Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
4 உற‌வுக‌ள் தென் ஆபிரிக்கா வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கின‌ம் 11 உற‌வுக‌ள் நியுசிலாந் வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.......................

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

3 months ago
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது. இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2025/1449649

இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.

3 months ago

New-Project-2-1.jpg?resize=600%2C300&ssl

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.

முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது.

இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.

இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

https://athavannews.com/2025/1449649

தைவான் மீதான PRC படையெடுப்பில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கக்கூடிய PLA வான்வழி பட்டாலியனை சித்தப்படுத்துவதற்கும் பயிற்சி அளிப்பதற்கும் ரஷ்ய திட்டங்களை கசிந்த ஆவணங்கள் விவரிக்கின்றன.

3 months ago
இது RUSI என்ற சிந்தனை கூடம் (think tank) பிரசுரித்து இருந்தது சுருக்கமாக. அனால், ஏன் அது செய்தியாக பிரச்சாரப்படுத்தபட வேண்டும்? உ.ம். அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானை தாக்கி தொடங்கிய சண்டைக்கு / யுத்தத்துக்கு, இஸ்ரேயல்க்கு அருகில் விமனந்தாங்கியை நிறுத்தி, இரானின் ஏவுகணைகளை தடுப்பதில் பெரும் பங்காற்றியது. இஸ்ரேலின் எர்பார்ப்பன அணு துறை சார்ந்த நிலைகாலை தாக்கியது கபட விமானம், மற்றும் நீர்மூழ்கியில் இருந்து ஏவுகணையாலும். ஆகவே ருசியா, சீனாவுக்கு இராணுவவத்துறையில் பயிற்சி அளிப்பது, துறைசார் நிபுணத்துவத்துவதை கற்பிப்பது எந்தவொரு ஆஹாரிய செய்தி அல்ல. அதே போல இரானனுக்கோ (அல்லது வேறுநாடுகளுக்கோ) சீன அதன் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை ஏற்றுமதி செய்து இருந்தால், அதுவும் மேற்கு நாடுகளுக்கு பூதாகரமான பிரச்சனை. அதே போல இரானனுக்கோ (அல்லது வேறுநாடுகளுக்கோ) சீன அதன் நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை ஏற்றுமதி செய்து இருந்தால், அதுவும் மேற்கு நாடுகளுக்கு பூதாகரமான பிரச்சனை. இவை சிறிய இப்போதைய உதாரணங்கள், காலதிகாலமாக மேற்கின் இப்படியாக தாம் செய்வதை, மற்றவர் செய்யும் போது பபூதாகாரம் ஆக்குவது, கண்டிப்பது போன்றவை . மேற்கின் வழமையான பாணியான, தம செய்வதை, மற்றவர் செய்யக்கூடாது, அப்படி செய்யவிடக் கூடாது என்ற (காழ்ப்பான) சிந்தனை தான்.

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

3 months ago
கிரிக்கெட்டில் ஆண்களுக்கு முன்பே பெண்கள் நிகழ்த்திய 10 சாதனைகள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் ஆல்-ரவுண்டர் வீராங்கனை தீப்தி ஷர்மா கட்டுரை தகவல் ஜான்வி முலே பிபிசி மராத்தி 5 அக்டோபர் 2025 மகளிர் கிரிக்கெட் சமீபத்தில்தான் தொடங்கியது என்றும், அது ஆடவர் கிரிக்கெட்டை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் பலருக்கு ஒரு தவறான புரிதல் உள்ளது. ஆனால், பெண்கள் 18-ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினர். பெண்களுக்கான முதல் போட்டி இங்கிலாந்தில் 1745 ஜூலையில் விளையாடப்பட்டது. இருப்பினும், மகளிர் கிரிக்கெட்டின் முதல் அதிகாரபூர்வ சர்வதேசப் போட்டி 1934-இல் நடைபெற்றது. மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி ஆடவர் கிரிக்கெட்டை விடச் சற்று மெதுவாக இருந்தபோதிலும், கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மகளிர் கிரிக்கெட்டில் இருந்தே தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், ஆண்களுக்கு முன்பே பெண்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றில் சில சாதனைகள் இந்தியப் பெண்கள் படைத்துள்ளனர். முக்கியச் சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம். 1. ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டைச் சதம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் என்றாலே, பலர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பெயர்களைச் சொல்வார்கள். ஆனால், முதல் இரட்டைச் சத சாதனை ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பெயரில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் இரட்டைச் சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கர் 2010-இல் குவாலியரில் இரட்டைச் சதம் அடித்தார். ஆனால், அவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1997-இல் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் சர்வதேசப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். 1997 மகளிர் உலகக் கோப்பையின்போது, டிசம்பர் 16 அன்று டென்மார்க்கிற்கு எதிரான போட்டியில் பெலிண்டா கிளார்க் 155 பந்துகளில் 229 ரன்கள் எடுத்தார், இதில் 22 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டி மும்பையின் எம்.ஐ.ஜி. கிளப் மைதானத்தில் நடைபெற்றது. 2. ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் 1997-இல் டென்மார்க்கிற்கு எதிரான அதே போட்டியில், பெலிண்டா கிளார்க்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தது. ஆடவர் அல்லது மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் 400 ரன்களைக் கடந்த முதல் அணி அவர்களின் அணியாகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 412 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 412 ரன்கள் எடுத்தது. ஆடவர் அணி இந்தப் சாதனையை 9 ஆண்டுகளுக்குப் பிறகே எட்டியது. 2006-இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஆடவர் அணிகள் 400 ரன்களைக் கடந்தன. 3. ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சாதனையும் ஒரு பெண் வீராங்கனையின் பெயரிலேயே உள்ளது. 1973 மகளிர் உலகக் கோப்பையின்போது, ஆஸ்திரேலியாவின் டீனா மெக்பர்சன் (Tina Macpherson) இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 12 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டீனாவின் இந்தச் சாதனைக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1975 உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் படைத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 19-ஆம் நூற்றாண்டிலும் இங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடினர். 4. ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆறு விக்கெட் கீப்பிங் டிஸ்மிசல்கள் செய்த சாதனை ஆடம் கில்கிறிஸ்ட் பெயரில் 2000-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அவர் ஆறு பேட்ஸ்மேன்களைக் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், அவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு மகளிர் விக்கெட் கீப்பர்கள் இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் கல்பனா வெங்கடாச்சார் மற்றும் நியூசிலாந்தின் சாரா இலிங்வொர்த் (Sarah Illingworth). இருவரும் ஆறு டிஸ்மிசல்கள் என்ற சாதனையைப் படைத்தனர். கல்பனா டென்மார்க்கிற்கு எதிராக ஐந்து ஸ்டம்பிங் மற்றும் ஒரு கேட்ச் எடுத்தார், அதே நேரத்தில் சாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு கேட்ச்கள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங் எடுத்தார். 5. டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் பத்து விக்கெட்டுகள் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்று இயான் போத்தம் (Ian Botham) மற்றும் ஆலன் டேவிட்சன் (Alan Davidson) அறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் பெட்டி வில்சன் (Betty Wilson) 1958-இலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். பட மூலாதாரம், Cricket Australia/Twitter படக்குறிப்பு, பெட்டி வில்சன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெல்போர்ன் டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அவர், முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், ஒரு சதமும் அடித்தார். 6. சமனில் முடிந்த முதல் ஒருநாள் போட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சமன் (Tie) ஆன போட்டி மகளிர் கிரிக்கெட்டில் தான் நடந்தது. இந்தப் போட்டி 1982-இல் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற்றது, இதில் இரு அணிகளும் 147 ரன்கள் எடுத்தன. 7. மிகவும் இளம் வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் மிகக் குறைந்த வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்று வரும்போது, பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹசன் ரசாவின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்தச் சாதனை பாகிஸ்தானின் சாஜிதா ஷா பெயரில் உள்ளது. இவர் 2000-ஆம் ஆண்டில் 13 வயதிலேயே சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சாஜிதா ஷா ஷஃபாலி வர்மா சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். 8. முதல் உலகக் கோப்பை மற்றும் டி20 போட்டி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1973-இல் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது பயிற்சி செய்யும் ஒரு வீராங்கனை. உலகின் முதல் சர்வதேச டி20 போட்டியும் மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. இந்தப் போட்டி 2004 ஆகஸ்ட் 5 அன்று இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையே நடந்தது. ஆடவர்களின் டி20 சர்வதேசப் போட்டி 2005 பிப்ரவரியில் தொடங்கியது. 9. பிங்க் பந்து கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வத்தை அதிகரிக்கப் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து (Pink Ball) பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. ஆனால், முதல் பிங்க் பந்துப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் அல்ல, மகளிர் கிரிக்கெட்டில் தான் விளையாடப்பட்டது. பட மூலாதாரம், Richard Heathcote/Getty Images படக்குறிப்பு, இங்கிலாந்தின் கேத்ரீன் ப்ரண்ட் 2008-இல், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஒரு டி20 கண்காட்சிப் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்பட்டது. சர்வதேச அளவில், பிங்க் பந்து 2009-இல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பயன்படுத்தப்பட்டது. ஆடவர் கிரிக்கெட்டில் பிங்க் பந்து 2015-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது பயன்படுத்தப்பட்டது. 10. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு (Overarm Bowling) ஓவர்ஆர்ம் பந்துவீச்சை (தோளுக்கு மேல் கையை உயர்த்திப் பந்து வீசுதல்) முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஒரு பெண்ணையே சேரும். அவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான கிறிஸ்டியானா வில்ஸ் (Christiana Willes). 1805-இல், தனது பாவாடையால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, அவர் ஓவர்ஆர்ம் பந்துவீசத் தொடங்கினார், இது நவீன பந்துவீச்சு பாணியின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஓவர்ஆர்ம் பந்துவீச்சு தொடங்கிய காலகட்டமே நவீன கிரிக்கெட்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39reyn7k1do

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை இன்று நிறைவேறும் !

3 months ago
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை மீதான புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 03:26 PM இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இறுதியாக இன்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரத்தை நீடிக்கும் தீர்மானத்திற்கு, அதனை இன்று திங்கட்கிழமை முன்வைத்த பிரதான 5 நாடுகளுக்கும் மேலாக மேலும் 22 நாடுகள் இணை அனுசரணை வழங்கி இருந்தன. பிரிட்டன் தலைமையில், கனடா, மாலாவி, மொன்டினீக்ரோ மற்றும் வட மசிடோனியா ஆகிய இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட இந்தப் புதிய பிரரேணையின் முதலாவது வரைபு கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இந்தப் பிரரேணை நிறைவேற்றப்படும் போது இலங்கை அரசாங்கம் வாக்கெடுப்பைக் கோராமல் இருக்க முடிவு செய்து இருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில், நாளை மறுதினம் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைகின்ற நிலையில் அதற்கு முன்னதாக இன்றையதினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையையும் சர்வதேச தலையீட்டடையும் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, இந்தத் தீர்மானம் நிகழ்ச்சி நிரல் 2-இன் கீழ் இருப்பதால், தமிழ்த் தரப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஐ.நா.சபையிடமும், குறிப்பாக மையக் குழு நாடுகளிடமும் இலங்கைக்கு விசேட அறிக்கையாளரை (country specific spécial rapporteur) நியமிக்க அழுத்தம் கொடுக்கின்றன. https://www.virakesari.lk/article/227033

இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு

3 months ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs

இலங்கைத் தமிழர்களுக்காக 772 புதிய வீடுகள் திறப்பு

3 months ago
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

3 months ago
06 Oct, 2025 | 12:37 PM யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/227014

யாழில் காணி உறுதிப்பத்திரம் தொடர்பான முறைப்பாட்டின் கீழ் பெண் சட்டத்தரணி கைது

3 months ago

06 Oct, 2025 | 12:37 PM

image

யாழில் முறையற்ற விதத்தில் காணி உறுதி எழுதப்பட்டதாக தெரிவித்து பெண் சட்டத்தரணி ஒருவர் திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் உள்ள காணிகளை எழுதியதற்காக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் மல்லாகத்தை சேர்ந்த சட்டத்தரணியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/227014

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!

3 months ago
ஆயிரம் பேரின் கதி என்ன? எவரெஸ்டில் பனிப்புயலின் தாக்கம் பற்றி மீண்டு வந்தவர் தகவல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எவரெஸ்ட் கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர் 6 அக்டோபர் 2025, 02:37 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் சரிவில் கடுமையான பனிப் புயல் தாக்கியுள்ளது. மலையின் கிழக்குப் பகுதிகளில் இருந்த முகாம்களில் 1,000-க்கும் அதிகமானோர் இந்த பனிப்புயலில் சிக்கியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடம் 4,900 மீட்டர் (16,000) அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு செல்வதற்கான பாதையை மறைத்திருக்கும் பனியை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது வரை சுமார் 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பக்கத்து ஊரான குடாங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. உள்ளே சிக்கியுள்ள மேலும் 200 பேர் வரை தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. "ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி" படக்குறிப்பு, திபெத்தில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. கண் விழித்து பார்த்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்குப் பனி இருந்ததாக கெசுவாங் சென் என்கிற மலையேற்ற வீரர் தெரிவித்தார். 29 வயதான கெசுவாங் சென் அக்டோபர் 4-ஆம் தேதி குடாங் நகரிலிருந்து கிளம்பி சோ ஓயு முகாமிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த மலையேற்ற பயணம் 5 நாட்கள் நீடிக்க இருந்தது. அக்டோபர் 11-ஆம் தேதி மேலிருந்து கீழறங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தீவிரமான பனிப் புயல் தாக்கியதால் அனைத்து திட்டங்களும் மாறிப்போனது. சென் வானிலை முன்னறிவிப்பை பார்த்தபோது, அக்டோபர் 4-ஆம் தேதி பனிப்பொழிவு ஏற்பட்டு 5-ஆம் தேதி வானிலை தெளிவாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகும் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் குழுவைச் சேர்ந்த 10 பேர் தங்கிவிட திட்டமிட்டிருந்தனர். எனினும் இரவு நேரத்தில் புயல் மோசமடைந்து இடி மற்றும் பலத்த காற்று மற்றும் பனி வீசியதாக தெரிவிக்கின்றனர். கூடாரங்கள் இடிந்துவிடாமல் இருக்க அதன்மீது படர்ந்திருந்த பனியை விலக்க வழிகாட்டி உதவினார். "அடுத்த நாள் காலை நாங்கள் விழித்தபோது ஒரு மீட்டர் ஆழத்திற்கு பனி இருந்தது. அதனால் திரும்பிவிட முடிவெடுத்தோம்." எனத் தெரிவித்தார். அக்டோபர் 5-ஆம் தேதி கடும் பனிக்கு இடையே 6 மணி நேரம் பயணித்து இந்தக் குழுவினர் மலை இறங்கினர். கீழறங்கி வந்தபோது மீட்புப் பணிகளுக்காக பொருட்களை மேலே எடுத்துச் சென்ற உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்தனர். இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவர்களுடன் இணைந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். "ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக்கின் (சீன விடுமுறை) போது பலர் மலையேற இங்கு வந்தாலும் இந்த ஆண்டு பனி அளவுக்கு அதிகமாக இருந்தது" என்கிறார் சென். எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குச் சரிவில் இத்தகைய வானிலை அசாத்தியமானது என அவர்களின் வழிகாட்டி கூறியதாகவும் தெரிவிக்கிறார். தற்போது அபர் லாசா நகரை நோக்கிச் செல்கிறார். "நாங்கள் அனைவருமே அனுபவம் பெற்ற மலையேற்ற வீரர்கள். ஆனால் இந்த பனிப்புயலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. நான் அதிர்ஷ்டவசமாக வெளியே வந்துவிட்டேன்." என்றார். பட மூலாதாரம், CCTV வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கடும் பனிப்பொழிவு திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சரிவுகளில் தீவிரமானது. இந்தப் பகுதி மலையேற்றத்திற்குப் பிரபலமானது. தற்போது சீனாவில் தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. கடும் பனிப் பொழிவால் கூடாரங்கள் சரிந்ததாகவும் சில மலையேற்ற வீரர்கள் கடுங்குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி திபெத்தின் ப்ளூ ஸ்கை ரெஸ்க்யூ குழுவிற்கு உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராய்டர்ஸ் செய்திபடி, சனிக்கிழமையிலிருந்து எவரெஸ்ட் பகுதிக்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டு விற்பனையை டிங்ரி கவுண்டி சுற்றுலா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் எவரெஸ்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பம் குறைவாகவும் வானம் தெளிவாகவும் இருப்பதால், ஆண்டில் இந்த மாதத்தில் தான் மலையேற்றம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிப்புயலில் மலையேற்ற வீரர்களும் வழிகாட்டிகளும் சிக்கியுள்ளனர். "மலைப்பகுதி மிக ஈரமாகவும் குளிராகவும் இருந்தது, தாழ்வெப்பநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது" என மலையிலிருந்து மீட்கப்பட்டு தற்போது குடாங் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார். "இந்த ஆண்டு வானிலை இயல்பாக இல்லை. அக்டோபரில் இத்தகைய வானிலையை எதிர்கொண்டதில்லை என வழிகாட்டி தெரிவித்தார். அனைத்தும் மிக விரைவாக நடந்துவிட்டன." பட மூலாதாரம், CCTV இந்தப் பிராந்தியத்தில் கடுமையான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது. நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளங்கள் ஏற்பட்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கே, கனமழையால் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்மோ புயல் ஏற்படுத்திய பாதிப்பால் 1,50,000 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் தான் உலகின் மிக உயரமான சிகரமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைய பலர் முயற்சித்தாலும் இது மிகவும் ஆபத்தான பயணமாகப் பார்க்கப்படுகிறது. சமீப ஆண்டுகளாக இங்கு அதிக கூட்ட நெரிசல், சுற்றுச்சூழல் பிரச்னைகள், தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. பட மூலாதாரம், Getty Images - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cge24jy7p1eo

தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)

3 months ago
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும். 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம். https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1

தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)

3 months ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை ஆகாயத்தில் இருந்து காணும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் 'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' கடந்த முதலாம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நாட்டின் சிறுவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமான பயணத்தில் பங்கேற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 250 ஆகும்.

'தெரண - சிக்னல் ஆகாயத்தில் பயணம்' தொடர்பான சிறப்பு நிகழ்ச்சியை நீங்கள் தற்போது டி.வி தெரணவில் காணலாம்.

https://adaderanatamil.lk/news/cmgemvr3e00upo29n4hy1mbv1

ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி

3 months ago
அஞ்சலித் தாக்குதல் தமிழில் சுரணை உள்ள எழுத்தாளர்களின் ஒரே வேண்டுகோள் தாம் இறந்து ஜெயமோகன் அஞ்சலிக் கட்டுரை எழுதும் நிலை வரக்கூடாது என்பதே. ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலி அப்படியான மாபெரும் அவலம். அதில் ரமேஷின் படைப்பாற்றலைவிட உடல் நோய்மையைப் பற்றியே 99% எழுதியிருக்கிறார் - முழுக்க முழுக்க தன்னிடம் இரந்து பெற்ற ஒரு கலைஞனாகச் சித்தரிக்கிறார். தான் ஒருவருக்கு அளித்த தொண்டைக் கூட அவர் சொல்லலாம். அது அவரது தேர்வு. ஆனால் அந்த அஞ்சலிக் குறிப்பு முழுக்க ரமேஷ் ஜெயமோகனை விட ஒரு படி கீழாகவே வைக்கப்பட்டிருக்கிறார். ஒருவித படிநிலை முழுக்க உள்ளோடுகிறது. இது ஜெயமோகனுடைய மிகப்பெரிய ஆளுவை வழு - அவரால் பிறரை தனக்கு இணையாகக் காணவே முடிவதில்லை. அவர் ரமேஷுக்கு உதவியபின்னர் அவரிடம் "நான் உன் உடலுக்காக நிதியளிக்கவில்லை, உனக்குள் இருக்கும் கலைஞனுக்கே நிதியளிக்கிறேன்" என்றிருக்கிறார். அது ரமேஷை சீற்றமடைய வைக்கிறது. அதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. நீங்கள் ஒருவரை அப்படி உடலென்றும் கலைஞனென்றும் பிரிக்க இயலாது. அது ஒருவரைக் கடுமையாக அவமதிக்கும் செயல். என்னிடம் யாராவது வந்து "நான் உன் உடலுக்காக, உன் குடலுக்காக, உன் மொட்டைத் தலைக்காக நிதியளிக்கவில்லை, உன் படைப்பாற்றலுக்காகவே தருகிறேன்" என்றால் நான் அவரைச் செருப்பைக் கழற்றி அடிப்பேன். ஏனென்றால் படைப்பாக்கம் நமது உடலின், மனத்தின், ஆளுமையின் நீட்சி. ஒரு கலைஞனாக நாம் பெருமை கொள்கிறோம், ஆனால் வாழும் உடலாகவும் சுயமாகவுமே நாம் நம்மை அடையாளப்படுத்துகிறோம். பின்னது பொருட்படுத்தத்தகாதது என்பது ஒருவரை வாழ்த்துவது அல்ல, தாழ்த்துவது ஆகும். அது ஏனோ ஜெயமோகனுக்கு விளங்குவதில்லை - அவரிடம் ஏதோ தன் உடல், சுயம் குறித்து தாழ்வுணர்ச்சி அடியாழத்தில் இருக்கிறது