Aggregator

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

3 months 2 weeks ago
தாய்லாந்து – கம்போடியா இடையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் மோதல்! குறைந்தது 16 பேரைக் கொன்ற அதிகரித்து வரும் எல்லை மோதலை உடனடியாக நிறுத்துமாறு பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து அழைப்புகள் வந்த போதிலும், தாய்லாந்தும் கம்போடியாவும் வெள்ளிக்கிழமை (25) கனரக பீரங்கி தாக்குதலை பரிமாறிக்கொண்டன. அதன்படி, ஒரு தசாப்தத்திற்கும் மேலான அவர்களின் மோசமான மோதல் இரண்டாவது நாளாக நீடித்தது. தாய்லாந்தின் இராணுவம் உபோன் ரட்சதானி மற்றும் சுரின் மாகாணங்களில் அதிகாலையில் தாக்குதல்கள் நடந்ததாகவும், கம்போடியா பீரங்கி மற்றும் ரஷ்ய தயாரிப்பான BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தியதாகவும் கூறியது. மோதல் பகுதிகளில் இருந்து குறைந்தது 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். “கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகளைப் பயன்படுத்தி கம்போடியாப் படைகள் தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன” என்று தாய் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தந்திரோபாய சூழ்நிலைக்கு ஏற்ப தாய்லாந்து படைகள் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. வியாழக்கிழமை (24) ஒரு சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் மோதலைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இறையாண்மை சர்ச்சைக்குரிய ஒரு எல்லை பகுதியாகும். தாய்லாந்து முந்தைய இரவு கம்போடிய தலைநகர் புனோம் பென்னுக்கான அதன் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு சில மணிநேரங்களுக்குப் பின்னர் வியாழக்கிழமை மோதல் வெடித்தது. வியாழக்கிழமை பிற்பகுதியில் தாய்லாந்து இறப்பு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 14 பேர் பொதுமக்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 15 வீரர்கள் உட்பட 46 பேர் காயமடைந்ததாக அது கூறியது. கம்போடியாவின் தேசிய அரசாங்கம் எந்தவொரு உயிரிழப்புகள் அல்லது பொதுமக்களின் வெளியேற்றங்கள் குறித்த விவரங்களை வழங்கவில்லை. https://athavannews.com/2025/1440587

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
தம்மை தாமே “இரும்பு மனிதர்” என நினைத்து கொள்வோர்தான் எம் ஆர் ஐ களுக்கு பயப்படவேண்டும் ஐயா. ஏனையோருக்கு அவை நோய் அறிகுறிகளை கண்டு பிடித்து, நிவாரணம் தேட உதவும் கருகிவிகள்.

ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

3 months 2 weeks ago
அந்நாட்களில் ஆடிஅமாவாசை விரதம் பிடிப்பவர்கள் கீரிமலைக்குப் போகும் வழியில் பற்றைகளில் அந்தப் பருவத்தில் மட்டும் இந்தக் காய்கள் நிறையக் காய்த்திருக்கும் ........ வரும்போதுஅவற்றைப் பிடுங்கிக் கொண்டு வருவார்கள் . ......... இதனைப் பொரித்து விரதத்துக்கு சாப்பிடுமுன் முதலாவதாக இந்தக் காயின் பொரியலை சப்புவார்கள் . ......அவ்வளவு கசப்பு . ........ அது ஏன் என்றால் ஐயாவின் நினைவையும் கவலையையும் மறப்பதற்கு ( ஆச்சி சொன்னவ ) ........ சரி .....இது கிடைக்காத இடங்களில் என்ன செய்யலாம் . ........ பாவக்காயை பொரித்து (அதுவும் பேய் பாவக்காய் என்று ஒரு சிறிய குண்டுப் பாவக்காய் உண்டு, சாதாரண பாவைக்காயும் பரவாயில்லை ) அதை முதலில் சப்பிவிட்டு ஏனையவற்றைச் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம் . ........! நான் பிறந்த நாளில் இருந்து இந்த விரதம் பிடித்து வருகிறேன் . ....... மாவிட்டபுரத்தில் இருந்து கொல்லங்கலட்டியூடாக வெறுங்கால் நடையாக சின்னையா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்வார் . ......... பின் அவரோடு சைக்கிளில் ........ பின், நான் தனியாக சைக்கிளில் கீரிமலை சென்று கடலில் நீராடிவிட்டு வந்தது இன்றும் மனதில் பசுமையாக . .......!

ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து?

