வண்ணத் திரை

பறந்து போ விமர்சனம்: மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு... நம்மையும் பறக்க அழைக்கும் ராமின் உலகம்!

20 hours 13 minutes ago

சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன.

அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார்.

பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன.

இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோகுலும் அன்பும் ஒரு சின்ன பைக் ரைடுக்குக் கிளம்புகிறார்கள்.

இந்தப் பயணத்தில் பெற்றோருக்குள்ளும், அன்புக்குள்ளும் நிகழும் நேர்மறை மாற்றங்களே ராம் இயக்கியிருக்கும் 'பறந்து போ'.

தன் வழக்கமான அப்பாவித்தனமான மேனரிஸத்தோடும், ஒன் லைன் கவுன்ட்டர் காமெடிகளோடும் உலாவும் சிவா, ஆங்காங்கே வரும் உணர்வுபூர்வமான தருணங்களையும் முதிர்ச்சியுடன் அணுகி, தன் கதாபாத்திரத்தை அழுத்தமாகப் பதிய வைக்கிறார்.

சிவாவின் கவுன்ட்டர்களைக் கதையிலிருந்து விலக வைக்காத வகையில், நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

மகன் மீதான பாசம், கணவன் மீதான காதல், பொருளாதாரம் கொடுக்கும் அழுத்தம், தங்கை மீதான ஏக்கம் என உணர்வுகளின் வெளியில் பறக்கும் குளோரி கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் கிரேஸ் ஆண்டனி. இறுதிக்காட்சியில் லூட்டியடித்து சிரிப்பலைகளையும் அள்ளுகிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சிறிது மீறினாலும், ஓவர்டோஸ் மோடுக்குப் போய்விடும் அன்பு கதாபாத்திற்குத் தேவையான கச்சிதமான நடிப்பை மிதுல் ரயானிடமிருந்து வாங்கியிருக்கிறார் இயக்குநர். நகைச்சுவை தாண்டி, எமோஷனல் காட்சிகளிலும் நம் அன்பைப் பெறுகிறார் இந்த அன்பு!

அஞ்சலி, அஜு வர்கீஸ் ஆகியோர் குறைந்த திரை நேரத்திலும் கவனிக்க வைக்கிறார்கள். விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பயணங்களில் நிலவியலையும், எமோஷனல் தருணங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பீல் குட் மீட்டரிலிருந்து விலகாமல் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.

இதற்கு மதி வி.எஸ்-ஸின் படத்தொகுப்பும் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறது. ஆங்காங்கே வரும் 'டிரோன் ஷாட்'களும் இந்தப் பறத்தலுக்குச் சிறகை வீசியிருக்கின்றன.

சந்தோஷ் தயாநிதி இசையில் மதன் கார்க்கி வரிகளில் குழந்தைகளின் உலகத்தையும், அவர்களின் பார்வையையும் பேசும் பாடல்கள் குழந்தைகளின் மொழியிலேயே படம் நெடுகிலும் திரைக்கதையோடு பிணைந்து, கதைக்கருவிற்குக் கைகொடுத்திருக்கின்றன.

இப்பாடல்களுக்கு இடையில் ஆங்காங்கே தென்படும் மேகக்கூட்டம் போல் வரும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையில் குறையில்லை.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

சமகால குழந்தைகளின் உலகம், அவர்களுக்குள் இருக்கும் சிக்கல்கள், அவற்றைப் பெற்றோர்கள் அணுகும் முறையிலிருக்கும் சிக்கல்கள் போன்றவற்றை எமோஷனலாகவும், காமெடியாகவும் பேசியபடி தொடங்குகிறது திரைக்கதை.

அச்சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள், கிளைக்கதைகளின் உதவியோடு விவாதிக்கிறது திரைக்கதை.

பரபரப்பு, திருப்பங்கள் இல்லாமல், நேர்க்கோட்டில் நிதானமாகப் பயணிக்கும் திரைக்கதை, காமெடி, எமோஷன் என மாறி, மாறி வந்தாலும் அழுத்தமாகவே நகர்கிறது.சிறுவனின் சேட்டைகள், அதனால் அல்லாடும் தந்தை எனக் காட்சிகள் வரிசைக்கட்டுகின்றன. இவற்றில், சிறுவனின் சேட்டைகளில் அதீத தன்மை எட்டிப்பார்க்காத வகையில், நியாயமான காரணங்களும் அக்காட்சிகளினூடே இடம்பெற்றிருக்கின்றன.

இயக்குநர் ராமின் 'அன்பு சூழ்' உலகமும், மனிதர்களும் திகட்டாத வகையில் கச்சிதமான அளவில் 'நின்றுவிடுவது' படத்திற்குப் பலம்.

கோகுலின் தந்தை, கோகுல், அன்பு என மூன்று தலைமுறையினருக்குள் நடக்கும் உரையாடல் காட்சி கலகலப்பு!

காக்ரோச் எனத் தன்னை அறிமுக செய்துகொள்ளும் குட்டிக் குழந்தையிடமிருந்து பெறப்பட்ட நடிப்பில் க்யூட்னஸ் ஓவர் லோடட்!

தண்ணீர் கேன்கள் இருக்கும் கைப்பையை வைத்துக்கொண்டு, அதைத் திறந்துகூடப் பார்க்காமல், தாகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிவா, ஆண்களின் அவசரகதி உலகைப் பிரதிபலிக்கிறார்.

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

Parandhu Po review | பறந்து போ விமர்சனம்

அதே சமயம், சில காட்சிகளில் எதார்த்தத்தை மீறும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியானது அதன் சுவாரஸ்ய எல்லையை மீறி, மலை ஏறிக்கொண்டே போவது அயற்சியை வர வைக்கிறது.

இறுதிக்காட்சியில் ஈழைநோய் உள்ள குளோரியிடம், இன்ஹேலரைத் தூக்கிப் போடச் சொன்னதைத் தவிர்த்திருக்கலாம். கிராம வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது போல நீட்டி முழக்கினாலும், இறுதியில் அதையும் விமர்சனத்திற்குள்ளாக்கியது சிறப்பு!

நவீன பொருளாதார சூழலும், நகரமயமாக்கலும் தரும் அதீத அழுத்தங்களால் பெற்றோர் மீது திணிக்கப்படும் சுமைகள்... அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படும் குழந்தைகள் என்ற பிரச்னையை பீல் குட் படமாக உரையாடி, நம்மையும் குழந்தைகளின் உலகில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'பறந்து போ'.

Parandhu Po review; பறந்து போ விமர்சனம்; மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் ராம்; பறந்து போ எப்படி இருக்கு?

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி?

20 hours 14 minutes ago

1368096.jpg

சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம்.

மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது.

மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே பார்த்து வரும் மகன் பிரபு (சித்தார்த்) கல்லூரி முடிந்து ஓர் ஆலையில் வேலைக்கு செல்கிறார். அண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கும் மகள் ஆர்த்தி (மீதா ரகுநாத்). இப்படி வாழ்நாள் முழுக்க ‘அட்ஜஸ்ட்’ செய்து வாழும் இந்த குடும்பத்தின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே ‘3பிஹெச்கே’ படத்தின் திரைக்கதை.

‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீகணேஷின் மூன்றாவது படம். மிக எளிமையான ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை முடிந்தவரை அலுப்பு தட்டாமல் பல இடங்களில் நெகிழ வைத்தும், சுவாரஸ்யத்துடனும் தந்திருக்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே தேவையற்ற அறிமுகங்கள் இன்றி கார்த்தியின் வாய்ஸ் ஓவரில் ‘சிம்பிள்’ ஆக கதைக்குள் நுழைந்த விதம் சிறப்பு. அடுத்த காட்சிகளில் கதையின் முக்கிய நோக்கம், கதாபாத்திரங்களின் தன்மைகள் ஆகியவை ஆடியன்ஸின் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே படத்துடன் மிக இலகுவாக ஒன்றவைத்து விடுகிறது.

லேசாக பிசகினாலும் சீரியல் போல ஆகிவிடக் கூடிய கதைக்களத்தில் கடைசி வரை நெளியவிடாமல் வைத்திருப்பது நடிகர்களின் நடிப்பு. படத்தின் ஹீரோ சந்தேகமே இன்றி சரத்குமார்தான். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனாக மிக இயல்பான நடிப்பு. சொந்த வீடு கனவை எப்போதும் சுமந்து திரியும்போதும், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கி, பின்னர் காலத்தின் கட்டாயத்தால் வேறு வழியின்றி மாற்றத்துக்கு தயாராகும் காட்சிகளில் மனதை கவர்ந்து விடுகிறார்.

17516041881138.jpg

முதல் முழுக்க சரத்குமார் ஆதிக்கம் என்றால் இரண்டாம் பாதி முழுக்க சித்தார்த்துக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. அவரும் தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் எல்லாம் உடலை குறுக்கி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கிறார். ஒவ்வொரு பருவத்திலும் அவரது முகத்திலும், நடிப்பிலும் காட்டும் வெரைட்டி ரசிக்க வைக்கிறது.

’குட் நைட்’ படத்துக்குப் பிறகு மீதா ரகுநாத்துக்கு இது முக்கியமான கதாபாத்திரம். அண்ணனுக்காக தன்னுடைய தேவைகளை குறைத்து கொள்ளும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார். கன்னடத்தில் ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு பி’ படத்தில் நடித்த சைத்ரா மற்றொரு ஆச்சர்யம். சில காட்சிகளே வந்தாலும் நடிப்பில் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார். படத்தில் தேவயாணி கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே கணவருக்கு ஆறுதல் சொல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

படத்தின் இன்னொரு பலம் அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை. நெகிழ வைக்கும் காட்சிகளுக்கு அவரது இசை பெரிதும் கைகொடுத்திருக்கிறது. பாடல்களில் ‘கனவெல்லாம்’, ‘துள்ளும் நெஞ்சம்’ பாடல்கள் சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு நேர்த்தி.

மிடில் கிளாஸ் குடும்பத்தினர் அனைவருக்குமே சொந்த வீடு கனவு இருக்கும்தான். ஆனால் அதற்காக சொந்த வீடு இல்லையென்றால் வாழவே முடியாது என்பதைப் போல குடும்பத்தில் உள்ள அனைவரும் அழுது வடிந்துகொண்டே இருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஒரு காட்சியில் தன் தம்பி சுப்பு பஞ்சுவிடம் சென்று வீடு வாங்க கடன் கேட்கிறார் சரத்குமார். அப்போது ஓர் இடத்தில் சொந்த வீடு தான் மரியாதை என்று ஒரு வசனம் வருகிறது. கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவதில் அப்படி என்ன மரியாதை?

அதே போல தன்னுடைய கனவை எந்நேரமும் தன் மகன் சித்தார்த் மீது திணித்துக் கொண்டே இருக்கிறார் சரத்குமார். இரண்டாம் பாதியில் அதை அவர் உணர்வதை போன்ற காட்சிகளை இன்னும் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கலாம். பெற்றோரின் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து படித்து, அந்த துறையிலேயே வேலைக்கு செல்லும் சித்தார்த் ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வீட்டிலேயே தனக்கு பிடித்த துறையை படித்து வேலைக்கு செல்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம். அந்த காட்சிகளில் எந்தவொரு அழுத்தமும் இல்லை. க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே போவதைப் போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.

மேற்சொன்ன சில குறைகளை தாண்டி எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் மிடில் கிளாஸ் குடும்பங்கள் படும் சிரமங்களை, கனவை நிறைவேற்ற சந்திக்கும் போராட்டங்களை நெகிழ்ச்சியுடன் காட்சிப்படுத்திய விதத்தில் இந்த ‘3பிஹெச்கே’வை வரவேற்கலாம்.

3 BHK விமர்சனம்: சரத்குமார், சித்தார்த் ஆதிக்கத்தில் மிடில் கிளாஸ் வாழ்வியல் அனுபவம் எப்படி? | 3BHK Movie review - hindutamil.in

ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து!

1 week ago

ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து!

28 Jun 2025, 8:00 AM

Kamal Haasan invited

2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்.

மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை, “தமிழின் கலைப் பெருமை. இந்தியாவின் சினிமா பாரம்பரியம். உலக மேடையில் மீண்டும் ஒளி வீசியுள்ளார் கமல்ஹாசன். ஆஸ்கர் விழாவில் இருந்து வந்த இந்த பெருமைமிக்க அழைப்பு, தமிழர் திறமையின் சான்றாகும். அவரின் சாதனைக்கு என் மனமுழுவதும் நெகிழும் வாழ்த்துகள்” என்று பாராட்டியுள்ளார்.

https://minnambalam.com/kamal-haasan-invited-to-join-oscars-committee/#google_vignette

கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும்

1 week 2 days ago

கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும்

சொர்ணவேல் ஜூன் 22, 2025

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
(கவிஞர் கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.எம். சௌந்தரராஜன் பி. சுசீலா, பாசமலர், 1961)

முகவுரை: மெலோடிராமாவின் மேதை ஏ. பீம்சிங்

image-40.jpeg?resize=600%2C341&ssl=1

தமிழ் சினிமாவின் புனித உணர்ச்சிகள் பெரும்பாலும் பெருமழை வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடும் இடங்களில், ஏ. பீம்சிங் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட துயரார்ந்த தாக்கத்துடன் ஒலிக்கிறது. அவர் வெறும் ஒரு இயக்குநர் மட்டுமல்ல, மனித உணர்ச்சிகளின் கட்டிடக் கலைஞர், ஒரு தலைமுறையினரின் மற்றும் அதற்கப்பாலும் உள்ளவர்களின் இதயங்களைத் தொட்ட கதைகளைத் திறம்பட பின்னியவர். அவரது திரைப்படங்கள், சொல்லப்படாத தியாகங்களின் அமைதியான வேதனையிலிருந்து குடும்ப மறு இணைவுகளின் உணர்ச்சிபூர்வமான விடுதலை வரை, பல்வேறு உணர்வுகளுக்கான செல்லுலாய்ட் சாலைகளாக இருந்தன, அவை கூட்டு மனசாட்சியில் அழியாத முத்திரையைப் பதித்தன. அவரது குடும்பத்தை மையமாக கொண்ட திரைப்படங்களின் நீடித்த ஆற்றல், தமிழ் பண்பாட்டின் மீதான அவரது ஆழ்ந்த புரிதலுக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவர் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், துக்கங்கள் மற்றும் தார்மீக சங்கடங்களைப் பிரதிபலிக்கும் கதைகளை, மெலோடிராமாவின் ஆற்றல்வாய்ந்த லென்ஸ் மூலம் விரிவாக்கிக் காட்டினார்.

அக்டோபர் 15, 1924 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் பிறந்த ஏ. பீம்சிங், 1940களின் பிற்பகுதியில் புகழ்பெற்ற கிருஷ்ணன்-பஞ்சு இரட்டையர்களின் கீழ் ஒரு உதவி எடிட்டராக இருந்து பின்னர் தானாகவே ஒரு புகழ்பெற்ற இயக்குநராக உருவான ஒரு சினிமா பயணத்தைத் தொடங்கினார். அவரது இயக்கத்தின் களம் பரந்திருந்தது, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பரவியிருந்தது. 1949 முதல் ஜனவரி 16, 1978 அன்று சென்னையில் அவர் இறக்கும் வரை அவரது வளமான வாழ்க்கை, இந்திய சினிமாவின் “பொற்காலம்” என்று பெரும்பாலும் கொண்டாடப்படும் ஒரு காலகட்டத்துடன் ஒத்திசைந்தது, இது அவர் சிறந்து விளங்கிய பிரமாண்டமான, உணர்ச்சிவெழுச்சி மிகுந்த கதைகளுக்கு குறிப்பாக வளமான காலமாக இருந்தது. பீம்சிங் இந்த பல்வேறு மொழி நிலப்பரப்புகளில் திரைப்படங்களை இயக்கி குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் காட்டினாலும், அவரது கலை ஆன்மா தமிழ் சினிமாவில் அதன் மிக ஆழமான வெளிப்பாட்டையும் நீடித்த பாரம்பரியத்தையும் கண்டது. அவரது மிக முக்கியமான பங்களிப்புகள், குறிப்பாக, மிகவும் கொண்டாடப்பட்ட ‘ப’ வரிசைத் திரைப்படங்கள், தமிழ் கலாச்சார உணர்வுகள் மற்றும் சினிமா மரபுகளில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. சிவாஜி கணேசன், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களுடனான முக்கிய ஒத்துழைப்புகளால் வகைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவில் அவரது விரிவான பணி, அவரது அடையாளத்தின் அடித்தளத்தை உருவாக்கியது. இந்த தமிழ் வெற்றிப் படங்களில் பலவற்றை இந்தியில் வெற்றிகரமாக ரீமேக் செய்யும் திறன் அவரது சினிமா கதைசொல்லலின் பரந்த புரிதலைக் காட்டியது, ஆனாலும் அவரது கதைகளின் தமிழ் இதயமே வலிமையாக துடித்தது, திரைப்பட வரலாற்றில் அவரது தனித்துவமான இடத்தை அது உறுதி செய்தது.

மெலோட்ராமா வகைமையின் கட்டமைப்பு

image-34.jpeg?resize=600%2C384&ssl=1

மெலோட்ராமா: இசையும் கண்ணீரும்

“மிகை நாடகம்” என்று பொதுவாக அறியப்படும் ஒரு கலை வடிவம், மெலோட்ராமா. ஆனால் அதன் பெயரின் வேர்ச் சொற்களைத் தேடிச் சென்றால், அது நம்மை இசையின் மென்மைக்கும் நாடகத்தின் கம்பீரத்திற்கும் அழைத்துச் செல்கிறது. கிரேக்க மொழியில் “மெலோஸ்” எனும் இன்னிசையும், பிரெஞ்சு மொழியில் “டிராம்” எனும் நாடகமும் கைகோத்து உருவானதே “இசை நாடகம்”. இதுவே அதன் பிறப்பின் பொருள்.

உணர்ச்சிகளின் பேரலைகள் கரையை உடைத்து வெளிப்படுவது இதன் இயல்பாக இருந்தாலும், இதன் ஆன்மாவோ இசையால் ஆனது. எனவே, “மிகை நாடகம்” என்பது அதன் குணத்தை விவரித்தாலும், “இசை நாடகம்” என்பதே அதன் வேருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

இந்தியத் திரையின் இதயத் துடிப்பு

இந்தியத் திரையுலகில், குறிப்பாக 1940 முதல் 1970 வரையிலான ஸ்டுடியோக்களின் பொற்காலத்தில், மெலோட்ராமா ஒரு பெரும் சக்தியாகவே தழைத்தோங்கியது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மனித மனங்களின் ஆழமான உணர்ச்சிப் போராட்டங்களையும் தன் கதைக் கருவாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது.

இந்த உணர்ச்சிமிகு நாடகப் பாணியின் மணிமகுடமாக, ஏ. பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் 1959-ல் வெளிவந்த “பாகப்பிரிவினை” திரைப்படம் இன்றும் சாட்சியாய் நிற்கிறது. அது மெலோட்ரமாவின் இலக்கணங்களையும், அதன் கதை மரபுகளையும் தன் ஒவ்வொரு காட்சியிலும் சுமந்து நிற்கும் காலத்தால் அழியாத காவியம்.

மெலோட்ரமாவின் கதைப் பின்னல், ஒரு பிரவாகம் போன்றது. அதன் பாதையை பீட்டர் புரூக்ஸ், லிண்டா வில்லியம்ஸ், இரா பாஸ்கர் போன்ற திரைத்துறை மேதைகள் அழகாக விளக்குகின்றனர்.

மிகை நாடகப் பாங்கும் புனிதத்திற்குப் பிந்தைய உலகமும்: பீட்டர் புரூக்ஸ் பார்வை

பிரபல இலக்கியத் திறனாய்வாளர் பீட்டர் புரூக்ஸ், தனது “தி மெலோடிராமேடிக் இமேஜினேஷன்” (The Melodramatic Imagination) என்ற நூலில், மிகை நாடகப் பாங்கு எனப்படும் சித்தரிப்பு முறைக்கும், சமூகம் சமய நம்பிக்கைகளிலிருந்து விலகிச் சென்றதற்கும் உள்ள ஆழமான தொடர்பை விளக்குகிறார்.

image-39.jpeg?resize=396%2C600&ssl=1

புரூக்ஸின் கூற்றுப்படி, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி மற்றும் அறிவொளிக் காலத்திற்குப் பிறகு, மேற்கத்திய சமூகங்களில் சமயம் மற்றும் கடவுளின் மையப்பங்கு குறையத் தொடங்கியது. இந்தச் சூழலை அவர் “புனிதத்திற்குப் பிந்தைய உலகம்” (post-sacral world) என்று குறிப்பிடுகிறார். அதாவது, எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மதம் இல்லாத ஒரு காலகட்டம்.

இந்த வெற்றிடத்தை நிரப்பும் ஒரு கலை வடிவமாகவே இந்த மிகை நாடகப் பாங்கு உருவானது. முன்பு மதம் போதித்த நீதி, நேர்மை, பாவம், புண்ணியம் போன்ற கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு புதிய தளம் தேவைப்பட்டது. இந்த மிகை நாடகப் பாங்கிலான நாடகங்களும், புதினங்களும் இந்த தேவையைப் பூர்த்தி செய்தன. அவை மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள், திடீர் திருப்பங்கள், மற்றும் தீய சக்திக்கு எதிராகப் போராடும் அப்பாவி கதைமாந்தர்கள் மூலம் நீதியை நிலைநாட்டின.

புரூக்ஸ் இதை “ஒழுக்கத்தின் மறைபொருள்” (moral occult) என்று விவரிக்கிறார். அதாவது, புனித நூல்களுக்குப் பதிலாக, அன்றாட வாழ்வில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான நாடகத் தருணங்களில் இருந்தே நல்லது கெட்டதுக்கான அர்த்தங்கள் தேடப்பட்டன. மிகை நாடகப் பாங்கு, தனது உச்சகட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம், இந்த மறைந்திருக்கும் ஒழுக்க விதிகளைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைத்தது.

சுருக்கமாகச் சொன்னால், பீட்டர் புரூக்ஸின் பார்வையில், இந்த மிகை நாடகப் பாங்கு என்பது வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பான கலை வடிவம் மட்டுமல்ல, அது சமயம் தன் பிடியை இழந்த ஒரு உலகில், ஒழுக்கத்தையும் நீதியையும் கண்டடைய மனித சமூகம் மேற்கொண்ட ஒரு முக்கியமான முயற்சியாகும்.

கட்டமைப்பு: தொடக்கம், நடுப்பகுதி, முடிவு

மெலோட்ராமா தொடக்கத்தில் நிலவும் ஒரு அமைதிப் பூங்காவில் ஆரம்பிக்கிறது. பின்னர், எதிர்பாராத ஒரு புயல் போல சிக்கல்களும் பிரிவுகளும் அந்த அமைதியைச் சிதைக்கின்றன. இறுதியாக, அந்தப் புயல் ஓய்ந்து, நீதி நிலைநாட்டப்பட்டு, உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்து, வாழ்க்கை தன் ஒழுங்கிற்குத் திரும்புவதில் கதை முற்றுப்பெறுகிறது. இந்த அமைதி – சிதைவு – மீட்சி எனும் பயணமே, மெலோட்ரமாவின் அழியா வசியமாகும்.

ஆரம்பம்: ஒரு அமைதி நிலை

image-30.jpeg?resize=600%2C414&ssl=1

மெலோட்ராமா கதை பெரும்பாலும் ஒரு குடும்பம் அல்லது நெருங்கிய சமூகத்திற்குள் மையப்படுத்தப்பட்ட ஆரம்ப அமைதி, மகிழ்ச்சி அல்லது ஸ்திரத்தன்மையை நிறுவுவதன் மூலம் தொடங்குகிறது. “பாகப்பிரிவினை”யில், இந்த ஆரம்ப கட்டம் ஒரு கூட்டு குடும்பத்தின் இணக்கமான சகவாழ்வின் மூலம் தெளிவாக சித்தரிக்கப்படுகிறது, இது இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களைக் கொண்டது, அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டில் திருப்தியுடன் வசிக்கின்றனர். இந்த பிரிக்க முடியாத ஒற்றுமையின் ஒரு ஆற்றல் மிகுந்த குறியீடு படத்தின் ஆரம்பத்தில் வழங்கப்படுகிறது: ஒரு பாரம்பரிய பண்டிகை உணவான பொங்கலை ஒன்று சேர்ந்து அவரவர் குடும்ப பானைகளில் சமைக்க கூடுகிறது. இந்த செயல் அவர்களின் கூட்டு அடையாளம் மற்றும் பரஸ்பர சார்புநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பல மெலோட்ராமாக்களில், ஒரு குடும்ப புகைப்படம் அடிக்கடி இதேபோன்ற குறியீட்டு செயல்பாட்டைச் செய்கிறது, இங்கு தமிழ் பண்பாடு அடையாளமான பொங்கல் மைய குடும்பத்தின் ஆரம்ப மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

இடைப்பகுதி: முறிவு மற்றும் பிரிவினை

இந்த நிறுவப்பட்ட அமைதி ஒரு குறிப்பிட்ட தூண்டுதல் நிகழ்வு அல்லது பெரும்பாலும், ஒரு புதிய, சீர்குலைக்கும் கதாபாத்திரத்தின் வருகையால் தவிர்க்க முடியாமல் சீர்குலைக்கப்படுகிறது. இந்த ஊடுருவல் மோதல்கள், தவறான புரிதல்கள் மற்றும் இறுதியில், குடும்ப அலகிற்குள் ஒரு பிளவு அல்லது முறிவுக்கு வழிவகுக்கிறது. “பாகப்பிரிவினை”யில், இந்த முறிவுக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் மைத்துனர் சிங்காரம் காரணகர்த்தாவாக அமைகிறார். அவரது இருப்பு குடும்ப அமைதியை சிதைத்து, பிரிவினையின் விதைகளை நயவஞ்சகமாக விதைக்கிறது. விளைவுகள் கடுமையாக உள்ளன: மூதாதையர் வீடு பிரிக்கப்படுகிறது, இது சகோதரர்களுக்கு இடையில் திறந்திருக்கும் உணர்ச்சிப் பிளவின் உடல் வெளிப்பாடாகும். இப்போது பிரிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களும் தனித்தனி பானைகளில் பொங்கல் சமைக்கும் உருக்கமான காட்சி, பொதுவாக படத்தின் இடைவேளைக்கு அருகில், பிரிவின் ஆழத்தையும் அவர்களின் முந்தைய ஒற்றுமையின் இழப்பையும் கூர்மையாக குறிக்கிறது.

இறுதி: மறு இணைப்பு மற்றும் தீர்வு

image-26.jpeg?resize=600%2C309&ssl=1

ஒரு மெலோட்ரமாவின் முடிவு பொதுவாக இந்த மோதல்களைத் தீர்ப்பது மற்றும் குடும்பம் அல்லது சமூகத்திற்கான ஸ்திரத்தன்மைக்குத் திரும்புவதை உள்ளடக்கியது. இந்தத் தீர்மானம் பெரும்பாலும் முறிவின் போது அச்சுறுத்தப்பட்ட சமூக அல்லது குடும்ப விழுமியங்களை வலுப்படுத்துகிறது. “பாகப்பிரிவினை”யில், சிங்காரத்தின் தீய எண்ணங்கள் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது, இது கிராமத்திலிருந்து அவரை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கிறது. அவர்களின் பிரிவின் கடுமையான சின்னமாக நின்றிருந்த சுற்றுச்சுவர் இடிக்கப்படுகிறது. குடும்ப நல்லிணக்கத்தின் மறுசீரமைப்பு மீண்டும் ஒன்றுசேர்ந்து தங்கள்  பானைகளில் பொங்கல் சமைக்கும் கூட்டுச் செயலால் குறிக்கப்படுகிறது, இது கதையை முழு வட்டத்திற்கு கொண்டுவருகிறது. இந்த மறு இணைப்பு சில நேரங்களில் மெலோட்ராமாக்களில் பிரிந்த குடும்பம் மீண்டும் ஒரு குழு புகைப்படத்திற்காக கூடுவதன் மூலம் சுட்டப்படுகிறது, இது அவர்களின் புதுப்பிக்கப்பட்ட ஒற்றுமையைக் குறிக்கிறது. இவ்வாறு, “பாகப்பிரிவினை”யில், உணவு, குறிப்பாக பொங்கல் தயாரித்தல் மற்றும் பகிர்தல், குடும்ப ஒற்றுமை, வலிமிகுந்த பிரிவினை மற்றும் இறுதியில், மகிழ்ச்சியான நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியமான தருணங்களைக் குறிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த மற்றும் தொடர்ச்சியான குறியீடாக செயல்படுகிறது.

மேற்பரப்பிற்கு அப்பால்: மெலோட்ரமாவில் ஆழமான கதைகள்

சிறந்த மற்றும் நீடித்த மெலோட்ராமாக்கள் பெரும்பாலும் மேற்பரப்பில் எளிதில் புலப்படும் கதைக்களத்திற்கு அடியில் மற்றொரு, ஆழமான கதை அல்லது ஒரு இணையான கருப்பொருள் பிரச்சினையைக் கொண்டுள்ளன. “பாகப்பிரிவினை” இந்த சிறப்பியல்பு அர்த்த அடுக்குகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மேற்பரப்பு கதை: குடும்ப உணர்ச்சி கொந்தளிப்பு

படத்தின் முதன்மை, வெளிப்படையான கதை ஒரு கூட்டுக் குடும்பம் அனுபவிக்கும் உணர்ச்சி உச்சங்களையும் தாழ்வுகளையும் மையமாகக் கொண்டுள்ளது. இரண்டு சகோதரர்களின் குடும்பங்களுக்கு இடையில் எழும் கருத்து வேறுபாடு, அவர்களின் அடுத்தடுத்த பிரிவினை, இந்த பிரிவினால் ஏற்படும் ஆழ்ந்த துக்கம் மற்றும் சிரமங்கள் மற்றும் அவர்களின் இறுதி, உணர்ச்சிகரமான மறு இணைப்பு ஆகியவற்றை விவரிக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களின் தொடர் மூலம் கதையாடல் நகர்கிறது. இந்த மேற்பரப்பு கதை குடும்ப பிணைப்புகள் மற்றும் மோதல்களின் தொடர்புடைய சித்தரிப்பு மூலம் பார்வையாளர்களை ஈடுபடுத்துகிறது.

ஆழமான கதை: கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் நவீனத்துவத்தின் மோதல்

மேற்பரப்புக் கதைக்கு அடியில், “பாகப்பிரிவினை” ஒரு ஆழமான கருப்பொருளை ஆராய்கிறது: அது பாரம்பரிய கிராமப்புற விழுமியங்களுக்கும் நவீன தொழில்மயமாக்கலின் ஊடுருவலுக்கும் இடையிலான பதற்றம்.

  • கூட்டுக் குடும்பம் ஒரு பாரம்பரியத்தின் சின்னம்: படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கூட்டுக் குடும்பம், வெறும் உறவுகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது ஒத்துழைப்பு, பகிர்தல் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய விவசாய வாழ்க்கை முறையின் அடையாளமாகும். அவர்கள் ஒன்றாகப் பொங்கல் கொண்டாடுவது இந்த ஒற்றுமையின் தெளிவான குறியீடாக அமைகிறது.

  • சிங்காரம் நவீன சுயநலத்தின் பிரதிநிதி: சிங்காரம் கதாபாத்திரம் வெளிப்புற சக்திகளின் தூண்டுதலால் ஏற்படும் எதிர்மறை மாற்றத்தைக் குறிக்கிறது. அவரது பேராசையும் சூழ்ச்சியும் தனிநபர்வாதம் மற்றும் சுயநலம் போன்ற நவீனத்துவத்தின் கூறுகளாகப் பார்க்கப்படலாம். கிராமத்தின் கூட்டு மனப்பான்மையை சீர்குலைத்து, தனிப்பட்ட லாபத்திற்காக குடும்பத்தைப் பிரிக்க அவர் முயற்சிப்பது, பாரம்பரிய சமூக அமைப்பின் மீது நவீனத்துவத்தின் தாக்கத்தைச் சுட்டுகிறது.

  • பிரிவினை ஒரு சமூகச் சிதைவு: குடும்பத்தின் பிரிவினை என்பது வெறும் உணர்ச்சிகரமான நிகழ்வு மட்டுமல்ல. இது பாரம்பரிய கிராம சமூகத்தின் சிதைவையும் குறிக்கிறது. இரு குடும்பங்களுக்கு இடையில் கட்டப்பட்ட சுவர், தனிமனிதர்களிடையே மட்டுமல்ல, சமூகத்திற்குள்ளும் எழும் பிரிவினைகளின் குறியீடாகவும் இருக்கிறது.

  • மீண்டும் இணைதல் பாரம்பரியத்தின் வெற்றி: இறுதியில், குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்து, அந்தச் சுவரை இடிப்பது, சுயநல நவீனத்துவத்தின் மீதான பாரம்பரிய சமூக விழுமியங்களின் வெற்றியைக் குறிக்கிறது. அவர்கள் மீண்டும் ஒன்றாகப் பொங்கல் சமைப்பது, கூட்டு வாழ்க்கை முறை மற்றும் விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது கிராமப்புற சமூகத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சிக்கு அடிப்படையானது என்பதை படம் உணர்த்துகிறது.

இவ்வாறு, “பாகப்பிரிவினை” திரைப்படம் ஒரு குடும்பத்தின் கதையைக் கூறுவது போல் தோன்றினாலும், அது 1950-களின் இறுதியில் இந்தியா எதிர்கொண்ட ஒரு பரந்த சமூக மாற்றத்தை ஆழமாக விவாதிக்கிறது. கிராமப்புற விவசாய சமூகங்கள் நவீனமயமாக்கலின் சவால்களை எதிர்கொண்டபோது ஏற்பட்ட பதட்டங்களையும், பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இப்படம் திறம்பட சித்தரிக்கிறது. இந்த ஆழமான கருப்பொருள் அடுக்குதான் “பாகப்பிரிவினை”யை ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் திரைப்படமாக நிலைநிறுத்துகிறது.

கீழடுக்கிலுள்ள ஆழ்நிலைக் கருப்பொருள்: சிங்காரம் வழியாக நவீனத்துவத்தின் ஊடுருவல்

image-29.jpeg?resize=600%2C319&ssl=1

இந்த கூட்டுக்குடும்ப பிளவின் மேற்பரப்பு கதைக்கு அடியில், “பாகப்பிரிவினை” நவீனத்துவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளில் அதன் பன்முக விளைவுகள் என்ற ஆழ்ந்த மற்றும் பெரும்பாலும் அமைதியற்ற கருப்பொருளைக் கையாள்கிறது. சிங்காரத்தின் கதாபாத்திரம் இந்த ஆக்கிரமிப்பு நவீனத்துவத்தின் ஒரு முக்கிய பிரதிநிதியாக வெளிப்படுகிறது. பரபரப்பான நவீன நகரமான சிங்கப்பூரிலிருந்து அவரது வருகை, பாரம்பரிய கிராம வாழ்க்கையின் நிறுவப்பட்ட தாளகதிகளுக்குள் ஒரு புதிய, மற்றும் சில வழிகளில் அன்னிய, கலாச்சாரத்தின் தலையீட்டைக் குறிக்கிறது. சிங்காரத்தின் மேற்கத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கான கண்மூடித்தனமான பாராட்டு மற்றும் (பெரிய பொருள்சார்ந்த பலன்களை அளிக்காத) இட்லிகளை உழைப்புடன் தயாரிப்பது போன்ற பாரம்பரிய தமிழ் பழக்கவழக்கங்களை கேலி செய்வது, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் ஒரு நுட்பமான ஆனால் தொடர்ச்சியான மோதலை உருவாக்குகிறது. அவரது செயல்களும் அணுகுமுறைகளும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குடும்பத்தின் பழமைவாதக் கொள்கைகளையும் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த ஆழ்ந்த மதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த கீழடுக்கு கதை சிங்காரத்தின் கொடிய திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டு கிராமத்திலிருந்து அவமானகரமாக வெளியேற்றப்படுவதன் மூலம் முடிவுக்கு வருகிறது. இவ்வாறு, எம்.எஸ். சொலைமலையின் திறமையான எழுத்திலும், ஏ. பீம்சிங்கின் உணர்திறன் மிக்க இயக்கத்திலும், மேற்பரப்பு மற்றும் அடித்தள கதைகள் இறுதி காட்சியில் திருப்திகரமாக ஒன்றிணைகின்றன. இந்த ஒன்றிணைவின் மூலம், பாரம்பரிய குடும்ப அமைப்பு வெளிப்புற ஆற்றல்களால் முன்வைக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது மற்றும் அதன் பின்னடைவின் மூலம் ஒன்று சேர்ந்து வாழ்வதின் நீடித்த முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ‘தங்கத்திலே ஒரு குறை,’ ‘தேரோடும் எங்கள்,’ ‘தலையாம்பூ முடிச்சு,’ மற்றும் ‘ஏன் பிறந்தாய் மகனே’ போன்ற உருக்கமான பாடல்களால் படத்தின் மெலோஸ் அல்லது இசை கூறு கணிசமாக வளப்படுத்தப்படுகிறது, இது வெற்றிகரமான மெலோட்ரமாவின் உணர்ச்சி தாக்கம் மற்றும் கருப்பொருள் ஆழத்தை பெருக்குகிறது.

மெலோட்ரமாவின் சிறப்பியல்பு கூறுகள்: தற்செயல் நிகழ்வுகள் மற்றும் “டியூஸ் எக்ஸ் மகினா”/இயந்திரத்திலிருந்து உருப்பெறும் தெய்வீக தலையீடு

மெலோட்ரமாவின் ஒரு முக்கிய மற்றும் பெரும்பாலும் விவாதிக்கப்படும் அம்சம், முக்கியமான கதை திருப்பங்களை இயக்க அல்லது தீர்க்க முடியாததாகத் தோன்றும் சிக்கல்களைத் தீர்க்க எதிர்பாராத தற்செயல் நிகழ்வுகளை நம்பியிருப்பது. சில சமயங்களில், இந்த தற்செயல் நிகழ்வுகள் “தெய்வீக தலையீட்டை”க் குறிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகின்றன, இது தவறுகளை சரிசெய்யும் அல்லது மறு இணைவுகளை எளிதாக்கும் ஒரு “டியூஸ் எக்ஸ் மகினா” – வணிக சினிமா திரைக்கதையாடல் எனும் இயந்திரத்திலிருந்து சிக்கல் தீர்த்து வைக்க திடீரென்று உதிக்கும் ஆபத்பாந்தவன்.

நவீனத்துவம் போன்ற ஆற்றல்களின் இருவேறுபட்ட சித்தரிப்பு

image-32.jpeg?resize=600%2C413&ssl=1

நவீனத்துவம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற புதிய சமூக ஆற்றல்கள் பெரும்பாலும் மெலோட்ராமாக்களில் குறிப்பிடத்தக்க இருவேறுபட்ட தன்மையுடன் சித்தரிக்கப்படுகின்றன. இந்த ஆற்றல்கள் பெரும்பாலும் நன்மை பயக்கும் முன்னேற்றம் மற்றும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன், நல்லது மற்றும் கெட்டது இரண்டையும் இணைத்தே கொண்டுவரும் இரட்டைத் திறனைக் கொண்டிருப்பதாகக் காட்டப்படுகின்றன. “பாகப்பிரிவினை”யில், நவீனத்துவத்தின் மற்றொரு ஆற்றல்வாய்ந்த சின்னமான மின்சாரம், துல்லியமாக இந்த வகையான இருவேறுபட்ட தன்மையுடன் கையாளப்படுகிறது. புகழ்பெற்ற சிவாஜி கணேசன் சித்தரித்த கண்ணையன் கதாபாத்திரம், ஆரம்பத்தில் மின்சார அதிர்ச்சியால் தனது இடது கை மற்றும் கால்களின் செயல்பாட்டை இழக்கிறது, இது அவரை ஊனமுற்றவராகவும் மற்றவர்களை சார்ந்தவராகவும் ஆக்கும் ஒரு விபத்து. இந்த சம்பவம் நவீன தொழில்நுட்பத்தின் சாத்தியமான ஆபத்துகள் மற்றும் அழிவு ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், படத்தின் உச்சக்கட்டத்தில் ஒரு வியத்தகு திருப்பத்தில், கண்ணையன் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் எதிர்கொள்ளும் மற்றொரு, மிகவும் தற்செயலான மின்சார அதிர்ச்சியின் மூலம் அதே கையில் பாயும் மின்சாரத்தினால் மீண்டும் தனது இடது பக்கத்தில் இழந்த உணர்வுகளை பெறுகிறார். இந்த நிகழ்வு ஒரு உன்னதமான “டியூஸ் எக்ஸ் மகினா” ஆக செயல்படுகிறது. இங்கே, அவரை முடக்கிய மின்சாரத்தின் அதே ஆற்றல் அவரது மறுசீரமைப்பின் முகவராகவும் மாறுகிறது, இது நவீன ஆற்றல்களின் முரண்பாடான மற்றும் சிக்கலான தன்மையை முன்வைக்கிறது. மேலும், இந்த அதிசய மீட்பு ஒரு தீவிர நெருக்கடியின் போது நிகழ்கிறது: அவர் தனது குழந்தையை ஒரு முரட்டு யானையிடமிருந்து காப்பாற்றி அந்த சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கும்போதே சிங்காரத்தின் சூழ்ச்சிகளை முறியடிக்கிறார். இந்த சம்பவங்களின் சங்கமம் மெலோட்ராமாவின் உச்சக்கட்ட உணர்வுகளுக்கு நிகழ்வுகளின் கோர்வையான சர்க்கஸை காத்திரமான வெளியாக கட்டமைக்கிறது, இது உந்தப்பட்ட உணர்வுகளுடன் சாத்தியமற்ற ஆனால் கருப்பொருள் ரீதியாக குறிப்பிடத்தக்க தீர்வுகளை இணைக்கிறது.

இவ்வாறு, “பாகப்பிரிவினை” அதன் மேற்பரப்பில் ஒரு உணர்ச்சிகரமான குடும்பக் கதையை திறமையாகக் சொல்லிச்செல்கிறது, அதே நேரத்தில் நவீனத்துவத்தின் வருகை மற்றும் பாரம்பரிய மதிப்புகள் மற்றும் சமூக கட்டமைப்புகளில் அதன் சிக்கலான தாக்கம் போன்ற ஆழ்ந்த சமூகப் பிரச்சினைகளை கூடவே ஆராய்கிறது. அதன் தெளிவான மற்றும் அழுத்தமான கதை அமைப்பு, அதன் உணர்ச்சிகரமான காட்சிகள், குறியீடுகளின் வளமான பயன்பாடு, தற்செயல் நிகழ்வுகளின் மூலோபாய சித்தரிப்பு மற்றும் சமூக மாற்றத்தின் ஆழமான பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம், “பாகப்பிரிவினை” சினிமாவின் நிலப்பரப்பில் மெலோட்ரமாவின் ஆற்றல் மற்றும் சிக்கலான தன்மைக்கு ஒரு வளமான, என்றும் எதிரொலிக்கும் மற்றும் நீடித்த உதாரணமாக உள்ளது.

செவ்வியல் உணர்ச்சிப் பெருங்கதைகளின் மேற்பரப்பு மற்றும் அடித்தளக் கதைகள்

பாகப்பிரிவினையில் நாம் பார்த்த மாதிரி உணர்ச்சிப் பெருங்கதை (Melodrama) என்பது வெறும் மிகைப்படுத்தப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமல்ல; அது சமூகத்தின் சிக்கலான முரண்களையும், வரலாற்று மாற்றங்களையும், மனித உறவுகளின் ஆழத்தையும் ஆராயும் ஆற்றல்மிக்க ஒரு கலை வடிவமாகும். சிறந்த உணர்ச்சிப் பெருங்கதைகள், காணாளர்களை உடனடியாக ஈர்க்கும் ஒரு “மேற்பரப்புக் கதைக்கு” அடியில், ஒரு ஆழமான சமூக அல்லது மெய்யியல் சார்ந்த “அடித்தளக் கதையை” கொண்டிருக்கும். இந்த இரு அடுக்குகளும் இணையும்போது, அந்தப் படைப்பு காலத்தால் அழியாத ஒன்றாக மாறுகிறது.

நவீனத்துவம் போன்ற ஆற்றல்களின் இருமுகச் சித்திரம்

பாகப்பிரிவினை எடுத்துரைப்பது போலவே உணர்ச்சிப் பெருங்கதைகளின் உலகில், நவீனத்துவம் போன்ற புதிய ஆற்றல்கள் ஒற்றை முகம் கொள்வதில்லை. அவை, அமுதமும் நஞ்சும் கலந்ததொரு கலவையாகவே சித்தரிக்கப்படுகின்றன; ஒருபுறம் முன்னேற்றத்தின் பேரொளியைப் பாய்ச்சுகையில், மறுபுறம் பாரம்பரியத்தின் ஆணிவேர்களை அரிக்கும் காடியாகவும் (acid) அவை உருவெடுக்கின்றன.

இந்தக் கோட்பாடுகளை, வெவ்வேறு பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட சிறந்த திரைப்படங்களின் மூலம் நாம் ஆராயலாம்.

கான் வித் தி விண்ட் (1939): ஒரு யுகத்தின் வீழ்ச்சி

மேற்பரப்புக் கதை: அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னணியில், ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் காதலும், அவரது வாழ்வுப் போராட்டமுமே படத்தின் மையம். தன் காதலன் ஆஷ்லியை அடைய முடியாத விரக்தியிலும், போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு மத்தியிலும், ஸ்கார்லெட் தன் குடும்பத்தையும், நிலத்தையும் காப்பாற்றப் போராடுகிறாள். இந்தக் கொந்தளிப்பான பயணத்தில் அவளுக்குத் துணையாகவும், அவளைச் சவால் செய்பவராகவும் ரெட்ட் பட்லர் வருகிறார். ரெட்ட் பட்லர், போலித்தனமற்ற நடப்பியல்வாதியாகவும், சமூக விதிகளைப் பற்றிக் கவலைப்படாத புரட்சியாளனாகவும், அதே சமயம் ஸ்கார்லெட்டின் மீது தீராத காதல் கொண்டவராகவும் வலம் வருகிறார்.

அடித்தளக் கதை: இந்தத் திரைப்படம், ஒரு யுகத்தின் முடிவையும், ஒரு புதிய உலகின் பிறப்பையும் பதிவு செய்கிறது. பண்ணையார் முறை, பிரபுத்துவ வாழ்க்கை முறை அடங்கிய “பழைய தெற்கு” (Old South) போரினால் முற்றிலுமாக அழிகிறது. ஸ்கார்லெட், அந்த அழிவிலிருந்து மீண்டு வரும் புதிய, தன்னலம் மிக்க முதலாளித்துவப் பெண்ணின் குறியீடு. இறுதியில், ரெட்ட் பட்லர் ஸ்கார்லெட்டை விட்டு விலகும் கணம், படத்தின் மிக ஆழமான தருணமாகும். பல ஆண்டுகளாகத் தன் காதலைப் புறக்கணித்த ஸ்கார்லெட்டாலும், தங்கள் மகளின் மரணத்தாலும் அவரது உணர்வுகள் முற்றிலுமாக வற்றிப்போயிருந்தன. எனவே, அவர் சொல்லும் “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அன்பே, அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை” (Frankly, my dear, I don’t give a damn) என்ற வரி, கோபத்தின் வெளிப்பாடல்ல; அது உணர்வுகள் வற்றிப்போன ஒரு மனிதனின் வெறுமையின் குரல். இந்தத் தனிப்பட்ட சோர்வு, ஒரு பரந்த குறியீட்டு அர்த்தத்தையும் பெறுகிறது. போரில் தோற்று, தன் இலட்சியங்கள் அனைத்தையும் இழந்த “பழைய தெற்கு” என்ற யுகத்தின் ஒட்டுமொத்த சோர்வையும், நம்பிக்கையின்மையையும் இது குறிக்கிறது. இவ்வாறு, அந்த ஒற்றை வரி, ஒரு உறவின் முடிவையும் ஒரு யுகத்தின் முடிவையும் ஒருசேர அறிவிக்கிறது.

டைட்டானிக் (1997): வர்க்கப் போராட்டத்தின் உருவகம்

மேற்பரப்புக் கதை: இது ஒரு உன்னதமான முக்கோணக் காதல் போராட்டம். கதையின் நாயகி ரோஸ், தன் வருங்காலக் கணவரான கால் ஹோக்லிக்கும், கப்பலில் சந்திக்கும் ஏழை ஓவியனான ஜாக் டாசனுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார். கால், செல்வம் மற்றும் சமூகத் தகுதி என்ற தங்கக் கூண்டையும், ஜாக், உண்மையான காதல் மற்றும் விடுதலையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ரோஸ் யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதே கதையின் உணர்ச்சிப்பூர்வமான மையம்.

அடித்தளக் கதை: இந்தக் காதல் கதைக்கு அடியில், எட்வர்டியன் காலத்தின் கடுமையான வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய ஆழமான சமூகத் திறனாய்வு அமைந்துள்ளது. டைட்டானிக் கப்பலே அந்த சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாகச் செயல்படுகிறது. முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பு எனப் பிரிக்கப்பட்டிருக்கும் அதன் அமைப்பு, வர்க்கப் பேதத்தின் குறியீடு. கப்பல் மூழ்கும்போது, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு கூட வர்க்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. மூன்றாம் வகுப்புப் பயணிகள் இரும்புக் கதவுகளால் பூட்டப்படுகிறார்கள். எனவே, ரோஸ் ஜாக்கை தேர்ந்தெடுப்பது ஒரு காதல் முடிவு மட்டுமல்ல; அது தன்னை ஒடுக்கிய உயர் வர்க்கத்தையும், அதன் போலியான விழுமியங்களையும் முழுமையாக நிராகரிக்கும் ஒரு புரட்சிகரச் செயல். இறுதியில், ஜாக் இறந்தாலும், அவள் கால்வர்ட் (Calvert) என்பவரைத் திருமணம் செய்து, ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்வது, அவள் பெற்ற விடுதலையின் சான்றாக அமைகிறது.

தேவதாஸ் (2002): நவீனத்துவத்தின் பெருந்துயர்

மேற்பரப்புக் கதை: ஜமீன்தார் வீட்டுப் பிள்ளையான தேவதாஸ், தன் இளமைக்காலத் தோழி பார்வதியைக் காதலிக்கிறான். வர்க்க பேதம் மற்றும் குடும்ப கவுரவம் காரணமாக இவர்களது காதல் நிராகரிக்கப்பட, தேவதாஸ் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். குடிக்கு அடிமையாகி, அன்பான நடன மங்கை சந்திரமுகியிடம் அடைக்கலம் தேடி, இறுதியில் தன் காதலியின் வீட்டு வாசலில் உயிரை விடுகிறான்.

அடித்தளக் கதை: பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல்

தேவதாஸின் கதை, ஒரு காதல் தோல்வி என்பதை விட, நவீனத்துவம் ஏற்படுத்திய ஆழமான உளவியல் மற்றும் சமூகக் கொந்தளிப்புகளின் பெருந்துயரமாகும். அவன் இரண்டு உலகங்களுக்கு இடையில் சிக்கி அழிக்கப்பட்ட ஒரு பாத்திரம்.

  • பாரம்பரிய உலகில் ஒரு நவீன மனிதன்: தேவதாஸ், மேற்கத்தியக் கல்வி கற்க அனுப்பப்படுகிறான். சரத்சந்திரரின் மூல நாவலில் கல்கத்தாவிற்கும், சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படத்தில் லண்டனுக்கும் அவன் செல்வதாகக் காட்டப்படுவது, அவனுக்கும் அவனது பாரம்பரியச் சூழலுக்கும் இடையேயான தூரத்தையும், பண்பாட்டுப் பிளவையும் இன்னும் அதிகப்படுத்திக் காட்டுகிறது. அவன் தனிமனிதவாதம் மற்றும் காதல் திருமணம் போன்ற நவீன சிந்தனைகளுடன் திரும்புகிறான்.

  • நவீன நாயகனின் செயலற்ற நிலை: அவனிடம், குடும்பத்தை எதிர்க்கும் நவீன ஆசை இருக்கிறது, ஆனால் பாரம்பரியத்தின் வேர்களை முழுமையாக அறுத்துக்கொள்ளும் துணிவு இல்லை. இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் அவன் தவிக்கும் செயலற்ற நிலையே, அவனது வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகிறது.

  • சுய அழிவு ஒரு நவீன எதிர்ப்பு: காதலை இழந்த பிறகு, தேவதாஸ் நவீனத்தின் மையமான நகரத்திற்குத் தப்பி ஓடுகிறான். அங்கே, அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்வது, ஒரு வகையான நவீன எதிர்ப்பாக மாறுகிறது. அவனது குடிப்பழக்கம், அவன் மாற்ற முடியாத ஒரு சமூக அமைப்பின் மீதான அவனது கோபத்தையும், கையாலாகாத்தனத்தையும் வெளிப்படுத்தும் ஒரு கிளர்ச்சியாகும். அவனது சுய அழிவு, உள்நோக்கி செலுத்தப்பட்ட ஒரு வன்முறையாகிறது.

மேற்கண்ட ஆய்வுகளிலிருந்து, உணர்ச்சிப் பெருங்கதை என்பது கண்ணீரும், கவலையும் நிறைந்த ஒரு மேலோட்டமான கலை வடிவம் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது. அது, குடும்ப உறவுகள், வர்க்கப் போராட்டம், வரலாற்று மாற்றங்கள், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இடையிலான மோதல் போன்ற ஆழமான கருப்பொருள்களை ஆராயும் ஆற்றல்மிக்க ஒரு ஊடகமாகும். மேற்பரப்புக் கதையின் உணர்ச்சிப் பெருக்கின் வழியே காணாளர்களை ஈர்த்து, அடித்தளக் கதையின் சமூகத் திறனாய்வின் மூலம் அவர்களைச் சிந்திக்க வைப்பதே, இந்தத் திரைப்படங்களின் காலத்தால் அழியாத வெற்றிக்குக் காரணம். அதத்கைய உணர்ச்சிப் பெருங்கதையின் மாஸ்டராக பீம்சிங் அவர்கள் இருந்தார்கள்.

உணர்ச்சியின் ‘ப’ கீதம்: பீம்சிங் குடும்ப மெலோடிராமா

image-28.jpeg?resize=600%2C415&ssl=1

ஏ. பீம்சிங்கின் சினிமா உலகம் பெரும்பாலும் “குடும்பம் மற்றும் உறவுகளின்” சிக்கலான இழைகளால் பின்னப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் சமூக மாற்றத்தை அவரது கதைகள் பெரும்பாலும் பிரதிபலித்தன, அங்கு பாரம்பரிய கூட்டுக் குடும்ப அமைப்பு நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் மதிப்புகளின் அழுத்தங்களுடன் போராடியது. பீம்சிங்கிற்கு வணிக ரீதியாக வெற்றிகரமான சூத்திரமாக மாறிய இந்த “குடும்பக் கதைகள்”, இந்த அலகுகளின் வலிமிகுந்த சிதைவு, குடும்பத்திற்குள் மாறுபட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து எழும் மோதல்கள், சமூக அந்தஸ்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய மரபுகளுக்கும் ஊடுருவும் வெளிப்புற தாக்கங்களுக்கும் இடையிலான தவிர்க்க முடியாத மோதல், சில சமயங்களில் எதிர்மறையாக  சித்தரிக்கப்பட்ட மேற்கத்திய விழுமியங்கள், ஆகியவற்றை தொடர்ந்து ஆராய்ந்தன. ஆழ்ந்த தியாகத்தின் கருப்பொருள்கள், உடன்பிறந்தோரின் அன்பின் பிரிக்க முடியாத பிணைப்புகள், குழந்தைகளின் கடமையின் சுமை, மற்றும் தவறான புரிதல்கள் அல்லது தீய நோக்கங்களின் சோகமான விளைவுகள் ஆகியவை பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலித்த தொடர்ச்சியான மையக்கருத்துகளாக இருந்தன.

image-41.jpeg?resize=600%2C338&ssl=1

இந்த குடும்ப மெலோடிராமாக்கள், வெறும் கண்ணீரை வரவழைக்கும் பொழுதுபோக்கைத் தாண்டி, சமூக விமர்சனத்திற்கான ஆற்றல்வாய்ந்த ஊடகங்களாக அடிக்கடி செயல்பட்டன. பீம்சிங்கின் திரைப்படங்கள், புதிதாக சுதந்திரம் அடைந்த ஒரு தேசத்தின் அபிலாஷைகளுடன் ஈடுபட்டன, குடும்பத்தின் நுண் உலகத்தைப் பயன்படுத்தி பரந்த சமூக பதட்டங்களை ஆராய்ந்தன. உதாரணமாக, அவரது பாகப்பிரிவினை (1959) ஒரு ‘வெளிநாட்டிலிருந்து திரும்பிய’ கதாபாத்திரத்தின் செல்வாக்கின் கீழ் ஒரு குடும்பத்தின் பிரிவினையை சித்தரித்தது, இது பாரம்பரிய இந்திய குடும்ப அமைப்புகளுக்கு மேற்கத்திய மதிப்புகளின் அச்சுறுத்தலைக் குறிக்கிறது. இதேபோல், பாவ மன்னிப்பு (1961) “தேசியவாத மதச்சார்பின்மையை” தைரியமாக ஆதரித்தது மற்றும் மதப் பிரிவுகளை கேள்விக்குள்ளாக்கியது, பீம்சிங்கின் மெலோடிராமாக்கள் குறிப்பிடத்தக்க சமூக-கலாச்சார கேள்விகளை அதீத உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டின் மூலம் கையாள முடியும் என்பதைக் காட்டியது.

பீம்சிங்கின் தமிழ் இயக்கப் பணிகளின் ஒரு தனித்துவமான கையொப்பம் “ப” வரிசை ––– தமிழ் எழுத்தான ‘ப’ வில் தொடங்கும் தலைப்புகளைக் கொண்ட பதினான்கு திரைப்படங்களின் குறிப்பிடத்தக்க தொடர்ச்சி. இந்தத் தொடர், பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக் கொண்டிருந்தது மற்றும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை மேதைமையாலும் கண்ணதாசனின் பாடல் ஆழத்தாலும் செறிவூட்டப்பட்டது, ஒரு தமிழின கொண்டாட்ட நிகழ்வாக மாறியது. சிவாஜி கணேசன் இந்த தலைப்பு வசீகரம் பீம்சிங்கின் சொந்தப் பெயர் தமிழில் ‘ப’ வில் தொடங்குவதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்றும் பின்னர் “உணர்ச்சிபூர்வமான காரணங்களுக்காக” நீடித்திருக்கலாம் என்றும் நினைத்தாலும், அதன் தாக்கம் மிகவும் மூலோபாயமாக இருந்தது. இந்த நிலையான பெயரிடல், சிவாஜி கணேசன் போன்ற ஒரு நட்சத்திரத்தின் தொடர்ச்சியான இருப்பு மற்றும் ஒரு நம்பகமான படைப்புக் குழுவுடன் இணைந்து, முறைசாரா ஆனால் ஆற்றல்வாய்ந்த பிராண்டிங் பொறிமுறையாக திறம்பட செயல்பட்டது. இது உணர்ச்சி ரீதியாக செழிப்பான, குடும்பத்தை மையமாகக் கொண்ட மெலோடிராமாக்களுக்கான பார்வையாளர் எதிர்பார்ப்புகளை வளர்த்தது, அவற்றின் வணிக வெற்றிக்கு கணிசமாக பங்களித்தது மற்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் பீம்சிங்கின் தனித்துவமான இயக்குநர் என்கிற அடையாளத்தை உறுதிப்படுத்தியது.

image-46.jpeg?resize=600%2C424&ssl=1

மெலோடிராமா வகைமையின் மரபுகளுக்கு இணங்க, அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் “வியத்தகு சூழ்நிலைகள்” மற்றும் “தீவிரமான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம்” ஆகியவற்றைக் கொண்டிருந்தன. கதைசொல்லல் பொதுவாக குடும்ப நல்லிணக்கத்தின் ஆரம்ப சித்தரிப்புடன் வெளிப்படும், இது பின்னர் ஒரு வெளிப்புற விரோத ஆற்றல்யால் அல்லது ஒரு உள் கதாபாத்திரக் குறைபாட்டால் சீர்குலைக்கப்பட்டு, தீவிரமடையும் உணர்ச்சி கொந்தளிப்புக்கு வழிவகுக்கும். பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, மற்றும் பார் மகளே பார் போன்ற திரைப்படங்களின் கதைகள் அனைத்தும் மோதலால் சிதைந்த அழகிய தொடக்கங்களின் இந்த முறையை விளக்குகின்றன; அதைத் தொடர்ந்து ஒரு சோகமான அல்லது உறுதிப்படுத்தும் உச்சக்கட்ட தீர்வை நோக்கிய தீவிர உணர்ச்சி பயணங்கள். பீம்சிங் உணர்ச்சிகரமான உச்சக்கட்டங்களை உருவாக்க கனதியான முரண்பாட்டை திறம்பட பயன்படுத்தி, மேலும் பாடல்களை வெறும் இடைச்செருகல்களாக மட்டுமல்லாமல், அவை மூலம் கதாபாத்திரங்களின் உள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி கதையை முன்னோக்கி நகர்த்துவதை தனது மூலோபாயமாக கொண்டிருந்தார்.

image-27.jpeg?resize=600%2C449&ssl=1

இந்த உணர்ச்சிமிகு கதைகளுக்குள், ஒரு தெளிவான தார்மீக கட்டமைப்பு பெரும்பாலும் புலப்பட்டது. நல்லொழுக்கம், தியாகம் மற்றும் அசைக்க முடியாத குடும்ப விசுவாசம் ஆகியவை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டன, இந்த உறுதிப்படுத்தல் சோகமான முடிவுகளின் மூலம் வந்தாலும் கூட. கதாபாத்திரங்கள் அனுபவித்த துன்பங்கள் தார்மீக பாடங்களைக் கற்பிக்க அல்லது நிலவும் சமூக விழுமியங்களை வலுப்படுத்த பயன்பட்டன, படிக்காத மேதையில் நன்மையின் இறுதி வெற்றி அல்லது பாசமலர்இல் உள்ள துயரமான ஆயினும் விரும்பிச் செய்யும் தியாகங்கள் போன்றவை, உணர்ச்சிபூர்வமான காட்சியமைப்புக்கு தூண்டுகையாக அமைந்தன.

‘ப’ வரிசை படங்கள்: கண்ணீர், இசை மற்றும் வெற்றிகளின் தொடர்ச்சி

ஏ. பீம்சிங்கின் ‘ப’ வரிசை தமிழ் சினிமாவில் ஒரு மகத்தான தொகுப்பாக நிற்கிறது, ஒவ்வொரு திரைப்படமும் மெலோடிராமாவின் ஒரு பிரமாண்டமான சிம்பொனியில் ஒரு தனித்துவமான ஆனால் இணக்கமான இசைக் குறிப்பாகும். இந்தத் திரைப்படங்கள், பெரும்பாலும் பீம்சிங், அவரது கூட்டாளிகளான திருமலை-மஹாலிங்கம், ஒளிப்பதிவாளர் விட்டல் ராவ், சோலைமலை போன்ற எழுத்தாளர்கள், சிவாஜி கணேசன், இசை இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி கவிஞர் கண்ணதாசன் மற்றும் பின்னணி பாடலுக்கு பெயர் போன டிஎம்எஸ், சுசீலா, பிபிஎஸ் ஆகியோரின் கூட்டு மேதைமையிலிருந்து பிறந்தவை.

பதி பக்தி (1958): ஒரு சூத்திரத்தின் தோற்றம்

பதி பக்தி மூலம், பீம்சிங் தனது தனித்துவமான பாணியின் அடித்தளங்களை அமைக்கத் தொடங்கினார். 1936 ஆம் ஆண்டின் முந்தைய அதே பெயரிலான திரைப்படம் குடிப்பழக்கம் போன்ற சமூகத் தீமைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், பீம்சிங்கின் 1958 ஆம் ஆண்டு பதிப்பு, வலிமையான சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரியைக் கொண்டு, “கணவனிடம் பக்தி” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட உள்ளார்ந்த உணர்ச்சி நாடகத்தை அரங்கேற்றியது. இப்படம் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ் ஆகியோருடைய பீம்சிங்குடனான ஆரம்பகால ஒத்துழைப்பைக் குறித்தது. பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களுடன் சேர்ந்து இப்படம் தொடரவிருக்கும் குடும்பக் காவியங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைத்தது, திருமண மற்றும் குடும்பப் பிணைப்புகளுக்குள் உள்ள உணர்ச்சிகரமான சிக்கல்களை ஆராய்ந்தது. “வீடு நோக்கி வந்த என்னை,”இரை போடும் மனிதருக்கே,” மற்றும் “இந்த திண்ணை பேச்சு வீரனிடம்” போன்ற பாடல்கள் உணர்வெழுச்சி உந்துதலுக்கு உதாரணங்கள்.

பாகப்பிரிவினை (1959): குடும்ப தகராறுகளின் முன்மாதிரி

பாகப்பிரிவினை குடும்ப மெலோடிராமாவிற்கான பீம்சிங்கின் காத்திரமான கதையாடல். இரண்டு சகோதரர்களுக்கு இடையிலான ஆழ்ந்த அன்பு மற்றும் எம்.ஆர். ராதாவால் மறக்கமுடியாத வில்லனாக சித்தரிக்கப்பட்ட “சிங்கப்பூர் சிங்காரம்” என்பவரால் தூண்டப்பட்ட அவர்களின் குடும்பதிற்குள்ளான சிக்கல் மற்றும் கட்டாயப் பிரிவின் சோகமான நிகழ்வுகளைச் சுற்றி கதை சுழன்றது. குடும்ப சொத்துக்களின் பிரிவினை “கூட்டுக் குடும்பங்களின் இறுதித் தோல்வி” என்று சித்தரிக்கப்பட்டது, குடும்ப ஒற்றுமையை மதிக்கும் ஒரு சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருப்பொருள். இப்படம் கதாபாத்திர முன்மாதிரிகளை திறமையாகப் பயன்படுத்தியது: அர்ப்பணிப்புள்ள சகோதரர்கள், சூழ்ச்சி செய்யும் வில்லன், மற்றும் ஊனமுற்ற ஆனால் அறமுள்ள நாயகன் (சிவாஜி கணேசன்); அவரது அதிசயமான மீட்பு குடும்பத்தின் மறு இணைவுக்கு வழிவகுக்கிறது. கண்ணதாசன், ஏ. மருதகாசி மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பாடல்களுடன் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, அதன் தாக்கத்திற்கு ஒத்திசைவாக இருந்தது. “தாழையாம் பூ முடிச்சி” அதன் குறைந்தபட்ச இசைக்கருவிகளுக்காகக் போற்றப்பட்டது, அதே நேரத்தில் கண்ணதாசனின் துயரமான தாலாட்டு “ஏன் பிறந்தாய் மகனே” உணர்ச்சிகரமான ஆழத்தின் அடுக்குகளைச் சேர்த்தது. படத்தின் விமர்சன மற்றும் வணிக வெற்றி, தேசிய திரைப்பட விருது (சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) உட்பட, அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது மற்றும் இயக்குநரின் வெற்றி சூத்திரத்தை உறுதிப்படுத்தியது.

image-49.jpeg?resize=600%2C449&ssl=1

படிக்காத மேதை (1960): எழுத்துக்களுக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கம்

1953 ஆம் ஆண்டு ஆஷாபூர்ணாதேவியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட, பெங்காலி திரைப்படமான ஜோக் பியோக்கின்,  மறுவுருவாக்கமான படிக்காத மேதை, உண்மையான நல்லொழுக்கமும் ஞானமும் நல்ல விழுமியங்களைக் கொண்ட குணத்தை சார்ந்த்தே அன்றி முறையான கல்வியைச் சார்ந்தது அல்ல என்ற கருப்பொருளை ஆதரித்தது. சிவாஜி கணேசன், ரங்கன் என்ற படிக்காத, அப்பாவி அனாதையாக அற்புதமான நடிப்பை வழங்கினார், அவரது அசைக்க முடியாத விசுவாசமும் உள்ளார்ந்த நற்குணமும் அவரை வளர்த்த பணக்கார குடும்பத்திற்கு ஒரு தார்மீக திசைகாட்டியாக மாற்றுகிறது, குறிப்பாக அவர்கள் வசதியிழந்து துரதிர்ஷ்டங்களை எதிர்கொள்ளும்போது. எழுத்தறிவை விட குணமே முக்கியம் என்று இப்படம் கூறியது, கணிசமான சமூக அதிர்வுகளை ஏற்படுத்தியது, குறிப்பாக நடுத்தர வர்க பார்வையாளர்களிடம். இப்படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்தார், கண்ணதாசன் இரண்டு பாடல்களுக்கு வரிகளை வழங்கினார்; “ஒரே ஒரு ஊரிலே” குறிப்பாக அதன் நினைவுகூரலுக்காக தனித்து நிற்கின்றது. படிக்காத மேதை ஒரு திரைக்கதை போக்கை உருவாக்கியது, பின்னர் வந்த பல திரைப்படங்களில் உன்னதமான, படிக்காத வேலைக்காரனை மையமாகக் கொண்டு, இறுதியில் குடும்பத்தைக் காப்பாற்றுபவராக அவரை சித்தரிப்பதைக் காணலாம்.

பாவ மன்னிப்பு (1961): நல்லிணக்கத்திற்கான ஒரு மெலோடிரமாடிக் வேண்டுகோள்

image-48.jpeg?resize=600%2C512&ssl=1

பாவ மன்னிப்பில் பீம்சிங் தனது மதச்சார்பற்ற அடையாளத்தை இன்னும் உருவாக்கி வரும் ஒரு பதிநான்கு வருட இளம் தேசத்தில் மத சகிப்புத்தன்மை மற்றும் வகுப்புவாத நல்லிணக்கம் என்ற முக்கியமான கருப்பொருளை மையப்படுத்த மெலோடிராமாவின் சாத்தியங்களை திறமையாகப் பயன்படுத்தினார். வெவ்வேறு மதங்களில் வளர்க்கப்பட்டு இறுதியில் மீண்டும் இணைந்த பிரிக்கப்பட்ட உடன்பிறப்புகளின் சிக்கலான கதை தேசிய ஒற்றுமைக்கான ஒரு ஆற்றல்வாய்ந்த உருவகமாக செயல்பட்டது. (மன்மோஹன் தேசாயின் அமர் அகபர் ஆன்டெனி (1977) க்கு பல வருட முன்பே அத்தகைய உடன்பிறப்புகள் பிரிந்து இணையும் சூத்திரத்தை பெரிய அளவில் மைய நீரோட்ட சினிமாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்களில் ஒருவர் பீம்சிங்.) ஒரு இந்து வைர வியாபாரி (ஜெமினி கணேசன்), ஒரு முஸ்லிம் கிராம மருத்துவர் (சிவாஜி கணேசன்), மற்றும் ஒரு கிறிஸ்தவ நல்லெண்ணம் கொண்டவர் (தேவிகா) ஆகியோரைக் கொண்ட படத்தின் கதை, முக்கிய மதங்களை குறியீடாக பிரதிநிதித்துவப்படுத்தியது, வரலாற்றாசிரியர்கள் “காந்திய “மதச்சார்பின்மை” என்று விவரித்ததை ஆதரித்தது. கண்ணதாசனின் வரிகள் குறிப்பிடத்தக்கவை: “வந்த நாள் முதல்” போன்ற பாடல்கள் மதங்களின் உருவாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கின, மேலும் அவரது வரிகள் திரைக்கதையின் தூண்டுகையை ஆழப்படுத்தியதற்காக பாராட்டப்பட்டன. பிரபலமான ஈத் திருவிழா பாடலான “எல்லோரும் கொண்டாடுவோம்” உட்பட விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, படத்தின் உட்பொருளை மேலும் பெருக்கியது. பாவ மன்னிப்பு குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்றது, இதில் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதும் அடங்கும், இந்த கௌரவம் தமிழ் திரைப்படங்களுக்கு பெருமை சேர்த்தது.

image-35.jpeg?resize=600%2C339&ssl=1

பாவமன்னிப்பிலும் மற்றும் பல “ப” வரிசைப் படங்களிலும் பீம்சிங்கின் மதச்சார்பற்ற வெளிக்கான ஏக்கத்தை புத்தரின் படங்கள்/சிலைகள் மூலம் காணலாம். பீம்சிங்கின் கலைப் பார்வையில் புத்தர் ஒரு தற்செயலான அலங்காரமல்ல, அது அவரது ஆன்மாவின் ஆழமான ஒரு பிரதிபலிப்பு. அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே, ‘புத்தா பிக்சர்ஸ்’, ஒரு அமைதியான பிரகடனமாக ஒலித்தது. அவரது படங்கள் தொடங்குவதற்கு முன், திரையில் தோன்றும் புத்தரின் சாந்தமான திருவுருவம், மற்றும் புத்தருடன் சேர்ந்தே ஒலிக்கும் “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சர்ணம் கச்சாமி,” வரவிருக்கும் மெலோடிராமாவுக்கு ஒரு நல்லாசியை வழங்குவது போலிருந்தது. பீம்சிங்கின் புத்தர், மதங்களைக் கடந்து மனிதநேயத்தை அரவணைக்கும் ஒரு கருணையின் வடிவம்; அது அமைதியையும், உள்ளொளியையும் தேடும் ஒரு ஆன்மீகப் பயணம். ஒரு இளம் தேசத்தின் மத நல்லிணக்கக் கனவுகளுக்கு, அவர் புத்தரை ஒரு மென்மையான குறியீடாக முன்வைத்தார்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, பீம்சிங் ஏற்றிவைத்த அந்த மெல்லிய தீபம், பா. ரஞ்சித் போன்ற படைப்பாளிகளின் கைகளில் ஒரு புரட்சிப் பெருநெருப்பாக உருமாறியது. பீம்சிங் விதைத்த அந்த அமைதியான ஆன்மீகத் தேடல், ரஞ்சித்தின் படைப்புகளில் ஒரு சமூக விடுதலைக்கான அரசியல் ஆயுதமாக மறுபிறவி எடுத்தது. ரஞ்சித்தின் புத்தர், சாதியக் கட்டுமானங்களை உடைத்தெறிந்த ஒரு வரலாற்று நாயகர்; அது பாபாசாஹேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமத்துவத்தின் தத்துவ முகம்.

இவ்வாறாக, தமிழ் சினிமாவில் புத்தரின் பயணம் ஒரு ஆழமான பரிணாமத்தைக் காண்கிறது. பீம்சிங்கின் உலகப் பொதுவான மனிதநேயத்தின் மென்குரலில் இருந்து, ரஞ்சித்தின் சமூக நீதிக்கான ஓங்கி ஒலிக்கும் மனிதத்தின்குரலாக அது உருவெடுத்துள்ளது. ஒரே குறியீடு, ஒரு மக்களின் மனசாட்சியின் வளர்ச்சியை எவ்வாறு உள்வாங்கிப் பிரதிபலிக்கிறது என்பதற்கு இதுவே ஒரு மகத்தான சாட்சியமாகும்.

பாசமலர் (1961): உடன்பிறந்தோரின் அன்பின் அமரத்துவம்

image-33.jpeg?resize=564%2C381&ssl=1

பெரும்பாலும் ஒரு வரலாற்று சாதனை மற்றும் பெரும் காப்பியங்களைப் போல கண்ணீரை பின் தொடர்ந்த படம் என்று பாராட்டப்படும் பாசமலர், உடன்பிறந்தவர்கள் சார்ந்த  மெலோடிராமாவின் பீம்சிங்கின் மைல்கற்களில் உச்சக்கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. இப்படம் ஒரு மூத்த சகோதரன், ராஜசேகர் (சிவாஜி கணேசன்), மற்றும் அவரது இளைய சகோதரி, ராதா (சாவித்திரி) ஆகியோருக்கு இடையிலான தீவிர உணர்வெழுச்சியினால் உந்தப்பட்ட மற்றும் இறுதியில் சோகமான பிணைப்பை சித்தரிக்கிறது, அவர்களின் வாழ்க்கை தவறான புரிதல்கள் மற்றும் ஒரு பேராசை கொண்ட உறவினரின் சூழ்ச்சிகளால் சிதைக்கப்படுகிறது. இரு உடன்பிறப்புகளும் கைகோர்த்து, ஒருவர் மற்றவருக்காக வாழ்ந்து அவர்களின் துயரமான மரணங்களில் முடியும் கதை, தமிழ் சினிமாவில் சகோதரன்-சகோதரி தியாகத்தின் ஒரு நிகரில்லா எடுத்துக்காட்டாக மாறியது. சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரியின் நடிப்பு பாசமலரில் அதன் சிகரத்தை எட்டியது. படத்தின் தொன்ம  நிலைக்கு அவை பெரிதும் பங்களித்தது. கண்ணதாசனின் உணர்ச்சிகரமான வரிகளுடன் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை, என்றும் பிரபலமான திருமணப் பாடலான “வாராயென் தோழி வாராயோ” மற்றும் “மலர்களைப் போல்” ஆகியவை இன்றும் எதோ ஒரு தமிழ்பேசும் வீட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்களே. பாசமலர் தேசிய திரைப்பட விருதை வென்றது மட்டுமல்லாமல் சகோதரன்-சகோதரி உறவுகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ஒரு திரைக்கதை மாதிரியையும்/அச்சையும் அமைத்தது, அதன் செல்வாக்கு தொடர்ந்து வரும் சகோதர-சகோதரி பாசத்தில் தோய்ந்த தமிழ் மட்டும் இந்திய சினிமாவில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. (பாசமலருக்கு பின் வெளிவந்த எல்லாம் உனக்காக [1961] என்ற படம் ஓடாததற்கு காரணம் அதில் நடித்திருந்த சிவாஜி-சாவித்திரியை ஜோடியாக தமிழக மக்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். பாசமலரின் அண்ணன் – தங்கையின் தாக்கம் தமிழ் மனதில் ஏதோ ஒரு வகையில் இன்றளவும் உள்ளது என்று சொல்லலாம்.)

பாலும் பழமும்: காதலும் அர்ப்பணிப்பும்

கூடுதலாக 1961 ஆம் ஆண்டில், ‘பாலும் பழமும்’ தமிழ் சினிமாவின் மணிமகுடத்தில் மற்றொரு வைரமாக ஜொலித்தது. சிவாஜி கணேசனும் சரோஜா தேவியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படம், ஒரு மருத்துவர், அவரது அர்ப்பணிப்புள்ள மனைவி, அவரது அதிர்ச்சிகரமான பார்வையிழப்பு மற்றும் அவரது தன்னலமற்ற தியாகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகும். இது மென்மையான உணர்ச்சிகளையும் தியாகத்தின் உன்னதத்தையும் ஆராய்ந்தது. நோய், அணையாத காதல் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகிய கருப்பொருள்கள் நெஞ்சை உருக்கும் அழகுடன் சித்தரிக்கப்பட்டன. “மெல்லிசை மன்னர்கள்” விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்து, கவிஞர் கண்ணதாசனின் ஆழமான வரிகளுடன் கூடிய பாடல்கள் இந்தப் படத்திற்கு மேலும் மெருகூட்டின. குறிப்பாக, டி. எம். சௌந்தரராஜன் குரலில் ஒலித்த “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” என்ற பாடல் தனிமையின் வலியையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் அற்புதமாக வெளிப்படுத்தியது. ஒளிப்பதிவாளர் விட்டல் ராவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் பாடலின் காட்சி அமைப்பும் கவித்துவமாக இருந்தன. “பாலும் பழமும்,” “இந்த நாடகம்,” “காதல் சிறகை,” மற்றும் “நான் பேச நினைப்பதெல்லாம்” போன்ற பிற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. கர்நாடக ராகங்கள் மற்றும் பாரம்பரிய இசை கலந்து உருவான பாடல்கள், படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்தன. இன்றும் விரும்பி பாடப்படும்/கேட்கப்படும் தத்துவார்த்தப் பாடல் “போனால் போகட்டும் போடா”, அத்தகைய அழகியலுக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பக/பழைய காட்சிகளை, சிவாஜி கணேசன் பல்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு கோணங்களில் உதட்டசைத்து பாடிக் கொண்டே உணர்ச்சிவசமாக நடந்து வரும் காட்சிகளுனூடாக செருகி தொகுக்கப்பட்டது. பீம்சிங்கின் சகபயணியான திருமலை அவர்களின் அடுக்கி இணைத்து தொகுக்கும் (மோன்டாஜ்)  நிபுணத்துவமும் இதில் வெளிப்பட்டது.

