Aggregator

இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு

22 hours 50 minutes ago
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு Published By: Digital Desk 2 22 Dec, 2025 | 09:50 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது. அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/234059

இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு

22 hours 50 minutes ago

இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு

Published By: Digital Desk 2

22 Dec, 2025 | 09:50 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது.

அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/234059

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

22 hours 56 minutes ago
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்! Dec 22, 2025 - 10:14 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmjgo8o0o02zno29n5j348tat

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

22 hours 56 minutes ago

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

Dec 22, 2025 - 10:14 AM

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. 

கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. 

குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmjgo8o0o02zno29n5j348tat

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

23 hours 3 minutes ago
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு Dec 22, 2025 - 08:01 AM இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmjgjihvc02zho29nd2entzzf

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

23 hours 3 minutes ago

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

Dec 22, 2025 - 08:01 AM

இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு

இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmjgjihvc02zho29nd2entzzf

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

23 hours 16 minutes ago
காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை Dec 22, 2025 - 12:00 PM நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு தற்போது 150 முதல் 200 வரை உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார். கடந்த சில நாட்களாக காற்றின் தரம் வீழ்ச்சியடைந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (sensitive groups) பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும், சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவபெயர்ச்சி காலநிலை தீவிரமடைந்துள்ளமை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கலாநிதி அஜித் குணவர்தன சுட்டிக்காட்டினார். அத்துடன், மனித செயற்பாடுகளும் காற்றின் தரம் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். விசேடமாக தீ வைப்புக்கள், வாகன புகை வெளியேற்றம் போன்றவை இதற்கு காரணமாக அமைவதுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபை நாட்டின் வளிமண்டலத் தரச் சுட்டி அல்லது வளிமண்டலத்தின் தரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjgs18rk02zqo29n9cxb3trk

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்

23 hours 21 minutes ago
இது கடைசியாக இந்த வருடத்தில் A/L சிறப்பு சித்தியடைந்தவர்களுக்கு(3A) மட்டும் என்று தான் நினைக்கிறேன் அக்கா.

வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.

23 hours 42 minutes ago
பிரபாகரன் இங்கு பேசுபொருள் அல்ல. திறமையான ராப் பாடகர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் வட இந்திய சங்கித்தனத்துக்கு அடிமையாகாமல் தனது இலங்கைத் தமிழர் என்ற தனித்துவத்துடன் மிளிரவேண்டும் என்பதையே @goshan_che @நியாயம் ஆகிய உறவுகளும் இங்கு சுட்டிக்காட்டினர். 1970 களின் ஆரம்பத்தில் இவர் போன்ற பல ஈழத்தின் பொப்பிசை கலைஞர்கள் இவ்வாறே தனித்துவத்துடன் செயற்பட்டனர். அவர்களை போல இவரும் மிளிரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி, தற்போதைய நிலையில் பிரபாகரனை போற்றுபவர்களில் பல ரகம் உண்டு. அவர்களின் எவரும் பிரபாகரன் விரும்பியதை போற்றமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அக்கறையும் இல்லை. தமது அரசியல் மதவெறி அஜண்டாவுக்காக தொட்டுக்க ஊறுகாய் போல் பிரபாகரனை போற்றுவோர் சிலர். பிரபாகரனை முன்னுறுத்தி பல கோடிகளை சுருட்டிய (அவர் வந்தால் கணக்கு காட்டுவோம் கோஷ்டி) மோசடிக்கும்பலும் அவர் வரமாட்டார் என்ற துணிவில், பிரபாகரனை போற்றுகிறார்கள். தமது சுய அரசியல் நலத்துக்காக, இலங்கையில் தமிழர் இருப்பை பலவீனப்படுத்தம், அழிவு அரசியலை செய்பவர்களும் அவர்கள் அப்படி செய்தாலும் பரவாயில்லை பிரபாகரனைப் போற்றினால் அது மட்டும் எமக்கு போதும் என்ற மனநிலை உடையவர்களும் பிரபாகரனைப் போற்றுகிறார்கள். அப்படியானவர்களை வைத்து தந்திரமாக பிரபாகரனை ஒரு ட்ரேட் மார்க்காக வியாபாரம் செய்பவர்களும், பணம் பிடுங்குபவர்களும் பிரபாகரனை போற்றுகிறார்கள். இதில் எந்த வகையறா உங்களுக்கு பிடிக்கும் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

23 hours 52 minutes ago
பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி! தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக ஈடுபட்டு வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் ஐவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்நிலையில் , போராட்ட களத்தில் வைத்து , பொலிஸாரினால் தாக்கப்பட்ட வேலன் சுவாமி நேற்றைய தினம் பிணையில் வெளி வந்து தனது ஆதீனத்திற்கு திரும்பிய நிலையில் சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் , மத தலைவரான வேலன் சுவாமி மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு , அவரை பொலிஸ் வாகனத்தினுள் தூக்கி வீசிய சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருவதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரி வருகின்றனர். https://athavannews.com/2025/1456948

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

23 hours 52 minutes ago
இது ஒரு புத்திசாலித்தனமான ஆக்கிரமிப்பு, கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி ஒரு நாட்டினை இலகுவாக ஆக்கிரமிக்க முடிகிறதல்லவா? இங்கும் நிலமை இதே நிலைதான், இதற்கு பெருமளவிலான காரணம் தவறான அரசியல்வாதிகள் என கருதுகிறேன். நான் இங்கு அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒருவர் கூறினார் இங்கு அவுஸ்ரேலியாவில் மற்ற நாடுகளை போல படிக்காத எம்மவர்கள் இருக்கும் நாடல்ல, இங்கு உள்ளவர்கள் படித்தவர்கள் என கூறினார் (நான் படிக்காத நபர் என தெரிந்தே🤣) இவர்கள் பெரும்பாலும் வலது சாரி லிபரல் கட்சியினை ஆதரிப்பவர்கள், இலங்கையிலிருந்து படகு என அகதிகளுக்கெதிரான கொள்கைகளை உடையவர்களை ஆதரிப்பார்கள் (யாழ்பாண மோட்டுக்குடி மனநிலை). இந்த வலதுசாரி கட்சியின் ஆட்சிக்காலத்தில் பல உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை நிறுவனங்களினை பாதுகாப்பதாக கூறி இல்லாது செய்தார்கள், அதனை உழைக்கும் வர்க்கத்தில் இருந்த இவர்க்ளே ஆதரித்து இதனால்தான் நிறுவனங்கள் மூடப்படுகின்றன என கூறுவார்கள், அத்துடன் அவர்கள் ஆட்சியில் இருந்த 3 தவணைகளில் ஊதிய அதிகரிபில்லாமல் போனது. அது ஒரு பொருளாதார பிரச்சினையாக கண்ணுக்குதெரியாமல் உருவெடுக்கத்தொடங்கியது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி பல மடங்கு மிக குறைவாக வளர்ச்சியேற்பட்டது, அது உற்பத்தி துறையினையும் பொருளாதார தூண்டலையும் சுருங்க வைத்தது, ஆரம்பத்தில் அதிகரித்த இலாபம் பெற்ற நிறுவனங்களின் பொருள்களுக்கான உள்ளூர் சந்தைகளை பெருமளவில் இழந்தது. இது சமூக மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பினை உருவாக்கி விட்டுள்ளது, இங்கு தற்போது உள்ள இளைய தலைமுறையால் வீடுகளை வாங்க முடியாத நிலை போன்ற நீண்ட கால சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. தற்போதும் குடிவரவினை நிறுத்து என கூச்சல் போடுகிறார்கள், ஒரு கதையில் ஒரு கன்றின் தலை பானைக்குள் சிக்கி விடும் கன்றிடமிருந்து பானையினை எடுப்பதற்கு கன்றின் தலையினை வெட்ட கூறுவார், பின்னர் கன்றின் தலையினை பானையிலிருந்து எடுப்பதற்கு பானையினை உடைக்க சொல்வார்; அவ்வாறான வலது சாரி அரசியல்வாதிகளை ஆதரிக்கும் எம்மவர்கள்😁.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

23 hours 54 minutes ago
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு! இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார். விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர். மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர். சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார். https://athavannews.com/2025/1456963

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

23 hours 54 minutes ago

Indonesia.jpg?resize=750%2C375&ssl=1

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார்.

தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார்.

விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர். 

மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர்.

சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார்.

https://athavannews.com/2025/1456963

நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

23 hours 56 minutes ago
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பாடசாலை மாணவர்கள் மீட்பு! நாட்டின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 130 மாணவர்களை நைஜீரிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவின் மிக மோசமான கூட்டுக் கடத்தல்களில் ஒன்றிற்குப் பின்னர், அண்மைய மீட்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று நாட்டின் கூட்டாட்சி அரசாங்கம் விவரித்துள்ளது. நவம்பர் 21 அன்று பெப்ரவரியில் உள்ள செயிண்ட் மேரி கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஊழியர்களும் கடத்தப்பட்டனர். இந்த மாத தொடக்கத்தில் சுமார் 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர். அண்மைய விடுவிப்புடன், ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 230 ஆக உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் பயோ ஒனனுகா ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தினார். எனினும், கடத்தப்பட்டதிலிருந்து, எத்தனை பேர் அழைத்துச் செல்லப்பட்டனர், எத்தனை பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அரசாங்கம் அண்மைய மீட்பினை எவ்வாறு மேற்கொண்டது- அல்லது ஏதேனும் மீட்புக்கு ஏதெனும் பணம் கொடுக்கப்பட்டதா என்பது முறையாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை. https://athavannews.com/2025/1456945

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

1 day ago
வழிபாட்டின் காரணம் ,எங்கே புத்த சிலை வைக்க முடியும் என ஆராச்சி செய்யத்தான்....பிற்கு தொல்லியல் தினைக்களத்திற்கு கடித்ம் எழுதுவினம் அது பெளத்த விகாரை இருந்த இடம் ஆராச்சி செய்ய சொல்லி..

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

1 day ago
இல்லை! நான் நினைக்கிறேன், இலங்கை அரசு செய்த சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகள், இன்னொரு 3 ஆம் நாடு தலையிடும் பட்சத்தில் இலங்கை நிலமை மோசமாகும், பர்மாவிற்கெதிரான கம்பியாவின் சட்ட நடவடிக்கை போன்றது. அவர்கள் ஆப்பிழுத்த குரங்குகள். தமிழர் பிரச்சினை இப்படி ஒரு 3ஆம் நாட்டின் உதவியுடன் இது வரை நகரவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் (ஒரு சிறிய நாட்டின் உதவி கிடைத்தாலே போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன்).

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

1 day ago
தமிழீழத்தில் பாய் வத்தல் 1958- 03- 14 வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது