Aggregator
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல்
21 Dec, 2025 | 05:02 PM
![]()
(நமது நிருபர்)
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவிடம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது.
இந்த விடுவிப்பு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதனால், இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படுவதாயின், அடுத்த கட்டம் குறித்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவம் ஊடாக மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
அவர் சட்டமா அதிபரினால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணத்திற்காகவும் திகதி வழங்கப்படமாட்டாது. அரச சட்டத்தரணிக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம். இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. வேறெந்த விடயத்திற்காகவும் விசாரணையைத் தள்ளிப்போட முடியாது எனத் தெரிவித்த நீதிவான்,
சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பிரதிநிதி ஒருவருடன் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இரண்டாவது சந்தேகநபரின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றுக்குத் தெரிவித்தார். இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் போதுமான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பான ஆரம்பத் தகவல்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் கோரியும் கிடைக்கவில்லையென மன்றுக்குத் தெரிவித்தனர்.
இதனைப் பரிசீலித்த நீதிவான், இதற்கு விசேட கட்டளைகள் தேவையில்லை என்றும், ஒரு வார காலத்திற்குள் அந்த ஆவணங்களின் பிரதிகளை பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குமாறும் குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் அவர் தங்கியிருந்த தென்னந்தோட்டத்தைப் பராமரித்த லக்ஸிரி அமரசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
நில உயிர்கள்
இரசித்த.... புகைப்படங்கள்.
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
கருத்து படங்கள்
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!

இந்தியாவை நோக்கிச்செல்லும் தமிழ்க் கட்சிகள் – நிலாந்தன்!
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளராகிய ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அகற்றி, சீனத் தூதரகத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஓர் அமைச்சருடைய இணைப்பாளர், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியின் வேட்பாளராக பிரதேச சபைகளில் போட்டியிட்டவர், அவ்வாறு பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுகிறார். அதுதொடர்பாக அவர் சார்ந்த கடல் தொழில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ இதுவரை உத்தியோகபூர்வமாக மறுப்பு எதையும் தெரிவித்திருக்கவில்லை..
அரசாங்க அமைச்சரின் இணைப்பாளர் அவ்வாறு கூறிய அடுத்தடுத்த நாள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு சென்றார்கள். துணைத் தூதரைச் சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்கள். கடல் தொழிலாளர்களின் போராட்டத்தில் கடல் தொழில் அமைச்சரின் இணைப்பாளர் இந்தியாவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவித்தார்கள். புயலுக்குப்பின் முதலில் உதவிய நாடும் அதிகம் உதவிய நாடும் இந்தியா என்ற அடிப்படையில் இந்திய உதவிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களினதும் பின்னணியில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ் தேசிய பேரவை தமிழ்நாட்டுக்குச் சென்றிருக்கிறது.அங்கே அவர்கள் மீனவர்கள் விவகாரமும் உட்பட இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கப் போகும் “எக்கிய ராஜ்ய” இடைக்கால வரைவை எதிர்ப்பது முதலான பல விடயங்களை குறித்தும் தமிழகத் தலைவர்களோடு பேசியதாகத் தெரிய வருகிறது.
தமிழ்த் தேசிய பேரவையின் இந்திய விஜயம் தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருந்த பின்னணியில், மற்றொரு செய்தியும் கிடைத்தது. தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.
கிடைக்கப்பெறும் தகவல்கள்படி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பவர்களின் பட்டியலில் சுமந்திரனின் பெயர் இல்லை என்றும் கூறப்படுகிறது.இந்தச் சந்திப்பின் நோக்கம் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக வைக்குமாறு அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று கேட்பதுதான் என்று தெரிய வருகிறது.
அமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கும் ஒரு பின்னணியில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத ஈபிடிபியும் உட்பட தமிழ்க் கட்சிகள் அந்தக் கருத்துக்கு எதிரான விதத்தில் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி உழைப்பதைத்தான் மேற்படி செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
இலங்கை மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு புதுடில்லி அல்லது தமிழகம் தேவை என்று தமிழ்க் கட்சிகள் கருதுவதாகத் தெரிகிறது.அதுதான் உண்மையும் கூட.
இந்த உண்மையை கடந்த 16 ஆண்டுகளாகவும் அதற்கு முன்னரும் எடுத்துக் கூறிய அரசியல் விமர்சகர்களையும் நோக்கர்களையும் ஒரு பகுதி தமிழ்க் கட்சிகள் கேவலமாக விமர்சித்தன. அவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்றும் இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப்படுகிறவர்கள் என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் சம்பளம் வாங்குகின்றவர்கள் என்றும் விமர்சித்தன. அவர்கள் சோற்றுக்காகத்தான் அப்படியெல்லாம் கூறுகிறார்கள் என்று மீம்ஸ்கள் போடப்பட்டன.இதனால் அந்த விமர்சகர்களின் சிலர் மனம் நொந்து பொது வெளியிலிருந்தே விலகி நின்றார்கள்.
இறுதிக்கட்டப் போரில் அப்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசாங்கம் ஈழத் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்படுவதையும் ஆயுதப் போராட்டம் நசுக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டிருந்தது என்ற ஒரு குற்றச்சாட்டு ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.திமுக நினைத்திருந்திருந்தால் இறுதிக்கட்ட போரின் முடிவை மாட்டியிருந்திருக்கலாம் என்று கருதுபவர்களும் உண்டு. தமிழகம் தன்னியல்பாக எழுச்சி பெற்ற போது அந்தப் பேரெழுச்சியை திமுக மடைமாற்றி வடியச் செய்துவிட்டது என்றும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
இக்குற்றச்சாட்டுகளின் பின்னணியில் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஒரு பகுதியினர் திமுகவுக்கு எதிராக சீமானை நோக்கிப் போனார்கள்.இன்னொரு பகுதியினர் பாரதிய ஜனதாவை நோக்கிப் போனார்கள்.
சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும் காங்கிரஸ் தொடர்பாகவும் குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தொடர்பாகவும் எழுதப்படும் விமர்சனங்களைப் பார்த்தால் ஈழத் தமிழர்கலீல் ஒரு பகுதியினர் எந்த அளவுக்கு திமுகவின் மீது கோபமாக,வெறுப்பாக இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
திமுகவின் மீதான தமிழ் மக்களின் கோபத்தை சீமான் சிறப்பாக அறுவடை செய்தார். 2009க்கு பின் தன்னை ஈழப் போராட்டத்தின் உரித்துள்ள வாரிசாக காட்டிக்கொண்டார்.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை நிபந்தனையின்றி ஆதரித்தார்கள்.விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிப்பது தமிழகத்தில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருந்த ஒரு பின்னணியில், சீமான் துணிந்து விடுதலைப்புகளின் சின்னங்களையும் படங்களையும் முன்வைத்து அரசியல் செய்தார்.இதனால் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் அவரை அதிக எதிர்பார்ப்போடு பார்த்தார்கள்.
சீமான் தன்னுடைய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழகத்தின் உள்நாட்டு அரசியலுக்குள் ஒரு கருவியாக உபயோகிக்கிறார். 2009 க்குப் பின்னரான உளவியலின் பின்னணியில்,அவர் தமிழ்;திராவிடம் இரண்டையும் எதிரெதிர் நிலையில் வைத்து அரசியல் செய்கிறார். உள்ளூரில் தனது அரசியல் எதிரிகளை மடக்குவதற்கு அவர் தமிழீழ விடுதலை போராட்டத்தோடு தனக்குள்ள தொடர்பை ஒரு கவசமாக முன்வைக்கின்றார். இதனால் சீமானுக்கு விழும் அடி பல சமயங்களில் ஈழப் போராட்டத்திற்கும் விழுகிறது.
எனினும் சீமானின் நாம் தமிழர் கட்சியானது இப்பொழுதும் ஒரு மாற்று நீரோட்ட கட்சியாகத்தான் காணப்படுகிறது.அது தமிழகத்தின் பெருந்திரள் உணர்வுகளைப் பிரதிபலிக்கும், தீர்மானிக்கும் பிரதான நீரோட்டக் கட்சியாக இன்றுவரை எழுச்சி பெறவில்லை.அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக வெகுஜனங்களை ஒன்று திரட்டி பெருந்திரளாகப் போராட வைப்பதற்கு சீமானால் கடந்த 16 ஆண்டுகளிலும் முடியவில்லை. திராவிடக் கட்சிகளும் அந்த விடயத்தில் ஆர்வமாக இல்லை. இதனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கொதிக்காத,கொந்தளிக்காத ஒரு நிலைதான் தொடர்ந்து காணப்படுகிறது.இப்படிப்பட்டதோர் தமிழகச் சூழலில்தான் தமிழ்த்தேசியப் பேரவை அண்மையில் தமிழகத்துக்குச் சென்றிருக்கிறது.
இந்தியாவைக் கையாள வேண்டும்,மத்திய அரசாங்கத்தின் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழகத்தை நொதிக்கச் செய்யவேண்டும் என்று கூறியவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள்,ரோவின் கையாட்கள் என்றெல்லாம் விமர்சித்த ஒரு கட்சி,கிட்டதட்ட 16 ஆண்டுகளின்பின் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது. இதனால் கடந்த 16 ஆண்டுகளிலும் அவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் திமுகவுக்கு எதிராகவும் முன்வைத்த அனைத்து விமர்சனங்களும் இப்பொழுது பூமரங் ஆக அவர்களை நோக்கித் திரும்பி வருகின்றன.
தமிழ்நாட்டுக்குச் செல்வது என்று தமிழ்த் தேசிய பேரவை எடுத்த முடிவு காலத்தால் பிந்தியது. இந்தியாவை கையாள்வது என்று அவர்கள் எப்பொழுதோ முடிவெடுத்து இருந்திருக்க வேண்டும். ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தியாவிடம் சரணடைவதோ அல்லது கண்ணை மூடிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதோ அல்ல. இந்தியாவைக் கையாள்வது என்பது இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் சந்திக்கும் பொதுப் புள்ளிகளை அடையாளம் கண்டு அந்த இடத்தில் பேரம் பேசுவது. அதாவது ஓர் அரசைப் போல சிந்திப்பது;முடிவெடுப்பது;செயல்படுவது.ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் அதைக் கடந்த 16 ஆண்டுகளிலும் செய்திருக்கவில்லை. இப்பொழுதும் கூட கட்சிகளுக்கு இடையில் உள்ள போட்டிகள் காரணமாக ஒரு கூட்டு தமிழகத்தை நோக்கிச் சென்றிருக்கிறது.இன்னொரு கூட்டு இந்தியத் தூதுவரை நோக்கிச் சென்றிருக்கிறது. இங்கேயும் தமிழ் மக்கள் ஓர் அரசு போல முடிவெடுக்கவில்லை.ஒரு கூட்டு “எக்கியராஜ்ய” வேண்டாம் என்று கூறுகிறது. இன்னொரு கூட்டு,மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று கேட்கிறது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் இருந்து இரண்டு விதமான கோரிக்கைகள் இந்தியாவை நோக்கியும் தமிழகத்தை நோக்கி முன்வைக்கப்படும் போது இந்தியா எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்கும்? தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை எப்படி தனது நோக்கு நிலையில் இருந்து கையாளலாம் என்று சிந்திக்கலாம்தானே? இந்தியா மட்டுமல்ல எந்த ஒரு பேரரசும் அப்படித்தான் சிந்திக்கும். அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகள் நலன்களின் அடிப்படையிலானவை.நிச்சயமாக அன்பு,பாசம்,அறம்,தொப்புள் கொடி உறவு…போன்றவற்றின் அடிப்படையிலானவை அல்ல.ஈழத் தமிழர்கள் வெளி அரசுகளோடு இடையூடாடும் போதும் இதுதான் விதி.இந்த விதியின் அடிப்படையில்தான் இனி மேலும் அரசியல் செய்யலாம்.
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்
வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன்

சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள்.
வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீனம் என்று உலகளாவிய அரசியலைப் பேசும் பாடல்களைப் பாடியுள்ளார். அவருடைய முக்கியத்துவமே அவ்வாறான போராடும் மக்களின் குரலாக ஒலிப்பதுதான்.கரிய தேகம்;சீவப்படாத தலைமுடி; கழுத்தில் பெரிய உலோக மாலை; சில மேடைகளில் மேல் சட்டை இல்லாமலேயே காணப்படுகிறார். தனது உடல் மொழி, பாடல் வரிகள்,உச்சரிப்பு போன்ற எல்லாவற்றிலும் அவர் தன்னை ஒரு கட்டுடைப்பாளனாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிக்காட்டுகிறார்.
எனினும் அவர் மீது பாலியல் வகைப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி பெண்கள் சிலர் நீதிமன்றங்களை நாடியிருந்தார்கள். அவை தமது புகழை மங்கச் செய்வதற்காக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று வேடன் தரப்பு கூறுகிறது.
வாகீசன் வேடனை விடவும் வயது குறைந்தவர். எங்கே வேடனிடமிருந்து வித்தியாசப்படுகிறார் என்றால்,அவர் நேரடியாக புரட்சிகரமான விடயங்களைப் பாடுவதில்லை. ஜனரஞ்சகமான விடயங்களைத்தான் பாடுகிறார். ஆனால் அதிகம் பிரபல்யமடைந்த அவருடைய முருகன் பாடல் “காக்கும் வடிவேல்” முருக பக்திப் பாடல் மட்டுமல்ல அங்கே அரசியல் உண்டு. அந்தப் பாடலுக்கு மதப்பரிமாணம் மட்டுமல்ல. அரசியல் பரிமாணமும் உண்டு. அங்கே முருகன் மீட்பின் கடவுளாக, போராடும் மக்களின் தலைவனாக, போராடி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டமைத்த தலைவனாகக் காட்டப்படுகிறார். அதில் மறைமுகமாக அரசியல் உண்டு. வேடனைப்போல வாகீசன் வெளிப்படையாக,நேரடியாக அரசியலைப் பாட முடியாத அரசியல் சூழலுக்குள் வாழ்பவர்.
வாகீசனின் முருகன் பாடலில் பாரம்பரிய இசைக் கூறுகளும் உண்டு. அது ஒரு ஹைபிரிட் பாடல். ரப் பாடலாகவும் இருக்கிறது. அதேசமயம் சாஸ்திரிய சங்கீதத்தின் கூறுகளும் உண்டு. அதன் கலப்பு வடிவம்தான் அதற்குள்ள கவர்ச்சி. வாகீசனைத் தூக்கிய பாடல் அது. அந்தப் பாடலில் உள்ள ஹைபிரிட்தனம்தான் அந்தப் பாடலைப் பரவலாக்கியது. இப்பொழுதும் அந்தப் பாடலுக்கு ஆடும் பெரும்பாலான தென்னிந்திய நடனக் கலைஞர்கள் அப்பாடலில் உள்ள மரபு இசை வகைப்பட்ட பகுதிக்குத்தான் ஆடுகிறார்கள். ரப் இசைக்கு அல்ல.
ஒரு சமையல் நிகழ்ச்சியின் ஊடாக அதிகம் பிரபல்யமான அவருடைய தனித்துவம் எதுவென்றால், அசல் யாழ்ப்பாணத்து தமிழில் அவர் கதைப்பது. அதில் ஒருவித அப்பாவித்தனமான ஆர்வம் இருக்கும். அதேசமயம் வேரை விட்டுக் கொடுக்காத தனித்துவமும் இருக்கும். தமிழ்நாட்டில் வசிக்கும் அல்லது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் உரையாடும்போது அல்லது தமிழகத்தவரோடு உரையாடும்போது ஒரு தமிழ்நாட்டுக்காரரை போலவே பெரும்பாலும் உரையாடுவார்கள். முதலாவதாக தங்களுடைய தமிழ் அவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற கரிசனை. இரண்டாவதாக தன்னுடைய ஈழத்தமிழ் அடையாளம் காரணமாக வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் தற்காப்பு உத்தி போன்ற பல காரணங்களினாலும் அவ்வாறு தமிழ்நாட்டு தமிழைக் கதைப்பதுண்டு.”டூரிஸ்ட் பாமிலி” திரைப் படத்தில் வருவதுபோல.
ஆனால் வாகீசன் ஒரு ஜனரஞ்சக மேடையில் யாழ்ப்பாணத்துத் தமிழை பேசுகிறார். அந்தத் தமிழில் எழுதப்பட்ட வரிகளை இசைக்கிறார். அவருக்கு கிடைக்கும் பிரபல்யத்துக்கு அவருடைய தமிழும் ஒரு காரணம். அதைவிட முக்கிய காரணம் அவரைத் தூக்கிய பாடல் ஒரு முருக பக்திப் பாடலாக இருப்பது. அதில் அரசியல் வாடையும் இருப்பது. அந்தப் பாடலுக்குள்ள மதப் பரிமாணமும் அது திடீரென்று பெற்ற எழுச்சிக்கும் பிரபல்யத்துக்கும் ஒரு காரணம். அதற்கு இந்தியாவின் இப்போதுள்ள அரசியல் சூழல் மிகவும் அனுகூலமானது.
கடவுளர்கள் ஏற்கனவே ரப் இசைக்குள் வந்துவிட்டார்கள். கிறிஸ்தவ ரப் பாடல்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிவன்,ஹனுமான் போன்ற கடவுளர்க்கும் ரப் பாடல்கள் உண்டு. தமிழ் பக்தி இலக்கிய மரபில்,அருணகிரிநாதரின் திருப்புகழில் ரப் சாயல் உண்டு. முருக பக்தி மரபில் ஏற்கனவே சுசீலா ராமன் என்ற பெண் இசையமைப்பாளர் தமிழ் முருக பக்திப் பாடல்களை ஆடலுக்கு ஏற்ப மீள உருவாக்கிப் பாடியிருக்கிறார்.
சுசீலா ராமன் இந்திய வேரிலிருந்து வந்த பிரத்தானிய இசையமைப்பாளர். பல்வேறு இசைப் பாரம்பரியங்களையும் கலந்து பரிசோதனை செய்தவர். ஏற்கனவே உள்ள முருக பக்தி பாடல்களை துள்ளிசையாக ரீமேக் செய்தவர். அவரும் தன் பாடலுக்கு ஒத்திசைவான கோலத்தோடு மேடையில் தோன்றுவார். அடங்காத சுருள் முடி. எப்பொழுதும் ஆடத் தயாரான நெகிழும் உடல். சுசீலா மேடையில் பரவசமாகி தன்னை மறந்து துள்ளிக்குதித்துப் பாடுவார். அவருடைய பாடல்கள் இப்பொழுது நமது உள்ளூர் கோவில்களில் ஒலிக்க விடப்படுகின்றன. கோவில் மேடைகளிலும் ஏனைய இசை மேடைகளிலும் நமது உள்ளூர் பாடகர்கள் அவற்றைப் பாடக் கேட்கலாம். புதிய தொழில்நுட்பமும் அந்தத் தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள புதிய தலைமுறையும் ரசனைகளிலும் பாடல்களிலும் பக்தியை வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றத்தை விரும்புகின்றது.
இது ரசனை மாற்றத்தை, புதிய தொழில்நுட்ப வருகைகளால் ஏற்பட்டிருக்கும் லயமாற்றத்தை காட்டுவது. ஒரு தலைமுறை பக்திப் பாடல்களையும் ரப் இசையில் கேட்க விரும்புகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஈழத்து உச்சரிப்பில் ரப் பாடலைக் கேட்கும் ரசிகர்களின் தொகை அதிகரிக்கின்றது.சமூக வலைத் தளங்களில் அலையும் ஒரு தலைமுறையின் இசை,அரசியல்,அறிவியல் தொடர்பான பார்வைகள் மாறிக்கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே “சரிகமப” நிகழ்ச்சியில் ஈழத்துப் பாடகர்கள் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.அதில் வணிக உள்நோக்கங்கள் இருக்கலாம். ஆனாலும் பாக்கு நீரிணையின் இரண்டு பக்கமும் உள்ள இரண்டு தமிழ்ச் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு கடந்த 16 ஆண்டுகளாக அதிகம் சோதனைக்கு உள்ளாகியிருக்கும் ஓர் அரசியல், பண்பாட்டுப் பின்புலத்தில், ஈழத்துப் பாடகர்கள் தமிழக மேடைகளை நோக்கிச் செல்வது பிணைப்புகளைப் பலப்படுத்தும். சரிகமப மேடை என்பது அதிகபட்சம் ஜனரஞ்சக வணிக சினிமாவின் நீட்சியும் அகற்சியுந்தான். அங்கே மரபுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவது குறைவு. ஆனால் ரப் இசை எப்பொழுதும் மரபுகளை உடைப்பதற்கான அதிகரித்த வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.
அதன் தொடக்கமே புரட்சிகரமானது. மேற்கில் அது எதிர்ப்பின் வடிவமாகத்தான் எழுச்சி பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள்,நசுக்கப்பட்டவர்கள் தங்கள் குரலை வெளிக்காட்டும் இசை வடிவமாக அது மேலெழுந்தது. அங்கே இசை அல்லது தாள லயத்துடன் உச்சரிக்கப்படும் வரிகள் எதிர்ப்பின் கருவிகளாக மேல் எழுகின்றன.
ஈழத் தமிழ் வேரில் பிறந்த வேடனும் வாகீசனும் இந்திய உபகண்டப் பரப்பை நோக்கி, பெருந் தமிழ்ப் பரப்பை நோக்கிப் பாடுகிறார்கள். சரிகமப மேடையில் ஈழத்துப் பாடகர்கள் பாடுகிறார்கள். ”டூரிஸ்ட் பமிலி” திரைப்படம் ஈழத் தமிழர்களை நோக்கிக் கேட்கிறது “உங்களை யார் அகதி என்று சொன்னது?” என்று. இவை யாவும் கடந்த 16ஆண்டுகளாக மெலிந்து போயிருக்கும் தமிழக-ஈழத் தமிழ்ப் பிணைப்புக்களை மீளக்கட்டி எழுப்புவதற்கான நம்பிக்கைகளைப் புதுப்பிக்கின்றன;பலப்படுத்துகின்றன.

