Aggregator

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!

1 day 11 hours ago
தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! 4 Jul 2025, 4:17 PM தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு காவல் நிலைய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1. பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்: வாழ்வாதாரங்களாக விளங்கும் விவசாய நிலங்கள், மக்கள் வாழும் வீடுகள், இயற்கை நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருடக் கணக்கில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டியது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. ஆனால், விவசாயிகளுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு என்பது உலகறிந்த உண்மை. ஆனால், பா.ஜ.க.வின் மறைமுக உறவுக்காரர்களான கபட நாடகத் தி.மு.க.வும் விவசாயிகளுக்கு எதிரானதுதான் என்பதைப் பரந்தூர் விமான நிலைய விவகாரம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகமாடிக்கொண்டே விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்து தருவதில் இருந்து, இதோ இப்போது விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது வரை வந்துவிட்டது மாநில அரசு. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு ஆகும். விவசாயிகள் பக்கம் அவர்களின் தோழனாகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் சமரசமின்றி நிற்கும். இந்த விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் தி.மு.க. அரசின் இரட்டை வேடப் போக்கை, தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. தீர்மானம் 2. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாதச் சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை: ஒன்றிய அளவில், மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தி, அவர்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய, பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. கொள்கைவழி நடப்பதில் உறுதியாக இருக்கும் இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். எனவே, சுயநல அரசியல் லாபங்களுக்காகப் பா.ஜ.க.வுடன் கூடிக் குழைந்து கூட்டணியில் சேர, நம் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ இல்லை. கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரானதாகத்தான் இருக்கும் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் இச்செயற்குழு வாயிலாக உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்மானம் 3. விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் அதிகார மீறலைக் கண்டிக்கிறோம்! மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட மேல்மாவில் 11 கிராமங்கள் மற்றும் 2800 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து மேற்கொள்ள முயலும் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாய நிலங்களைப் பாழாக்கும் கெடுநோக்குக் கொண்ட இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தது, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அரசே தவறான தகவல்களை வெளியிடுவது, கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மக்களைப் பங்கேற்க விடாமல் தடுத்தது, ஜனநாயக் வழியில் போராடும் விவசாயிகள் மீது வன்முறையை ஏவியது, எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்த விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவியது போன்ற அக்கிரமங்களை இங்குதான் காண்கிறோம். முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிய விவசாயிகளைக்கூட இதுவரை முதலமைச்சர் சந்திக்கவில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது, விவசாயிகளை எந்த அளவிற்குத் தவறாகச் சித்திரித்து, அவர்களின் போராட்டத்திற்குக் காது கொடுக்காமல் ஒன்றிய அரசு இருந்ததோ, அதே பாணியை, பா.ஜ.க.வைப் பின்பற்றும் இங்குள்ள மாநில அரசும் செய்து வருகிறது. போராடும் மக்களை, விவரம் தெரியாமல் போராடுகிறார்கள், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க, தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்’ என்று முதலமைச்சரின் செய்திக் குறிப்பு, அவர்களைக் குற்றவாளியாகச் சித்திரித்தது. எனவே, இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்திற்கு எதிரான அரசு அதிகார மீறலின் உச்சபட்சமாக இருக்கும் மேல்மா சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 4. நெல் கொள்முதல் செய்வதில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. காலநிலை மாற்றம், மோசமான சூழலியல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சவால்களை எல்லாம் கடந்து விவசாயிகள் நெல்லை உற்பத்தி செய்து வருகிறார்கள். ஆனால், அந்த நெல்லை உரிய விதத்தில் கொள்முதல் செய்யவோ, கொள்முதல் செய்யப்பட்டவற்றை முறையான தானியக் கிடங்குகளில் சேமித்து வைக்கவோ இதுவரை நல்ல கட்டமைப்பை வெற்று விளம்பர மாடல் திமுக அரசு ஏற்படுத்தவில்லை. சிறிய மழை வந்தாலும் பெரும் பாதிப்புகளுக்கு நெல் மூட்டைகள் இலக்காவதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கிடையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (National Co-Operative Consumer’s Federation of India Private Limited) என்ற பெயரில் தனியாரை நெல் கொள்முதலுக்குப் புகுத்துவது, அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒருசிலர் தீர்மானிக்கும்படி கேள்விக்கு உள்ளாக்குவது போன்ற மோசமான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மோசடி செய்யும் தனியார் நிறுவனங்களை நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்தச் செயற்குழு வற்புறுத்துகிறது. தீர்மானம் 5. பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை தேவை தர்மபுரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கண்டுள்ள கூடுதல் விளைச்சலின் விளைவாக, தமிழ்நாட்டில் சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் நம் விவசாயிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள், மிகச் சொற்ப விலைக்குக் கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ளன. அண்டை மாநிலங்கள் நம் மாம்பழக் கொள்முதலுக்குத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், நம் விவசாயிகளின் வாழ்வைக் காக்க வேண்டிய பொறுப்பு, நமது அரசுக்கே உள்ளது. ‘மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்பன போன்றவற்றை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. விற்பனைக் காலத்தை எதிர்பார்த்து, இன்று பெரும் துயரில் இருக்கும் நம் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீட்டை முன்னின்று வழங்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 6. மலைக்கோட்டை மாநகரில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்: தமிழ்நாட்டின் மத்திய மாநகரான திருச்சி, மணல் கொள்ளையாலும், அது தொடர்பான முறைகேடுகளாலும் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றுப்படுகை முழுவதும் இடைவிடாது நடக்கும் மணல் கொள்ளையால், அந்த ஆற்றுப் படுகையில் தீவிர மணல் அரிப்பு ஏற்பட்டு, நீர் வளத்திற்கும் சூழலியல் கேட்டிற்கும் காரணமாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே, கொள்ளிடம் ஆற்றுப் படுகையிலிருந்த முக்கியப் பாலங்கள் பாதிப்புக்குள்ளாகி, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன. இப்பகுதியில் நடக்கும் தொடர்ச்சியான இயற்கைவளச் சுரண்டலை அரசும் உள்ளூர் நிர்வாகமும், தங்கள் ஆதாயத்திற்காகத் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது மிகவும் கண்டனத்திற்கு உரியது. மேலும், மணல் கொள்ளைக்கு எதிராக, நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பான அரசு அதிகாரிகள் கொலை மிரட்டலுக்கும் கொலை முயற்சிக்கும் ஆளாகும் போக்கு தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே கண்டித்து வருகின்றன. எனவே, திருச்சி மண்டலத்தின் வளத்தையும் வரலாற்றுச் செழிப்பையும், குறுகிய நலனுக்காக அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசை இந்தச் செயற்குழு கண்டிப்பதோடு, அனைத்து முறைகேடுகளையும் உடனே தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. தீர்மானம் 7. என்.எல்.சி.-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களிடமிருந்து நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்தப்படும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மும்முடிச்சோழகன் கிராமத்தினர் 2002ஆம் ஆண்டு தங்கள் நிலத்தைக் கொடுத்தபோதிலும், அதற்கு இழப்பீடும் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை. வாழ்வாதாரத்துக்கும் எந்த உதவியும் செய்யப்படவில்லை. 2007ஆம் ஆண்டு வளையமாதேவி, கரிவெட்டி, காத்தளை ஆகிய கிராமங்களில் குடியிருந்தவர்களுக்குப் பரிவுத் தொகை (Ex-Gratia Pay- ments) வழங்கியது போலவே, நிலத்தை வழங்கிய மும்முடிச்சோழகன் கிராமத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கரிவெட்டி கிராமத்தில் இன்னமும் இழப்பீடும் வேலையும் வழங்கப்படாமல் இருப்போருக்கு, உரிய இழப்பீட்டுத் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் இழப்பீடாகக் கொடுக்கப்பட்ட மாற்று நிலத்துக்கான பட்டா வழங்கப்படாமல் இருப்போருக்கு காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க வேண்டும் எனவும் இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 8. விசைத்தறித் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றக் கோரித் தீர்மானம்: கோவை, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் விசைத்தறித் தொழிலாளர்கள் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 33 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஊதியம் மறுவரையறை செய்யப்பட்ட போதிலும் அந்த ஊதியம் வழங்கப்படவில்லை. சமீபத்திய போராட்டத்தின் விளைவாகச் சோமனூர் ரகங்களுக்கு 15% ஊதிய உயர்வும் மற்ற ரகங்களுக்கு 10% ஊதிய உயர்வும் வழங்கப்படும் என்றும் விசைத்தறி உரிமையாளர்கள் வாக்குறுதி கொடுத்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாகச் சுமார் 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி உரிமையாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஊதிய உயர்வுக் கோரிக்கையில் தீர்வு காணப்பட வேண்டும். வாக்குறுதி அளிக்கப்பட்ட ஊதிய உயர்வு நடைமுறையில் வருவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் நெசவாளர்களின் கோரிக்கைகளையும் முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் மூலம் காலம் தாழ்த்தாமல் தீர்க்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 9. திண்டுக்கல் மாவட்டத்தில் வாசனைத் திரவிய ஆலை தொடங்க வேண்டும்: திண்டுக்கல் மாவட்டம், மல்லிகை உற்பத்தியில் உயர்ந்து விளங்குகிறது. தினமும் ஐந்து டன் மல்லிகைப் பூக்கள் திண்டுக்கல் பூச் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் மல்லிகைப் பூக்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், அவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வசதி எதுவும் இம்மாவட்டத்தில் இல்லை. எனவே, மல்லிகைப் பூக்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும், வாசனைத் திரவிய ஆலை ஒன்றை நிறுவிடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 10. கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்: தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தாது மணல் எடுப்பதற்காக உரிமம் பெற்ற 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, கதிரியக்கத் தன்மை கொண்ட, அணுசக்திக்குத் தேவையான அரிய கனிமம் உள்ளிட்டவற்றை எடுத்து ஏற்றுமதி செய்தனர். பல லட்சம் கோடி மதிப்பு வாய்ந்த இந்தக் கொள்ளை குறித்து ஊடகங்கள் அம்பலப்படுத்தின. கனிமவளக் கொள்ளை குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடக கவனத்தை ஈர்த்து, விவாதத்துக்கு உள்ளான போதும், நீதிமன்ற கவனத்துக்கு வந்த பின்னரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் கனிம வளக் கொள்ளைப் பிரச்சினையைக் கண்டும் காணாமலும் மெத்தனமாகச் செயல்படும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியாளர்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், கனிம வளக் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 11. ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு: அரசு எந்திரத்தின் அச்சாணியாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைக் கைவிட்டனர். அப்போது, ஆட்சிக்கு வருவதற்காக, ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு மனசாட்சி இல்லாமல் அவர்களைக் கைகழுவி விட்டது. முன்பு ஆட்சியில் இருந்தோருக்கும் இப்போது ஆட்சியில் இருப்போருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இருவருமே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றியவர்கள்தான். ஆட்சித் தலைமையின் குடும்ப நலனை மட்டுமே முக்கியமாகக் கருதும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்குத் தமிழக மக்களின் குடும்ப நலன்களோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப நலன்களோ முக்கியமில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை, லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன் சார்ந்த போராட்டமாகத்தான் தமிழக வெற்றிக் கழகம் பார்க்கிறது. சமீபத்தில் நம் வெற்றித் தலைவரைச் சந்தித்த ஆசிரியர் சங்கத்தினரிடம் நம் வெற்றித் தலைவர் கூறியது போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்துக்குத் த.வெ.க. தனது முழு ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகிறது என்பதைக் கழகத்தின் செயற்குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தீர்மானம் 12. மருத்துவர்களை நம்ப வைத்து ஏமாற்றாமல், கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: கொரோனா போன்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்று ஏற்பட்ட காலங்களில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களுடைய குடும்பத்தைப் பிரிந்து, உயிரை ஒரு பொருட்டாகக் கருதாமல் மக்களைக் காப்பதே தங்களின் தலையாய பணி என அர்ப்பணிப்போடு சேவையாற்றினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்படும் என்றும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, வழக்கம் போல அனைத்துக் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டது போலவே அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டுள்ளார். இந்தியாவிலேயே ஊதியத்திற்காக மருத்துவர்களைத் தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாகத் தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மருத்துவர்களின் பணியிடங்களை அதிகரித்து, அப்பணியிடங்களுக்குப் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்தக் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. உயிர் காக்கும் உன்னத சேவை புரியும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி இந்த ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 13. மீனவர்களின் நீண்ட காலத் துயர் முடிவுக்கு வர வேண்டும்: தமிழக மீனவர்களின் வாழ்வும் தொழிலும் போராட்டத்திலேயே தொடர்வதற்கு எப்போது விடிவு பிறக்கும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் இராமநாதபுரம் மீனவர்களின் 54 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு படகு உரிமையாளருக்கு 1.20 கோடி அபராதமும், மற்றொரு படகோட்டிக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. இதர 12 மீனவர்களுக்குத் தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, நம் மீனவர்களிடம் வரம்பு மீறி நடந்துகொள்ளும் இலங்கை அரசு, தற்போது எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள் என்று கூறி, மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் தமிழக மீனவர்களைச் சிறை வைக்கின்றது. அடிப்படை வாழ்வாதாரம் எப்படிக் குற்றமாகும் என்ற நம் மீனவர்களின் கேள்வி நியாயமானது. மோசமான விதிகளைக் கையாண்டு வரும் இலங்கை அரசின் அடாவடி நடவடிக்கைகளை நிறுத்திட, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, எங்கள் தலைவர் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியபடி, இடைக்காலத் தீர்வாக, இழந்த நம் கச்சத்தீவைக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 14. இருமொழிக் கொள்கை தீர்மானம் : பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே எங்கள் தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை. நம் தமிழக வெற்றிக் கழகமும் அதையே உறுதியாகப் பின்பற்றுகிறது. ஆங்கிலத்தைப் பேசுவோர் அவமானப்படுவார்கள் என்று ஒன்றிய அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் கூறியது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை மீது மறைமுகமாக ஏவப்படும் அஸ்திரம். உலகத் தொடர்பிற்காக ஆங்கிலத்தை இரண்டாவதாக ஏற்கும் தமிழ்நாட்டின் மீது மூன்றாவது மொழியாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் ஏற்காது. அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கையே இனிவரும் நூற்றாண்டுகளிலும் தொடரும். அதை ஒன்றிய பா.ஜ.க. மட்டுமன்றி, வேறு எவராலும் மாற்ற இயலாது என்பதைத் தமிழக வெற்றிக் கழகத்தின் இச்செயற்குழு உறுதிபடத் தெளிவுபடுத்துகிறது. தீர்மானம் 15. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) நடத்துவதன் வாயிலாகச் சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைக்க முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்: தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (Spe- cial Intensive Revision) நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, ஜனநாயகத்திற்கு எதிராக, சிறுபான்மையினர் வாக்குகளைக் குறைத்து, தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இந்தச் சந்தேகம் உண்மையெனில், இந்த நடவடிக்கையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இது போன்ற ஜனநாயக விரோதச் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மேலும் 18 வயது நிறைவடைந்த, தகுதி உள்ள நபர் எவராக இருந்தாலும், வாக்களிக்கும் முழுமையான உரிமையை அவருக்குச் சட்டப்படி வழங்க வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் 16. கீழடியில் தமிழர் நாகரிகத்தை மூடி மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்: 2014ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளத் தொடங்கியது. திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர், அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களைக் கொண்டு, அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தனர். இவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார். இதில் கீழடியில் நிலவிய கலாசாரம், அங்கு விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை உள்ளிட்டவை குறித்தும், 5,765 தொல்லியல் பொருட்கள் பற்றியும் 982 பக்கம் கொண்ட அறிக்கையில் தெளிவாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்றி கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் ஆகியும் கீழடி அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தியது. இந்தச் சூழலில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை (ஜூன் 17, 2025) உத்தரவிட்டுள்ளது. கீழடி ஆய்வு முடிவுகள், அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலம் காலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். வைகை நாகரிகம், சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. ஈடு இணையற்ற பேரரும் பெருமை வாய்ந்த எங்கள் தமிழ் மண்ணை, நாகரிகத்தை, கலாசாரத்தை, இந்தி, சமஸ்கிருதப் புழுதி கொண்டு மூடி மறைத்துவிட, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயல்கிறது. கீழடியின் பெருமையை மறைக்க, உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இச்செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 17. த.வெ.க.விற்கு எதிரான கபட நாடகத் தி.மு.க. அரசின் அராஜகப் போக்கிற்குக் கண்டனம்: ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் அனைவரும் சமம். ஆனால், தற்போதைய ஆளும் கட்சியான கபட நாடகத் தி.மு.க.