பார்த்தால் பசி தீரும் (1962): சிக்கலான உணர்ச்சி பிரமைகளின் அடுக்குகள்

பார்த்தால் பசி தீரும் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில், சிக்கலான உணர்ச்சிகரமான கதை முடிச்சுகளுடன் பல நட்சத்திரங்களைக் கொண்ட கதையாடலை கையாளும் பீம்சிங்கின் திறமையைக் வெளிப்படுத்தியது. இப்படம் ஆழ்ந்த தியாகம், நீடித்த நட்பு, காதல் முக்கோணங்கள் மற்றும் போரினால் ஏற்படும் பிரிவினைகள், தவறான அடையாளங்கள் மற்றும் சோகமான தேர்வுகளுக்கு வழிவகுக்கும் கருப்பொருள்களை ஆராய்ந்தது. இப்படத்தின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் தொடக்க பெயர் அட்டவணை; அவை முக்கிய நடிகர்களை தனித்தனியாக பெயரிடவில்லை, ஆனால் “உங்கள் அபிமான நட்சத்திரங்கள்” என்ற கூட்டு மரியாதையுடன் அவர்களை அறிவித்தன, இது அப்படத்தின் மகத்தான நட்சத்திர/மல்டி ஸ்டாரர் ஆற்றலுக்குக்கு ஒரு சான்றாகும் ––– சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, சௌகார் ஜானகி, மற்றும் பி. சரோஜா தேவி ––– மற்றும் நட்சத்திரங்களாக அவர்களின் திரை ஆளுமைகளின் நுட்பமான சமநிலைக்கும். கண்ணதாசனின் வரிகள், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையுடன் ஒத்திசைந்து, “அன்று ஊமைப் பெண்ணல்லோ”, “கொடி அசைந்ததும்”, மற்றும் உணர்ச்சிகரமான தலைப்புப் பாடல் போன்ற மறக்கமுடியாத பாடல்களை அளித்தன.

image-44.jpeg?resize=600%2C431&ssl=1

படித்தால் மட்டும் போதுமா (1962): கல்வி, விழுமியங்கள் மற்றும் இலக்கிய வேர்கள்

image-36.jpeg?resize=600%2C337&ssl=1

உள்ளார்ந்த நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை தொடர்ந்து, படித்தால் மட்டும் போதுமா (கல்வி மட்டும் போதுமா?) என்ற கேள்வியின் மூலம் மனிதமற்ற முறையான கல்வியின் மதிப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. பெங்காலி எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாயாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் இரண்டு உறவினர்களுக்கு (சிவாஜி கணேசன் மற்றும் கே. பாலாஜி) இடையிலான ஆழமான நட்பை சித்தரித்தது, அவர்கள் இருவரும் ஒரே பெண்ணுடன் (சாவித்திரி) காதல் வயப்படும்போது அவர்களின் ஆழமான நட்பு சோதிக்கப்படுகிறது, இது வஞ்சனை மற்றும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு பெங்காலி இலக்கியப் படைப்பிலிருந்து இந்தத் தழுவல், பரந்த இந்திய கதை மரபுகளுடன் பீம்சிங்கின் ஈடுபாட்டைக் காட்டியது, இது பீம்சிங் அவர்களது ஜெயகாந்தனின் பிற்காலத் தழுவல்களுக்கு ஒரு முன்னோடியாகும். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் “அண்ணன் காட்டிய வழியம்மா” மற்றும் பிருந்தாவனி ராகத்தை அடிப்படையாகக் கொண்ட “பொன் ஒன்று கண்டேன்” போன்ற பாடல்கள் இன்றளவும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. YMCA நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்ட “பொன் ஒன்று கண்டேன்” போன்ற பாடல்களின் படமாக்கம் பெரிதும் போற்றப்பட்டன. மெலோடிராமாக்களின் காட்சி உருவாக்கத்தைப் பற்றிய உரைகளாக அவை இருக்கின்றன.

பார் மகளே பார் (1963): அடையாளத்தின் நெகிழ்வுத்தன்மை

image-42.jpeg?resize=600%2C350&ssl=1

பார் மகளே பார் பெற்றால்தான் பிள்ளையா என்ற மேடை நாடகத்திலிருந்து அதன் சாரத்தை எடுத்துக்கொண்டது, அதுவே இந்தித் திரைப்படமான பர்வரிஷ் (1958) இன் தழுவலாகும். இது தழுவல் வரலாற்றுக்கு பிரபலமான இந்திய சினிமாவில் பீம்சிங்கின் செறிவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிறக்கும்போதே குழந்தைகள் மாற்றப்பட்ட மெலோடிராம உருவகத்தை மையமாகக் கொண்ட படத்தின் கதை, தவறான அடையாளம், குடும்ப கௌரவத்தின் சுமை மற்றும் கதாபாத்திரங்கள் இரத்த உறவுகளுக்கும் வளர்ப்புக்கும் இடையிலான கேள்விகளுடன் போராடும்போது ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு ஆகியவற்றை ஆராய ஒரு வளமான கதைக்களத்தை உருவாக்கியது. இறுதி நல்லிணக்கம் வம்சாவளியாக வரும் ரத்தபந்தத்தை விட விழுமியங்களை அடிப்படியாகக் கொண்ட குணத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. இப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, மற்றும் எம்.ஆர். ராதா ஆகியோர் நடித்திருந்தனர், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையும் கண்ணதாசனின் பாடல்களும், குறிப்பாக, “அவள் பறந்து போனாளே,” மிகவும் பிரசித்தியானவை.

பழனி (1965): கிராமிய வண்ணத்துடன் மெலோடிராமா

1962 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பூதானாவின் ரீமேக்கான பழனி, “ஒரு விவசாயி மற்றும் அவரது குடும்பத்தின் சோதனைக்குரிய வாழ்க்கையை” சித்தரித்தது. மெலோடிராம வகைமைக்குள் செயல்படும் அதே வேளையில், கிராமப்புற வாழ்க்கையின் அதன் அவதானிப்பு மற்றும் கலைத் திரைப்பட சாயல் (பூதானா ஒரு குறிப்பிடத்தக்க கன்னடத் திரைப்படம்) யதார்த்தத்தை முன்னிறுத்தி, பகட்டான, பாணி அணுகுமுறையை பின்னுக்குத் தள்ளியது. விமர்சகர்கள் இந்த அன்றாட இருப்பை சித்தரிப்பதில் அதன் “மெதுவான வேகத்தை” குறிப்பிட்டனர், இது மெலோடிராமாவின் வழக்கமான துரித வேகத்திற்கும் மற்றும் வியத்தகு தாளகதிக்கும் ஒரு சுவாரஸ்யமான எதிர்மறை அழகியலாகும். திருமலை அவர்களின் பிற்காலத்தைய (வணிக சினிமாவிற்குள்) வித்தியாசமான திரைக்கதைகளை எதிர்பார்த்த படம் என்று பழனியைச் சொல்லலாம். சிவாஜி கணேசன் மற்றும் தேவிகா நடித்த இப்படம் ஒரு விமர்சன வெற்றியாக அமைந்து, தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. பாடலாசிரியர் கண்ணதாசன் தனிப்பட்ட துயரத்தில் இருந்த காலத்தில் எழுதியதாகக் கூறப்படும் “அண்ணன் என்னடா” பாடலின் வரிகள், பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான வாழ்வை எவ்வாறு செறிவூட்டின என்பதற்கு உதாரணமாகும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி  மற்றும் டிஎம்எஸ் அவர்களின் உறுதுணையுடன்.

ஒளியும் உணர்வும்: பீம்சிங் – விட்டல் ராவ் கூட்டணியின் ரசவாதம்

ஏ. பீம்சிங்கின் உணர்ச்சிமிகு காவியங்களின் உயிர்நாடி, அவர் கரங்கள் கோத்த கலைஞர்களின் காட்சி நேர்த்தியால் மெருகேறியது. அவர்களுள், ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ் முதன்மையானவர். படத்தொகுப்பிலும் வல்லவரான பீம்சிங்கின் இயக்கத்தில், ‘பாகப்பிரிவினை’, ‘பாசமலர்’ போன்ற காலத்தால் அழியாக் காவியங்கள் உயிர்பெற்றன; அவரே அவற்றின் நேர்த்தியான தொகுப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விட்டல் ராவின் விழிகள் வழி விரிந்த காட்சிகள், ‘பதி பக்தி’, ‘பாகப்பிரிவினை’, ‘பாசமலர்’ தொடங்கி, பிற்காலத்திய படைப்புகளான ‘பழனி’, ‘சாந்தி’, மற்றும் இந்தி மறு ஆக்கமான ‘ராக்கி’ வரை, பீம்சிங்கின் திரைப்பயணத்தில் ஒரு தனித்துவமான, நிலையான அழகியல் முத்திரையைப் பதித்தன.

ஜெயகாந்தனின் எழுத்தோவியமான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற பீம்சிங்கின் நுட்பமான இலக்கியப் படைப்புகளின் திரையாக்கத்திலும் விட்டல் ராவின் பங்களிப்பு தொடர்ந்தது; அங்கு அவரின் ஒளிப்பதிவு, கதையின் ஆன்மாவைப் படம் பிடித்து, பெரும் பாராட்டை ஈட்டியது. இவர்களின் நீண்டகாலக் கூட்டணி, பீம்சிங்கின் உணர்ச்சிப் பிரவாகங்களை வெள்ளித்திரையில் கலைநயத்துடன் வடித்ததுடன், இருவருக்குமிடையிலான ஆழமான புரிதலையும், கலைநேர்த்தியையும் பிரகடனப்படுத்தியது.

விட்டல் ராவின் பங்களிப்பைப் புரிந்துகொள்ள, அக்காலத்திய தமிழ் சினிமாவின் காட்சிமொழிக்கு அவர் மெருகூட்டிய விதமும், மெலோடிராமாவின் மரபுகளை அவர் கையாண்ட செவ்வியல் ஒளிப்பதிவு நுட்பங்களும் ஒரு திறவுகோலாக இருக்கின்றன. உணர்ச்சிமிகு திரைக்காவியங்களில், ஒளிப்பதிவு என்பது வெறும் பதிவுக் கருவி மட்டுமல்ல; அதுவே உணர்வுகளை வடிக்கும் ஓர் அழகியல் தூரிகை. ஒளிக்கலவை, விளக்குகளின் ஜாலம், கேமராக் கோணங்கள், அதன் அசைவுகள் யாவும் கதைமாந்தரின் மனநிலையைப் பிரதிபலிக்கும், அவர்களின் அகவுலகை வெளிச்சமிட்டுக் காட்டும், உணர்ச்சித் தீவிரத்தை உச்சத்திற்குக் கொண்டுசெல்லும். கதாபாத்திரங்களின் கம்பீரத்தை உயர்த்திக் காட்ட தாழ்ந்த கோணக் காட்சிகளும், அவர்களின் கையறுநிலையையும், மன அழுத்தத்தையும் உணர்த்த உயர்ந்த கோணக் காட்சிகளும் ஒளிப்பதிவாளரின் கலைத்திறனுக்குச் சான்றுகளாகும்.

image-38.jpeg?resize=600%2C338&ssl=1

குறிப்பாக, அவரது அண்மைக்காட்சிகள் (குளோஸ்-அப்) நடிகர்களின் முகபாவனைகளில் மின்னலெனத் தோன்றி மறையும் நுட்பமான உணர்வலைகளையும், நெஞ்சை உருக்கும் வேதனையையும் அள்ளிப் பருகி, பார்வையாளர்களைக் கதாபாத்திரங்களின் உளவியல் புயலுக்குள் ஈர்த்து, அவர்களின் உணர்வுக் குமுறல்களுடன் ஒன்றிடச் செய்தது. கதை நகர்விலும், உணர்ச்சி வெளிப்பாட்டிலும் பாடல் காட்சிகள் முக்கியப் பங்காற்றின. உதாரணமாக, ‘பாலிருக்கும் பழமிருக்கும்’ பாடலில், ஸ்டுடியோ அரங்கிற்குள்ளேயே சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரை அண்மைக்காட்சிகளில் ஒளியூட்டிப் படமாக்கிய விட்டல் ராவின் திறமை, இந்திய சினிமா பாடல் படமாக்கலில் ஒரு பொன்னெழுத்து. விட்டல் ராவின் அண்மைக்காட்சி அழகியல், உணர்வுகளின் ஆழத்தை அள்ளியெடுப்பதில் நிகரற்றது.

பீம்சிங்கின் திரைப்படங்களுக்கே உரிய உணர்ச்சிமயமான உலகை உருவாக்குவதில் விட்டல் ராவின் ஒளிப்பதிவு கருவியாக விளங்கியபோதும், அது தேவையற்ற காட்சி ஆரவாரங்களில் சிக்கிக்கொள்ளவில்லை. மாறாக, பீறிடும் உணர்ச்சிகளை மிக நுட்பமாகவும், அதே சமயம் வலிமையாகவும் காட்சிப்படுத்தி, அவற்றை யதார்த்தத்தின் சாயலோடு கதைக்குள் இழையவிட்டதே அவரின் தனிச்சிறப்பு. ராவின் கேமரா, பார்வையாளர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல்பட்டது. குறிப்பாக, சிவாஜி கணேசன் போன்ற நடிப்புலக மேதைகளின் உணர்ச்சிமிகு காட்சிகளில், அவர்களின் முகபாவனைகளில் முழு கவனம் செலுத்தி, பீம்சிங்கின் மெலோடிராமாக்களுக்கு உயிர் கொடுத்தது. நெருக்கமான குடும்பச் சூழல்களையும், அக உணர்வுகளையும் ஒளியூட்டுவதில் ராவின் தேர்ச்சி, கதாபாத்திரங்களின் பிரம்மாண்டமான உடல்மொழிகளையும், சின்னஞ்சிறு உணர்வு மாற்றங்களையும் ஒருங்கே சட்டகத்திற்குள் அடக்கி, உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தவும் கேமராவின் இயக்கங்களை நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை, பரவலான பாராட்டைப் பெற்றது.

ஜெயகாந்தனின் உளவியல் யதார்த்தவாதப் படைப்புகளின் திரையாக்கத்தில் அவர் ஆற்றியப் பணி, அவரின் பன்முகத்தன்மையையும், கதையின் தன்மைக்கேற்ப – அது பிரம்மாண்டமான குடும்ப காவியமோ அல்லது ஆழமான கதாபாத்திர ஆய்வோ – தனது காட்சிப் பாணியை மாற்றியமைக்கும் அவரின் அசாத்தியத் திறனையும் பறைசாற்றியது. பீம்சிங் – விட்டல் ராவ் கூட்டணியில் உருவான காட்சிமொழி, மனித உணர்வுகளின் நுட்பமான அலைகளை, காலத்தால் அழியாத திரை ஓவியங்களாகச் செதுக்கியதில் தமிழ் சினிமாவின் நிகரற்ற அழகியல் தனித்துவம்/பாய்ச்சல்.

இந்தித் திரையில் பீம்சிங்கின் பயணம்: “மதராஸி பிக்சர்” எனும் தெற்கத்திய குடும்பப் படங்களின் தாக்கம்

image-50.jpeg?resize=600%2C452&ssl=1

ஏ. பீம்சிங்கின் இயக்கத் திறமை தமிழ் திரையுலகின் எல்லைகளைக் கடந்து, இந்தித் திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தது. தனது வெற்றிப் படைப்புகளையே இந்தியில் மறு ஆக்கம் செய்து, அங்கும் அவர் வாகை சூடினார். தங்கள் பிராந்திய உணர்வுக் காவியங்களை அகில இந்திய ரசிகர்களுக்காகத் திறம்பட மறுபடைப்பு செய்த தென்னிந்திய இயக்குநர்களின் வரிசையில், பீம்சிங் ஒரு அதிமுக்கிய ஆளுமையாக விளங்கினார். அவரது இந்திப் படங்கள், அவரின் தனித்துவமான கதை சொல்லும் பாணியையும், கருப்பொருளையும் பரந்த தேசிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ததோடு, இந்திய சினிமாவிற்குள் கதைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் துடிப்பான கலாச்சாரப் பரிமாற்றத்திற்கும் ஒரு பாலமாக அமைந்தன.

அவரின் புகழ்பெற்ற இந்தி மறு ஆக்கங்களில் சில: ‘மெயின் சுப் ரஹூங்கி’ (1962) – இது விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘களத்தூர் கண்ணம்மா’ (1960) வின் தழுவல்; ‘ராக்கி’ (1962) – இது காலத்தால் அழியாத கண்ணீர்க் காவியமான ‘பாசமலர்’ (1961) இன் மறு உருவாக்கம்; மற்றும் ‘காந்தான்’ (1965) – இது பெரும் வெற்றி பெற்ற குடும்ப சித்திரமான ‘பாகப்பிரிவினை’ (1959) இன் இந்தி வடிவம். மேலும், ‘படிக்காத மேதை’ (1960) யின் மறு ஆக்கமான ‘மெஹர்பான்’ (1967) (இதற்காக பீம்சிங் பிலிம்பேர் சிறந்த இயக்குநர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்) மற்றும் ‘சாந்தி’ (1965) யின் மறு ஆக்கமான ‘கௌரி’ (1968) ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. கே. சங்கரின் தமிழ் திரைப்படமான ‘ஆலயமணி’யின் இந்தி மறு ஆக்கமான ‘ஆத்மி’ (1968) ஐயும் அவர் இயக்கினார்.

image-47.jpeg?resize=600%2C494&ssl=1

கலைப்படைப்புகளை, குறிப்பாக மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து மறு ஆக்கம் செய்வது என்பது, தனித்துவமான சவால்களை உள்ளடக்கிய ஒரு நுட்பமான கலை. பீம்சிங்கின் பல இந்தி மறு ஆக்கங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடு, முன்னணி நடிகர்களுக்கு விருதுகளையும் பெற்றுத் தந்தன என்றாலும், தமிழ் மூலங்களுடன் ஒப்பிடுகையில், அவை சற்றே வலிமை குறைந்ததாகவோ அல்லது “நீர்த்துப் போனதாகவோ” அமைந்திருந்ததாக சில விமர்சகர்களும், ரசிகர்களும் கருதினர். உதாரணமாக, ‘மெயின் சுப் ரஹூங்கி’, மீனாகுமாரியின் தேர்ந்த நடிப்பும், சித்ரகுப்தின் இனிய இசையும் இருந்தபோதிலும், மூலமான ‘களத்தூர் கண்ணம்மா’வின் உயிர்ப்பும், முன்னணி ஜோடியின் (ஜெமினி கணேசன் – சாவித்திரியின்) ஈர்ப்பும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனின் தாக்கமும் இதில் சற்றே குறைந்திருந்ததாகக் கூறப்பட்டது. எனினும், பீம்சிங்கை இந்தி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் இப்படம் ஒரு முக்கியப் பங்காற்றியது.

image-45.jpeg?resize=600%2C451&ssl=1

‘பாசமலர்’ எனும் கண்ணீர் காவியத்தின் இந்தி வடிவமான ‘ராக்கி’, விறுவிறுப்பான கதை ஓட்டத்தைக் கொண்டிருந்தாலும், உணர்வுபூர்வமான நடிப்பில் மூலத்தை எட்டவில்லை என்பதே பொதுவான கருத்தாக இருந்தது. வட இந்திய கலாச்சார உணர்வுகளோடு இயைந்து போகும் வண்ணம், உடன்பிறப்புப் பாசத்தின் திருவிழாவான ரக்ஷா பந்தன் அன்று படத்தின் உச்சக்கட்டம் அமைக்கப்பட்டிருந்தது ஒரு புத்திசாலித்தனமான உத்தி. அசோக் குமார்-வஹிதா ரஹ்மான் பாசமிகு உடன்பிறப்புகளாக பாராட்டும் படியான நடிப்பை வழங்கியிருந்தாலும், தமிழ் மூலத்தில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் வெளிப்படுத்திய உணர்ச்சிப் பிணைப்பின் ஆழத்தையும், தீவிரத்தையும் பிரதிபலிப்பது சவாலாகவே இருந்தது. ‘ராக்கி’ திரைப்படத்திற்கு ரவி அளித்த இசை இனிமையாக இருப்பினும், அவரின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அது நிலைபெறவில்லை.

image-5-600x450.jpg?resize=600%2C450&ssl

‘பாகப்பிரிவினை’யின் மறு ஆக்கமான ‘காந்தான்’, கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. சிலர், இப்படம் அதீத மெலோடிராமாவாகவும், வழக்கமான காட்சிகளின் கோர்வையாகவும், வழமையான திரைக்கதை மற்றும் “செயற்கையான வசனங்களால்” பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கருதினர். எனினும், நூதனின் இயல்பான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், சுனில் தத் தனது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் விருதையும் தட்டிச் சென்றார். மறுபுறம், கூட்டுக் குடும்பத்தின் நுட்பமான உறவுச் சிக்கல்களைத் திறம்படச் சித்தரித்த நல்ல குடும்பச் சித்திரம் என சில ரசிகர்கள் கொண்டாடினர்.

இத்தகைய மாறுபட்ட கருத்துக்கள், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பின்னணியில் வேரூன்றிய உணர்ச்சிக் காவியங்களை வேற்று மொழிக்கு மாற்றுவதில் உள்ள உள்ளார்ந்த சவால்களைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தமிழ் பண்பாட்டுச் சூழலில் ஆழமாகப் பதிந்த சிவாஜி கணேசன் போன்ற ஒரு நடிப்பு ஆளுமையின் ஈர்ப்பையும், அவரின் தனித்துவமான நடிப்புப் பாணியையும், அல்லது மூலப்படங்களுக்கு உயிர் கொடுத்த குறிப்பிட்ட உணர்வுக் குறியீடுகளையும், சமூக-பண்பாட்டு நுணுக்கங்களையும் பிறிதொரு மொழி, பண்பாட்டுச் சூழலில் அப்படியே கொண்டுவருவது என்பது இயலாத காரியம். ‘ராக்கி’யில் ரக்ஷா பந்தன் திருவிழாவை மையப்படுத்தியது போன்ற “அகில இந்திய” ரசனைக்கேற்ற மாற்றங்கள், சில சமயங்களில் மூலப்படத்தின் ஆன்மாவை அறியாமலேயே மாற்றிவிடுவதும் உண்டு.

ஆயினும், பீம்சிங்கின் கதைக் கருக்கள், மொழிகளைக் கடந்து வணிக வெற்றியைப் பெறும் அளவிற்கு உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டிருந்தது, அவரின் கதைசொல்லல் ஆற்றலுக்குச் சிறந்த சான்று. இந்தித் திரையுலகிற்காகத் தன் கதைகளை வெற்றிகரமாக மறு ஆக்கம் செய்ததிலும், மூலப்படங்களின் தீவிரத்தை அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் உணர்ச்சி அடர்த்தி சற்றே குறைந்ததாக உணர்ந்தபோதிலும், வணிக வெற்றியை ஈட்டியதிலும் அடங்கியிருந்தது அவரின் தனித்திறன். இந்த கலாச்சார சமரசப் பயணத்தில் அவர் ஒரு தேர்ந்த வழிகாட்டியாகவே விளங்கினார். ‘காந்தான்’, ‘ராக்கி’ போன்ற படங்களின் வெற்றி, உணர்ச்சிமிகு நாடகங்களை தேசிய அளவில் அரங்கேற்றவல்ல ஒரு சிறந்த இயக்குநராக அவரின் புகழை நிலைநிறுத்தியதுடன், இந்திய சினிமாவில் பிராந்தியங்களுக்கிடையேயான கதைப் பரிமாற்றத்திற்கும் அவர் ஆற்றியப் பங்களிப்பை நல்லுதாரணமாக்கியது.

ஏ. பீம்சிங்கின் சில முக்கிய இந்தி மறு ஆக்கங்களும் தமிழ் மூலங்களும் – ஒரு ஒப்பீடு:

இந்தித் திரைப்படம் (வெளியான ஆண்டு)

தமிழ் மூலம் (வெளியான ஆண்டு)

சில குறிப்புகள்

மெயின் சுப் ரஹூங்கி (1962)

களத்தூர் கண்ணம்மா (1960)

மீனா குமாரி; கமல் ஹாசன் (குழந்தை நட்சத்திரமாக தமிழில்); மூலத்தின் உணர்வு ஆழம் இந்தியில் சற்றே குறைவு என ஒரு பார்வை.

ராக்கி (1962)

பாசமலர் (1961)

அசோக் குமார், வஹீதா ரஹ்மான். ரக்ஷா பந்தன் மையக்கரு. சிவாஜி-சாவித்திரி ஜோடியின் தீவிரத்தை எட்டுவதில் சவால்.

காந்தான் (1965)

பாகப்பிரிவினை (1959)

சுனில் தத், நூதன். கூட்டுக் குடும்பச் சித்திரம். நூதனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சுனில் தத்திற்கு பிலிம்பேர் விருது.

மெஹர்பான் (1967)

படிக்காத மேதை (1960)

அசோக் குமாருக்கு பிலிம்பேர் விருது. பீம்சிங்கிற்கு சிறந்த இயக்குநர் பரிந்துரை.

கௌரி (1968)

சாந்தி (1965)

சுனில் தத், நூதன் ஜோடி மக்களை கவர்ந்தது.

ஆத்மி (1968)

ஆலயமணி (1962) (கே. சங்கர்)

திலீப் குமார், வஹீதா ரஹ்மான். பீம்சிங் இயக்கிய கே. சங்கரின் படத்தின் மறு ஆக்கம்.

இலக்கியத் தழுவல்கள்: ஜெயகாந்தன் படைப்புகளில் பீம்சிங்கின் ஈடுபாடு

தன் திரையுலகப் பயணத்தின் பிற்பகுதியில், புகழின் உச்சியில் இருந்த ஏ. பீம்சிங் அவர்கள், தமிழ் இலக்கிய உலகின் தனிப்பெரும் ஆளுமையான ஜெயகாந்தனின் படைப்புகளுக்குத் தன் திரைக் கவனத்தைத் திருப்பினார். இது, அவரது கலைப் பயணத்தில் ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி எனலாம். மனித உறவுகளின் சிக்கல்களையும், சமூக அவலங்களையும் கூர்மையாகவும், யதார்த்தமாகவும், உளவியல் ஆழத்துடனும் அலசிய ஜெயகாந்தனின் கதைகள், பீம்சிங்கின் பிரம்மாண்டமான குடும்பப் பாங்கான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை அளித்தன. சவாலான தனிப்பட்ட மற்றும் சமூகச் சூழல்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்களின் அகவுலகை ஆராயும், ஆழமான பாத்திரப் படைப்புகளை நோக்கிய ஒரு திருப்பமாக இது அமைந்தது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (1977): இலக்கிய நயம், நுட்பம், சர்ச்சை

image-43.jpeg?resize=505%2C540&ssl=1

ஜெயகாந்தனின் விருது பெற்ற நாவலான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ (முதலில் 1970-இல் ‘தினமணி’யில் தொடராக வெளிவந்தது), அவரது புயலைக் கிளப்பிய ‘அக்னிப்பிரவேசம்’ (விகடன், 1968) சிறுகதையின் விரிவான வடிவமாகும். ஜெயகாந்தனே திரைக்கதை எழுத, வழக்கமான வணிக சினிமாவின் அம்சங்களைத் தவிர்த்து, பீம்சிங்கின் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இப்படம் அவரது கலைவாழ்வில் ஒரு தனித்துவமான முயற்சியாக அமைந்தது. பழமைவாத பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான கங்காவின் (லட்சுமி) வாழ்வில் ஒரு பாலியல் வன்முறை ஏற்படுத்தும் பேரதிர்ச்சியையும், அதன் தொடர்ச்சியாக அவள் எதிர்கொள்ளும் சமூகத்தின் தீர்ப்புகளையும், தனிப்பட்ட உளவியல் போராட்டங்களையும், இறுதியில் தன்னைத் தாக்கியவனுடனேயே (ஸ்ரீகாந்த்) அவள் கொள்ளும் சிக்கலான, மரபு மீறிய உறவையும் இப்படம் அழுத்தமாகப் பதிவு செய்தது.

நாவலின் உயிரோட்டமான, உணர்வுப்பூர்வமான திரைவடிவத்திற்காக இப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. கங்காவாக வாழ்ந்த லட்சுமியின் மகத்தான நடிப்பு, அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவின் பங்களிப்பும் படத்தின் தாக்கத்திற்குக் காரணமாகப் போற்றப்பட்டது. “திருமணம், பாலியல் மற்றும் பெண்களை சமூகம் நடத்திய விதம் குறித்த கடுமையான விமர்சனத்தை” முன்வைத்ததன் மூலம், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பாராட்டப்பட்டது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று, 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இருப்பினும், நாவலின் உரையாடல்களை அப்படியே பயன்படுத்தியதில், காட்சிபூர்வமான கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் குறைந்திருந்ததாக தமிழ் சினிமாவின் நிகரற்ற, எனது பெருமதிப்பிற்குரிய வரலாற்றாசிரியர் தியோடர் பாஸ்கரன் அவர்கள் தனது கருத்தை முன்வைத்தார். ஆயினும் சர்ச்சைக்குரிய கருப்பொருட்களை நேர்மையுடனும், உளவியல் ஆழத்துடனும் கையாண்ட பீம்சிங்கின் திறனை இந்த இலக்கிய மெலோடிராமா வெளிப்படுத்தியது. அவரது புகழ்பெற்ற ‘ப’ வரிசைப் படங்களின் சூத்திரங்களிலிருந்து விலகி, ஒரு புதிய பாதையை இது அமைத்தது. லட்சுமிக்குக் கிடைத்த தேசிய விருது, பீம்சிங்கின் இந்தத் துணிச்சலான கலைத்துவத் தேர்வை மேலும் உறுதிப்படுத்தியது. ஆசான் பாஸ்கரன் அவர்கள் கூறியபடி இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும்போது, ஆழ்ந்த உள்ளடக்கத்தை திரைக்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் இது உணர்த்தியது.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ (1978): நவீன உறவுகளின் மென்மையான அலசல்

image-31-600x600.jpeg?resize=600%2C600&s

ஜெயகாந்தனுடனான தனது வெற்றிகரமான கூட்டணியைத் தொடர்ந்து, பீம்சிங் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற படத்தை இயக்கினார். இது ஜெயகாந்தனின் அதே பெயரிலான 1971 ஆம் ஆண்டு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. மீண்டும் ஸ்ரீகாந்த், லட்சுமி இணைய, ஜெயகாந்தனே திரைக்கதை அமைக்க, இப்படம் ஒரு நவீன திருமண உறவின் நுட்பமான சிக்கல்களை ஆராய்ந்தது. நடிகையான கல்யாணிக்கும், எழுத்தாளரான ரங்கசாமிக்குமிடையிலான உறவை மையமாகக் கொண்ட கதை, வாழ்க்கை, கலை, மனிதப் பிணைப்புகள் குறித்த அவர்களின் மாறுபட்ட கண்ணோட்டங்களால் ஏற்படும் சவால்களையும், காதல், அகங்காரம் மற்றும் இறுதியில் ஏற்படும் புரிதலையும் அழகாகச் சித்தரித்தது.

ஜனவரி 1978-இல் பீம்சிங்கின் மறைவிற்குப் பிறகு இப்படம் வெளியானது. முந்தைய படத்தைப் போல் பரவலான மக்கள் வரவேற்பைப் பெறத் தவறியபோதும், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. லட்சுமி தனது சிறந்த நடிப்பிற்காக மீண்டும் கௌரவிக்கப்பட்டு, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றார். வெளிப்புற வில்லத்தனங்களோ, பெரும் சோக நிகழ்வுகளோ இன்றி, அறிவுசார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான முரண்பாடுகளிலிருந்து எழும் மோதல்களை மையமாகக் கொண்ட, நுட்பமான, உளவியல் ரீதியான மெலோடிராமாவை நோக்கி பீம்சிங் நகர்ந்ததை இப்படம் காட்டியது. வயது வந்தோருக்கான உறவுகளின் ஆழமான இயக்கவியலில் கவனம் செலுத்தியது ஜெயகாந்தனின் இலக்கியப் பாணியின் சிறப்பம்சமாகும். பரவலான மக்கள் வரவேற்பைப் பெறத் தவறியபோதும், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது, ஒருவேளை தனது காலத்தை முந்திய படைப்பாகவோ அல்லது தேர்ந்த ரசிகர்களுக்கான படமாகவோ இது இருந்திருக்கலாம் என்பதையே உணர்த்தியது.

‘கங்கை எங்கே போகிறாள்?’ – ஒரு விடைதெரியா புதிர்

ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளில், ‘கங்கை எங்கே போகிறாள்?’ (1978) என்ற நாவலும் இடம்பெறுகிறது. இது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையின் தொடர்ச்சியாக, அதன் நாயகி கங்காவின் மறுவாழ்வு நோக்கிய பயணத்தையும், அவள் ஒரு பொறுப்புள்ள வாழ்க்கையைத் தேடுவதையும் விவரிக்கிறது. முதல் நாவலின் திரைப்படத் தழுவலின் மகத்தான வெற்றியையும், தாக்கத்தையும் கருத்தில் கொள்ளும்போது, இதன் தொடர்ச்சியும் படமாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயல்பே. ஆனால், ஏ. பீம்சிங் ‘கங்கை எங்கே போகிறாள்?’ நாவலைத் தழுவி படம் இயக்கியதாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்தத் தகவலும் இல்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திற்குப் பிறகு, பீம்சிங் ‘கங்கை எங்கே போகிறாள்?’ படத்தை இயக்கினார் என்பதே வெறும் யூகம்தான்.

அத்தகைய ஒரு தழுவல் உருவாகாததற்கு, விதியின் கசப்பான விளையாட்டே காரணமாக இருக்கலாம். ஏ. பீம்சிங் ஜனவரி 1978-இல் காலமானார். ‘கங்கை எங்கே போகிறாள்?’ நாவலோ, டிசம்பர் 1978-இல் தான் முதன்முதலில் வெளியானது. இந்தக் கால இடைவெளி, பீம்சிங் அதன் திரைப்பட ஆக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. திரைவடிவம் பெறாத இந்தத் தொடர்கதை, பீம்சிங்கின் ஜெயகாந்தனுடனான வெற்றிகரமான கூட்டணியின் வரலாற்றில், ‘நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?’ என்ற ஒரு புதிரான கேள்வியாகவும், அவரது வாழ்வின் இறுதி, கலை வளம் மிக்க காலகட்டத்திற்கு ஒரு (தீவிர ரசிகர்களின்) எதிர்பார்ப்பு மிகுந்த அடிக்குறிப்பாகவும் நிலைத்துவிட்டது.

முடிவுரை: தொடரும் ஏ. பீம்சிங்கின் கதைசொல்லல் லயம்

image-37.jpeg?resize=600%2C429&ssl=1

ஏ. பீம்சிங்கின் திரையுலகப் பயணம், தமிழ் சினிமாவின் தீராத பக்கங்களில் ஒரு சிறந்த படைப்பாளியாக மட்டுமல்லாமல், உணர்வுபூர்வமான மெலோடிராமாக்களின் நிகரற்ற வித்தகராகவும், மனித வாழ்வின் ஆழமான உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்ட ஒரு திரை மேதையாகவும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளின் சித்திரங்களில் அவருக்கிருந்த ஆளுமை, குறிப்பாகப் புகழ்பெற்ற ‘ப’ வரிசைப் படங்கள், ஒரு தனித்துவமான, காலத்தால் அழியாத முத்திரையைப் பதித்தன. பெரும்பாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகத்தான நடிப்பை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட இந்தப் படங்கள், அடங்கிய சோகத்திலிருந்து ஆவேச அழுகை வரை, மனித உணர்வுகளின் முழு வீச்சையும் வெளிப்படுத்தின. இசை மேதைகள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் கவியரசர் கண்ணதாசனின் கவித்துவமான வரிகளுடனான அவரது அற்புதமான கூட்டணி, அவரது படங்களின் உணர்வுபூர்வமான தாக்கத்தை பன்மடங்கு பெருக்கியது; அந்தக் கால தமிழ் மெலோடிராமாக்களின் இதயத் துடிப்பாகவே அந்த இசை அமைந்தது.

வர்த்தக சினிமாவின் வரையறைகளுக்குள் இயங்கினாலும், பீம்சிங் தனக்கென ஒரு தனித்துவமான கருப்பொருள் மற்றும் பாணிக் கையொப்பத்தை வளர்த்தெடுத்தார். இது, தமிழ் சினிமாவில் மெலோடிராமாவின் சிற்பியாக அவரைக் கருத வழிவகுத்தது. குடும்பத்தின் புனிதமும் போராட்டங்களும், எளிய மனிதர்கள் எதிர்கொள்ளும் அறநெறிச் சிக்கல்கள், மனித உறவுகளின் இன்ப துன்பங்கள் போன்ற கருப்பொருட்களில் அவர் காட்டிய தொடர்ச்சியான ஈடுபாடு, தனது வழக்கமான வெற்றிக் கூட்டணியுடன் (சிவாஜி கணேசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் ஜி. விட்டல் ராவ், கூட்டாளிகளான திருமலை-மஹாலிங்கம்) இணைந்து, “இது பீம்சிங் படம்” என்று அடையாளம் காணக்கூடிய ஒரு தனித்துவத்தை உருவாக்கியது. தனது பல படங்களின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் படத்தொகுப்புப் பணிகளில் அவர் காட்டிய தீவிர ஈடுபாடு, ஒரு படைப்பாளியாக அவர் தன் திரைப்படைப்புகள் மீது கொண்டிருந்த முழுமையான ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. எண்ணற்ற வெற்றிப் படங்களில் வெளிப்பட்ட இந்தத் தெளிவான பார்வை, அவருக்கென ஒரு தனித்துவமான, செல்வாக்குமிக்க இடத்தைப் பெற்றுத் தந்தது.

ஏ. பீம்சிங்கின் கலைப்பயணத்தின் தாக்கம் இன்றும் ஆழமாகவே உணரப்படுகிறது. அவரது திரைப்படங்கள் கடந்த காலத்தின் நினைவூட்டல்கள் மட்டுமல்ல; அவை இன்றும் நினைவுகூரப்படுகின்றன, கொண்டாடப்படுகின்றன, தொடர்ந்து மறுபார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன. ‘பாசமலர்’ போன்ற காவியங்கள் வழிபாட்டு அந்தஸ்தைப் பெற்று, பல பத்தாண்டுகளுக்குப் பிறகும் நம் விழியோரங்களில் ஈரத்தைக் கொண்டு வருகின்றன. அவர் தன் படங்களில் திறம்படக் கையாண்ட குடும்பப் பிணைப்புகளின் பிரிக்க முடியாத வலிமை, தியாகத்தின் மேன்மை, அன்பின் என்றும் வற்றாத ஆற்றல், அறம் சார்ந்த தேர்வுகளின் சிக்கல்கள் போன்ற உலகப் பொதுவான கருப்பொருட்கள், தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களின் இதயங்களோடு உரையாடும் ஆற்றலை இன்றும் கொண்டுள்ளன. நிறுவப்பட்ட மரபுகளுக்குள் இயங்கினாலும், கதைசொல்லலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்த அவரது இயக்கம், தென்னிந்திய மெலோடிராமா திரைப்படங்களுக்கு ஒரு அளவுகோலை அமைத்தது. ஏ. பீம்சிங்கின் பாரம்பரியம், ஆழமான உணர்வுபூர்வமான நேர்மையின் வெளிப்பாடு. மெலோடிராமாவின் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுக்கும், பகட்டான சித்தரிப்புகளுக்கும் மத்தியிலும், அவரது படங்கள் மனித இயல்பைப் பற்றிய உண்மையான புரிதலிலும், தனது பாத்திரங்களின் போராட்டங்கள் மற்றும் ஏக்கங்களுக்கான ஆழ்ந்த பச்சாதாபத்திலும் வேரூன்றியிருந்தன. இந்த உணர்வுபூர்வமான நேர்மை, நட்சத்திரங்களின் உயிரோட்டமான நடிப்பாலும், உள்ளத்தை உருக்கும் இசையாலும் மெருகூட்டப்பட்டு, ரசிகர்களுடன் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியது. அவரது திரைக்குரலின் லயம் மிகுந்த தாளம் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; அவர் சிந்த வைத்த கண்ணீருக்கும், அவர் லாவகமாகத் தொட்ட இதயங்களுக்கும் ஒரு காலத்தால் அழியாத சாட்சியாக. அவரது படைப்புகள் தமிழ் சினிமாவின் வளமான கலை மரபின் மைய பகுதியாகத் திகழ்கின்றன; சினிமா தன் இதயத்தை வெளிப்படையாகப் பேசத் துணிந்த ஒரு காலத்தின் இனிய நினைவூட்டலாக.

(இந்தக் கட்டுரையில் உள்ள படங்களை வழங்கிய நிகரில்லாத நிழற்பட மேதை அமரர் டில்லி பகதூர் [அமரர் திருமலை அவர்களின் புதல்வர்], மற்றும் ஸ்டில்ஸ் ஞானம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். போலவே, அமரர் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் [அமரர் பீம்சிங் அவர்களின் புதல்வர்] அவர்களுக்கும் இக்கட்டுரையிலிருக்கும் தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு எனது இதயபூர்வ நன்றிகள்.)

[ சொர்ணவேல் ஈஸ்வரன் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மற்றும் இதழியல் துறைகளில் பேராசிரியராக உள்ளார்.]

குறிப்புகள்

பாஸ்கரன், தியோடர். ஆசிரியருடனான தொலைபேசி உரையாடல்கள். ஏப்ரல்-அக்டோபர் 2024.

பாஸ்கர், இரா, ‘உணர்ச்சி, அகவயத்தன்மை, மற்றும் ஆசையின் வரம்புகள்: பம்பாய் சினிமாவில் மெலோடிராமா மற்றும் நவீனத்துவம், 1940கள்–’50கள்’, கிறிஸ்டின் கிலெட்ஹில் (பதி.), போருக்குப் பிந்தைய சினிமாவில் பாலினம் வகையை சந்திக்கிறது (சாம்பெய்ன், IL, 2012; ஆன்லைன் பதிப்பு, இல்லினாய்ஸ் ஸ்காலர்ஷிப் ஆன்லைன், 20 ஏப்ரல் 2017), https://doi.org/10.5406/illinois/9780252036613.003.0012, அணுகப்பட்டது 14 மே 2025.

புரூக்ஸ், பீட்டர். தி மெலோடிராமேடிக் இமேஜினேஷன்: பால்சாக், ஹென்றி ஜேம்ஸ், மெலோடிராமா, அண்ட் தி மோட் ஆஃப் எக்ஸஸ். யேல் யுனிவர்சிட்டி பிரஸ், 1976.

கணேசன், சிவாஜி. ஒரு நடிகரின் சுயசரிதை. டி.எஸ். நாராயண சுவாமி (பதி.). சென்னை: சிவாஜி பிரபு அறக்கட்டளை, 2002.

கை, ராண்டார். “கடந்த காலத்திலிருந்து ஒரு (நினைவுச்)சிதறல்.” Thehindu.com. [பீம்சிங்கின் திரைப்படங்கள் குறித்த கை அவர்களின் கட்டுரைகள்.]

சுந்தரம். பி. என். எனது நேர்காணல்கள். 2007. சென்னை.

விகடன், குமுதம், கல்கி, பேசுபடம், குண்டூசி, பிலிம்பேர் மற்றும் சமூக ஊடகங்களிலிலிருந்து பெறப்பட்ட தமிழ் சினிமா விமர்சனங்கள்.

https://solvanam.com/2025/06/22/கண்ணீரும்-இசையும்-கலந்த/

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

1 week 3 days ago

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது.

இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது.

உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.

Also Read

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 week 4 days ago

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

24 Jun 2025, 9:34 AM

Drug case attracts dark life - who is Srikanth?

போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங்கு பாதிப்பால் அவர் உயிரிழந்தார்.

இளம் வயதில் தனது அண்ணனை இழந்து தவித்த ஸ்ரீகாந்தின் கவனம், மாடலிங் சினிமா பக்கம் திரும்பியது. அதன்படி தனது ஆரம்பகாலத்தில் அப்போது உதவி இயக்குநர்களாக இருந்த வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் நடிப்பு பயின்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து கதிரின் ‘காதல் வைரஸ்’ மற்றும் ஜீவாவின் ’12பி’ படங்களில் நடிக்க முதலில் தேர்வானார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் போனது. அதேபோன்று பாரதிராஜா மற்றும் பாலசந்தர் இயக்கிய படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு கிடைத்த வாய்ப்புகள் மாறிப் போயின.

image-103.png

முதல் படமே சூப்பர் வெற்றி!

எனினும் 2002ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான ‘ரோஜா கூட்டம்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. அந்த படம் ஹிட் ஆன நிலையில் அவர் மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ’சிறந்த அறிமுக நடிகர்’ என்ற விருதை பெற்ற அவர், ரசிகர்களால் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் என்று அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு சினேகா உடன் இனைந்து அவர் நடித்த ’ஏப்ரல் மாதத்தில்’, ’பார்த்திபன் கனவு’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்க, கோலிவுட் தாண்டி தெலுங்கு திரையுலக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

image-104-1024x568.png

தெலுங்கில் ஏற்கெனவே ஸ்ரீகாந்த் என்ற பெயரில் பிரபலமான நடிகர் இருந்ததால், தனது பெயரை ஸ்ரீராம் என்று பயன்படுத்தி தெலுங்கு சினிமாவில் ஓகரிகி ஓகாரு படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படமும் அவரது நடிப்புக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த வர்ணஜாலம், போஸ், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு (2005) மற்றும் பம்பரா கண்ணாலே (2005) ஆகிய படங்களும் அவர் மீதான பாசிட்டிவ் இமேஜை உயர்த்தின.

தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனரான செல்வராகவன் இயக்கிய ’ஆடவரி மாதலகு அர்த்தலே வெருலே’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் வெங்கடேஷை அடுத்து ஸ்ரீகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இந்த படம் ஆந்திராவில் பல இடங்களில் 100 நாட்கள் ஓடியது.

image-105-1024x576.png

திருமண சர்ச்சை!

இதற்கிடையே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு சர்ச்சையில் சிக்கினார் ஸ்ரீகாந்த். ரகசிய திருமணம் செய்து, 3 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு தன்னை மனைவியாக ஏற்க மறுப்பதாக எம்பிஏ பட்டதாரியான வந்தனா என்பவர் ஸ்ரீகாந்த் மீது போலீஸில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக ஒருவருடகாலமாக சட்ட போராட்டங்களை எதிர்கொண்ட அவர், 2008ஆம் ஆண்டு வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமண சர்ச்சை மற்றும் தவறான கதைத் தேர்வு உள்ளிட்டக் காரணங்களால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவின.

image-107.png

நண்பன் -ஆல் கவனம் பெற்ற ஸ்ரீகாந்த்

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து ’நண்பன்’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஜீவாவுடன் இணைந்து விஜய்யின் நண்பராக நடித்து கவனம் ஈர்த்தார்.

இதில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்க வேண்டிய அவரது திரைப்பயணம், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியதால் மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் காணாமல் போனார்.

அந்த காலக்கட்டத்தில் நிப்பு, லை, ராகல 24 கண்டலோ, ஜெய் சேனா, வை, அசலேம் ஜருகண்டி, 10th class டயரீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும், ஹீரோ, படி உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image-106-1024x572.png

இப்படி சரிவை நோக்கி அவரது திரைப்பயணம் சென்று கொண்டிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் அவரது நடிப்பில் வருடத்திற்கு தலா 6 படங்கள் வெளியாகின. ஆனால் அனைத்துமே தோல்வி படங்களாக மாறி அவருக்கு பெரிய மனவலியை ஏற்படுத்தின.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தினசரி, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ஆகிய திரைப்படங்கள் திரையங்கில் வெளியானது கூட பலருக்கு தெரியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் தற்போது போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஸ்ரீகாந்த்.

https://minnambalam.com/drug-case-attracts-dark-life-who-is-srikanth/#google_vignette

குபேரா : விமர்சனம்!

1 week 6 days ago

குபேரா : விமர்சனம்!

20 Jun 2025, 6:11 PM

dhanush kuberaa movie review june 20

ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா?

’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்?

அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர்ஷியல் பட பேக்கேஜ்’ ஆக இருக்குமா? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா உடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரஃப், தலீப் தஹில், பாக்யராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘குபேரா’ தரும் திரையனுபவம் எத்தகையது?

image-33-1024x267.png

எளியவர்களின் வலி!

திருப்பதி மலையடிவாரத்தில் பிச்சைக்காரராக இருக்கிறார் தேவா (தனுஷ்). அவரை அழைத்துச் செல்கிறது ஒரு கும்பல். அவரை மட்டுமல்லாமல், இன்னும் மூன்று பேரை வெவ்வேறு இடங்களில் இருந்து மும்பைக்குக் கூட்டிச் செல்கிறது. அவர்களது தோற்றத்தை மாற்றி, மெல்ல அவர்களைப் பணக்காரர்களாகச் சிலர் முன்பு நிறுத்துவதே அவர்களது திட்டம்.

இதன் பின்னணியில் இருக்கும் நபர் தீபக் (நாகார்ஜுனா). இவர் ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரி. நேர்மையாகச் செயல்பட்டதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர்.

அவரைச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருகிறார் தொழிலதிபர் நீரஜ் (ஜிம் சரஃப்). பதிலுக்கு, ’தனது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிற வேலையை வெளியே தெரியாமல் செய்ய வேண்டும். என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது’ என்று சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். அதனை ஏற்கிறார் தீபக்.

அதற்காகத்தான், தேவா உள்ளிட்ட நால்வரையும் ‘பினாமி’களாக மாற்றி, அவர்களது பெயரில் போலி நிறுவனமொன்றை தொடங்கி, அவற்றின் வழியே வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஏமாற்றி, கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பரிமாற்றம் செய்யத் திட்டமிடுகிறார் தீபக்.

அந்த விஷயம் நிகழும்போது பாதியிலேயே ‘பணால்’ ஆகிறது. தேவா உடன் வந்த இரண்டு பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த உண்மை தெரிய வந்தபிறகு தேவாவும் குஷ்புவும் என்னவானார்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்த விஷயத்தை மையமாக வைத்துக்கொண்டு, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடும்விதமாகத் திரைக்கதை அமைப்பதில் தவறிழைத்திருக்கிறது படக்குழு. அதில் சில ‘கிம்மிக்ஸ்’ சேர்த்திருந்தால் சுவையான திரையனுபவம் கிடைக்குமாறு செய்திருக்க முடியும்.

அதே நேரத்தில், எளியவர்களின் வலி ஒரு சமூகத்தில் வெல்லவே முடியாத வலிமையுடன் அதிகார பீடத்தில் வீற்றிருக்கிற நபர்களுக்குப் பிடிபடுகிறதா என்று சொல்வதே இக்கதையின் சிறப்பு.

image-32-1024x512.png

அசத்தும் தனுஷ்!

திரையில் படம் தொடங்கிச் சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகே தனுஷ் தலைகாட்டுகிறார். படம் முழுக்க தேவா எனும் பாத்திரமாக, அசத்தல் நடிப்பைத் தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் படம்பிடிக்கப்பட்டபோதும், அந்த வித்தியாசம் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதில் தீபக்காக நாகார்ஜுனா, அவரது மனைவியாக சுனைனா நடித்துள்ளனர். சமீரா எனும் பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களது நடிப்பு கதைக்குத் தேவையான வகையில் உள்ளது.

ராஷ்மிகா இதில் யாருக்கு ஜோடி என்ற கேள்வி திரைக்கதையில் இருப்பது சிறப்பானதொரு விஷயம்.

அதே நேரத்தில், அவர் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் விவரமாகத் திரையில் சொல்லப்படவில்லை. நாகார்ஜுனாவின் தீபக் பாத்திரம் நல்லதா, கெட்டதா என்பதைச் சொல்லவும் இயக்குனர் தடுமாறியிருக்கிறார்.

