Aggregator

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

3 months 1 week ago

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

June 8, 2025 10:13 am

சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல்

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப்பு களஞ்சியம் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

சொத்து தனது கட்டுப்பாட்டில் உள்ளதாக ராஜபக்ஸ சத்தியப்பிரமாணம் செய்து அளித்திருந்த போதிலும், மேற்கொண்ட விசாரணைகளில் அந்த நிலம் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2023 ஜூலை மாதம் வெளியான மதிப்பீட்டு அறிக்கையில், அந்த இடத்தில் 14.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு இருந்ததாகவும், நெல் களஞ்சியத்துக்கு 222,600 ரூபா சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பொது நிர்வாக அமைச்சு, தங்கள் அதிகார வரம்பில் இந்த இழப்பீடு வழங்கப்பட முடியாது என தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், முழு தொகையும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், குறித்த மோசடி குற்றச்சாட்டின் பேரில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சமல் ராஜபக்ச விசாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நிதியை செலுத்துவது தொடர்பான சட்டம் மற்றும் சுற்றறிக்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அரச அதிகாரிகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/chamal-rajapaksa-may-be-arrested-at-any-time-state-media-reports/

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

3 months 1 week ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் 08 Jun, 2025 | 10:13 AM (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம் வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216895

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

3 months 1 week ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

08 Jun, 2025 | 10:13 AM

image

(நா.தனுஜா)

வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் நிலைவரம் என்பன தொடர்பில் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர், தாம் அம்மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி அவ்வாறான திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் இருப்பின், அதனைத் தம்மிடம்

வழங்குமாறும், அதுபற்றி அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் பின்னரான தமிழ்த்தேசிய கட்சிகளின் அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளித்த சுமந்திரன், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றத்திலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்ற கோட்பாட்டைத் தாம் முன்வைத்ததாகவும், இருப்பினும் அதற்கு முரணாக இரு கட்சிகள் கூட்டணி அமைத்து தம்வசமே அதிக ஆசனங்கள் இருப்பதுபோல் காண்பித்துக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒரே கொள்கையையே கொண்டிருப்பதாகவும், அணுகுமுறைகளே மாறுபட்டவையாகக் காணப்படுவதாகவும் தெரிவித்த சுமந்திரன், இருப்பினும் அதனை கஜேந்திரகுமார் மறுப்பதற்கான காரணம் தனக்குத் தெரியவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில் 2015 - 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் தயாரித்த அரசியலமைப்பு வரைபு சிறந்த பல கூறுகளைக் கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் எடுத்துரைத்த சுமந்திரன், அதிலுள்ள குறைபாடுகள் பற்றி சகலரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, அதனை முற்றாக நிராகரிக்கவேண்டும் என கஜேந்திரகுமார் கூறிவருவது ஏற்புடையதன்று என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/216895

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 1 week ago
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

3 months 1 week ago

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முற்றாக முடங்கும் அபாயத்தில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையும், அதன் சேவைகளும் முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. 

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக விளங்கும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எதிரான திட்டமிட்ட முயற்சிகள், தற்போது அதன் இயங்கு திறனை முற்றாக பாதிக்கும் நிலையினை நோக்கி நகர்ந்துள்ளன. 

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் சில அனுசரணையாளர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக நிறுவப்பட்ட இவ்வைத்தியசாலை, இன்று வரை ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளுக்கு உயிருக்குப்போராடும் வாழ்வதார சிகிச்சையைக் வழங்கி வருகிறது. 

ஆனால், அப்போதும் இப்போதும் தொடர்ந்து சிலர் மேற்கொள்ளும் மறைமுகமான நடவடிக்கைகள், வஞ்சக போக்குகள் மற்றும் திட்டமிட்ட இடையூறுகள் இதன் நிரந்தர மேம்பாட்டுக்கும் சேவைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

தற்போது, பல ஆண்டுகளாக புற்றுநோயாளர்களுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்திக்கு எதிராக நடக்கும் அவதூறு பரப்பல், சமூக மேடைகளிலான வசைபாடுகள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை எமது சங்கம் கடுமையாகக் கண்டிக்கின்றது. 

அவரை மனதளவில் பாதித்து, சேவையில் இருந்து பின்வாங்க வைக்கவே இது மேற்கொள்ளப்படுவதாக எமது சங்கம் தெளிவாக அறிந்து வருகின்றது. 

இச்சவாலுக்கு உரிய சூழ்நிலை ஒரு சில தனிநபர்களின் துயரம் மட்டுமல்ல அதுவே நோயாளர்களின் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் சமூக மருத்துவப் பின்னடைவுகளுக்கு இடமளிக்கும் நிலை ஆகும். 

இந்நிலையில், வைத்திய நிபுணர்களுக்கு எதிரான இத்தகைய களங்கப்படுத்தல் ஆனது, ஏழை நோயாளர்களின் உரிமைகளை நேரடியாக தாக்குகின்றது. 

அத்துடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் சேவைகள் குறைக்கப்பட்டு, அதன் தரம் சிதைக்கப்படுவதற்கான பின்னணியில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மற்றும் சட்டவிரோத ஒழுங்குகள் செயல்படுவதாகவும், அவை உறுதியான தண்டனைவிதிகள் இன்றி தொடர்வதாகவும் எமது சங்கம் ஆழ்ந்த கவலையுடன் , உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. 

எனவே, புற்றுநோய் நிபுணர் வைத்தியர் கிருஷாந்தியின் பாதுகாப்பும், பணிச் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 

மேலும் அவதூறு பரப்பும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நிர்வாக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் அதன் அனைத்து பிரிவுகளும் புற்றுநோய் சிகிச்சை பிரிவு உள்ளடங்கலாக பாதுகாக்கப்பட்டு மேம்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் நோயாளர்களுக்கான உயர்தர சிகிச்சைகள் அரச வைத்தியசாலையில் தொடர வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அவசியமானால் தீவிரப்படுத்தப்படும். 

