Aggregator

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
நம்ம கேசவன் மகராசன் போட்டு உறுட்டப் போறார். சரித்திரம் ஒன்று எழுதப் படப் போகிறது. பிறகு ஏன் முதலே சொல்லேல என்டு வரக்கூடாது. சரியா. அந்த இந்தக் கதை வேண்டாம். நமக்கு கொண்டாட்டம்தான் வேணும். உங்களைத்தான் நம்பி..... எல்லாத்துக்கும் ஆசைப் பட்டா எப்பிடி. முதல்ல விளையாடச் சொல்லுங்க

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
அவுஸ்ரேலிய அணியில் 3ஆவதாக விளையாடிவரும் மானஸ் லபுசேங் மோசமான போர்மில் இருந்து வருவதால் அணியில் அவரின் நிலை தொடர்பில் நெருக்கடிகள் அவருக்குள்ள நிலையில் இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக (2ஆவதாக) களமிறங்க உள்ளார். யாரும் இவரை அதிக ஓட்டம் எடுப்பவர் எனும் விசப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை என தெரிகிறது, இந்த போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்து பலரிற்க்கும் முட்டைகளை வழங்க வாழ்த்துக்கள். வழமையாக இங்கிலாந்து ஆடுகளம் அவுஸ்ரேலிய ஆடுகளம் போல இருக்காது பந்து அதிகமாக சுவிங் ஆகும் ஆடுகளம் அத்துடன் டூக் பந்தும் அதிகம் சீம் மற்றும் சுவிங் அதிகம் உள்ள இந்த ஆடுகளத்தில் தாமதித்து விளையாடவேண்டும் என கூறுவார்கள், இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்காவினை விட அவுஸ்ரேலியாவிற்கு அதிக அனுபவம் உண்டு, கடந்த காலத்தில் இங்கு அவுஸ்ரேலியா பல வெற்றிகளை குவித்துள்ளது. போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள் உடனடியாக கலந்து கொள்ளவும், போட்டி முடிவு நேரம் நெருங்கி கொண்டுள்ளது.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
இந்த ஆண்டுஇங்கிலாந்தில் கோடைகாலம் கடும் வரட்சி நிலவுகிறதாக கூறப்படுகிறது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையலாம். Pitch and conditions: Look up and look down It had been a very dry start to the English summer up until the last week. Neither Australia nor South Africa have much experience of playing at Lord's in early June, and there will be some guessing about the conditions. Given the dry spring, the surface is on the drier side which could mean more of an impact for the spinners. The forecast looks good with warm temperatures coming, although there is a chance of a few thunderstorms. South Africa : 1 Aiden Markram, 2 Ryan Rickleton, 3 Wiaan Mulder, 4 Temba Bavuma (capt), 5 Tristan Stubbs, 6 David Bedingham, 7 Kyle Verreynne, 8 Marco Jansen, 9 Keshav Maharaj, 10 Kagiso Rabada, 11 Lungi Ngidi Australia: 1 Usman Khawaja, 2 Marnus Labuschagne, 3 Cameron Green, 4 Steven Smith, 5 Travis Head, 6 Beau Webster, 7 Alex Carey (wk), 8 Pat Cummins (capt), 9 Mitchell Starc, 10 Nathan Lyon, 11 Josh Hazlewood

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?

3 months ago
அப்படி பிரபலம் ஆகியவர்களின் படங்களை கொப்பி அடித்து தமிழில் எடுத்தார்களாம் ஒரிஜினலை தமிழ் நாட்டில் நடப்பது மாதிரி மாற்றி அமைப்பது தான் இவர்களது திறமை

யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது

3 months ago
சாவகச்சேரியில் இந்த முஸ்லிம் நபர் மட்டும் இல்லா விட்டால், நாத்தமே இருக்காது என்கிறீர்களா? ஆமி விற்கிறான், பொலிஸ் பிடிக்காமல் விடுகிறான், முஸ்லிம் வியாபாரியும் விற்கிறார். எங்கள் தமிழ் பொடியள் பாவம் பால்குடிகள்😂!

