Aggregator

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 01 / 'அறிமுகம்'

தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) போன்ற இலங்கையின் பண்டைய காலவரிசைப்படி [Sri Lankan chronicles such as The Dīpavamsa, Mahāvaṃsa, Cūḷavaṃsa, and Rājāvaliya] நிகழ்வுகளை பதிவு செய்த புராண நூல்களின் அடிப்படையில், சிங்கள பௌத்தர்கள் தங்களை இலங்கைத் தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற அந்த நூல்களின் வழியாகச், உண்மையை அறிவியல் ரீதியாகவும் சான்றுகள் ரீதியாகவும் அலசி, நியாயமான காரணங்களைக் கண்டறிவதே இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் பல புத்தகங்கள் இன்று இருந்தாலும், நேரத்தையும் இடத்தையும் மிச்சப்படுத்த இந்த மூன்று பண்டைய முதன்மை புத்தகங்கள் மட்டுமே இங்கு கருத்தில் எடுக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் அவையின் தொடர்ச்சியே அல்லது பிரதிகளே, என்றாலும் சில சில கூடுதல் சேர்த்தல் அல்லது விடுபட்டலுடன் எழுதப்பட்டவை ஆகும். சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், பிக்குகள் (புத்த குருமார்கள்) மற்றும் கல்வியாளர்கள், 1920 களில் இருந்து, இலங்கையின் உண்மையான வரலாற்றின் நூலே மகாவம்சம் என மேற்கோள் காட்டி, பண்டைய இலங்கைத் தமிழர்களின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள்.

தீபவம்சமும் மகாவம்சமும் விஜயனின் புராண வருகையிலிருந்து மகாசேனன் (பொ.பி. 277 - 304) மன்னனின் ஆட்சியின் இறுதி வரை ஒரே எண்ணிக்கையிலான மன்னர்களை உள்ளடக்கி உள்ளது. என்றாலும் இங்கு சம்பந்தப்பட்ட காலம், மகாவம்சத்தின்படி சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள் மற்றும் தீபவம்சத்தின்படி எண்ணூற்று முப்பத்தேழு ஆண்டுகள் ஆகும். எனவே அந்த வேறுபாடு ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் இராசாவலிய நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், மன்னன் மகாசேனனனின் ஆட்சியின் முடிவு மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்த உள்ளோம்.

சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது மகாவம்சத்தின் தொடர்ச்சி ஆகும். இதுவும் பாளி மொழியில் தான், சிங்கள மொழியைத் தவிர்த்து எழுதப்பட்டது ஆகும். இந்நூல், கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி குறிப்பிடுகிறது. எனவே இங்கு ஆழமாக அது அலசப்பட மாட்டாது. என்றாலும் அது தேவைப்படும் போது அல்லது பொருத்தமானதாக இருக்கும் போது, அதுவும் கவனிக்கப்படும். எனவே தீபவம்சம் மற்றும் மகாவம்சம் மற்றும் அதே காலகட்ட இராசாவலியில் மட்டுமே முதன்மையாக இங்கு கவனம் செலுத்தப்படும்.

தீபவம்சம் கிருஸ்துக்கு பின் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாவது பகுதியில், பெயர் அறியப்படாத எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட நூலென நம்பப்படுகிறது. அதேவேளை, தீபவம்சம் தொகுக்கப்பட்டு சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகாவம்சம், மகாநாமா தேரர் என்ற ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபவம்சம் கொச்சை பாளி மொழியிலும் மகாவம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாளி வசனங்களிலும் உள்ளது. உண்மையில், மகாவம்சமானது தீபவம்சத்தை ஒரு சிறந்த இலக்கிய பாணியுடன், விரிவுபடுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு, மறுசீரமைத்த, அதே நேரம் பல கதைகளை அல்லது வேறுபாடுகளை புகுத்திய ஒரு நூல் என்றும் கூறலாம்.

தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் காணப்படுகிறார். இருப்பினும், மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன், இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப் படுகிறது. என்றாலும் எல்லாளனை, துன்மார்க்கமாக அல்லது தீய நெறியில் ஆட்சி செய்ததாக இராசாவலிய கூறுகிறது. இராசாவலிய சமீபத்திய 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று தொகுப்பாகும். மேலும் இது விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் (கி பி 1701) எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது, சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பகுப்பாய்வின் நோக்கம், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று நாளாகமங்களின் தொனி மற்றும் உள்ளடக்கங்கள் [tone and contents], தீபவம்சத்தில் உள்ள தூய பௌத்த ஆர்வம் அல்லது விருப்பத்திலிருந்து, ராஜவலியத்தில் காட்டப்பட்டுள்ள தமிழர்களின் இறுதி வெறுப்புக்கு எவ்வாறு மாறின என்பதைக் காண்பிப்பதாகும். மகாவம்சம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டு காலப்பகுதியில், அதாவது சுமார் 300 கி.பி. முதல் 1700 கி.பி. வரை, இரண்டிற்கும் இடையில், தொனியின் மாற்றத்தின் அறிகுறியை வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இங்கு எமது முக்கிய நோக்கம், இவ்வற்றை, அங்கு காணப்படும் உண்மையை அலசுவதேயாகும் அல்லது வெளிப்படுத்துவது ஆகும்.

தீபவம்சமும் மகாவம்சமும் அத்தியாயங்களாகவும் அத்தியாயங்கள் செய்யுள் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீபவம்சம் 1-1 தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இன் செய்யுள் வசனம் 1 ஐக் குறிக்கிறது. அது ; "புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததையும், புத்தரின் நினைவுச்சின்னம் மற்றும் அரச மர [போதி மர] கிளை இலங்கைக்கு கொண்டுவந்ததையும், மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடுகளையும், தீவில் நம்பிக்கையைப் பரப்புதலையும், மனிதர்களின் தலைவரின் வருகையையும் அவ்வாற்றின் வரலாற்றையும் நான் முன்வைப்பேன்." என்கிறது. மகாவம்சத்திலும் இதே போன்ற அமைப்பே உள்ளது. இந்த முதன்மை மூன்று நாளேடுகளிலும் அவற்றின் உண்மைத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் அவற்றுக்கிடையேயான ஒவ்வுமை அல்லாது இசைவு ஆகியவற்றினை ஒப்பிடப்பட்டு, வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கீழே என் கருத்துக்களை நேர்மையாக பதியவுள்ளேன்.

Part: 01 / 'Introduction'

Sinhala Buddhists claim themselves as the rightful owners of the island of Lanka based on their ancient chronicles like the Dipavamsa, the Mahavamsa, the Culavamsa, and the Rajavaliya etc. It is intended to go through the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya to see any valid reasons with consistent narratives for the rightful ownership of Lanka to the Sinhala Buddhists alone. There are other books too, but only these three books are considered here to save time and space. The Sinhala Buddhist politicians, monks (bikkhus) and academicians played havoc in the life of Tamils since 1920s citing the Mahavamsa as the beginning and the continuation of the true history of Ceylon. The Dipavamsa and the Mahavamsa cover the same number of kings, from the legendary arrival of Vijaya to the end of the reign of the king Mahasena. The period involved is about eight hundred and thirty five years as per the Mahavamsa and eight hundred and thirty seven years as per the Dipavamsa. Though the Rajavaliya covers longer period, the focus will be limited to the end of the rule of the king Mahasena. The Culavamsa is the continuation of the Mahavamsa and therefore will not be deeply analysed here but we may refer to it when it is necessary or relevant. The focus will be therefore on the Dipavamsa and the Mahavamsa, and the same period in the Rajavaliya.

The Dipavamsa is the earliest and believed to be compiled between the beginning of the fourth century A. D. , and the first third of the fifth century A. D., and by an unknown author. The Mahavamsa is compiled about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa, and Mahanama is the author. The Dipavamsa is in crude Pali language, but the Mahavamsa is in choice Pali verses. The Mahavamsa is conscious and intentional rearrangement of the Dipavamsa with a better literary style with much enlarged and enriched details, whether factual or not. The important personalities in the Dipavamsa are Devanampiya Tissa and Mahinda Thera. The incomparable monarch as per the Dipavamsa is Elara. However, the prominent personality in the Mahavamsa is Dutthagamani. The Mahavamsa also depicts Elara in excellent terms. The Rajavaliya, however, says Elara ruled wickedly. The Rajavaliya is a very recent compilation, and covers the period from the legendary arrival of Vijaya to the end of the reign of Wimala Dhamma Suriya (1701 A.D.). The aim of the analysis is to show the transition of the tone and contents of the three chronicles of the same period from the pure Buddhist interest or desire in the Dipavamsa to the ultimate hatred of the Tamils shown in the Rajavaliya. The Mahavamsa is falling in between the two over the period of about one thousand and four hundred years, from, say, about 300 A. D. to 1700 A. D.

The Dipavamsa and the Mahavamsa are divided into chapters and the chapters are divided into verses. Two numbers separated by hyphen are used to refer to a particular verse in a particular chapter. Thus, 2-7 makes reference to the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses 36 to 39 of the chapter 4. Dipavamsa 1-1 refers the verse 1 of the chapter 1 of the Dipavamsa; ”I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. Similar reference is adopted for the Mahavamsa too. The Rajavaliya is not in the metric form, and the previously mentioned reference is not applicable.

Summaries of the Dipavamsa, the Mahavamsa and the Rajavaliya are given separately as Appendixes to this chapter, which may be referred for specific and greater detail. All the three chronicles are compared, contrasted and commented below for their truthfulness, the historical value, and the consistency among them.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 02 தொடரும் / Will follow

507978314_10229551776681551_422240180711

505345800_10229551774201489_678869513080

506645763_10229551775641525_414755778787

506638659_10229551774921507_580485736677


ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
நாட்டை கட்டியெழுப்ப விரும்புவோரை வரவேற்கிறார், தன் நாட்டுக்கு திரும்பிய வயோதிபரை கைது செய்கிறார். இவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

