Aggregator

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

2 months 3 weeks ago

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா குறித்து விசேட கலந்துரையாடல்

13 Aug, 2025 | 10:49 AM

image

மன்னார்  மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை  (12) இடம்பெற்றுள்ளது.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவுக்கான ஆயத்த கலந்துரையாடலானது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்   ஆண்டகையின் பங்குபற்றுதலுடன்  மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாயத்த நடவடிக்கைகள் வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை.

இதற்கமைய, வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், நீர் மற்றும் உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 06ஆம் திகதி மருத மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,15 ஆம் திகதி திருவிழா திருப்பலி கூட்டுத்திரு பலியாக ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்  ஆண்டகை, குரு முதல்வர்  அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர்   அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் அருட்தந்தை, இராணுவம், பொலிஸார், கடற்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_

WhatsApp_Image_2025-08-13_at_8.11.41_AM_


https://www.virakesari.lk/article/222459

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

2 months 3 weeks ago
எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442800

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

2 months 3 weeks ago

Kumara-Jayagody-DailyCeylon.png?resize=6

எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகை வழங்கினால், அரசாங்கத்தினால் குறித்த கடனைச் செலுத்த முடியாது எனவும் வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442800

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி

2 months 3 weeks ago
கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி 13 August 2025 https://cdn.hirunews.lk/Data/News_Images/202508/1755055895_189253_hirunews.jpg கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 குழந்தைகள் உட்பட 227 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/414332/89-people-killed-in-israeli-strikes-on-gaza-in-past-24-hours-while-waiting-for-food

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி

2 months 3 weeks ago

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் பலி

13 August 2025

https://cdn.hirunews.lk/Data/News_Images/202508/1755055895_189253_hirunews.jpg

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் உணவுக்காக காத்திருந்த 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மேலும் 513 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காசாவில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் மூலம் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 குழந்தைகள் உட்பட 227 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

https://hirunews.lk/tm/414332/89-people-killed-in-israeli-strikes-on-gaza-in-past-24-hours-while-waiting-for-food

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

2 months 3 weeks ago
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்! நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட தூர பேருந்துகளில் AI கமரா அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன் பல டிப்போக்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அமைச்சர் நிலைமைகளை ஆராயந்துள்ளார். அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் கீழ், பேருந்து சாரதியின் நடத்தைகளை கண்காணிக்கவும், தேவைப்படும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் 40, AI கெமராக்கள் பேருந்துகளில் முதற்கட்மாக நிறுவப்படவுள்ளன. இந்த அமைப்பு மூலம் சாரதியின் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து விதிகள் மற்றும் ஆசனப்பட்டி பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் மூலம் சாரதிகளுக்கு சமிக்ஞைகளை வழங்கப்படும் என்றும் மற்றும் பேருந்தை கட்டுப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1442838

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

2 months 3 weeks ago

bimal-1.jpg?resize=750%2C375&ssl=1

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு கெமரா அமைப்புகள்!

நாட்டில் நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளுகின்ற பேருந்துகள் மூலம் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்ளை குறைப்பதற்கு புதிய திட்டம் ஒன்று தயரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனியார் துறையின் தலையீட்டில் முதலாவது முன்னோட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்று கதிர்காமம் டிப்போவில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது பல நீண்ட தூர பேருந்துகளில் AI கெமராக்கள் பொருத்தப்பட்டன. பல நீண்ட தூர பேருந்துகளில் AI கமரா அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன் பல டிப்போக்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அமைச்சர் நிலைமைகளை ஆராயந்துள்ளார்.

அதன்படி, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கெமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், பேருந்து சாரதியின் நடத்தைகளை கண்காணிக்கவும், தேவைப்படும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் 40, AI கெமராக்கள் பேருந்துகளில் முதற்கட்மாக நிறுவப்படவுள்ளன.

இந்த அமைப்பு மூலம் சாரதியின் சோர்வு, மயக்கம் அல்லது கண் மூடல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து விதிகள் மற்றும் ஆசனப்பட்டி பயன்பாடு ஆகியவற்றை கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு கெமராக்கள் மூலம் சாரதிகளுக்கு சமிக்ஞைகளை வழங்கப்படும் என்றும் மற்றும் பேருந்தை கட்டுப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1442838

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

2 months 3 weeks ago
மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் 13 August 2025 சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது. https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

2 months 3 weeks ago

மன்னார் காற்றாலை விவகாரம் - இன்று ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

13 August 2025

1755052597_5061117_hirunews.jpg

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 04 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். 

காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர். 

அதற்கமைய, இந்த விவகாரத்திற்கு இன்று காத்திரமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். 

அதேநேரம், காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

https://hirunews.lk/tm/414322/mannar-wind-farm-issue-special-discussion-with-the-president-today

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

2 months 3 weeks ago
டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி! போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது. ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன. கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442823

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

2 months 3 weeks ago

New-Project-115.jpg?resize=750%2C375&ssl

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார்.

