Aggregator

இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 09 JUN, 2025 | 05:54 PM இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர். மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது. கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர். 2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார். பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/217043

இந்த வருடத்தில் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஐ ஈட்ட முடிந்துள்ளது – மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பு

3 months 1 week ago

Published By: DIGITAL DESK 2

09 JUN, 2025 | 05:54 PM

image

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 104%ஐ ஈட்டமுடிந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.

2025ஆம் ஆண்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் ரூபா 240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும், ரூபா 2 பில்லியனை பீடியிலிருந்தும் ஈட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஷர்ஷன சூரியப்பெரும தலைமையில் வழிவகைகள் பற்றிய குழு கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்த விடயங்களைத் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் முகாமைத்துவம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இக்குழு கூடியிருந்தது.

கடந்த வருடத்தில் மே 31ஆம் திகதி வரையாகும்போது மதுவரி வருமானம் ரூபா 88 பில்லியன் என்றும், இதற்கு அமைய இந்த வருடத்தில் வருமானம் ரூபா 10 பில்லியனால் ஏற்கனவே அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோதமான மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் விலகியிருப்பது, அரங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என்றும், இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள QR குறியீட்டுடன் கூடிய பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கையடக்கத்தொலைபேசிகளில் உள்ள செயலியின் மூலம் ஸ்கான் செய்து போலியான மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்கு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் கேள்வியெழுப்பினார். இச்செயற்றிட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டினர்.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய QR குறியீட்டு ஸ்டிக்கர் முறையின் பின்னர் போலியான ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அதிகாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள QR குறியீட்டின் மூலம் மதுபானப் போத்தல்களின் உண்மைத் தன்மையைப் பரிசீலிக்கும் திட்டம் எதிர்காலத்தில் பொதுமக்களுக்களுக்கும் திறக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதியமைச்சர் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புதிய செயற்றிட்டத்தைப் பயன்படுத்தி சுப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவற்றில் போலியான மதுபானப் போத்தல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்வது மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மதுவரித் திணைக்களத்தில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன் அடிப்படையில் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை முன்வைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மதுபானத்தின் விலை அதிகமாக இருப்பதால் சட்டவிரோதமான மதுப்பாவனை அதிகரிப்பதாகவும், இதற்குத் தீர்வாக நியாயமான விலையில் தரமான மதுபானத்தைத் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முக்கிய கட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், வரி செலுத்தும் நடைமுறையில் சகல பிரஜைகளும் இணைந்துகொள்ள வேண்டும் என்றும், பொது மக்களின் வரிப்பணத்தை ஒரு ரூபா கூட வீண்விரயமாக்காமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம் என்றும் வலியுறுத்தினார்.

பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக சபுமல் ரண்வல, அஜித்.பி பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் சட்டத்தரனி ஹசாரா லியனகே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-06-09_at_15.54.22.jp

WhatsApp_Image_2025-06-09_at_15.54.23.jpWhatsApp_Image_2025-06-09_at_15.54.23__1WhatsApp_Image_2025-06-09_at_15.54.21.jp