நமது நோக்கம் உன்னத நோக்கம் கொண்ட தனி நபர்களை காப்பது மட்டுமல்ல நோயாளியின் உரிமைகள், வாழ்க்கை தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmbn64q8c01joqpbs833pk06z

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன்

3 months 1 week ago
புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார் டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும். அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம். டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது. புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது. ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத் தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான் என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும். தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு வரையிலுமான எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான். இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது https://www.nillanthan.com/7451/

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன்

3 months 1 week ago

புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன்

504710956_4118247221774593_4808453404441

கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற  அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான குற்றவாளியாகக் காணப் போகிறோம்; யாருக்கு எதிராக அணி திரளப் போகிறோம் என்பதில் தமிழ் மக்களிடம் மிகத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.அதாவது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வது.எங்களுக்குள் ஒருவர் மற்றவரை குற்றஞ்சாட்டி நாங்கள் பல துண்டுகளாகச் சிதறிப் போவதா? அல்லது பொது எதிரிக்கு எதிராக ஒன்று திரள்வதா? என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம்.

இந்த அடிப்படையில் பார்த்தால் கஜேந்திரக்குமார்  டிரிஎன்ஏயோடு கூட்டுக்குப் போவது என்று முடிவெடுத்தது ஒரு திருப்பகரமான மாற்றம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தியாகி-துரோகி வாய்ப்பாட்டுக்கு வெளியே அந்தக் கூட்டு உருவாகியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் கடந்த 15 ஆண்டுகால வாய்ப்பாட்டுக்கு வெளியே முன்னணி வந்திருக்கிறது.அது இரண்டு தரப்புக்கும் மெய்யான ஒரு பண்புருமாற்றமாக இருந்தால் கூட்டு நிலைக்கும்.

அந்தக் கூட்டின் மூலம் அவர்கள் பின்வரும் நன்மைகளை  அடைய முயற்சிக்கலாம். முதலாவதாக, பொது எதிரிக்கு எதிராக ஒப்பீட்டளவில் பெரிய கூட்டு. இரண்டாவதாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளை உருவாக்கலாம். மூன்றாவதாக, தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியைத் தனிமைப்படுத்தலாம். நான்காவதாக, மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒரு பலமான முன்னணியை உருவாக்கலாம். ஐந்தாவதாக, கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்தலாம்.

டிரிஎன்ஏயைப் பொறுத்த்தவரை அவர்கள் யாரோடாவது கூட்டுச் சேர வேண்டும். தனியாக நின்று பிடிக்க முடியாது. தமிழரசுக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்தால் மாகாண சபையிலும் அதற்குப் பின் வரக்கூடிய தேர்தல்களிலும் அதிகரித்த வெற்றி வாய்ப்புகள் அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான வெற்றி வாய்ப்புகளை இனிமேல்தான் நிரூபிக்க வேண்டாம். ஆனால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது தொடர்பாக தமிழரசுக் கட்சியோடு அவர்கள் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளில் திருப்தியான பெறுபேறுகள் இல்லாத ஒரு பின்னணிக்குள் அவர்கள் முன்னணியை நோக்கி வந்திருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி தன்னை முதன்மை கட்சியாகவும் பெரிய கட்சியாகவும் கருதி, தனது மேலாண்மையை வலியுறுத்த முற்பட்டதன் விளைவு இது.

புதிய கூட்டை எப்படி உளவியல் ரீதியாகவும் நடைமுறையிலும் பலவீனப்படுத்தலாம் என்று சிந்தித்து சுமந்திரன் அணி திட்டமிட்டு வேலை செய்கின்றது.சுமந்திரன் அணி இந்தக் கூட்டைக் கண்டு பதட்டமடைகிறது. எதிர்காலத்தில் தலைமைத்துவம் முன்னணியிடம் சென்று  விடக்கூடாது என்ற பயமும் அதில் உண்டு. எனவே இந்தக் கூட்டை உடைப்பதற்காக எந்த ஒரு வெளி எதிரியையும் விடக் கூடுதலாக சுமந்திரன் அணி வேலை செய்கின்றது.facebook_1749296419549_73370809697035033

ஈபிடிபியுடன் தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தைக்கு போனதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் அதனால் ஏற்படும் பின்னுதைப்பு கட்சியைக் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலைமைகள் தெரிகின்றன. இதில் சுமந்திரனுக்கு ஆறுதலான விடயம் என்னவென்றால்,சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக கட்சிக்குள் காணப்படும் சக்திகளுக்கு தலைமை தாங்க இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை தயாரில்லை  என்பதுதான். இதனால் சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் படிப்படியாக கட்சிக்குள் தன் பிடியை பலப்படுத்தி வருகிறார். மந்திரித்து ஏவி விடப்பட்ட சேவலைப்போல அவர் அங்கலாய்ப்போடு ஓடிக்கொண்டேயிருக்கிறார். ஒரு கட்சியின் பதில் செயலாளர் இவ்வளவுக்குத்  தீயாக வேலை செய்வதில்லை. ஆனால் சுமந்திரன் தொடர்ந்து இயங்குகிறார். முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சியின் எல்லாமுமாக அவர் தோன்றினார். இப்பொழுதும் அந்தப் பாத்திரத்தை எப்படித் தக்க வைப்பது என்று சிந்தித்துத் திட்டமிட்டு உழைக்கிறார்.அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் எப்படியும் மக்கள் ஆணையைப் பெற்று விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிகிறது.

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமைப் போட்டி என்பது பலமான தலைமைகள் இரண்டு இருப்பதால் ஏற்பட்டது அல்ல. இரண்டுமே பலவீனமான தலைமைகள் என்பதால் ஏற்பட்டதுதான்  என்பதைக் கடந்த ஆண்டு நிரூபித்து விட்டது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கஜேந்திரக்குமாரின் தலைமைத்துவத்தை பலப்படுத்த இதுதான் தருணம் என்று நம்புவதாகத் தெரிகிறது.கடந்த வெள்ளிக்கிழமை கஜேந்திரகுமார் கொழும்பில் நடாத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் சுமந்திரன் அணிக்குப் பொறி வைப்பவை.

503503384_10162603465459054_794533667309

தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 15 ஆண்டுகளாக தன்னை ஒரு மாற்று அணியாகத்தான் ஸ்தாபித்து வந்திருக்கிறது. தன்னை ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாகக் கருதி வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள அக்கட்சி தவறிவிட்டது. 15 ஆண்டுகளின் பின் கஜேந்திரக்குமார் உடல் ரீதியாகவும் நோய்வாய்ப்பட்டு தேறிய பின், அந்தக் கட்சி அவருக்கு நெருக்கமான சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் தூண்டுதலால் தனது வழமையான வாய்ப்பாட்டிலிருந்து இறங்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு பெருங்கட்சியாக அவர்கள் வளர்வதற்கு இதை விடக் கடுமையாக உழைக்க வேண்டும்.அதாவது தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடாக வளர மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். அவர்கள் அப்படி உழைக்கும் வரையிலும் தமிழரசுக் கட்சிதான் முதன்மைக் கட்சியாக தொடர்ந்துமிருக்கும். புதிய கூட்டு நிலைத்திருக்குமாக இருந்தால் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சிப் பண்பு மீண்டும் தலை தூக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஏற்பட்ட கூட்டுக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய கட்சிகளும் சரி ஆயுதப் போராட்ட இயக்கங்களும் சரி தங்களுக்குள்ளேயும் மோதியிருக்கின்றன.தங்களுக்கு இடையிலும் மோதியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொடங்கி ஆயுதப் போராட்ட காலத்தில் திம்பு பேச்சு வார்த்தையை நோக்கி உருவாக்கப்பட்ட இயங்கங்களின் கூட்டு. அதன்பின் உருவாக்கிய தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு. அதன் பின் உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவை. அதன்பின் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு  வரையிலுமான  எல்லாக் கூட்டுக்களும் ஒரு கட்டத்தின் பின் குலைந்து விட்டன. கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான தொகுக்கப்பட்ட தோல்வியென்பது கூட்டுக்களின் தோல்வியுந்தான்.

இப்பொழுது ஒரு கூட்டு உருவாகியிருக்கிறது. எனினும் இதுகூட பிரம்மாண்டமான ஒரு கூட்டு இல்லை.தமிழரசுக் கட்சி  தொடர்ந்தும் வடக்கு கிழக்கு தழுவிய பெருங் கட்சியாக, முதன்மைக் கட்சியாகக் காணப்படுகின்றது. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் ரத்தச் சுற்றோட்டங்கள் தமிழ்த் தேசிய அரசியலில் இரு கட்சி நிலையை பலப்படுத்துமா? மேற்கத்திய ஜனநாயகங்களில் உள்ளது போல இரு கட்சிப் போட்டி நிலைமை என்பது அங்கு ஆரோக்கியமானது. ஆனால் நீதிக்காக போராடும்,அரசற்ற மக்களாகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 16 ஆண்டு காலத் தேக்கம், தோல்வி என்பவற்றின் பின்னணியில், அது ஆரோக்கியமானது அல்ல.பொது எதிரிக்கு எதிராகத் தேசம் திரண்டு நிற்காது.இரண்டாக நிற்கும். கட்சி மைய அரசியல் இப்படித்தான் இருக்கும்.கட்சிகளால் மட்டும் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது

https://www.nillanthan.com/7451/

ஈழத் தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்தான நிலைமை! வெளிவரும் இரகசிய அரசியல் நகர்வுகள்

3 months 1 week ago
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளரே வெற்றி பெறுவார் என சுனில் வட்டகல தெரிவிப்பு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சிக்கு, தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள பிமல் ரத்நாயக்க தமக்குத் தேவையான கொள்கலன்களை தேர்ந்தெடுத்து விடுவிப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு இல்லை என தயாசிறி ஜயசேகர கருத்து வடக்கு கிழக்கை "அனைத்து இனங்களின் வாழ்விடம்” என காட்டும், தமிழ் இன அடையாளங்களை மறைக்கும் வியூகங்களை கொழும்பு கட்டமைத்து வருகிறது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

3 months 1 week ago
Columnsசிவதாசன் கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை சிவதாசன்கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது. அதிகாரப் பரவலாக்கம் போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது; கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது; சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது; புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது; அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்; குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்; குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்; ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது. நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல் தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல் எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல் கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல் கருப்பு பண வருகையைத் தடுத்தல்கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல் பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல் வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல் மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்). இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது. காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு. அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது. ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது. அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது. |கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

3 months 1 week ago

Gary_A-e1748991074857.jpeg

Columnsசிவதாசன்

கனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை

சிவதாசன்

கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். ‘கனடியர்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்’ என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இச்சட்டத்திற்கு பலமான எல்லைகள் சட்டம் (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றத்தை எதிர்கொள்ளல்’ (combat transnational organized crime), சட்டவிரோதமான ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தலைத் தடுத்தல் (stop the flow of illegal fentanyl) மற்றும் கருப்புப் பணச்சலவைச் செயற்பாடுகளைத் (crack down on money laundering) தடுத்தல் ஆகியவற்றின் பின்னாலுள்ள அதி நவீன வலையமைப்புக்களை எதிர்கொள்ள வல்லதாக கனடிய பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தல் இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும் குடிவரவு விடயங்களிலும் அமைச்சரின் அதிகாரம் தலையை நீட்டுவதற்கான அனுமதியும் இருக்கிறது போலத் தெரிகிறது.