‘இது என்னாச்சு’, ‘அது என்னாச்சு’ என்று ரசிகர்கள் கேட்கும்விதமாகச் சில விஷயங்களை ‘அம்போ’வென்று திரைக்கதையில் நிறுத்தி வைத்திருக்கிறார். அனைத்தையும் தாண்டி, இப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஓடுகிறது. அதனைச் சரி செய்யும் வகையில் கொஞ்சம் திரைக்கதையைச் செறிவானதாக ஆக்கியிருக்கலாம்.

கூடவே, வில்லனின் ஆட்கள் மற்றும் இதர பாத்திரங்களூக்கான முக்கியத்துவத்தையும் அதிகப்படுத்தியிருக்கலாம். சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தை இதற்கான உதாரணமாகக் கொண்டிருக்கலாம்.

சைதன்யா பிங்கலி உடன் இணைந்து இதற்குத் திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார் சேகர் கம்முலா. அகோரம் பன்னீர்செல்வத்தின் தமிழ் வசனங்கள் ஆங்காங்கே நம்மை ஈர்க்கின்றன. ‘உன் சாவை நீ சாவு, என் சாவை நான் சாவுறேன்’, ‘வாழ்றதுக்காகத்தான் பொழைக்கணும்’ என்பது போன்ற வசனங்கள் முதலில் அயர்ச்சியூட்டினாலும், அடுத்தடுத்து ஒலிக்கையில் கைத்தட்டலை பெறுகின்றன.

இந்த படத்தில் வில்லனாக வரும் ஜிம் சரஃப் அசத்தியிருக்கிறார். இன்னும் தலீப் தஹில், பாக்யராஜ் என்று சில சீனியர்கள் திரையில் வந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, பாக்யராஜை அவரது குரல் கொண்டே அடையாளம் காண முடிகிறது. தெலுங்கு பதிப்பில் அப்பாத்திரத்திற்கு அவரே ‘டப்பிங்’ பேசியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

கேலு, திவ்யா, குஷ்புவாக நடித்தவர்கள், அடியாட்களாக வருபவர்கள் உட்படச் சிலருக்குச் சரியான முக்கியத்துவம் திரைக்கதையில் தரப்படவில்லை. அவை உறுத்தலாகத் தென்படுகின்றன.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியன படத்தை ‘கலர்ஃபுல்’லாக காட்ட உதவியிருக்கின்றன.

கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

இது போக ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ என்று பல நுட்பங்கள் கதை சொல்லலுக்கு உதவியிருக்கின்றன.

தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை முன்பாதியில் இருக்கும் மந்தத்தன்மையை நன்றாகவே மறைத்திருக்கிறது. பின்பாதியில் அதனைச் சரிக்கட்டத் திணறியிருக்கிறது. ஆனாலும், ‘கத கத’, ‘போய்வா நண்பா’ பாடல்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன.

நாகார்ஜுனா, தனுஷ் ஆகிய இரண்டு நடிகர்களைக் கொண்டு திரையில் ‘ஆடு புலி ஆட்டம்’ ஆட முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், அது சரிவர அமையப் பெறவில்லை என்பதே உண்மை.

கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி வலிந்து திணிக்கப்பட்டாற் போல உள்ளது. ஜிம் சரஃப் பாத்திரம் பற்றி இறுதிக்காட்சியில் தனுஷ் பேசுகிற வசனங்களுக்கும் அதனைத் தொடர்ந்தாற் போல இடம்பெற்ற சண்டைக்காட்சிக்கும் பெரிதாகத் தொடர்பு ஏதும் இல்லை.

ஆக்‌ஷன் காட்சிகளில் நாகார்ஜுனாவையும், வசனங்கள் மற்றும் நடிப்பு வழியே தனுஷையும் திரையில் காட்டி ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், இரண்டுமே போதுமான அளவு படத்தில் எடுபடவில்லை என்பதுதான் குறை.

அதேநேரத்தில், சமீபகாலமாக வந்த ‘பான் இந்தியா’ மற்றும் பிரமாண்ட படங்களைக் காட்டிலும் வேறுபட்டதொரு திரையனுபவத்தைத் தருகிறது ‘குபேரா’. இதிலிருக்கிற லாஜிக் மீறல்கள், அடிப்படைக் குறைகள் உள்ளிட்டவற்றைப் புறந்தள்ளிவிட்டால், ஓரளவுக்கு வேறுபட்ட கமர்ஷியல் படம் பார்த்த எண்ணம் மனதில் உருவாகும். அது போதும் என்பவர்கள் மட்டுமே ‘குபேரா’வை பார்த்துச் சிலாகிக்க முடியும்..!

https://minnambalam.com/dhanush-kuberaa-movie-review-june-20/

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

3 weeks ago

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

14 Jun 2025, 1:18 PM

folk singer kollangudi karuppayi passed away

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார்.

இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார்.

Kollangudi-Karuppayi.jpg

தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார்.

இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://minnambalam.com/folk-singer-kollangudi-karuppayi-passed-away/

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

4 weeks 1 day ago

1364376.jpg

‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா?

டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொந்த மகன் போல வளர்க்கிறார். தன் அண்ணன் மாணிக்கத்தின் (நாசர்) மகளின் தற்கொலைக்கு காரணமானவனை கொன்று விட்டு ஜெயிலுக்கு செல்கிறார் சக்திவேல். இதனால் தன்னுடைய பொறுப்புகளை (?) அமரனிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன பிறகு தன்னை விட மற்றவர்கள் அமரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சக்திவேலுக்கு நெருடுகிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு தாக்குதலுக்கும் கூட அமரன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இது இருவருக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பதே ‘தக் லைஃப்’ படத்தின் திரைக்கதை. (படத்தில் இடம்பெறும் சிறிய ஸ்பாய்லர்கள் இதில் அலசப்பட்டுள்ளதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்.)

சில நேரம் நாம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செல்லும் படங்கள் நம்மை மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாக்கி நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேறு சில படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் செல்லும் பார்வையாளர்களை ஏமாற்றி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதில் ‘தக் லைஃப்’ இரண்டாவது வகை. காரணம், கமல்ஹாசன் - மணிரத்னம் என்ற இந்திய சினிமாவின் இரு பெரும் ஆளுமைகள் இப்படத்தில் இருந்தும் இப்படத்தை ஓரளவுக்கு கூட பார்வையாளர்கள் ரசிக்கும்படி கொடுக்க முடியாமல் போனது பேரதிர்ச்சி.

படம் ஒரு ஃப்ளாஷ்பேக் உடன் தொடங்குகிறது. படத்தின் ஒரு சில நல்ல அம்சங்களில் இந்தக் காட்சியும் ஒன்று. கமலுக்கான டீஏஜிங் தொழில்நுட்பம் அசத்தலான ஆச்சர்யம். இதற்கு முன்பு வந்த படங்களில் இல்லாத நேர்த்தியும், துல்லியமும் இதில் இருந்தது. இளவயது சிம்புவுக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகளும், பின்னணியில் ஒலிக்கும் ‘அஞ்சுவண்ண பூவே’ பாடலும் நன்று. ஆனால், இதன்பிறகு சமகாலத்துக்குப் படம் வந்ததும் திரைக்கதை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி தட்டையாக நகரத் தொடங்குகிறது.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. மணிரத்னம் படங்கள் என்றாலே வசனங்கள் மூலமாக கதையை சுவாரஸ்யமாக நகர்த்துவதில் வல்லவர் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால், அதற்காக ‘போதும் போதும்’ என்று சொல்லும் அளவுக்கு எல்லா காட்சியையுமே வசனத்திலேயே நகர்த்தி இருக்கிறார். கமலுக்கும் சிம்புவுக்குமான பிணைப்பு, அதன் பிறகு இருவருக்குள்ளும் எழும் சின்ன ஈகோ, சிம்பு மீது கமலுக்கு ஏற்படும் பொறாமை, நாசருக்கும் கமலுக்கும் அப்படி என்ன பகை என எந்த காட்சியிலும் அழுத்தமோ, மெனக்கெடலோ இல்லை. போகிற போக்கில் வசனத்திலேயே அவரவர் தங்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சொல்லிவிட்டு போகிறார்கள்.

த்ரிஷா கதாபாத்திரம் எழுதப்பட்ட விதமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. த்ரிஷா வீட்டில் இருந்து கமல் தன் வீட்டுக்குச் செல்லும் ஒரு காட்சியில் முகத்தில் வெறுப்பை காட்டுகிறார் த்ரிஷா. அதன் பிறகு இரண்டாம் பாதி முழுக்க கமலை நினைத்து உருகுகிறார். உண்மையில் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன, அவர் யார் என எதிலும் தெளிவில்லை. இதே கதைதான் அபிராமி - கமல் இடையிலும். கணவன் இன்னொரு பெண்ணுடன் இருந்துவிட்டு வந்து கொஞ்சம் எமோஷனலாக பேசியதுமே விழுந்து விடுகிறார் அபிராமி.

17491124081138.jpg

திடீரென சம்பந்தமே இல்லாமல் நேபாளம் செல்கிறார் கமல். அங்கு இடைவேளை வைக்கவேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்ட ஒரு காட்சி. அடிபட்டு, குண்டடி வாங்கி, மலையிலிருந்து கீழே விழுந்து எதுவுமே ஆகாமல் மீண்டும் விழுந்து, பனிப்புயலில் இருந்து தப்பித்து… உஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. ஒருகணம் நாம் பார்த்துக் கொண்டிருப்பது மணிரத்னம் படம்தானா என்ற சந்தேகமும் பல இடங்களில் சற்று அதிகமாகவே வருகிறது.

நேபாளத்தில் இரண்டு வருடம் கமல் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொள்வதாக காட்டுகிறார்கள். (அதுவும் வசனத்திலேயே வந்துவிடுகிறது) அதற்காக போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த தற்காப்பு உடையையே அணிந்துதான் செல்ல வேண்டுமா? முதல் பாதியில் ரங்கராய சக்திவேலாக இருந்த கமல், இரண்டாம் பாதியில் ‘இந்தியன்’ தாத்தா மோடுக்கு மாறிவிடுகிறார். படத்தில் இருந்த வெகுசில நல்ல காட்சிகளில் ஒன்றாக கமலும் ஐஸ்வர்யா லட்சுமியும் பேசிக் கொள்ளும் காட்சியை சொல்லலாம்.

ஒரு படத்தின் திரைக்கதை சொதப்பிவிட்டால், அதில் இடம்பெறும் நல்ல விஷயங்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடும் என்பதற்கு இந்தப் படமே சரியான உதாரணம். கமலின் நடிப்பு, சிம்புவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், ரஹ்மானின் பாடல்கள், ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு என பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தும் இவை எதுவும் நம்மை படத்துக்குள் இழுக்கவில்லை. இந்தப் படத்தில் எதற்காக ஜோஜு ஜார்ஜ், ‘மிர்சாபூர்’ அலி ஃபஸல், அசோக் செல்வன், சேத்தன் போன்ற நல்ல நடிகர்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

வழக்கமாக நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர்களாக வருகின்றன என்று சொல்வோம். ஆனால், இங்கு ஏற்கெனவே தொங்கி துவண்டு போயிருக்கும் படத்தில் ஆங்காங்கே வரும் பாடல்கள்தான் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஜிங்குச்சா’, ‘அஞ்சுவண்ணப் பூவே’ பாடல்கள் சிறப்பு. சின்மயி வெர்ஷனா, தீ வெர்ஷனா என்ற ரசிகர்கள் இணையத்தில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், உங்களுக்கு இந்த இரண்டு பாடலுமே கிடையாது என்று அதை தூக்கி கடாசியிருக்கிறார் இயக்குநர். மற்றொரு வைரல் பாடலான ‘விண்வெளி நாயகா’ பாடலும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டத்தை போல கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்.

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா? | Thug Life Movie Review - hindutamil.in

"கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது" - கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்

1 month ago

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்

50 நிமிடங்களுக்கு முன்னர்

கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்" எனத் தெரிவித்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (மே 30) அன்று, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்காவிட்டால், ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தினை புறக்கணிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், "இதற்கு முன்பும் மிரட்டப்பட்டிருக்கிறேன். நான் தவறு செய்திருந்தால், மன்னிப்பு கேட்பேன். இல்லையென்றால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இது என்னுடைய வாழ்க்கை முறை, தயவுசெய்து இதில் தலையிடாதீர்கள்." என்று கூறியிருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

படக்குறிப்பு, வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகாது

இதையடுத்து 'தக் லைஃப்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 2) மனு தாக்கல் செய்தது.

"கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட தடை விதித்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, திரையிட அனுமதிக்க வேண்டும். திரையரங்கங்களுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக அரசுக்கும், போலீஸுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

லைவ் லா (Live Law) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி, இந்த மனுவை இன்று காலை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா விசாரித்தார். கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா ஆஜரானார்.

அப்போது பேசிய நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த நாடு மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொது வெளியில் இருக்கும் ஒரு நபர் இவ்வாறு பேசக் கூடாது." எனக் கூறினார்.

மேலும், "கர்நாடகா மக்கள் மன்னிப்பை மட்டுமே கேட்கிறார்கள். தற்போது நீங்கள் பாதுகாப்புத் தேடி இங்கே வந்திருக்கிறீர்கள். தற்போதைய சூழ்நிலை கமல்ஹாசனால் உருவாக்கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.

நீங்கள் கர்நாடக மக்களின் உணர்வுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். எந்த அடிப்படையில் இதைச் செய்தீர்கள்? நீங்கள் வரலாற்றாய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதி எம். நாகபிரசன்னா, 'கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதால், தன்னுடைய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டுமென' அறிவுறுத்தினார்.

மீண்டும் மதிய வேளையில் நீதிமன்றம் கூடியபோது, நடிகர் கமல்ஹாசனின் வழக்கறிஞர் தியான் சின்னப்பா, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கடிதத்தில் கமல்ஹாசன் கூறியது என்ன?

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

படக்குறிப்பு, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம்

கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 3) எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், "புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் 'தக் லைஃப்' ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது என் நோக்கம் அல்ல என்பதையும் தெரிவிப்பதுதான் நான் சொன்ன வார்த்தைகள்.

கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனக்குள்ள பிணைப்பு நிலையானது மற்றும் இதயப்பூர்வமானது." என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், "சினிமா என்பது மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது இந்த அறிக்கையின் நோக்கம்." என்று தெரிவித்துள்ளார்.

"எனது வார்த்தைகள், அவற்றுக்கான உண்மையான நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கர்நாடகா, அதன் மக்கள் மற்றும் அவர்களின் மொழி மீதான எனது உண்மையான பாசம் அங்கீகரிக்கப்படும் என்றும் நான் மனதார நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

ஜூன் 10ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கமல்ஹாசன், கர்நாடகா, தக் லைஃப் திரைப்படம், தமிழ்

பட மூலாதாரம்,@RKFI

கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தை மேற்கோள் காட்டி பேசிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா, "இந்த கடிதத்தில் 'மன்னிப்பு' என்ற வார்த்தை காணப்படவில்லை" என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தியான் சின்னப்பா, "கட்டாயப்படுத்துவது என்பது இருக்கக்கூடாது" என்றார்.

"இது கட்டாயப்படுத்துவது அல்ல, அவருக்கு இருக்கவேண்டிய பண்பு. அவர் ஏன் சுற்றிவளைத்துப் பேசுகிறார்?" என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் "கன்னட மொழியின் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பது தான் அவரது நிலைப்பாடு." என்று கூறினார்,

"அதைத் தெளிவுபடுத்த பல வழிகள் உள்ளன. மன்னிப்பு கேட்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. இங்குதான் நீங்கள் ஈகோவை பற்றிக்கொண்டிருக்கிறீர்கள். மாநில மக்களின் உணர்வுகள் தான் குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டுள்ளன. பிரச்னையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது வேறு எதற்கோ வழிவகுக்கும். மன்னிப்புக் கேட்டு இந்த விஷயத்தை முடித்து வைத்தால் என்ன?" என்று கூறினார் நீதிபதி.

"கமல் ஹாசன் சொல்ல வேண்டிய அனைத்தையும் தெரிவித்துவிட்டார். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர் கர்நாடகாவில் தனது படத்தை வெளியிட விரும்பவில்லை" என்று வழக்கறிஞர் தியான் வாதத்தை முடித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தனது படத்தை தற்போது கர்நாடகாவில் வெளியிட விரும்பவில்லை என்பதை பதிவு செய்து கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம், அனைத்து தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை வழக்கை ஒத்திவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம், கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev4k22ngvko

இந்தி எதிர்ப்பும், இளையராஜாவும் - தமிழ்த் திரையிசையின் மறுமலர்ச்சி நாயகன் ஆனது எப்படி?

1 month ago

இளையராஜா, இளையராஜா பிறந்த நாள்

பட மூலாதாரம்,ILAIYARAAJA_OFFL/INSTAGRAM

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஐம்பதாண்டுகளில், தமிழ்த் திரையிசையில் இளையராஜா தொட்டிருக்கும் உயரங்கள் இதுவரை யாரும் தொடாத ஒன்று. தமிழ்த் திரையுலகில் அவர் ஏன் ஒரு மகத்தான சாதனையாளர்?

தமிழ்த் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதனின் தீவிரம் குறைய ஆரம்பித்த 1970களில், இந்தித் திரைப்படப் பாடல்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்த காலகட்டம். 'தம் மரோ தம்' (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா), "ப்யார் திவானா ஹோதா ஹை" (கடி பதங்), 'சுரா லியா ஹை தும்னே ஜோ தில் கோ' (யாதோங் கி பாரத்) போன்ற பாடல்களின் மூலம் ஆர்.டி. பர்மன் தமிழ் மனங்களைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். தமிழ்த் திரையுலகிலும் பல மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும், சட்டென ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக ஏதும் இல்லை.

இந்த நிலையில்தான் 1976ஆம் ஆண்டில் அன்னக்கிளி திரைப்படம் வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், தமிழ்நாட்டின் திரைப்பட ரசனையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.

ரசிகர்களை கட்டிப்போட்ட 'அன்னக்கிளி'

அந்த காலகட்டத்தில் இந்த மாற்றம் எப்படியானதாக இருந்தது என்பதை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய 'தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்' நூலில், இளையராஜா பற்றிய ஒரு கட்டுரையில், பேராசிரியர் ஒருவர் நினைவுகூர்ந்திருந்தார்.

"நாங்கள் அப்போது தீவிர தமிழ் உணர்வோடு இருந்தோம். இந்தி எதிர்ப்புணர்வு கொண்டவர்கள். ஆனால், பாடல்கள் கேட்பதென்றால் இந்திப் பாடல்கள்தாம். தஞ்சாவூரில் நாங்கள் இருந்த பகுதியில் என் வயதைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கூடும் டீக்கடையில் இந்திப் பாடல்களே போடுவார்கள். நாங்கள் அவற்றின் ரசிகர்கள்.

திடீரென ஒரு நாள் அலைபோல, 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்ற பாடல் வந்தது. அன்னக்கிளி படம் வந்து ஒரு சில நாட்கள் ஓடிய பின் எடுத்துவிட்டார்கள். ஆனால், பாடல்கள் பிரபலமானதையொட்டி, அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் திரையிட்டார்கள். படம் நூறு நாட்களைத் தாண்டியது.

இப்பாடல்கள் வந்த பிறகு ஒரே நாளில் இந்திப் பாடல்களைவிட்டு, தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் பழக்கத்துக்கு மாறிப்போனோம், அந்த அளவுக்கு அப்பாடல்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தன" என அந்தப் பேராசிரியர் கூறியிருந்தார்.

இளையராஜா, இளையராஜா பிறந்த நாள், தியோடர் பாஸ்கரன்

பட மூலாதாரம்,THEODORE BASKARAN/FACEBOOK

படக்குறிப்பு, தியோடர் பாஸ்கரன், திரைப்பட ஆய்வாளர்

அன்னக்கிளி படத்தைப் பொறுத்தவரை, 70களுக்கே உரிய வழக்கமான கதையைக் கொண்ட திரைப்படம் அது. ஆனால், அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை வேறு தளத்தில் நிறுத்தின.

"எதிர்பார்க்கக்கூடிய சம்பவங்களைக் கொண்ட வழக்கமான இந்தத் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. ஒன்று, இந்தப் படம் முழுக்க முழுக்க தெங்குமரகடா என்ற அழகிய கிராமத்தில் படமாக்கப்பட்டிருந்தது. செட் ஏதும் போடப்படாமல், இருந்ததால் அந்த நிலப்பரப்பை அப்படியே திரையில் கொண்டுவந்தது இந்தப் படம்.

இரண்டாவதாக, இளையராஜா என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்ற பாடல் வெளிவந்த சில வாரங்களிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்தது. இந்தப் படத்தின் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு மிகப் பிரபலமாக இருந்தன," என தன்னுடைய The Eye of the Serpent நூலில் குறிப்பிடுகிறார் பிரபல திரைப்பட ஆய்வாளரான தியோடர் பாஸ்கரன்.

இந்தப் படம் இளையராஜாவுக்கு மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகுக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழ்த் திரையிசையின் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார் இளையராஜா. ஒரு இசையமைப்பாளரின் அன்னக்கிளிக்குக் கிடைத்த வெற்றியால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இளையராஜாவை நோக்கிப் படையெடுக்க, அடுத்த சில ஆண்டுகளுக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துக் குவித்தார் இளையராஜா. 1979ஆம் ஆண்டில் மட்டும் 29 படங்கள் அவரது இசையில் வெளிவந்தன.

மௌனத்தை ரசிக்க வைத்த ராஜா

இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இருந்தால் போதும், படம் வெற்றிப் படமாகிவிடும் என்ற நிலை உருவாகியது. 70களிலும் 80களிலும் பிரபலமாக இருந்த இயக்குனர் மகேந்திரன் இதற்கு சில உதாரணங்களை தன்னுடைய 'சினிமாவும் நானும்' கட்டுரையில் சொல்கிறார்.

இயக்குநர் மகேந்திரன், இளையராஜா, இளையராஜா பிறந்த நாள்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, "இளையராஜாவின் உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" - இயக்குநர் மகேந்திரன்

அதாவது, ரஜினிகாந்த் நடித்த 'முள்ளும் மலரும்' படத்துக்கு பின்னணி இசையைச் சேர்ப்பதற்கு முன்பாக, படத்தை பார்த்த தயாரிப்பாளர்கள் மகேந்திரனைத் திட்டித் தீர்த்துவிட்டனராம். இதற்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை சேர்க்கப்பட்டு, படம் ரிலீஸானதும் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, தொகையைக் குறிப்பிடாமல் காசோலையை எழுதி மகேந்திரனிடம் கொடுத்தார்களாம் தயாரிப்பாளர்கள்.

படத்தின் வெற்றிக்குக் காரணமே இளையராஜாதான் என்கிறார் மகேந்திரன். அதேபோல, 'உதிரிப்பூக்கள்' படத்துக்கு அவரது இசை கிடைத்திருக்காவிட்டால் அது எதிரிப்பூக்களாகியிருக்கும் என்கிறார் அவர்.

"முள்ளும் மலரும் தொடங்கி எனது படங்களை எல்லாம் நீங்கள் மனதார உணர்ந்து, நுகர்ந்து பாராட்டுவதற்கு உண்மையான காரணம் இளையராஜாதான். என் மனம் எண்ணியதையெல்லாம் பார்வையாளனிடம் இசை அலைகளாகக் கொண்டுபோய் சேர்த்தவர் இளையராஜா. அவரது உன்னத இசைப் புலமை உதவியிராவிட்டால், எனது படங்களின் மௌனத்தை நீங்கள் ரசித்திருக்கவே முடியாது" என்கிறார் மகேந்திரன்.

ஐந்து ஆண்டுகளில் 100 படங்கள்

ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்தாலும், இதில் பெரும்பாலான பாடல்கள் மனதைக் கவரும் வகையில் இருந்தன. படத்திற்கு ஒரு பாடலாவது எல்லோரும் முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது. 1975ல் அறிமுகமான இளையராஜா, 1980லேயே 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலுமகேந்திராவின் மூடுபனிதான் அவரது நூறாவது படம். 1983ல் 200வதுபடமான ஆயிரம் நிலவே வா வெளியானது. 1989 - 90ல் ஐநூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருந்தார் இளையராஜா. 2016ல் அவரது 1000வது படமாக தாரை தப்பட்டை படம் வெளியாது. இந்தப் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது, அறிமுகமாகி நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் அவரது இசையில் நீடித்துவரும் உன்னதத்தைக் காட்டுவதாக இருந்தது.

இளையராஜா, இளையராஜா பிறந்த நாள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது

படம்‌ ஓடும்‌ தியேட்டருக்கு வெளியே நின்றபடியே அவரது பின்னணி இசையின்‌ மூலம்‌, "இதோ இங்கே அந்தக்‌ கதாபாத்திரம்‌ வருகிறது... அந்த. இருவர்‌ இப்போது சந்திக்கிறார்கள்‌... இந்த இசையின்போது அந்த கேரக்டரின்‌ மெளனம்‌ திரையில்‌ வருகிறது..." என்று நம்மை உணர வைக்கும்‌ அசாத்திய இசை ஆளுமை ராஜாவினுடையது. இளையராஜாவுக்கு முன்னும்‌ பின்னும்‌ எத்தனையோ இசைமேதைகள்‌ திரையுலகில்‌ கோலோச்சினர்‌. ஆனால்‌, பின்னணி இசையில்‌ இளையராஜாவுக்கு மட்டுமே ஒரு தனித்துவம்‌ உள்ளது. அது அவருக்கே உரித்தான சிம்மாசனம்‌. அவரைத்‌ தவிர வேறு யாரும்‌ அதில்‌ அமர முடியாது எனக் குறிப்பிடுகிறார் மகேந்திரன்.

இசையில் மறுமலர்ச்சி

திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக அவர் அறியப்படுவதற்கு மற்றுமொரு காரணம் "அரண்மனைகளிலும் அக்ரஹாரத்திலும் இருந்த தமிழ் சினிமா அவர் காலத்தில் கிராமத்தை நோக்கிக் கிளம்பியதுதான். கண்ணுக்கெட்டும் தூரம்வரை நிலப்பரப்பைக் காட்டும் கேமராக்களும் கலர் ஃபிலிம்களும் அதிகப் பயன்பாட்டுக்கு வந்தபோது அதற்குரிய இசையை இளையராஜா வைத்திருந்தார்" என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

யுகபாரதி, இளையராஜா, இளையராஜா பிறந்த நாள்

பட மூலாதாரம்,YUGHABHARATHI/INSTAGRAM

படக்குறிப்பு, திரையிசையின் மறுமலர்ச்சி நாயகனாக இளையராஜா அறியப்படுவதாகக் கூறுகிறார் பாடலாசிரியர் யுகபாரதி

இது குறித்து பிபிசியிடம் பேசிய யுகபாரதி, தமிழ் மீது அவருக்கு இருந்த புலமை அதற்கு முக்கியமான காரணம் என்கிறார் அவர். "தமிழின் பிரபல இசையமைப்பாளர்களில் பலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை. ஆனால் இளையராஜா தமிழின் வளமான சந்தக் கட்டுமானத்தை உள்வாங்கியவர். தமிழ் நிலப்பரப்போடு நேரடிப் பரிச்சயம் கொண்டவர். இதனால்தான் இளையராஜாவின் இசை தமிழரின் இசையாக மலர்ந்தது" என்று கூறும் யுக பாரதி, எளிய சந்தங்களையும் மக்களின் வழக்கில் உள்ள வார்த்தைகளையும் பாடல்களில் தந்தவர் இளையராஜா என்கிறார்.

"60களின் துவக்கத்தில் வெளிவந்த குலமகள் ராதை திரைப்படத்தில், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு பாடல் இருக்கிறது. அதே போன்ற பாடல், இளையராஜாவின் இசையில் வரும்போது 'உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல' என்று மாறிவிடுகிறது. அதேபோல, அருணகிரி நாதரின் 'ஏறுமயிலே ஏறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று' என்ற சந்தம், இளையராஜாவின் இசையில் 'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு' என்று மாறிவிடுகிறது. அதாவது, செவ்வியல் சந்தங்களை மக்கள் வழக்கில் உள்ள சந்தங்களாக மாற்றினார் இளையராஜா." என்கிறார் யுகபாரதி

இதே கருத்தை எதிரொலிக்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம். "இளையராஜா பொதுவாக மெலடி, காதல், சோகப் பாடல்களுக்காக சுட்டிக்காட்டவும் பாராட்டவும் படுகிறார். ஆனால், அவரிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு.

இளையராஜா தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகுதான் மாற்றம் என்பது இசையில் மட்டுமில்லாமல், பாடல்களிலும் தென்பட ஆரம்பித்தது. எளிமையான வார்த்தைகள், நேரடித்தன்மை கொண்ட பாடல்கள் இவரது வருகைக்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் தென்பட ஆரம்பித்தது. இளையராஜாவும் அவரது சகோதரர் பாவலர் வரதராஜனும் இடதுசாரி மேடைகளில் எளிய, பிரசாரத்தன்மை கொண்ட பாடல்களைப் பாடியவர்கள்.

இளையராஜா திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கியபோது அந்த அம்சம் வெளிப்பட ஆரம்பித்தது. அப்படி நேரடித் தன்மை கொண்ட பல பாடல்களை இளையராஜாவின் இசையில் எழுதியவர் அவரது சகோதரரான கங்கை அமரன் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம்" என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ஸ்டாலின் ராஜாங்கம், இளையராஜா, இளையராஜா பிறந்த நாள்

பட மூலாதாரம்,STALINRAJANGAM/INSTAGRAM

படக்குறிப்பு, இளையராஜாவிடம் இயல்பாகவே ஒரு நாட்டுப்புற மரபும் எளிமையும் உண்டு என்கிறார், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

மொழிப் பார்வை

இளையராஜாவைப் பொறுத்தவரை, மொழிசார்ந்த பார்வையும் கூர்மையாக இருந்ததால் தமிழ் வார்த்தைகளைச் சிதைக்காத அளவில் அவரால் இசையமைக்க முடியும். பாபநாசம் சிவனுக்குப் பிறகு இளையராஜாவுக்குத்தான் சந்தங்களுடன் செய்யுள் இயற்றும் ஆற்றல் இருந்ததாகக் கருதுகிறேன் என்கிறார் யுகபாரதி. மேலும் ஒரு ராகத்தை எப்படியெல்லாம் பாடலாக மாற்ற முடியும் என்பதில் அவர் யாரும் அடைய முடியாத உயரங்களை அடைந்திருந்தார் என்கிறார் யுகபாரதி. இது தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் நினைவுகூர்கிறார் அவர்.

"ஒரு படத்திற்காக பாடல் எழுத வேண்டியிருந்தது. மூன்று ட்யூன்கள் அடங்கிய கேஸட்டை என்னிடம் கொடுத்து, மூன்றாவது ட்யூனுக்கு பாட்டெழுதும்படி சொல்லப்பட்டது. நானும் எழுதிவிட்டேன். அடுத்த நாள் இளையராஜாவை பாடலுடன் போய்ப் பார்த்தேன். அவர் பாடல் ஒலிப்பதிவுக்காக சேர்ந்திசைக் குழுவுடன் தயாராக இருந்தார். பிறகு பாடலை வாசித்துப் பார்த்தவர், அது ட்யூனுடன் பொருந்தவில்லையே என்றார். எனக்குக் குழப்பமாகிவிட்டது.

பிறகுதான் நேர்ந்த குழப்பம் புரிந்தது. அதாவது, கேஸட்டை என்னிடம் கொடுத்தவர், இரண்டாவது ட்யூனுக்கு பாட்டெழுத வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக மூன்றாவது ட்யூனுக்கு எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனை இளையராஜாவிடம் விளக்கிவிட்டு, இரண்டாவது ட்யூனுக்கு நாளை எழுதிவருவதாகச் சொன்னேன். ஆனால், இளையராஜா என்னைக் கையமர்த்தினார். பிறகு உள்ளே சென்று தனது இசைக் குழுவினரிடம் சில மாற்றங்களைச் சொன்னார். பிறகு நான் எழுதிவந்த பாடலையே, இரண்டாவது ட்யூனில் பொருத்தினார்.

அதாவது அவரைப் பொறுத்தவரை எல்லா இசையும் ஒன்றுதான். கேட்பவர்களுக்குத்தான் அது வேறு,வேறு. இந்த சம்பவத்தை நேரில் பார்க்காவிட்டால் யாராலும் நம்பவே முடியாது" என்கிறார் யுகபாரதி. அழகர்சாமியின் குதிரை படத்தில் இடம்பெற்ற "பூவைக் கேளு, காத்தைக் கேளு" என்ற பாடல்தான் அது.

திரையிசையைத் தவிர்த்து, இளையராஜா மேற்கொண்ட, தனியான ஆல்பங்கள், சிம்பனி உள்ளிட்ட பிற முயற்சிகளும் கவனிக்கத்தக்கவைதான். ஆனால், கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் பேசும் ஒவ்வொருவரது காதலிலும் சோகத்திலும் பிரிவிலும் மகிழ்ச்சியிலும் கேட்க சில இளையராஜா பாடல்களாவது உண்டு. இது வேறு யாரும் நிகழ்த்தாத சாதனை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgeg84x8q15o

இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல்

1 month ago

மாமன் படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சூரியின் மாமன் திரைப்படம்.

விலங்கு வெப் சீரிஸ் புகழ பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து புகழ் சுவாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தாய் மாமனுக்கும், மருமகனுக்கும் இடையிலான உறவை குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உணர்வுபூர்வமாக காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் மாஸ் ஹிட் படமான மாமன், இதுவரை செய்துள்ள மொத்த வசூல் | Soori Maaman Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள சூரியின் மாமன் திரைப்படம் அடுத்த மாதம் OTT தளத்திலும் வெளியாக உள்ளது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மாமன் திரைப்படம் இதுவரை ரூ. 40 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

https://yarl.com/forum3/forum/39-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/?&do=add

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!

1 month 1 week ago

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். . சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

47 ஆண்டுகளுக்கும் மேலாக 'கன்னிப் பருவத்திலே' தொடங்கி 'சர்க்கார்' திரைப்படம் வரை நடித்து இருக்கிறார். ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

https://tamil.news18.com/entertainment/cinema-famous-tamil-actor-rajesh-died-due-to-illness-nw-mma-ws-l-1816937.html

'நீயே உனக்கு என்றும் நிகரானவன்' - டி.எம்.எஸ். பாடிய காலத்தால் அழியாத 10 பாடல்கள்

1 month 1 week ago

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தரராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN

படக்குறிப்பு,'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 25 மே 2025, 02:01 GMT

தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

டி.எம்.எஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். திரை நாயகர்களுக்கே உரிய கம்பீரத்தை இவரை விட சிறப்பாக யாராலும் பாடல்களில் வெளிப்படுத்திவிட முடியாது. அதனாலேயே அவரது காலகட்டத்தில் முன்னணியில் இருந்த அத்தனை நட்சத்திரங்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார்.

இன்று (மே 15) காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடிய டி.எம்.சௌந்தரராஜனின் நினைவு நாள் ஆகும். அதை முன்னிட்டு அவரது குரலில் ஒலித்த, 10 சிறந்த பாடல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

கண் போன போக்கிலே கால் போகலாமா (பணம் படைத்தவன்)

எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்க, 1965-ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய பணம் படைத்தவன் படத்தில் இடம்பெற்ற பாடல். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் கவிஞர் வாலி.

மேற்கத்திய செவ்வியல் இசை வடிவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் இருக்கும் வரிகள் அறிவுரை கூறும் தொனியிலேயே இருக்கும். முழுக்க தத்துவ வார்த்தைகள் நிறைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் ஒரு நல் ஆசிரியர் பேசுவதைப் போன்ற தன்மையைத் தந்திருக்கும்.

'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்' என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தரராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN

அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை)

நடிகர் சிவாஜி கணேசனுக்காக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய சில பாடல்களில் சிவாஜி பாடுகிறாரா அல்லது டி.எம்.எஸ் தனது குரல் மூலம் நடிகராகத் தெரிகிறாரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருவரது திறமையும் கலந்து போயிருக்கும்.

அப்படி ஒருப் பாடலே 1973-ஆம் ஆண்டு வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்கிற பாடல். பி. மாதவன் இயக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசனின் வரிகள்.

தனியாளாக தம்பியையும், தங்கையும் தோளில் சுமந்து, ரயிலில் பாடல்கள் பாடி, கையேந்தி அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அண்ணனின் கையறு நிலையை, பாட்டும் பேச்சுமாக, உணர்ச்சிகரமான பாணியில் வெளிப்படுத்தியிருப்பார் டி.எம்.எஸ்.

உட்கார்ந்த இடத்திலிருந்து சிவாஜி கணேசன் இந்தப் பாடலுக்காக வெளிப்படுத்திய நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும் (தவப்புதல்வன் )

தவப்புதல்வன் (1972) என்கிற சமூகப் படத்தில் நாயகியின் பார்வையில் ஒரு கதை சொல்லப்படும். அதில் அக்பர் அரசவைக் கவிஞராக இருந்த தான்சேன், ஆரோக்கியம் குன்றிய அக்பருடைய மகளுக்கு பாடல் மூலம் சிகிச்சை அளிப்பதாக ஒரு கற்பனைச் சூழல். இதற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான பாடல் தான், இசை கேட்டால் புவி அசைந்தாடும்.

இந்தப் பாடலின் அடிப்படை கர்நாடக இசையின் ராகத்தை ஒட்டி இருந்தாலும், பாடலின் ஆரம்பத்தில் இந்துஸ்தானி பாணியில் ஒரு ஆலாபனையுடன் நுழைவார் டி.எம்.எஸ்.

இந்தப் பாடலுக்கான சூழலிலும், வரிகளிலும் இருக்கும் கனிவு, கோபம் உள்ளிட்ட இரண்டு வித்தியாசமான உணர்வுகளையும் டி.எம்.எஸ் அசாதாரணமாகக் கையாண்டிருப்பார். கண்ணதாசன் ஏற்கனவே எழுதிய கவிதையே இந்தப் பாடலுக்கு வரிகளாகவும் பொருந்திப் போனது கூடுதல் சிறப்பு.

யார் அந்த நிலவு (சாந்தி )

பிரபல மேற்கத்திய செவ்வியல் இசைக் கலைஞர்கள் சிலரின் பாணிக்கு இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பீம் சிங் உள்ளிட்டவர்கள் ரசிகர்கள். அப்படி ஒரு பாணியில் நாம் ஏன் ஒரு பாடலை உருவாகக்கூடாது என்று யோசித்ததில் உருவானதே 1965-ஆம் ஆண்டு வெளியான சாந்தி என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'யார் அந்த நிலவு' என்கிற பாடல்.

அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களுக்கு முற்றிலுமாக புதிய அனுபவத்தைக் கொடுத்த இந்தப் பாடல், உருவாக்கத்தின் போதே பாடகர் டி.எம்.சௌந்தரராஜனை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

இதை எப்படிப் பாடப் போகிறோம், நன்றாக இருக்குமா என்கிற சந்தேகத்துடன் பின்வாங்கியிருக்கிறார் டி.எம்.எஸ். அதன் பின் இசையமைப்பாளர் தந்த ஊக்கத்தில் மிகச்சிறப்பாக, மேற்கத்திய இசையின் பாணியை உள்வாங்கிக் கொண்டு தனது பாணியில் மிகச் சிறப்பாக இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன், இந்தப் பாடலுக்கேற்றவாரு நடிக்க வேண்டும் என்றே 3 நாட்கள் படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டு, தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தரராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN

படக்குறிப்பு,பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும்

சிந்து நதியின் மிசை நிலவினிலே (கை கொடுத்த தெய்வம்)

சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.எஸ்.ஆர் மற்றும் கே.ஆர்.விஜயா எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் கை கொடுத்த தெய்வம் (1964). கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் உருவான இந்தப் படத்தின் கதை, இரண்டு நண்பர்களைப் பற்றியது. ஆனால் இதில் தனக்குப் பிடித்த ஒரு பாரதியார் பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று விரும்பினார் இயக்குநர்.

பாரதியாரின் புத்தகத்தை நாயகன் படித்து, அவர் கற்பனையில் வருவதாக இந்தப் பாடலையும் வைத்தார். இதைப் படிக்கும்போது, படத்துக்குப் பொருந்தாத சூழலாகத் தெரிந்தாலும், பாடலின் இசையும், பாரதியின் வரிகளில் இருக்கும் புரட்சிகரமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் டி.எம்.எஸ்ஸின் குரலும் கேட்பவர்களை ஆட்கொள்ளும்.

பாரதி பாடியிருந்தால் இப்படித்தான் இருக்குமோ என்று யோசிக்க வைப்பார் டி.எம்.எஸ்.

வரிகளுக்கு ஏற்றவாறு கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு இடங்களில் படமாக்கிய விதத்திலும் தேசிய ஒருமைப்பாட்டை பேசியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

மாதவிப் பொன்மயிலாள் (இரு மலர்கள்)

தமிழ் திரையில் சிவாஜி கணேசன் - பத்மினி இருவரும் சேர்ந்து நடித்த படங்களுக்கென்றே தனியிடம் உண்டு. 1967-ஆம் ஆண்டு வெளியான இரு மலர்கள் திரைப்படத்தில், படம் ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒரு போட்டியில் நாயகன் பாட, நாயகி நடனமாடும் பாடலாக இந்த மாதவிப் பொன்மயிலாள் வரும்.

வழக்கமாக இப்படி உருவாகும் ஒரு பாடலில் ஸ்வரங்கள் இருக்கும், ஜதிகள் இருக்கும், ஆனால் இரண்டும் கலந்து, சிக்கலான ஒரு அமைப்பில் உருவான இந்தப் பாடலை காதலும், குறும்பும் நிறைந்த குரலில் பாடி அசத்தியிருப்பார் டி.எம்.சௌந்தரராஜன்.

இன்றளவும் பாட்டுப் போட்டிகளில், பாடகர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க கரகரப்பிரியா ராகத்தில் உருவான இந்தப் பாடலைப் பாடினால் போதும். ஆனால் அப்படி யாராலும் மிக எளிதாகப் பாட முடியாத கனமான பாடல். இதுவே டி.எம்.எஸ்ஸின் குரல் வளம் எத்தகையது என்பதையும் காட்டும்.

கவிஞர் வாலி, தான் எழுதிய பாடல்களில் மிகப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். மன்னிக்க வேண்டுகிறேன், மகாராஜா ஒரு மகாராணி என டி.எம்.சௌந்தரராஜன் குரலில் இரண்டு டூயட் பாடல்களும் இந்தப் படத்தில் பிரபலம். ஏ.சி.திருலோகச்சந்தர் இந்தப் படத்தின் இயக்குநர்.

பொன்மகள் வந்தாள் (சொர்க்கம் )

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருக்கும் ஒரு கதாபாத்திரம் கனவு கண்டால் என்ன ஆகும்? பொன்னும் பொருளும் நிறைந்த கனவாகத்தானே அது இருக்கும். இதை வெறும் காட்சியாக சொன்னால் மட்டும் போதாது, பாடலாகவும் வேண்டுமென்று முடிவு செய்தார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. உருவானது பொன்மகள் வந்தாள் பாடல். 1970-ஆம் ஆண்டு வெளியான சொர்க்கம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணம் இந்தப் பாடல்.

படத்தின் கதாபாத்திரம் காணும் கனவாக மட்டுமல்ல, கண்ணை மூடிக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையிலும், டி.எம்.சௌந்தரராஜனின் குரலிலும் கூட பொன்னையும் பொருளையும் நம்மால் உணர முடியும். ஆலங்குடி சோமுவின் வரிகளில் இருக்கும் நாயகன் கதாபாத்திரத்தின் கனவு, ஆசை, லட்சியம் என் அனைத்தையும் தனது குரலிலும் கொண்டு வந்திருப்பார் டி.எம்.எஸ்.

பல வருடங்கள் கழித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ரீமிக்ஸை வேறொரு பாடகர் பாடினாலும், கடினமான அந்த ஒரு வரியை மட்டும் டி.எம்.எஸ்ஸின் குரலிலேயே தக்க வைத்திருப்பார்கள். கேட்க எளிமையான பாடலாக இருந்தாலும், பாட, மிகக் கடினமான ஒரு பாடல். அதை டி.எம்.எஸ் தவிர வேறு யாராலும் அதே சிறப்புடன் மீண்டும் பாட முடியாது.

அந்த நாள் ஞாபகம் (உயர்ந்த மனிதன்)

மை ஃபேர் லேடி என்கிற ஆங்கிலப் படத்தின் ஒரு காட்சியமைப்பு தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு மிகவும் பிடித்துப் போனது. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் அந்தக் காட்சிகளைக் காட்டி, இந்த பாணிக்கு ஏற்றவாரு ஒரு பாடல் வேண்டும் என்று விரும்பினார்.

அதில் பிறந்தது தான் உயர்ந்த மனிதன் (1968) படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் என்கிற பாடல். உத்தர் புருஷ் என்கிற வங்கமொழிப் படத்தின் மறு உருவாக்கமான இதை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தனர். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன், அசோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நாளை இந்த வேளை பார்த்து, வெள்ளிக் கிண்ணம் தான் என இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அந்த நாள் ஞாபகம் பாடலுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. அன்று வரை தமிழ் சினிமாவில் உருவான பாடல்களிலேயே மிகப் புதுமையான வடிவம் கொண்டது இந்தப் பாடல்.

தொழில்நுட்பம் முன்னேறாத அந்த காலகட்டத்தில், சிவாஜி, மேஜர் சுந்தர் ராஜன், டி.எம்.எஸ் என அனைவரும் சேர்ந்து, வசனம், பாடல் என இந்தப் பாடலுக்குப் பங்காற்றியிருப்பார்கள். ஆடம்பரமான மேற்கத்திய செவ்வியல் இசையோட ஆரம்பமாகும் இந்தப் பாடல், கதாபாத்திரத்தின் ஏக்க உணர்வைப் பேசும். அதற்குத் தன் குரல் நடிப்பால் மிக அழகாக வடிவம் கொடுத்திருப்பார் டி.எம்.எஸ்.

டி.எம். சௌந்தரராஜன் பிறந்த நாள், டி.எம். சௌந்தரராஜனின் டாப் 10 பாடல்கள்

பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN

படக்குறிப்பு,காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தக்காரராய் இருந்த டி.எம்.எஸ் சௌந்தரராஜன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா )

பாடல்களை வர்ணிக்கும் போது மிக அழகான பாடல், உணர்ச்சிகரமான பாடல், கவித்துவமான பாடல் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் மிக நகைச்சுவையான பாடல் என்ற பாராட்டை உண்மையாகப் பெறும் பாடல்கள் வெகு சில.

அதில் என்றும் முதன்மையாக இருக்கும் பாடல், பலே பாண்டியா (1962) திரைப்படத்தில் வரும் நீயே உனக்கு என்றும் நிகரானவன். ஒரு பக்கம் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்த ஒருவர் பாடுவது போல இருக்க வேண்டும், அதே நேரம் படத்தின், அந்தச் சூழலின் நகைச்சுவைத் தன்மை இழையோட வேண்டும். இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி, தன் குரலில் குழைத்துத் தந்திருப்பார் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

மாதவிப் பொன்மயிலாள் பாடலைப் போலவே, இதுவும் பாட மிகக் கடினமான பாடல். ஆனால் டி.எம்.எஸ்ஸுக்கு அப்படி அல்ல. திரையில் சிவாஜி கணேசனின் அப்பாவித்தனம், கேலி ஒரு பக்கம், கே பாலாஜியின் கடம் வாசிப்பு ஒரு பக்கம், எம்.ஆர்.ராதாவின் அதிரடியான கலாட்டா உடல்மொழி ஒரு பக்கம் என இன்றளவும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும், ரசிக்க வைக்கும் இந்தப் பாடலை வெறும் 7 மணி நேரத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு.

இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதா கதாபாத்திரம் பாடும் கொன்னக்கோல் பகுதிகளைப் பாடியவர் எம். ராஜு.

மாசிலா நிலவே நம் (அம்பிகாபதி)

ஓர் அமர காதல் கதையைச் சொல்லும் படம், மொத்தம் 27 பாடல்கள். இன்றைய சூழலில் விளையாட்டுக்காகக் கூட நினைத்து பார்க்க முடியாதவை இவ்விரண்டு விஷயங்களும். ஆனால் 1957-ஆம் ஆண்டு, பி.நீலகண்டன் இயக்கத்தில் உருவான அம்பிகாபதி திரைப்படத்தில் இது சாத்தியப்பட்டது. ஜி.ராமநாதன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களுக்கு கண்ணதாசன், கே.டி.சந்தானம், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் உட்பட பல கவிஞர்கள் வரிகள் எழுதியுள்ளனர்.

இதில் மாசிலா நிலவே என்று ஆரம்பிக்கும் காதல் பாடலுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இது ராகமாலிகை என்கிற இசை வடிவத்தில் உருவான பாடல். ஒரு பக்கம், புன்னாகவராளி, மாண்ட் என ராகங்களின் அடிப்படையில் வளரும் பாடல், சட்டென ஒரு இடையிசையுடன் மேற்கத்திய வால்ட்ஸ் பாணிக்கு மாறும்.

இசையமைப்பாளரின் இந்த புது முயற்சிக்கு ஈடு கொடுத்திருப்பது டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் பானுமதி ஆகியவர்களின் குரல்கள். அந்தந்த மாறுதலுக்கு ஏற்றார்போல டி.எம்.சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடியிருக்கும் அழகு, இதை காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக நிலைபெற்றிருக்கச் செய்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cy8n5z27kreo

நடிகர்களே இல்லாமல் வெறும் ரூ.10 லட்சத்தில் தயாரான காதல் சினிமா - ஏ.ஐ மூலம் சாத்தியமானது எப்படி?

1 month 2 weeks ago

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ'

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 21 மே 2025, 03:08 GMT

செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது.

அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையமைத்த 12 பாடல்களும் உள்ளன. கதாநாயகன், கதாநாயகி உள்பட அனைத்து கதாபாத்திரங்களும் ஏஐ உருவாக்கியவையே.

இந்தியத் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல, ஆனால் முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு, மத்திய அரசின் தணிக்கைக் குழுவின் U/A சான்றிதழ் வழங்கப்பட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு வெளியானது, சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இத்தகைய ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், திரைப்படத்துறையில் என்ன மாற்றங்களை கொண்டுவரும்? வழக்கமான திரைப்படங்களுக்கு ஈடாக, மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்களா?

முழுக்க 'ஏஐ' மூலம் உருவான திரைப்படம்

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA

படக்குறிப்பு,இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை.

'லவ் யூ'- பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வல்லுநர் நூதன் என்பவர் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர்களோ அல்லது வழக்கமான திரைப்பட குழுவினரோ பணிபுரியவில்லை.

அதற்கு பதிலாக, சுமார் 30 செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களைப் பயன்படுத்தி திரைப்படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள், இசை மற்றும் டிரோன் பாணி காட்சிகளை கூட உருவாக்கியுள்ளனர்.

அதாவது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், சண்டைப் பயிற்சி, கலை இயக்குநர் என அனைத்திற்கும் 'ஏஐ' (AI) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. கதை, திரைக்கதை, பாடல் வரிகள் மற்றும் இறுதி எடிட்டிங் மட்டுமே மனிதர்களால் கையாளப்பட்டது. ஆறு மாதங்களில் 10 லட்சம் ரூபாய் என்ற பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

கடந்த மே 16-ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தின் கதை என்பது, "நூதன் எனும் பாடகர் மணாலிக்கு சுற்றுலா செல்லும்போது, அஷ்வினி எனும் பாடகியைச் சந்திக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள், அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சிக்கல்களும் போராட்டங்களும் தான்" என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கிறது.

இந்த ஏஐ திரைப்படத்தில் உள்ள குறைகளையும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது. "தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக, குறிப்பாக 'லிப் சிங்க்' போன்ற பிரச்னைகளால் வசனங்கள் குறைவாகவே உள்ளன. திரைப்படத்தின் பெரும்பகுதி பாடல்களைச் சார்ந்துள்ளது."

காட்சிகள் யதார்த்தமாகவும் இல்லை, அனிமேஷன் படங்களில் வருவது போலவும் இல்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. 'ஏஐ' மூலம் திரைப்படங்களை உருவாக்கும் போது, நல்ல கதையும் சிறந்த தொழில்நுட்பமும் அவசியம் என அந்த விமர்சனம் கூறுகிறது.

'லவ் யூ' திரைப்படத்தைத் தொடர்ந்து, இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் வெளியாகும் எனக் கூறுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸின் தலைமைச் செயல் அதிகாரியான செந்தில் நாயகம்.

இவரது முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ், திரைப்படங்களுக்கான ஏஐ தொடர்பான சேவைகளை வழங்கிவருகிறது.

"என்னிடம் ஒரு நல்ல கதை, திரைக்கதை இருக்கிறது என்றால், நான் ஒரு தயாரிப்பாளருக்காகவோ அல்லது நடிகர், நடிகர்களுக்காக காத்திருக்க தேவையில்லை. இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் ஒரு முழு படத்தை எடுத்துவிடலாம் எனும்போது இது நிச்சயம் உதவியாக இருக்கும்" என்கிறார் செந்தில் நாயகம்.