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months ago
தமிழ் நாட்டின் 5 இடங்களில் இருந்து எடுக்கப் பட்ட சான்றுகளின் வயதுக் கணிப்பின் படி, இரும்புப் பாவனை 5000 வருடங்கள் முன்பு ஆரம்பித்ததாக அண்மையில் தகவல் வெளியிடப் பட்டது உண்மை. இதைப் பற்றிய பிபிசி கட்டுரை கீழே. Earliest iron use found in India...Earliest iron use found in India? Tamil Nadu digs spark d...Tamil Nadu’s iron artefacts may predate Turkey's Anatolia, reshaping early Iron Age history. ஆனால், இந்த உண்மையான ஆய்வுக் கண்டு பிடிப்பை "தமிழ் நாட்டில் தான் மனித இனமே தோன்றியது" என்று வியாக்கியானம் செய்வது தொல்லியலாளர்கள் அல்ல, திராவிட - தமிழ் என்று பிரிப்பரசியல் செய்யும் முகநூல் பதிவர்கள் தான் இந்தத் திரிப்பைச் செய்கிறார்கள். அந்த பிபிசி கட்டுரையிலேயே ஒரு தொல்லியலாளர் இப்படிச் சொல்லியிருக்கிறார்: "..Parth R Chauhan, a professor of archaeology at the Indian Institute of Science Education and Research (ISSER), urges caution before drawing broad conclusions. He believes that iron technology likely emerged "independently in multiple regions".

கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்

3 months ago
இது எல்லாம் அநீதி 😡 இவர் எல்லாம் அதிக வட்டி தருகிறேன் என்னிடம் முதலீடு செய்யுங்கோ என்று மக்களிடம் விளம்பரம் செய்துஒரு நிதி நிறுவனமே நடத்தியிருப்பார்

சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது

3 months ago
தையிட்டியில் இருந்து சற்று முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்பு! | Jaffna | Srilanka | ST Suman இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி தையிட்டி விகாரையில் கைதான இளைஞன்; கனரக வாகனங்களுடன் பின்வாங்கிய காவல்துறை! | UshanthanView இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
என்ன ஒரே அமைதியாக் கிடக்கு. போட்டி தொடங்கப் போகுது. ஆனா, இங்கால ஒருத்தரையும் காணேல. கோசான் மும்முரமாக தயாரிப்பில் இருக்கிறார் போல. இன்னும் ஜந்து நாளைக்கு எங்களை மகிழ்விக்க வருகிறார் நம்ம கோசான்