மேலும், இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு ஊக்கமாக பயன்படுத்தப்படலாம் என்றும் உக்ரேன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் இடையேயான திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு முன்னதாக ஜெலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஏங்கரேஜில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது விளாடிமிர் புட்டின் என்ன கோரிக்கைகளை வைக்க முடியும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்கின் கிழக்குப் பகுதிகளைக் கொண்ட டான்பாஸ், 2014 முதல் ரஷ்யாவால் ஓரளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ இப்போது கிட்டத்தட்ட லுஹான்ஸ்க் முழுவதையும், டொனெட்ஸ்கின் சுமார் 70% பகுதியையும் கொண்டுள்ளது.

ஆனால் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, டான்பாஸை விட்டு வெளியேறும் எந்தவொரு திட்டத்தையும் உக்ரேன் நிராகரிக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ரஷ்ய படைகள் தங்கள் கோடைகால தாக்குதலைத் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.

கிழக்கு நகரமான டோப்ரோபிலியா அருகே திடீரென முன்னேறி, குறுகிய நேரத்தில் 10 கி.மீ (ஆறு மைல்கள்) தூரம் அவை முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1442823

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 3 weeks ago
சுமந்திரன்... மைத்திரியின் கூட்டரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் போது மட்டும்... இராணுவத்துடன் தோழில் கை போட்டுக் கொண்டு, "லாவணி" பாடி திரிவாராம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்று, செருப்படி வாங்கி... வீட்டில் குந்தி இருக்கும் போது மட்டும், இராணுவம் கசக்குதாம். இந்தப் புத்தி முன்பு ஏன் வரவில்லை.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 3 weeks ago
ஹர்த்தால் ஒத்திவைப்பு: 18ஆம் திகதியே நடக்கும்! ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால், ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுமந்திரன் அறிவித்துள்ளார். தமிழர்களின் தாயகமான வடக்கு - கிழக்கில் நிலைகொண்டுள்ள அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்றும், முத்துஐயன் கட்டுப் பகுதியில் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்ததாக் கூறப்படும் இளைஞரின் இறப்புக்கு நீதிகோரியும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஹர்த்தாலை நடத்துவதற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதியன்று மன்னார் மடுத்திருத்தலப் பெருவிழா நடைபெறவுள்ளது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் திருவிழா நாளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு பல தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக, ஹர்த்தாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மன்னார் மறைமாவட்டம் வெளிப்படையாக அறிவித்தது. அத்துடன், நல்லூர் உற்சவத்தைக் காரணமாகக் குறிப்பிட்டும், ஹர்த்தாலை பிறிதொரு தினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, ஹர்த்தால் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/ஹர்த்தால்_ஒத்திவைப்பு:_18ஆம்_திகதியே_நடக்கும்!#google_vignette

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

2 months 3 weeks ago
புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய adminAugust 12, 2025 புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா். காவல்துறை மா அதிபா் பிரியந்த வீரசூரியவை நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில் பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/219167/

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

2 months 3 weeks ago

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

adminAugust 12, 2025

veera-sooroya.jpg

புதிய  காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளாா்.  காவல்துறை மா  அதிபா் பிரியந்த வீரசூரியவை  நியமிக்குமாறு  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு  அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த நவம்பர் 2023 ம் ஆண்டு முதல் பதில் பொறுப்பில்   பணியாற்றி வருகின்ற வீரசூரிய இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபா் என்பது குறிப்பிடத்தக்கது

https://globaltamilnews.net/2025/219167/

மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்!

2 months 3 weeks ago
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் இயங்கும் - அமைச்சர் நம்பிக்கை adminAugust 12, 2025 யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க, தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க , நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள். இக்கலந்தரையாடலில் முன்னதாக வரவேற்பு உரையாற்றிய மாவட்ட செயலர், மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளது. யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும். இதனை மீள ஆரம்பிப்பதன் ஊடாக விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அமைச்சர் முன் வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடவே யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுகிறது. அதில் 14 இயங்கி வருகிறது. வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை. இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை. பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுகிறது. அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை. இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் அதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலுக்கு முன்னராக அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/219192/

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்

2 months 3 weeks ago
சுமந்திரன் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டு, தனது மூக்கை அறுத்துக் கொள்வதுதான் வழமை. அதில்... செல்வநாயகம் காலத்து அரதப் பழசான கடையடைப்பை தூசிதட்டி எடுத்து, இப்போ செய்ய முற்படுகின்றார். அதற்கு மக்களின் ஆதரவு இல்லை என்று இப்போதே தெரிந்து விட்டது. சுத்துமாத்து சுமந்திரன் புதிதாக சிந்தித்து, கீழ் வரும் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும். 1) தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தல். 2) சாகும் வரை உண்ணா விரதம். 3) பெற்றோல் ஊத்தி தீக்குளித்தல். போன்றவற்றை செய்தால்... மக்களின் அமோக ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு. 😂 🤣