3 months 2 weeks ago
ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து? – பகுதி 2 24 Jul 2025, 9:38 AM பாஸ்கர் செல்வராஜ் ஆட்சிமாற்றத்துக்கான போரில் அசையாமல் நி(வெ)ன்ற ஈரான் இதுவரையிலும் மின்சாரம், எண்ணெய், எரிவாயு கொண்டு உற்பத்தி செய்து இணையம் மூலம் இணைத்து இயக்கும் பொருள்கள் என்பதாக உலக உற்பத்தியும் அதற்குத் தேவையான டாலர் உலகப்பணமாகவும் அதனை மையப்படுத்திய உலக ஒழுங்கும் இருந்து வந்தது. அடுத்த மாற்று எரிபொருளில் உற்பத்தியாகி இயங்கும் மின்னணு மின்கல பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப மூலதன பொருள்களின் உற்பத்தியை சீனா அடைந்து ரசியா, ஈரான் போன்ற நாடுகள் டாலர் அல்லாத நாணயங்களில் மரபான எரிபொருளை விற்க முனைந்த நிலையில் டாலர்மைய உலக ஒழுங்கு உடைப்பைக் கண்டு வந்தது. டாலரின் பங்கு வணிகத்தில் குறைந்து வந்தது. இதனால் சந்தையில் டாலர் மூலதனம் மிகுந்திருந்த போது கொரோனா வந்தது. அந்தக் காலத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தவிர்க்க வெளியிடப்பட்ட டாலரும் சந்தைக்குள் நுழைந்ததால் சந்தை டாலர் மிகைமூலதனத்தால் நிரம்பி வழிந்தது. அது உலகம் முழுக்க பாய்ந்து சொத்துகளின் மதிப்பை உயர்த்தி உலக நாணயங்களின் மதிப்பை நீர்த்து மக்களின் வருமானத்தைக் குறைத்து பொருள்களின் விலைவாசியை உயர்த்தி அதனை வாங்கி நுகர்ந்த மக்களின் வாங்கும்திறனைக் குறைத்ததால் பொருள் விற்பனை சரிந்து வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மாற்று உற்பத்தியில் ஈடுபடும் மதிப்புமிக்க சீனர்களின் சொத்தை டாலர் மூலதனம் அடைய முயல்கிறது. இப்படி டாலர்மைய உற்பத்தி உடைப்பைத் தடுத்து மாற்று உற்பத்தியின் சொத்துகளை அடைவதற்கான பொருளாதாரத் தேவைக்கான அமெரிக்கர்களின் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது. ஈரானின் மீதான தாக்குதலின் நோக்கம் சீனர்களுடனான வணிகப்போர், மின்னணு தொழில்நுட்ப போர்கள் தோல்வியடைந்த நிலையில் முந்தைய சனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகம் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்து ரசியாவைத் தூண்டி எழுந்த போரின் வழியாக ரசியாவைத் துண்டாடி நிலைகுலைய வைத்து அவர்களின் வளத்தையும் சந்தையையும் கைப்பற்றி டாலர்மைய எரிபொருள் ஒழுங்கைக் காக்க முனைந்தது. ரசிய வீழ்ச்சியில் தனிமைப்படும் சீனாவை வீழ்த்தி அடுத்து அதன் சொத்தைக் கைப்பற்றுவது அந்நோக்கத்தின் நீட்சி. அந்த ஆட்சிமாற்ற சீர்குலைவு முயற்சியில் தோல்வியடைந்து ரசியாவின் ஐரோப்பிய சந்தையை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசியர்களுடன் சேர்ந்து கொண்டு ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொண்டு ஈரானை விலக்கி சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. அதனை ஐரோப்பியர்கள் தடுத்துக் கொண்டு ரசியர்களும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் டாலர் அல்லாத நாணயத்தில் எரிபொருள் விற்கும் ஈரானின் பக்கம் திரும்பினார்கள். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருளை ஐரோப்பிய, இந்திய சந்தைகளுக்கு டாலரில் ஏற்றுமதி செய்து ஐரோப்பிய, மேற்காசிய, இந்தியப் பொருளாதார மண்டலத்தை (IMEC) ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அதன் மீது தாக்குதலைத் தொடுத்து இருக்கிறார்கள். தாக்குதல் தந்திரங்கள், உத்திகள் நோக்கத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் வளத்தைக் காத்து நிற்கும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமைகளையும் அணு ஆய்வு விஞ்ஞானிகளையும் கொன்று ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அழித்தும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வழியின்றி ஏவுகணைகளை ஏவும் ஏவூர்திகளை அழித்தும் அதிர்ச்சியூட்டி நிலைகுலைய வைத்தார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஈரானியர்கள் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியில் ஈடுபடவில்லை. மாறாக உடனடியாக இழப்புகளை ஏற்று மாற்று ஏற்படுகளைச் செய்து இசுரேலின் மீதான தாக்குதலைத் தொடங்கியது ஈரான். முதல் ஆட்சிமாற்ற நோக்கம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த எதிர்த்து தாக்கும் ஏவுகணை வலிமையை இல்லாமல் செய்யும் வகையில் ஏவூர்திகள், ஏவுகணை உற்பத்தி நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், இராணுவ கட்டுப்பாட்டு மையங்களின் மீது இசுரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எரிபொருள் ஏற்றுமதி மையங்களைத் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்க்கலாம் என்றாலும் பதிலுக்கு எவரும் எரிபொருளை ஏற்றுமதி செய்யாதவாறு அவர்கள் ஹெர்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரம் தகர்க்கப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களை வீழ்த்த முடியாத நிலையில் அவர்களின் ஆயுத உற்பத்தி மற்றும் விமான தளத்தோடு அந்தச் சிறிய நாட்டைத் தாங்கி நிற்கும் மதிப்புமிக்க மின்னணு, உயிரியல், இராணுவ உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடங்கள், வைர பங்குச்சந்தை மையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹைபா துறைமுகம் போன்ற பொருளாதார நிலைகளைத் தாக்கியது ஈரான். ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் செயலற்று போனதால் எந்த எதிர்ப்பும் இன்றி இசுரேலிய போர் விமானங்கள் புகுந்து அந்நாட்டைத் தாக்கின. அதேபோல இசுரேலின் மூன்று அடுக்கு இரும்புக் கவிகை (iron dome), டேவிட் கவண் (David sling), தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட முக்கிய நிலைகளைத் தாக்கி இசுரேலிய வான்வெளி பாதுகாப்பை உடைக்கும் வல்லமையைக் காட்டியது ஈரான். இசுரேல் தாக்குதல் அளவைக் கூட்டுவதற்கு ஏற்ப மீவிரைவு ஏவுகணைகள் (hypersonic), அதிக சேதம் விளைவிக்கும் அரை டன் முதல் ஒன்றரை டன் வரை வெடிபொருள் நிரப்பிய ஏவுகணைகள் என ஒவ்வொன்றாக அனுப்பி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் எண்பது விழுக்காடு ஏவுகணைகளைத் தடுத்த இசுரேல் பின்னர் ஐம்பது 50-60 விழுக்காடு மட்டுமே தடுக்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த தாக்குதலில் இசுரேலின் இரண்டாவது இலக்கான ஈரானின் ஏவுகணை வலிமையை உடைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்து ஏவுகணை எதிர்ப்பும் பலமிழந்து பெருமளவு சேதத்தை எதிர்கொண்ட நிலையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தாக்குதல் பலத்தைக் கூட்ட அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்க வேண்டும் என்ற நிலை. இறுதியில் வெற்றி யாருக்கு? போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக பாதுகாப்பற்று நிற்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி அதன் அணு ஆயுத கட்டமைப்புகளை அழித்து மூன்றாவது