Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
நந்தனுக்குக் கோபம் வந்து பார்த்ததில்லை போல. போன கிழமை நடந்ததப் பார்த்தீங்கள் என்றால் தெரியும். அவரின் தெரிவுகள் எல்லாம் இம்முறை அந்தமாதிரி. என்ன மாயமோ மந்திரமோ 41 போட்டிகளைச் சரியாக தெரிவு செய்திருக்கிறார்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளமையால் கேள்விகள் 71) - 73) வரைக்கும் புள்ளிகள் வழங்கலாம் 😃 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் முதலாவது இடத்தைப் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி play-off போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படும் எனக் கணிக்கவில்லை! 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) மும்பை இந்தியன்ஸ் நான்காவது இடத்தில் வரும் என நான்கு பேர் கணித்துள்ளனர். மற்றைய அணிகளின் நிலைகளை ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! ஒருவரும் இறுதி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிற்கும் எனக் கணிக்கவில்லை!

விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ

3 months 2 weeks ago
நிச்சயமாக பாதிக்கும் ஆனால் இனி அவர் ஜனாதிபதியாக இங்கே வாய்ப்பில்லை.

விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ

3 months 2 weeks ago
அரசியலில் தோற்றப்பாடு முக்கியம். நீங்கள் சொல்வது போல் நாட்டின் முதன் மகனுக்கு இப்படி நிகழ்வது என்ன இருந்தாலும் அவரின் இமேஜை பாதிக்கும்.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
இனிமேல் தமிழகத்தை ஆள வந்தான் வரத்தானுக்கு அருகதை இல்லை அவர்களுக்கு இந்த மண் மற்றும் மக்கள் சார்ந்த அறிதல் இருக்கவாய்ப்பில்லை என்பதை சாட உங்களால் முடியாது.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் … அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம். பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு …. உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள். இப்போதும் சொல்கிறேன் … நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே…. எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி… ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள் 🙏 எந்த அடாவடியும் இல்லாமல் மக்களோடு மக்களாக தலமைப் பதவியில் அமர்ந்து நல்லாட்சி செய்பவரே எங்களுக்குத் தேவை . 😇 ஆதலால் தொடர்ந்தும் முதல்வர் பதவியை உங்கள் கையில் ஒப்படைக்க நாம் தயார்.😂

விமானத்தில் மனைவியிடம் அறை வாங்கினரா பிரான்ஸ் ஜனாதிபதி? ; விளையாட்டு சண்டையா? - சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோ

3 months 2 weeks ago
டீச்சர் அடிச்சது இங்கேயும் தெரியுது. வீட்டில் நடப்பது விமானத்தில் நடந்ததால் வெளியே வந்து விட்டது. குடும்பம் என்றால் அடிதடி இல்லாமலா ஆனால் நாட்டின் முதல் மகன்???? நான் அண்மையில் இங்கே ஒரு கதை எழுதினேன். அதில் விரும்பியதை அடைந்தவரும் நிம்மதியாக இல்லை விரும்பியது கிடைக்காதவனும் நிம்மதியாக இல்லை என்று எழுதினேன். இவர் இதில் முதல் ரகம். ஆனால் காதல், இல்வாழ்க்கை மற்றும் திருமணம் சம்பந்தமாக எனக்கு இருக்கும் அத்தனை அனுமானங்கள் மற்றும் பட்டறிவுகள் அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டுவிட்டது உந்தாளின் மணவாழ்க்கை.😭

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகளின் நிறைவின் பின்னர் அணிகளின் நிலைகள்: பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி இடத்தையும் பிடித்துள்ளன!

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago
நிஸாம் காரியப்பர் 🙏 அத்தனை ஆணித்தரமாக இந்தச் சட்டம் மீழப் பெறப்பட வேண்டும் என்று பாராளுமன்றில் சகல தமிழ்ப் பா ஊக்களுக்கும் எடுத்துரைத்தது மறக்கப்படக் கூடிய செயல் அல்ல. இவரைப் போன்ற மனிதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
வசி... என்ன பின்னால வந்து நிக்கிறியல். நல்ல வேளை, இன்றோடு, போட்டிகள் முடிஞ்சுது. இனி இடக்கு முடக்கு கேள்விகள்தான் பதில் சொல்ல வேணும்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் மிச்சல் மார்ஷின் அதிரடியான 67 ஓட்டங்களுடனுன் ரிஷப் பந்தில் புயல்வேக சதத்துடனும் (ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள்) 3 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சவாலான ஓட்ட இலக்கை எட்டும் நோக்கில் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆட்டத்தில் இறங்கினர். விராட் கோலியின் 54 ஓட்டங்களுடனும், மயங் அகர்வாலின் 41 ஓட்டங்களுடனும், ஜிதேஷ் ஷர்மாவின் மின்னல்வேகத்தில் 33 பந்துகளில் எடுத்த 85 ஓட்டங்களுடனும் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 230 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

ரப் பாடகர் வேடன்

3 months 2 weeks ago
Vedan: அடையாளத் தேடலிலிருந்து அடையாளமாக மாறிய மலையாள ராப் பாடகர்; யார் இந்த வேடன்? வேடன்... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள். சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி யூடியூபில் பதிவிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞருக்கு இன்று கேரளத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது. யார் இவர்? திடீரென மலையாள ஊடகங்களில் பேசப்படக் காரணம் என்ன? தொடர்ந்து பார்க்கலாம். வேடன்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி. திருச்சூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார். சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார். VEDAN VEDAN instagram சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்டப் பெயர்தான் வேடன். இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான தொழில்: பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த வேடன், ஒருகட்டத்தில் பொருளாதாரத் தேவைக்காக வேலைக்குச் செல்ல தீர்மானித்தார். அதன்படி அங்கிருக்கும் சிலருடன் சேர்ந்து கட்டுமான தொழிலுக்குச் சென்றிருக்கிறார். வேலை செய்துகொண்டிருக்கும்போதுகூட பாடல் பாடிக்கொண்டிருப்பார் என்கின்றனர். அவரின் கலை ஆர்வம் அவரை எடிட்டர் பி.அஜித்துக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. பி.அஜித்தின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். ராப் கலைஞர்கள் அறிமுகம்: காலப்போக்கில் அவருக்கு டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல் அறிமுகமாகியிருக்கிறது. அவர்களின் பாடலில் இருக்கும் வலியும், உணர்ச்சியும் அவரை அவர் சார்ந்த வரலாறு நோக்கியும், போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது. அப்போதுதான் ராப் பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். VEDAN VEDAN முதல் ஆல்பம்: "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் ஜூன் 2020-ல் முதல் தனியிசைப்பாடலை வெளியிட்டார். அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் 'யார்டா இந்தப் பையன்' என மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போதுமுதல் வேடனுக்கு ஏறுமுகம்தான். தொடர்ந்து குரல்: வேடனின் ராப் பாடல்களில், புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. அதேபோல எங்கெல்லாம் அடக்குமுறைகள் நடக்கிறதோ அது தொடர்பாக வேடன் பாடத் தொடங்கினார். பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியாகத் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.திரைப்பயணம்: 2021-ம் ஆண்டில், வெளியான நயட்டு என்ற மலையாளப் படத்தின் நரபலி என்ற பாடலைப் பாடி திரைத்துறையில் முதல் அடியை எடுத்து வைத்தார். 2023-ம் ஆண்டில், சர்வதேச விருது வென்ற 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் 'கிஸ்ஸஸ் இன் தி கிளவுட்ஸ்' பாடலையும் எழுதிப் பாடியிருந்தார். மலையாள பிளாக்பஸ்டர் மஞ்சும்மல் பாய்ஸில் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுடன் இணைந்து 'குத்தந்திரம்' பாடலுக்கான வரிகளை எழுதிப் பாடினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றி வருகிறார். ஆனால், வேடனுக்குப் படத்தில் பாடல் எழுதுவதைவிட தனியிசைப்பாடலுக்காக எழுதுவதுதான் மிகவும் பிடிக்கும் எனப் பேட்டியளித்திருக்கிறார். VEDAN VEDAN பிரச்னைகளும் - வழக்குகளும்! Mee Too 2021-ம் ஆண்டு ராப்பர் வேடன் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போதே ராப்பர் வேடன், ``நான் நடந்துகொண்ட விதம் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து அவமானப்படுகிறேன். அதற்காக உங்களின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.போதை: ஏப்ரல் மாதம் கொச்சியில் ராப் நிகழ்ச்சிக்காகச் சென்ற வேடன், அங்கு நண்பர்களுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறார். அங்கு ஆறு கிராம் கஞ்சா வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல்துறை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் ஒரு சிறந்த மனிதனாக மாற முயல்வேன். நான் என்னைத் திருத்திக் கொள்ள முயல்கிறேன். எனது ரசிகர்கள் அனைவரும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் நல்ல பழக்கங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். VEDAN VEDAN புலிப் பல்: ஏப்ரல் 28-ம் தேதி போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது, வேடன் புலிப் பல் கொண்ட ஒரு செயினை அணிந்திருந்ததாக காவல்துறையினர் வன அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் விளைவாகக் கஞ்சா வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், வன அதிகாரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் கீழ் வேடனைக் கைது செய்தனர். கடந்த ஆண்டு இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனக்கு அந்தப் பல்லைப் பரிசாக அளித்ததாகவும், அதன் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து தனக்குத் தெரியாது என்றும் வாக்குமூலம் அளித்தார். அதைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.பா.ஜ.க புகார்: "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ் சானலின் மூலம் பிரதமர் மோடியை அவதூறு செய்கிறார். இந்தப் பாடல் மூலம் சாதி அடிப்படையிலான வெறுப்பை ஊக்குவிக்கிறார். அந்த சானல் இந்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, வேடன் தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும்" என மத்திய உள்துறை அமைச்சருக்கும், என்.ஐ.ஏ-க்கும் பாலக்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க கவுன்சிலர் மினி கிருஷ்ணகுமார் புகார் பதிவு செய்திருக்கிறார். சர்ச்சை: 'அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள், உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வேடனின் செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இது அரசியல் அடக்குமுறை' எனச் சமூக ஊடகங்களில் அவரின் ரசிகர்கள் வேடனுக்கு ஆதரவாகவும், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர். ராப்பர் வேடனுக்கு எதிராகவும் - ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. VEDAN VEDAN ஆதரவு! வேடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு வனத் துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், ``வேடன் என்று அன்பாக அழைக்கப்படும் ஹிரந்தாஸ் முரளி போன்ற பிரபல பாடகரின் வழக்கைக் கையாளும்போது இன்னும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள், தார்மீகக் குறைபாடுகள் இருந்ததா என்பதை ஆராய்வோம்" என்றார். ஆளும் அரசு தரப்பிலிருந்தும், இளைஞர்கள் தரப்பிலிருந்தும் நாளுக்கு நாள் வேடனுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. Vedan: கேரள மலையாள ராப் பாடகர் வேடன் என்கிற ஹிரந்தாஸ் முரளி; யார் இவர்?

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அப்பாடா. இன்றைக்கு ஒருநாள்த்தான் நமக்கு புள்ளி கிடைக்க வேணும் என்றதுக்காக, முழு அணியும் சேர்ந்து அடிச்சாங்கள். அணித்தலைவன் ஜித்தேஷு. அடிச்சான் பாரு ஆறு ஆறா. மொத்தமா 30 நான்குகளும் 7 ஆறுகளும். யார் சொன்னது ஆறு ஆறா அடிக்க வேணும் என்று. நாலு நாலா அடிச்சே வெல்லுவோம் என்று காட்டிவிட்டாங்கள்.

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

3 months 2 weeks ago
தெரிவான விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். தெரிவானவர்களில் 8 பேர் பெண்கள் என்பது உண்மையில் சாதனை தான்.

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

3 months 2 weeks ago
இருவருக்கும் வாழ்த்துகள். https://www.asianscientist.com/as100/#sri-lanka இலங்கையிலிருந்து தெரிவான 12 சிங்களவர்களில் 8 விஞ்ஞானிகள் பெண்கள் !

குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்திருக்கும் ஜனாதிபதி!

3 months 2 weeks ago
இது தான் உண்மையான கருத்து. இரு தரப்பும் பரஸ்பரம் நம்பிக்கைகளை கட்டியெழுப்பும் அரசியலை நோக்கி நகவர்வதே தீர்வை நோக்கிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் காலடியாக இருக்கும். இதனையே இரு தரப்பு அரசியல்வாதிகளும் சிந்திக்க வேண்டும். இரு தரப்பு அரசியல்வாதிகளும் தத்தமது அரசியல் இலாபத்திற்காக வெறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டு செல்வதானது, ஆபத்தை நோக்கி ஓடும் ஒரு றிலே ஒட்டம் போலவே இருக்கும். இந்த றிலே ஓட்டத்தில் அதிகம் ஆபத்தை எதிர் நோக்குவது சிறுபான்மை மக்களே என்ற பட்டறிவை உணர்ந்து அந்த மக்களின் அரசியலை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.