Aggregator

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

1 day 4 hours ago
ஸ்டீவ் ஜொப் இல்லாத வெற்றிடம் தெரிகிறது. அவங்கள் ஒரு தராதரத்தை வைத்து மக்களை அந்த மாயைக்குள் வைத்திருக்கிறார்கள், புதுமைகள் வரவர குறைகிறது. அதன் மீதான ஈர்ப்புள்ளவர்கள் தொடர்ந்து வாங்குகிறார்கள்.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 day 4 hours ago
நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. போட்டி இடம்பெறும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு பொலிஸாரினால் பார்வையாளர்களுக்கு புதிய விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பொலிஸாரின் விதிகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாய் முதல் 7 இலட்சம் ரூபாய் வரையில் அபராதமும், சிறைத்தண்டனை அல்லது நாடு கடத்தப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmfjrvrwz00eaqplp154r6vrb

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 day 5 hours ago
விஜயகாந்த்தின் பேச்சில், அவர் நோய் வாய்ப்பட முன்னரும் கூட, இல்லாத அளவு கொள்கை விளக்கம், தெளிவு விஜையின் திருச்சி பேச்சில் இருந்தது. எம்ஜிஆர் பிரிந்த போது அவரிடம் இரு டசின் எம் எல் ஏக்கள், ஆர் எம் வீரப்பன் போன்ற சினிமாகாரர்தான் இருந்தனர். திக கூட ஆதரிக்கவில்லை. பெரியார், அண்ணா வின் பெயர். எம் ஜி ஆரின் முகம் இவைதான் அன்றைய அதிமுகவின் ஈர்ப்பு சக்திகள். கொள்கை கூடாரம் என்றால் அப்போதும் திக, திமுகதான். எம்ஜிஆர் மன்றங்களை அதிமுகவாக மாற்றியவர் ஆர் எம் வி. அவர்ரைவிட நேரடி அரசியல் அனுபவம் கூடியவர் புசி ஆனந்த். ஆகவே எம்ஜிஆரை விட கூடிய கொள்கை வெற்றிடம் உள்ளவர் விஜை என்பது சரியல்ல. மதுரை மாநாட்டு பேச்சில் இருந்த பிழைகளை விஜை இங்கே சரி செய்துள்ளார். சீமான் போன்ற வாய்-வியாபாரிகள் , திமுக அமைச்சர்கள், என பலரும் விஜைக்கு கூடும் மக்கள் திரளை, காட்டு கூட்டம், நயந்தாராவுக்கு இதை விட கூடும் என அவமரியாதை செய்கிறார்கள். இது நல்லதற்கே. கூட்டம் வோட்டாக மாறாது, மாறாது என இவர்கள் சொல்ல, சொல்ல, அந்த கூட்டம் கடுப்பாகி விஜைக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. அதிமுகவை செங்கோட்டையன் மூலம் பாஜக விழுங்கி விட்டது என்பது தெளிவு. நாளை எடப்பாடி டெல்லி ஓடுகிறார்.இனி அமித் ஷாதான் அதிமுகவின் அறிவிக்க படாத பொது செயலாளர். ஆகவே திமுகவுக்கு எதிரான, பாஜக சாராத எதிர்கட்சியை தமிழக மக்கள் தெரிய விரும்பின் - த வெ க மட்டுமே ஒரே தெரிவு. பிரேமலதா, கார்த்தி சிதம்பரம், திருமா, அண்ணாமலை, அண்மையில் சொல்லும் விடயங்கள் தவெக ஊதி தள்ள கூடிய சக்தி இல்லை என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ஏன் சீமானை எல்லாம் பெயர் கூட சொல்லாமல் ஜோக்கார் போல நடத்திய ஸ்டாலினும், உதய்யும் விஜைக்கு எதிர்வினை ஆற்ற, “புதிய எதிரி” என அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பார்க்கலாம்.

தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை"

1 day 6 hours ago
தொடர் கதை 02 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/? "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30815037124811531/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30860636763584900/ "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 https://www.facebook.com/groups/978753388866632/permalink/30969169072731668/

தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்"

1 day 6 hours ago
தொடர் கதை 01 / "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9681477875260763/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9691763294232221/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9710364575705426/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9725436214198262/? இலக்கிய பாடல்கள் ஊடாக ஒரு இளம் பெண்ணின் கதை: "திலோ அவனுக்காக காத்திருந்த்தாள்" / பகுதி:05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9736564316418785/?

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 day 8 hours ago
பங்களாதேஷை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி Published By: Vishnu 13 Sep, 2025 | 11:51 PM இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையே 13ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 140 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி, 14.4 ஓவர்களில் 04 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 140 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியின் பதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்கள், குசல் மெண்டிஸ் 03 ஓட்டங்கள், குசல் பெரேரா 09 ஓட்டங்கள், கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 46* ஓட்டங்கள், சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 10 * ஓட்டங்கள் எடுத்தனர். மஹேதி ஹசன் 02 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் தன்சிம் ஹசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கெப்டன், பங்களாதேஷை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகள் இழந்து 139 ஓட்டங்களை எடுத்தது. அதன்படி, களத்தில் இறங்கிய பங்களாதேஷ் அணித்தலைவர் லிட்டன் தாஸ் 28 ஓட்டங்களையும், தௌஹித் ஹிரிடோய் 8 ஓட்டங்களையும், மஹேதி ஹசன் 9 ஓட்டங்களையும், ஜாக்கர் அலி ஆட்டமிழக்காமல் 41* ஓட்டங்களையும் , ஷமிம் ஹொசைன் ஆட்டமிழக்காமல் 42* ஓட்டங்களையும் எடுத்தனர். தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கிய தன்சித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் எந்த ரன்களையும் எடுக்க முடியவில்லை. பந்துவீச்சில், வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். https://www.virakesari.lk/article/225020

பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

1 day 8 hours ago
பெரும் பொறுப்புகளுடன் இந்தியப் பெருங்கடலின் இதயத்தில் இலங்கை - பாதுகாப்பு செயலாளர் Published By: Digital Desk 1 14 Sep, 2025 | 09:24 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் பாதுகாப்புச் சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், எல்லை தாண்டியவையாகவும் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பன்முகப் பயிற்சிகள் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவின் தேவையை உணர்த்துகின்றன. கூட்டுத் தயார்நிலை என்பது ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் உலகப் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் நாடுகளை இணைத்து வர்த்தகத்தைத் தக்கவைக்கின்றது. இருப்பினும், இவை இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்ற அபாயங்கள், எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகிறன. இத்தகைய சூழலில், இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பொறுப்பு, பிராந்தியத்தின் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை உறுதி செய்வதாகும். பசிபிக் ஏஞ்சல் போன்ற பயிற்சிகள், அவசரகால சூழ்நிலைகளுக்குப் பதிலளிக்கும் திறனையும், பங்குபெறும் நாடுகளிடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகின்றன. பசிபிக் ஏஞ்சல் 2025 பயிற்சியின் வெற்றிக்கு பங்களித்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். திறன்கள் மற்றும் நடைமுறைகளுக்கு அப்பால், இந்த பயிற்சியின் உண்மையான மதிப்பு, வளர்த்த நட்புறவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட பரஸ்பர புரிதலும், மனிதப் பிணைப்புகளும் எதிர்கால நெருக்கடிகளின் போது பெரிதும் உதவும். அமெரிக்கா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளர்களுடனும் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்பட இலங்கை உறுதிபூண்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட சவால்களாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பானவையாக இருந்தாலும், அவற்றை ஒரு நாடால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இணைந்து செயல்படுவதன் மூலம், பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/225022

திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்

1 day 8 hours ago
'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன? பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, திருச்சியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கினார் தவெக தலைவர் விஜய் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திருச்சியில் சனிக்கிழமையன்று (செப்டெம்பர் 13) மக்கள் சந்திப்புப் பயணத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தொடங்கினார். 'தி.மு.க ஆட்சியை விமர்சித்தாலும் கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு தவெக பலம் பெறவில்லை' எனக் கூறுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். 'செல்வாக்கைக் காட்டும் விதத்தில் விஜய் பயணம் இருந்தாலும் வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறி' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு திருச்சியில் கூடி மக்கள் திரள் எதைக் காட்டுகிறது? அதுகுறித்து கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் என்ன சொல்கிறார்கள்? ஐந்து மணிநேர தாமதம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடை என்ற இடத்திற்கு விஜய் வந்து சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேல் தாமதமானது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் பயணம் என விஜய் அறிக்கை வெளியிட்டார். பட மூலாதாரம், TVK காலை 10.30 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்ட மரக்கடையில் அவரால் மாலை சுமார் 4 மணியளவில்தான் பேச்சைத் தொடங்க முடிந்தது. " போருக்குப் போவதற்கு முன்பாக போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வக் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள். அதுபோல ஜனநாயகப் போருக்காக இங்கு வந்துள்ளேன்" என்றார் விஜய். மக்களை மோசமாக ஆண்டு கொண்டிருக்கும் தி.மு.கவையும் பா.ஜ.கவையும் கேள்வி கேட்பதற்காகவே வந்திருப்பதாகக் கூறிய விஜய், "மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.கவையும் தி.மு.கவையும் விட மாட்டோம்" என்றார். தொடர்ந்து விஜய் பேசுவதை சரிவர கேட்க முடியாமல் ஒலிபெருக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அங்கிருந்த தொண்டர்கள் சரிவர கேட்கவில்லை எனக் கூறியும் தனது பேச்சை விஜய் தொடர்ந்தார். தி.மு.க, பா.ஜ.கவை சாடிய விஜய் பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்வை தவெக எப்போதும் எதிர்க்கும் என விஜய் குறிப்பிட்டார். இந்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் சாடிய விஜய், "இதன்மூலம் தேர்தலில் தவறுகள் தான் நடக்கும். அதற்காகவே மத்திய பா.ஜ.க அரசு இதைக் கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார். மக்களவைத் தொகுதிகள் மறு சீராய்விலும் தென்னிந்தியாவுக்கு எதிராக மிகப் பெரிய சதி உள்ளதாகவும் இதை தவெக எப்போதும் எதிர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதி, கீழடி ஆய்வு முடிவுகள், பேரிடர் நிதி ஆகியவற்றில் மத்திய அரசு வஞ்சிப்பதாகக் கூறிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் துன்பங்களை பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை. கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் வேடிக்கை பார்க்கிறது" எனப் பேசினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக விஜய் விமர்சித்தார். தொடர்ந்து, 'கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், டீசல் விலையில் மூன்று ரூபாய் குறைப்பு, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து ஆகியவற்றை செய்தீர்களா?' என தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். 'கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றம், ஆண்டுக்கு பத்து லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை, மாதம்தோறும் மின் கட்டணம், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை செய்வதாகக் கூறினீர்களே.. செய்தீர்களா?' எனவும் விஜய் கேள்வி எழுப்பினார். "தமிழ்நாட்டுக்கு மத்திய பா.ஜ.க அரசு செய்வது துரோகம் என்றால் தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் அரசு செய்வது நம்பிக்கை மோசடி" எனவும் தவெக தலைவர் விஜய் விமர்சித்தார். "இரண்டுமே தவறு தான். இரண்டுமே ஏமாற்று வேலை தான். இரண்டு பேருமே ஏமாற்றுவதில் ஒரே வகையறா தான். இவர்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் என்று ஏன் சொல்கிறோம் என இப்போது புரிந்திருக்கும்" எனவும் விஜய் சாடினார். விஜய் பேச்சு பற்றி திருமாவளவன் கருத்து விஜயின் பிரசாரம் குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "களப்பணியை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப் போகிறது என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது" எனக் கூறினார். "தி.மு.க அணியை வீழ்த்துவோம் என பலமுனைகளில் இருந்து வரும் குரல்களில் விஜயின் குரலும் ஒன்று" எனக் கூறிய திருமாவளவன், "இது தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்" எனக் கூறினார். தவிர, தி.மு.க கூட்டணியை வீழ்த்தும் அளவுக்கு விஜய் பலம் பெறவில்லை எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார். ' பார்வையாளர்கள் மட்டுமே' படக்குறிப்பு, இந்த கூட்டத்தை நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை என்கிறார் ஷ்யாம். "தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை விஜய் காட்டிக் கொள்வதாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்க வேண்டியுள்ளது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எம்.ஜி.ஆர் நடத்திய கூட்டங்களில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றாலும் சித்தாந்தங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அங்கு இருந்தது" எனக் கூறுகிறார். "ஆனால், தவெக கூட்டத்தில் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல், தனித்துவம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறைக்கு இருக்கிறது. அதற்கான பயிற்சியும் நெறிப்படுத்துதலும் தவெகவில் இல்லை" என்கிறார் ஷ்யாம். விஜயின் கூட்டத்துக்கு வருகிறவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆரின் முகத்துக்குக் கவர்ச்சி இருந்தாலும் அவருக்குப் பின்னால் சித்தாந்தத்தை வலிமையாக கொண்டு செல்வதற்கான படை இருந்தது" எனவும் குறிப்பிட்டார். திருச்சியில் கூடிய கூட்டம் குறித்துப் பேசும் ஷ்யாம், " கூட்டத்துக்குச் சென்றோம். செல்ஃபி எடுத்தோம் என்ற மனநிலையில் தொண்டர்கள் இருந்ததையே பார்க்க முடிந்தது. இது நீண்டகால அரசியல் வெற்றியைத் தருவதற்கான வாய்ப்புகளாக பார்க்க முடியவில்லை" என்கிறார். இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ரசிகர் கூட்டம், வாக்குகளாக மாறும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கூட்டத்தை வழிநடத்திச் செல்வதற்கான கட்டமைப்பும் திட்டமிடலும் தவெகவில் இல்லை" என்கிறார். 'வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை' பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, நிபந்தனைகளே விதிக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என குபேந்திரன் கேள்வி எழுப்புகிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம் செல்வதற்கு சுமார் ஐந்து மணிநேரம் விஜய்க்கு தேவைப்பட்டதாகக் கூறும் குபேந்திரன், "இதைப் பெருமையாக அக்கட்சியினர் நினைக்கலாம். மக்கள் மத்தியில் எதிர்ப்பு தான் எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார். "தொண்டர்களை நெறிப்படுத்தியிருந்தால் தாமதம் ஏற்பட்டிருக்காது" எனக் கூறும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், " கூட்டங்களுக்கு எம்.ஜி.ஆர் தாமதமாக வரும் நிகழ்வுடன் இதனை ஒப்பிட்டு சிலர் பேசுகின்றனர். அன்றைய காலகட்டம் வேறு. " என்கிறார். "மின் மாற்றிகள், கட்டடங்கள் மீது ரசிகர்கள் ஏறி நின்றனர். நல்லவேளையாக முன்கூட்டியே மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?" எனக் கேள்வி எழுப்பும் குபேந்திரன், "கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்" எனக் கூறுகிறார். "கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் அது வெற்றிக்கான வாக்குகளாக மாறாது. ஐந்து கோடி வாக்குகள் பதிவாகும் மாநிலத்தில் வெறும் லட்சங்களில் விழும் வாக்குகளால் வெற்றி கிடைக்காது" எனக் கூறும் ஷ்யாம், " இவை வரவுக் கணக்கில் வருவதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார். தவெகவுக்கு என்ன பலன்? "திருச்சி கூட்டத்தின் மூலம் தவெகவை நோக்கி சிலர் கூட்டணிக்கு வருவார்கள்" எனக் கூறும் ஷ்யாம், " அது கட்சிக்கு லாபமாக இருக்கும். ஆனால், தனது வாக்காளர்கள் யார் என்பதை விஜய் முடிவு செய்ய வேண்டும். தன்னைப் பார்க்க வந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதா என்பதை அவர் பார்க்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். தவெகவின் விக்கிரவாண்டி மாநாடு, மதுரை மாநாடு, திருச்சி பிரசாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய ஷ்யாம், "மூன்று கூட்டங்களிலும் அரசியல்மயப்படுத்தும் வேலைகள் என எதுவும் இல்லை. திரைக் கவர்ச்சிக்கு பின்னால் கற்றுக் கொண்டது என்ன என்பது தான் முக்கியமானது" என்கிறார். "ஆளும்கட்சிகள் மீது விமர்சனம் வைப்பது தான் தவெகவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பலன் இல்லை என விஜய் பேசினார். ஆனால், அவை என்னென்ன எனப் பட்டியல் போட்டுப் பேசியிருக்க வேண்டும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். 'அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்' படக்குறிப்பு, எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை என்கிறார் லயோலா மணி பிபிசி தமிழிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, "இதுபோன்ற கூட்டம் அண்ணா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்க்கு வந்து சேர்கிறது. இது தானாக சேர்ந்த கூட்டமாக உள்ளது" என்கிறார். "போக்குவரத்து நெரிசலை காவல்துறை சரியான முறையில் கையாளவில்லை" எனக் கூறும் லயோலா மணி, "கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் கட்சியின் நிர்வாகிகளும் தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்" எனக் குறிப்பிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் அரசியல்மயப்படுத்தப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், "இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியுள்ளோம். எங்களால் அரசு சொத்துகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டதில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce8421nkdlno

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில் திறந்து வைப்பு!

1 day 8 hours ago

14 Sep, 2025 | 12:24 PM

image

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5  மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது.

மேலும் சில கட்டட  தொகுதிகள் அமைக்கப்பட்டு  விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

2__11_.jpg

2__10_.jpg

2__9_.jpg

2__8_.jpg

2__8_.jpg

2__7_.jpg

2__5_.jpg

2__3_.jpg

https://www.virakesari.lk/article/225045

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

1 day 10 hours ago

New-Project-189.jpg?resize=750%2C375&ssl

மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி!

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது.

அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது.

செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இலங்கையில் ‘ஐஸ்’ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயனங்கள், மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இரசாயனங்களின் அளவு சுமார் 50,000 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணையில், பியால் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரசாயனங்களை மறைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் பல கும்பல் உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது.

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’ ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ சிஐடி காவலில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டது.

மேலும் விசாரணையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் இந்த நடவடிக்கையில் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், அதை மேற்கொள்வதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வெளிப்படுத்தியிருந்தார்.

https://athavannews.com/2025/1447100

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

1 day 10 hours ago

New-Project-192.jpg?resize=750%2C375&ssl

210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும்.

விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1447114

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

1 day 10 hours ago

New-Project-188.jpg?resize=750%2C375&ssl

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது.

குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது.

இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 26 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டன.

அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர் மற்றும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க உதவும் வகையில் பொருத்தப்பட்ட பிரிவுகளின் ஆதரவுடன் செயல்பட்டனர்.

ஆரம்ப கட்ட தகவலின்படி மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் மிகவும் பரபரப்பான கோடையின் உச்சக்கட்டத்தை அடையாளப்படுத்தியது.

புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களால் குறிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் யூனியன் கொடியையும், இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திச் சென்றனர்.

போராட்டக்காரர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பினர் மற்றும் “அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

பிரித்தானியாவில் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

னெனில் நாடு சாதனை எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலமாக அங்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1447097

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

1 day 10 hours ago

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் : பெறோர்கள் எழுதும் பரீட்சை ? - நிலாந்தன்

facebook_1757217343241_73703037316274215

கடந்த வாரத்துக்கு முதல் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்தன. பெற்றோரும் உறவினர்களும் தங்களுடைய பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளை முகநூலில் பகிர்ந்து கொண்டாடினார்கள். இந்த இடத்தில் எனது நண்பர் ஒருவர் கூறிய உரையாடல் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த உரையாடல் நடந்த இடம் யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபல்யமான  தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் வாசலில். புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தங்கள் பிள்ளைகளுடைய வகுப்பு முடியும் வரையிலும் தனியார் கல்வி நிறுவனத்தின் வாசலில் காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு இடையிலான உரையாடல் அது. இந்த உரையாடலை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த எனது நண்பரும்  ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில் ஈடுபட்டார். அந்த உரையாடல் வருமாறு…

பெற்றோர்-1-“இந்தச் சின்ன வயதில் எங்கட பிள்ளைகள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வேண்டி இருக்கு? அஞ்சு மணிக்கு எழுப்ப வேணும்”.

பெற்றோர்-2-“அப்படியே? அஞ்சு மணிக்கு எழும்பி எத்தனை மணி மட்டும் படிக்கிறது?”

பெற்றோர்-1-“அஞ்சு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் வீட்டில படிப்பு. ஆறிலிருந்து ஏழு மட்டும் ரியூஷன். ரியூசன் முடிஞ்ச கையோட வீட்ட வந்து சாப்பிட்டிட்டு பள்ளிக்கூடத்துக்குப் பறக்க வேணும்”.

பெற்றோர் -2 -”பள்ளிக்கூடத்தால வந்து?”

பெற்றோர்-1- “வந்த வேகத்தில் சாப்பிட வேணும்.பிறகு ஒரு சின்னத் தூக்கம். பிறகு இரண்டிலிருந்து நாலு மணி மட்டும் ரியூஷன். பிறகு நாலரையில இருந்து இந்த டியூஷன்.பிறகு ஏழில இருந்து ஒன்பது மட்டும் வீட்டில தாய் படிப்பிப்பா”.

பெற்றோர் -2- “அப்ப பிள்ளை எப்ப நித்திரைக்குப் போகும்?”

பெற்றோர் -1- “10 மணிக்கு .. நாலரைக்கு எழும்ப வேணுமே ?எங்கட பிள்ளையள் எவ்வளவு வருந்திப் படிக்க வேண்டி இருக்கு?”

இந்த உரையாடல் போய்க்கொண்டிருக்கும்போது வகுப்பு முடிந்து பிள்ளைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. எனவே முதலாவது பெற்றோர் தனது பிள்ளையை ஏற்றிக்கொண்டு சென்று விட்டார். இரண்டாவது பெற்றோர் இப்பொழுது எனது நண்பரோடு கதைக்கிறார்….

“பாத்தீங்களே  பிள்ளைய எப்பிடிப் படிப்பிக்கினம் என்று? அவர் சொன்னது உண்மை எண்டு நம்புறீங்களே ?”

எனது நண்பர் – “ஏன் பொய்யே?”

பெற்றோர் -2- “ஓம்.அது பொய்.அவர் சொன்னவர் பிள்ளை அஞ்சு மணிக்கு எழும்புது என்று. அது பொய். பிள்ள மூன்று மணிக்கு எழும்புது. அது பத்து மணிக்கு நித்திரைக்குப் போறதில்ல. 11 மணிக்குத்தான் போகுது”.

நண்பர்- “உண்மையே? ஏன் அப்பிடிப் பொய் சொன்னவர்?”

பெற்றோர் -2- “ஏனெண்டால் தன்ர பிள்ள அவ்வளவு நேரம் படிக்குது எண்டு சொன்னா நீங்களும் உங்கட பிள்ளைய அப்படிப் படிப்பீங்கள்.போட்டியில உங்கட பிள்ளை முன்னுக்கு வரலாம்.அதுதான் தன்ர பிள்ள படிக்கிற நேரத்தக் குறைச்சுச் சொன்னவர்”…..

இது அந்தத் ரியூட்டரி வாசலில் நடந்த ஓர் உரையாடல். புலமைப் பரிசில் பரீட்சையின் போட்டி மனோநிலையை அது காட்டுகிறது. பரவலாக விமர்சிக்கப்படுவதுபோல அது பிள்ளைகளின் பரீட்சை அல்ல. நடுத்தர வர்க்கப் பெற்றோரின் பரீட்சைதான். அதுவும் படித்த நல்ல உத்தியோகம் பார்க்கும் பெற்றோர். ஆனால் பிள்ளைகளிடம் அவ்வாறான போட்டி மனோநிலை இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி ஒரு போட்டி மனோநிலைக்குரிய வயது அதுவல்ல.

எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியரின் பிள்ளை பரீட்சை எழுதிய பொழுது கல்வியதிகாரியான அவருடைய நண்பர் ஒருவர் சொன்னார்… “பரீட்சை எழுதப் போகும்போது பிள்ளைக்கு உறிஞ்சிக் குடிக்கும் ஒரு தண்ணீர்ப் போத்தலை வாங்கி கொடுங்கள். பரீட்சைச் சூழலில். பதட்டத்தில் பிள்ள மூடியைத் திறக்கும்போதோ அல்லது மூடும்போதோ நீரைச் சிந்தி விடக்கூடும்”….. என்று. தண்ணீர்ப் போத்தலின் மூடியை பதட்டத்தில் சரியாக மூட முடியாத ஒரு வயதில் இப்படி ஒரு தேசிய மட்டப் பரீட்சை தேவையா? இந்தக் கேள்வி இந்த நாட்டில் ஏற்கனவே பல மனநிலை மருத்துவர்களாலும் கல்வியியலாளர்களாலும் கேட்கப்பட்டுவிட்டது. ஆனால் மாற்றம் நடக்கவில்லை.

