Aggregator

யப்பானில் சில நாட்கள் (1-2) - நடேசன் -

3 months ago

யப்பானில் சில நாட்கள் (1) - நடேசன் -

- நடேசன் -

பயணங்கள்

06 ஜூன் 2025

David_Edelstein_on_Unsplash_free.jpg

* Photo by David Edelstein on Unsplash

nadesan23.jpgஇரவில் டோக்கியோ போய் சேர்ந்ததும்  நாங்கள் தங்க வேண்டிய  ஹொட்டேலை அண்ணாந்து பார்த்தேன்.   இத்தனை  உயரமான மாடிக்கட்டிடத்தில்  நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்  தப்புவோமா என்ற வினா மனத்தில் எழுந்தது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது இடத்தில் நடுங்கியபடி  இருக்கும் நாடு  யப்பான்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களை காப்பாற்றும்படி பிரார்த்திப்பார்கள்.  படைப்பில் நம்பிக்கையற்ற,  பரிணாமத்தை நம்பும் நான் என்ன செய்ய முடியும் ? அரைநூற்றாண்டு தாம்பத்தியம் எங்களிடையே இருப்பதால் எனக்கும் சேர்த்து சியாமளாவே பிரார்த்திக்கலாம்!

இலகுவான வழி?

எப்படி இந்த நாட்டில் இவ்வளவு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தப்புகிறது  என்ற எனது கேள்வியை நாகரிகமாக  எமது வழிகாட்டியிடம் ஹொட்டேல் வாசலில் வைத்துக்   கேட்டேன்.

அந்த யப்பானிய இளைஞன் என்னை பார்த்து சிரித்தான். ஆனால் , பதில் தரவில்லை.

இந்த இரவு நேரத்தில் இது தேவையான கேள்வியா என சியாமளாவின் பார்வை என்னை நோக்கி கூரிய கணையாக வந்தது.

அவனது மனத்தில் என்ன நினைத்திருப்பான்? அதைபற்றி என்ன கவலை?

nadesan_japan1a.jpg

நான் கேட்டதற்கு காரணம் உள்ளது.

(On 11 March 2011, the Fukushima nuclear power station was damaged after the magnitude 9.0 earthquake and subsequent tsunami.)

யப்பானில் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக குறைவு. ஆனால் ,  அமெரிக்காவில் இரு வருடங்கள் படித்த இளைஞன் வழிகாட்டியாக  கிடைத்தது எங்கள் அதிஸ்டமே .

அடுத்த நாள் காலையில்  ஹொட்டேலை விட்டு பஸ்சில் ஏறியபின் அவனிடமிருந்து, எனது  இரவு கேள்விக்கான விடை அரைநாள் தாமதமாக  கிடைத்தது.

‘யப்பானில் ஃபுக்கசீமா நில நடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட  சுனாமியாலே  அணு உலையின் குளிராக்கி ( Cooling pond) உடைந்து கதிரியக்கம் வெளிப்பட்டது.  அந்த நில நடுக்கம் டோக்கியோவில் தாக்கியபோதும் உயரமான கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சிறிய தனி வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன.   பெரிய கட்டிடங்கள்  நிலத்தின் கீழ் அத்திவாரமற்று அவற்றை இரும்பு  பிரேம் தாங்கியபடி  இருக்கும்.  அந்த பிரேமில் இப்படியான அதிர்வைத் தாங்கி அசைந்து ஆடிவிட்டு  (Horizontal Shock absorber) மீண்டும் அதே நிலைக்கு வரும் தன்மை உள்ளதால்,அடுக்குமாடிகள் இங்கு பாதுகாப்பானவை‘ என்று விளக்கம்  கிடைத்தது.

யப்பானுக்கு கடந்த வருடம் சென்ற ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களில் இருவராக  நானும் சியாமளாவும் சென்றோம். நாங்கள்  நடு இரவில் டோக்கியோ சென்றடைந்தபோது  ஒரு நாற்பது மாடிகள் கொண்ட ஹொட்டேலுக்கு  அழைத்து சென்றார்கள்.  ஒரு குழுவாக சென்றதால்  மொழி,  போக்குவரத்து , உணவு  என்ற பிரச்சினைகள் எமக்கு  இருக்கவில்லை.