நோக்கத்தையேனும் அடையும் சாத்தியம் இருந்தது. மற்ற நேரங்களில் அதிக எடைகொண்ட வெடிக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் பி-2 போர்விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புண்டு. வலிமையான கிரானைட் பாறைகளாலான மலையின்கீழ் தொண்ணூறு மீட்டருக்கும் கீழ் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தைத் தகர்க்க அணு குண்டுகளால் மட்டுமே முடியும். அவ்வாறான அளவில் சிறிய போர்த்தந்திர குண்டை (strategic bomb) அமெரிக்கா பயன்படுத்தினால் உலகக் கண்டனங்களை எதிர்கொள்வதோடு மற்றவர்கள் பயன்படுத்தவும் வழிசெய்ததாகிவிடும். பதுங்குகுழிகளைத் தகர்க்கும் ஜிபியூ குண்டுகளைப் பயன்படுத்தினால் சுரங்கத்தைத் தகர்த்து செறிவூட்டும் நிலையத்தைச் செயலற்றதாக்க முடியும் என்று சொல்ல முடியாத குழப்ப நிலை. இறுதியில் நுழைவு வாயில்கள் சுரங்கத்துக்கான காற்றோட்ட திறப்புகள் உள்ள இடத்தில் குறிபார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசினால் குகை தாகர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டது. எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டதற்கான அறிகுறியான அணுக்கசிவு, பாறைகள் நொறுங்கி விழுந்த பள்ளம் என எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் வெற்றி என அறிவித்து ஈரானுடன் பேசி போர் நிறுத்தம் அறிவித்தது. இசுரேல் நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்; அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது அடையாளப்பூர்வமான தாக்குதல் நடத்துவோம் என்று பேசி வைத்துக்கொண்டு அவ்வாறே ஈரான் தாக்குதலும் நடத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெரிந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சேதம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அங்கிருந்த பெரிய அலைக்கொடியைச் (antenna) சேதப்படுத்தி அமெரிக்கர்களின் எறிகணை எதிர்ப்பின் போதாமையை அம்பலப்படுத்தி தனது எறிகணை வலிமையையை ஈரான் காட்டி இருக்கிறது. இறுதியில் ஆட்சி மாற்றம், ஏவுகணை வலிமையைத் தகர்த்தல், அணுவாயுத திட்டத்தை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் வெற்றியடையாமல் பின்வாங்கிய அமெரிக்க-இசுரேலிய நாடுகளின் ஈரானுடனான குறுகியகால போர் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. பெருமிழப்புகளைச் சந்தித்தாலும் எதிரிகள் தமது இலக்குகளை அடைய விடாமல் தடுத்து நிலைத்து நின்றதன் மூலம் ஈரான் இந்தப் போரில் வெற்றிபெற்று இருக்கிறது. தோல்வியை அடுத்த மாற்றங்கள் ஈரான்-இசுரேலிய மோதலின் மையம் இந்தப் பகுதியின் எரிபொருளை ஏற்றுமதி செய்தும், ஆசிய-ஐரோப்பிய வணிகத்தின் மையமாக விளங்கியும் அதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதுதான். இரண்டு நாடுகளின் அமைவிடம் அதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட, இசுரேல் ஈரானை நிலைகுலைக்க வைக்க முயல்வதைப்போல, ஈரான் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு தனது எதிர்த்தாக்குதலின் மூலம் எதிரியின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையை உடைத்து நிலைகுலைய வைப்பதாகவே இருக்கமுடியும். இசுரேலின் பொருளாதார இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நெதன்யாகுவின் அரசு நிலைக்கவும் அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் போர்களின் வழியாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரானின் நேரடியான ஏவுகணைத் தாக்குதல்கள் அதனை வேகப்படுத்தி இருக்கின்றன. உயிருக்குப் பயந்து இரயில், மகிழுந்து நிறுத்தங்களில் படுக்கையை விரித்து படுக்கவைத்த ஈரானின் தாக்குதல் யூத மக்களின் மனதில் பாதுகாப்பின்மையை விதைத்து இருக்கிறது. அதனால் போர் நின்றால் அங்கே அரசியல் போராட்டம் வெடித்து அந்த அரசு நிலைக்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் ஈரானின் போர்க்கள உத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க முடியும். தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவந்து அவர்களை மேற்காசியாவில் இருந்து வெளியேற்றி இருநாடுகளையும் ஒருசேர வெல்லும் வல்லமை ஈரானிடம் இல்லை. அப்படியான முடிவு போரை நீட்டித்து இசுரேலைக் காத்து ஈரானின் இழப்பை மேலும் கூட்டுவதாகவே இருக்கும். அவ்வாறான தவறைச் செய்யாமல் போர் நிறுத்த முடிவெடுத்து தற்காத்தல், தாக்குதல் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று இருக்கிறது ஈரான். ஆயுத வலிமை கொண்டு நடத்தப்படும் போரரசியல் உழைத்து உருவாக்கிய உற்பத்தி பொருள் செல்வத்தைக் காப்பது (defensive) உழைக்காமல் மற்றவர்களின் உற்பத்தி செல்வத்தைக் கைப்பற்றுவது (offensive) ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. சீன, ரசிய, ஈரானிய போர்களில் அமெரிக்காவின் தோல்வி அவர்களின் தகவல்தொடர்பு, நிதிய, போர்க் கருவிகளினாலான ஆயுதங்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெற்றிபெறும் வலிமையை இழந்து விட்டத்தையும் மற்ற நாடுகள் உற்பத்தியைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெருக்கிக் கொண்டதையும் காட்டுகிறது. நேரடி, மறைமுகப் போர்களில் ஈடுபட்டு டிரில்லியன் கணக்கில் செலவுசெய்து தோற்றுவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இனி சீன, ரசிய, ஈரானிய நாடுகளுடன் நேரடி போர்களில் ஈடுபட்டு மடிவது அல்லது தனது இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுடன் உலகைப் பகிர்ந்து கொண்டு இணையாக பல்துருவ உலகில் வாழ்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும். போரில் வென்று உடைந்துவிட்ட டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை மீட்பது இனி சாத்தியமே இல்லை. ஓரிரு ஆண்டுகளில் புதிய உற்பத்தியைப் பெருக்கி அதற்கான உலக சந்தையைக் கைப்பற்றுவதும் சாத்தியமில்லை. இனி பேச்சுவார்த்தையின் மூலம் வரிவிதிப்பு போரைப் பயன்படுத்தி உருட்டி மிரட்டி இழப்பைக் குறைத்து பலனைக் கூட்ட மட்டுமே முடியும். எனவே புதிய பல்துருவ உலகமே எதார்த்தமானது. அதன் தொடக்கம் அனைத்து உற்பத்தி வலிமை மிக்க நாடுகளும் சமமாக பொதுவாக அவரவர் நாணயங்களில் வணிகம் செய்வது என்பதாக மாறிவிட்டது. இதன் முழுமை போர்கள் மற்றும் போராட்டத்தின் ஊடாக எல்லோர்க்கும் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும். அப்படியான விதியின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முழுமையாக நடைமுறைக்கு வரும் நாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் இறுதியை அறிவிக்கும் நாளாகவும் அதனுள் கருவாகி உருவாகி வளர்ந்து நிற்கும் சோசலிச சமூகம் உறுதியாக சோசலிச மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உறுதி செய்யும் நாளாகவும் இருக்கும் https://minnambalam.com/iran-wins-war-for-regime-change/

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

3 months 2 weeks ago

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர்.

கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'தமிழ்நாடு கள் இயக்கம்' நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது.

அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளை அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா?

கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா?

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா.

கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது?

இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார்.

''இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.'' என்கிறார் அவர்.

பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, "அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்," என்கிறார்.

தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், "அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்," என்கிறார்.

"கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார் வந்தனா.

இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால்

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்

இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை,'' என்கிறார் வந்தனா.

கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?

கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் உணவியலாளர் வந்தனா, ''எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.'' என்கிறார்.

பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார்.

கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா?

கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா?

கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் வந்தனா.

இதை மேலும் விளக்கிய அவர், "அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்," என்கிறார்.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.'

உடல் வெப்பத்தை கள் குறைக்குமா?

உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது?

"கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் வந்தனா.

கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது?

கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, "ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்புச் சுவை பெறுகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்" என்கிறார்.

இதை மேலும் விவரித்த அவர், ''ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,'' என்றார்.

சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார்.

தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார்.

கள், மது, ஆல்கஹால், தமிழ்நாடு, போதைப் பொருள், உணவு

படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன்.

''கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,'' என்றார் கார்த்திகேயன்.

கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர்.

''உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.'' என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78n8wgpey8o

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

3 months 2 weeks ago
கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கள் குடித்து 12 பேர் வரை அண்மையில் உயிரிழந்துள்ளனர். கள்ளில் கலப்படம் செய்ததே இதற்குக் காரணமென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியது பேசுபொருளானது. சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பனை மரமேறி போராட்டம் நடத்தினார். மறுபுறம் கள் இறக்க புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 'தமிழ்நாடு கள் இயக்கம்' நீண்ட காலமாக குரல் எழுப்பி வருகிறது. அரசியல்ரீதியாக இந்த கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வரும் நிலையில், கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளை அனுமதிக்கக்கோரி போராடுபவர்கள் கூறுவதைப் போல, கள் போதையற்ற உணவுப் பொருளா? கள் உணவுப்பொருள் என்ற வாதம் சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளை போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், உணவுப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் விவாதங்கள் வலுத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில், கள் குடித்ததில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் அல்பிரஸோலம் மற்றும் டயஸெபம் (alprazolam and diazepam) கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெலங்கானா மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெலுங்கு மற்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கள்ளில் கலப்படம் செய்யப்பட்டதால் தான் உயிருக்கு ஆபத்தாக மாறியதாக கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் கள் உண்பதில் சில நன்மைகள் இருந்தாலும், சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித தீமைகளையும் கள்ளும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கள்ளைக் குடிப்பதால் உடலுக்கு எந்தவிதமான விளைவு ஏற்படும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு அது ஆரோக்கியமான பானமா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்த உணவியல் நிபுணர் வந்தனாவிடம் பிபிசி தமிழ் பேசியது. படக்குறிப்பு, கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும், அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும் என்கிறார் உணவியலாளர் வந்தனா. கள் உண்மையிலேயே உணவுப் பொருள் என்ற கூற்றை மருத்துவ உலகம் எப்படிப் பார்க்கிறது? இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் வந்தனா, பனை மற்றும் தென்னை மரங்களின் குருத்துகளிலிருந்து இயற்கையாகச் சுரக்கும் திரவம் நொதித்தல் (fermentation) நிலையை அடைவதற்கு முன் பதநீர் மற்றும் நீரா போன்ற பானங்களாக எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் ஃப்ரெஷ் ஆக எடுக்கப்படும் இந்த இயற்கை பானங்களில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் (Minerals) இருக்கின்றன, என்றார். ''இவற்றைக் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து நன்றாயிருக்கும். நிறைய ஆன்டிஆக்சிடென்ட்ஸ் கிடைக்கும். இயற்கையாகவே உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மையும் இந்த பானங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த பானங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருப்பதால் சர்க்கரை அளவை (Glucose and fructose) அதிகரித்து விடும். நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் குடித்தால் சட்டென்று சர்க்கரை அளவு எகிறிவிடும்.'' என்கிறார் அவர். பதநீர், நீரா போன்றவை விரைவில் கெட்டுப்போகும் உணவுப்பொருட்கள் என்பதால், உடனே பதப்படுத்தாவிடில் சீக்கிரமே பாக்டீரியா கலப்புள்ள உணவாகிவிடும் என்று கூறும் உணவியலாளர் வந்தனா, "அதனால் வயிறு உப்புசம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்," என்கிறார். தொடர்ந்து இந்த இயற்கை பானத்தை நொதிக்கச் செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள்தான் கள் எனக்கூறும் அவர், "அதில் உடலுக்கு பயனளிக்கும் நல்ல நுண்ணுயிரிகளும் (Microbiota) கொஞ்சம் கிடைக்கும்," என்கிறார். "கள்ளில் இயற்கையாக உருவாகும் ஆல்கஹால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை 4 – 5 சதவீதமாக இருக்கும். அந்த நேரத்தைத் தாண்டினால் அதன் தன்மை அதிகமாகும். இயற்கையாக உருவானாலும், ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும், கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை, ஒவ்வாமை இருப்பின் வாந்தி, பேதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்,'' என்கிறார் வந்தனா. இயற்கை ஆல்கஹால் vs செயற்கை ஆல்கஹால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆல்கஹாலை எந்த விதத்தில் எடுத்துக்கொண்டாலும் கல்லீரல் பாதிப்பு, மூளையில் மந்தத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் இயற்கையாக உருவாகும் இத்தகைய ஆல்கஹாலும், செயற்கையாக உருவாக்கப்படும் ஆல்கஹாலும் உடல்ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்புகளில் ஏதாவது வித்தியாசங்கள் இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ''ஏறத்தாழ ஒரு பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவுதான் கள்ளிலும் இருக்கிறது. இயற்கையான நொதியால் உருவான ஆல்கஹால் என்ற வகையில் கள்ளில் ஒரு சில நல்ல நுண்ணுயிரிகளால் ப்ரோபயாடிக் உருவாகும் என்பதைத் தவிர, சிந்தெடிக் ஆல்கஹால் ஏற்படுத்தும் எல்லாவித உடல்ரீதியான பாதிப்பையும் இந்த ஆல்கஹாலும் ஏற்படுத்தும். இதில் இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை,'' என்கிறார் வந்தனா. கள்ளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா? கள் இயற்கையானது என்ற கூற்றை முன்வைக்கும் ஒரு தரப்பு அதை பறைசாற்ற குழந்தைகளுக்கும் கள்ளை சிறிய அளவில் கொடுக்கிறது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் உணவியலாளர் வந்தனா, ''எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல. உலக சுகாதார நிறுவனம் (WHO), உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (Food