https://www.virakesari.lk/article/217043

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
தமிழ்நாட்டுக்கு (சர்வதேச) தொல்லியல் துறை எப்படி வேலை செய்கிறது என்பது தெரியாதை நடப்பவைகளை படம் போடு காட்டுகிறது. பாலகிரிஷ்ணனோ அல்லது எவரோ, இதில் துறை சார் நிபுணத்துவம் இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இந்த விடயத்தை கையாளத் தெரியவில்லை என்பதை நடப்பவைகள் படம் போட்டு காட்டுகிறத்து. சிங்களம் இதை விட நன்றாக கையாளும், ஏனெனில் சிங்களத்துக்கு சர்வதேச (பல நாடுகளின்) தொல்லியல் துறையின் சேர்நது ஆயு செய்த, மற்றும் சர்வதேச தொழில் துறையால் சவாலுக்கு உட்பட அனுபவமும். (எவற்றுக்கும் அரசியல் நியமனம் செய்யும் சிங்களம், தொல்லியலில் அந்த தலையீடு செய்வது இல்லை) பாலகிருஷ்ணன் தொல்லியல் துறைசார் நிபுணர் அல்ல. அவரின் அனுபவமும் அது அல்ல. அவர் சொல்லுவது எடுபடாது. மாறாக, இந்திய தொல்லியல் துறையின் தலைவர் / பொறுப்பானவர் தொல்லியல் துறைசார் நிபுணர், Dr. Yadubir Singh Rawat. தமிழ்நாட்டில் ஆய்வு சவாலுக்கு உட்பட்ட அனுபவம் உள்ளவர்கள் இல்லை என்பதே யதார்த்தம். அனால், முதலே சிந்தித்து இருந்தால், சவாலை குறைத்து இருக்கலாம், பகுதி பகுவதியாக சர்வதேச மீள்பார்வைக்கு ஆய்வுகள் முடிந்து அறிக்கை வந்த கையுடன் உட்படுத்தி இருப்பதன் வழியாக.