விற்கு எதிர்க்கட்சிகள் என்றாலே எதிரியாகப் பார்ப்பதுதான் வழக்கம். அதிலும் மாபெரும் மக்கள் சக்தியும் மக்கள் ஆதரவும் பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்றாலே பயமும் மிரட்சியும்தான் மேலோங்கி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகப் பொதுக்கூட்டமோ, மக்கள் சந்திப்போ, பொது நிகழ்வோ, பொது வெளியிலும் தனியரங்குகளிலும் தனியார் இடங்களிலும் நடத்த அனுமதி தராமல், இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு தடுக்கிறது. இந்த அதிகாரத் திமிரின் உச்சமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் கிளைக் கழகம் முதற்கொண்டு மாவட்டக் கழகம் வரை இருக்கும் அனைத்துப் பொறுப்பாளர் தோழர்களையும் மகளிர் அணியினரையும் காவல் துறையை ஏவித் தாக்கவும் பொய்வழக்குப் போட்டு மிரட்டவும் செய்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், கபட நாடகத் தி.மு.க.விற்குத் தோல்வியைப் பரிசளிப்பது உறுதி என்பதை உணர்ந்ததால்தான் இவ்வாறு செய்கின்றனர். எங்களுடைய வெற்றித் தலைவர் ஏற்கெனவே தெரிவித்தது போல வேண்டுமானாலும் தடுக்கலாம், ஆனால் இயற்கையையும் மாபெரும் மக்கள் புரட்சியையும் எள்ளளவும் தடுக்க இயலாது. இதை ஜனநாயகத்திற்கு எதிரான போக்குடன் அதிகார மமதையில் ஆட்டம் போடும் தி.மு.க. அரசுக்கு நினைவூட்டுவதோடு, த.வெ.க.வை ஒடுக்க முயலும் தி.மு.க.வைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தீர்மானம் 18. தொகுதி மறுசீராய்வு – ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்குக் கண்டனம்: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அதில் மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்காய்வு (Caste Survey) நடத்த வேண்டியதில்லை என்றும் சொல்வது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏமாற்று வேலையன்றி வேறென்ன? அனைத்துச் சமுதாய மக்களின் சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல் குறித்த தெளிவான பார்வை இல்லாத கணக்கெடுப்பை எந்தச் சூழலிலும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கவே ஏற்காது. இட ஒதுக்கீட்டுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீராய்வு என்ற பெயரில் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்திலும் அநீதி இழைக்க முயல்கிறது. இது மட்டுமல்லாமல் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்று திட்டமிடுவதன் மூலம் ஜனநாயகமே கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கான பதிலடியைத் தென்னிந்திய மக்கள், குறிப்பாக, தமிழக மக்கள், வருகிற 2026 2026 சட்டமன்றத் தேர்தலில் வலுவாகத் தருவார்கள் என்பதையும் எச்சரிக்கையாகத் த.வெ.க.வின் இச்செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் 19.காவல் துறை கொல்லப்படுவதற்கும் அதனைத் தடுக்கத் தேவையான மேற்கொள்ளாத உள்துறை அமைச்சருக்கும் கண்டனம்: கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் துறை விசாரணையின் போது 24 பேர் உயிரிழந்திருப்பதாக, பெரும் அதிருப்தியோடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தற்போதைய மக்கள் விரோதத் திமுக ஆட்சியில், காவல் நிலையத்தில் பலர் மரணம் அடைவதைப் பார்க்கும் போது, அதிகாரத் திமிர் கொண்ட ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே இதற்கெல்லாம் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அண்மையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி சகோதரர் அஜித்குமார் அவர்கள், தமிழ்நாடு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக நேர்மையற்ற முறையில் சாரி கேட்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக, காவல் துறை விசாரணையில் மரணம் அடைந்த 24 பேருக்காகவும் இவர் இதைப் போல சாரி கேட்பாரா? இவரது பொறுப்பற்ற, நிர்வாகத் திறனற்ற (Irresponsible and Inability Administration) தன்மைக்கு அப்பாவி மக்களும் இளைஞர்களும் பலியாகி வருகின்றனர். இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவர் இருக்கக் கூடிய இண்டியா கூட்டணிக் கட்சிகள், ஒன்றிய அரசையும் மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ-யையும் வன்மையாகக் கண்டிக்கின்றன. ஆனால் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல் துறையின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுகிறார். தன் கீழ் இயங்கும் துறை மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துறைக்கு வழக்கை மாற்றுகிறாரே, இது அவருக்குப் பெருத்த அவமானம் இல்லையா? தி.மு.க. பேசி வரும் மாநில சுயாட்சி முழக்கம் எங்கே போனது? மாநில சுயாட்சியையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியாத தமிழ்நாடு உள்துறை அமைச்சர், தன்னை நம்பி வாக்களித்த மக்களைப் படுகுழியில் தள்ளி வருகிறார். இதற்கு அவர்களிடையே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கத் திறனற்று, கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் உள்துறை அமைச்சர், தமிழ்நாட்டின் இந்த அவல நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, பொது மன்னிப்புக் கேட்டு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்தச் செயற்குழு வலியுறுத்துகிறது. தீர்மானம் 20.பெரியார், அண்ணா ஆகியோரை அவமதிக்கும் பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலுக்குக் கண்டனம்: தமிழ்நாடு எப்போதும் மதச்சார்பற்ற பூமி. சமூக நல்லிணக்கம் போற்றும் மண். சகோதரத்துவம் பேணும் மாநிலம். இங்கு விஷத்தையோ விஷமத்தையோ விதைத்தால் அந்த முயற்சி துளியளவுகூடத் துளிர்க்காது. எங்கள் கொள்கைத் தலைவரான தந்தை பெரியார், மிகப் பெரிய சமூகச் சீர்திருத்தவாதி. சமூக நீதிக் காவலர். இட ஒதுக்கீட்டுக்கான பாதையைச் சமைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சாதி ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது எனச் சமூக நலன்சார்ந்த பல்வேறு இலக்குகளுக்காக வாழ்நாள் எல்லாம் உழைத்தவர். அவரைக் கடவுள் மறுப்புக் கொள்கை என்ற ஒற்றை வளையத்துக்குள் மட்டும் அடைக்கும் வேலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் இந்த மண்ணில் வெற்றி பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். பெரியாரோடு நிற்காமல், கனிவின் திருவுருவான பேரறிஞர் அண்ணாவையும் அவதூறு செய்யும் முயற்சியை மதுரை நிகழ்ச்சியில் பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அரும்பெரும் மனிதர், தலைவர் அறிஞர் அண்ணா. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்தைச் சமூக நல்லிணக்கத்திற்காக இம்மண்ணிலே ஓங்கி ஒலிக்கச் செய்தவர் அண்ணா என்பதைத் தமிழகம் அறியும். இன்றளவும் தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைக் களங்கப்படுத்தும் முயற்சிக்குத் துரும்பளவு பலன்கூடக் கிடைக்காது. தமிழ்நாடு சமூக நீதிக்கும் சகோதரத்துவத்திற்கும் பெயர்பெற்ற சமத்துவ பூமி. இங்கே பிளவுவாத அரசியலைப் பா.ஜ.க எந்த வடிவத்தில், எந்த வேடத்தில் செய்தாலும் தமிழக மக்கள் அதை முறியடிப்பர். பா.ஜ.க.வின் இந்தப் பிளவுவாத அரசியலைத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. https://minnambalam.com/tvk-state-executive-committee-meeting-resolution/

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை - அருண் சித்தார்த்

1 day 11 hours ago
விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை July 5, 2025 9:01 am இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதியில் எரியூட்டப்பட்டு சாம்பல் நீரில் கரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத நிலை நீதிமன்றங்களில் இருப்பதாகவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார். இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாகவும், இதற்கு ஒரு அமைப்புசாரா அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்களும் ஐயங்களும் நீக்கப்பட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://oruvan.com/a-fair-trial-is-also-needed-for-those-abducted-by-the-ltte/

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை - அருண் சித்தார்த்

1 day 11 hours ago

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை

July 5, 2025 9:01 am

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (04) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக, 1990 களில் துணுக்காய் பகுதியில் உள்ள நெற்களஞ்சிய சாலை கட்டிடத் தொகுதியில் விடுதலைப் புலிகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாமில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் பவானி குளம், சிவபுரம் பகுதியில் எரியூட்டப்பட்டு சாம்பல் நீரில் கரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாத நிலை நீதிமன்றங்களில் இருப்பதாகவும் அருண் சித்தார்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாகவும், இதற்கு ஒரு அமைப்புசாரா அணுகுமுறை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்களும் ஐயங்களும் நீக்கப்பட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://oruvan.com/a-fair-trial-is-also-needed-for-those-abducted-by-the-ltte/

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

1 day 12 hours ago
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது kugenJuly 4, 2025 வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்றதற்காக இலங்கையர் ஒருவர், சுவர்ணபூமி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார், அவரது உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இலங்கை சந்தேக நபர் ஒருவர் தாய் ஏர்வேஸ் விமானத்தில் நள்ளிரவு 12.06 மணிக்கு பாங்காக்கிற்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை (01) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக வனவிலங்கு குற்றப் புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷீஹான் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட மேற்படி சந்தேகநபர், பல்வேறு வனவிலங்கு இனங்களை கடத்தியதாக பதிவு இருப்பது முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. வனவிலங்குகளை கடத்திய குற்றச்சாட்டில் அவர் கொழும்பில் வைத்து 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஷீஹான் மாலை இரவு 7 மணியளவில் சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு வந்தார். அவர் சோதனை செய்த பிறகு, அதிகாரிகள் அவரை எக்ஸ்ரே கருவிகளைப் பயன்படுத்தி மேலும் சோதனைக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் அதிகாரிகள் அவரது உள்ளாடையில் மூன்று மலைப்பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார். அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தினர். https://www.battinews.com/2025/07/blog-post_15.html

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து!

1 day 12 hours ago
நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து! Published By: VISHNU 05 JUL, 2025 | 12:03 AM தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறப்பதனை கண்டுபிடித்தனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உப நகரபிதா ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/219211

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து!

1 day 12 hours ago

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம் - தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து!

Published By: VISHNU

05 JUL, 2025 | 12:03 AM

image

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில்  மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென இயங்கு நிலைக்கு செயற்படுத்தப்படுகின்றது.

VID-20250704-WA0075.jpg

இந்நிலையில் குறித்த உப்பளத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரோடு உப்பளத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.

VID-20250704-WA0072.jpg

இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறப்பதனை கண்டுபிடித்தனர்.

VID-20250704-WA0069.jpg

அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டு வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

VID-20250704-WA0065.jpg

அத்தோடு உப்பளம் அமைப்பதற்கு  சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

VID-20250704-WA0068.jpg

அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

VID-20250704-WA0064.jpg

இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உப நகரபிதா ஞா.கிஷோர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/219211

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

1 day 12 hours ago
தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 4 ஆரம்பிக்கப்பட்ட "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: "தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன். இதனை ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம். தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது. தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளம் கல்வி அமைச்சிலிருந்தே உருவாகிறது. இருப்பினும், நம்மில் பலரும், அதே போன்று நமது நாடும் பல சந்தர்ப்பங்களில் நினைக்காத, கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதியே இந்த தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் இடமாகவே தொழிற்கல்வி இருந்து வருகின்றது. இருப்பினும், பாடசாலைப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால் செல்லக்கூடிய ஒரு மாற்று இடமாகவே தற்போதும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது என்பதையும், அல்லது மற்ற தேர்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவை கைகூடவில்லை என்றால் இறுதியில் வந்து விழும் இடமாகவே இது கருதப்பட்டு வருகின்றது. இது மிகவும் தவறானதாகும். தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான, புத்திசாலித்தனமான, நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும். தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும். அதனாலேயே நாம் 2026 இல் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதியக் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கு சிறப்பான இடத்தை ஒதுக்கி இருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும். பாடசாலைக் கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க, அந்த மனித வளத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம்," என்றும், அதற்கு அமைய இந்த நாட்டின் தொழிற்கல்வியை உயரிய இடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்கள்: "அரசின் கொள்கையான 'வளமான நாடு – அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த, முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும். இளைஞர்களின், யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள், யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும், நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன. ஆகையினால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) முன்னெடுக்கப்படுகின்றது. 160,000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இது இங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்," எனத் தெரிவித்தார். இந்த விழாவில் உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள்: "தொழிற்பயிற்சி அளிக்கும் அரச நிறுவனங்களில் பல்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை நாடெங்கும் உள்ள மாணவர்கள் கற்று வருகின்றனர். சில சமயங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் கல்வி பயிலுகிறார்கள். சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர் பற்றாக்குறையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு எமது கல்வி முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என நாம் கருதுகின்றோம். தொழிலாளர் அமைச்சின் நிர்வாகத்திலேயே இந்த பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களையும் பலப்படுத்தி பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்," எனத் தெரிவித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmcpq4o4o00ruqp4k819pm7k3

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

1 day 12 hours ago

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 

முறையான, கவர்ச்சிகரமான நிறுவன அமைப்பைக் கட்டமைப்பதற்காக நாடு தழுவிய தொழிற்கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து ஜூலை 4 ஆரம்பிக்கப்பட்ட "ஸ்ரம மெஹெயும" (உழைப்பு நடவடிக்கை) திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றபோது, கம்பஹா தொழில்நுட்பக்கல்லூரியில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்: 

"தொழிற்கல்வியை மையமாக வைத்து பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்களின் கருத்துப்படி, ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) இலங்கை முழுவதிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன். 

இதனை ஸ்ரம மெஹெயும   (உழைப்பு நடவடிக்கை) மூலமாக ஆரம்பித்து வைத்தபோதிலும், தொழிற்கல்வி துறை மீது கவனம் பெறுவதற்காகவும், இதன் முக்கியத்துவத்தை முழு நாட்டிற்கும் காண்பிப்பதற்காகவுமே நாம் இங்கு முயற்சி செய்கின்றோம். தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது. தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளம் கல்வி அமைச்சிலிருந்தே உருவாகிறது. இருப்பினும், நம்மில் பலரும், அதே போன்று நமது நாடும் பல சந்தர்ப்பங்களில் நினைக்காத, கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதியே இந்த தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் இடமாகவே தொழிற்கல்வி இருந்து வருகின்றது. 

இருப்பினும், பாடசாலைப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால் செல்லக்கூடிய ஒரு மாற்று இடமாகவே தற்போதும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது என்பதையும், அல்லது மற்ற தேர்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவை கைகூடவில்லை என்றால் இறுதியில் வந்து விழும் இடமாகவே இது கருதப்பட்டு வருகின்றது. இது மிகவும் தவறானதாகும். தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான, புத்திசாலித்தனமான, நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும். 

தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது. அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும். 

அதனாலேயே நாம் 2026 இல் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதியக் கல்விச் சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கு சிறப்பான இடத்தை ஒதுக்கி இருக்கின்றோம். கல்விச் சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும். 

