Aggregator

இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா?!

2 days 4 hours ago

இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா? - புதிய ஐஃபோன் 17 ஏன் இவ்வாறு உள்ளது?

விரல் நுனியில் சிம்கார்டு இருப்பது போன்ற ஒரு படம்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • கிரஹாம் ஃப்ரேசர்

  • தொழில்நுட்ப செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஸ்மார்ட்ஃபோன்களின் விஷயத்தில், ஆப்பிள் என்ன செய்தாலும் மற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் அதையே பின்பற்றும். எனவே, இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் பாரம்பரிய சிம் கார்டு இல்லாத ஐபோனை அறிமுகப்படுத்தியிருப்பது, அனைவரும் அறிந்த இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

அனைத்து ஃபோன் பயனர்களுக்கும், தங்கள் சாதனங்களைச் செயல்பட வைக்க செருக வேண்டிய சிறிய பிளாஸ்டிக் கார்டுகளை நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்,

ஆனால், ஐபோன் ஏர்-ஐ வாங்குபவர்களுக்கு அது பழங்கால விஷயமாகிவிடும்.

இந்த ஐபோன் இ-சிம் உடன் மட்டுமே இயங்கும். இது பயனர்கள் தங்கள் நெட்வொர்க்கை அல்லது திட்டங்களை மாற்ற, சிம் கார்டு ட்ரே-ஐத் திறக்க ஒரு குண்டூசியைக் கொண்டு குடைந்து சிரமப்படத் தேவையில்லை.

CCS இன்சைட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கெஸ்டர் மான், பிபிசி செய்தியிடம், ஆப்பிளின் இந்த அறிவிப்பு "பொருள்ரீதியான சிம் கார்டின் முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" என்று கூறினார்.

ஆனால், நாம் அனைவரும் நமது சிறிய சிப் உள்ள பிளாஸ்டிக் துண்டுகளை நிரந்தரமாகக் கைவிட எவ்வளவு காலம் ஆகும்? அது நமது ஃபோன்களைப் பயன்படுத்தும் விதத்தில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?

'சிம் கார்டு ட்ரே மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்'

போனில் சிம் கார்டு பொருத்தும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக சிம் கார்டுகள் ஸ்மார்ட்ஃபோன்களுடன் இணைந்ததாக இருந்துள்ளன.

சிம் என்பதன் விரிவாக்கம் Subscriber Identity Module (பயனர் அடையாள மாதிரி) என்பதாகும். இந்தச் சிப் உங்கள் ஃபோனின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது உங்கள் மொபைல் நெட்வொர்க் வழங்குநருடன் இணைய, அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்த, உங்கள் டேட்டாவை இயக்க உதவுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இ-சிம் ஒரு மாற்று வழியாக உருவெடுத்துள்ளது. புதிய ஃபோன்களில் பயனர்களுக்கு ஒரு பாரம்பரிய சிம் அல்லது இ-சிம் இரண்டையும் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய்க்கிழமை, ஆப்பிள் குடும்பத்தின் புதிய, மற்றும் மிக மெல்லிய தயாரிப்பான புதிய ஐபோன் ஏர் பற்றிய அறிவிப்பில், அது இ-சிம்-ஐ மட்டுமே கொண்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், கூறியது.

இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன் உலகம் முழுவதும் கிடைப்பது இதுவே முதல்முறை. அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் 2022 முதல் இ-சிம் மட்டுமே கொண்ட ஐபோன்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், ஆப்பிள் நிறுவனம் கூட வழக்கமான சிம் கார்டை முழுமையாகக் கைவிடவில்லை.

இந்த வாரம் அது அறிவித்த மற்ற புதிய ஐபோன்களான – 17, 17 ப்ரோ, 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சில சந்தைகளில் இ-சிம் மட்டுமே கொண்டவையாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலான நாடுகளில் அவை வழக்கமான சிம் கார்டு ஸ்லாட்டுகளைத் தக்கவைத்துக் கொள்ளும்.

சாம்சங் மற்றும் கூகிள் போன்ற பிற பெரிய உற்பத்தியாளர்களும், இ-சிம்களை ஒரு தேர்வாக ஏற்றுக்கொண்டாலும், பெரும்பாலான இடங்களில் வழக்கமான சிம் கார்டுகளை இன்னும் பராமரித்து வருகின்றனர்.

இருப்பினும், முன்னேற்றம் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

CCS இன்சைட்டின் சமீபத்திய கணிப்பின்படி, 2024 இறுதிக்குள் 1.3 பில்லியன் இ-சிம் ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாட்டில் இருந்தன. இந்த எண்ணிக்கை 2030 க்குள் 3.1 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"காலப்போக்கில், சிம் ட்ரே முற்றிலும் மறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்," என்று PP ஃபோர்சைட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வாளர் பாலோ பெஸ்காடோர் கூறினார்.

ஐபோன் ஏர் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் ஏர், இதுவரை உருவாக்கப்பட்ட மிக மெல்லிய ஐபோன் ஆகும்.

இ-சிம்-ன் நன்மைகள் என்ன?

இ-சிம்-க்கு மாறுவது "பல நன்மைகளை" வழங்குவதாக பெஸ்காடோர் கூறினார். மிக முக்கியமாக, ஃபோனின் உட்புறத்தில் சிறிது இடத்தை மிச்சப்படுத்துவதால், பெரிய பேட்டரிகளைச் பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டிக் சிம் கார்டுகள் பயன்படுத்தப்படாததால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளையும் அவர் வலியுறுத்தினார். மேலும், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் மக்கள் இ-சிம்-ஐப் பயன்படுத்தும்போது அதிக சேவை வழங்குநர் விருப்பங்கள் கிடைக்கும் என்றும் "கட்டண அதிர்ச்சிகள்" இருக்காது என்றும் அவர் நம்புகிறார்.

இது புதிய வாடிக்கையாளர் நடத்தைகளைக் கொண்டுவரும் என்றும், "மக்கள் தங்கள் மொபைல் வழங்குநருடன் தொடர்புகொள்ளும் விதத்தை மெதுவாக மாற்றும்" என்றும் கெஸ்டர் மான் கூறினார்.

உதாரணமாக, சில வாடிக்கையாளர்கள் தங்கள் வழங்குநருடன் சிம் குறித்துப் பேச, ஒரு கடைக்குச் செல்லத் தேவையில்லை.

ஒரு கடைக்கு நேரடியாக செல்லும் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு பெரிய நன்மையாக இருக்கலாம்.

ஆனால், எல்லா மாற்றங்களைப் போலவே, இது அனைவராலும் வரவேற்கக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"இந்த மாற்றம் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு குறிப்பாக முக்கியமானது. இ-சிம்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கத் தொழிற்துறை கடினமாக உழைக்க வேண்டும்" என்று மான் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15kq82vqweo

இருபதுக்கு - 20 கிரிக்கெட் : புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்!

2 days 5 hours ago
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 39 பந்துகளில் இந்த சதத்தை எட்டினார். இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதம் அடித்திருந்ததே இங்கிலாந்தின் அதிவேக சதமாக இருந்தது. இந்தப் போட்டியின் சதம், பில் சால்ட்டிற்கு சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் நான்காவது சதமாகும். இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த இரு வீரர்களும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. https://www.virakesari.lk/article/224991

இருபதுக்கு - 20 கிரிக்கெட் : புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்!

2 days 5 hours ago

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 02:06 PM

image

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவர் 39 பந்துகளில் இந்த சதத்தை எட்டினார். 

இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதம் அடித்திருந்ததே இங்கிலாந்தின் அதிவேக சதமாக இருந்தது.

இந்தப் போட்டியின் சதம், பில் சால்ட்டிற்கு சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் நான்காவது சதமாகும். 

இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 

இந்த இரு வீரர்களும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WhatsApp_Image_2025-09-13_at_14.03.38.jp

https://www.virakesari.lk/article/224991

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago
இலங்கையில் உழைக்க வருபவர்கள் முதலீடு செய்து உழைக்கிறார்கள் என ராஜித ஒரு முறை சொன்னவர் அண்ணை. இம்முறை என்பிபி புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியதே!

எஸ்சிஓ வங்கி அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்கு சவாலாக அமையுமா?

2 days 5 hours ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங் கட்டுரை தகவல் டாம் லேம் பிபிசி மானிட்டரிங் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது. எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதி) சீனாவின் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும். ரஷ்யாவின் கடந்தகால ஆட்சேபனைகளை மேற்கொள் காட்டும் செய்திக் குறிப்புகள், யுக்ரேன் போரைத் தொடர்ந்த மேற்கத்திய பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்கிற நிலையில் இருக்கும் இரானும் இந்த வங்கியை நிறுவுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, மேற்கத்திய பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதற்கான சாத்தியமான வழி என்றும் இதனை இரான் கூறியுள்ளது. சில ஊடகச் செய்திகள் இந்தப் புதிய வங்கியை "நிதி விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தை" எதிர்கொண்டு சீன நாணயமான யுவானின் சர்வதேச செல்வாக்கை அதிகரித்து உலகளாவிய நிதியமைப்பில் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கான வழியாகப் பார்க்கின்றன. அதே சமயம் இந்தச் செய்திகளில் இந்தியா தயக்கம் காட்டுவதும் அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்தல் வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்சிஓ வங்கி என்றால் என்ன? அது என்ன செய்யும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ அமைப்பில் 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "வங்கி நிறுவுவதற்கான அரசியல் ஒப்புதல்" தான் எஸ்சிஓ உச்சிமாநாட்டின் முக்கிய முடிவாகும் என்றும் சீனாவின் முன்மொழிவு இறுதியாக நிஜமாகிறது என்றும் தெரிவித்தார். இந்த வங்கி யூரேசியாவில் பல்தரப்பு ஒத்துழைப்புக்கு புதிய தளம் அமைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். "இது உறுப்பு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியமும் கொண்டாடுவதற்கான காரணம்" என்றும் குறிப்பிட்டார். சீன அரசு ஊடகமான சீனா நியூஸ் சர்வீஸ் (சிஎன்எஸ்) தனது செய்தியில், எஸ்சிஓ வங்கி முதலில் சீனாவால் 2010-இல் முன்மொழியப்பட்டது என்றும் 2025-இல் தான் அதனை நிறுவுவதற்கான பணி வேகம் எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025-இல் எஸ்சிஓ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்" மற்றும் ஜூலையில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "கொள்கையளவு ஒப்புதல்" உள்ளிட்டவை அடங்கும். இயற்கை வளங்கள் நிறைந்துள்ள எஸ்சிஓ நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள கஷ்டங்களே இந்த வங்கிக்கான தேவையை உணர்த்துவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வங்கி உறுப்பு நாடுகளிடையே பிராந்திய அளவில் பொருளாதார ஒத்துழைப்பையும் வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு செய்தித்தாளான தி பேப்பர், எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் இரும்பு தூது நிறைந்திருக்கும் ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் "ஒளிமயமான வளர்ச்சி வாய்ப்புகளை" வழங்குகிறது. ஆனால் இந்த நாடுகளிள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது இத்தகைய நிதி நெருக்கடி தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் உள்ளது. இந்த நாடுகளில் நீர்மின் திட்டம், கனிம வளங்கள் மற்றும் எரிபொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சி இலக்குகளை அடைய பெரிய அளவிலான நிதியுதவி தேவைப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த நாளிதழான பெய்ஜிங் நியூஸ் செப்டம்பர் 2-ஆம் தேதியன்று வெளியான தலையங்கத்தில், புதிய வங்கி உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த உள்கட்டமைப்பு திட்டங்களான எரிபொருள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். அதே வேளையில் எஸ்சிஓ நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கான நடைமுறையும் துரிதப்படுத்தப்படும். அதே தலையங்கத்தில், இந்த வங்கி சீனா மற்றும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும், இதன்மூலம் யூரேசியாவில் சீனப் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும். பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கியிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஏதுவாக இந்த வங்கி மத்திய ஆசியாவில் இடம்பெற வேண்டும் என்றும் பெரிய அளவிலான எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மூலதனம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மீது தற்போது கவனம் ஏன்? பட மூலாதாரம், Getty Images சீன அரசின் நிதிசார் செய்தித்தாளான செக்யூரிடீஸ் டைம்ஸ், எஸ்சிஓ வளர்ச்சி வங்கி திட்டத்தை சீனா 2010-இல் முன்மொழிந்திருந்தாலும் அப்போதே சில உறுப்பு நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஏனென்றால் அப்போதைக்கு அமைப்பின் முக்கியத்துவமானது பிராந்திய பாதுகாப்பை ஊக்குவிப்பதிலே இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் நாளிதழான சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள் காட்டி குவான்சாவில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஷ்யா முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு மாறாக தனது யூரேசியன் வளர்ச்சி வங்கியை விரிவுபடுத்த விரும்பியது. எஸ்சிஓ-வுக்கு உள்ளுமே சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களில் வேறுபாடு உள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. சீனா மத்திய ஆசியாவில் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து எரிபொருள் இறக்குமதியைப் பன்மைப்படுத்த விரும்புகிறது, ஆனால் ரஷ்யா இந்தப் பிராந்தியத்தில் தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புகிறது. ஆனால் யுக்ரேன் போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் ரஷ்யாவை 'கிழக்கு நோக்கி சாயும் (leaning towards the east)' கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்துள்ளது. இதனால் தான் ரஷ்யா எஸ்சிஓ வங்கி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக ஒரு சீன வல்லுநரை மேற்கோள்காட்டி சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதார தடைகள் 'நிதி ஆயுதங்களின்' வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது. அதோடு மேற்கத்திய நிதியமைப்பை அதிகம் சார்ந்திருப்பதன் ஆபத்தையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது என பெய்ஜிங் நியூஸ் தலையங்கம் தெரிவித்துள்ளது. "நிதியமைப்பில் மேற்கத்திய ஆதிக்கத்தைக்" கட்டுப்படுத்த தேவையான புதிய நிதி கட்டமைப்பிற்கான தேவையும் மேற்கத்திய தடைகளை தவிர்ப்பதற்கான அவசியமும் அந்த தலையங்கத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிசார் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கு ஒரு வழியாக எஸ்சிஓ வங்கியை வளர்க்க வேண்டும் எனவும் அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ அமைப்பு இந்த வங்கி மூலம் பாதுகாப்பு என்பதோடு மட்டும் தங்களை நிறுத்திக் கொள்ளாது பொருளாதார ஒத்துழைப்பு என்கிற களத்தில் வளரலாம் என பெய்ஜிங் நியூஸ் தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் எஸ்சிஓவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும். இந்த வங்கி மேற்கத்திய நாணயமான டாலர் மற்றும் யூரோ மீதான சார்பைக் குறைக்கும் எனவும் அந்த தலையங்கத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் யுவானின் செல்வாக்கு அதிகரிக்கவும் உலகளாவிய அமைப்பை பல்முனை திசையை நோக்கி நகர்த்தவும் உதவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. சீன அரசு சார் நிறுவனமான சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சயின்ஸைச் சேர்ந்த லீ ரூய்க்ஸி தற்போதைய சர்வதேச சூழல் புதிய பல்தரப்பு வங்கியை உருவாக்குவதற்கு முன்பு எப்போதையும்விட சாதகமான நேரமாக இருப்பதாகக் கூறுகிறார் என குவான்சா செய்தியில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images மற்ற உறுப்பு நாடுகளின் நிலை என்ன? இரான் பல மேற்கத்திய பொருளாதார தடைகளைச் சந்தித்து வருகிறது. எஸ்சிஓ வளர்ச்சி வங்கியின் உருவாக்கத்தை ஆதரிக்கும் நாடாக இரானின் பெயரை சீன ஊடகங்கள் பரவலாகப் பதிவு செய்துள்ளன. ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட இரானின் மத்திய வங்கி ஆளுநர் முகமது-ரேசா ஃபர்சின், எஸ்சிஓ வங்கி மற்றும் அது சார்ந்த நாணய முறை என்பது நீண்டகாலமாக உள்ள ஒருசார் அமைப்பிலிருந்து வெளி வர உதவும் எனத் தெரிவித்ததாக குவான்சா செய்தி குறிப்பிடுகிறது. இரானிய அரசியல் ஆய்வாளரான பேமன் சலேஹி சௌத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், எஸ்சிஓவின் நிதியமைப்பில் இரான் சேர்க்கப்பட்டது புதிய பொருளாதார தடைகளைச் சமாளிக்க அந்நாட்டிற்கு அவசியமாகிறது என்றுள்ளார். எஸ்சிஓ வங்கி இரானுக்கு ஒரு 'அரசியல் கவசமாக' மாறலாம், பொருளாதார தடைகள் என்பது ஒருநாட்டை பணியச் செய்வதற்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய ஆசிய எஸ்சிஓ உறுப்பு நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் யுஸ்பெகிஸ்தானும் புதிய வங்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குவான்சா செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய அரசு ஊடகமான ஸ்புட்னிக்கின் சீனப் பிரிவுக்கு மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மஸ்லோவ் அலெக்ஸி அலெக்ஸாண்டோவிச் அளித்த நேர்காணலில், எஸ்சிஓ வங்கி என்பது முதலீட்டு திட்டங்களுக்காகவும் பாதுகாப்பான நாணய வர்த்தக முறைக்கும் அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார். எஸ்சிஓ வங்கி பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பை கவர்ச்சிகரமானதாக்கும் என்கிறார். இனி வரக்கூடிய நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கூட இந்த அமைப்பில் சேர்க்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். "பெரிய உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகளால் திணறி வரும் ஆப்ரிக்காவிற்கு எஸ்சிஓ வங்கி, மற்ற வங்கிகளின் விதிகளுக்குக் கட்டுப்படாத புதிய நிதிமாடலை வழங்குகிறது" என நெய்ரோபியைச் சேர்ந்த சௌத்-சௌத் டயலாக் அமைப்பின் இணை இயக்குநரான ஸ்டீபன் எண்டேக்வா சீனா டெய்லியிடம் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ வங்கிக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கலாம் என சீன ஊடகங்கள் கூறுகின்றன. அதே போல் இந்தியாவின் சாத்தியமான ஆட்சேபனை பற்றியும் சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள்காட்டி குவான்சா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவின் பல அணிசார் ராஜதந்திரம் என்பது 'சீனாவின் பிராந்திய நோக்கங்களைச் சமாளிக்கும் அதே வேளையில், அந்நாட்டை ஒரு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக வைத்திருப்பது என்பதை நோக்கியது எனத் தெரிவிப்பதாக குவான்சா செய்தி கூறுகிறது. அதே போல், அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்வினையையும் புறந்தள்ளிவிட முடியாது என குவான்சா செய்தி கூறுகிறது. முன்னதாக பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் திட்டங்களை கைவிடவில்லை என்றால் 100 சதவிகிதம் வரிகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்ததும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gkdyj0n12o

எஸ்சிஓ வங்கி அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்கு சவாலாக அமையுமா?

2 days 5 hours ago

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, எஸ்சிஓ, பிரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங்

கட்டுரை தகவல்

  • டாம் லேம்

  • பிபிசி மானிட்டரிங்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது.

எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதி) சீனாவின் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும்.

ரஷ்யாவின் கடந்தகால ஆட்சேபனைகளை மேற்கொள் காட்டும் செய்திக் குறிப்புகள், யுக்ரேன் போரைத் தொடர்ந்த மேற்கத்திய பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறியிருப்பதாக தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளால் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்கிற நிலையில் இருக்கும் இரானும் இந்த வங்கியை நிறுவுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது, மேற்கத்திய பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதற்கான சாத்தியமான வழி என்றும் இதனை இரான் கூறியுள்ளது.

சில ஊடகச் செய்திகள் இந்தப் புதிய வங்கியை "நிதி விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தை" எதிர்கொண்டு சீன நாணயமான யுவானின் சர்வதேச செல்வாக்கை அதிகரித்து உலகளாவிய நிதியமைப்பில் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கான வழியாகப் பார்க்கின்றன.

அதே சமயம் இந்தச் செய்திகளில் இந்தியா தயக்கம் காட்டுவதும் அமெரிக்காவிடமிருந்து அச்சுறுத்தல் வருவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்சிஓ வங்கி என்றால் என்ன? அது என்ன செய்யும்?

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, எஸ்சிஓ, பிரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஸ்சிஓ அமைப்பில் 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "வங்கி நிறுவுவதற்கான அரசியல் ஒப்புதல்" தான் எஸ்சிஓ உச்சிமாநாட்டின் முக்கிய முடிவாகும் என்றும் சீனாவின் முன்மொழிவு இறுதியாக நிஜமாகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த வங்கி யூரேசியாவில் பல்தரப்பு ஒத்துழைப்புக்கு புதிய தளம் அமைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனத் தெரிவித்தார். "இது உறுப்பு நாடுகள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியமும் கொண்டாடுவதற்கான காரணம்" என்றும் குறிப்பிட்டார்.

சீன அரசு ஊடகமான சீனா நியூஸ் சர்வீஸ் (சிஎன்எஸ்) தனது செய்தியில், எஸ்சிஓ வங்கி முதலில் சீனாவால் 2010-இல் முன்மொழியப்பட்டது என்றும் 2025-இல் தான் அதனை நிறுவுவதற்கான பணி வேகம் எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 2025-இல் எஸ்சிஓ நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்" மற்றும் ஜூலையில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில் ஏற்பட்ட "கொள்கையளவு ஒப்புதல்" உள்ளிட்டவை அடங்கும்.

இயற்கை வளங்கள் நிறைந்துள்ள எஸ்சிஓ நாடுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள கஷ்டங்களே இந்த வங்கிக்கான தேவையை உணர்த்துவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வங்கி உறுப்பு நாடுகளிடையே பிராந்திய அளவில் பொருளாதார ஒத்துழைப்பையும் வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசு செய்தித்தாளான தி பேப்பர், எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் இரும்பு தூது நிறைந்திருக்கும் ரஷ்யா மற்றும் கசகஸ்தானில் "ஒளிமயமான வளர்ச்சி வாய்ப்புகளை" வழங்குகிறது. ஆனால் இந்த நாடுகளிள் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது

இத்தகைய நிதி நெருக்கடி தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் உள்ளது. இந்த நாடுகளில் நீர்மின் திட்டம், கனிம வளங்கள் மற்றும் எரிபொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வளர்ச்சி இலக்குகளை அடைய பெரிய அளவிலான நிதியுதவி தேவைப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த நாளிதழான பெய்ஜிங் நியூஸ் செப்டம்பர் 2-ஆம் தேதியன்று வெளியான தலையங்கத்தில், புதிய வங்கி உறுப்பு நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த உள்கட்டமைப்பு திட்டங்களான எரிபொருள், போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பிராந்திய வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும். அதே வேளையில் எஸ்சிஓ நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கான நடைமுறையும் துரிதப்படுத்தப்படும்.

அதே தலையங்கத்தில், இந்த வங்கி சீனா மற்றும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும், இதன்மூலம் யூரேசியாவில் சீனப் பட்டுப்பாதையின் இருப்பை வலுப்படுத்தும்.

பிரிக்ஸின் புதிய வளர்ச்சி வங்கியிலிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்கு ஏதுவாக இந்த வங்கி மத்திய ஆசியாவில் இடம்பெற வேண்டும் என்றும் பெரிய அளவிலான எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மூலதனம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மீது தற்போது கவனம் ஏன்?

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, எஸ்சிஓ, பிரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

சீன அரசின் நிதிசார் செய்தித்தாளான செக்யூரிடீஸ் டைம்ஸ், எஸ்சிஓ வளர்ச்சி வங்கி திட்டத்தை சீனா 2010-இல் முன்மொழிந்திருந்தாலும் அப்போதே சில உறுப்பு நாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஏனென்றால் அப்போதைக்கு அமைப்பின் முக்கியத்துவமானது பிராந்திய பாதுகாப்பை ஊக்குவிப்பதிலே இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் நாளிதழான சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள் காட்டி குவான்சாவில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ரஷ்யா முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு மாறாக தனது யூரேசியன் வளர்ச்சி வங்கியை விரிவுபடுத்த விரும்பியது.

எஸ்சிஓ-வுக்கு உள்ளுமே சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களில் வேறுபாடு உள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது. சீனா மத்திய ஆசியாவில் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து எரிபொருள் இறக்குமதியைப் பன்மைப்படுத்த விரும்புகிறது, ஆனால் ரஷ்யா இந்தப் பிராந்தியத்தில் தனது பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புகிறது.

ஆனால் யுக்ரேன் போரால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் ரஷ்யாவை 'கிழக்கு நோக்கி சாயும் (leaning towards the east)' கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்துள்ளது. இதனால் தான் ரஷ்யா எஸ்சிஓ வங்கி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக ஒரு சீன வல்லுநரை மேற்கோள்காட்டி சௌத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதார தடைகள் 'நிதி ஆயுதங்களின்' வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது. அதோடு மேற்கத்திய நிதியமைப்பை அதிகம் சார்ந்திருப்பதன் ஆபத்தையும் உலகிற்கு உணர்த்தியுள்ளது என பெய்ஜிங் நியூஸ் தலையங்கம் தெரிவித்துள்ளது.

"நிதியமைப்பில் மேற்கத்திய ஆதிக்கத்தைக்" கட்டுப்படுத்த தேவையான புதிய நிதி கட்டமைப்பிற்கான தேவையும் மேற்கத்திய தடைகளை தவிர்ப்பதற்கான அவசியமும் அந்த தலையங்கத்தில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

உலகளாவிய நிதிசார் பல்முனைப் போட்டியை ஊக்குவிப்பதற்கு ஒரு வழியாக எஸ்சிஓ வங்கியை வளர்க்க வேண்டும் எனவும் அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ அமைப்பு இந்த வங்கி மூலம் பாதுகாப்பு என்பதோடு மட்டும் தங்களை நிறுத்திக் கொள்ளாது பொருளாதார ஒத்துழைப்பு என்கிற களத்தில் வளரலாம் என பெய்ஜிங் நியூஸ் தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் எஸ்சிஓவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும்.

இந்த வங்கி மேற்கத்திய நாணயமான டாலர் மற்றும் யூரோ மீதான சார்பைக் குறைக்கும் எனவும் அந்த தலையங்கத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் யுவானின் செல்வாக்கு அதிகரிக்கவும் உலகளாவிய அமைப்பை பல்முனை திசையை நோக்கி நகர்த்தவும் உதவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

சீன அரசு சார் நிறுவனமான சைனீஸ் அகாடமி ஆஃப் சோசியல் சயின்ஸைச் சேர்ந்த லீ ரூய்க்ஸி தற்போதைய சர்வதேச சூழல் புதிய பல்தரப்பு வங்கியை உருவாக்குவதற்கு முன்பு எப்போதையும்விட சாதகமான நேரமாக இருப்பதாகக் கூறுகிறார் என குவான்சா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, எஸ்சிஓ, பிரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மற்ற உறுப்பு நாடுகளின் நிலை என்ன?

இரான் பல மேற்கத்திய பொருளாதார தடைகளைச் சந்தித்து வருகிறது. எஸ்சிஓ வளர்ச்சி வங்கியின் உருவாக்கத்தை ஆதரிக்கும் நாடாக இரானின் பெயரை சீன ஊடகங்கள் பரவலாகப் பதிவு செய்துள்ளன.

ஜூன் மாதம் சீனாவில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட இரானின் மத்திய வங்கி ஆளுநர் முகமது-ரேசா ஃபர்சின், எஸ்சிஓ வங்கி மற்றும் அது சார்ந்த நாணய முறை என்பது நீண்டகாலமாக உள்ள ஒருசார் அமைப்பிலிருந்து வெளி வர உதவும் எனத் தெரிவித்ததாக குவான்சா செய்தி குறிப்பிடுகிறது.

இரானிய அரசியல் ஆய்வாளரான பேமன் சலேஹி சௌத் சீனா மார்னிங் போஸ்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், எஸ்சிஓவின் நிதியமைப்பில் இரான் சேர்க்கப்பட்டது புதிய பொருளாதார தடைகளைச் சமாளிக்க அந்நாட்டிற்கு அவசியமாகிறது என்றுள்ளார். எஸ்சிஓ வங்கி இரானுக்கு ஒரு 'அரசியல் கவசமாக' மாறலாம், பொருளாதார தடைகள் என்பது ஒருநாட்டை பணியச் செய்வதற்கான உத்தரவாதம் கிடையாது என்பதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசிய எஸ்சிஓ உறுப்பு நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் யுஸ்பெகிஸ்தானும் புதிய வங்கிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குவான்சா செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய அரசு ஊடகமான ஸ்புட்னிக்கின் சீனப் பிரிவுக்கு மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மஸ்லோவ் அலெக்ஸி அலெக்ஸாண்டோவிச் அளித்த நேர்காணலில், எஸ்சிஓ வங்கி என்பது முதலீட்டு திட்டங்களுக்காகவும் பாதுகாப்பான நாணய வர்த்தக முறைக்கும் அவசியமாகிறது எனத் தெரிவித்துள்ளார்.

எஸ்சிஓ வங்கி பல்வேறு நாடுகளுக்கு இந்த அமைப்பை கவர்ச்சிகரமானதாக்கும் என்கிறார். இனி வரக்கூடிய நாட்களில் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கூட இந்த அமைப்பில் சேர்க்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

"பெரிய உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் அதிக செலவுகளால் திணறி வரும் ஆப்ரிக்காவிற்கு எஸ்சிஓ வங்கி, மற்ற வங்கிகளின் விதிகளுக்குக் கட்டுப்படாத புதிய நிதிமாடலை வழங்குகிறது" என நெய்ரோபியைச் சேர்ந்த சௌத்-சௌத் டயலாக் அமைப்பின் இணை இயக்குநரான ஸ்டீபன் எண்டேக்வா சீனா டெய்லியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, எஸ்சிஓ, பிரிக்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எஸ்சிஓ வங்கிக்கு இந்தியா ஆட்சேபனை தெரிவிக்கலாம் என சீன ஊடகங்கள் கூறுகின்றன.

அதே போல் இந்தியாவின் சாத்தியமான ஆட்சேபனை பற்றியும் சௌத் சீனா மார்னிங் போஸ்டை மேற்கோள்காட்டி குவான்சா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் ஒன்று, இந்தியாவின் பல அணிசார் ராஜதந்திரம் என்பது 'சீனாவின் பிராந்திய நோக்கங்களைச் சமாளிக்கும் அதே வேளையில், அந்நாட்டை ஒரு முக்கியமான வர்த்தக கூட்டாளியாக வைத்திருப்பது என்பதை நோக்கியது எனத் தெரிவிப்பதாக குவான்சா செய்தி கூறுகிறது.

அதே போல், அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்வினையையும் புறந்தள்ளிவிட முடியாது என குவான்சா செய்தி கூறுகிறது. முன்னதாக பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்கும் திட்டங்களை கைவிடவில்லை என்றால் 100 சதவிகிதம் வரிகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்ததும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gkdyj0n12o

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago
வேட்புமனு தாக்கல் செய்யவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ கோடிகளை கொடுத்தே பெறுகிறார்கள். அவர்கள் நிலை என்னாவது?

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago
அண்ணை, சலுகைகளுக்காக இல்லாமல் சேவை செய்யக்கூடியவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் வருவார்கள் என எண்ணுகிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago
2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 12:38 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மேலும் அவர் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரிவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224980

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 days 5 hours ago

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 12:38 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தபாலகமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய, தேசிய வரி வருமான திணைக்களம், மதுவரி திணைக்களம், சுங்க திணைக்களம் உள்ளிட்டவை தமக்கான இலக்கிற்கு அப்பால் இலாபமீட்டியுள்ளன. மறுபுறம் அநாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றோம். இவற்றின் ஊடாக வரவு – செலவு திட்டத்தின் இடைவெளியை படிப்படியாக சமநிலைப்படுத்த முயற்சிக்கின்றோம்.

உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சியைக் காண்பிக்க தவறியுள்ள போதிலும், இலங்கை அதனை செய்து காண்பித்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வங்குரோத்தடைந்திருந்த நாடு இன்று இந்நிலைமையை அடைந்துள்ளது. வரிவருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமையவே, கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் இதற்கு வாக்களித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. மாறாக இந்த விடயத்தை மறைப்பதற்காக மறுநாள் சபையில் வேறொரு விடயத்துக்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அதேபோன்று வெகுவிரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கான சட்டமும் நிறைவேற்றப்படும். அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது என  சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224980

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!

2 days 7 hours ago
ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு ரேட் பில் மிகவும் குறைவாக இருக்கும் வெளிநாடுகளில் இருந்து போவபவர்களுக்கு கண்ட கண்ட ஸ்கானிங் எல்லாம் வலு கட்டா யாமாக செய்வித்து குறைந்தது 5ல் இருந்து பத்து லட்சத்துக்கு பில் வைக்காமல் வெளியில் விடமாட்டார்கள் பகல் கொள்ளைகாரர்கள் . அதே போல் பிரைவேட் மெடிக்கல் சென்ரர் வைத்து இருப்பவர்களும் யாழில் உள்ள மூன்று தனியார் வைத்திய சாலைகளின் அடிமைகளே பருத்திதுறையில் உள்ள அந்த கால வயதான டாக்டரும் நெல்லியடியில் உள்ள தனியார் வைத்திய சாலையின் சிற்றடிமை ஆகினது காலம் செய்த கோலம் .

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 days 7 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 25 C பகுதி: 25 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] இலங்கையில் கண்டு எடுக்கப் பட்ட கல்வெட்டுகள், சிங்களம் என்பது கி மு 500 ஆண்டில் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் இருந்து வந்த குடியேறிகளால் கொண்டு வரப் பட்ட பிராகிருதத்தில் இருந்து மெல்ல மெல்ல வளர்ந்த ஒரு மொழியாகும் என்பதை உறுதிப் படுத்துகிறது. இது இந்திய - ஆரிய மொழிகளில் இருந்து தனிமை படுத்தப் பட்டதால், அதன் வளர்ச்சி ஓரளவு சுயாதீனமாக இருந்தது எனலாம். திராவிட மொழிகளில் மூத்தது தமிழ் என்பதாலும், சிங்கள இனம் என்ற ஒன்றின் தோற்றம் ஆரம்பத்தில் இருந்தே தமிழுடன் தலைமுறைகளாக இணைந்திருந்ததாலும், சிங்கள மொழியின் வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு பெற்று, சிங்கள மொழியின் ஒலியியல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியங்களில் தமிழின் தாக்கத்தை இன்று காணக் கூடியதாக உள்ளது. [Stone inscriptions suggest that Sinhala developed from the Prakrits, brought to Sri Lanka by settlers from Northwestern and Northeastern India in the 5th century BCE. Because of its isolation from the other Indo-Aryan languages of mainland India, Sinhala’s development was somewhat independent. Since Tamil, the oldest of the Dravidian languages, and Sinhala have coexisted for generations, it strongly influenced Sinhala’s phonology, grammar, and vocabulary.] கி மு 300 ஆம் அல்லது கி மு 200 ஆம் ஆண்டில் இருந்து சிங்கள பிரகிருத் அல்லது சிங்கள மொழிக்கு முன்னைய கல்வெட்டுக்கள் [Sinhalese Prakrit inscriptions] காணப்பட்டாலும், சிங்கள கல் வெட்டுக்கள் 6ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே, அதிகமாக 9ஆம் நுற்றாண்டிற்குப் பின்பே தான் காணப்படுகின்றன. தொடக்கத்தில் இரண்டு மூன்று வரிகளில் நன்கொடைகளைப் பற்றிய விபரங்களை தந்தன, ஆனால் 10ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கூடுதல் விளக்கமுள்ளதாக அமைந்ததாக காணப்படுகிறது [At the beginning the inscriptions had two or three short lines containing the information about donations made to bhikkhus. After the 10th century A.C these have become more descriptive because they contained appreciations made for some kings]. தமிழ் மொழியின் செல்வாக்கு இலங்கையில் பரந்து பட்டு இருந்தன என்பதற்கு தமிழ் கல்வெட்டுக்கள் சான்று பகிர்கின்றன. உதாரணமாக, காலி கல்வெட்டு, பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு, அனுராதபுரத்தில் உள்ள அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு, [இந்த மூன்று கல்வெட்டு படங்களும் இணைக்கப்பட்டுள்ளன] கேகாலை மாவட்டத்தில் உள்ள கோட்டகமைக் கல்வெட்டு போன்றவை சான்றாகும். இந்த கல்வெட்டுக்கள் எல்லாம் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வெளியே, இலங்கையின் வெவ்வேறு திக்குகளில் கண்டு எடுக்கப் பட்டவையும் ஆகும். காலி கல்வெட்டு என்பது 1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும். பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு என்பது இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது. அதேபோல, அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது. கோட்டகமைக் கல்வெட்டு என்பது, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தக் கல்வெட்டு, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்ச அரசன் ஒருவன் கம்பளை அரசின் மீதான போரொன்றில் பெற்ற வெற்றியைக் குறிக்க எழுதப்பட்டது ஆகும். இக்கல்வெட்டு நான்கு வரிகளைக் கொண்ட ஒரு பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. இங்கே சொற்களிடையே இடைவெளி இல்லாமலும் அடிகள் முறையாகப் பிரிக்கப்படாமலும் உள்ளது. ஆய்வாளர்கள் இதைப் பின்வருமாறு ஒழுங்கு படுத்தியுள்ளர்கள். "சேது கங்கணம் வேற்கண்ணினையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம்பாரித்தார் பொங்கொலிநீர் சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள்மடமாதர் தாம்" இதன் கருத்து "சிங்கையாரியனுக்கு அடங்காத சிங்களத் தலைவர்களுடைய மனைவிமார் கண்ணீர் விட்டுத் தமது நெற்றியில் இருந்த பொட்டை அழித்தனர்" என்பதாகும். இதில் இன்னும் ஒன்றையும் கவனிக்க, சிங்களப் பெண்கள் பொட்டு வைப்பதையும், கணவன் இறக்கும் பொழுது அதை அழிப்பாதையும் கூட காண்கிறோம். படம் 01: [1755 இல் பூர்த்தி செய்யப்பட்ட காலியில் உள்ள டச்சு சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தில் பதியப் பட்ட கல் ஒன்றில் காணப்படும் தமிழ் எழுத்துக்கள். இது கிறித்துவத்திற்கு மாற்றப் பட்ட முதல் தமிழனின் கல்லறை வாசகமாகும் / Dutch Reformed Church – Galle / The current Dutch Reformed Church was completed in 1755 and stands at the highest point of the Galle Fort./ One of the most unusual stones in the church was this one, written in Tamil. Unfortunately, it is quite worn and hard to make out, / Apparently this is the grave of the first Tamil convert to Christianity] படம் 02: [பொலநறுவை வேலைக்காரர் கல்வெட்டு இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையில் உள்ள தளதாய்ப் பெரும்பள்ளிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு இரண்டு மொழிகளில் உள்ளது. ஐந்து வரிகளில் அமைந்த மேற்பகுதி சமசுக்கிருத மொழியில் உள்ளன. அதற்குக் கீழ் 44 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு வேலைக்காரரினால் வெட்டுவிக்கப்பட்டது என்பது கல்வெட்டிலுள்ள குறிப்புக்களில் இருந்து தெரியவருகிறது / In the 12th Century CE, the Velakkaras set up a Tamil inscription were they promised to protect the Relic of the tooth of the Buddha at Polonnaruwa ] படம் 03: [அபயகிரித் தமிழ்க் கல்வெட்டு என்பது அனுராதபுரத்தில் உள்ள பழங்காலத்து அபயகிரி விகாரையில் காணப்படும் ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். அபயகிரிச் சைத்தியத்தின் [பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்] மேடையொன்றின் விளிம்புப் பகுதியை அண்டிக் காணப்பட்ட கற்பாளம் ஒன்றில் இக்கல்வெட்டு உள்ளது.] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 26 தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31293597796955459/?

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 days 7 hours ago
உண்மைதான் அவருக்கு தென்னகத்து ஜேமஸ்போண்ட் என்ற பட்டமும் இருக்கிறது. இவரது படங்களில் நல்ல பாடல்களும் இருக்கிறது. குறிப்பாக, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி நீ எங்கே என் நினைவுகள் அங்கே அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் தோழ்வி நிலையென நினைத்தால் செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்… என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை - நோயாளிகள் சிரமம்!

2 days 8 hours ago
தன்னையோ அல்லது தன்னோடு பணி புரியும் சக பணியாளர்களையோ எந்த விதத்திலும் கேள்வி கேட்க கூடாது என்று சொல்லும் வைத்தியர்கள் இருக்கும் மட்டும் இப்படி குறை , நிறைகள் இருக்கும்.வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமுர்த்தியவர்கள் கடந்த சில கிழமைகளுக்கு முன் வைத்தியர் அர்ச்சனாவோடு முரண்படும் போது ஒரு இடத்தில் சொல்லியிருந்தார்.மக்கள் தான் பாவங்கள்.