Aggregator

கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

3 months ago
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழுது, பேரன் பெரிய சத்தம் போடும் ஒரு விளையாட்டு சிங்கத்தை, தாயின் பக்கத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தான். மகள் கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு என்று பலமுறை சொல்லிப் பார்த்தாள். பேரன் 'இசை' கேட்பதாக இல்லை. கோபம் கொண்ட மகள், அதை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். ஆனால் பேரன் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுது புரண்டான். உடனே நான் ஓடிச் சென்று அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்து, கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். சும்மா அவனுக்காக எனது மகளைக் கடிந்தேன். அதனால் கொஞ்சம் அழுகையை நிறுத்திய இசை, 'தாத்தா, அம்மாவை ஹெல் [நரகம் Hell] இல் கொண்டு போய் போடுங்க என்று பிடிவாதமாக நின்றான். ஒருவாறு அவனுக்கு பிடித்தமான சில சிற்றுண்டிகளைக் கொடுத்து சமாதானம் ஆக்க முயற்சித்தேன். பின் ஆசைவார்த்தை கூறி, அவனை என் அறைக்குள் தூக்கிச் சென்று, சாய்வு நாற்காலியில், என் மடியில் இருத்தி, அவனுக்கு பிடித்த பெப்பா பன்றி [peppa pig] கதை விடியோவை சத்தம் இல்லாமல் போட்டேன். பின் கொஞ்ச நேரத்தால் அவனுக்கு பிடித்த "தாலாட்டு" ஒன்று மெதுவாகப் பாடினேன். "சின்ன பூவே சிங்காரப் பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் மீட்க யாவரும் ஒன்றுகூடிக் கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியானே கண் உறங்காயோ?" இசை பின் மடியை விட்டு இறங்கி, ஆனால், சாய்வு நாற்காலியிலேயே அருகில் இருந்து தாலாட்டை ரசித்துக்க்கொண்டு இருந்தான். அவனுக்கு இப்ப நான்கு அகவை. முந்தைய நாள், என் அறையில் அவன் விட்டுச்சென்ற பொம்மை ரயில்களால் அறை நிறைந்திருந்தது. ஆனால் இருள் வானத்தில் பரவியபோது, ஏதோ ஒரு மாயாஜாலம் கிளர்ந்தெழுந்தது. நான் சோர்வாலும், இன்று நேரத்துடன் இரவு உணவு எடுத்து, பசி நீங்கியதால் நாற்காலியில் தாராளமாக இளைப்பாறிக்கொண்டு இருந்தேன். இசை அந்த ரயில்களை பொறுக்கி எடுத்து, அதை விளையாடிக்கொண்டு, அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தான். திடீரென ஒரு தங்க ஒளி எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. நிலவொளியின் இறகுகளுடன் கூடிய அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்ட, மேகங்களின் தேர் வானத்திலிருந்து இறங்கியது. ஒரு மென்மையான குரல் எதிரொலித்தது, "வாங்க 'கந்தையா தில்லை', வாங்க 'இசை', வேறு எதிலும் இல்லாத ஒரு கோடை விடுமுறை உங்களுக்கு காத்திருக்கிறது." என்று மெதுவாகக் கூறியது. வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது குழப்பினேன் வந்த போது அவசரப்பட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்! கரம் பிடிக்க ஆசைகொண்டு கள்ளமாக அவளைத் தொட்டேன் கருத்த விழிகளால் சுட்டுஎரித்து பருத்த மார்பாள் பறந்துசென்றாள்! நான் அண்மையில் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுத்துக்கொண்டு , அவசரம் அவசரமாக, ஒரு அகல விளிம்பு கொண்ட தொப்பி (குல்லாய்) ஒன்றை எடுத்து, தலையில் அணிந்து, கண்ணாடியை பார்த்து அதைச் சரிபண்ணிவிட்டு, பேரனின் ஒன்று இரண்டு விளையாட்டு பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு சில வினாடியில் அதில் இருவரும் ஏறினோம். என்ன வேகம்! ஒரு நொடியில், அவை நட்சத்திரங்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தன. சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவான, வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) என் கண்ணில் தென்பட்டது. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசினார்கள். அவர்களின் அருகில் தான் இந்த இருவரையும் கண்டேன். அவர்கள் எப்போதும் அங்கே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைந்து இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். கொஞ்சம் அருந்ததியுடன், 'ஏன் என் திருமணத்தின் போது, உன்னைக் காணமுடியவில்லை என்று கேட்ப்போம் எனறால்', அது முடியவில்லை!. எமது வானூர்த்தி வேகமாகப் பறந்துவிட்டது! பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும், கண்ணுக்கு விருந்தளிக்கும் சில வால் நட்சத்திரங்கள்களைத் தாண்டி சென்றோம். இசை அவ்வாற்றின் ஒன்றின் வாலை சிறிது நேரம் பிடித்து விளையாடினான். ஆனால் அது நழுவிப் போய்விட்டது. நாம் தரையிறங்கியபோது, அங்கு எல்லாம் மின்னும் ஒளியால் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. பூக்கும் தாமரைகளின் தோட்டங்கள், தேன் மற்றும் பால் ஆறுகள், மூடுபனி போல மிதந்து வரும் காதுக்கினிய சங்கீதம் எம்மை வரவேற்றது. அந்த விண்ணுலகத்தில், நாம் எம் பாதங்களை தரையில் வைக்கும் பொழுது, என் வாய் என்னை அறியாமலே; மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர் திண்ணென என்னுடல் விருத்தி தாரீரே ஆகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே என்ற தேவாரத்தை தானாகப் பாடியது. கணவனின் கருத்துக்கு எதிராக செயல்படாத மனைவி உமையம்மை, சிறுவன் குமரன், உண்பதே தனது பிரதான வேலையாக கொண்டுள்ள கணபதி இவர்கள் வேண்டாம். விண்ணும் மண்ணும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களும் உடையவராக விளங்கும் பெருமானே நீயே வேண்டும் என்று நான் பாட, அதற்கு ஏற்றவாறு இசை, தாளம் போட்டு ஆடி ஆடி வந்தான். அவனின் ஆட்டம், சிவபெருமானை வாசலுக்கே கொண்டு வந்தது. அவரது இமயமலை முடியில் இருந்து கங்கை பாய்ந்தது, அவரது கண்கள் அமைதியாலும் சக்தியாலும் பிரகாசித்தன. அவருக்கு அருகில் பார்வதி தேவி, அரவணைப்பு, அன்பு மற்றும் தாய்மை பாசத்தால் பிரகாசித்தார். அவர்களிடமிருந்து வெகு தொலைவில், ஒரு பெரிய போதி மரத்தின் நிழலில், கௌதம புத்தர் அமைதியாகவும் புன்னகையுடனும் அமர்ந்திருந்தார். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 02 தொடரும் துளி/DROP: 1832 [கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago
சங்கீதனும் ஜெயாத்தனும் வழங்கியுள்ள செவ்வி. இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது, துவாரகா வெளிவருவதற்கு முன்னர். நல்ல கருத்துக்கள் தான் வழங்கியுள்ளனர்.🤔💭

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

3 months ago
இறைவன் ரொம்பவும் பிசி பாஸ். கள்வருக்கு பின்னால் எல்லாம் ஓட அவருக்கு நேரமில்லை. எவ்வளவு பிகருகளெல்லாம் வந்து குவியும் போது அவர் பொறுமையாக இருந்து ரசிக்க வேண்டாமோ?

சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை

3 months ago
கொள்ளையடிக்கும் எவரும் தங்களது பெயரில் எதுவுமே வைத்திருப்பதில்லை. இந்த துணிவில்த் தான் சொல்கிறாரோ?

சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை

3 months ago
தங்கத்தை புடமிடுவதுபோல சிறிதரன் புடமிடப்படுகிறார். மக்களுக்கு இன்னும் சேவை செய்ய உத்வேகம் அளிக்கப்படுகிறார். அவரை நம்பி வாக்களித்த மக்கள் அவரோடு இருந்து சவால்களை சந்திப்பர். வருமானத்திற்கு மேல் சொத்து குவித்தவருக்கு வாக்களித்த மக்கள், ஏன் சொத்தில்லாத சுத்தமான மனிதரை நிராகரித்தனர் என்பதுதான் கேள்வி. மக்களுக்கு சிறிதரனை பற்றி தெரியாமலா வாக்களித்தார்கள்?

சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை

3 months ago
சிறிதரனை அசிங்கப்படுத்தி அரசியலில் இருந்து ஒதுக்கி விட நினைப்பவர்கள் அவரை மக்களிடத்தில் உயர்த்தி அவருக்கு வெட்டிய குழியில் தாங்களே விழுந்து மடியப்போகிறார்கள். காழ்ப்புணர்ச்சி என்பது தன்னை திருத்தாமல் மற்றவர்களின் நற்பெயரை அழிப்பதிலேயே குறியாக இருக்கும். மக்களின் பிரச்சனையை புறந்தள்ளி தங்களை நிலை நிறுத்த போராடுகிறார்கள். அரசியல் மேடையில் அவருக்கு சேறு பூசி அவரை உயர்த்தி, தங்களை தாழ்த்திக்கொண்டார்கள். சிறிதரன் தன்னை மெய்ப்பிப்பதை விட லஞ்ச ஊழல் விசாரணைக்குழு மெய்ப்பிப்பது மேலானது. அதுதான் எல்லோரின் முகத்திரையையும் கிழிக்கும். முறைபாடளித்தவர்கள், இரகசியத்தகவல் வழங்கியவர்களும் தங்களை சுத்தமானவர்கள் என நிரூபிக்க வேண்டும்.

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

3 months ago
இவர்களாலானும் சரி, மற்றவர்களானாலும் சரி, ஏன் நகைகள் அணிந்து செல்ல வேண்டும்? இல்லாத இறைவன் இருக்கின்றார் எனில் தன்னை காண ஓடிவரும் பக்தர்களின் நகைக்களை கூட காப்பாற்ற முடியாதவரா அவர்?

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

3 months ago
உண்மை ஆனால் உலகம் ஒர் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடந்து கொண்டு போகிறது இரண்டாம் உலகப்போரின் பின்பு வரையப்பட்ட நிகழ்ச்சி நிரல் அதை மாற்ற முடியாது ...அந்த நிகழ்ழ்சி நிரலைமாற்ற கூடிய சக்திகள் இன்னும் வரவில்லை...அது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன‌... இன்று ஹாசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக‌ நடக்கும் அட்டுழியங்களை (அதாவது அமெரிக்காவும்,இஸ்ரேலும் வெளுத்து கட்டுகிறார்கள் )ஏனைநாடுகள் சரி ,இஸ்லாமிய நாடுகள் சரி சும்மா அறிக்கை விட்டு கொண்டு தான் இருக்கின்றனர்....அவர்களுக்கே அந்த நிலை ... பலஸ்தீனம் என்ற நாடு உருவாக கூடாது என்பது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று ...யுக்கோஸ்லோவாக்கியாவை 6 மாதங்களில் பிரித்து மூன்று நாடுகளை உருவாக்கியவர்கள் ,பலஸ்தீனருக்கு 60 வருடங்களுக்கு மேல் அழிவுகளை கொடுக்க்க்கின்றனர்

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

3 months ago
கடந்த வாரம் கனடாவிலிருந்து நல்லூர் திருவிழாவிற்கு சென்றவராகத் தான் இருக்க வேணும்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும் வழியில் இயற்கை கடன் கழிக்க போனவரை அடித்து, காயப்படுத்தி விட்டு 5 பவுண் நகை களற்றி எடுக்கபட்டதாக அறிந்தேன்.

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

3 months ago
அவர் அப்படி இல்லை என நான் கூறவில்லையே. ஆனால் சீமான் முகவர் என்பது தெரியும். முகவர்களின் அஜெண்டாவுக்குள் வீழ்ந்து இந்தியாவின் பெரும் அரசியல் கட்சிகளை நாம் பகைக்க கூடாது என்பதே என் கருத்து. ஒரு காங்கிரஸ் அரசியல்வாதியிடம் நீங்கள் இதை எதிர்பார்க்க முடியாது. அவர் இந்திய இராணுவ கொடுமையை எதிர்க்கவில்லை என்பதால் - அவரின் செம்மணி ஆதரவு குரலை நாம் உதாசீனம் செய்ய வேண்டுமா? இப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக (சுயநலத்துக்காக கூட) எமக்கு ஆதரவு தரும் குரல்களை கூட, “தானம் கிடைத்த மாட்டை, பல்லை பிடித்து பார்க்கும்” ஈழத்தமிழரின் புத்தியால்தான் -2009 இல் எல்லாரும் சேர்ந்து எம்மை வெளுத்தார்கள், கேட்க நாதியற்று கிடந்தோம்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago
வீரப்பன(சந்தன கடத்தல்) படுகொலைசெய்து அரசியல் செய்வது போல,இந்தியாவில் உள்ள சில மார்க்ஸிட் பயங்கரவாதிகளை கொலை செய்து அரசியல் செய்வது போல .... நம்ம போராட்ட அரசியலையும் நசுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க இந்தியா தேசியவாதிகள் தீயா வேலை செய்கின்றனர் என்பது என்னவோ உண்மை... இந்தியா தேசியவாதிகளுக்கு ஒர் கனவு உண்டு ...பிரித்தானியா நாட்டை விட்டு செல்லும் பொழுது ஒன்றாக இருந்த மாதிரி மீண்டும் பாகிஸ்தான்,பங்களதேஷ்,இந்தையா எல்லாத்தையும் ஒன்றாக்க வேணும் எண்டு... கனவு தானே காணட்ட்டும் ...காசா? பணமா?

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago
தாயகத்தில் இருந்து முடிவுகள் வரவேண்டும் என்கிறோம் ஆனால் இதுவரை விளக்கேற்றும் லுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட வரவில்லை. இங்கே என்னை பற்றி அவர்களே வரைந்து வைத்த பிம்பத்தை நினைவில் கொண்டு எழுதுகிறார்கள். ஆனால் எனது நிலைப்பாடு ஆதாரங்களுடன் நிறுவ வேண்டிய கடப்பாடு எமது தலைமுறைகளுக்கு இருக்கிறது. அதை நாம் செய்ய தவறுவோமானால் ... எத்தனை தலைமுறை யாராலும் இதற்கு விடை கிடைக்காது. அவரவர் தத்தமக்கு ஏற்றாற்போல் அதால் போனார் இதனால் வந்தார் இப்படி நடந்திருக்கலாம் என்று தான் இருக்கப் போகிறது. உதாரணம் சுபாஷ் சந்திரபோஸ்....

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

3 months ago
சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ... தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago
வீரவணக்கம் செலுத்துவதாக இருந்தால் நவம்பர்27 திகதி மாவீரர் நாளில் செய்வதே சரியானது.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இயற்கை சாவு அடைந்தால் கூட அவர்கள் மாவீரர்கள் என்றே கருதப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படுவதே புலிகளின் வழக்கம்.ஆனால் மாவீரர் நாளுக்கு நாலே மாதங்கள் மட்டுமே இலரக்கும் நிலையில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி நடத்த வேண்டிய அவசரம் என்ன?அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமைச்சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வரப்போகின்றது. செம்மணிப் புதை குழிகள் விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தாக்கத்தை மடைமாற்ற வேண்டும்.எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வு நட்த்தப்பட்டிருக்கலாம். நிச்சயம் இதன் பின்னணியில் பல மறைகரங்கள் இந்திய இலங்கை புலனாய்வு அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கலாம். போலித்துவாராகவை உருவாக்கியவர்களும் இந்த நினைவேந்தலை செய்தவர்களும் ஒரே மறை கரங்களால் இயக்கப்படும் ஆட்களே.

செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்

3 months ago
திமுக புலிகள் ஆதரவு நிலைபாடு எடுத்து தனது ஆட்சியை இழந்தது .கொலைகார இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தது. புலிகள் ஒழிப்பு நடவடிக்கை என்று படித்து கொண்டிருந்த இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ஜெயலலிதாவால் நிறுத்தபட்ட விசாவை மீண்டும் வழங்கியது. சசிகாந்த செந்தில் என்பவர் இலங்கை தமிழர்கள் மீது நடத்தபட்ட இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு விசாரணை வேண்டும் என்று இந்தியாவை கேட்டு இருக்கிறாரா இந்திய இராணுவத்தின் கொடூரங்களுக்கு மன்னிப்பு வருத்தமாவது தெரிவித்து இருக்கின்றாரா

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

3 months ago
ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் , சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

3 months ago
அது அந்த தளத்தின் உரிமையாளரின் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும் என்று வந்தது

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை

3 months ago
அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே... திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்... தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..

மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன்

3 months ago
மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான். வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன். ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல. எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது. வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும். பா.உதயன் ✍️