தொடர்ந்து பேசிய அவர், "இனி வரும் எல்லா திரைப்படங்களிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கும். அது எந்த அளவில் என்பது தான் விஷயம். வருங்காலத்தில், 100 சதவீதம் ஏஐ மூலம் உருவாகும் படங்கள் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிடும். ஒரு வரி கதையைக் கொடுத்தால், ஏஐ திரைக்கதை எழுதிக் கொடுத்துவிடும் எனும்போது அனைத்தும் சாத்தியம்" என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு எழுதும் கதை- திரைக்கதைகள்

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,DEEPA/INSTAGRAM

படக்குறிப்பு,எழுத்தாளர் தீபா

"கதை-திரைக்கதை என்பது தனிமனித அனுபவங்களில் அல்லது எண்ணங்களில் இருந்து உருவாகும் போது தான் அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். ஏஐ சொல்லும் கதை-திரைக்கதைகள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும், அது மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும்" என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஒரு உதாரணம் கூறும் அவர், "சில நாட்களுக்கு முன்பாக ஒரு காட்சி ஊடகவியல் (VisCom) கல்லூரிக்கு சிறப்பு வகுப்புகளுக்காக சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களிடம், ஒரு வரி கதையைக் கொடுத்து, ஒரு முழு கதையாக மாற்றச் சொன்னேன். அரை நாள் நேரமும் கொடுத்திருந்தேன்.

மாலை, அவர்கள் கொடுத்த கதைகளைப் பார்த்தபோது ஏறக்குறைய 10க்கும் மேற்பட்ட கதைகள் ஒரே நபர் எழுதியது போன்று நிறைய ஒற்றுமைகள் இருந்தன. விசாரித்தபோது, மாணவர்கள் பலர் 'சாட்ஜிபிடி'-யிடம் அந்த ஒருவரிக் கதையைக் கொடுத்து, அதை முழு கதையாக மாற்றச் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது" என்கிறார்.

திரைப்படங்களின் ஒருவரிக் கதைகள் பலவும் நமக்கு பரிட்சயமானவை தான், ஆனால் அதை திரைக்கதையாக மாற்றுவதில் தான் ஒருவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது, அதுவே மக்களையும் கவர்கிறது. அதை ஏ.ஐ மூலம் ஈடுசெய்ய முடியாது என்கிறார் ஜா.தீபா.

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ ஏ.ஐ பயன்படுத்தக்கூடாது என முடிவுசெய்யப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில், அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தால் (WGA) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஹாலிவுட் திரைப்படத்துறை எழுத்தாளர்கள் பலரு ஒன்று திரண்டு, 148 நாட்கள் நீடித்த ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டத்திற்கு முக்கிய காரணம், திரைப்படம்/தொலைக்காட்சி துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகும்.

ஏ.ஐ மூலம் ஸ்கிரிப்ட்களை எழுதுவது அல்லது திருத்துவது, ஒரு கதையை ஏ.ஐ மூலம் தயார் செய்துவிட்டு பிறகு அதை மெருகேற்ற மட்டும் ஒரு எழுத்தாளரை அழைப்பது, எழுத்தாளர்களின் அனுமதி பெறாமல் அல்லது நஷ்டஈடு வழங்காமல் அவர்களது படைப்புகளைக் கொண்டு 'ஏ.ஐ'-க்கு பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் திரைப்பட ஸ்டுடியோக்களும், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களும் ஈடுபடக் கூடாது என்பதே அந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

அதைத் தொடர்ந்து ஸ்டுடியோக்களுக்கும் எழுத்தாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி,

  • ஸ்கிரிப்ட்களை எழுதவோ அல்லது திருத்தவோ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது.

  • ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை மூலப் பொருளாகப் பயன்படுத்த முடியாது.

  • எழுத்தாளர்கள் விரும்பினால் ஏ.ஐ உதவியை நாடலாம், ஆனால் ஸ்டுடியோக்கள் அதை கட்டாயப்படுத்த முடியாது.

  • எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்ட உள்ளடக்கத்தில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டதா என்பதை ஸ்டுடியோக்கள் முறையாக தெரிவிக்க வேண்டும் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை கவருமா?

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,RAVIKUMAR / INSTAGRAM

படக்குறிப்பு, ஏ.ஐ திரைப்படங்கள் மக்களை பெரிதும் கவராது என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்.

"ஏ.ஐ மனிதர்களின் படைப்புத் திறனுக்கு ஒரு மாற்றாகவே முடியாது. பார்க்காத விஷயத்தை அல்லது தெரிந்த விஷயத்தை புதிய கோணத்தில் பார்ப்பதையே மக்கள் விரும்புவார்கள். ஏ.ஐ தொழில்நுட்பமோ ஏற்கனவே இருப்பவற்றின் அடிப்படையில் தான் காட்சிகளை உருவாக்கப்போகிறது. இதனால், அது மக்களை பெரிதும் கவராது" என்கிறார் தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். ரவிக்குமார்.

இன்று நேற்று நாளை, அயலான ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க ஏ,ஐ மூலம் உருவாக்கப்பட்ட திரைப்படத்தை முதல்முறை பார்க்கும்போது ஒரு ஆச்சரியம் இருக்குமே தவிர அது வழக்கமான சினிமாவுக்கு நிச்சயம் மாற்றாக இருக்காது என்று கூறும் அவர், "இது ஒரு தொழில்நுட்பத்தை தேவையான அளவு பயன்படுத்தலாம். இன்று எல்லோர் கைகளிலும் நல்ல கேமரா கொண்ட கைப்பேசிகள் உள்ளன, ஆனால் எல்லோரும் ஒரு நல்ல புகைப்படக் கலைஞரை போல படமெடுக்க முடியாது அல்லவா. அதேசமயம், ஏ.ஐ. தரும் சில பயன்களையும் புறக்கணிக்க முடியாது. எனவே ஏஐ என்பது ஒரு திரைப்பட இயக்குநருக்கு/கலைஞருக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, மாற்றாக அல்ல" என்கிறார்.

ஆனால், முழு திரைப்படத்தையும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுப்பதில் ஒரு மிகப்பெரிய நன்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறார் முவோனியம் ஏஐ ஸ்டுடியோஸ் தலைமைச் செயல் அதிகாரி செந்தில் நாயகம்.

"கங்குவா போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை, முதலில் ஏஐ மூலம் உருவாக்கி, குறிப்பிட்ட சில பார்வையாளர்களுக்கு மட்டும் காண்பித்து அதன் பின் வழக்கமான முறையில் படமாக்கும் போது ஒரு 'மினிமம் கியாரண்டி' கிடைக்கும்" என்கிறார் அவர்.

"ஒரு முழு ஏ.ஐ திரைப்படம் தயாரிக்க 10-15 லட்சம் தான் எனும் போது ஏன் இதை முயற்சி செய்து பார்க்கக்கூடாது. பல அனிமேஷன் தொடர்கள், திரைப்படங்கள் அப்படி உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா தொழில்நுட்பத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு, செயற்கை நுண்ணறிவும் அப்படித்தான்" என்கிறார் செந்தில் நாயகம்.

யாருக்கு பாதிப்பு?

செயற்கை நுண்ணறிவு, திரைப்படங்கள், கோலிவுட், கலை, அறிவியல்

பட மூலாதாரம்,SY_GOWTHAMRAJ

படக்குறிப்பு,திரைப்பட இயக்குனர் கௌதம்ராஜ்

"இந்தியாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கு பெரிய சந்தை இல்லை. ஏ.ஐ தொழில்நுட்பத்தால் இப்போதைக்கு அனிமேஷன் திரைப்படங்களில் பணிபுரிகிறவர்களுக்கு தான் ஆபத்து" என்கிறார் திரைப்பட இயக்குநர் கௌதம்ராஜ்.

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

"நிஜ மனிதர்களை, தத்ரூபமாக உருவாக்கி அதை திரையில் உலாவ விடும் திறன், அதாவது இப்போது நாம் பார்க்கும் திரைப்படங்கள் போலவே கொண்டுவரும் திறன் ஏ.ஐ-க்கு என்று வருகிறதோ, அன்று தான் உண்மையான ஆபத்து" என்கிறார் கௌதம்ராஜ்.

அப்படி ஒரு நிலை ஏற்படுவதன் மூலம், நடிகர்கள் பலரும் வேலை இழப்பது மட்டுமல்லாது 'நாயக பிம்பங்கள்' சரிந்து, கதாபாத்திரங்கள் மட்டுமே மக்கள் மனதில் நிற்கும் என்று குறிப்பிடுகிறார் கௌதம்ராஜ்.

"பேட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற காமிக்ஸ்- அனிமேஷன் கதாபாத்திரங்களே, அதில் நடித்த நடிகர்களை விட மனதில் இன்றும் நிற்கிறது. ஒருவேளை ஏ.ஐ. அதீத வளர்ச்சி அடைந்தால், வழக்கமான திரைப்படங்களிலும் அது நடக்கும்" என்று கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd44zqjznjo

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!

1 month 2 weeks ago

New-Project-186.jpg?resize=750%2C375&ssl

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்!

தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 𝐆𝐨𝐥𝐝 𝐑𝐨𝐮𝐭𝐞 மூனையத்தின் மூலமாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

இதன்போது, விமான நிலையத்தின் ஊழியர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.

ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு அட்டவணையில் உள்ளது.

மதராசி குழு அடுத்ததாக இலங்கையில் படப்பிடிப்பை நடத்தும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

மதராசி திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியில் இப்படம் தில் மதராசி என்ற பெயரில் வெளியாகிறது.

ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸின் தயாரிப்பு முயற்சியான மதராசியில் ருக்மணி வசந்த் கதாநாயகியாகவும், வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இதற்கு இசையமைத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1432362

ரெட்ரோ : விமர்சனம்!

2 months ago

ரெட்ரோ : விமர்சனம்!

1 May 2025, 8:37 PM

suriya retro movie review may 1

வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!?

’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே.

சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’?

image-1639-1024x576.png

காதலே அடிநாதம்!

பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது.

அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றனர். நட்பு பாராட்டியிருக்கின்றனர்.

அப்போது முதல் இறுக்கமான முகத்துடன் சிரிப்பு என்றால் என்னவென்று தெரியாதவராக இருக்கிறார் பாரி. அவரிடத்தில் மாற்றங்களைப் புகுத்தி தன் வழியில் ‘சாந்தமானவராக’ மாற்றத் துடிக்கிறார் ருக்மிணி. அதற்கேற்பச் சில மாற்றங்கள் பாரியிடத்தில் தெரிகின்றன.

ஆனால், ‘பாரி – ருக்மிணி’ திருமண விழாவுக்கு டாடி (ஜோஜு ஜார்ஜ்) வந்தபிறகு அந்த நிலைமை தலைகீழாகிறது.

பாரி ‘டாடி’ என்றழைக்கும் அந்த நபர் (ஜோஜு ஜார்ஜ்) ஒரு கேங்க்ஸ்டர். ஒருமுறை டெல்லியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் (பிரகாஷ்ராஜ்) சொல்லும் வேலையை, பாரியைக் கொண்டு முடிக்க நினைக்கிறார். பாரி ‘வேண்டாம்’ என்று மறுக்கிறபோதும், வலுக்கட்டாயமாக அதனைச் செய்து வைக்கிறார்.

டாடி சொன்னபடி ஆப்பிரிக்கா நாடு ஒன்றில் கப்பல் வழியே ‘கோல்டு பிஷ்’ எனப்படுகிற சில பொருட்களை இறக்குவதுதான் திட்டம். ஆனால், அதனைச் செய்யாமல் ஏமாற்றுகிறார் பாரி.

அதற்கான பலன், பாரியின் திருமண விழாவின்போது எதிரொலிக்கிறது. விழாவில் இருக்கும்போது, ‘எங்க கோல்டு பிஷ்ஷை மறைச்சு வச்சிருக்க’ என்கிறார் டாடி. ‘சொல்ல முடியாது’ என்று பாரி சொன்னதும், ருக்மிணியைக் கொல்லச் செல்கிறார்.

பதிலுக்கு அவரைப் பாரி தாக்க, அங்கே ரத்தக்களரி ஆகிறது. பாரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

பாரி சிறிதளவும் மாறவில்லை என்றுணரும் ருக்மிணி, கண் காணாத இடத்திற்குத் தன் தந்தையோடு இடம்பெயர்கிறார்.

சிறையில் இருக்கும்போதும் அவரிடம் ‘கோல்டு பிஷ் எங்கே’ என்று காவலர்கள் மூலமாகக் குடைச்சல் கொடுக்கிறார் டாடி. எத்தனை துயர்கள் வந்தாலும், ‘வாய் திறக்க மாட்டேன்’ என்று வீம்பு பிடிக்கிறார் பாரி.

அதன்பிறகு என்னவானது? சிறையில் இருந்து வெளியே வந்தாரா பாரி? தனது காதலியைக் கண்டாரா? மிக முக்கியமாக, வன்முறை பாதையில் இருந்து அவரால் விலக முடிந்ததா என்று சொல்கிறது ‘ரெட்ரோ’வின் மீதி.

இந்தக் கதையில், அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவுக்கு பாரி செல்வதாக ஒரு கிளைக்கதை உண்டு. அங்கு அவர் ஏன் செல்கிறார்? அவரது காதல் அதற்குக் காரணமானது எப்படி என்று திரைக்கதையில் சொல்லியிருக்கிற விதம் அருமை.

மற்றபடி இதர விஷயங்கள் அனைத்தும் செயற்கைச் சாயம் பூசிக்கொண்ட சின்னக்குழந்தைகள் ‘செல்ஃபி’க்கு போஸ் கொடுத்தது போலிருக்கின்றன.

’ரெட்ரோ’வில் பாரி – ருக்மிணி காதலே அடிநாதம். அதனை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இன்னும் பல விஷயங்களை திரைக்கதையில் இழுத்துப் போட்டிருப்பதுதான் நம்மை ‘ஆவ்..வ்.’ என்று ‘பீல்’ பண்ண வைக்கிறது.

image-1640-1024x576.png

திருப்தி கிடைக்கிறதா?

சூர்யாவைப் பொறுத்தவரை, விதவிதமான கெட்டப்களில் வருவதற்கான வாய்ப்புகளைத் தந்திருக்கிறது ‘ரெட்ரோ’ திரைக்கதை. அதனை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவரது நடிப்பு, தொண்ணூறுகளில் வந்த ‘சத்யா’, ‘கலைஞன்’, ‘வெற்றிவிழா’ கமலைப் பார்ப்பது போலிருக்கிறது. என்ன, அதற்கேற்ற காட்சிகள்தான் அமையவில்லை.

நாயகி பூஜா ஹெக்டே அழகாகத் தெரிவதோடு, சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவரைத் தொடர்ந்தாற்போல வசனம் பேச வைத்து அழகு பார்க்க இயக்குனர் விரும்பவில்லை போலும்.

இதில் சுவாசிகாவும் ஓரிரு காட்சிகளுக்கு வந்து போகிறார். இது போக, இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் எனப் பலர் உண்டு.

அவர்களில் வில்லனாக வருகிற விது கொஞ்சமாய் கவனம் பெறுகிறார். சுஜித் ஷங்கர் தனது வித்தியாசமான ‘தமிழ்’ உச்சரிப்பால் ஈர்க்கிறார். சிங்கம்புலி, தமிழ், பிரேம்சங்கர், ரெம்யா சுரேஷ், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றோர் நிலைமை ரொம்பவே மோசம். அவர்கள் வந்து போகின்றனர் என்பதே ‘க்ளோஸ் அப்’களில் சில ஷாட்களில் காட்டப்படுகிறபோதுதான் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகம்மது, கலை இயக்குனர்கள் ஜாக்கி மற்றும் மாயபாண்டி மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விரும்பிய உலகைக் கட்டமைக்க உதவியிருக்கின்றனர். அவர்களது பங்களிப்பு, ஒரு ‘கிளாஸான’ கிளாசிக் படம் பார்த்த உணர்வைத் தருகிறது.

’கனிமா’ பாடல் வழியே திரையில் தலைகாட்டியிருக்கும் சந்தோஷ் நாராயணன், பின்னணி இசையில் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். இதர பாடல்களும் கூட ‘ஓகே’ ரகம்.

image-1641-1024x683.png

தனது முந்தைய படங்கள் கவனம் பெற்றதற்கு, ‘ரெட்ரோ’ உணர்வைத் தந்த திரைக்கதைகளே காரணம் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அவற்றில் இருந்து பெற்ற ஊக்கத்தின் வழியே ‘ரெட்ரோ’ கதையையும் காட்சியமைப்பையும் உருவாக்கியிருக்கிறார்.

என்ன, இப்படத்தில் மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையனுபவங்களைக் கலந்து கட்டியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அதுதான் சிலரை ‘ஜெர்க்’ ஆக்க வைக்கும்.

’ரெட்ரோ’ பார்த்தபிறகு திருப்தி கிடைக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், ‘எஃப்டிஎஃப்எஸ்’ பார்க்கிற ரசிகர்கள் கொண்டாடுகிற வகையில் சில காட்சிகள் இருக்கின்றன; ஆனால், அவை பின்னாட்களில் கூட்டம் குறைவாக இருக்கிறபோது திரையரங்குகளுக்கு வருகிறர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது என்பதே உண்மை.

அதனைப் புரிந்துகொண்டால், இந்த படத்தில் எந்த காட்சிகள் கொண்டாடப்படும் என்பதற்கான பதில் தெரிந்து போகும். அந்த வகையில் ஆங்காங்கே நம்மை ஈர்க்கிற ‘ரெட்ரோ’, ஒரு முழுமையான ‘கமர்ஷியல் படமாக’ அமையவில்லை. அதற்குக் காரணம், ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் தாக்கத்தில் காட்சிகளை, அவற்றின் பிணைப்பை இதிலும் உருவாக்க முயன்றிருப்பதே.

அதேநேரத்தில், சூர்யாவை ஸ்டைலிஷாக, ஒரு ஆக்‌ஷன் ஸ்டார் ஆக இப்படம் காட்டியிருக்கிறதா என்றால் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். ‘கனிமா’ பாடலில் ஓரிடத்தில் ‘அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல’ பாடலில் வருவது போன்று ஒரு ‘குத்தாட்டம்’ போட்டிருக்கிறார். அந்த டான்ஸ் நமக்கு ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’டை தரும். இப்படிச் சில விஷயங்கள் நம்மை கொக்கி போட்டு திரையினுள் இழுக்கின்றன.

ஆனால், ஒரு திரைப்படமாக நோக்கினால் ‘ரெட்ரோ ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமல்ல’ என்பதே என் கருத்து. ‘வித்தியாசமானதா’ என்றால், ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் கலந்துகட்டிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ‘புதுவிதமாக இருக்கிறதா’ என்றால் அதற்கும் அதே பதில்தான். சரி, ‘ரெட்ரோவில் சூர்யா – கா.சு. கூட்டணி வசீகரிக்கிறதா’ என்றால், அதற்கும் அதே பதில்தான்.

https://minnambalam.com/suriya-retro-movie-review-may-1-2/

Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!

2 months ago

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பொருளாதார அகதிகளாக ஆக்கப்பட்டு படகில் ராமேஸ்வரத்திற்குத் தப்பித்து வருகிறார்கள்.

அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் (யோகி பாபு) உதவியுடன் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது தாஸின் குடும்பம்.Tourist Family review

Tourist Family review

தெருக்காரர்களிடம் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழத்தொடங்கும்போது, ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் தேடுகிறது காவல்துறை.

இச்சம்பவத்திற்கும் தாஸ் குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறதா என்பதோடு, இறுதியில் தாஸின் குடும்பத்திற்கு என்ன ஆகிறது என்பதையும் பேசியிருக்கிறது அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் 'டூரிஸ்ட் ஃபேமிலி'.இரக்கம், அனைவருக்கும் உதவும் குணம், அப்பாவித்தனம் என 'வழக்கமான' சசிக்குமாரின் சாயல் அதிகம் கொண்டிருந்தாலும், விவரிக்க முடியாத வலியைச் சுமக்கும் கண்கள், மகனிடம் உடையும் தருணம், குடும்பத்திற்காகப் பதறும் நிமிடங்கள் போன்றவற்றில் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் சசிக்குமார்.

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்போடு, ரொமான்ஸ், காமெடி, நடனம் போன்றவற்றாலும் பலம் சேர்த்திருக்கிறார் சிம்ரன்.

மூத்த மகனாக மிதுன் ஜெய் சங்கர், இளமையின் துடிப்போடு, தேவையான இடங்களில் அழுத்தமான நடிப்பையும் வழங்கி கவனிக்க வைக்கிறார்.

சேட்டைகள் நிறைந்த சிறுவன் கமலேஷின் அட்டகாசமான நடிப்பு, பல காட்சிகளில் சிரிப்பலையைப் பரவவிட்டிருக்கிறது.

குறிப்பாக, 'ஜோசப் குருவில்லா' காட்சியிலும், சர்ச் காட்சியிலும் அவரின் குறும்புத்தனத்தால் தியேட்டர் ப்ளாஸ்ட் ஆகிறது!

Tourist Family review

Tourist Family review

தான் வரும் எல்லா காட்சியிலும் சிரிப்பு விருந்து வைக்கிறார் யோகி பாபு. எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஶ்ரீஜா ரவி, இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், அபிஷன் ஜீவிந்த், யோக லட்சுமி ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால், காட்சிகளை ஆழமாக்கி, படத்திற்கு வலுசேர்க்கிறார்கள்.

வில்லத்தனம் கொண்ட போலீஸ் அதிகாரியாக ராம்குமார் பிரசன்னா கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.

எதார்த்தமான கோணங்கள், ஃப்ரேம்கள், இயல்பான ஒளியமைப்பு என ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் அரவிந்த் விஸ்வநாதன்.

அதற்கு கலரிஸ்ட் அருண் சங்கமேஷ்வரின் பங்களிப்பும் துணை புரிந்திருக்கிறது.

நிதானமான திரைமொழியோடு, உணர்வுகளைக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன்.

ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜா வரிகளில் 'ஆச்சாலே', 'வாழ்ந்து பாரு', 'இறகே' பாடல்கள் மனதிற்கு இனிமை தருவதோடு, கதையோட்டத்திற்கும் கைகொடுத்திருக்கின்றன.

Tourist Family review

Tourist Family reviewஅதீத நல்ல மனிதராக தாஸ் வருவதோடு, அடுக்கடுக்கான நெகிழ்ச்சியான காட்சிகளும் வருவது என்றாலும் அவை திகட்டிவிடாத வகையில் சின்ன சின்ன திருப்பங்கள், தருணங்கள், காமெடி பன்ச் போன்றவற்றைக் கடைசியில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

'மலையூரு நாட்டாமை' பாடல் காட்சி, இளங்கோ குமரவேல் - ஶ்ரீஜா ரவி ஜோடியின் காட்சிகள், யாழ்ப்பாணத் தமிழைத் தெருக்காரர்கள் கற்றுக்கொள்ளும் காட்சிகள், மிதுன் - குறள் காதல் காட்சி, இறுதிக்காட்சியில் நடக்கும் ட்விஸ்ட்கள் எனப் பல இடங்களும், தொகுப்புகளும் உணர்வுப்பூர்வமாக மனதைக் கனக்க வைக்கின்றன.

Tourist Family review

Tourist Family review

"ஏற்கெனவே கடல் தாண்டிதான் வந்திருக்க!", "இந்தத் தமிழ் பேசறது பிரச்னையா, இல்ல நாங்க தமிழ் பேசறதே பிரச்னையா?" என அரசியல் பேசும் வசனங்கள் பிரசாரத் தன்மையின்றி காட்சியோடு இயைந்திருப்பது பாராட்டத்தக்கது.

தாஸ் குடும்பத்தின் தினசரி வாழ்க்கை - அதே குடும்பத்தைத் தேடும் போலீஸ் என இரு லைனில் திரைக்கதை நகர்ந்தாலும், போலீஸ் தேடுதலை விறுவிறுப்பாக்கத் தவறுவதால், இறுதிக்காட்சியில் வர வேண்டிய பதைபதைப்பில் சிறிது பற்றாக்குறை ஏற்படுகிறது.

எந்த ஆவணமுமில்லாமல் குடியேறியவர்களை எப்படி போலீஸ் முதல் அண்டை வீட்டார் வரை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற கேள்வி படம் முழுவதும் தொக்கி நிற்கிறது.

இப்படி ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் லாஜிக் ஓட்டைகளை, எமோஷனல் காட்சிகளால் மறைத்திருக்கிறது திரைக்கதை.

காவல் நிலைய மரணத்தை இறுதிக்காட்சியில் பயன்படுத்திய விதமும் நெருடலைத் தருகிறது.
 
போர்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் ஆவணமற்ற குடியேற்றங்கள் அதிகரித்து வரும் இச்சூழலில், அவர்களை அரசுகள் மனிதநேயமற்று நடத்தும் முறைகளுக்கு எதிராக உலகம் முழுவதுமிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இச்சூழலில் இக்கதையை எடுத்துக்கொண்டு, அதன் ஆன்மா சிதறாமல், அழகாகப் பேசியதற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.படத்தின் மொழியில் சொல்லவேண்டுமென்றால்...

"பழையகால வாழ்க்கைய நினைச்சுக்கொண்டு, எனியாவது ஏதாவது நல்லது நடக்காதா என்டிற எதிர்பார்ப்பில உலகம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிற அகதிகளின்ர குரலையும், அவையளுக்கும் - சக மனிசருக்கும் இந்த மனிதம் குடுக்கிற நம்பிக்கையையும் நல்ல ஆழமாக் கதைக்கிற முறையில இந்தப் படம் பாராட்டப்பட வேண்டிய ஒண்டுதான்!"

முதல் ப்ரேமிலிருந்தே கதை தொடங்கி விடுகிறது. தமிழ்நாட்டு வருகை, குடியிருப்பு வாசிகளுடனான உரையாடல்கள் எனத் திரைக்கதை, மென்மையான நகைச்சுவைகளோடு நிதானமாக நகர்கிறது.

அதனால், தாஸின் குடும்பம் எவ்வித அலட்டலுமின்றி, இயல்பாக மனதில் பதிகிறது.

எக்கச்சக்க கதாபாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றை தனித்தனி கதைகளாக அழுத்தமாக எழுதியதோடு, அவற்றுக்குப் பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்திருப்பது திரைக்கதையை ஆழமாகியிருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்: சசிக்குமார், சிம்ரன், யோகி பாபு; இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; - Vikatan

Checked
Sat, 07/05/2025 - 09:32
வண்ணத் திரை Latest Topics
Subscribe to வண்ணத் திரை feed