அதிகாரப் பரவலாக்கம்


  • போதை வஸ்து, ஆயுதங்கள் கடத்தல் வாகனத் திருட்டு ஆகியவற்றைக் காண்காணிக்கும் அதிகாரம் சுங்கச் சட்டத்தின் கீழ் வந்தாலும் சில எல்லைகளினூடு வரும் / போகும் பொருட்களைத் தேக்கி வைத்திருக்கும் / பொதிகளைத் தயாரிக்கும் கிட்டங்கிகள் (warehouses), கொள்கலன்கள் (containers), அல்லது பாரவண்டிகளைப் (trucks) பரிசோதிக்கும் அனுமதி தற்போது இல்லை என்பதால் அச்சட்டத்தை மாற்றுவது;

  • கரையோரப் பாதுகாப்ப்பில் ஈடுபடும் காவற் படையினர் சந்தேகத்திற்கிடமாக நடமாடும் கலங்களை வழிமறித்து அல்லது அவற்றுக்கிடையேயான தொடர்பாடல்களைக் கிரகித்து பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சமுத்திர சட்டத்தை (Oceans Act) மாற்றுவது;

  • சர்வதேச சட்ட நிர்வாக அமைப்புகளுடன் பரிமாறல்களை அதிகரிக்கும் வகையில் RCMP காவல்துறையின் அதிகாரங்களை விரிவாக்குவது;

  • புதிய ‘தகுதியின்மை’ (ineligibility) விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சடுதியாக அதிகரிக்கும் அகதிகள் கோரிக்கைகளிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பது;

  • அகதிக்கோரிக்கைகள் எவ்வழியில் பெறப்படுகின்றன, ஆராயப்படுகின்றன, தீர்மானிக்கப்படுகின்றன ஆகிய விடயங்களைக் கூர்மைப்படுத்தல்;

  • குடிவரவுப் பத்திரங்களை ரத்து செய்யவோ, இடைநிறுத்தவோ அல்லது மாற்றுவற்கோ அல்லது அகதிகோரிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களை ரத்துசெய்யவோ, தற்காலிகமாக இடைநிறுத்தவோ அல்லது முற்றாக நிறுத்தவோ தேவையான அதிகாரங்களை திணைக்களங்களுக்கு வழங்குதல்;

  • குடிவரவாளர் பற்றிய பிரத்தியேக தகவல்களை குடிவரவு,அகதிகள், பிரஜாவுரிமைத் திணைக்களம் ஏனைய மத்திய, மாகாண மற்றும் பிரதேச அதிகாரங்களுடன் பகிர்ந்துகொள்ளல்;

ஆகிய விடயங்களில் மாற்றங்களைக் கொண்டுவர அமைச்சரால் முன்மொழியப்படும் புதிய சட்டமூலம் வழிவகுக்கிறது.

நாடுகடந்த திட்டமிட்ட வகையில் செயற்படும் குற்ற அமைப்புக்கள் மற்றும் ஃபென்ரனில் போதை வஸ்து கடத்தல்
  • ஃபென்ரனில் போதை வஸ்து தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியாவதை அவதானித்து விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுக்கு அதிகாரங்களை வழங்கல்

  • தேவையேற்படின் ஒருவரது பிரத்தியேக தகவல்களைப் பெறும் வகையில் Criminal Code, MLACMAct, CSIS Act ஆகிய சட்டங்களை மாற்றி இத்திணைக்களங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குதல்

  • எலெக்ட்றோனிக் ஊடகங்களை ஊடுருவி ஒருவரது பிரத்தியேக தொடர்பாடல்களைக் கண்காணிக்க்கும் வகையில் புலனாய்வு திணைக்களங்களுக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குதல்

  • கனடா போஸ்ட் மூலம் விநியோகிக்கப்படும் தபால்கல், பொதிகளைத் திறந்து பரிசோதிக்கவும், தேவையானால் குற்றங்களைப் பதியவும் காவற்துறையினருக்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மாற்றத்தைக் கொண்டு வருதல்

கருப்பு பண வருகையைத் தடுத்தல்
  • கருப்புப் பணத்தைச் சலவை செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்குப் பணம் வழங்கல் போன்ற விடயங்களைத் தடுக்க கடினமான தண்டனைகளை வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றுதல் /மாற்றுதல்

  • பெரிதளவான பண மாற்றம், மூன்றாம் தரப்பு பண மாற்றம் ஆகியவற்றைக் கண்காணித்தல்

  • வங்கிக் கணக்குகளில் காணப்படும் சந்தேகத்துக்கிடமான பண மாற்றங்கள் பற்றி சம்பந்தப்பட்ட அரச, தனியார் நிறுவனம்ங்களிடையே தகவற் பரிமாற்றத்துக்கு வழி செய்தல்

மேலும் வரவிருக்கும் புதிய சட்டங்கள் , மாற்றங்கள்

கனடாவைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரப்படும் ‘பலமான எல்லைகள் சட்டம்’ துப்பாக்கிகளின் பிரயோகத்தைக் கட்டுப்படுத்தியும், தொடர் குற்றவாளிகள் இலகுவில் பிணை பெறுவதைத் தடுக்கவும், வாகனத் திருடர்கள், வீடுகளை உடைத்து திருடுபவர்கள், ஆள் மற்றும் போதை வஸ்து கடத்தல்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு உத்தேசம் கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்காக $1.3 பில்லியன் தொகையைச் செலவிடத் தயாராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் ஆனந்தசங்கரியின் திரிசங்கு நிலை

இச்சட்டமூலம் அறிவிக்கப்பட்டபோது உடனடியாக ஒரு ஊடகவியலாளர் மாண்புமிகு அமைச்சரை இக்கட்டில் மாட்டிவிடும் வகையில் கேள்வியொன்றைக் கேட்டார். “சில வருடங்களுக்கு முன் வான்கூவரில் கரை தட்டிய கப்பலில் வந்த அகதிகள் விடுதலைப் புலிகள் அல்லவா. அப்போது நீங்கள் கனடிய தமிழர் பேரவையின் சட்ட ஆலோசகராக இருந்தீர்களே. இப்பின்னணியில் இப்போது அறிமுகமாகும் சட்டமூலத்தை எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறீர்கள்” என்ற சாரத்தில் அக் கேள்வி இருந்தது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், விடுதலைப் புலி, கனடிய தமிழர் பேரவை போன்ற ஆபத்தான பதங்களைச் சாதுரியமாகத் தவிர்த்து அவரது அமைச்சர் தொப்பியை மாற்றிவிட்டு ஒருகணம் வழக்கறிஞராக மாறிப் பதிலளித்து ‘வாய்ப்பில்லை ராஜி’ எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார் (எனது பார்வையில்).

