Aggregator
இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 2
09 JUN, 2025 | 05:54 PM
இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.
மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது.
கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர்.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார்.
பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?
இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்
இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்
09 JUN, 2025 | 04:25 PM
(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது.
அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது
கட்டுரை தகவல்
எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்
பதவி, பிபிசிக்காக
9 ஜூன் 2025, 02:37 GMT
சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
"இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும்.
ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
எப்படி உருவாக்கப்பட்டது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது
மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும்.
ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும்.
இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம்.
"கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது.
இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
"சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.
மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது.
இந்த விதைகளால் என்ன பயன்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி
விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.
"மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை.
இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார்.
"இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை"
பட மூலாதாரம்,GETTY IMAGES
"மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?
நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை
கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு
குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
09 Jun, 2025 | 05:30 PM
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.
தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.
இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர்.
இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !
09 Jun, 2025 | 05:10 PM
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk
கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!
கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!
உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk