Aggregator

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 13 hours ago
கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்பின் அடையாளங்கள் தான். உடனே இணக்க அரசியல் எழுதுவோர் ஓடிவாருங்கள், "அதெப்படிச் சொல்வீர்கள், கொழும்பில் கோயில் இல்லையா? ஆடித்தேர் இழுக்கவில்லையா?" என்று கேட்டுக்கொண்டே. எல்லாம் இருக்கிறது, ஆனால், தமிழினம் சிங்கள இனத்தை ஆக்கிரமித்து கொழும்பில் நிற்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்திலோ, வடக்குக் கிழக்கில் எந்தவிடத்திலுமோ நடப்பது சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புத்தான். இந்த ஆக்கிரமிப்பினை எம்மால் வேடிக்கை வினோதமாகத்தான் பார்க்க முடிகின்றதென்றால் பிழை ஆக்கிரமிப்பாளனில் இல்லை. சுமந்திரனுக்கோ அங்கஜனுக்கோ யாழ்ப்பாணத்தில் விழுந்த வாக்குகளுக்கும், 2010 இல் சரத் பொன்சேகாவிற்கு விழுந்த வாக்குகளுக்கும் இடையே எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இவர்களுக்கு ஏன் தாம் வாக்களிக்கவேண்டும் என்கிற கேள்வியோ, வாக்களிப்பதால் உருவாகப்போகும் விளைவுகள் குறித்தோ யாழ்ப்பாணச் சமூகம் அக்கறைப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. தம்மை இன்றைவரை ஆக்கிரமித்து நிற்கும் ஒரு சமூகத்தின் எந்த வாக்காள‌ருக்கு நாம் வாக்களிக்கலாம், எவருக்கு வாக்களிக்காது விட்டால் நாம் விரும்பும் ஒரு சிங்கள வேட்பாளருக்கான ஆதரவு குறைந்துவிடும் என்று கவலைப்படும் நிலைக்குத் தமிழ்ச் சமூகம் வந்துவிட்டிருப்பதும் சிங்களவர்களின் பிழையில்லை. தையிட்டியில் (இன்றும் நடக்கிறது) அடாத்தாக தமிழர் நிலங்களில் விகாரை கட்டும்போதும், குருந்தூர் மலையில் சிவலிங்கத்தை உடைத்தெறிந்து அப்பகுதியை பெளத்த பூமியென்று நிறுவும்போதும், நாவற்குழியில் இனக்கொலையாளியொருவனால் விகாரை திறந்துவைக்கப்பட்டபோதும், திருகோணமலையில் தமிழர் தாயகப்பகுதியில் புதிதாக விகாரை கட்டி எழுப்பும்போதும் வெறுமனே ஓரிரு மக்களும், செயற்பாட்டாளர்களும் மட்டுமே அங்கு நின்று ஆர்ப்பரிப்பதும் யாருடைய பிழை? ஏன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஓரிருவரைத் தவிர, மொத்தத் தமிழர்களுக்கும் இது பிரச்சினையாகத் தெரியாது போனதெப்படி? இதை எழுதவேண்டியிருப்பதே யாழ்ப்பாணத்து தமிழர்களின் இன்றைய அரசியல்க் கையறு நிலையினைச் சுட்டிக்காட்டத்தான். தமிழர்களின் இருப்பைத் தக்கவைப்பத‌ற்கான தேவை யாழ்த்தமிழர்களுக்கு இல்லாமற்போனதெப்படி? காணி விடுவிப்புப் போராட்டம், அரசியற்கைதிகளின் விடுதலைப் போராட்டம் என்பவற்றிற்கு வந்து "குவியும்" ஆயிரமாயிரம் தமிழர்கள் இனிமேல் வராது போய்விடுவார்கள் என்கிற நியாயமான கவலை சிலருக்கு !!! நான்கைந்து பாதிக்கப்பட்ட மக்களும், இன்றுவரை தமது காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெற்றோரையும் தவிர எத்தனை "ஆயிரம்" தமிழ் மக்கள் இப்போராட்டங்களில் வந்து குவிகிறார்கள்? இந்தத் தேவையற்ற எச்சரிக்கை ஏன்? நீங்கள் போராடுவதற்கும் எமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அம்மக்களை நிர்க்கதியாக விட்டு விட்டு சமூகத்தின் பெரும்பான்மையான மீதிப்பேர் வேடிக்கை நிகழ்வுகள் உட்பட தமது நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கச் செல்லவில்லையா? இல்லாத‌ ஒன்றை இருப்பதாகக் காட்டி எச்சரிக்கை வேறு விடுக்கிறீர்கள்? அரசியல்மயப்படுத்தப்படாத, அல்லது அரசியலில் தேசிய நீக்கம் செய்யப்பட்டுவரும் யாழ்ப்பாணச் சமூகத்திடமிருந்து இதனைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்கமுடியாது. சில தினங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் வந்து இணைந்துகொண்ட தமிழ் மக்களுக்கும் நேற்று நாகவிகாரையைச் சுற்றி ஓடியோடி "வேடிக்கை" பார்த்த தமிழர்களுக்கும் இடையே வித்தியாசம் நிச்சயம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். "தமிழ்த்தேசியம் என்று ஊரில் வாய்திறந்தால் அடிதான் விழும்" ‍ இந்த நிலை வரக் காரணம் என்ன? ஐம்பதினாயிரம் போராளிகளும், ஒன்றரை இலட்சம் மக்களும் ஏன் மடிந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தான் கூறுவது போல எமக்கேன் தேவையற்ற பிரச்சினை, அது பிரச்சினை உடையவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அவர்கள் அனைவரும் இருந்திருக்கலாமே? அவர்கள் தம்மை தேசியத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்வதற்கான தேவை ஒன்று இருந்ததுதானே? அது இன்றும் இருக்கிறதுதானே? பிறகேன் தேசியம் கதைத்தால் அடிவிழும் என்கிற பயம்? அப்படி நிலை ஏற்பட யார் காரணம்? புலிநீக்கம் செய்கிறோம், தேசிய நீக்கம் செய்கிறோம், இணக்க அரசியல் செய்கிறோம், அடையாளம் துறக்கிறோம், சுயவிமர்சனம் செய்கிறோம், தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என்று பேசிப்பேசியே ஒரு சமூகத்தை அரசியல் கோமா நிலைக்குக் கூட்டிச் சென்றது யார்? இதைக்கேட்டால் "தீவிர கண்ணாடி போட்டுப் பார்த்தால் அடிதான் விழும் " என்கிறீர்கள். முதலில், யாழ்ச் சமூகம் உட்பட, மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அரசியல் மயப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுங்கள். உங்களின் நடுநிலை, இணக்க, தேசிய நீக்க அரசியலால் பிரிந்துபோய், நமக்கேன் தேவையில்லாத வேலை என்று இருக்கும் சமூகத்தை தூக்கியெழுப்புங்கள். ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ்மக்கள் எதிர்கொண்ட‌ பிரச்சினைகளைக் காட்டிலும் பலமடங்கு பிரச்சினைகள் அவர்களின் முன்னால் இன்றைக்கு இருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பினை சிங்களம் கட்டுப்பாடின்றி, தட்டிக் கேட்போர் இன்றி மிகச் சுதந்திரமாக முன்னெடுத்து வருகிறது. கண்ணாடி ஏதுமின்றி குருடர்களாக, அரசியலில் அநாதைகளாக, திக்கற்றவர்களாக, செல்லும் வழிதெரியாது நடுவீதியில் நிற்பவர்களாக தமிழர்களை வெகுவிரைவில் நீங்கள் கொண்டுவந்து விட்டுவிடுவீர்கள். இப்படிப் போனதன் விளைவே முள்ளிவாய்க்காலுக்கும், கார்த்திகை 27 இற்கும் செல்லும் மக்களுக்கும், நாகவிகாரையில் வெசாக் பார்த்து இன்புற்று, தம்மைக் கொன்றொழித்த மிருகங்களுடன் "சகஜமாகக் கூடிக் குலவும்" இன்னொரு மக்கள் கூட்டத்திற்கும் இடையே நிரந்தரமான இடைவெளி ஒன்று உருவாவதற்குக் காரணம் .

