Aggregator

ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் - ஐ.நா செயலாளர் நாயகம் கடும் எச்சரிக்கை

2 months 3 weeks ago

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 12:28 PM

image

ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார்.

மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வடிவங்களில் ஈடுபடுவதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்த அடுத்த வருட அறிக்கையில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார்.

"ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள்  பிறப்புறுப்பு வன்முறை, நீடித்த கட்டாய நிர்வாணம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இழிவான முறையில் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆடைகளை அவிழ்க்கும் தேடல்கள் போன்ற பாலியல் வன்முறையின் வடிவங்களைக் குறிக்கின்றன" என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்க மறுத்துள்ளதால் இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் முறைகள் போக்குகள் மற்றும் மற்றும் திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து உறுதியாக உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து வகையான பாலியல் வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222475

பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: பிரியங்கா காந்தி

2 months 3 weeks ago
12 AUG, 2025 | 04:13 PM இஸ்ரேலிய அரசால், பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அதோடு, நூற்றுக்கணக்கானவர்களை இஸ்ரேல் பட்டினியால் கொன்றுள்ளது, இதில் பலர் குழந்தைகள். மேலும், பல லட்சம் பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் மரணத்தை நெருங்கும் அபாயம் உள்ளது. இந்தக் குற்றங்களை மவுனமாக செயல்படுத்துவது மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பதும்கூட ஒரு குற்றமாகும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" என கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், "அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஐந்து பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது, பாலஸ்தீன மண்ணில் நிகழ்ந்துள்ள மற்றொரு கொடூரமான குற்றமாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத தைரியத்தை, இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒன்றும் செய்ய முடியாது. ஊடகங்களில் பெரும்பாலானவை அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்கும் அடிமைப்படுத்தப்பட்ட உலகில், இத்தகைய துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டி உள்ளன. அவர்கள் சாந்தியடையட்டும்" என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222413

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

2 months 3 weeks ago
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை உலகின் பல நாடுகளில் உள்ள தமிழர் வித்தியாசம் வித்தியாசமான நகையுடன் போகினம் ...அப்ப பல பாகங்களில் இருந்து வருன் திருடர்கள்...வந்தால்தானே அந்த நாகரீகங்கள் பல இடமும் பரவும்... கட்டண பகுதிக்கு..போக வாடகை வான்சாரதி விடமாட்டார் ...அவர் தனக்கு கமிசன் உள்ள் ஊத்தைக் கடயில்தான் நிறுத்துவார்..அந்த கக்கூசுகளுக்குள் போறவேளை காடு சுகாதாரம் ...நானும் அனுபவப்பட்டனான்

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை

2 months 3 weeks ago
13 AUG, 2025 | 05:08 PM வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர். தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர். எவ்வாறு விவசாயம், பண்ணனை, வியாபாரங்கள் நடாத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது ? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும். அதேவேளை, அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து அம்பது வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222516

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் உரிமையாளர்கள் கோரிக்கை

2 months 3 weeks ago

13 AUG, 2025 | 05:08 PM

image

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்  புதன்கிழமை (13)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர்.

தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர். 

எவ்வாறு விவசாயம், பண்ணனை, வியாபாரங்கள் நடாத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது ? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும். 

அதேவேளை, அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து அம்பது வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/222516

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து” - இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

2 months 3 weeks ago
13 AUG, 2025 | 05:02 PM ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று புதன்கிழமை (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்திருந்தது. குறிப்பாக இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது. இலங்கை வங்கியின் நிர்வாகமும் இயக்குநர்கள் குழுவும் ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையை குறைக்கவும், நிதி அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிதி துணை அமைச்சர்கள் இருவரும் எட்டிய ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் நிதி அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கிலேயே இருக்கின்றது. வாக்குதுதிகள் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஊக்கத்தொகையில் நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்தை வலுயுறுத்துகின்றோம். துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டியிருந்தது. ஆனாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது அந்தவகையில் அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்." எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222511

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சும் அரச பொறிமுறையை நிறுத்து” - இலங்கை வங்கி ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போரட்டம்!

2 months 3 weeks ago

13 AUG, 2025 | 05:02 PM

image

ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று புதன்கிழமை (13) மதியம் 12.30 மணியளவில் யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை மூடி, அனைத்து பரிவர்த்தனைகளிலிருந்தும் விலக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. 

அத்துடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எதிர்வரும் காலத்தில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும்  இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்  கருத்து தெரிவிக்கையில்,

"கடந்த 2024 ஆம் ஆண்டு வரலாற்றில் இலங்கை நிறுவனம் ஒன்று பதிவு செய்த மிகச் சிறந்த மற்றும் மிகப்பெரிய இலாபமான 107 பில்லியன் ரூபாயை இலங்கை வங்கியால் பதிவு செய்திருந்தது.