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

3 months 1 week ago
ஆக்ஸியம் 4: விண்வெளி வீரர்கள் அன்னப் பறவை பொம்மை, அல்வா எடுத்துச் செல்வது ஏன்? பட மூலாதாரம்,X/AXIOM SPACE கட்டுரை தகவல் எழுதியவர், ஶ்ரீகாந்த் பக்‌ஷி பதவி, 8 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்த கவலையை நிவர்த்தி செய்யப் போகிறார். இவரின் இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டப் போகிறது. சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர். அதன் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார். விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார். ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுக்லா செல்கிறார். அவருடைய பயணம் சரியாக ஜூன் 10-ஆம் தேதி மாலை 5.52 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இந்த பயணத்தில் அவர் குரூப் கேப்டனாக பணியாற்ற உள்ளார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் பயன்படுத்தப்பட்டு வந்தது. 20230-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. ஆக்ஸியம் திட்டம் என்றால் என்ன? விண்வெளி ஆய்வுகளுக்காக பல ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி மையம் (ISS) பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2030-ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளை நிறுத்த நாசா திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு ஆக்ஸியம் மையம் ஒன்று அங்கே உருவாக்கப்படுகிறது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மையமாக அது இருக்கும். அந்த மையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக ஒவ்வொரு பொருட்களும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்படும். ஆக்ஸியம் விண்வெளி மையம் முழுமையாக கட்டப்பட்ட பிறகு இந்த உபகரணங்கள் ஒன்றொன்றாக நீக்கப்பட்டு ஆக்ஸியம் மையத்துடன் இணைக்கப்படும். பிறகு சர்வதேச விண்வெளி மையத்தின் (ISS) செயல்பாடு நிறுத்தப்படும். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் ஆக்ஸியம் 3 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் இந்த நாடுகளில் இருந்து யாரும் விண்வெளிக்கு சென்றதில்லை. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கமாண்டராக இருக்கும் பெக்கி விட்சனுக்கு இது ஐந்தாவது விண்வெளி பயணமாகும். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். நூறு நாட்களுக்கும் மேலாக அங்கே இருந்த அவர் 10 முறை விண்வெளி நடை மேற்கொண்டிருக்கிறார். இந்த திட்டத்தில் சுக்லா விமானியாக செயல்பட உள்ளார். அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சார்பில் செல்கிறார். திட்ட நிபுணர்களான ஹங்கேரியின் திபோர் காப்பும், போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி விஸ்னிவ்ஸ்கியும் இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படுகின்றனர். ப்ளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன் பிபிசியிடம் பேசிய போது, விமானியின் பங்கு விண்கலத்தின் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமானது. தலைமைக்கு அடுத்தபடியாக விமானி செயல்படுவதால் விண்ணில் ஏவப்படுவது முதல் மீண்டும் பூமிக்கு திரும்புவது வரை அனைத்து செயல்பாடுகளிலும் அவர் முக்கியப் பங்கைக் கொண்டிருப்பார் என்று கூறினார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்தியா, போலந்து, ஹங்கேரி நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்படுகின்றனர். ஐந்தாவது உறுப்பினர் அன்னப் பறவை ஏற்கனவே நான்கு குழு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ள நிலையில் ஜாய் என்ற சிறிய அன்னப் பறவை பொம்மையும் ஐந்தாவது நபராக விண்வெளிக்கு செல்கிறது. மே 25 முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள குழு உறுப்பினர்கள், ஜூன் 3 அன்று நடத்திய ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜாயை உலகிற்கு அறிமுகம் செய்தனர். புவி ஈர்ப்பு விசையை தாண்டி வெளியே செல்லும் போது இந்த பொம்மைதான் ஒரு குறிப்பானாக செயல்படும். விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார். குழு கேப்டன் சுக்லா தனது ஆர்வத்தை விளக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார். அவர் விண்ணுக்குச் செல்லும் போது வெறும் ஆய்வுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, இந்தியர்களின் நம்பிக்கைகளையும் எடுத்துச் செல்வதாக கூறினார். பயணம் வெற்றி பெற பிரார்த்தனை செய்யுமாறும் அவர் இந்தியர்களிடம் கேட்டுக் கொண்டார். பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, விண்ணுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், அனைத்துவிதமான பயிற்சிகளும் நிறைவு பெற்றுவிட்டதாகவும் பெக்கி விட்சன் தெரிவித்தார். தற்போது என்ன நடக்கிறது? ஆக்ஸியம் 4 திட்டத்தின் உறுப்பினர்கள் தங்களை சில நாட்களாக தனிமைப்படுத்தியுள்ளனர். விண்ணுக்கு செல்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழு ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் டிராகன் கலனில் விண்ணுக்குச் செல்கிறது. 