பாடசாலைக் கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க, அந்த மனித வளத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம்," என்றும், அதற்கு அமைய இந்த நாட்டின் தொழிற்கல்வியை உயரிய இடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். 

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே அவர்கள்: 

"அரசின் கொள்கையான 'வளமான நாடு – அழகான வாழ்க்கை மூலம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதற்காக மாபெரும் சீர்திருத்தங்கள் இந்த காலகட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

அந்த மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்த, முதலில் இந்த இடங்கள் புதுப்பித்தல், நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு உள்ளாக வேண்டும். இளைஞர்களின், யுவதிகளினதும் மனப்பான்மைகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள், யுவதிகள் தொழில்நுட்பத்துடன் முன்னால் வந்துள்ளனர். இருப்பினும், நிறுவனக் கட்டமைப்பானது பல மைல்களுக்குப் பின்னாலேயே இருந்து வருகின்றன. ஆகையினால் நாம் இந்த நவீன இளைஞர்களுக்கு ஏற்ற நிறுவனச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதனாலேயே இன்று இலங்கையில் 311 நிறுவனங்களில் பாரிய ஸ்ரம மெஹெயும (உழைப்பு நடவடிக்கை) முன்னெடுக்கப்படுகின்றது. 160,000க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து நாடு முழுவதிலும் தங்கள் நிறுவன அமைப்பை உருவாக்கும் பணியை இன்று ஆரம்பித்திருக்கின்றனர். இது இங்கேயே நின்றுவிடப்போவதில்லை. இந்தத் துறையின் மூலம் நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்," எனத் தெரிவித்தார். 

இந்த விழாவில் உரையாற்றிய தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள்: 

"தொழிற்பயிற்சி அளிக்கும் அரச நிறுவனங்களில் பல்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை நாடெங்கும் உள்ள மாணவர்கள் கற்று வருகின்றனர். சில சமயங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூட இந்த நிறுவனங்களில் கல்வி பயிலுகிறார்கள். சில பயிற்சி நிறுவனங்களில் மாணவர் பற்றாக்குறையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு எமது கல்வி முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என நாம் கருதுகின்றோம். 

தொழிலாளர் அமைச்சின் நிர்வாகத்திலேயே இந்த பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களையும் பலப்படுத்தி பயிற்சி அளிக்க தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள இருக்கின்றோம்," எனத் தெரிவித்தார். 

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் லசித் பாஷண, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கம்பஹா நகர பிதா, மாவட்டச் செயலாளர், கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் பி.எம்.கே. கோமஸ் ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

https://adaderanatamil.lk/news/cmcpq4o4o00ruqp4k819pm7k3

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

1 day 12 hours ago
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

1 day 12 hours ago

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1

வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்!

1 day 12 hours ago
வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்! தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் “வெள்ளை ஈ” இன் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த வெள்ளை ஈயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம். அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேசசெயலர் பிரிவுகளில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த ஐந்து பிரதேச செயல பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவ கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம். இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணி பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பள கொடுப்பனவு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இந்த பணியினை தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது. மக்களும் எங்களுடன் கை கோர்த்தால் மாத்திரமே இந்த பணிகளை முன்னெடுக்க முடியும். இந்த பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களை தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம். அடுத்த வீட்டில் அல்லது அடுத்த பிரதேசத்தில் தானே வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளது, எமது பகுதியில் இல்லை தானே என்று எண்ணாதீர்கள். அது உங்களது பகுதியிலோ அல்லது உங்களது வீட்டிலோ உள்ள தென்னைகளையும் பாதிக்கலாம். எனவே இதனை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/வெள்ளை_ஈ_தாக்கத்திலிருந்து_தென்னைகளை_பாதுகாக்க_2_வார_வேலைத்திட்டம்!

வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்!

1 day 12 hours ago

வெள்ளை ஈ தாக்கத்திலிருந்து தென்னைகளை பாதுகாக்க 2 வார வேலைத்திட்டம்!

1062092421.jpg

தென்னை பயிர்ச்செய்கையை பாதிக்கும் “வெள்ளை ஈ” இன் தாக்கமானது அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த இரண்டு வார வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் வடக்கு மாகாண பணிப்பாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; தென்னை உற்பத்தியில் வெள்ளை ஈயானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தென்னை வளர்ப்பாளர்கள் பல்வேறு அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். வேறு மாகாணங்களில் வெள்ளை ஈயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டாலும் வடக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.

இந்த வெள்ளை ஈயினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதியில் இருந்து இரண்டு வார வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்த உள்ளோம். அந்தவகையில் சாவாகச்சேரி, உடுவில், கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 பிரதேசசெயலர் பிரிவுகளில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். மேற்குறித்த 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

குறித்த ஐந்து பிரதேச செயல பிரிவுகளிலும் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கும் வெள்ளை ஈயினை கட்டுப்படுத்தும் திரவ கரைசலை விசிறவுள்ளோம். இதற்காக 200 விசிறும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். ஒரு இயந்திரத்தால் ஒரு நாளைக்கு 90 மரங்களுக்கு கரைசலை விசிற முடியும். அதற்கு ஏற்ப திட்டமிட்டுள்ளோம்.