அந்தப் பரீட்சையின் போட்டித் தன்மை காரணமாக அந்தப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக வருவாயீட்டும் தொழிற் துறையாக வளர்ந்து விட்டன. அங்கே இலவசக் கல்வி கேள்விக்குள்ளாகிறது. அங்கே வசூலிக்கப்படும் காசு ஏனைய தேசியமட்டப் பரீட்களுக்காகப் படிக்கும் பிள்ளைகளிடம் வசூலிக்கப்படும் காசைவிட அதிகமாகவும் இருப்பதுண்டு. பரீட்சை பெறுபேறுகளின் பின் ஆசிரியர்கள் கௌரவிக்கப்படும் விதத்திலும் பெற்றோரின் மனோநிலை தெரிகிறது. சில ஆசிரியர்களுக்கு தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கையில் ஒரு தகப்பன் ஆசிரியருக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் இதில் சித்தி பெற்ற பிள்ளை பின்னர் வரக்கூடிய சாதாரண தரம் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் வெற்றி பெறும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் சொன்னார்….மேல் மாகாணத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது. நியமனம் கிடைத்ததும் அவர் முதலில் போனது கொரனவில் உள்ள தக்க்ஷிலா மத்திய கல்லூரிக்கு. அங்கேதான் புலமைப் பரிசில் பரீட்சையில் நாட்டிலேயே முதற் தடவை 200 புள்ளிகளைப் பெற்ற பிள்ளை படித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளையின் ஆறாவது ஆண்டு தவணைப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அவர் தொகுத்துப் பார்த்திருக்கிறார். அந்தப் பிள்ளை முன்னணியில் நிற்கவில்லை.

அதாவது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற எல்லா பிள்ளைகளுமே கல்விப் பொது சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் பிரகாசிக்கும் என்றில்லை. ஒரு தேசிய பரீட்சையின் முக்கியத்துவத்தை உணர முடியாத வயதில் பிள்ளைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றுவது பெற்றோர்தான். இந்த பந்தயக் குதிரை மனோபாவம் பிள்ளைகளின் உளவியலைப் பாதிக்கின்றது. அதேயளவுக்கு அவர்களுடைய உளப்பாங்கையும் தீர்மானிக்கின்றது. உலகின் முன்னேறிய கல்வி முறைமையைக் கொண்டிருக்கும் நாடுகளில், குறிப்பாக யப்பானில் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை பரீட்சைகள் இல்லை. அதற்குக் கூறப்படும் விளக்கம் என்னவென்றால், உளப்பாங்கு உருவாகும் ஒரு காலகட்டத்தில் போட்டிப் பரீட்சைகளை வைத்தால் அது  பிள்ளைகளின் உளப்பாங்கில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறு பிராயத்திலேயே உருவாக்கப்படும் போட்டிச் சூழல் பிள்ளைகளை சுயநலமும் பேராசையும் பொறாமையும் கள்ளத்தனமும் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது.

“பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் பரீட்சையின் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகவும் கடினமான சுமையை கொடுக்கிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சை ஒரு சிறந்த வியாபாரமாகவும் மாறிவிட்டது. உண்மையில், குழந்தைகள் இன்னும் இந்த சுமையை புரிந்து கொள்ளும் அளவு முதிர்ச்சி அடையவில்லை. எனவே, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் பிள்ளை சித்தி அடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், கல்வியின் பெறுமதியை பற்றிய அவர்களின் புரிதல் காலப்போக்கில் தெரிய ஆரம்பிக்கும்.கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும் சூழலை அவர்களுக்கு உருவாக்குங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள்,பெரியவர்கள் மற்றும் பிறருக்கு மரியாதை கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள், ஏனெனில் இந்த பண்புகள் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்விக்கு மிக முக்கிய பங்களிக்கும்”என்று கூறுகிறார், பேராதனைப் பல்கலைக்கழக,பொறியியற் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி. நவரட்ணராஜா.

போட்டிபோட்டுப் படித்து பட்டம் பெற்று, முன்னிலைக்கு வந்த பலர் சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றிய பொழுது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள். இந்த போட்டி மனோநிலை முன்னேறுவதில் மட்டுமல்ல தப்பிச் செல்வதிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் நன்கு தெரிந்த  ஒருவர் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் உள்ள அரசாங்கத்தால்கூட  புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பொருத்தமான முடிவை  எடுக்க முடியவில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் கொழும்பில் தேசிய கல்வி ஆனைக்குழுவை சந்தித்த பிரதமர் ஹரினி இந்த  விடயதைப் பற்றியும் உரையாடியுள்ளார். புலமை பரிசில் பரீட்சையை இப்போதைக்கு அவர்கள் நீக்கப் போவதில்லை என்று தெரிகிறது. சிலசமயம் அவர்களுடைய ஆட்சிக்காலம்  முடிவதற்கு இடையிலாவது நீக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான். சிறு பிள்ளைகளுக்கான ஒரு தேசிய  பரீட்சையை நீக்கும் விடயத்தில்  சமூகத்தின் கூட்டு உளவியலை மீறிப்போகப் பயப்படும் ஒர் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு,யுத்த வெற்றி நாயகர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தலாமா இல்லையா? போன்ற இதயமான பிரச்சினைகளில் துணிந்து முடிவெடுக்கும், ரிஸ்க் எடுக்கும் என்று எப்படி நம்புவது?

https://www.nillanthan.com/7764

மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி!

1 day 10 hours ago

மியன்மாரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 18 மாணவர்கள் பலி!

14 Sep, 2025 | 10:37 AM

image

மியன்மார் ராணுவம் நாட்டின் மேற்கு ரக்கைன் மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றின் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் என ஆயுதக் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 17 முதல் 18 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

துற்போதைய நிலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த பகுதியில் இணையம் மற்றும் தொலைபேசி சேவைக்கான அணுகல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AA என்ற சிறுபான்மை இயக்கத்தின் இராணுவப் பிரிவொன்றினால் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மியன்மாரின் மத்திய அரசாங்கத்திடமிருந்து சுயாட்சியைக் கோரும் ஒரு பிரிவாக இது கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/225030

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

1 day 11 hours ago

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

14 September 2025

1757831450_5684745_hirunews.jpg

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி, மாகாணசபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும் என்றும், நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி எச்சரித்துள்ளார்.

https://hirunews.lk/tm/420066/provincial-council-elections-should-be-held-immediately-pefral-organization-insists

இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில்

1 day 11 hours ago

இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம் 2 வாரங்களுக்குள் ஜெனிவாவில்

14 September 2025

1757814287_8312867_hirunews.jpg

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 ஆம் ஆண்டு செப்டம்பரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீர்மானத்துக்கு, இலங்கை தொடர்பான முக்கியகுழு உறுப்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவை வழங்கவுள்ளன. 

இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது. 

இந்தத் திட்டம், இலங்கையில் மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான, சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், தகுதிவாய்ந்த அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், சான்று சேகரிக்கும் பொறிமுறையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த புதிய தீர்மானம், இலங்கை அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்கிறது. 

நாட்டில் பல தசாப்தங்களாக நிலவும் பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் இந்த தீர்மானம் ஏற்கிறது. 

அதே நேரத்தில, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டியதன் அவசரத் தேவையையும், அது வலியுறுத்துகிறது. 

இலங்கையில் பல புதைகுழி தளங்களை அடையாளம் காண்பது குறித்தும், போதுமான வளங்களுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. 

அதேநேரம் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 

சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப அகழ்வுகளை நடத்துவதற்கு போதுமான நிதி, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களை உறுதி செய்வதற்கு சர்வதேச ஆதரவை முன்கூட்டியே பெறவும் இது வழிவகுக்கிறது. 

அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து, வழக்குத் தொடரும்போது திறன்களை வலுப்படுத்த சர்வதேச உதவியை நாடவும் இந்த தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. 

ஒரு சுயாதீனமான பொது வழக்கு தொடுநர் அமைப்பை நிறுவுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, இந்த தீர்மானம் பாராட்டி ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது, அத்துடன், ஏற்கனவே பல தசாப்தங்களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், ஒரு சுயாதீனமான சிறப்பு ஆலோசகரைக் கொண்ட ஒரு நீதித்துறை பொறிமுறையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க, இலங்கை அரசாங்கத்தை இந்த தீர்மானம் ஊக்குவிப்பதாகவும் ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

https://hirunews.lk/tm/420040/key-draft-resolution-on-sri-lanka-to-be-tabled-in-geneva-within-2-weeks