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months ago
கடஞ்சா, இந்த திரியின் நோக்கம் கீழடி தொல்லியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் நிறுவும் அல்லது மறுக்கும் ஒன்றல்ல. மாறாக இது தமிழர் - திராவிடர் என்ற பேதத்தின் மூலம் பல துறைகளில் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெரும் பணியாற்றிய சிலரை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்றும் சிலர் அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதும், வேறு சிலர் அந்தக் குற்றங்களை ஆதாரங்களுடன் நிராகரிப்பதும் ஆகும். கி.ராஜநாராயணன் அவர்களுக்கும் தொல்லியியல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தமிழ் கண்ட ஆகச் சிறந்த கரிசல் காட்டு கதைசொல்லி. அவர் கரிசல் கதைகளை மட்டும் எழுதவில்லை, கரிசல் வட்டார அகராதியையும் அவரே உருவாக்கினார். இன்றும், என்றும் எழுதுபவர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரால் இப்படியும் எழுத முடியும் என்பது எவ்வளவு ஒரு நம்பிக்கையை இந்த உலகத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கவிஞர் எழுத்தாளர் சல்மா எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டும். கி.ராவை ஒரு தமிழர் அல்ல என்றும், அவர் ஒரு கன்னடர் என்று சொல்லப்படுவதையும், அவர் மேல் விழும் பழிகளையுமே நான் மறுதலிக்க முற்படுகின்றேன். கோவில்பட்டியில் பிறந்து, வளர்ந்து, தன் நிலத்துக்கும் தமிழுக்கும் என்றும் நிலைத்து நிற்கும்செயல்களை செய்து முடித்து, அந்த மண்ணிலேயே மறைந்து போன ஒரு ஆசான் அவர். இதுவே தான் மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்றவர்களின் நிலைமையும் கூட. இவர்கள் மேல் சுமத்தப்படும் பழிகள் அன்றாட அரசியல் சார்ந்தது. தமிழோ அல்லது வரலாறோ சார்ந்தது அல்ல. மிகவும் குறு நோக்குகள் கொண்டவை. ஐராவதம் மகாதேவனோ அல்லது பாலகிருஷ்ணனோ தொல்லியல் நிபுணர்கள் என்று நான் சொல்லவில்லை. இங்கே தொல்லியல் நிபுணர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் தமிழ்நாட்டு தொல்லியல்துறையில் பணிபுரியும் இன்னும் சிலர். நீங்கள் வழமை போலவே 'மத்தி எப்படி வேலை செய்கின்றது என்று மாநிலத்திற்கு தெரியாது............' என்று மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றீர்கள். அமர்நாத்தை மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலத்திற்கு, மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு, மீண்டும் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு என்று மாற்றி மாற்றி நியமிக்கும் போது, அமர்நாத் போன்றோர் எதையும் அறியாமலா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய் வந்து கொண்டிருப்பார்கள்? ** தமிழ்நாட்டில் சூடை மீனை மத்தி என்று சொல்லுவார்கள். மத்தி என்னும் சொல்லை பார்க்கும் போதெல்லாம் வலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சூடை மீன்கள் தான் மனதில் வருகின்றது.

சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

3 months ago
Published By: DIGITAL DESK 2 10 JUN, 2025 | 06:44 PM (இராஜதுரை ஹஷான்) சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை. சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது. வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். https://www.virakesari.lk/article/217113

சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 06:44 PM

image

(இராஜதுரை ஹஷான்)

சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை.

சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.

நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும்.

ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது.

வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

வரலாற்று சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

https://www.virakesari.lk/article/217113

123 இந்திய ரோலர் படகுகளை கடலுக்குள் போடுவதற்கு நடவடிக்கை; கடற்தொழில் நீரியல் வள அதிகாரி