என நினைக்கிறேன், அதை அமுக்கி வைத்துவிட்டு பிறரிடம் அதைக் காண்கிறார், தன்னைத் தானல்லாமல் ஒரு படைப்பாற்றலாகக் காண்பதைப் போல பிறரையும் பார்க்கிறார் என நினைக்கிறேன். அவர் உணர்ச்சிவயப்பட்டு ரமேஷுக்கு உதவ முடிவெடுத்தது, அதில் திடமாக இருந்தது நல்ல விசயம். ஆனால் அவர் ரமேஷைக் குறித்து தனக்குள் கொண்டுள்ள சித்திரம் அசமத்துவத்தின் மீது உருவானது. அது தொடர்ந்து ரமேஷைக் காயப்படுத்திக் கொண்டே இருந்திருந்திருக்கும் என நினைக்கிறேன். தானம் அளிப்பதை விட சிறப்பானது சமமாக நடத்துவது. கொடுக்கும் போது நாம் தாழ வேண்டும், உயரக் கூடாது. தாழ்வதே மகத்தானது. ஒருவருக்கு கொடுக்கும்போது அது தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம் என் நினைக்க வேண்டும். ஜெயமோகனுக்கு அது ஒருநாளாவது தன் வாழ்வில் சாத்தியப்பட வேண்டும். ராஜமார்த்தாண்டனுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் இப்படித்தான் இருந்தது. நோய்வாய்ப்பட்டவர்களை தன் "ஏழாம் உலகம்" நாவலில் வரும் குறைபட்ட உருப்படிகளாக அவர் கருதுவதும், அந்த உருப்படிகளை வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரமே தானெனெக் கருதுவதுமே அவரது பிரச்சினை. இதுவே பணமும் அரசியல் அல்லது சமூக அதிகாரமும் படைத்தவர்கள் இறந்தால் இவ்வாறு எழுத மாட்டார் - சட்டென கைகூப்பி வணங்கி எழுதுவார். இன்று நான் பார்க்கும் இளைஞர்களில் 90% பல்வேறு நோய்களைத் தாங்கியவர்களே - நடந்தால் மூச்சு வாங்குவோர், ஏகப்பட்ட ஒவ்வாமைகள் கொண்டவர்கள், கொஞ்சம் தூசு பட்டால் தாளாமல் இருமுகிறவர்கள், மூச்சிரைக்கிறவர்கள், சிறுசொல்லுக்கு பதற்றமாகி மயங்கிவிழுவோர். இவர்களையெல்லாம் ஜெயமோகன் பார்த்தால் என்ன சொல்வார் எனப் பயமாக இருக்கிறது. நோயென்பது இன்று இயல்பாகிவிட்டது. ஆரோக்கியம்தான் இன்று இயல்புமீறல். இவர்களிடம் போய் உங்கள் நோயைக் கடந்து வாருங்கள் என்று சொன்னால் கொலைவெறியாகிவிடுவார்கள். ஏனென்றால் தம் உடல் குறித்து அவர்களுக்கு எந்த தாழ்வுணர்ச்சியும் இல்லை. அதை ஒருவர் தம் மீது சுமத்துவதை ஏற்க மாட்டார்கள். ஜெயமோகனே தன்னிடம் வருகிறவர்களிடம் அதையே விதைத்து பெருஞ்ச் சொற்குவியலக்ளாக அறுவடை பண்ணுகிறார். இனிமேல் படைப்பாளிகள் இறப்பதாக முடிவெடுத்தால் ஏதாவது வேற்றுகிரகத்துக்குச் சென்று மறைந்துவிட வேண்டும். அங்கிருந்து இறந்தால் அது பூமிக்கு வர ஒளிக்காலத்தில் பல ஆண்டுகள் ஆகும் என்பதால் ஜெயமோகனின் அஞ்சலியில் இருந்து தப்பித்து விட முடியும். அல்லாவிட்டால் நாம் சாகும் நிலை வரும்போது தலைமறைவாகிவிட வேண்டும். மற்றபடி ஜெயமோகனின் கொரில்லா அஞ்சலித் தாக்குதலில் இருந்து தப்பிக்க எழுத்தாளர்களுக்கு வேறுவழியே இல்லை. நான் ஜெயமோகனைப் படித்து எதிர்வினையாற்றக் கூடாது என்பதை ஒரு தீர்மானமாகவே கடைபிடித்து வந்தேன். ரமேஷுக்கு அவர் எழுதிய அஞ்சலியைப் படித்து என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். Posted 14 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/10/blog-post.html

