Aggregator

iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?

20 hours 42 minutes ago
ஒவ்வொருக்காலும் புதுமை வேணுமெண்டால் அவங்களும் எங்கை போறது?😂 நானும் தொடர்ந்து சம்சுங்தான் வைச்சிருந்தனான்.கள்ளர் கூட்டத்துக்கு நல்ல ரெலிபோன்.என்னவும் செய்து கொள்ளலாம்.😍

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

20 hours 49 minutes ago
எங்கடை ரமில் றோயல்ஸ்காரர் இனி கொஞ்சம் கவனமாய் திரியுங்கோ. என்னாலை சொல்லக்கூடியது அவ்வளவு தான்.😂 நோர்வேயில கூட பெரிய ஆட்சி மாற்றம் நடந்திருக்காம்.அடுத்த ஆட்சிமாற்றம் ஜேர்மனியிலை எண்டு நினைக்கிறன்.

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

22 hours 15 minutes ago
கடதாசியால் மட்டும் துடைப்பதை விடவும் முதலில் கழுவி பின்பு கடதாசியால் துடைப்பது மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் தருகிறதே!

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

22 hours 41 minutes ago
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

22 hours 45 minutes ago
ஓய்வூதியம் வரவேண்டும். ஓம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். நடைபெறுவது ஜேவிபி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி. ஓய்வூதியம் வேண்டாம் நாம் ஓய்வூதியம் இல்லாமல் வேலை செய்ய தயார் என்று தமிழ் அரச ஊழியர்கள் ஊர்வலம் போனாலும் போவார்கள் 😂

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

22 hours 58 minutes ago
யு டியூப் சானல்களை நம்பும் ஆள் நான் இல்லை திட்டம் இட்டு அவர்களே கேள்விகளைக் கொடுத்து கேட்க வைத்துப் பாடமாக்கிய பதில்களை வழங்குவது தான் அங்கே நடக்கின்றது. இந்தத் தேவா அடி பிடிக் கேஸ் ஆச்சே

எனக்கு பிடித்த சில  வரிகள்.

1 day ago
எல்லா மெளனங்களும் திமிர் அல்ல சில மௌனங்கள் சொல்ல முடியாத ஆறாத காயங்கள் சரியோ தவறோ உன் வாழ்க்கை எனும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கி தள்ளி விடுவார்கள். சரி பாதியாக வாழ்வது இல்லை வாழ்க்கை. சரியும் போது சாயும் தோள் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை வாழ்க்கையை சற்று தனித்து வாழும் கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் நம்மோடு இருப்பவர் எப்போது காற்றில் மறைந்து போவார் என்பது தெரியாது. வலியுடன் வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது சிலர் கடந்துபோவார்கள் சிலர் மறந்து போனார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம் தன்னம்பிக்கை குறிக்கோள் திட்டமிடல் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்ட மென்று கடவுளிடம் கேட்டேன் அதற்கு கடவுள் சொன்ன பதில் இந்தக் கஷ்டமெல்லாம் உன்னை சுற்றியிருப்பவர் முகத்திரையை கிழிக்கும் ஆயுதம் என்று புரிந்தால் நீ அறிவாளி . மனதில் வைத்துக் கொள் உறக்கம் இரக்கம் என்பது அளவோடு இருக்க வேண்டும். அதிகம் தூங்கினால் சோம்பேறி என்று எண்ணுவார்கள் அதிகம் இரங்கினால் ஏமாளி என எண்ணி எடை போட்டுவிடுவார்கள். எனவே அளவோடு வைத்துக் கொள் தொலைவில் இருக்கும் வரை நாயும் நரியும் ஒன்றாகத்தான் தெரியும் அருகில் இருந்தால் மட்டுமே நாயின் நன்றியும் நரியின் தந்திரமும் புரியும். உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும் . உனக்கானமாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும் உனக்கானவாழ்வின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும் Virus-free.www.avg.com

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

1 day ago
வட மாகாணத்தில்… எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் பல நல்ல விடயங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டு இருக்கும் நல்லூர் பிரதேச சபைக்கு பாராட்டுக்கள். இந்த நல்லூர் பிரதேச சபையை நிர்வகிக்கும் கட்சி எது என்று அறிய ஆவலாக உள்ளது.

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

1 day 1 hour ago
இதை நடைமுறைப்படுத்த பல வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமே? இம்முறை ஊர் போனபோது ஊரில் வண்ணாங்குளம் என்ற குளத்தில் அரைவாசி இடத்தில் சுற்று மதிலுடன் வீடு எழும்பியுள்ளது. இது ஒரு ஒதுக்குப் புறமான இடமும் அல்ல. பணம் குளம்வரை பாய்ந்துள்ளது.

விஜயலட்சுமியிடம் உடனே மன்னிப்பு கேளுங்கள்.. சீமானுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வழக்கில் திருப்பம்!

1 day 1 hour ago
சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா. நம்ம தம்பி இடும்பன் கார்த்திக் போன்றவர்களை சீமான் கழட்டி விட்டுள்ளார் போலுள்ளது.

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்; நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை

1 day 1 hour ago
Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 05:11 PM மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார். https://www.virakesari.lk/article/225077

மட்டக்களப்பில் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்; நிதி நிறுவன முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை

1 day 1 hour ago

Published By: Digital Desk 3

14 Sep, 2025 | 05:11 PM

image

மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில்  நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். 

மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம்  குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும்  நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

https://www.virakesari.lk/article/225077

குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!

1 day 2 hours ago
காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன? 55 நிமிடங்களுக்கு முன்னர் சனிக்கிழமை லண்டனில் 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. சிலர் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், இதன் காரணமாக 26 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்.. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wgd9w9x11o