3 months ago
தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை முடிவு - என்ன சொல்கிறது? கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 8 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 9 ஜூன் 2025 இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மன்னார் பகுதிகளில் இந்த படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. படக்குறிப்பு,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. படகுகளின் தற்போதைய நிலைமை இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைப்பற்றப்பட்ட படகுகள் இருவேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் சேதமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. சில படகுகள் நீருக்குள் மூழ்கியுள்ளதுடன், பல படகுகள் உடைந்து காணப்படுவதாகயும் அவதானிக்க முடிந்தது. இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உள்ளுர் மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், குறித்த படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். இந்தியாவில் இந்த படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை உள்ளுர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அத்துடன், அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு,கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இலங்கை அரசாங்கம் என்ன கூறுகின்றது? இந்திய படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார். படகுகளை ஆழ்கடலுக்கு இழுத்து செல்வதற்கான தயார்ப்படுத்தல்களை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''இலங்கை கடற்பரப்பில் மீன் வளங்கள் குறைவடைந்து வருகின்றன. இந்த படகுகளை நீரில் மூழ்கடிப்பதன் ஊடாக மீன் வளங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. அதேநேரம், இந்திய படகுகளின் வருகையை தடுத்து நிறுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையும்.'' என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். இந்த விடயம் தொடர்பாக கொழும்பிற்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவிய போதிலும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் அனைத்தும் சேதமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 'இந்திய படகுகளின் வருகை குறைந்துள்ளது' இந்திய அரசாங்கத்தினால் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்களின் வருகை இல்லாமை காரணமாக தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாணம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். ''இந்திய அரசாங்கத்தினால் தடை காலம் அறிவிக்கப்படும் போது அதனை கடமை பிடிக்கும் இந்திய மீனவர்கள், ஏனைய காலத்திலும் கடமை பிடிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என யாழ்ப்பாணம் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ''இரண்டு மாத கால தடை அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எங்களுடைய தொழிலாளர்கள் மிக சந்தோசமாக எங்கேயும் சென்று தொழில் செய்யக்கூடிய வகையில் இருக்கின்றது. இந்திய படகுகள் வந்தால் எமது வாழ்க்கை இல்லாது போகின்றது. இந்த இரண்டு மாத காலம் இந்திய படகுகள் வரவில்லை. எமது குடும்பத்தோடு நாங்கள் மிகுந்த சந்தோசமாக இருக்கின்றோம்'' என யாழ்ப்பாணத்தில் மீனவ தொழிலில் ஈடுபடும் லோகநாதன் தெரிவிக்கின்றார். தமிழக மீனவர்கள் கூறுவது என்ன? இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா,'' இலங்கை இந்திய மீனவர் பிரச்னை கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. இரு நாட்டு மீனவர் பிரச்னையில் தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.'' என்கிறார். ''தமிழக மீன்பிடி படகுகள் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலானது. தமிழக படகுகளை மூழ்கடிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த இலங்கை அரசிடம் இந்திய அரசு பேசும் என நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சந்திரசேகர் தமிழக மீன்பிடி படகுகள் கடலில் நிச்சயம் மூழ்கடும் என தெரிவித்திருந்தார். இலங்கை அரசு அவர்களின் நிலைப்பாட்டில் திட்டவட்டமாக இருப்பதால் அரசுடமையாக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு ஒரு நாள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் மீனவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இலங்கை இந்திய மீனவர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள இருநாட்டு மீனவர் பேச்சு வார்த்தையை துரிதப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உரிய தீர்வு எட்டும் வரை தமிழக மீனவர்கள் மிதான கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்தி படகுகளை கடலில் மூழ்கடிக்கும் திட்டத்தை கை விட வேண்டும்.'' என்றார் ஜேசுராஜா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywrgzzwxqo

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் முருகன் அரசியல் எடுபடுமா? கடந்த காலம் சொல்வது என்ன?

3 months ago

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 15 நிமிடங்களுக்கு முன்னர்

மதுரையில் ஜூன் 22ஆம் தேதி மிகப்பெரிய முருகன் மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு, பா.ஜ.கவும் பிற இந்து அமைப்புகளும் ஆதரவளிக்கின்றன. மதுரையில் நிர்வாகிகள் மாநாட்டில் பேசிய அமித் ஷா முருகனை குறிவைத்து சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். முருகனை முன்வைத்து செய்யும் அரசியலுக்கு தமிழ்நாட்டில் பலன் இருக்குமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமையன்று மதுரையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அமித் ஷா குறிப்பிடும் முருகன் மாநாட்டை, 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற பெயரில் இந்து முன்னணி ஜூன் 22ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை பாண்டி கோவிலுக்கு அருகிலுள்ள அம்மா திடலில் இந்த மாநாட்டை நடத்த இந்து முன்னணி திட்டமிட்டிருக்கிறது.

இந்தத் திடலில் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே, அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து பூஜைகளை நடத்தவும் பொது மக்களுக்குப் பிரசாதம் கொடுக்கவும் மாநாட்டு அமைப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஜூன் 10ஆம் தேதியில் இருந்து மாநாடு நடக்கும் ஜூன் 22ஆம் தேதிவரை இந்த நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல் துறை இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை, ஜூன் 12ஆம் தேதிக்குள் காவல்துறை முடிவெடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

இந்த மாநாடு குறித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

"மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், இந்த மாநாட்டை பா.ஜ.க. அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் முருகன்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,L MURUGAN/X

படக்குறிப்பு,பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது நடந்துள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இருந்தே முருகனை முன்னிறுத்தி வருகிறது. 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் முருகனை முன்னிறுத்தி வீரத்தமிழர் முன்னணி என்ற துணை அமைப்பை பழனியில் துவங்கினார் சீமான். இதற்கு அடுத்த மாதமே திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமெனக் கோரி வீரத்தமிழர் முன்னணி பேரணி ஒன்றை நடத்தியது. 2016ஆம் ஆண்டில் இருந்து வேல் வழிபாடு என்ற பெயரில் தைப்பூச நாளில் விழா ஒன்றையும் அக்கட்சி நடத்தி வருகிறது.

பா.ஜ.கவை பொறுத்தவரை 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பா.ஜ.கவினரும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் அளித்தது. அந்த யுடியூப் சேனலை தடை செய்ய வேண்டுமெனக் கோரி போராட்டங்களையும் பா.ஜ.க. நடத்தியது. மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் இந்த விஷயத்தில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அழுத்தம் கொடுத்தது. முடிவில் அந்த சேனலை சேர்ந்தவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். சிலர் குண்டர் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கறுப்பர் கூட்டம் சர்ச்சையின் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத் தலைவர் எல். முருகன் அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் துவங்கி, டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த யாத்திரையை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தத் தருணத்தில் கொரோனா பரவல் இருந்ததால், அந்த யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது அந்தத் தருணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதும் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருந்து திருத்தணிக்குப் பெரும் ஊர்வலமாகப் புறப்பட்டார் எல். முருகன். இதை காவல்துறை தடுத்து நிறுத்தி, பிறகு சில வாகனங்களுடன் அனுமதித்தது.

பின்னர் திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினார். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முருகன் வழிபாடு – ஆன்மீகமா? அரசியலா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் மலையின் ஒருபுறம் முருகன் கோவில் உள்ளது, மறுபுறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது.

"வீரத் தமிழர் முன்னணி மூலம் முதன்முதலில் முருகனை முன்னிறுத்தியது நாங்கள்தான். திருமுருகப் பெருவிழா என்ற விழாவை ஒவ்வோர் ஆண்டும் நடத்துகிறோம். முருகன் ஒரு கடவுள் என்பதற்காக அல்ல, அவன் எங்கள் முப்பாட்டன், எங்கள் முன்னோர் என்று கூறி இதை நடத்தி வருகிறோம். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தமில்லை" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.

இப்போது பா.ஜ.கவும் அதைத்தான் சொல்கிறது. "இதை நாங்கள் தேர்தல் அரசியலுக்காகச் செய்யவில்லை. காலங்காலமாக இந்து சமயத்தினர் நம்பும் ஒரு கோவிலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அசைவ உணவை அருந்தினார். அவர் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யவில்லை.

தமிழ்நாட்டை ஆளும் கட்சி, இந்து சமயத்திற்கு எதிரான கட்சியாக இருக்கிறது. இதனால், இஸ்லாமியர்களின் வாக்கு மொத்தமாக தி.மு.க-வுக்கு விழுகிறது. இந்தச் சூழலில் சாதாரணமான எதிர்ப்புக்கெல்லாம், அரசு மசிவதாக இல்லை. ஆகவே, தமிழ்நாட்டில் அதிகமாக வழிபடக்கூடிய தெய்வமான முருகனை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்று தெரிவித்தார் பா.ஜ.கவின் மாநிலப் பொறுப்பாளரான எஸ்.ஆர். சேகர்.

மேலும், "கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இருக்கிறார்கள். அந்த பக்தர்கள் மூலமாக எதிர்ப்பைக் காண்பிக்கலாம் எனக் கருதுகிறோம். இந்த எதிர்ப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் முன்னெடுத்துச் செய்வதால் அரசியலாகப் பார்க்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

அதோடு, அரசியல் கட்சியான தாங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதற்குக் காரணமாக "இந்து சமயத்தில் இப்படி எதிர்ப்புகளை முன்னெடுத்துச் செல்ல ஆட்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மடாதிபதிகளையும் சங்கங்களையும் இதன் மூலம் ஒன்றிணைக்க நினைக்கிறோம். இந்த மாநாடு இந்த சமய அவமானத்தைத் துடைக்கும் மாநாடு. இந்த மாநாட்டின் மூலம் இந்துக்களை ஒருங்கிணைக்க முடியும் என நினைக்கிறோம்" என்றார் எஸ்.ஆர். சேகர்.

இந்த மாநாட்டின் மூலம் எவ்வித தேர்தல் லாபத்தையும் இலக்கு வைக்கவில்லை என்றும், இந்து உரிமைகளைப் பெறுவதுதான் நோக்கம் என்றும் கூறுகிறார் அவர். "ஆனால், இதன் விளைவு அரசியல் ரீதியாக பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்கலாம்" எனத் தெரிவித்தார் எஸ்.ஆர். சேகர்.

ஆனால், இதற்கு முந்தைய இதுபோன்ற முயற்சிகளுக்கு அப்படி எந்தச் சாதகமான விளைவும் கிடைக்கவில்லை. 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.கவின் கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களையும் 2.62 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பாக்கியராசனும் இதையேதான் கூறுகிறார். "தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற விஷயங்களை தேர்தலோடு இணைத்துப் பார்ப்பதில்லை. அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்றுதான் இருக்கிறார்கள். மதம் சார்ந்த செயல்பாடுகள் ஒருபோதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை. ஒரு சில தொகுதிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மாநிலம் தழுவிய அளவில் மதம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. மதத்தையும் அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை" என்று கூறினார்.

முருகன் வழிபாடு பாஜகவுக்கு பலன் தருமா?

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தை உள்ளூர்க்காரர்களே பெரிதாக விரும்பாத நிலையில், பா.ஜ.க. அதைக் கையில் எடுத்திருப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, "பா.ஜ.கவை பொறுத்தவரை பொதுவாக ராமரை முன்வைத்து அரசியல் செய்வதாகக் கருதப்பட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கடவுள் பிரபலமாக இருக்கிறாரோ, அந்தக் கடவுளை முன்னிறுத்தவும் பா.ஜ.க. முயல்வதுண்டு. ஒடிசாவுக்கு சென்றால் ஜெய் ஜெகன்னாத் என்பார்கள். கொல்கத்தாவுக்கு சென்றால் ஜெய் துர்கா என்பார்கள். தமிழ்நாட்டில் முருகனை தூக்கிப் பிடிப்பார்கள். ஆனால், இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ராமர் கோவிலைக் கட்டிய பிறகும் உத்தர பிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது," என்று விளக்கினார்.

மேலும், தமிழ்நாட்டில், கறுப்பர் கூட்டம் வீடியோவை வைத்து வேல் யாத்திரையெல்லாம் சென்றும் 2021 தேர்தலில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட ப்ரியன், தற்போதும் திருப்பரங்குன்றத்தை முன்வைத்துச் செய்யும் அரசியலுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது என்கிறார்.

"அங்கே பெரிய கூட்டத்தைக் கூட்டலாம். அவர்கள் எல்லாம் ஏற்கெனவே பா.ஜ.கவில் இருப்பவர்கள்தான். முருகனைக் காப்பாற்றப் போகிறார்கள், திருப்பரங்குன்றம் மலையைக் காப்பாற்றப் போகிறார்கள் என யாரும் புதிதாக அந்தக் கூட்டத்தில் இணையப் போவதில்லை. உள்ளூர்வாசிகளே இதை ரசிக்க மாட்டார்கள்" என்கிறார் ப்ரியன்.

தமிழ்நாட்டில் தோன்றும் முருகனின் பிரமாண்ட சிலைகள்

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மலேசியாவில் உள்ள பிரமாண்ட முருகன் சிலை (கோப்புப் படம்)

இவையெல்லாம் ஒருபுறமிருக்க கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முருகனுக்கு பிரம்மாண்டமான அளவில் சிலை வைக்கும் போக்கும் தொடங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டில் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடிக்கு அருகிலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் 146 அடி உயரத்தில் பிரமாண்டமான முருகன் சிலை நிறுவப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பாக, வேலூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோவிலில் 92 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மருதமலை கோவிலில் 160 அடி உயரத்தில் கற்களால் ஆன முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் அப்படி ஒரு சிலை அமையும்பட்சத்தில் அந்தச் சிலை ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலையாக இருக்கும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

இதுபோல முருகனுக்கு ஒரு பிரமாண்டமான சிலையை வைப்பது மலேசியாவில்தான் நடந்தது என்கிறார் முருகன் வணக்கத்தின் மறுபக்கம் என்ற நூலின் ஆசிரியரான சிகரம் ச. செந்தில்நாதன்.