இக்குறிப்பிட்ட ஊடகவியலாளரிடமிருந்து வந்த அம்பு நீண்ட நாட் தயாரிப்பாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆனால் இதைவிட மோசமான பல அம்புகள் இன்னும் பலவித ஊடகவியாளர்களின் அம்பறாத்துணியில் பதுங்கியிருக்க வாய்ப்புண்டு. குடிவரவு, வெளிவிவகாரம், தபால், சுகாதாரம், தகவற் தொடர்பு என ஏகப்பட்ட அமைச்சர்களின் அதிகாரங்களை அள்ளிக் கொண்டுவந்து அமைச்சர் ஆனந்தசங்கரியின் பாசறையில் போட்டுவிட்டு “ஏலுமெண்டால் செய்துபார்” என்று கார்ணி தப்பித்துக்கொண்டுவிட்டார். இவற்றில் பெரும்பாலானவை பெரியவர் ட்றம்பைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது பளிச்சென்று தெரிகிறது.

காளிஸ்தான் பயங்கரவாதிகள் என யாராவது தொண்டை கிழியக் கத்துவது அமைச்சரது செவிப்பறைக்குள் நுழையும் போது அது ‘விடுதலைப் புலிகள்’ ஆகவே அவருக்குக் கேட்கும். கத்துபவர்களின் நோக்கமும் அதுவாகவே இருக்கும். இப்பின்னணியில் தமிழ்ச் சமூகத்துடனான அவரது ஊடாடல்களை அவர் மட்டுப்படுத்தத் தள்ளப்படுவார். பாதுகாப்பு காரணங்களுக்கென குடிவரவு விண்ணப்பங்கள் ரத்துச் செய்யப்படும்போது அதனால் பெருவளவு பாதிக்கப்படப் போபவர்கள் வெள்ளையரல்லாதவர்கள். இதனால் அமைச்சருக்கு எதிராக அவரது ‘தோலினமே’ கொடி பிடிக்க (பனர் பிடிக்க (?)) கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் தனியார் சுதந்திர எல்லைகளை மீறும் பல சட்ட மாற்றங்கள் அமைச்சருக்குப் பல வகையான எதிரிகளையும் தேடித்தர வாய்ப்புண்டு.

அதைவிடவும் அச்சம் தரும் விடயம் இந்த ‘ஓர்கனைஸ்ட் கிரைம்’ கும்பல்கள். அமைச்சர் முன்பு போல ரொயோட்டா கொரோல்லாவில் பயணம் செய்யக்கூடாது. மாறாக இலான் மஸ்க்கிடமிருந்து ஒரு ‘சைபர் ட் ரக்’ ஒன்றை (இதுவரை வாங்காமலிருந்தால்) வாங்கி வைத்திருப்பது நல்லது.

ஆனால் அமைச்சரது இந்த சட்ட மூலம் ஒரு விடயத்தில் சில நல்ல விடயங்களைச் செய்யும் எனவும் எதிர்பார்க்கலாம். சமூக ஊடகங்களில் உலவும் தலை மாறிகளும், தலையாட்டிகளும் கொஞ்சம் ஓரமாக நிற்கவேண்டி ஏற்படலாம். அமைச்சருக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ எதிரிகளைச் சமாளிக்க சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தேயாகவேண்டும். இதனால் நண்பர்கள் எதிரிகளாகவும் எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவதற்கான சூழல் ஏற்படுமெனப் பட்சி சொல்கிறது.

அமைச்சருக்கு எனது அட்வைஸ்? விளக்குக் கொழுத்துவதையும் பட்டயம் வழங்குவதையும் சற்றுத் தவிர்த்து அதிக காலத்தை ஒட்டாவாவில் கழிப்பது நல்லது.

|
No image previewகனடா: அமைச்சர் ஆனந்த சங்கரியின் திரிசங்கு நிலை |
சிவதாசன் கனடாவின் உள்ளக பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் இன்று, ஜூன் 03, 2025, மாண்பு மிகு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி புதியதொரு சட்டமூலத்தை அறிவித்திருக்கிறார். 'கனடியர்களைப் பாதுகாப்பாக...

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
சில நாடுகளில் திருமணத்தின் பிந்தான் உறவு வைக்க முடியும் என உள்ளது. சில நாடுகளில் திருமணத்தின் பின் கணவனுடன் மட்டுமே வைக்க முடியும் என உள்ளது. ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளிலும் திருமணத்தின் பின் இன்னொருவருடன் உறவு வைப்பது கிரிமினல் குற்றம் இல்லை எனிலும், விவாகரத்துக்கு போதிய காரணமாக கொள்ளப்படும்.