இதனை முன்னெடுப்பதற்கு எமக்கு ஆளணி பற்றாக்குறை, உணவுப் பிரச்சினை, பணியில் ஈடுபடவுள்ளோருக்கான சம்பள கொடுப்பனவு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே இந்த பணியினை தனியாக அரசாங்கமோ அல்லது அரசாங்க உத்தியோகத்தர்களோ செய்ய முடியாது. மக்களும் எங்களுடன் கை கோர்த்தால் மாத்திரமே இந்த பணிகளை முன்னெடுக்க முடியும்.

இந்த பணியில் பங்கெடுக்க விருப்புவோர் சுயாதீனமாக வந்து பிரதேசங்களை தாண்டியும் உங்களது பங்களிப்பை வழங்கலாம். அடுத்த வீட்டில் அல்லது அடுத்த பிரதேசத்தில் தானே வெள்ளை ஈயின் தாக்கம் உள்ளது, எமது பகுதியில் இல்லை தானே என்று எண்ணாதீர்கள். அது உங்களது பகுதியிலோ அல்லது உங்களது வீட்டிலோ உள்ள தென்னைகளையும் பாதிக்கலாம். எனவே இதனை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/வெள்ளை_ஈ_தாக்கத்திலிருந்து_தென்னைகளை_பாதுகாக்க_2_வார_வேலைத்திட்டம்!

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

1 day 13 hours ago
நல்லவேளை ஸ்கான் எடுப்பதற்காக அவர் பாராளுமன்றம் போகவில்லை. ஆசுபத்திரியில, சிறையிலே இருக்கவேண்டிய கேசுகளெல்லாம் இப்போ பாராளுமன்றத்தில நிறைஞ்சு இருக்கு.

புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!

1 day 13 hours ago
காற்றாய்ப் பறந்த என் ஆசைகள் சிதறி விழுந்ததே, கனவுகள் போன வானில் நிழலாய் மறைந்ததே. உயிர் தந்த பாசம் இன்று ஓர் ஓலமாய் ஒலிக்குதே, அழுது நிற்கும் என் மனம், நிலவாய் நீயே கேள்! இரவில் தூங்காது என் கண்ணீர் தலையணையில் உறங்குது, உன் நினைவுகள் மட்டுமே வாழ்வின் இருட்டில் தெளிவது. மேகங்கள் கூட உன் பெயரை மழையாய் அழைக்குது, அழிந்த விமானம் போல என் மனம்கூட உடைகுது. காலம் கொஞ்சம் நின்றிருந்தால் என் பேச்சைக் கேட்கலாமா? கடைசி வார்த்தை கூட இழந்தேன், வருத்தம் நீங்காதம்மா. வீட்டின் வாசலில் இன்னும் உன் சிரிப்பு காத்திருக்கு, வெறுமையே மிச்சமாய், தினமும் துயரம் சூழ்ந்தது. வீணான வினாடிகள் பசுமையாய் உன்னைத் தேடுதே, உயிரோடு இருந்தால் சிரிப்பு இன்னும் கேட்டிருப்பேன். பறந்த குரல்கள் ஓய்ந்து நின்றன, பதில் தராத வானம் உன் முகத்தை மறைத்தது. நீதான் வருவாய் என்று கதவுகள் திறக்கின்றன, ஆனால் ஒவ்வொரு சத்தமும் உன்னைத் துயரமாய்ப் பேசுகின்றன. உன் பெயர் சொல்லும் போது இதயம் சிதறுகின்றது, எழுதிய கடிதங்கள் வாசிக்க யாரும் இல்லை. ஓ நியாயமே! ஏன் இத்தனை அவசரம்? ஒரு பசுமை நினைவை ஏன் கொண்டு சென்றதேன்? உன் இல்லாத காலம் சுவாசிக்க முடியாது, ஒவ்வொரு மூச்சும் வேதனையை பேசும். 👍🔔

ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!

1 day 14 hours ago
ஆப்பு நிச்சயமாக உண்டு. நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கும், 2026 இல் அமலுக்கு வரும் வரிக்குறைப்புகள் 2028 இல் காலாவதியாகும் போது கையில் காசு வாங்கும் (tips) தொழில் செய்வோருக்கும், வேலை செய்ய இயலாமல் அரச மருத்துவக் காப்புறுதியில் தங்கி வாழும் வயசாளிகள், உடல் இயலாதோருக்கும் உடனடி ஆப்பு. ஏனைய பெரும்பணக்காரர்களுக்கான வரிக் குறைப்புகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ள இயலாத வகையில் கார்னி வெறுப்பு உங்களை ட்ரம்ப் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறதென நினைக்கிறேன். ஆனால், கார்னியின் கனடாவிற்கு ஆப்பு விழுந்தால் உங்களுக்கும் பாதிப்புத் தானே என்றும் யோசிக்க மறுக்கிறீர்கள்.

பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்

1 day 17 hours ago
நம்ம அரசியல்வாதிகள்? அவர்களின் வேலை அதுவா? மக்களை சந்திக்கவே மறுக்கின்றனர், மக்களோடு சேர்ந்து நின்று அவர்களுக்காக பேச வெட்கப்படுகின்றனர். அப்படியெனில் தேர்தல் காலங்களில் முயற்சிக்கலாம். இப்போ; தேர்தல் காலங்களிலும் மக்களை சந்திக்க அவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. மக்களுக்கு வேறு தெரிவு இல்லை எனவே தமக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டுமென்கிற தெளிவு அவர்களிடத்தில்.

செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண

1 day 18 hours ago