Aggregator

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

3 months ago
இப்படி. என்றால். இலங்கையில் எவரும். எந்தவொரு. பாடத்திலும். தோல்வி. அடையமாட்டார்கள் அனைவரும். சித்தி அடைவார்கள் தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியார்கள். மற்றவர்களுக்கு. போதிப்பவர்கள். 50. க்கு 20. எடுத்தால். போதுமா ? இவர்கள் எப்படி. மற்றவர்களுக்கு. போதிக்க முடியும். ஜேர்மனியில். படிபிக்க சம்பந்தப்பட்ட. துறையில். கலநிதி. பட்டம். பெறவேண்டும் தமிழ் நாடு. முன்னேற. இன்னமும். 80%. பயணிக்க வேண்டும் இதுக்கை. நிற்க. வெக்கமாக. இருக்கிறது. போய்விட்டு. கொஞ்ச நேரம் கழிந்து வருகிறேன்.

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

3 months ago
இள வயதினரிடையே எயிட்ஸ் அதிகரிக்க பிரதான காரணங்கள் பாதுகாப்பான உடலுறவு பற்றிய அறிவின்மை, மேலும் எயிட்ஸ் நோய் வைரஸ் தங்கள் உடலில் இருக்கிறதா என்பது தெரியாத நிலைமை. இந்த இரு காரணிகளையும் குறி வைத்து இலங்கையில் எயிட்ஸ் பரவலைக் கட்டுப் படுத்தும் வேலைத் திட்டங்களை USAID என்ற அமெரிக்க அரசின் நிறுவனம் 2025 ஜனவரி வரை முன்னெடுத்திருந்தது. ஏனைய தென்னாசிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இலங்கையில் இருக்கும் மருத்துவ அமைப்புகள் இந்த விடயத்தில் திறன்பட செயல்பட்டதாகவும் சில USAID இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். 2025 இல், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன் இழுத்து மூடிய முதல் வெளிநாட்டுத் தொண்டு அமைப்பு இந்த USAID அமைப்பு. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், "ஏனைய நாடுகளில் ஒரு பாலின உறவை ஊக்குவிக்க மில்லியன் கணக்கில் செலவு செய்கிறது இந்த அமைப்பு" என்பதாக இருந்தது. இதை இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே வந்து ட்ரம்ப் ஆதரவு "அமெரிக்கர்களாக" மாறி விட்ட சில ஈழத்தமிழ் நண்பர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவர். USAID உண்மையாக இதைச் செய்ததா? இலங்கையில் எயிட்ஸ் பரவலுக்கு பாரிய காரணியாக இருப்போர் beach boys எனப்படும் இளம் ஆண் பாலியல் தொழிலாளர்கள். இதை ஆய்வுகள் மூலம் அடையாளம் கண்ட பின்னர், இந்த பாலியல் தொழிலாளர்களிடையே பாதுகாப்பான உடலுறவு, கிரமமான இரத்தப் பரிசோதனைகள், எயிட்ஸ் இருந்தால் அதற்குரிய மருந்துகள் வாங்க உதவி போன்ற முக்கியமான திட்டங்களை மட்டுமே USAID செயற்படுத்தி வந்தது. இந்த நற்காரியத்தை "ஒரு பாலின உறவை ஊக்குவித்தல்" என்று ட்ரம்ப் தரப்பு சொல்ல, அதை நம்பி எங்கள் ஈழத்தமிழ் அமெரிக்கர்களும் USAID பூட்டப் பட்டதை ஆதரித்தார்கள். இனி இவர்களுள் சிலர் விடுமுறைக்கு இலங்கை போனால், இலங்கை மருத்துவ மனைகளில் இரத்தமேற்ற வேண்டிய (blood transfusion) நிலைமைகள் ஏற்படாமலிருக்க பிரார்த்திக் கொள்ள வேண்டும்😂. ஏனெனில், இரத்தங்கள் பரிசோதிக்கும் வேலைத் திட்டங்களில், அமெரிக்காவின் USAID விட்ட இடைவெளியை வேறெந்த அமைப்பு தற்போது எடுத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. https://www.tamilguardian.com/content/us-launches-2-million-partnership-end-aids-sri-lanka

படுபட்சி நாவல்: விசாரணை

3 months ago
அவரது பேட்டி இணைப்புக்களை வழங்குங்கள் என்ன சொல்கின்றார் என கேட்டுப்பார்ப்போம். கிட்டு மாமாவின் காலத்தில் உலங்கு வானூர்தி ஒன்று உருவாக்கும் முயற்சி நடைபெற்றது, அது சில அடிகள் உயரம் எழுந்துவிட்டு விழுந்தது என அப்போது ஆட்கள் சொல்ல கேட்டுள்ளேன்.

படுபட்சி நாவல்: விசாரணை

3 months ago
இந்த நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், எழுத்தாளர் "autofiction" என்று பெயர் வைத்ததே "தன் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுக் கதை" என்பதாலாக இருக்கலாம். Autofiction என்ற இலக்கிய வகையின் வரைவிலக்கணம் இப்படி இருக்கிறது: Autofiction, short for autobiographical fiction, is a genre of literature that combines elements of autobiography and fiction எழுத்தாளர் இதனை "சுயசரிதை-autobiography" என்று பெயரிட்டிருந்தால், கிரிதரன் , நெடுமாறன் ஆகியோரின் விமர்சனங்கள் நியாயமானவையாக இருக்கும். அப்படியொரு லேபல் இல்லாதவிடத்தில், இந்த விமர்சனங்கள் அர்த்தமற்றவை.

தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே.!