யோக முத்திரைகள்

3 months 1 week ago
யோக முத்திரைகள் YOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே, இந்த முத்திரை அறிவைப் பெருக்கும். அறிவு முத்திரை என்றும் இதனை அழைக்கலாம். முறை: கட்டை விரலின் நுனியானது சுட்டு விரலைத் தொடுமாறு மற்றைய விரல்கள் நீட்டப்பட்டும் அமையத் தியானம் செய்ய வேண்டும். நீங்கள் இருந்துகொண்டோ அல்லது நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ செய்யலாம். இடம்: எந்தவொரு அமைதியான இடமும் இதற்கு உகந்தது. நேர அளவு: இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம். பலன்கள்: அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி – pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப் படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.ஆகவே இந்த முத்திரை,• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும். 2. பிருத்வி முத்திரை : பூமி முத்திரை பிருத்வி என்றால் சமஸ்கிருதத்தில் பூமி மாதா என்பதாகும். முறை: மோதிர விரலின் நுனிப்பகுதி கட்டை விரலின் நுனியுடன் தொட ஏனைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: வரையறை இல்லை பலன்கள்: எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும். • உடல் பலவீனமற்றவருக்கு நிறையைக் கூட்டும். • தோலின் கட்டமைப்பை உகந்ததாக்கி தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவும். • உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உடலினைப் பேணுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 3. வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை முறை: சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும். நேர அளவு: 45 நிமிடங்கள் இவ்வாறு இருத்தலின் மூலம் நோயின் தாக்கம் 12 – 24 மணி நேரங்களுக்குள் குறைந்து விடும். இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செய்தல் சாலச் சிறந்தது. பலன்கள்: • மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் ( rheumatism, arthritis, gout) மற்றும் பார்க்கின்சன் வியாதி • கழுத்து முதுகென்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis) • வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு 4. சூரிய முத்திரை முறை: மோதிரவிரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலால் அழுத்துதல் நேர அளவு: ஒரு நாளைக்கு இரு தடவை 5 – 15 நிமிடங்கள் பலன் : • தைரோய்ட் சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும் • உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும் • பதட்டத்தைப் போக்கும் • சமிபாட்டுக் கோளாறுகளைத் தீர்க்கும் 5. பிராண முத்திரை : உயிர் முத்திரை முறை: கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு வைத்துக் கொள்ள ஏனைய விரல்களை நீட்டி வைத்திருத்தல். நேர அளவு: எக்காலத்திலும் வரையறையின்றி செய்யலாம். பலன்: உயிர் முத்திரை அல்லவா. உயிரின் சக்தியைப் பெருக்கும். பலவீனமானோர் தேக வலுப பெறுவர். குருதிக்குழாய் அடைப்புகளைச் சரிபடுத்தும். இதனை ஒழுங்காக பயிற்சி செய்தால் நன்கு உற்சாகமுள்ளோராக மாறுவோம். • நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் • கண் பார்வை சிறப்புற உதவும், கண் சம்பந்தமான வியாதிகளைக் குறைக்கும் உயிர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகளைச் சீர்படுத்தும், களைப்பைப் போக்கும்.. 6. பச்சன் முத்திரை : சமிபாட்டு சம்பந்தமானது. பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) உணவு சமிபாடு அடைவதுடன் தொடர்புடையது. முறை: நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல். நேர அளவு: நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது. பலன்: எமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் • மலச்சிக்கல், மூலவியாதி போக்கும் • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது 7. லிங்க முத்திரை : வெப்பம் மற்றும் சக்திக்கான முத்திரை முறை: இரு கரங்களின் விரல்களையும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொள்ளவும், பின்னர் இடது கட்டை விரலை உயர்த்தி, அதனை வலது கட்டை விரல் மற்றும் சுட்டு விரல்களுக்குள் சுற்றி வருமாறு அடக்கவும். நேர அளவு: எந்த நேரமும் உகந்தது, ஆனால் நீண்ட நேரம் செய்தல் தவிர்க்கப்படல் நல்லது. பலன்: இந்தச் செயன் முறை எமது உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. பால், நெய் தண்ணீர் மற்றும் பழச் சாறு போன்றவைகளை இந்த முத்திரையைப் பயன்படுத்தும் போது எடுப்பதால் கூடுதலான பலன்கள் கிடைக்கும். • சளி உருவாதலைக் கட்டுப்படுத்தும், சுவாசப்பைக்கு சக்தியைக் கொடுக்கும். • சளிக்காய்ச்சல் சுவாசக்குழாய் நோய்களைக் குணப்படுத்தும். • உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். 8. அபான வாயு முத்திரை : இதய முத்திரை முறை: சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல் மட்டும் நீட்டப்பட்டு இருக்கும். நேர அளவு: எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும். பலன்: இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். ஒரு ஊசி மருந்தினைப் போல மார்படைப்பினைக் குறைக்க உதவும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும். • இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும். • கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும் • சமிபாட்டை ஒழுங்காக்கும். 9. வருண முத்திரை : நீருக்கான முத்திரை முறை: சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்துக் கொள்ளவும், மிகுதி மூன்று விரல்கள் நீட்டப்பட்டிருத்தல் வேண்டும். பலன் : உடலின் நீர்ச் சமநிலையைப் பேணுகின்றதில் உதவுவதோடு நீர்ப் பற்றாக்குறையால் வரும் எல்லா நோய்களையும் வருவதைத் தவிர்க்க உதவும்.. • இரைப்பை-குடல் அழற்சியால் ஏற்படும் வலியைத் தடுக்கிறது • உடல் நீர் சமநிலை பேணுகிறது. • தோல் சம்பந்தமான நோய்களைக் குணமாக உதவுகிறது. யோக முத்திரைகள்: YOGA MUDRASYOGA MUDRASயோக முத்திரைகள் 1. ஞான முத்திரை : அறிவு முத்திரை ஞானம் என்றாலே அறிவுதானே , இந்த முத்திரை அறிவைப் பெருக்கும் . அறிவு முத்திரை ...

உங்களுக்கு தெரியுமா?

3 months 1 week ago
பெருமைக்குரிய பிணந்தின்னிகள்! http://aalumaisirpi.com/wp-content/uploads/2025/01/animal.jpg திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா – புஜ்ஜி பாத்திரங்களுக்குத் தீமைகள் விளைவிப்பது குள்ளநரி. அந்தக் கார்ட்டூனில் மட்டுமல்ல. காலம் காலமாக நரியை நெகட்டிவ் உயிரினமாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். பாட்டி வடை சுட்ட கதையிலும் நரியே வில்லன். நரிக்கு உபதேசம் செய்தாற்போல. நரி நக்கி கடல்நீர் வற்றுமா? நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும். நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன. கடிக்காமல் போனால் சரி. பாழான ஊருக்கு நரி ராஜாவாம். சிங்கம் இல்லாத இடத்தில் நரி சிம்மாசனம் ஏறும். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இப்படி நம் பழமொழிகளில்கூட பெரும்பாலும் நரிமீது ‘கருப்பு ஒளியே’ பாய்கிறது. நரி அவ்வளவு மோசமான விலங்கா? அதன் வாழ்க்கை எப்படிப்பட்டது? மனிதனுக்கும் நரிக்குமான உறவு எப்படிப்பட்டது? இந்தப் பூமியில் நரியின் பங்களிப்பு என்ன? நரியைவிட மோசமான உயிரினம் எது? எல்லாவற்றையும் பார்ப்போம். நரிகள் (Fox), பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவை அனைத்துண்ணிகள். ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு நாட்டு நாயின் அளவில் நரிகள் இருக்கின்றன. அதைவிடச் சிறிய அளவு கொண்ட நரி வகைகளும் உண்டு. மண்ணுக்கடியில் வளைகள் அமைத்து வாழும் இயல்புடையவை. உணவு சேமித்து வைக்கவும் உறங்கவும் வளைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் ஆபத்துக் காலத்தில் தப்பித்து வெளியேறுவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வாசல்களை அமைத்துக் கொள்கின்றன. தந்திரம்! நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் அவற்றால் தெளிவாகப் பார்க்க இயலும். ஆகவே, அப்போது வேட்டையாடுகின்றன. இதன் காதுகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரினங்கள் எழுப்பும் சத்தங்களைக்கூட உணரும் திறன் கொண்டவை. அதேபோல, நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. சுறுசுறுப்பு! ஒரு பெண் நரியானது பொதுவாக இரண்டு முதல் ஏழு குட்டிகள் வரை ஈனும். குட்டிகளைத் தாயும் தந்தையும் சேர்ந்து பராமரிக்கின்றன. மூத்த சகோதர, சகோதரி நரிகளும் உணவு தேடி வந்து கொடுத்து உதவுகின்றன. பாசம்! பொதுவாக நரிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மிருகக்காட்சிச் சாலையிலோ, மனிதனின் பராமரிப்பிலோ இருந்தால் சுமார் 10 ஆண்டுகள்கூட உயிர் வாழ்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் நரிகள் செழித்து வாழ்ந்திருக்கின்றன. நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல் – முன்றுரையனார் என்ற புலவர் எழுதிய பழமொழி நானூறு பாடல், நரியை வில்லனாகவே காட்டுகிறது. நரிக்கு உணவு உண்பதில் நல்ல காலம், கெட்ட காலம் என்றெல்லாம் கிடையாது. அது எப்போதும் வஞ்சகக் குணத்துடனேயே இருக்கும். நரியைப் போலவே பண்புகளைக் கற்றுக் கொள்ளாத கயவர்கள், வறுமை உள்ள காலத்திலும் தீமைகள் செய்வார்கள். வளமாக இருக்கும்போதும் தீமைகள் செய்வார்கள். அவர்களுக்கு நல்ல வழியே தெரியாது. மனிதனின் கெட்ட புத்திக்காக, நரிக்குக் குட்டு வைத்திருக்கிறார் முன்றுரையனார். சங்க இலக்கியத்தில் ‘கணநரி’ வலம் வருகிறது. ஆங்கிலத்தில் Jackal. குறுநரி, குழிநரி, குள்ளநரி என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இவை கூட்டமாகக் காணப்படும். கும்பலாகச் சென்றே வேட்டையாடும். கோரஸாக ஊளையிடும். கணநரிகள் போர்க்களத்தில் இறைந்து கிடக்கும் பிணத்தின் கொழுப்பைத் தின்றதாகச் சங்கப் பாடல்கள் காட்சிப்படுத்துகின்றன. கணநரிகள் காடுகளிலும் பாலைவனங்களிலும் தோட்டங்களிலும் வீடுகளின் அருகிலும் வாழும். பகல்களில் இவற்றைப் பெரும்பாலும் பார்க்க இயலாது. இரவுகளில் ஊளையிடும் சத்தம் மூலமாக இவற்றின் இருப்பை அறியலாம். இரவெல்லாம் திரிபவை, விடியற்காலையில் பதுங்கி விடும். அப்படியும் ஒன்றிரண்டு மனிதர்கள் பார்வைக்கு அரிதாகத் தென்படும். அதைத்தான் ‘நரி முகத்தில் விழித்ததுபோல’ என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். இதைக் காலப்போக்கில் அதிர்ஷ்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். இன்னிக்கு நரி முகத்துல முழிச்சிருக்கேன்! ‘‘நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி’’’ என்கிறது நற்றிணை. போரினில் வீழ்ந்து கிடக்கின்ற மனிதர்களின் பிணங்கள். நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய எருவைக் கழுகு அவற்றைத் தின்ன வருகிறது. அவற்றுடன் போராடி விரட்டிவிட்டு, சதைகளைத் தானே தின்கின்றன நரிகள். பின்பு உண்ண நீர் கிடைக்காமலும், உறங்க நிழலிடம் கிடைக்காமலும் அலைந்து வருந்துகின்றன என்பதாக இந்தப் பாடல் பொருள் தருகிறது. பேயும் கணங்களும் நரியும் திரிகின்ற இந்தப் போர்க்களத்திலே, ஊன் தின்று சிவந்த செவியுடைய கழுகுகளும் காண்பது அச்சம் தருவதாக இருக்கிறது என்று காட்சிப்படுத்துக்கிறது புறநானூறு. பிணம் தின்னும் உயிரினங்கள் எப்போதும் கொடூரமான ஒன்றாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றுக்குச் சங்க இலக்கியங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அந்த உயிரினங்களால்தாம் இந்த மண்ணின் சுற்றுச்சூழலானது பாதுகாக்கப்படுகிறது. நரியோடு எப்போதும் தொடர்புபடுத்திப் பேசப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் குறித்தும் சில வார்த்தைகள் இங்கே, அவற்றின் தன்னிகரற்றச் சேவைக்காக. பாலை நிலத்தின் அடையாளப் பறவை, பிணந்தின்னிக்கழுகுகள். இவற்றுக்கு மஞ்சள் பாறு, மஞ்சள் முகப் பாறு, திருக்கழுக்குன்றக் கழுகு, எகிப்திய பிணந்தின்னிக்கழுகு, வெள்ளைக் கழுகு எனப் பல பெயர்கள் உண்டு. அசிங்கமான, அருவருப்பான, கொடூரமான பறவையாக இவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவையே பாலை நிலத்தின் பிரதான தூய்மைப் பணியாளர்கள். இந்தப் பிணந்தின்னிக்கழுகுகளுக்கும் பார்சி மக்களுக்குமான உறவு, தனித்துவமானது. பார்சி இனத்தைச் சார்ந்தவர்கள் இயற்கையை நேசிக்கும் இயல்பைக் கொண்டவர்கள். இறந்த பிறகுகூட, அவர்களது உடலானது இயற்கையான முறையிலேயே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். அதற்காகவே ‘டோக்மா’ என்ற கோபுரங்களைக் கட்டினார்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து சற்றே தள்ளி, உயரமான, வட்ட வடிவமான, கூரைகளே இல்லாத இந்த ‘இறுதிச் சடங்கு கோபுரங்கள்’ அமைக்கப்பட்டன. இறந்த ஒரு பார்சியின் உடல் இந்தக் கோபுரத்தில் வைக்கப்படுகிறது. அங்கே பிணந்தின்னிக் கழுகுகள், செம்பருந்துகள் வருகின்றன. அவை உடலின் சதைகளைத் தின்ன ஆரம்பிக்கின்றன. உடலானது அழுகும் முன்பே வேகமாகத் தின்று முடிக்கின்றன. இந்தக் கழுகுகளிலும் வகைகள் இருக்கின்றன. ஒரு வகைக் கழுகுகள் சதையை மட்டும் உண்கின்றன. இன்னொரு வகைக் கழுகுகளோ தோலை உண்கின்றன. இன்னொன்று எலும்பைச் சாப்பிடுகின்றன. வேறோரு வகைக் கழுகுகளோ மிச்சம் மீதியை உண்கின்றன. இப்படியாக ஓர் உடலின் ஒவ்வொரு பகுதியையுமே உண்டு, அகற்றி, அந்தச் சூழலைச் தூய்மைப்படுத்தும் உயிரினங்களாக இந்தக் கழுகுகள் தொடர்ந்து சேவை ஆற்றிக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கழுகுகள் வருடத்துக்கு ஒரு முட்டைதான் இடும். அந்தக் குஞ்சும் பிரச்னையின்றி வெளியே வந்து பிழைத்து வாழ்வது சவாலான காரியம்தான். அதனால்தான் இந்தக் கழுகு இனம் பெருகுவதைவிட, அழியும் வேகம் அதிகமாக இருக்கிறது. சூழல் மாற்றங்களும் அதற்கு முக்கியக் காரணம். மனிதனும் இந்தக் கழுகு இனத்தை மறைமுகமாக அழித்துக் கொண்டிருக்கிறான். மாடுகளுக்கு, Diclofenac என்ற வலிநிவாரண மருந்து சில மருத்துவக் காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகிறது. அந்த மாடு இறந்தபின் அதன் சடலத்தை மனிதன் ஆளற்ற பகுதிகளில் போடும்போது, கழுகுகள் அதை உண்ண வருகின்றன. அதை உண்ணும்போது Diclofenac மருந்தால், கழுகுகளின் சிறுநீரகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அதன்பின் அவை இறந்து போகின்றன. பிணந்தின்னிக்கழுகுகளின் வேகமாக அழிவதற்கு முக்கியமான காரணமாக இது கருதப்படுகிறது. https://aalumaisirpi.com/?p=6477