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

1 day 13 hours ago
அப்படியா.... நாங்கள் வெளிநாட்டவர் என்றபடியால் தான் தலைக்கு ஐயாயிரம் ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கின்றனர் என்று நினைத்திருந்தேன். யானைகள் பெரிதாகத்தான் இருக்கின்றன, அதற்காக கட்டணமும் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமா.......... 😀.

வினா விடை ​

1 day 14 hours ago
வினா: நாம் ஒவ்வொருவரும் பல்வேறு மின்னஞ்சல் வழங்கிகளை உபயோகிக்கின்றோம்: Hotmail, Yahoo Mail, Outlook, Gmail, Apple இத்தியாதிகள். பாதுகாப்பு, பயன்பாட்டு உபயோகங்கள், விலை, நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் மிகச்சிறந்த மின்னஞ்சல் எது என நீங்கள் கூறுகின்றீர்கள்? ••••••• ♻️

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 14 hours ago
இதுவ‌ரை போட்டியில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நான் சுவி அண்ணா நிலாம‌தி அக்கா குமார‌சாமி தாத்தா தீயா................................................

தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?

1 day 14 hours ago
👏...... நல்ல விகடமாக கைதட்டும் விடயத்தை பற்றி எழுதியிருக்கின்றார். சில இடங்களில்/நிகழ்வுகளில் அவர்கள் தட்டுகின்றார்களே, நாங்களும் ஒரு தட்டு தட்டி வைப்போம் என்று தட்டுவதும் உண்மை தான். பெரிய சங்கீத, நாட்டிய நிகழ்வுகளில் நிகழ்வு முடிந்ததாக எண்ணி, மகிழ்ந்து, இடையிலேயே கைதட்டி, பின்னர் மெலிதாக அசடு வழிந்தும் இருக்கின்றோம்.......😀

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

1 day 15 hours ago
நெத்த‌னியாக்கு எங்கை போர‌ நிப்பாட்ட‌ போரான் அமெரிக்காவின் ஆத‌ர‌வு இருக்கும் வ‌ரை நெத்த‌னியாகுவை ஒன்றும் செய்ய‌ முடியாது......................................யூத‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் அமெரிக்காவில் அதிக‌ம் அது தான் பெரிய‌ அண்ண‌ன் நெத்த‌னியாகுவுக்கு ந‌ல்லா முட்டு கொடுக்கிறார்............................................................................

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 15 hours ago
உங்கள் வினாக்களுக்கு பதில் கூறுவதற்குரிய தரவுகள் என்னிடம் இல்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட விடயம் என்ன என்றால் வெள்ளவத்தையிலும் தமிழ் ஆட்கள் வெசாக் தினத்தில் உணவு உட்கொண்டார்கள். வேடிக்கை பார்த்தார்கள். இவ்வாறே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும். யாழ்ப்பாணத்தில் சாதாரண சிங்கள மக்கள், வர்த்தகர்களின் பிரசன்னம் இல்லாதபடியால் இராணுவத்தினர் அலங்காரம், உணவு கொடுத்தலை செய்கின்றனர். நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். @ரஞ்சித் மேற்கண்ட உரையாடலில் எழுதிய விடயம்/எழுதிய பாணி ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று அல்ல. அவர் எழுத்துக்கள் அப்படித்தான். எல்லோரும் ஒரே மாதிரி அல்லதானே.

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

1 day 15 hours ago
🤣..... அங்கு எடுத்த வீடியோக்களை பார்க்க 'funny' ஆக இருக்கிறது என்று இப்பொழுது சொல்கின்றனர். அடங்கமாட்டார்கள் போல....போகும் ஒவ்வொரு தடவையும் தலைக்கு ஐயாயிரம் இதுக்கு எடுத்து வைக்க வேணுமோ தெரியல .........😀

ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

1 day 16 hours ago
முள்ளிவாய்க்காலை ஒத்த தாக்குதல். முள்ளிவாய்க்காலில் முடியட்டும் என்று விடுப்பு பார்ப்பு. காசாவுக்கு அறிக்கை.. ஏனெனில்.. மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின்.. ஆதரவு வளங்கள்.. சில முக்கிய மேற்கு நாடுகளுக்கு அவசியம் என்பதால்.

கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை - செல்வராஜா கஜேந்திரன்

1 day 16 hours ago
சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புப் படைக்கூலிகள் செய்தால்.. தமிழ் அதிகாரிகளும் அடங்கி விடுவினம். இது தெரியாதா.. இது தெரியாமல் என்ன அரசியல் செய்கிறீர்களோ..?! காலங்காலமாக இதுதானே நடக்குது சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்.

யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்

1 day 16 hours ago
இதுவும் சிங்கள பெளத்த இனப்படுகொலை இராணுவத்தினர் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிச்ச கணக்குத்தான். அதற்காக புலிகள்.. தமிழ் மக்கள் மீதான பயம் இல்லாமல் போயிருந்தால்.. எதற்கு இன்னும் ஆக்கிரமிச்சு நிற்கனும்.. தமிழர்களின் நிலத்தை. சாதாரண சிங்களவர்கள் வந்து வெசாக் அலங்காரமா செய்கிறார்கள். ஏன் இராணுவம் அடாத்தாச் செய்யனும்..??!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 16 hours ago
T20 உலகக் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் - விடுபட்ட அணிகள் குழு A: பாகிஸ்தான் (PAK) BATTERS: Babar Azam (c), Azam Khan, Fakhar Zaman, Iftikhar Ahmed, Mohammad Rizwan, Saim Ayub, Usman Khan ALLROUNDERS: Imad Wasim, Shadab Khan BOWLERS: Abbas Afridi, Abrar Ahmed, Haris Rauf, Mohammad Amir, Naseem Shah, Shaheen Shah Afridi அயர்லாந்து (IRL) BATTERS: Ross Adair, Andy Balbirnie, Neil Rock, Harry Tector, Lorcan Tucker ALLROUNDERS: Paul Stirling (c), Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell BOWLERS: Graham Hume, Josh Little, Barry McCarthy, Ben White, Craig Young குழு B: நமீபியா (NAM) BATTERS: Nikolaas Davin, Zane Green, JP Kotze, Malan Kruger, Dylan Leicher ALLROUNDERS: Gerhard Erasmus (c), JJ Smit, Jan Frylinck, Michael van Lingen, David Wiese BOWLERS: Peter-Daniel Blignaut, Jack Brassell, Tangeni Lungameni, Bernard Scholtz, Ben Shikongo, Ruben Trumpelmann குழு C : பபுவா நியூகினி (PNG) BATTERS: Assad Vala (c), Sese Bau, Kiplin Doriga, Hiri Hiri, Lega Siaka, Tony Ura ALLROUNDERS: Charles Amini BOWLERS: Semo Kamea, John Kariko, Kabua Morea, Alei Nao, Chad Soper, Norman Vanua, Jack Gardner குழு D : சிறிலங்கா (SL) BATTERS: Kusal Mendis, Pathum Nissanka, Sadeera Samarawickrama ALLROUNDERS: Wanindu Hasaranga (c), Charith Asalanka, Dhananjaya de Silva, Angelo Mathews, Kamindu Mendis, Dasun Shanaka BOWLERS: Dushmantha Chameera, Dilshan Madushanka, Matheesha Pathirana, Maheesh Theekshana, Nuwan Thushara, Dunith Wellalage பங்களாதேஷ் (BAN) BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Litton Das, Tanzid Hasan, Towhid Hridoy ALLROUNDERS: Mahedi Hasan, Mahmudullah, Shakib Al Hasan, Soumya Sarkar BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Rishad Hossain, Shoriful Islam, Tanvir Islam, Tanzim Hasan Sakib நெதர்லாந்து (NED) BATTERS: Scott Edwards (c), Wesley Barresi, Michael Levitt, Max O'Dowd, Vikramjit Singh ALLROUNDERS: Bas de Leede, Sybrand Engelbrecht, Teja Nidamanuru, Tim Pringle, Saqib Zulfiqar BOWLERS: Aryan Dutt, Vivian Kingma, Kyle Klein, Logan van Beek, Paul van Meekeren