மலேசியாவில் உள்ள பட்டு மலையின் (Batu Caves) அடிவாரத்தில் 2006ஆம் ஆண்டில் 140 அடி உயரத்திற்கு ஒரு முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்கப்பட்டபோது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலையாக இது அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் இதுபோல மிகப்பெரிய அளவில் முருகன் சிலைகளை வைக்கும் போக்கு துவங்கியிருக்கிறது. ஆனால், இது மரபு அல்ல என்கிறார் சிகரம் ச. செந்தில்நாதன்.

"தமிழ்நாட்டில் கோபுரங்களைத்தான் பெரிதாகக் கட்டுவார்கள். சிலைகளை இப்படிப் பெரிதாக வைக்கும் வழக்கம் கிடையாது. சிலைகளை இப்படிப் பெரிதாக வைத்தால், அவற்றுக்கு ஆராதனை செய்வது சிக்கலாகிவிடும். இவ்வளவு பெரிய சிலைகள் குறித்து எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை" என்கிறார் அவர்.

முருகன் வழிபாடு, தமிழ்நாடு அரசியல், பாஜக, திமுக, நாம் தமிழர், அதிமுக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆன்மீகப் பேச்சாளரான சுகி சிவமும் இந்தப் போக்கு சரியானதல்ல என்கிறார்.

"மரபுகளோ சிந்தனையோ இப்போது தேவையில்லை என்றாகிவிட்டது. ஆகம விதிகளின்படி, ஒரு சிலை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய சிலைக்கு அப்படிச் செய்ய முடியுமா? ஆனால், அந்தக் கணக்கெல்லாம் இப்போது யாருக்கும் தேவையில்லை என்றாகிவிட்டது.

கூட்டமும் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயும் போதுமென்று நினைக்கிறார்கள். மதம் இப்போது அரசியல்வாதிகளாலும் வியாபாரிகளாலும் கைப்பற்றப்பட்டுவிட்டது. இதெல்லாம் தவறு எனச் சொல்ல வேண்டியவர்கள்கூட இதனால் பேசாமல் இருக்கிறார்கள்" என்கிறார் சுகி சிவம்.

முருகனுக்கான முக்கியத்துவம் மீண்டும் அதிகரிக்கிறதா?

தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக முருகனை வழிபடும் மரபு இருக்கிறது. சங்க இலக்கிய நூல்களில் பிற்காலத்தைச் சேர்ந்த நூலான பரிபாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவது குறித்த செய்திகள் இருப்பதை நா. வானமாமலை தனது 'பரிபாடலில் முருக வணக்கம்' நூலில் சுட்டிக்காட்டுகிறார். இதற்குப் பிறகு வட இந்திய வழிபாட்டு மரபுகளின் தாக்கம் ஏற்பட்டது என்கிறார் நா. வானமாமலை.

"ஆனால், அதற்குப் பிறகு தேவார காலத்தில் முருக வழிபாடு பின்னால் சென்றுவிட்டது. சோழர்கள் முழுக்க முழுக்க சிவன் வழிபாட்டைத்தான் முன்னெடுத்தார்கள். சிவனுடைய மகன் என்ற வகையில்தான் முருகன் வழிபடப்பட்டார். பிறகு நாயக்கர் காலத்தில் அருணகிரிநாதர்தான் மீண்டும் முருகன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தார்.

நாயக்கர் காலத்தில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டபோது, மீண்டும் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தார் அவர். சிவன் கோவில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தமிழ்க் கடவுளாக முருகன் முன்னிறுத்தப்பட்டார்" என்கிறார் ச. செந்தில்நாதன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq3d4lg755o