குறிப்பாக இலங்கை வங்கி ஈட்டிய இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது. 

இலங்கை வங்கியின் நிர்வாகமும் இயக்குநர்கள் குழுவும் ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகையை குறைக்கவும், நிதி அமைச்சகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் நிதி துணை அமைச்சர்கள் இருவரும் எட்டிய ஒப்பந்தங்களை செயல்படுத்தவும் நிதி அமைச்சகம் இன்னும் நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்கிலேயே இருக்கின்றது.

வாக்குதுதிகள் வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்துவிட்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஊக்கத்தொகையில் நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. 

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்த நாங்கள் அரசாங்கத்தை வலுயுறுத்துகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்க வேண்டியிருந்தது. 

ஆனாலும் இன்றைய சூழ்நிலை இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது

அந்தவகையில் அரசாங்கம்  தீர்வுகளை வழங்கவில்லை என்றால், தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்." எனவும் அவர் தெரிவித்தார்.

IMG-20250813-WA0033.jpg

IMG-20250813-WA0034.jpg

IMG-20250813-WA0035.jpg

IMG-20250813-WA0031.jpg

IMG-20250813-WA0032.jpg

https://www.virakesari.lk/article/222511

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months 3 weeks ago
யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 13 AUG, 2025 | 03:14 PM செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் நடவடிக்கையின் அறிக்கை , மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222489

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் - சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

2 months 3 weeks ago
Published By: RAJEEBAN 13 AUG, 2025 | 02:56 PM செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.) சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை, அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222488

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் - சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

2 months 3 weeks ago

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 02:56 PM

image

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர்  ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.("if they were already dead, the bodies wouldn't be bent," with some of them displaying twisted limbs.)

சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை, அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணிக்கு மிகவும் வலிமிகுந்த அதிர்ச்சிகரமான வரலாறு உள்ளது குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் என யாழ்ப்பாணத்தை தளமாக கொண்ட அடையாளம் ஆய்வு கொள்கை ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அனுஷானி அழகராஜா தெரிவித்துள்ளார்.

அந்த காலத்தில் எங்களின் நண்பர்களின் சகோதரர்கள் தந்தைமார் சகோதரிகள் காணாமல்போனார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் இது நடந்து 25 வருடங்களாகிவிட்டது, இது மிகவும் பழைய காயங்களை கிளறுகின்றது, பாதிக்கப்பட்டவர்களிற்கு மாத்திரமில்லை, முழு சமூகத்திற்கும் முழுயாழ்ப்பாணத்திற்கும், என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222488

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி?

2 months 3 weeks ago
ப்ரவிஸின் சாதனைமிகு சதத்தின் உதவியுடன் ஆஸி. உடனான ரி20 தொடரை தென் ஆபிரிக்கா சமப்படுத்தியது 12 AUG, 2025 | 10:01 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வின், மராரா விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் டிவோல்ட் ப்ரவிஸ் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் 53 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 தொடரை 1 - 1 என தென் ஆபிரிக்கா சமப்படுத்தியுள்ளது. இப் போட்டியில் 22 வயதான ப்ரவிஸ், 41 பந்துகளில் சதம் குவித்தார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டி ஒன்றில் மிகக் குறைந்த வயதில் சதம் குவித்த தென் ஆபிரிக்க வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் டேவிட் மில்லருக்கு அடுத்ததாக வேகமாக சதம் குவித்த இரண்டாவது வீரரானார். டேவிட் மில்லர் 2017ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக 35 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்தார். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது. 56 பந்துகளை எதிர்கொண்ட டிவோல்ட் ப்ரவிஸ் 12 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களைக் குவித்தார். 31 ஓட்டங்களைப் பெற்ற ட்ரைஸ்டனுடன் 4ஆவது விக்கெட்டில் 126 ஓட்டங்களை ப்ரவிஸ் பகிர்ந்தார். பந்துவீச்சில் பென் த்வாஷுய்ஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இதில் டிம் டேவிட் 50 ஓட்டங்க ளையும் அலெக்ஸ் கேரி 26 ஓட்டங்களையும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கோபின் பொஷ் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்வேனா மஃபாக்கா 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: டிவோல்ட் ப்ரவிஸ் https://www.virakesari.lk/article/222442

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

2 months 3 weeks ago
சாரத்துக்கும் சாராயத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? சாராயம் சாரத்தையும் அவிழ்த்துவிடும் பிரியரே, பின்பு பொத்திக்கொண்டுதான் ஓடவேண்டும். அனுபவம் இருந்தால் எழுதலாம் வாசிக்க மறுப்பில்லை.

வோசிங்டனின் பொலிஸ் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் டிரம்ப் - குற்றச்செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை என தெரிவிப்பு

2 months 3 weeks ago
12 AUG, 2025 | 01:21 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார். வோசிங்டனின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை மீறி டிரம்ப் இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன. வோசிங்டனில் சட்டஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகரத்தை மீட்பதற்கு தனது நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் தலைநகரத்தை நாங்கள் மீளப்பெறப்போகின்றோம் குடிசைகளை இல்லாமல் ஆக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயககட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஏனைய நகரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் சிக்காக்கோவிற்கும் இது நடக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. டிரம்பின் நடவடிக்கை சட்டவிரோதமானது என வோசிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222394

வோசிங்டனின் பொலிஸ் பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார் டிரம்ப் - குற்றச்செயல்கள் அதிகரித்ததால் இந்த நடவடிக்கை என தெரிவிப்பு

2 months 3 weeks ago

12 AUG, 2025 | 01:21 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோசிங்டன் டிசியின் பொலிஸ்பிரிவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன் தலைநகரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தேசிய காவல் படையினரை ஈடுபடுத்தியுள்ளார்.

வோசிங்டனின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை மீறி டிரம்ப் இவ்வாறு செயற்படுவது குறித்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

வோசிங்டனில் சட்டஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நகரத்தை மீட்பதற்கு தனது நடவடிக்கைகள் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எங்கள் தலைநகரத்தை நாங்கள் மீளப்பெறப்போகின்றோம் குடிசைகளை இல்லாமல் ஆக்குவோம்  என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயககட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஏனைய நகரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவேன் சிக்காக்கோவிற்கும் இது நடக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

டிரம்பின் நடவடிக்கை சட்டவிரோதமானது என வோசிங்டன் டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/222394

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

2 months 3 weeks ago
கட்டண கழிப்பிடத்தில்…. காசு கொடுத்து, சிறுநீர் கழிக்க மனமில்லாமல், காட்டுப் பக்கம் ஒதுங்கியவருக்கு.. ஐந்து பவுண் சங்கிலியை பறி கொடுக்க வேண்டி வந்து விட்டது. 😂 பிற்குறிப்பு: இலங்கையில் ஒரு பவுண் (270,000) இரண்டு லட்சத்து எழுபதினாயிரம் ரூபாய். 5 * 270,000 = 13,50000 பதின்மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் நட்டம். 🤔

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா - ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை

2 months 3 weeks ago
காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் நிலையில் பெஞ்சமின் நெட்டன்யாகு - அவுஸ்திரேலிய பிரதமர் 12 AUG, 2025 | 12:06 PM காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடியை மறுதலிக்கும் மனோநிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு காணப்படுகின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக ஏற்பட்ட விரக்தியே பாலஸ்தீன அரசை அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கீகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நான் இஸ்ரேலிய பிரதமருடன் மீண்டும் பேசினேன், அவர் பொதுவெளியில் தெரிவித்ததையே என்னிடம் தெரிவித்தார், அது அப்பாவி மக்களிற்கு ஏற்படுத்தப்படும் தாக்கங்களை மறுப்பதாக காணப்படுகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார். https://www.virakesari.lk/article/222388

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு - வைத்தியர்கள் சந்தேகம்!

2 months 3 weeks ago
Published By: VISHNU 13 AUG, 2025 | 08:05 PM 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை. குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222526

யாழில் பனையால் விழுந்ததாக கூறி குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு - வைத்தியர்கள் சந்தேகம்!

2 months 3 weeks ago

Published By: VISHNU

13 AUG, 2025 | 08:05 PM

image

12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பனையால் விழுந்ததாக கூறி மயக்க நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்ப்பித்துவிட்டு வைத்தியசாலைக்கு அழைத்து வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மயக்க நிலையில் இருந்து அவர் மீளவில்லை.

குறித்த குடும்பஸ்தரின் தலை மற்றும் ஒரு கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. குறித்த காயம் பனையால் விழுந்ததுபோல் இல்லை என சந்தேகிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/222526

டான்பாஸ் பகுதியை விட்டுக்கொடுக்க மறுக்கும் உக்ரேன் ஜனாதிபதி!

2 months 3 weeks ago
செலன்ஸ்கி பிள்ளையருக்கு காலம் சரியில்லை போல கிடக்கு....😂 இந்தக்காலத்திலை நீதி நேர்மைக்கு காலமில்லை. பெரிய துரைமார் சொல்லுறதும் செய்யிறதும் தான் சட்டம்.

ஊருக்கு... "கொலிடே" போறேன்.

2 months 3 weeks ago
என்னில் அவ்வளவு நம்பிக்கையை வைத்தமைக்கு நன்றி அல்வாயன். 🙏 நான் வாழும் நாட்டில் கூட… தேவையில்லாத ஆடம்பரங்களை செய்வதில்லை. இது @குமாரசாமி , @Paanch அண்ணை ஆகியோருக்கும் தெரியும்.