“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்

3 months 1 week ago
துருக்கியர்களும்,அரேபியர்களும் தடிப்பான கோப்பி குடித்த கப்பில் சாத்திரம் பார்ப்பார்கள். அவர்களது இன்றைய இளம் சமுதாயத்தில் கூட புனிதமாக பார்க்கப்படுகின்றது. விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடுகளிலும் தினசரி நாளிதழ்களில் இன்றைய நாள் பலன்கள் வரும்.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
மீண்டும் சொல்கிறேன் - மனைவி இப்படி திருமணத்துக்கு அப்பாலான உறவு கொண்டாரா இல்லையா என்பது இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அப்படியே நடந்து இருந்தாலும் - கணவர் நடந்து கொண்ட முறை மிக மோசமானது. மனைவி செய்ததாக சொல்லப்படும் ஒழுக்க கேட்டிற்கு இதுவல்ல தண்டனை. இதை செய்த கணவனுக்கு கூட, ஆத்திர மிகுதியால் இப்படி நடந்து கொண்டார் என்பதை ஒரு mitigating factor (குற்ற குறைப்புக்கான காரணி) ஆக (நியாயப்படுதலாக ஆக அல்ல) எடுத்தாலும்…. கலரியில் இருந்து விசிலடிக்கும் கூட்டம்….தமிழ் தலிபான்களே. தீர்ப்பு எழுதும் போது ஒரு விசாரணை இவை எல்லாவற்றையும் ஆய்ந்தே தீர்ப்பு வர வேண்டும். அந்த விசாரணை முடிவு வரும் வரை எம் பதில்கள் எல்லாம் “லாம்” விகுதியில்தான் இருக்க முடியும். இலங்கையில் தீர்ப்பு சரியாக வராது என்ற கணிப்பில், நாம் குறை தரவுகளை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.

ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!

3 months 1 week ago
நான் எவரையும் நம்பவில்லை இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.