றது என்பதை எட்டி பார்க்க வேண்டாம் என்றார். https://www.battinews.com/2025/06/blog-post_894.html

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஈரான் தொடர்ந்தும் தாக்குகின்றது – இருவர் பலி மேலும் பலஇஸ்ரேலியர்களிற்கு காயம் 14 JUN, 2025 | 09:35 AM இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. டெலிகிராவ் இதனை தெரிவித்துள்ளது. சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217419

யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி!

3 months ago
யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி! 14 JUN, 2025 | 10:15 AM யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/217421

யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி!

3 months ago

யாழில். வாள் வெட்டு தாக்குதல் ; இளைஞன் பலி!

14 JUN, 2025 | 10:15 AM

image

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில்  கோப்பாய் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்திய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/217421

தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை

3 months ago
தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை 14 June 2025 இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர் பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள் அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். https://hirunews.lk/tm/407092/successive-sri-lankan-governments-are-trying-to-cover-up-the-scars-of-atrocities-against-tamils-british-tamil-council#google_vignette

தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை

3 months ago

தமிழர்கள் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன - பிரித்தானிய தமிழர் பேரவை

14 June 2025

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+

இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்த இடமான முள்ளிவாய்க்காலுக்கும், புதைகுழிகள் தோண்டப்பட்ட செம்மணிக்கும், செல்லவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

BTF என்ற பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்த கோரிக்கையை, விடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதத்தில் இலங்கை வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின், சாட்சிய சேகரிப்பு முயற்சிகளின் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்த, டர்க்கின் இந்த பயணம் உதவும் என்று, பிரித்தானியத் தமிழர் பேரவை டர்க்குக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த 7 தசாப்தங்களாக, தமிழர் மீதான அட்டூழியக் குற்றங்களின் வடுக்கள் மற்றும் தொடர்ச்சியான தாக்கங்களை மறைக்க அடுத்தடுத்த இலங்கை அரசாங்கங்கள் முயற்சிக்கின்றன. 

அத்துடன், இலங்கையின் தமிழ் சமூகங்கள் அரச அடக்குமுறை மற்றும் முறையான துஷ்பிரயோகங்களின் விளைவுகளைத் தொடர்ந்து எதிர் நோக்கி வருவதாக, பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கைக்கான பயணத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு கிழக்கின் பல இடங்களுக்கும் சென்று, தமிழ் பொதுமக்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும், பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

https://hirunews.lk/tm/407092/successive-sri-lankan-governments-are-trying-to-cover-up-the-scars-of-atrocities-against-tamils-british-tamil-council#google_vignette

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

3 months ago
பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா' திட்டம் ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும். ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbvriynk01u6qpbsinrqo4iq

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

3 months ago

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது. எனவே பாதுகாப்பற்ற சிறுமிகள் எத்தனைபேர் உள்ளனர் எனவே இவர்களை பாதுகாப்பதுடன் இவற்றை தடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதாக துஷ்பிரயோகத்தை தடுக்கும் 'சறோஜா'  திட்டம்  ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்டபத்தில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த குழந்தைகள் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை.

ஒரு பெண் குழந்தைக்கு பாலியஸ் துஸ்பிரயோகம் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்.

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தாய் தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுக்காப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே 'சரோஜா' திட்டமானது பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் துஸ்பிரயோகம் இல்லாமல் செய்யப்படவேண்டும்.

ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள். வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbvriynk01u6qpbsinrqo4iq

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஈரான் "சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது" இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இஸ்ரேல்-மீது-நூற்றுக்கணக்கான-பாலிஸ்டிக்-ஏவுகணைகளை-ஏவிய-ஈரான்/50-359193

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

3 months ago
எங்கட சட்ட மேதைகள் ஒருவருக்கொருவர் அரசியல் குழிபறிப்பதில் நேரத்தை விரயமாக்குவதில் மட்டுமே வல்லவர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

இசைப்பிரியா பாலசந்திரன் கொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் -சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே பொலிஸ் மாஅதிபருக்கு மனு

3 months ago
இதுவரை எங்கள் சட்ட மேதைகளே மறந்துவிட்ட ஒரு காரியம். சிங்கள மக்களாலே நமக்கு நடந்த அனிஞாயங்கள் வெளிகொண்டுவரப்படவேண்டும். இவருக்கு முள்ளிவாய்க்கால் படுகொலை காணொளிகளை காட்டுங்கள்.

‘விபசாரம்’ செய்ய ஒப்பானதான ‘தமிழரசுக் கட்சி’

3 months ago
தமிழரசுக்கட்சிக்குள் இப்போ இருப்பவர்கள் மக்களுக்காகவோ இந அபிமானத்துக்காகவோ உழைக்க வந்தவர்களல்லர். கட்சியிலுள்ள பெலயீனத்தை வைத்து தங்களை தக்க வைக்கவும் மக்களை ஏமாற்ற வந்தவர்களுமாகும். மக்களின் உணர்வுகளின் மேலேறி பதவிகளை பெற வந்த குள்ள நரிகள். அவர்களுக்கு கொள்கை, இலட்சியம், நீதி, நிஞாயம் என்பதெல்லாம் வெறும் சொற்களே. சுமந்திரனுக்கு கட்சிக்குள் நுழையும்வரை அதன் கொள்கைகள் எல்லாம் தெரியாது. உள்நுழைக்கப்பட்டதும் அதை சிதைப்பதிலும் பதவியை பெறுவதிலும் கண்ணாக இருந்தார் காரியமாற்றினார். கட்சியை வெளியுலகில் தூற்றி அதை நிறைவேற்ற துடித்தார். அன்று தான் செல்லும் வெளிநாடுகளிலெல்லாம் விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விட்டவர், இன்று அவருடனேயே ஒப்பந்தம் செய்துள்ளார், கொள்கைகளை தனது சுய நலத்திற்காக பிரட்டியவர். இப்போ கட்சிகள் கொள்கைகளை மறுத்து செயற்பட்டதாக புலம்புகிறார். அநிஞாயங்களை தட்டிக்கேட்க துணிவில்லாமல் மௌனம் காத்த சிவஞானம் தனக்கேற்ற காரணங்களை காட்டி தன்னை நிஞாயப்படுத்துவதிலும் வெளிக்கிட்டுள்ளார். சாணக்கியன் சிங்களக்கட்சியில் போட்டியிட்டு தோற்று, தமிழ் மக்களின் உணர்வில் சவாரி செய்ய வந்தவர். இவர்களே தலைமைத்துவ போட்டிக்கு அடிபடுகின்றனர். இவர்களை விட்டு வெளியேற்ற மக்களால் மட்டுமே முடியும். பதவிக்காக வரும் சோம்பேறிகளையும், துரோகிகளையும் வீட்டுக்கு அனுப்பி தங்கள் உணர்வுகளை பாதுகாக்க வேண்டும். இல்லையேல் துரோகிகளின் கூடாரத்தை மாற்ற வேண்டும்.