Aggregator

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
குழுநிலைப் போட்டிகளின் இறுதிப் போட்டி நாளை செவ்வாய் 27 மே GMT நேரப்படி பிற்பகல் 02:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதன் பின்னர் குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அடுத்த கட்ட Play-Off போட்டிகளில் விளையாடவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 70) செவ்வாய் 27 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB ஆறு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் 17 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஈழப்பிரியன் அல்வாயன் வாத்தியார் சுவி கந்தப்பு அகஸ்தியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசீ வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குழுநிலைகளில் முதலாவதாக வருமா?

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை. கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும். கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும். செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும். பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும். மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை. இயற்கை வலிமையானது.

தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு

3 months 2 weeks ago

தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது.

இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது.

இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த

காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும்.

தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம்.

இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார்.

அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார்.

பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள்.

இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும்.

இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்

500594999_10097305846986296_744021860389

தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு

3 months 2 weeks ago
தமிழீழ தேசிய இன விடுதலை போராட்டத்தின் தேசிய தலைவரின் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் பின்னால் ஒரு வரலாறு உண்டு. அதே போன்று தான் இந்த புகைப்படத்திற்கும் பெரிய வரலாறு உண்டு. இந்த புகைப்படமானது 1987 ஜனவரி 6 ஆம் தியதி தொண்டமானாறு கெருடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பேஸ் ஒன் எனும் முகாமில் 1987 ஜனவரி அன்று இரவு எடுக்கப்பட்டது. இதற்கு முன்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேசியத் தலைவர் தமிழகத்தில் இருந்து வந்த நிலையில், கடைசியாக இந்தியாவில் இருந்து 1987 ஜனவரி 5ஆம் தியதி அன்று தான் புறப்பட்டு மாதகல் வழியாக யாழ்ப்பாணம் வந்தது குறிப்பிடத்தக்கது. தாயகம் திரும்பிய அன்றைய மறு தினமே இந்த முகாமிற்கு தலைவர் வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தளபதி கிட்டு தலைமையில் யாழ்குடா நாடு அன்று ஓரளவு கட்டுப்பாடு ஆக இருந்தது. இந்த முகமானது சிங்கள ராணுவ நிலைகளின் மிக அருகில் இருக்கும் ஒரு அபாயகரமான பகுதியில் இருந்த காவல் முன்னரங்கு நிலை முக்கிய முகாம்களில் ஒன்றாகும். தேசியத் தலைவர் அவர்கள் இந்த முகாமிற்கு வருகை தந்து, அனைவரிடமும் கதைத்து, கலந்துரையாடிக் கொண்டிருந்த பொன்னான தருணங்கள் ஆகும். சில மணி நேரங்களின் பின்பு எடுக்கப்பட்டது தான் இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் பாதி உருவத்தில் முன்னர் நின்று கொண்டிருப்பது வீரச்சாவடைந்த பூலோகம் ஆவார். அடுத்ததாக கைகட்டி கொண்டு நிற்பவர் வீரச்சாவடைந்த கேப்டன் அலன் ஆவார். அவரின் அருகில் நிற்பது வீரச்சாவடைந்த கேப்டன் மோரிஸ் ஆவார். பின்புறம் இருந்து எட்டி பார்த்துக்கொண்டு இருப்பவர் முதல் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் ஆவார். அதேபோன்று வீரச் சாவடைந்த கேப்டன் வினோத் அவர்கள், வீரச் சாவடைந்த கேப்டன் விடுதலை அவர்களும் இப் புகைப்படத்தில் உள்ளனர். தேசிய தலைவரின் அருகில் காற்சட்டையுடன் நிற்பது வீரச்சாவடைந்த கிருபா அவர்கள். கிருபாவின் பின்னால் நிற்பது வீரசாவடைந்த மேஜர் கணேஷ் அவர்கள். கிருபாவின் அருகில் இருப்பது வீரச்சாவடைந்த சுந்தர் அவர்கள். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் கேப்டன் அலன் அவர்களும், கிருபா அவர்களும் 38 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளில் தான் வடமராட்சி ஆபரேஷன் லிபெரேஷனில் கலந்து கொண்டு இதே அன்றைய நாள் அதிகாலையில் வீரச்சாவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஓரிருவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் வீரச்சாவடைந்த மாவீரர்கள். இந்த புகைப்படம் என்பது நமது தாயக வீர வரலாற்றின் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமான புகைப்படம் ஆகும். இவர்களின் வீரவரலாற்றின் வழியில் நமது மண்ணின் விடுதலைக்கான பயணம் தொடரும்

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு செய்த வீரர்கள் போல் தெரிவு செய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இந்தியா ஒரு பரீட்சாத்தமாக பார்க்கிறதா எனவும் எண்ண தோன்றுகிறது.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும் பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪. குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
எனக்கு தெரிந்த வரையில் 1,... படிக்க 2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம் இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன் கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.

சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்

3 months 2 weeks ago
Doctorஸ் தங்களின் இடுப்புக் கொழுப்பு, தொந்திக் கொழுப்பு போன்றவற்றை குறைத்து விட்டு வந்து பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து இருக்கலாம்.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது. மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣. உண்மையிலேயே கிடுக்கு பிடி கேள்வி. இரெண்டு பேரும் எங்களுக்கு விருந்து வையுங்கோ, சாப்பிட்டு பார்த்து ஆர் பெரிய கிடா வெட்டி எண்டு நாங்கள் சொல்லுறம்🤣

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
தீவகமும் நல்லூரும் அயற்கிராமங்கள் இல்லை 🤣. அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள். யாராவது தான் வாழும் கிராமத்தை விட்டு பக்கத்து கிராமத்துக்கு இடம் பெயர்வார்களா? மறுபடியும் பச்சை பொய். இப்படி நான் எழுதவில்லை. ஆதாரம் காட்டவும் அல்லது மன்னிப்பு கேட்கவும். மீண்டும் பச்சை பொய்! நான் இங்கே இவர்கள் இருவரும் 600 வருடத்துக்கு முன் வந்தவர் என எங்கும் எழுதவில்லை. நீங்கள் எதிர்க்கும் தெலுங்கு வம்சாவழியினர் பல விஜய நகர அரசோடு வந்தவர்கள். அதைதான் சொல்லி உள்ளேன். இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள் என எனக்கு தெரியாது. பொய்யே உன் மறுபெயர்தான் விசுகு அண்ணா வா?

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
இங்லாந் வீர‌ர்க‌ள் டெஸ்ட் விளையாட்டை அதிர‌டியாக‌ விளையாடுகின‌ம்......................இந்தியா அணியில் தெரிவான‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் நிதான‌மாக‌ நின்று விளையாட‌ மாட்டின‌ம்..........................ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை தான் டெஸ்ட் போட்டிக்கும் தெரிவு செய்து இருக்கின‌ம்......................இங்லாந் தொட‌ரை வெல்லும்👍.......................................

கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு!

3 months 2 weeks ago
அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கவில்லை! எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவரான ஏ.எல்.எம். அதாஉல்லாவை களமிறக்குவதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்களில் வெளிவந்திக்கும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோருடன் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மையே. இந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும் மற்றும் சில பொதுவான விடயங்களுமே பேசப்பட்டன. மேலும், முஸ்லிம் கட்சிகளுக்கிடையேயும் முக்கியஸ்தர்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவைக் களமிறக்குவது குறித்தோ அதற்கு எமது கட்சி இணக்கம் தெரிவிப்பது தொடர்பிலோ இந்தச் சந்திப்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் மு.கா. செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார். https://seithy.com/breifNews.php?newsID=333796&category=TamilNews&language=tamil

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
வார‌ செவ்வாய் கிழ‌மையோட‌ ஜ‌பிஎல் திருவிழா முடிவ‌டைகிற‌து..................... நாளைக்கு பெங்க‌ளூர் வென்றால் இரண்டாவ‌து இட‌ம்...............முத‌ல் இட‌த்தில் நின்ற‌ குஜ‌ராத் நாளைக்கு மூன்றாம் இட‌த்துக்கு வ‌ர‌க் கூடும்.....................................

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 69வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடியான 57 ஓட்டங்களுடனுன் ரியான் ரிக்கெல்ரன், ஹார்டிக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரின் கமியோ ஆட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யாவின் புயல்வேகத்தில் எடுத்த 62 ஓட்டங்களுடனும், ஜொஷ் இங்கிலிஸின் அதிரடிவேகத்தில் எடுத்த 73 ஓட்டங்களுடனும், ஷ்ரேயஸ் ஐயரின் கமியோ ஆட்டத்துடனும் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்

3 months 2 weeks ago
கோவில் திருவிழாவிற்கு வந்த மேளகாரருக்கு, ஆடு வெட்டி விருந்து வைத்த பரம்பரையில் வந்த ஆட்களுக்கு, பதில் சொல்லுறது இல்லை. 😂 🤣