3 months ago
எப்படி இருந்த அம்மையார்! முன்னர் கார்ட்டூன் வையும் மதன் என்பவர் ஒரு சித்திரத்தில் ராஜீவ் காந்தி முகத்தினை இந்திய வரைபடத்தில் போட்டு அதனில் உள்ள ஒவ்வொரு மானிலங்களை வெடிப்பு போல கோடுகளால் காட்டி ராஜீவ் தோற்றால் இந்தியா துண்டு துண்டாகிவிடும் என்பது போல போட்டிருந்தார். இப்போது காங்கிரஸை விட அதிக தேசியம் பேசும் தீவிர மதவாத வலதுசாரி கட்சியான பி ஜெ பி அந்த இடத்தினை எடுத்துவிட்டது. நலம்பெற்று மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றவேண்டும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள்/அரச தலைவர்கள் எல்லோரும் என்ன செய்கின்றார்கள்? அவர்களும் ஆயுதத்தை தானே கையில் எடுக்கின்றார்கள்? அவர்களும் பதவிக்கு வந்த பின் தாம் நினைத்ததை தானே செய்கின்றார்கள். இதில் சர்வாதிகார அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்கும் என்ன வேறுபாட்டை உங்களால் காண முடிகின்றது? ஜனநாயக நாடுகளான பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி எதை செய்கின்றனவோ அதையே நீங்கள் குறிப்பிட்டவர்களும் செய்கின்றார்கள். ஈரான் பலஸ்தீனத்தை ஆதரித்துத்தான் இஸ்ரேலுடன் போர் தொடுக்கின்றது என்பதை உங்கள் ஆருயிர் பிரான்ஸ் அண்ணனுக்கு தெரிவித்து விடுங்கள்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
தெம்பா பவுமாவும் ரிசர்வேசனும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க ஆடவர் அணி ஒரு ஐசிசி கோப்பையை வென்றெடுத்துள்ளது. அதிலும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக டெஸ்ட் சாம்பியன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த வெற்றிக் கோப்பையை தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா பெறும் போது உள்ளபடி நம்மில் பலரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்திருப்போம். காரணம் தென் ஆப்பிரிக்காவில் கருப்பினத்தவர் ஒருவர் - கேப்டனாக இருந்து கோப்பையை வெல்வார் என்று சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு அங்கு மாத்திரம் இல்லை உலகில் யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென் ஆப்ரிக்காவின் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்து அது அடைந்து வந்துள்ள மாற்றங்களை உள்ளடக்கி நோக்கினால் இன்று நிச்சயம் அதன் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்பட வேண்டிய நாள் என்றால் அது மிகையாகாது. எப்படி பன்னெடுங்காலம் கிரிக்கெட் பேட்டையே தொடக்கூடாது என்று தீண்டாமை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட இனத்தில் இருந்து தலைவன் தோன்றி இன்று கோப்பையை கைப்பற்றினான் என்பது திரைப்படமாக எடுக்க வேண்டிய கதை. ஆம்... தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ரிசர்வேசன் எனும் கோட்டா முறை உண்டு. ஒரு சீசன் கிரிக்கெட் விளையாட அறிவிக்கப்படும் 15 பேர் கொண்ட அணியில் ஐந்து பேர் - வெள்ளையரும் மீதமுள்ள ஆறு பேர் - PEOPLE OF COLOUR( கலப்பு இனத்தவரும்) , BLACKS (கருப்பு நிறத்தவர்களுக்கும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு பேரில் இரு இடங்கள் கருப்பு நிறத்தவர்களுக்கு என்று பிரத்யேகமான இடங்களாகும். பொதுவாக மேற்கூறிய செய்தியைப் படிக்கும் போது என்ன எண்ணம் தோன்றுகிறது??? என்னங்க இது விளையாட்டுல எதுக்குங்க இது மாதிரி கோட்டா/ரிசர்வேசன் சிஸ்டம்... நல்லா திறமையா விளையாடுறவங்கள வச்சு டீம் உருவாக்கி ஜெயிக்கிறது தானங்க முக்கியம்... இப்படித்தானே தோன்றுகிறது நண்பர்களே... தங்களுக்கு தோன்றும் எண்ணம் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கிருந்த எண்ணமும்... அப்போது நான் மூன்று பதங்கள் குறித்து அறிந்திராதப் பேதையாக இருந்தேன் முதல் பதம் சமூக நீதி (SOCIAL EQUITY) இரண்டாவது பதம் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ( INCLUSIVENESS) மூன்றாவது பதம் முறையான/சமமான/ சரியான பிரதிநிதித்துவம் ( EQUAL REPRESENTATION) தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியில் ஏன் கோட்டா சிஸ்டம் இருக்கிறது? என்பதை அறிய அந்த நாட்டில் நிலவிய கருப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் எதிரான அடக்குமுறை ஒடுக்குமுறை நிறைந்த அபார்தைடு ( APARTHEID) முறை குறித்து அறிய வேண்டும். கல்வி பொருளாதாரம் கலை / இலக்கியம்/ விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் கருப்பு நிறத்தவர்கள் வெள்ளையர்களால் அடக்குமுறைக்கு உள்ளாகி நெடுங்காலம் அவதிக்குள்ளாகினர். இதனால் அவர்களுக்கு முறையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பயிற்சி கிடைக்கவில்லை.. பொருளாதார பின்புலம் இல்லை. கல்வி இல்லை. இதையும் மீறியும் அதீத திறமை கொண்டு வெளியே வந்தாலும் அணியில் இடம்பெற்றாலும் அங்கும் தீண்டாமை / இன வெறுப்பு / வாய்ப்பு வழங்காமை / இருட்டடிப்பு ஆகியவற்றை சந்தித்தனர் இதற்கு மகாயா நிட்டினியின் பேட்டியே சாட்சியங்கள். மேற்கூறிய நிறவெறிக் கொள்கைகளை தென் ஆப்ரிக்க வெள்ளையரால் நிர்வகிக்கப்பட்ட அரசாங்கம் தனது அங்கீகரிக்கப்பட்ட சட்டமாக நிறைவேற்றி அபார்த்தைடு என்று கடைபிடித்து வந்தது. இதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்தது. ஐநாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 1974 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டது. மீண்டும் தென் ஆப்ரிக்காவில் திரு நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக ஜனநாயகம் மலர்ந்ததும் 1994 ஆம் ஆண்டு மீண்டும் ஐநாவில் இணைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றை அறிந்தால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் ஏன் ரிசர்வேசன் இருக்கிறது என்பதும் புலப்படும். அதன் நியாயங்களும் விளங்கும். அந்த அணியின் முன்னாள் கோச் ராபர்ட் அவர்களிடம் இந்த நிற பேதம் குறித்துப் பேட்டி காண்கையில் "வெற்றி தான் முக்கியம்... பல்வேறு இனங்களில் திறமையான வீரர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது" என்றார். என்னைப் பொருத்தவரை மனிதன் ஒரு சமூக விலங்கு சமூகத்துடன் இணைந்து பழகி அதன் மூலம் இன்பத்தைத் துய்க்கப் பழகி அதன் மூலம் நாகரீகம் அடைந்தவன். இதில் சா*தி மத இன மொழி நிற ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதையும் தீண்டாமை எண்ணங்கள் இருப்பதையும் நாம் ஏற்கிறோம். மேற்கூறிய விசயங்களால் வாய்ப்புகள் கிடைப்பதிலும் வாய்ப்புகளை ஒடுக்குவதிலும் பன்னெடுங்காலம் கழிந்திருப்பதையும் அறிய முடிகிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை இயன்ற அளவு செப்பனிட்டு அவரவர்க்குரிய வாய்ப்புகளையும் பிரிதிநிதித்துவத்தையும் வழங்கும் முயற்சியே "ரிசர்வேசன்" இங்கு நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் மிருகங்களின் எச்சங்கள் ஒளிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை வெளியில் மறைத்தாலும் உள்ளே இருப்பது அவ்வப்போது வெளி வரத்தான் செய்யும். இது இயற்கை. உலகின் பெரும் புரட்சிகளும் போர்களும் அடுத்தவனுடைய வாய்ப்பையும் பிரிதிநிதித்துவத்தையும் நீண்ட காலம் தொடர்ந்து பறித்து வந்ததாலேயே/பறித்து வருவதாலேயே நடந்திருக்கிறது. எனவே என்னைப் பொருத்தவரை சமூகமாக அதில் பங்கு வகிக்கும் அனைத்து மக்களின் பிரிதிநிதிகள் அனைத்து துறைகளிலும் இருப்பதே முழுமையான வெற்றி.. மாறாக வெறுமனே வெற்றி பெறுவதில் எனக்கு தற்போது அதிக நாட்டம் இருப்பதில்லை. தென் ஆப்ரிக்காவில் பெரும்பான்மை கருப்பு நிறத்தவரும் கலப்பு நிறத்தவரும் என்றால் அவர்களின் பிரதிநிதிகள் அந்த அணியில் இருந்தால் தான் அது என்னைப் பொருத்தவரை சரியான அணி. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ரிசர்வேசன் முறை தென் ஆப்ரிக்காவில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த பல்லாண்டுகளாக தென் ஆப்ரிக்காவால் ஒரு உலகக்கோப்பை கூட பெற இயலவில்லை. அதற்குக் காரணம் கருப்பு நிற வீரர்கள் அல்லர் அவர்களை வெளிக்கொணராத அல்லது அவர்களிடம் தீண்டாமை செய்து சகிப்புத்தன்மையின்றி பேதம் பார்க்கும் வெள்ளையர்களின் குணமே ஆகும். இன்று டெம்பா பவுமா எனும் கருப்பினத்தவர் கேப்டனாக இருந்து இறுதி வரை போராடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளார் என்றால் நிச்சயம் ரிசர்வேசனால் குவாலிட்டி எனும் தரம் குறையாது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இதை உணர்ந்தால் நமக்கு நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் ரிசர்வேசன் முறை குறித்தும் அறிவு தெளிவு ஞானம் கிடைக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவரவர்க்குரிய வாய்ப்பும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு அனைவரின் உழைப்பும் சேர்ந்து கிடைப்பதே மெய்யான வெற்றி மெய்யான வெற்றியே தூய்மையான மகிழ்ச்சி அதுவே பன்முகம் கொண்ட நாட்டின் வளர்ச்சி தென் ஆப்ரிக்காவின் பன்முகத்தன்மையினாலும் பிரிதிநிதித்துவ நடைமுறைகளாலும் கிடைத்த இந்த கோப்பை உண்மையில் மிகவும் வலிமையானது. இந்த வெற்றியில் நாமும் பங்கு பெறுவோம்... தனது பேட்டியில் தனது பாட்டி டெம்பா என்று பெயர் வைத்ததாக கூறினார் அந்த அணி கேப்டன். டெம்பா என்றால் ஹோப்/ நம்பிக்கை என்று ஆப்ரிக்க மொழியில் அர்த்தமாம். ஏலேய் மக்கா எங்கூர்ல கூட நம்பிக்கை இல்லாம இருக்கவன் கிட்ட நாங்க இப்டி தான் சொல்லுவோம் "டேய் கவலைப்படாத டா. தெம்பா இரு. நாங்க இருக்கோம்.. " இங்க தெம்பா என்றால் வலிமை / strength மற்றும் நம்பிக்கை இரண்டையும் குறிக்கிறது . ஆப்பிரிக்க மொழியில் உள்ள பல கூறுகளும் தமிழ் மொழிக் கூறுகளும் ஒன்றாக இருப்பது விசித்திரமில்லை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார் அதையே நானும் வழிமொழிகிறேன்.. நன்றி Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா E-mail

