Aggregator
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்!
adminSeptember 13, 2025
படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது.
யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது
கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் , அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!
கருத்து படங்கள்
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!
தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
ஈழத்தமிழர் தொடர்பாக வெளியான பொய்களால் குழப்பத்தில் சர்வதேசம்!
"மூன்று கவிதைகள் / 08"
"மூன்று கவிதைகள் / 08"
"மூன்று கவிதைகள் / 08"
'உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்?'
உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் சுழலுவதேன்
மன்னவனின் மடியிலே மயக்கம் வருவதேன்
அன்ன நடையாளின் உடலெல்லாம் பூரிப்பதேன்
மென்மையான தழுவல் இன்பம் பொழிய
உன்னதமான காதல் வேறெங்கே காண்பேன்?
பெண்ணொருத்தி சாய்ந்து படுத்த கோலம்
கண்ணிரண்டும் பார்த்து மகிழ்ந்த நேரம்
மண்ணில் பிறந்ததின் பயனைக் கண்டேன்
விண்ணில் பறந்த உணர்வு கொண்டேன்
எண்ணங்கள் எல்லாம் அவள் மட்டுமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.................................................................
'மனதைத் தொடும் நினைவுகள்'
மஞ்சள் வெயில் பூத்த வானமும்
பனை மரங்களின் இனிய தாலாட்டும்
பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும்
யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும்
எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும்
அன்பும் பண்பும் துளிர் விடும்!
வீட்டை விட்டு எட்டி நடந்தால்
வானம் பாடிகளின் ஆட்டமும்
வீதியோர பசுக்களின் கூட்டமும்
காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும்
வானுயர நிமிர்ந்த பனைமரமும்
மனதைத் தொடும் நினைவுகளே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
.....................................................................
'சத்தியமே வெல்லும்'
சத்தியமே வெல்லும் குழப்பம் மறையும்
சந்தேகம் வேண்டாம் கடமையைச் செய்!
சமத்துவம் வளர்ந்தால் நீதி தவறாது
சத்தம் போட்டு உண்மைச் சொல்!
சமூகம் இணைந்தால் நட்பு வளரும்
சராசரி மனிதனுக்கும் சத்தியம் நிலைக்கும்!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
"மூன்று கவிதைகள் / 08"
https://www.facebook.com/groups/978753388866632/posts/31286359797679259/?