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய இருக்கும் அவர்கள் அங்கே 31 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 14 நாட்கள் மேற்கொள்வார்கள். நிலைத்தன்மையுடன் மனிதன் விண்ணில் வாழ்வது எப்படி என்பது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வார்கள் இவர்கள் என்று பெக்கி விட்சன் கூறினார். இது விண்ணில் இருக்கும் மனிதனுக்கு மட்டுமின்றி பூமியில் உள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். வருங்காலத்தில், நீரிழிவு நோய் உடையவர்கள் விண்வெளிக்கு செல்ல அனுமதிக்கும் வகையிலான ஆராய்ச்சி, விண்வெளியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டு புதிய மருந்துகளின் செயல்திறனை ஆராய்வது போன்ற முக்கிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெக்கி கூறுகிறார். விண்வெளியில் நுண்ணீர்ப்பு தொடர்பாக இந்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கொண்ட 7 சோதனைகளை சுக்லா விண்ணில் ஆய்வுக்குட்படுத்துவார். விண்ணில் இருந்த வண்ணம், இந்திய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவங்கள் யாவும் இந்தியாவின் ககன்யான் மற்றும் இந்திய விண்வெளி மையம் தொடர்பான திட்டங்களில் பயனுடையதாக இருக்கும் என்றும் சுக்லா தெரிவித்தார். பூஜ்ஜிய ஈர்ப்பு விசையைக் குறிக்கும் ஒரு குறிப்பானாகவே அன்னப்பறவை பொம்மை எடுத்துச் செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். அன்னப்பறவை இந்திய கலாசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார். யார் இந்த சுபான்ஷு சுக்லா? அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார். இந்திய விமானப்படையில் போர் விமானியாக 2006-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆக்ஸியம் ஸ்பேஸ் வழங்கும் தகவலின் படி 2000 மணி நேரம் அவர் பல்வேறு போர் விமானங்களை ஓட்டிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். பிபிசியிடம் பேசிய அவருடைய சகோதரி சுச்சி மிஸ்ரா, சுபான்ஷு இந்திய விமானப்படையில் சேர்ந்தது எதிர்பாராத ஒன்று என்று கூறினார். "அவருக்கு 17 வயது இருக்கும் போது அவருடைய நண்பர் ஒருவர் தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு (NDA) விண்ணப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் விண்ணப்பிக்கத் தேவையான வயதை தாண்டிவிட்டார் என்பதால் அவர் விண்ணப்பிக்கவில்லை. அப்போது அந்த விண்ணப்ப படிவத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் சுபான்ஷு அதனை பூர்த்தி செய்தார். அதில் தேர்வும் ஆனார். அதன் பின்னர் அவருடைய வாழ்க்கையே மாறிவிட்டது," என்றும் கூறினார் மிஸ்ரா. பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு, அக்டோபர் 10, 1985-ஆம் ஆண்டு சுபான்ஷு சுக்லா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தார் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ரகசிய பொருள் என்ன? ககன்யான் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பிறகு இஸ்ரோவில் பயிற்சி பெற விண்ணப்பித்ததாகக் கூறுகிறார் சுக்லா. ஆக்ஸியம் வேர்ல்ட் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், ராகேஷ் சர்மாவைப் பார்த்து தான் விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகக் கூறினார் சுக்லா. சிறு வயது முதலே விண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். ராகேஷ் ஷர்மாவுக்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர விரும்புவதாக தெரிவிக்கும் சுக்லா, அப்பொருளை விண்ணுக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர இருப்பதாக தெரிவித்தார். தற்போது அது என்ன பொருள் என்பது ரகசியம் என்றும் அவர் கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மட்டுமின்றி அவர்களுக்கு பிடித்த உணவுகளையும் விண்வெளிக்கு இந்த வீரர்கள் எடுத்துச் செல்கின்றனர். சுக்லா மாம்பழச்சாறு, பருப்பு அல்வா மற்றும் கேரட் அல்வா போன்றவற்றை எடுத்துச் செல்வதாக கூறினார். இந்த உணவுகளை அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இதர விண்வெளி வீரர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8d7lr7v91o

இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்

3 months 1 week ago
09 JUN, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/217022

இணுவில் - காரைக்கால் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டம்

3 months 1 week ago

09 JUN, 2025 | 04:25 PM

image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது.

அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும் சந்தித்தவண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

IMG-20250609-WA0004.jpg

IMG-20250609-WA0005.jpg

IMG-20250609-WA0003.jpg

IMG-20250609-WA0002.jpg

https://www.virakesari.lk/article/217022

மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?

3 months 1 week ago

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்

  • பதவி, பிபிசிக்காக

  • 9 ஜூன் 2025, 02:37 GMT

சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

"இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும்.

ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்படி உருவாக்கப்பட்டது?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது

மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும்.

ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும்.

இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம்.

"கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது.

இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

"சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது.

இந்த விதைகளால் என்ன பயன்?

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி

விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார்.

"மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை.

இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை"

வேளாண்மை, விவசாயம், விவசாயி, அரிசி, நெல், விதை, பயிர், மரபணு மாற்றப்பட்ட விதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo

மத்திய அரசு அறிமுகம் செய்த 2 மரபணு மாற்ற அரிசி ரகங்களுக்கு வேளாண் நிபுணர்கள் எதிர்ப்பு ஏன்?

3 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய வகைகள் அதிக விளைச்சல் தரும் என அரசு கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபதி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 9 ஜூன் 2025, 02:37 GMT சமீபத்தில் இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் புசா டிஎஸ்டி அரிசி -1 வகை, புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) ஒரு அங்கமான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதே போல் டிஆர்ஆர் 100 அரிசி (கமலா) வகை ஹைதராபாத்தின் ராஜேந்திர நகரில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. "இந்த இரண்டு புதிய வகை விதைகள் 20 சதவிகிதம் வரை விளைச்சலை அதிகரிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைக்கும். இந்த புதிய நெல் விதைகள் உரப் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த விதைகளைப் பயிரிடுவதன் மூலம் தண்ணீரை சேமித்து காலநிலை நெருக்கடிகளை சமாளிக்க முடியும்" என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்தார். இந்த இரண்டு வகைகளும் அறுவடை காலத்தை 20 நாட்கள் வரை குறைக்கின்றன. வழக்கமாக, நெல் பயிரின் விளைச்சல் காலம் 130 நாட்கள் என்ற நிலையில் இந்த விதைகள் 110 நாட்களிலே விளைச்சலைத் தரும். ஒட்டுமொத்த பயிர் காலம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்தார். டிஆர்ஆர் 100 அரிசி வகை ஒவ்வொரு நெல்லுக்கும் அதிக தானியங்களைக் கொடுக்கும் என வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது. அதே போல் புசா டிஎஸ்டி 1 அரிசி வகை உப்புத்தன்மை மற்றும் களர் நிலங்களில் விளைச்சலை 9.66 சதவிகிதத்தில் இருந்து 30.4 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைகள் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை சமாளித்து 20 சதவிகிதம் அதிக விளைச்சலைத் தரும் இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் இரண்டும் கிறிஸ்ப்ர்-கிராஸ்-9 என்கிற புதிய மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. எப்படி உருவாக்கப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரண்டு புதிய மரபணு மாற்றப்பட்ட அரிசி ரகங்கள் மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சௌகானால் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது மரபணு திருத்தம் என்பது ஒரு தொழில்நுட்பம் ஆகும். ஒரு உயிரணுவின் மரபணு வரிசையை ஒரு உயிரியல் ஆய்வகத்தில் வெட்டி ஒட்டுவதைப் போன்றது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தாவரம் அல்லது விலங்கின் டிஎன்ஏவில் சிறிய மாற்றங்களை விஞ்ஞானிகளால் செய்ய முடியும். இந்த வகை தொழில்நுட்பம் கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9 என்கிற கருவியை பயன்படுத்துகிறது. இதனை மரபணு கத்திரிக்கோல் என கூறலாம். "கிறிஸ்ப்ர் சிஏஎஸ்9-ஐ பயன்படுத்தி விஞ்ஞானிகள் மரபணு வரிசையில் குறிப்பிட இடங்களில் டிஎன்ஏவை வெட்டுகின்றனர் அல்லது மரபணுவை அழிப்பது அல்லது திருத்துவது போன்ற வேலைகளைச் செய்கின்றனர்" என வேளாண் பொருளாதார நிபுணர் முனைவர் கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். டிஆர்ஆர் அரிசி 100 (கமலா) வகை சம்பா முசோரி வகையைச் சார்ந்தது. இது ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தால் சம்பா முசோரி (பீபிடி-5204) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. புசா டிஎஸ்டி அரசி-1 வகை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எம்டியூ 1010 அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. "சம்பா முசோரியின் பீபிடி 5204 வகை குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெறும் வகையில் மரபணு திருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது பரிசோதனை கட்டத்தில் இருந்து கள நிலைக்குச் செல்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். பீபிடி 5204 வகை நாற்பது வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நம் மாநிலத்தில் பெரும்பாலான மக்களால் உட்கொள்ளப்படும் அரிசி சம்பா முசோரி, குர்னூல், நந்த்யால், சோனா அரிசி மற்றும் இதர அரிசி வகைகள் பீபிடி 5204-ஐ சேர்ந்தது தான்." என பபாட்லாவில் உள்ள ஆச்சாரியா என்.ஜி ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் முனைவர் சதீஷ் யாதவள்ளி பிபிசியிடம் தெரிவித்தார். மத்திய வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள கமலா மற்றும் புசா என்கிற இரண்டு மரபணு மாற்ற அரிசி வகைகளுக்கும் சில வேளாண் வல்லுநர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மணல் கலவை, ஊட்டச்சத்துகள், தண்ணீர் மற்றும் நுண் உயிர்கள் போன்ற காரணிகளை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாற்றத்தை மட்டும் செய்து விளைச்சலை அதிகரிக்க முடியுமா என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த புதிய வகை அரிசி விதை விளைச்சலை அதிகரிக்கவே என அரசு கூறுகிறது. இந்த விதைகளால் என்ன பயன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி விவசாயிகளின் நேரடி பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் வேளாண் நிபுணரான முனைவர் டோந்தி நரசிம்ம ரெட்டி "அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் சமாளிக்க முடியாத விலையேற்றம் போன்ற விவசாயிகள் சந்திக்கும் நிஜப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாமல் இந்த அறிவியல்பூர்வமற்ற மரபணு திருத்தப்பட்ட விதைகளால் என்ன பயன்?" என அவர் கேள்வி எழுப்புகிறார். "மத்திய வேளாண் அமைச்சக அதிகாரிகள் இந்த அரிசி வகைகள் ஒரு புதிய தொழில்நுட்ப புரட்சி என்கின்றனர். அரசியில் உள்ள ஒரு மரபணு அதிக விளைச்சலைத் தரும் என்கின்றனர். அவர்கள் மரபணுவை திருத்துவதால் வரும் நீண்ட கால விளைவுகளைப் பற்றி பேசுவதில்லை. இந்த விதைகளை உற்பத்தி செய்யும் மக்கள் மீது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது. இத்தகைய விதைகளால் இயற்கை விதைகள் மாசடைந்தால் அதனை தூய்மைப்படுத்துவது சாத்தியமற்றதாகிவிடும். ஆராய்ச்சி, அவதானிப்புகள் மற்றும் பரிசோதனைகள் இன்னும் சில வருடங்களுக்கு ஆய்வகங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ள நிலையில் அவசர கதியில் இந்த இரண்டு வகைகளையும் மத்திய அரசு வெளியிட்டது சரியில்லை" என பிபிசியிடம் தெரிவித்தார். "இது விமர்சனங்களுக்கான நேரம் இல்லை" பட மூலாதாரம்,GETTY IMAGES "மத்திய அமைச்சர் அதனை அன்று சம்பிரதாயமாக அறிமுகம் செய்து வைத்தார், ஆனால் இந்த வகைகள் அனைத்தும் தற்போது ஆராய்ச்சி கட்டத்தில் தான் உள்ளன. இந்த அரிசி விதைகள் பற்றிய தெளிவு மூன்று, நான்கு மாதங்கள் கழித்து தான் கிடைக்கும். தற்போது அதைப்பற்றி பேசவோ விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது" என இந்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சாய் பிரசாத் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வகைகளைப் பற்றி நிலத்தில் பரிசோதித்த பிறகு பேசுவதே சிறந்ததாக இருக்கும். தற்போதே அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது. பலரும் இவற்றை மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நினைக்கின்றனர். வேறொரு உயிரினத்தின் உயிரணுக்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டால் அவை மரபணு மாற்றப்பட்டது என அழைக்கப்படுகிறது" என ஓய்வுபெற்ற வேளாண் பொருளாதார நிபுணரான கிலாரு பூர்ணசந்திர ராவ் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "காட்டன் விதைகளுக்குள் பேசிலஸ் துரிஞ்சியென்ஸ் பாக்டீரியாவில் இருந்து ஒரு மரபணுவை செலுத்தி பிடி காட்டன் உற்பத்தி செய்யப்பட்டது. இது மரபணு மாற்றம் என அழைக்கப்படுகிறது. இங்கு அது செய்யப்படவில்லை. விஞ்ஞானிகள் இங்கு மேற்கொண்டது மரபணு திருத்தம் மட்டுமே. அதாவது, தாங்களே அரிசி விதைகளில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர். எனவே தான் களத்தில் பரிசோதித்து முடிவுகளை அறிந்த பிறகே அவற்றைப் பற்றி நாம் பேச முடியும்" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1e61gq6wewo

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

3 months 1 week ago
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை! 09 JUN, 2025 | 07:55 PM சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பெயரிடப்படாத கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடனான தொடர்பிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217018

கப்பலில் காசாவிற்கு புறப்பட்டார் கிரெட்டா தன்பேர்க் - இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை விட இந்த பயணம் ஆபத்தானதில்லை என தெரிவிப்பு

3 months 1 week ago
மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிக்க இடமளியுங்கள்; இஸ்ரேலிடம் வலியுறுத்தல் Published By: VISHNU 09 JUN, 2025 | 07:33 PM (நா.தனுஜா) பலஸ்தீனத்தில் பதிவாகிவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் எனவும் கொழும்பில் ஒன்றுகூடி வலியுறுத்தியுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள், இஸ்ரேலியப்படையினரால் நிறுத்தப்பட்டிருக்கும் 'மட்லீன் சுதந்திரக் கப்பல்' காஸாவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனக் கோரியுள்ளனர். சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பேர்க் உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடன் மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றியவாறு காஸாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கப்பலுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலியப்படையினரால் அக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கப்பல் விடுவிக்கப்பட்டு, காஸாவுக்கான அதன் பயணத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், இஸ்ரேலின் பிடிக்குள் இருந்து காஸாவை மீட்கவேண்டும் எனவும் வலியுறுத்தி இலங்கையில் இயங்கிவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தினால் நேற்று திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், பலஸ்தீன விடுதலை ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் 'பலஸ்தீன விடுதலை', 'பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கே உரியது', 'நாம் பலஸ்தீனத்துடன் உடன்நிற்கிறோம்', 'பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துங்கள்', 'ஐக்கிய நாடுகள் சபையா? அல்லது நியாயமற்ற நாடுகள் சபையா?', 'இலங்கையே, சரியான தரப்பின் பக்கம் நில்' என்பன உள்ளடங்கலாக பலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சார்பில் கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை ஒத்திருப்பதாகவும், இப்பேரழிவைத் தடுப்பதற்கு பலஸ்தீனத்துக்கு எதிரான தமது ஒடுக்குமுறைகளை இஸ்ரேல் முடிவுக்குக்கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/217052

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

3 months 1 week ago
ட்ரம்ப் ஆட் களை பிடித்து மெக்சிக்கோவுக்கு அனுப்ப தயங்க மாட்டார். கலவரத்தை ஏற்படுத்தியவர்களை அனுப்புவதாக கூறுவார்.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
தமிழ் நாட்டில் 5000 ஆண்டுகள் முன்னர் இரும்பு பாவனை இருந்தால், தமிழ் நாட்டில் இருந்து தான் நவீன மனிதர்கள் உருவாகி வடக்கே போனார்கள் என்பதை நிரூபிப்பதாகுமா? எப்படி? ஆதி மனிதர்களின் கண்டு பிடிப்புகளில் பல ஒரே காலத்தில், அல்லது சிறிது கால இடைவெளிகளில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பு முதல், சக்கரம் வரை இப்படியாக உதாரணங்கள் இருக்கும் போது, தென்னிந்தியாவின் இரும்புப் பாவனை Out of Asia தியரியை நிறுவப் போதுமானதா?

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

3 months 1 week ago
09 Jun, 2025 | 05:30 PM வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர். தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர். இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி | Virakesari.lk

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி

3 months 1 week ago

09 Jun, 2025 | 05:30 PM

image

வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர்.

தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர்.

இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1000442139.jpg

1000442144.jpg


வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி  | Virakesari.lk

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !

3 months 1 week ago
09 Jun, 2025 | 05:10 PM கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் !

3 months 1 week ago

09 Jun, 2025 | 05:10 PM

image

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 

இதையடுத்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சிங்கப்பூர் கொடியுடன் மும்பை சென்ற கப்பலில் தீ பரவல் ! | Virakesari.lk

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!

3 months 1 week ago
உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!

3 months 1 week ago

உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.  

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு! | Virakesari.lk