ஜப்பான் வரலாறு பல ஆசிய நாடுகளில் இருந்து வித்தியாசமானது. எந்த ஒரு ஐரோப்பிய நாடுகள்போல்  காலனி ஆதிக்கத்தின் கீழ்  இருக்காதது மட்டுமல்ல மற்ற நாடுகளை தனது காலனியின் கீழ்  வைத்திருக்க முயன்றது. ஜெங்கிஸ்கான் காலத்தில் மங்கோலியர்கள் மூன்று முறை கடல் கடந்து  படையெடுத்து தோற்றார்கள். ஒரு முறை புயலே யப்பானியர்களை காப்பாற்றியது என அறிந்தேன்.

ஆயிரம் வருடங்கள் வரையும்  ஷோகன் (Shogun) என்ற ஒரு வித இராணுவ பொறுப்பானவர் முழு யப்பானுக்கும் பொறுப்பாக இருந்தாலும்  அவரின் கீழ் இந்திய ஜமீன்தார்கள் போல் பல பிரபுக்கள் கொண்ட பிரிவுகளாக யப்பான் அக்காலத்தில் ஆளப்பட்டது.  அவர்களது அதிகாரம் எல்லை கடந்தது.   அவர்களிடம் சமுராய் எனப்படும் விசுவாசமாக  போர் வீரர்கள்- ( அதாவது பாண்டிய மறவர்கள் போல) இருந்தார்கள்.  அதன்பின் எல்லா பிரதேசங்களையும்   இணைத்து மொத்தமான ஜப்பானுக்கு ஒரு  மன்னர் வருகிறார்.  7ஆம் நூற்றாண்டின் பின்பாக மன்னர் இருந்தாலும் அவர் அதிகாரமற்றவர். யப்பானிய மன்னர்  மீண்டும் அதிகாரம் பெற்றது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே நடந்தது.

வரலாற்றுக்கு முன்பாக அதாவது  35,000 வருடங்கள் முன்னால் யப்பான் ஆசியாவோடு நிலமாக இணைந்திருந்த காலத்தில் மக்கள் சைபீரியாவின் பகுதிகளிலிருந்து  சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆரம்பக்கால யப்பானின் வரலாறு மற்றைய நாடுகளினது  கற்கால மக்கள்போல் ஆரம்பிக்கிறது.  அதாவது 10,000 வருடங்களுக்கு முன்பு கரையோரத்தில் வாழும்  மக்கள் மீன் பிடித்தல், உள்பகுதியில் வசிப்பவர்கள் வேட்டையாடுதல் என்பன முக்கிய ஜீவனோபாயத் தொழிலாக நடந்தது. யப்பானிய வரலாற்றில் ஒரு வித்தியாசமான விடயம் எனக்கு அறிய முடிந்தது .

nadesan_japan1b.jpg

பெரும்பாலாக பிரதேசங்களில் மண்பாண்டங்களின் உருவாக்கம் விவசாயத்தோடு தொடங்கும்.  ஆனால், யப்பானில் மண்பாண்டங்கள் விவசாயத்திற்கு ஆயிரம் வருடங்கள் முன்பு தொடங்கியது என்கிறார்கள். யப்பானுக்கு கிட்டத்தட்ட 2500 வருடங்கள் முன்பாக கொரியா போன்ற இடங்களிலிருந்து விவசாயம் மற்றும் உலோக சாதனங்களின் தொழில்நுட்பம் சென்றது. யப்பானின் தெற்குத்  தீவுகள் கொரியாவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ளன.  அதாவது இலங்கைக்கு ,இந்தியா போல அக்கால கடல் பயணத்திற்கு அதிக தூரமில்லை. விவசாயம்  ஆரம்பித்தபின்  பின்பு சமூக கட்டுமானங்களின் படிமானங்கள் உருவாகிறது.

ஒரு காலத்தில் ( கி.பி300) சீனாவிலிருந்து சென்ற ஒரு தூதுவர் ஒருவர் யப்பானை பற்றிச் சொல்லிய சில விவரங்கள் எழுத்தில் உள்ளன . அதில் பல சிறிய அரசுகள் அக்காலத்தில் ஒன்றாகிய யப்பானில் 30 பெரிய அரசுகள் இருந்தன அதில்  முக்கியமான அரசைப்  பெண் மந்திரவாதி  அவளது சகோதரனது உதவியுடன் அரசாண்டாள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  சூரியனை முக்கிய கடவுளாக கொண்டாடிய யப்பானியர்களது வாழ்க்கை  சீனாவிலிருந்து சென்றவருக்கு வித்தியாசமானதாகத் தெரிந்திருக்கலாம் . பிற்காலத்தில் எழுத்துமுறை சீனாவிலிருந்து சென்றது. இதனால் ஆரம்ப ஷின்டோ மத நம்பிக்கை, தொன்மைக்  கதைகளே.   கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு வரையில் வாய்மொழி விடயங்களாகவே மத நம்பிக்கை இருந்தன. நமது இதிகாசம் புராணங்கள்போல், இதற்கு மேல் வரலாறு தேவையில்லை.

நாங்கள் யப்பான் சென்றது இலையுதிர்காலம்.  வசந்த காலமும் இலையுதிர் காலமும் விசேடமானவை . இளஞ்சிவப்பு நிறத்தில் ஷெரி மரங்கள் வசந்தகாலத்தில் பூத்து குலுங்குவதுபோல்  சிவப்பு மஞ்சள் என மாப்பிள் இலைகள் வர்ணத் தோரணமிட்டு நம்மை வரவேற்கும்.

டோக்கியோவில் முதல் நாள்  காலையில் சென்றது  அருகில் உள்ள யப்பானிய பூங்காவிற்கு.  இந்த பூங்கா 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ, நாட்டின்  தலைநகரானபோது,  அப்போதிருந்த ஷோகன் இந்த  அழகிய பூங்காவை தனக்காக வடிவமைக்கிறார்.

அக்காலத்தில் பொதுமக்கள் இந்த பூங்காக்களுக்கு செல்ல முடியாது.  கடந்த 100 வருடங்களாக மட்டுமே பொதுமக்கள் உள்ளே சென்று  பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த யப்பானிய பூங்காக்களின் தத்துவமே தனியானது. மற்றைய நாடுகளில் பூங்காக்கள்  இருந்தாலும் அவைகள் கலாசாரக் கூறுகள் அல்ல.அழகுக்காக உருவாக்கப்பட்டவை.   இங்கு  பூங்காக்கள் யப்பானிய கலாசாரத்துடன் இணைந்துள்ளன. முக்கியமாக அமிடா பௌத்தம்( Pure land Buddhism) வந்தப்பின் இவை பூமியில்  சொர்க்கத்தை பிரதிபலிப்பன . ஷோகன் இறந்தபின், அவர் சொர்க்கம் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதால் அவரது கற்பனையில் இப்படித்தான் சொர்க்கம் இருக்கும் என்ற நினைவுடன் இந்தப் பூங்காக்கள்  வடிவமைக்கப்பட்டது. உண்மையில் சொர்க்கம் இப்படி இருக்குமென்றால் நல்ல விடயம்,   நானும் அதற்கு பயண சீட்டை எடுக்க விரும்புவேன். 

கியோசூமி பூங்கா (Kyosumi Garden)  மிகவும் அழகானது. பூங்கா என வார்த்தையில் சொல்லாது நான் அதை விவரிக்கவேண்டும்.   ஒரு மணி நேரம் பூங்காவை சுற்றி வந்தபோது,  இதுவரையிலும் ஆங்காங்கு நான்  கேள்விபட்ட யப்பானிய பூங்காவின்  முக்கிய கூறுகளை அங்கு முழுமையாக பார்க்க முடிந்தது.

உலகத்தின் பல பெரிய பூந்தோட்டங்களைப் பார்த்துள்ளேன். பேராதனையில் படித்த காலத்தில்  அங்குள்ள பூந்தோட்டம் என்னைக் கவர்ந்தது.  அவுஸ்திரேலியாவில் பலவற்றைப் பார்த்தாலும் எனது மனதில் நிற்பது கனடாவின் மேற்குப்பகுதியில் உள்ள விக்டோரியா நகரில்(Butchart Garden) உள்ளதே. இங்கு அழகை விட இந்த பூங்கா ஒரு காலத்தில் சுண்ணாம்பு கற்கள் அ௧ன்றெடுத்த இடமாக இருந்தது. அதை தனி ஒருவராக வடிவமைத்து  இப்பொழுது அரசின் பொறுப்பில் உள்ளது. சமீபத்தில் அவுஸ்திரியாவின் சலஸ்பேர்க்கில்  உள்ள மிரபெல்லா  பூங்காவைப் பார்த்தேன். இவைகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனையின் வடிவங்கள்.  அதேபோல் டெல்லியில்  சில பூங்காக்கள் முகாலய அல்லது பேர்சிய சிந்தனையின் வடிவமைப்பில் அமைந்தது.

இவற்றிலிருந்து  யப்பானியர்களது பூங்கா அமைப்பு முற்றாக வித்தியாசமானவை. யப்பானின் கால நிலைக்கும் அவர்களது நில அமைப்பையும் ஒன்றிணைத்து அமைப்பார்கள்.  யப்பானில்   நான்கு காலநிலைகளிலும் அந்த பூங்காக்கள் அழகாக  இருப்பதற்கு,  அதற்கேற்ப  மலர் செடிகளுடன்,  எல்லா கால நிலைக்கும் ஏற்ற மரங்கள்,  யப்பானின் நில அமைப்பு அதாவது மலைகள்,  பள்ளங்கள்,  நீர்நிலைகள்,  அருவிகள் என்பவற்றை ஒன்றிணைத்து, அதற்கேற்ப நீர் தடாகங்கள் உருவாக்கி, அதில் சிறிய அருவிகள்  மெல்லிய ஓசையுடன் சலசலத்தபடி ஓடும்.  ஒழுங்கற்ற தடாகத்தில் மீன்கள், பறவைகள்,நீர்த்தாவரங்களுடன்,  குறுக்கே வாய்கால்கள் மீது சிறிய மரப்பாலங்கள் பாதையாக அமைந்திருக்கும். ஆங்காங்கே கற்கள் வைக்கப்பட்டு , அவைகளில் பச்சைப் பாசி படித்திருக்கும்.  சுற்றியிருக்கும்  கருங்கற்களில் சிறிய சிற்பங்கள் அல்லது பகோடா போன்ற அமைப்பு இருக்கும்.  நடக்கும்போது பாதைகளாக  மரத்தாலான சிறிய பாதைகள் வளைந்து செல்லும்.  வர்ண விளக்குகள் பல இடங்களில் அமைத்திருப்பார்கள். மொத்த பூங்காவும் அமிடா புத்தரின் சொர்க்க உலகத்தை நமக்கு படிமமாக்குகின்றன.

பூங்காவில் மரங்கள் சிறிதாக, அதாவது பொன்சோ முறையில் வளர்க்கப்படுகிறது. நான் பார்த்தபோது,  சில மரங்களின் அடிப்பகுதிகளை சுற்றி காயமடைந்த இடத்தில் துணி சுற்றுவதுபோல் மூங்கில் பாய் போன்ற ஒன்றைக் கொண்டு  அந்த மரத்தை சுற்றியிருந்தவர்கள் . அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது .  ‘ மரத்தின் சில பகுதிகள் ஏதாவது காரணத்தால் உடைந்தால் அந்த இடங்களில்  தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்காக’  என்ற பதில் கிடைத்தது. பூங்காவின் நுழைவாயில்,  மூங்கில்களால்  அமைந்தது   இவை எல்லாம் இங்கு இருந்தால் உள்ளே வருபவர்கள் மனங்கள் பூரண அமைதி அடைய முடியும் என கருதுகிறார்கள்.

இங்கு யப்பானிய மன்னரது இறுதிக் சடங்குகள் நடந்ததுடன் பல நில நடுக்கங்களை கடந்து வருங்கால சந்ததிக்காக இந்த பூங்கா தற்போது டோக்கியோ நகரசபையினரால் பராமரிக்கப்படுகிறது  என்ற அறிவிப்பு அங்கிருந்தது

[தொடரும்]

uthayam12@gmail.com

https://www.geotamil.com

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months ago
வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு…....... ! --- சின்ன பொண்ணு சேலை ---

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
முதல்வர் கிருபன்ஜீக்கு வாழ்த்துகள் .உற்சாகத்துடன் பங்கு பற்றிய கள உறவுகளுக்கும் போட்டியைத்திறம்பட நடத்திய கோஷான் சே யிற்கும் பாராட்டுகள்.

ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்

3 months ago
இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் சண்டைகூட, அது சர்வதேச சட்டம், மற்றும் ஐ.நா சாசனத்தின் படி சட்டவிரோதம் என்றாலும், NPT treaty ஐ இரான் மீறிவிட்டது என்ற ஒரு பகுதி அடிப்படையிலும். (அதாவது ஒரு கூட்டு (மேற்கு)அரசுகள் இன்னொரு அரசின் மீது படைபலத்தை இஸ்ரேல் வழியாக பிரயோகிப்பது, treaty ஐ வலோற்றகாரமாக வேறு ஒரு அரசு (ஈரான்) மீது சுமத்துவதற்கு) ஈரானுடன் 2015 இல் JCPOA என்ற ஒப்பந்தம், பாதுகாப்பு சபை 5 நிரந்தர உறுப்பினரும், ஜெர்மனியும் செய்த ஒப்பந்தம் treaty அல்ல. ஏனெனில் , அது முழு அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை (அதாவது எந்த அரசாலும் ratify பண்ணப்படவில்லை).

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

3 months ago
14 JUN, 2025 | 07:18 PM தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம். அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது. இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன. நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை. அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர். எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர். https://www.virakesari.lk/article/217475

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

3 months ago

14 JUN, 2025 | 07:18 PM

image

தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது.

எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது.

இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன.

அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன.

நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை.

அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர்.

எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர்.

IMG_20250614_124910.jpg

IMG_20250614_124502.jpg

IMG_20250614_124554.jpg

IMG_20250614_124813__1_.jpg

https://www.virakesari.lk/article/217475

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் - 60 பேர் பலி 14 JUN, 2025 | 04:50 PM ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. 14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளனர் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளன என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217463

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
முதல் கிருபனோடு வந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் ........ போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் . ...... சும்மா டிக் டொக் மாதிரி போட்டியை சிறப்பாக நடத்தி வந்த கோஷன் - சே க்கு நன்றி . .........!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
கமேனி தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான் பற்றி எரியும் - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் 14 JUN, 2025 | 04:34 PM ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார்,ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலிற்காக பெரும் விலையை செலுத்தும் நிலையை அவர் உருவாக்குகின்றார் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். கமேனி தொடர்ந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான்பற்றி எரியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217460 இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு வெளியே ஒரு இரானியர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்பு பணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த ஒரு கட்டடம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜூன் 13 அதிகாலை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் படங்களுடன் கூடிய ஒரு போஸ்டர், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் மீதான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் பதிவு செய்யப்பட்ட காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு இரானியர். (இடம்: டெஹ்ரானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு) இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார். இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த கட்டடங்களைப் பார்க்கும் இஸ்ரேலியர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் பதிலடி தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக டெஹ்ரானின் வீதிகளில் கூடிய மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானின் வீதியில் இதைக் கொண்டாடும் மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் முழுவதும் பல இலக்குகளைத் தாக்கியுள்ள இஸ்ரேல், இரானின் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், புஷேர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்ய யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் வலியுறுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர். இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg7r8m5ln2o

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

3 months ago
14 JUN, 2025 | 04:28 PM மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது. இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/217455

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

3 months ago

14 JUN, 2025 | 04:28 PM

image

மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது.

0614__2__10_.jpg

0614__2__4_.jpg

0614__2__5___1_.jpg

0614__2__2_.jpg

https://www.virakesari.lk/article/217455

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜூன் 2025, 14:30 GMT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. இது ஐசிசி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெல்லும் 2வது சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன் 1998ல் நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. இனியும் பதற்றத்தில் தோல்வியடையும் அணி அல்ல ஐசிசி பைனல், அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்க அணி பதற்றத்தில் வெற்றியை நழுவவிடுவார்கள் என்ற அவப்பெயர் கடந்த காலங்களி்ல் அந்த அணி மீது இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அது அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணியினர் மாற்றிவிட்டனர். தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் 27 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் அணி ஐசிசி அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்ததைத்தான் பார்த்திருந்தார்கள். ஆனால், இந்த இளம் வீரர்கள்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். கடைசியாக தென் ஆப்ரிக்க அணி 1998ம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. அதன்பின், 27 ஆண்டுகளாக பலமுறை ஐசிசி நடத்தும்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தென் ஆப்ரிக்க அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்திய அணியிடம் தோற்றது. ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருப்பின் பலனாக இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக வென்றது. இதுவரை நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தார்போல் 3வது அணியாக தென்ஆப்ரிக்கா சாம்பியனானது. மார்க்ரம் ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் எய்டன் மார்க்ரம் தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் (136) ஆகச்சிறந்த ஆட்டம் மற்றும் கேப்டன் பவுமாவின்(66) பொறுப்பான பேட்டிங் முக்கியக் காரணமாகும். முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம், 2வது இன்னிங்ஸில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐசிசி இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார். இதற்கு முன் கிளைவ் லாய்டு (1985), அரவிந்த டி சில்வா (1996) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி பைனலில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது மார்க்ரம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 282 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மார்க்ரம் 156 பந்துகளில் சதத்தையும், பவுமா அரைசதத்தையும் நிறைவு செய்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடன் களத்தில் இருந்து 4வது நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கேப்டன் பவுமா கூடுதலாக ஒரு ரன் சேர்த்து 66 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்க்ரமுக்கு ஒத்துழைத்து ஆடவே ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து பெடிங்ஹம் களமிறங்கி, மார்க்ரமுடன் சேர்ந்தார். இளம் வீரராக இருந்தாலும் பெடிங்ஹம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து அணியை மெல்ல வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் மார்க்ரம் (136) மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர். அடுத்து, வெர்னே களமிறங்கி, பெடிங்ஹமுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெடிஹாம் 21 ரன்களுடனும், வெர்னே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பெவிலியனிலும், டக்அவுட்டிலும் இருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கேசவ் மகராஜ், கேப்டன் பவுமா உள்பட பல வீரர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். திருப்புமுனை பந்துவீச்சாளர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கேப்டன் பவுமா, மார்க்ரமின் சதம் எந்த அளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததோ, அதே அளவுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ரபாடா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும், யான்சென் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதில் குறிப்பாக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் கடைசி 5 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர், அதேபோல 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை ஒருபோதும் தென் ஆப்ரிக்க அணி தவறவிடவில்லை. கேப்டனின் பொறுப்பான ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை என்ற சாதனையை பவுமா தக்க வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுடன் சேர்ந்து பார்ட்ன்ர்ஷிப் அமைத்து ஆடிய பவுமா வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். ஒரு கட்டத்தில் பவுமாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். இதனால் பவுமா ரிட்டயர்ஹர்ட் முறையில் பெவிலியன் வர வேண்டுமா என்ற விவாதம் வர்ணனையாளர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், முக்கியத்துவம் மிகுந்த இந்த ஆட்டத்தில் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து கொண்ட பவுமா, நேற்றைய ஆட்டம் முடியும் வரை தசைப்பிடிப்பு வலியுடன் மார்க்ரமுடன் இணைந்து பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமாக இருந்தார். கால் நூற்றாண்டு காத்திருப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது. 1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது. 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது. 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. கடின உழைப்பு, நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா அளித்த பேட்டியில் " எங்களுக்கு கடந்த இரு நாட்களும் சிறப்பானதாக இருந்தது, சில நேரங்களில் நாங்கள் தென் ஆப்ரிக்க என்று உணரவைத்தது. இந்த தொடருக்காக கடினமாக உழைத்தோம், தயாராகினோம், அதிகமான நம்பிக்கையுடனும், ஏராளமான சந்தேகங்களைச் சுமந்தும் வந்தோம். சிறப்பாக ஆடிய அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு இரு ஆகச்சிறந்த தருணம், அடுத்த இருநாட்களில் எங்களை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்கள். இந்த எழுச்சியைத்தான், உணர்ச்சியைத்தான் அணியினர் அனைவரும் எதிர்பார்த்தார்கள் விரும்பினார்கள். மார்க்ரமை அணிக்குள் கொண்டுவந்த போது அவரைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் அனைத்தையும் அவரின் ஆட்டம் நொறுக்கிவிட்டது. ரபாடாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் பலவாறு சிதறி இருந்தாலும், தேசமாக ஒன்றாக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம், இதை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் ஆடாத பயிற்சியாளர் தென் ஆப்ரிக்க அணியின் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் முக்கியக் காரணம். தென் ஆப்ரிக்க தேசிய அணியில் இடம் பெறாத, சர்வதேச போட்டியில் ஆடாத சுக்ரி கான்ராட் கடந்த 2023ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தென் ஆப்ரிக்க அணியில் ஏற்பட்ட மாற்றங்கள், வெற்றிகள் சாம்பியன்ஷிப் வரை கொண்டு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிக்கி கான்ராடின் மகன் சுக்ரி கான்ராட் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண அணிக்காக இளமைக் காலத்தில் ஆடிய சுக்ரி கான்ராட் 13 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கேப் கோப்ராஸ், கட்டெங், ஹைவீல்ட் லயன்ஸ் ஆகிய கவுன்டி அணிகளுக்குப் பயிற்சியாளராக சுக்ரி பணியாற்றியுள்ளார். உகாண்டா தேசிய அணிக்கு 2010-2011ல் பயிற்சியாளராகவும் சுக்ரி இருந்து அதன்பின் தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைமைப் பயிற்சியாளராக சுக்ரி நியமிக்கப்பட்டார். 2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அணியை தயார் செய்த சுக்ரி, கேப்டனாக இருந்த மார்க்ரமை சமீபத்தில் மாற்றிவிட்டு, டெம்பா பவுமாவை நியமிக்க பரிந்துரை செய்தார். அதற்கான பலனும் கிடைக்கவே முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தென் ஆப்ரிக்கா வென்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g6n5d19kjo

பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க 'சரோஜா' திட்டம்

3 months ago
கிழக்கில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம்; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர 14 JUN, 2025 | 07:59 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் 'சரோஜா' திட்டத்தை ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்களே ஆகும். இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே தவறான நடத்தைக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது. அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பார் அல்லது தாய், தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு பிரச்சினை உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த 'சரோஜா' திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/217452

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கி கப்பல்

3 months ago
Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:37 PM (எம்.மனோசித்ரா) துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார். இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217436

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கி கப்பல்

3 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 12:37 PM

image

(எம்.மனோசித்ரா)

துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.

இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார்.

இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

NHQ_4086.jpg

NHQ_4089.jpgNHQ_4107.jpgNHQ_4145.jpgNHQ_4118.jpgNHQ_4167.jpgNHQ_4171__1_.jpg

https://www.virakesari.lk/article/217436

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவையை மேம்படுத்த இந்தியா மீண்டும் உதவி

3 months ago
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம் Jun 14, 2025 - 15:46 - நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமான இன்று (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbw2zxqw01uqqpbshhecsnve