பௌர்ணமி தினமான இன்று வானில் அதிசய நிகழ்வு தென்படும்

3 months ago
Published By: Digital Desk 3 06 Oct, 2025 | 02:28 PM பௌர்ணமி தினமான இன்று திங்கட்கிழமை (06) வானில் சூப்பர் மூன் (Supermoon) தென்படும். இது வழமையாக தென்படும் முழு சந்திரனை விட சுமார் 7 சதவீதம் பெரியதாக தென்படும் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் (ACCIMT) தெரிவித்துள்ளது. பௌர்ணமி தினங்களில் வழக்கமாக தென்படும் ஏனைய முழு சந்திரன்களுடன் ஒப்பிடும்போது, இன்றிரவு முழு சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாக தென்பட இருப்பதால் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. சந்திரன் அதன் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் நகரும்போது, சூப்பர் மூன்கள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இந்த நிகழ்வு முழு சந்திரன் மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு கட்டங்களிலும் நிகழலாம் என ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் நிபுணர்கள் குறிப்பிட்டனர். கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்கத்தை விட சற்று அதிக அலை எழுச்சியை சந்திக்க நேரலாம். மேலும், இன்றிரவு பிரகாசமான முழு நிலவுக்கு அருகில் சனி கிரகம் நிலைநிறுத்தப்படுவதைக் காண வானியலாளர்களுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். பௌர்ணமி தினத்தைக் குறிக்கும் போது வானியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வைக் காண சூப்பர் மூன் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. https://www.virakesari.lk/article/227019