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

3 months ago
விலாசத்தை சொல்லவும். 😎 உக்ரேன் திரியா? 🤣 சோனியா திரியா? 😂 ஈரான் அன்ட் இஸ்ரேல் திரியா? 😁 சீமான் பனைமரம் ஏறின திரி எண்டாலும் ஓகே..😜

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை

3 months ago
என்றாலும்..... காந்தி எனும் மந்திர பெயரை வைத்து அறுவடை செய்பவர்கள்... காந்திக்கும் அவர் பெயருக்கும் சம்பந்தமே இல்லாத சோனியா பிரியங்கா ராகுல் இவர்கள் மட்டுமே. துன்பியல்கள் ஏன் என அரசியல் அனுபவஸ்தர்களுக்கு இன்னும் நிறைய நிறைய விளங்கும்.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
அதுவும் படகு பயண பயணிகளுக்கு உடன் கள்ளை நல்ல விலைக்கு விற்கின்றார்கள், கள்ளை தடை செய்ய மிகவும் தரங்குறைந்த கசிப்பிற்கு ஏழைகள் தள்ளப்படுகின்றார்கள்

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

3 months ago
இப்போதைக்கு கிரிகெட் போட்டி ஒண்டும் இல்லை என்பதால் மிச்சமாகும் நேரத்தை இதில் செலவிட உள்ளேன்🤣

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

3 months ago
மிக தெளிவான கருத்துக்கள்.👍 தமிழ் அரசியல்வாதிகள் தம் பதவிக்காக எந்த சாக்கடையிலும் இறங்குவார்கள். சிங்கள அரசியல்வாதிகள் கட்சி பேதம் மறந்து தம் இனத்திற்காக தோழோடு தோழ் நிற்பார்கள்.

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

3 months ago
இஸ்ரேல் ஈரான் சண்டை பற்றி செய்திகளைப் பார்க்கிறதா / இந்த தமிழர்களின் எதிரி உயிருக்குப் பேராடுவதைப் பார்ப்பதா என்று குழப்பமாக இருக்கிறது.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
தமிழ் நாட்டை தவிர இந்தியாவில் கள் உற்பத்திக்கு தடை இருக்கின்றதா தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை சாராய கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளை ஏன் தடை செய்திருக்கின்றார்கள் என புரியவில்லை. அது மட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் அயலக மாநிலமான கேரளத்தில் கள்ளு என்பது பாரம்பரியமான பானம். இலங்கையில் புகையிலை உற்பத்தியை தடை செய்து விட்டு மேலைத்தேய உற்பத்தியான சிகரெட்டை அனுமதி அளிக்கின்றார்கள். ஏதாவது புரிகின்றதா? ஜேர்மனியில் மருத்துவ கடைகளில் மட்டும் எதுவுமே கலக்காத புகையிலையை வாங்க முடியும். விலை கொஞ்சம் அதிகம்.

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
நாட்டை கட்டியெழுப்பதற்கல்ல.... புத்த விகாரைகளை கட்டியெழுப்புவதற்கு முன் வாருங்கள் என மாற்றுங்கள். இலங்கையில் தானாக விளையும் உப்பு காலநிலை கொண்ட நாடு. அதை இனவாத புத்தியில் ஒதுக்கி விட்டு இன்று நாடு நாடாக கையேந்திக்கொண்டு திரிகின்றார்கள். இனவாதத்தை தவிர... சூடு சுரணை இல்லை. வெட்கம் இல்லை.மனிதாபிமானம் இல்லை,உலக நியதி சட்ட திட்டங்கள் தெரியாத இனம் என்றால் அது சிங்களம்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months ago
யார்யா மெனக்கட்டு இப்படி மணிரத்தினத்தோட... எல்லா படத்தையும் ஆராய்ச்சி பண்ணி எழுதுனது...!?😳😳எனக்கே உன்ன பாக்கணும் போல இருக்குயா...😍😍 தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌனராகம் 😞😞 பத்தாவது படிக்கிற ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன் 😜😜 ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி_நட்சத்திரம் 😏😏 இன்னொருத்தர் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி 😳😳 ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா_திருடா 😝😝 தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா ❤❤ தாலி கட்டி அவரவர் வீட்டில் வாழ்ந்தால் - அலைபாயுதே😣 இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன் 😠😡 தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல் 😁😁 தாலி கட்டாமல் ஊருக்கு தெரிய வாழ்ந்தால் - ஓ_காதல்_கண்மணி 😏😏 தாலி கட்டாமல் குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னா - காற்று வெளியிடை 😒😏 ஒரு பொண்ண( Trisha) அப்பனும் மவனும் கரெக்ட் பண்ண ஆசை பட்டா-Thug life😠💦 அப்போ ஆரம்பத்துல இருந்தே இந்த ஆளு தாலி சென்டிமென்ட் படம் எடுக்கிறேன்னு.. இப்படித்தான் படம் எடுத்துக்கிட்டு இருக்காரா?

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். - திருக்குறள் அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! —புலியூர்க் கேசிகன் உரை

டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி.. இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட்!

3 months ago
அட நாசமறுப்பு இதுவே விசயம்.🤣 ஒரு சில பொது இணைய வெளிகளுக்கு போனால் வில்லங்கம் வில்லங்கமாக எழுதி தள்ளீனம்...ஏன்,என்னடா எண்டு யோசிச்சன்? 😂 எனக்குள் உறைந்த இரத்தம் உயிர்க்கின்றது. 😱

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

3 months ago
எங்கடை ஆக்கள் 40,50 வருசத்துக்கு முதல் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை,உணவுகளை பார்த்து , அறிந்து வாழ்ந்தாலே டாக்குத்தர்மாரின்ர அறிவுரையும் தேவையில்ல.மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. இது எனது சொந்த அனுபவமும் சொந்த கருத்தும்.கண்ட கண்ட களிசறைகளை சாப்பிட்டு வருத்தங்களை தேடிக்கொண்டவன் எண்ட முறையில சொல்லுறன். 😎

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்

3 months ago
தமிழர்களுக்கே தமிழ் துரோகி முத்திரை குத்திவிடக்கூடிய கில்லாடி இவர்

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

3 months ago
பெரியோர் வந்து விளக்கம் தரட்டும்💡 சுகர் வருத்தம் உள்ளவர்களே மாம்பழம் தவிர்த்து மற்ற பழங்கள் சாப்பிடுகின்றனர் கண்டிருக்கின்றேன் சொக்லேற் கேக் போன்ற சுவையானவற்றுக்கு தான் தடை உள்ளது