3 months ago
செய்தியே சித்தியடயவில்லை. பெயில் க்கு தமிழ் இல்லையா? இங்கே லண்டன் இல் தமிழ் திரைப்படத்துக்கு வரும் தமிழ்நாடு இளம் சந்ததியை பார்க்க கவலையும், கோபமும் வருகிறது. அநேகமானவர்களுக்கு, தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால், ஆங்கிலத்தில் தமிழ் வராமல் உரையாட முடியாத நிலை. நான் நினைக்கிறன், தமிழ்நாடில் அந்த மட்டத்தில் (பொருளாதாரம் உட்பட) இருபவர்கர்களே இங்கே பெரும்பான்மையாக வருகிறார்கள். (மாறாக, இலங்கையில் இருந்த்து எல்லா மட்டங்களில் இருந்த்தும் வந்தனர்.) இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் இளம் சந்ததி, இவர்களை விட தமிழில் உரையாடும். அதே போல ஆங்கிலம் என்றால், தனியே ஆங்கிலம் மட்டுமே.

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

3 months ago
யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்! பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம் அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:- எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி 8 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும். எலிக்காய்ச்சல் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர், வயல்நீர், சேற்று நிலங்களில் கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில்,வயல் நிலங்களில். சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலுக்குள் செல்கின்றன. கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் ஏற்பட்டால், சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும். இந்த நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை -செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும். வயல்களில், சேற்றுநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவக அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ளது. யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

3 months ago

யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் விளக்கம்

அண்மைய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் அதிகரித்து வருகின்றது.இதனால். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் இவ்வாறு யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரம் இருவர் உயிரிழந்தனர், கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. கடந்த வருடமும் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி 8 பேர் உயிரிழந்தனர். எனவே, இந்த நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருப்பது மிகவும் அவசியமாகும்.


எலிக்காய்ச்சல் ஒருவகை பக்ரீறியாவினால் ஏற்படுகின்றது. எலிகள் போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர், வயல்நீர், சேற்று நிலங்களில் கிருமிகள் சென்றடைகின்றன. மனிதர்கள் வெள்ளநீரில்,வயல் நிலங்களில். சேற்று நிலங்களில் வேலை செய்யும் போது அவர்களின் தோலில் உள்ள புண்கள் அல்லது காயங்கள் மூலம் கிருமிகள் மனித உடலுக்குள் செல்கின்றன. கடுமையான காய்ச்சல், கடுமையான தசைவலி, கடுமையான தலையிடி, இருமல், கண்கள் செந்நிறமாதல், வாந்தி, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றன இதன் அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் ஏற்பட்டால், சிறுநீரகம், சுவாசத்தொகுதி, இதயம், ஈரல், மூளை போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவிக்கும். இந்த நோயானது பெரும்பாலும் வயல்கள், சேற்று நிலங்களில் பயிர்செய்யும் விவசாயிகள் மத்தியிலும், கடல்நீரேரிகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மத்தியிலும், வெள்ள நீருடன் தொடுகையில் ஈடுபடுபவர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றது. இந்நோயிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வயல், சேற்று நிலங்களில் வேலை -செய்யும் விவசாயிகள் கடல்நீரேரிகளில் மீன்பிடிப்பவர்கள் உடலில் காயங்கள் அல்லது புண்கள் இருப்பின் அவற்றை நீர் உட்புகாத வகையில் கட்டுப்போடுதல் வேண்டும். வெள்ளநீரில் அல்லது அசுத்தமான நீரில் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கால், கைகளுக்கு பாதுகாப்பு அங்கிகளை அணிய வேண்டும்.


வயல்களில், சேற்றுநிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளும், கடல்நீரேரி மீன்பிடித்தொழிலாளர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை உங்களது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவக அதிகாரி பணிமனையில் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரிடம் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளநீருடன் தொடுகை ஏற்படுத்திக் கொள்பவர்களும் மேற்படி தடுப்பு மருந்தைப்பெற்றுக்கொள்ளலாம் என்றுள்ளது.

193955607.jpg


யாழில் மீண்டும் எலிக்காய்ச்சல்!

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

3 months ago
யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்! சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

3 months ago


1501636532.jpeg

யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன்

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற காலநிலை காரணமாக தேங்கியிருந்த வெள்ளத்தில் இருந்து பெருமளவு கால்நடைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்படுகின்றன. வடமராட்சி கிழக்கு புன்னையடிப் பகுதியில் பெருமளவான கால்நடைகள் வீதிகளில் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிகின்றது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

தொடரும் சீரற்ற காலநிலையால் இறந்து ஒதுங்கும் கால்நடைகள்!

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு!

3 months ago
02 Dec, 2025 | 12:34 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு!

3 months ago

02 Dec, 2025 | 12:34 PM

image

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும்  அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை!

3 months ago
02 Dec, 2025 | 03:51 PM மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk

மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை!

3 months ago

02 Dec, 2025 | 03:51 PM

image

மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

10.jpg

09.jpeg

08.jpg


மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk

எச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம்

3 months ago
களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! 02 Dec, 2025 | 04:32 PM களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 02.00 மணியளவில் 6.9 அடி ஆக இருந்த நிலையில் பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் 6.75 ஆக குறைவடைந்துள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களனி கங்கையை அண்மித்த பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! | Virakesari.lk

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

3 months ago
02 Dec, 2025 | 06:18 PM வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..... உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் 2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார். இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார்

3 months ago

02 Dec, 2025 | 06:18 PM

image

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். 

எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....  

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது.  

இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். 

ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

 வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 

அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள்

2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர்.

ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். 

எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. 

இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.  

நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். 

அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். 

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk