Aggregator

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

3 months 1 week ago
சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு! adminJune 9, 2025 இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://globaltamilnews.net/2025/216546/

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

3 months 1 week ago

சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு!

adminJune 9, 2025

Police-militry.jpeg?fit=1170%2C658&ssl=1

இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

https://globaltamilnews.net/2025/216546/

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை

3 months 1 week ago
அனுராதபுர சிறை அதிகாரி கைது! adminJune 9, 2025 அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8.06.25) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 4 மில்லியன் ரூபாவை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்ற பிரதிவாதி, மே 12 ஆம் திகதி வந்த வெசாக் பெளர்ணமி நாளில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறைச்சாலை அத்தியட்சகரின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், இன்று (9) அனுராதபுரம் பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். https://globaltamilnews.net/2025/216541/

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

3 months 1 week ago
சும்மா அச்சுறுத்தலா, உண்மையாகவா? அவர் கட்டிலாலை விழுந்து வைத்தியசாலையில் அனுமதி பெறப்போகிறார்.

அர்ச்சுனா எம்.பி குறித்து அரசின் நடவடிக்கைகள் அதிருப்திக்குரியவை சரத் வீரசேகர தெரிவிப்பு

3 months 1 week ago
நாட்டிலே தமிழருக்கெதிரான இனவழிப்பு கலாச்சாரம், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்கிறது நேற்று வந்த அர்ச்சுனாவை காரணம் காட்டும் சரத் வீர சேகர முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முயல்கிறார். இவர் தெருக்களில் நின்று தமிழருக்கெதிராக விகாரையை சுற்றிவளைக்க கூவிக்கூவி ஆட்களை திரட்டும்போது, நாட்டிலே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் கெடவில்லையா? என்ன மாதிரியான புத்திசாலிகள் நாட்டில்?

சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி

3 months 1 week ago
இந்த வழி முறைகள் இன்னும் தாயகத்தில் வேலை செய்கின்றனவா என்று அறிய ஆவல். 90 களின் ஆரம்பத்தில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் எச்.ஐ.வி தொற்று யாழ் மருத்துவ மனையில் இரு நபர்களில் அடையாளம் காணப் பட்டது. உடனே, பொதுச் சுகாதார அதிகாரிகள் (PHI) யாழ் பாடசாலைகளில் இது பற்றிய கருத்தரங்குகளை நடத்தி மாணவர்களை அறிவூட்டிய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தக் கருத்தரங்குகளால், பல இளையோர் காப்பாற்றப் பட்டிருப்பார்கள் என நம்புகிறேன் (யாழ் கோட்டையின் சுற்றாடலின் காடு மண்டிய இடங்கள் இரகசிய காதல் மையங்களாகவும், ஓர் பால் உறவைப் பரீட்சித்துப் பார்க்க எண்ணிய ஆண்களாலும் நிரம்பிய காலங்கள் அவை).

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
இரும்பின் பயன்பாடு கிமு 3000 முதல் கிமு 1200 வரையிலான காலத்தில் தொடங்கியது. இது இரும்பு யுகம் (Iron Age) எனப்படும், ஆனால் இரும்பு முதலில் வெண்கல யுகத்திலேயே (Bronze Age) சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டது. மெசொப்பொத்தேமியா மற்றும் அனத்தோலியா (தற்கால துருக்கி) போன்ற பகுதிகளில் கிமு 3000க்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவில், இரும்பு யுகம் கிமு 1800 முதல் கிமு 1200 வரை தொடங்கியது. தமிழகத்தில், இரும்பு பயன்பாடு சங்க காலத்திற்கு முன்னர் (கிமு 600 - கிமு 300) இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. எனவே, தோராயமாக 5000 வருடங்களுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டில் இருந்துள்ளது.

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

3 months 1 week ago
தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. பாலகிருஷ்ணன் அவர்களது கட்டுரை, காணொலிகளைப் பார்த்துள்ளேன். சிறந்த ஆய்வாளர். தமிழ்நாட்டில் உலாவும் 5000 வருடங்களுக்கு முன் இரும்பு பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியான ஆதாரமற்றது என்று நினைக்கிறேன். இதுவரை உலகில் 3500 வருடங்களுக்கு முன்பே இரும்பு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago
இது ஒரு நல்ல கேள்வி நந்தன் . .........! நான் இந்தத் தாவரம் பற்றி பொதுவாக சொல்லியிருக்கிறேன் . .......... ! மண்டைதீவு கடலிலும் அலையுண்டு . ...... பனியில்லாத மார்கழி இருக்கலாம் ஆனால் அலையில்லாத கடல் இருக்காது . ........ கோல்பேஸ் போல 24 /24 நேர அலைகள் இல்லை . ...... ஆனால் மாரிகாலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அலைகள் புரண்டு வந்து பண்ணை வீதியில் மோதும் . ........ அக்காலத்தில் அக்கடலேரியின் கீழே இருக்கும் ஓரா மீன்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி மேலே வரும் நிறைய மீன்கள் அப்போது கல்லுகளில் மோதுண்டு வீதிகளில் கூட தெறித்து விழுவதுண்டு . ...... சில இளைஞர்கள் அப்போது வெட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் ....... சிலர் மீன் கூட்டத்தைப் பார்த்து வெடி எறிந்து விட்டு (இது தடை செய்யப்பட்டது ) உடனே குதித்து பைகளில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் . ...... இப்படிப் பல சம்பவங்கள் உண்டு . ........!

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago
இது நல்லது . ......... ! _ இவை கடல் மண் அரிப்பைத் தடுக்கும் . .....! _ மீனினம் பெருக வழி வகுக்கும் . .... ! _ திரண்டு வரும் பெரும் அலைகளை சமாளித்து அனுப்பி விடும் . .......( அதனால் அலையாத்திக் காடுகள் ஆகும் ) ...... !

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
நான் நம்ப வேண்டுமானால் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கோடிக் கணக்கானவர்களை விடுங்கள். சில ஆயிரம் நபர்களை எடுத்து அவர்களின் வாழ்க்கை முறை எண்கணித சாத்திரத்தின்படிதான் நடக்கிறது என்று யாராவது நிறுவியுள்ளார்களா ? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நிச்சயம் நிறுவவும் முடியாது. எல்லாத் தினசரிகளிலும் இல்லை. அதுவும் ஒதுக்குப் புறமாகப் போட்டிருப்பார்கள். ஏனென்றால் மிகக் குறைந்தவர்களே இதனை வாசிக்கிறார்கள். அதுவும் பலர் இதனைப் பொழுது போக்காகத்தான் வாசிக்கிறார்கள்.

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 1 week ago
வளைவுப் பாலமோ வளைவில்லாத பாலமோ, சீனா 625 மீற்றர் உயரமான பாலம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளது. இந்தச் சிறிய இடைவெளிச் சந்தில் மோடி சிந்து பாடியுள்ளார் போலுள்ளது. https://en.wikipedia.org/wiki/Huajiang_Canyon_Bridge

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago
மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள் adminJune 8, 2025 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/216534/

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

3 months 1 week ago

மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்

adminJune 8, 2025

3-3.jpg

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர்,  யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான   க.இளங்குமரன்,  ஜெ.ரஜீவன்,  ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

https://globaltamilnews.net/2025/216534/

உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !

3 months 1 week ago
இந்திய பேராசிரியரான ஜி மாதவி லதாவுக்கு வாழ்த்துக்கள். Afcons என்ற இந்திய நிறுவனம் கட்டியது என்று அறிய முடிகின்றது.