Aggregator

நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!

3 months 2 weeks ago
உலகில் அதிக மக்களைக் கொண்டுள்ள இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காம் இடத்துக்கு வருவது வியப்பானதல்ல. இந்திய மக்கள் ஒவ்வொருவரினதும் மொத்த உற்பத்தித் திறனைக் கணக்கிட்டால் இந்தியா முதல் 100 நாடுகளில் வருமா என்பது சந்தேகம். அதாவது இந்தியா உலகில் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும். செய்தியில் சொல்லப்படாத விடயம், இந்தியா தன்னைச் சீனாவுடன் ஒப்பிட்டிருக்க வேண்டும். சீனாவின் நடப்பு நிதியாண்டின் மொத்த உற்பத்தி 22600 டிரிலியன்களைத் தாண்டும். இந்த எல்லையை இந்தியா ஒருபோதும் எட்ட முடியாது.

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago
வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசாங்கம் 27 MAY, 2025 | 12:02 PM வடமாகாண காணிதொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5940 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215797

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பில் புதிய சட்டம் - அரசாங்கம்

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2025 | 01:40 PM (எம்.மனோசித்ரா) வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது. இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. https://www.virakesari.lk/article/215804

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பில் புதிய சட்டம் - அரசாங்கம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2025 | 01:40 PM

image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக செயற்படுவதற்காக வினைத்திறனான சட்டரீதியான ஒழுங்குமுறையை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பணத் தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய – பசுபிக் வலயத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் நிதிச் செயற்பாட்டு செயலணியால் தயாரிக்கப்பட்ட நிதித் தூய்மையாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் விரிவாக்க நிதியிடலுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தராதரங்களை பயனுள்ள வகையில் அமுல்படுத்துதல் மற்றும் வலுவுறுத்தலுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

மேலும், குறித்த செயலணியின் உறுப்பு நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ற வகையில் நிதி செயற்பாட்டு செயலணியின் தராதரங்களுக்கு ஏற்புடையதான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 'பரஸ்பர மதிப்பீடு' எனும் பெயரில் அழைக்கப்படும் பரஸ்பர சமமான மீளாய்வு செயன்முறைக்கு இலங்கை உட்படுகிறது.

இலங்கை தொடர்பான 3 ஆவது மதிப்பீட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ள செயற்பாட்டுத் திட்டத்துக்கு அமைய வெளிவிவகார விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்மொழிவை 2178 (2014) விரைவாக பிரகடனப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு சட்டத்தை வகுப்பதன் மூலம் மேற்குறித்த முன்மொழிவின் ஏற்பாடுளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, 2026 மார்ச் மாதத்துக்கு முன்னர் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள் தொடர்பான சட்டத்தை தயாரிக்க வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை முன்மொழிவின் 2178 (2014) அடிப்படையில் வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மறறும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

https://www.virakesari.lk/article/215804

'சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு குற்ற வழக்கு தொடர முடியாது' - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆண்-பெண் இடையே சம்மதத்துடன் கூடிய உடலுறவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டாலும் குற்ற வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தச் செய்தியில், "மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் 25 வயதான ஓர் இளைஞரும் ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நெருக்கமாகப் பழகி வந்தனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, ஒர் ஆண்டுக்கு மேல் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக இளைஞர் மீது அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது அந்தச் செய்தி. இதைத் தொடர்ந்து, "விசாரணை நீதிமன்றம் இளைஞருக்கு முன்ஜாமீன் அளித்தது. பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்" எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது. அதில், "வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி அளித்தோ அவரது சம்மதம் பெறப்பட்டதாகத் தோன்றவில்லை. எங்கள் ஒருமித்த கருத்து என்னவென்றால், இது திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்த விவகாரம் அல்ல. ஆணும், பெண்ணும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, அந்த உறவில் பிளவு ஏற்படும்போதோ, கசப்புணர்வு ஏற்படும்போதோ, குற்ற வழக்கு தொடர அந்தச் சம்மத உறவு முகாந்திரம் ஆகாது. இதுபோன்ற நடத்தைகள் நீதிமன்றத்துக்குச் சுமையாவதுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சட்டப் பிரிவுகளைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம். திருமணம் செய்துகொள்வதாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியையும் போலி வாக்குறுதி என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்வது முட்டாள்தனம். ஏற்கெனவே திருமணமான பெண், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் மற்றொருவருடன் உறவு வைத்துக்கொண்டதாகக் கூறுவதையும் நம்ப முடியாது. எனவே, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்," என நீதிபதிகள் கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn5y1z7ezpvo

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இந்தியா புதிய வீரர்களோடு இறங்குகிறது. கேப்டன் உட்பட அனைவருக்கும் தம்மை டீமில் நிலை நிறுத்த சாதித்து காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது இந்தியாவுக்கு பாரிய அனுகூலமாக இருக்கும். அதேபோல் இந்த வசந்த காலம் வரலாற்றில் இல்லாத வரட்சியான வசந்த காலம். இதுவும் இந்திய ஸ்பின்னர்களுக்கு வசதியாக இருக்கும். இங்கிலாந்தில் சொகைப், லீ இருவரும் இந்த அனுகூலத்தை எந்தளவு சாதமகா பயன்படுத்துவார்கள் என்பதும் சந்தேகமே. இங்கிலாந்து டங் , க்ரோலி போன்ற கவுண்டி தரத்துக்கு மேல் எழும்பி சர்வதேச தரத்தில் ஆட முடியாத இருவரை உள்வாங்கி உள்ளனர். அண்மைய சிம்பாப்வே போட்டியை கண்டு களித்தேன். பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக பந்து வீசினார். 1981 Botham Ashes, 2005 Flintoff Ashes போல இந்த தொடரில் ஸ்டோக்ஸ் தனி ஆளாக பிரகாசிப்பார் என நினைக்கிறேன். சிம்பாவ்வேயில் பென்னட் எனும் ஒரு 21 வயது பையன் விளையாடுகிறார். அருமையான மட்டை அடி. ஆனால் பவுண்சருக்கு தடுமாறுவது போல படுகிறது.

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

3 months 2 weeks ago
தகவலுக்கு நன்றி அப்புறம். Jürgen. இல்லையா??? இவர் முன்னாள் Dortmund இன் பயிற்ச்சியாளர் இவர் ஏழு வருட ஒப்பந்தம் உடன் வந்தவர். Liverpool க்கு 2021. இல் முடிந்தது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது என்று செய்தி பார்த்தேன்

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433387

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்

3 months 2 weeks ago

Gazzeet_1200px_22_12_06.jpg?resize=750%2

வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ்.

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28,  அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு அந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433387

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

New-Project-289.jpg?resize=750%2C375&ssl

வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1433399

நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!

3 months 2 weeks ago
நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா! உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது பிடிக்கும் என்று இந்திய நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஏப்ரல் 2025 உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம், 2025-26 (FY26) நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று கணித்துள்ளது. இது 2025 நிதியாண்டில் ஜப்பானின் $4.186 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை முந்தியுள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான IMF-இன் கணிப்பு, இந்தியாவிற்கும் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பரந்த இடைவெளியைக் காட்டுகிறது. 2026 ஆம் ஆண்டில் ஜப்பானின் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி $4.373 டிரில்லியனாக இருக்கும் என கணிக்கப்படும் நிலையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டு 2027 ஆம் ஆண்டில் $4.601 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1433219

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

3 months 2 weeks ago
கிழவி தடக்குப்பட்டு விழும்போது கை முகத்தில் பட்டிருக்கும்! விசுகர் மேடைக்கு அழைக்கப்படுகிறார்! பிரான்ஸ் நாட்டில் மேக்ரோனுக்கு வேறு பெண்களே கிடைக்கவில்லையா!!

தோனி ஐபிஎல் ஓய்வை அறிவிக்க தடையாக இருப்பது என்ன? - 2 முக்கிய காரணங்கள்

3 months 2 weeks ago
எல்லாம் பணத்தாசைதான்! தொனிக்கும், சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகத்திற்கும்! டோனி இல்லாவிட்டால் CSK வெல்லாது என்பதெல்லாம் சும்மா உருவாக்கப்பட்ட மாயை! ரூடராஜ் இம்முறை தொடரிலிருந்து விலக்கியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன! டோனி, ஜடேஜா, அஸ்வின், ஹூடா, திருப்பார்த்தி, விஜய் ஷங்கர், கோட்ச் பிளெமிங் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

3 months 2 weeks ago
உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர் சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது. இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும் நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். 47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் 72 வயதான தனது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433368

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

3 months 2 weeks ago

emmanuel-brigitte-macron-052625-2-21cd0f

உண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதியை அவரது மனைவி அறைந்தாரா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன்  கடந்த சில தினங்களுக்கு முன்னர்  அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றிருந்த நிலையில், அங்கு விமானத்தில் இருந்து இறங்கும் வேளை அவரது மனைவி மக்ரோன் மீது அறைவது போன்றும் அதனை அவர்  சமாளித்துக் கொண்டு விமானத்தில் இருந்து கீழே இறங்குவது போன்றதுமான  காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இமேனுவல் மெக்ரோன்” தானும் தனது மனைவியும்  நகைச்சுவை செய்து விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அது இவ்வளவு பெரிய விஷடமாகும் எனத்  தான் நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

47 வயதான பிரான்ஸ் ஜனாதிபதி  மெக்ரோன் 72 வயதான  தனது ஆசிரியரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்குப் பின்னர்  மெக்ரோனுக்கும் அரசியல் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433368

பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம்

3 months 2 weeks ago
லிவர்பூலின் வெற்றி அணிவகுப்பில் கார் மோதி விபத்து; 50 பேர் காயம்! இங்கிலாந்து நகரில் லிவர்பூல் கால்பந்து கழகத்தின் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட இந்த விபத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 53 வயதான கார் சாரதியான பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக நம்பப்படவில்லை என்று பொலிஸாரின் ஆரம்ப அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்தினை அடுத்து சம்பவ இடத்தில் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்றனர். மேலும் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் குழந்தைகள்/சிறுவர்கள் என்றும் அம்பியூலன்ஸ் சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெரியவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், தெருவில் வரிசையாக நின்றிருந்த ரசிகர் கூட்டத்திற்குள் ஒரு கார் வேகமாக பயணித்து விபத்தை ஏற்படுத்துவதை காண்பிக்கின்றது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் சிலரை முதலில் மோதிய பின்னர் கார் நின்றது. தொடர்ந்து மக்கள் வாகனத்தை நோக்கி விரைந்து வந்து, அதன் கண்ணாடிகளை உடைத்ததாகவும், சாரதி தொடர்ந்து காரை செலுத்தி பலர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. கார் நின்றதும், ஆத்திரமடைந்த ரசிகர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு, அதன் ஜன்னல்களை உடைத்தனர், பின்னர், காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு சாரதியை அவர்கள் அடையவிடாமல் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற ஆண்கள் கால்பந்து அணியான லிவர்பூல் மற்றும் ஊழியர்கள் பிரீமியர் லீக் கிண்ணத்துடன் நகர மையத்தில் திறந்த மேல் பேருந்தில் அணிவகுத்துச் சென்றபோது இலட்சக்கணக்கான ரசிகர்கள் தெருக்களில் வரிசையாக நின்றபோது இந்த சம்பவம் நடந்தது. https://athavannews.com/2025/1433345