and Drug Administration–FDA) போன்றவை, குழந்தைகளுக்கான மருந்துகளில் எவ்வளவு சதவீதம் ஆல்கஹாலை அனுமதிக்கலாம் என்பதை வரையறுத்துக் கூறியுள்ளன.'' என்கிறார். பச்சிளங்குழந்தையிலிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தை வரையிலும் அதிகபட்சம் 0.5 சதவீதம் ஆல்கஹால்தான் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக்கூறும் வந்தனா, அதற்கு மேல் மருந்தாகக் கூட அதை அனுமதிப்பதில்லை என்கிறார். கள் குடித்தால் பசி, செரிமானம் அதிகரிக்குமா? கள் குடித்தால் நன்றாகப் பசிக்கும், செரிமான சக்தி நன்றாயிருக்கும் என்பது உண்மைதானா? கள்ளில் இருக்கும் ப்ரோபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் இருக்கும் நுண்ணியிரிகளை நன்றாக வளர்த்துக் கொடுத்து பசியைத் துாண்டும் என்பதும், அதனால் நன்றாகச் சாப்பிடலாம் என்பதும் உண்மை. ஆனால் அது ஆல்கஹால் உதவியால் துாண்டப்படும் பசி என்பதால் உணவியல் நிபுணர்கள் யாரும் அதைப் பரிந்துரைப்பதில்லை, என்கிறார் வந்தனா. இதை மேலும் விளக்கிய அவர், "அதைவிட வடித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றுவதால் நமக்கு இயற்கையாகக் கிடைக்கும் நீராகாரம்தான் மிகச்சிறந்த பானம். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. அதில் தயிர் அல்லது மோர் சேர்த்தால் உடலுக்குக் குளிர்ச்சியும் கூடுதலாகக் கிடைக்கும். வயதானவர்களாக இருந்தால் தயிரைத் தவிர்த்து மோர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தயிர் சேர்த்துக் கொடுப்பதால் கொழுப்புச்சத்தும் சேரும் என்பதால் பெரிதும் பயனளிக்கும்," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு கள் கொடுப்பது நல்லதல்ல.' உடல் வெப்பத்தை கள் குறைக்குமா? உடலின் வெப்பத்தைக் குறைக்க கள் உதவும் என்கிறார்கள். அதில் எந்தளவு உண்மை இருக்கிறது? "கள் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் அதிலிருக்கும் ஆல்கஹால் தன்மை, மீண்டும் மீண்டும் அதைத்தேட வைக்கும் ஓர் உணர்வை உருவாக்கிவிடும் என்பதால் தேவையற்ற விதமாக போதைக்குள் விழச்செய்து, வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்கிறார் வந்தனா. கள் எப்படி இயற்கையாக போதைப் பொருளாகிறது? கள் இயற்கையாகவே எப்படி போதைப்பொருளாக மாறுகிறது, அதிலுள்ள ஆல்கஹால் அளவு எவ்வளவு என்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் (Microbiologist) கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது. நொதித்தல் (Fermentation) குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் இதுபற்றி விளக்கிய போது, "ஊறுகாய், தயிர், இட்லி போன்ற உணவுப் பொருட்கள் அனைத்துமே இயற்கையாக நொதிக்கப்பட்ட பொருட்கள்தான். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஒயினும் இந்த முறையில்தான் புளிப்புச் சுவை பெறுகிறது. ஆனால் பாலில் நாம் சேர்க்கும் உறை மோரின் தன்மையைப் பொறுத்து, தயிரின் தன்மை மாறும்" என்கிறார். இதை மேலும் விவரித்த அவர், ''ஒயினில் மேலும் சில நுண்ணுயிரிகளை உட்செலுத்தி ஆல்கஹால் அளவை அதிகப்படுத்துவார்கள். ஆனால் கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம்தான். கள்ளில் அதிகபட்சமாக 4 லிருந்து 5 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் அளவு இருக்கும். வேறு ஏதாவது பொருள் செயற்கையாகச் சேர்க்கப்படும் பட்சத்தில் அதன் ஆல்கஹால் அளவு அதிகரிக்கலாம். பிரெட் சாப்பிடும்போதும் நமக்கு ஒருவிதமான மந்தநிலை ஏற்படவும் நொதித்தலே காரணம்,'' என்றார். சில பிரெட்களில் துளைதுளையாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் கார்த்திகேயன், நொதித்தலால் பிரெட்களில் கார்பன் டை ஆக்சைடும், ஆல்கஹாலும் உருவாகும் என்பதே அதைச் சாப்பிடும்போது ஏற்படும் மந்தநிலைக்குக் காரணம் என்கிறார். ஆனால் எவ்வளவு நல்ல சக்தியுள்ள மரத்திலிருந்து உருவாகும் கள்ளிலும் 5 அல்லது 6 சதவீதத்துக்கு மேல் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதையும் பேராசிரியர் கார்த்திகேயன் விளக்கினார். தென்னை, பனை என எந்த வகைக் கள்ளுக்கும் இது பொருந்தும் என்கிறார். படக்குறிப்பு, கள் முழுக்க முழுக்க இயற்கையாக நொதித்தலில் உருவாகும் பானம் தான் என்கிறார் பேராசிரியர் கார்த்திகேயன். ''கள்ளில் குறைவான அளவு ஆல்கஹால் இருப்பதால்தான், லிட்டர் கணக்கில் உட்கொள்ளப்படுகிறது. மது பானங்களை மில்லி கணக்கில் எடுத்தாலே போதை அதிகமாவதற்கு அதில் சிந்தெடிக் ஆல்கஹால் அதிகளவு இருப்பதே காரணம். ஆனால் நொதித்தல் தன்மையால் உருவாகும் கள்ளில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் உள்ளிட்ட சில சாதக அம்சங்கள் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த கூற்றை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் உள்ளன,'' என்றார் கார்த்திகேயன். கள் இறக்கப்பட்டு நாளாக ஆக அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்குமென்ற கருத்தை நிராகரிக்கும் பேராசிரியர் கார்த்திகேயன், கள்ளில் இருக்கும் சர்க்கரை அளவு உருமாறியே கார்பன் டை ஆக்சைடு, ஆல்கஹால் போன்ற கூறுகளாக மாறுகிறது. கள் குடிக்கும்போது, நாவில் பட்டதும் சுறுசுறுவென்ற உணர்வு ஏற்பட கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்கிறார். ஒரு முறை நொதித்தலில் வேறு நிலைக்கு மாறியபின் மீண்டும் ஆல்கஹால் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர். ''உதாரணமாக இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒயினை ஆண்டுக்கணக்கில் புதைத்து வைப்பார்கள். அதன் ஆண்டின் அளவுக்கேற்ப அதன் மதிப்பும் உயரும். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஆவதால் அதிலுள்ள ஆல்கஹால் அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில் ஆண்டுக்கணக்கில் நொதித்தால் பல நன்மைகளை உருவாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகும். அது உடலுக்கு பல விதங்களில் நன்மை தரும். அதற்கான மதிப்புதான் அந்த அதிகவிலை.'' என்றும் விளக்கினார் பேராசிரியர் கார்த்திகேயன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c78n8wgpey8o

ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து?

3 months 2 weeks ago
ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன? 23 Jul 2025, 6:30 AM பாஸ்கர் செல்வராஜ் எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது. தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன. அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரசியாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இசுரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரசிய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது. பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புதினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம். உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame) இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டாலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான். பெட்ரோடாலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டாலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த ஒழுங்கு ரசியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டாலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டாலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டாலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும். அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டாலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டாலர் சுழற்சியின்றியும் இப்படி டாலரை அச்சடித்ததாலும் சந்தையில் டாலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டாலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டாலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது. அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு. இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டாலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டாலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டாலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான 1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது, 2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டாலர் நிதிமூலதனம் அடைவது ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது. போருக்கு முந்தைய ஈரான்-இசுரேலிய சூழல் 5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டாலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டாலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது. ரசியாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரசியாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பாலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இசுரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இசுரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பாலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இசுரேல். ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இசுரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இசுரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இசுரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம். எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இசுரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது. கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரசிய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது. எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரசிய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரசியர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரசிய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரசியர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம். ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரசியாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரசிய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம். இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட டிரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இசுரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இசுரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இசுரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது. மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இசுலாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள். தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது. இதன்பிறகு நடந்தது என்ன?! https://minnambalam.com/iran-that-avoided-the-regime-change-what-next-1/

ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து?

3 months 2 weeks ago

ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன?

23 Jul 2025, 6:30 AM

ihhhhh.jpg

பாஸ்கர் செல்வராஜ்

எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது.

தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன.

அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரசியாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இசுரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரசிய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது.

image-400-1024x576.png

பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புதினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம்.

உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame)

இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டாலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான்.

பெட்ரோடாலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டாலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது.

image-401-1024x585.png

இந்த ஒழுங்கு ரசியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டாலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டாலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டாலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும்.

அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டாலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டாலர் சுழற்சியின்றியும் இப்படி டாலரை அச்சடித்ததாலும் சந்தையில் டாலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டாலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டாலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது.

அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு. 

இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டாலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டாலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டாலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான

1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது,

2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டாலர் நிதிமூலதனம் அடைவது

ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.

போருக்கு முந்தைய ஈரான்-இசுரேலிய சூழல்

image-402-1024x683.png

5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டாலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டாலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது.

ரசியாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரசியாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பாலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இசுரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இசுரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பாலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இசுரேல்.

image-403-1024x527.png

ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இசுரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இசுரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இசுரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம்.

எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இசுரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது.

கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா

image-404.png

இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரசிய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது.

எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரசிய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரசியர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரசிய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரசியர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம்.

ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரசியாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரசிய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம்.

image-405.png

இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட டிரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இசுரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இசுரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இசுரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது.

மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இசுலாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள்.

தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது.

இதன்பிறகு நடந்தது என்ன?!

https://minnambalam.com/iran-that-avoided-the-regime-change-what-next-1/

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

3 months 2 weeks ago
இப்போது யாழ்களத்திலும் நுளையப் பயமாக இருக்கிறது. அங்கும் ஒன்றுரண்டு எம் ஆர் ஐ இயந்திரங்கள் இருப்பதுபோல் தெரிகிறது.🫨

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்தியாவை சரித்த ஸ்டோக்ஸ் வியூகம் – நல்ல வாய்ப்பை இந்தியா கைவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எஸ்.தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில், இரண்டாம் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் விளையாடி, மீண்டு வந்துள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த நாள் என்று நேற்றைய நாளை சொல்லலாம். இந்தியாவின் திட்டங்கள் எல்லாம் பலனளிக்காமல் போக, இங்கிலாந்து அணி தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சீதோஷனை நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு நாளின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷார்துல் – வாஷிங்டன் சுந்தர் இணை, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளித்து விளையாடியது. இதே இணைதான், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்தியாவின் வெற்றி கைகொடுத்தது. ஷார்துல் 41 ரன்கள் எடுத்து, இந்தியா ஒரு வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். கடினமான ஒரு களத்தில் சாமர்த்தியமாக விளையாடி, தன் தேர்வு மீதான விமர்சனங்களுக்கு ஷார்துல் தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பிரதான பேட்ஸ்மேன்கள் எல்லாரும் தடுமாறும் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் ஷார்துலின் தனிச்சிறப்பு. இந்த ஒரு திறமைக்காகவே, ஆயிரம் விமர்சனங்கள் எழுந்தபோதும், அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த டெஸ்டின் நாயகனான ஜடேஜா, ஓவர் த விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை, தவிர்க்க முடியாமல் தொட்டு, ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் காயத்தோடு களமிறங்கிய பந்த் முதல் நாளை போலவே, நேற்றும் ஆர்ச்சர், கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் பெரும்பாலான ஓவர்களையும் விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர். வோக்ஸ் ஒருமுனையில் கட்டுக்கோப்பாக வீசினாலும், விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. ஷார்துல் ஆட்டமிழந்ததும், காலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் வலியையும் பொறுத்துக்கொண்டு, பந்த் களமிறங்கினார். அவருடைய அர்ப்பணிப்புக்கும் தைரியத்துக்கும் மதிப்பளிக்கும் விதமாக, ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்தினர். பந்த்தின் விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றாலும், அது ஒருவிதத்தில் சுந்தரின் பேட்டிங் ரிதத்தை பாதித்துவிட்டது. பந்த்தை எதிர்முனையில் வைத்துக்கொண்டு ஒற்றை ரன் ஓடமுடியுமா என்ற சிந்தனையிலேயே, தனது இயல்பான ஆட்டத்தை மறந்து ஸ்டோக்ஸ் பந்தில் சுந்தர் விக்கெட்டை பறிகொடுத்தார். பந்த்தை பத்திரப்படுத்தி வைத்து, கம்போஜ், சிராஜ் போன்றவர்களை முன்னால் களமிறக்கி இருந்தால், சுந்தர் ஒரு இன்னிங்ஸை கட்டமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். சுந்தர் ஆட்டமிழந்ததும், வேறு வழியின்று பந்த் தாக்குதல் ஆட்டத்தை கையில் எடுத்தார். ஆர்ச்சரின் பந்தில் அவர் அடித்த சிக்ஸர், மைதானத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தியது. கடந்த டெஸ்டை நினைவூட்டும் படியான ஒரு பந்தின் மூலம், பந்த் ஸ்டம்புகளை தகர்ந்தார் ஆர்ச்சர். பந்த் களத்தில் இருக்கும்போது, ஸ்டோக்ஸ் அவருடைய காலை குறிவைத்து யார்க்கர் பந்துகளாக வீசினார். இதுகுறித்து சமூக வலைதங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது. உணர்வை எல்லாம் பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்டோக்ஸ் தன் அணி வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்றுதான் திட்டமிடுவார். பந்த்துக்கு இந்திய அணியின் நலன் முக்கியம்; அவருக்கு இங்கிலாந்து அணியின் நலன் முக்கியம். அவ்வளவுதான். இந்த தொடரில் பந்த் தனது கடைசி இன்னிங்ஸை விளையாடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. கடைசிக்கட்ட விக்கெட்டுகளை ஆர்ச்சர் துடைத்து எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட்களும் ஆர்ச்சர் 3 விக்கெட்களும் கைப்பற்றினர். ஸ்டோக்ஸ், அதிக பந்துகள் வீசிய டெஸ்ட் தொடர் இதுதான். இதன்மூலம் இந்த தொடருக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்போஜ் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மூலம் சதத்தை நெருங்கி கொண்டிருந்த டக்கெட் விக்கெட்டை வீழ்த்தினார். டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துமா இந்தியா? அத்தி பூத்தாற் போல, நேற்று பும்ராவும் தவறான லைனில் எந்தவொரு திட்டமும் இன்றி பந்துவீசினார். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் களமிறங்கிய கிராலி, தன் முதல் ரன்னை எடுக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். இதை சாதகமாக பயன்படுத்தி அவருடைய விக்கெட்டை எடுக்க இந்திய அணி முயற்சி செய்தது போலவே தெரியவில்லை. மேலும் பும்ரா உடனடியா எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியிலேயே பந்துவீசியது போல இருந்தது. சில ஓவர்கள் கட்டுப்பாடாக பந்துவீசி ரன் ரேட்டை முதலில் குறைத்து பிறகு விக்கெட்டுக்கு முயற்சிக்கலாம் என்ற திட்டமே இந்திய அணியிடம் இல்லை. இந்திய அணி, ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் பந்துவீசிய லைன் அண்ட் லெங்த்தில் (The corridor of uncertainty) பந்துவீசியிருக்க வேண்டும். அதாவது பேட்ஸ்மேனால் முன்னுக்கு வந்தும் ஆடமுடியாது; பின்னுக்கு நகர்ந்தும் ஆடமுடியாது. அதுபோன்றதொரு இரண்டும் கெட்டான் லைன் அண்ட் லெங்த். ஆனால், இந்தியா ஒன்று கால்பக்கமாக வீசியது. இல்லை, எந்த இலக்குமற்று முழு நீளத்தில் ஹாஃப் வாலியாக வீசியது. கால்பக்கத்தில் கிடைத்த பந்துகளை டக்கெட், மிட் விக்கெட், ஸ்கொயர் லெக் திசையில் ஃபிளிக் செய்து ரன் குவித்தார். மறுபுறம் கிராலி, நின்ற இடத்தில் இருந்து, ஆபத்தற்ற முழு நீள பந்துகளை கவர் திசையிலும் மிட் ஆன்–மிட் ஆஃப் திசையிலும் டிரைவ் செய்து பவுண்டரி விளாசினார். இந்திய அணியின் பல் பிடுங்கிய பாம்பாக மாறிய பந்துவீச்சை பார்க்கும் போது, குல்தீப் யாதவை எடுத்திருக்கலாம் என தோன்றியது. கடைசி கட்டத்தில் உபரியாக கிடைக்கும் 10–20 ரன்கள் முக்கியம்தான். ஆனால், விக்கெட் எடுக்கும் திறமையுள்ள ஒரு சுழற்பந்து வீச்சாளரை, தொடர்ச்சியாக பெஞ்ச்சில் உட்கார வைப்பது அநியாயம். 'சைனா மேன்' என்றழைக்கப்படும் இடக்கை லெக் ஸ்பின் என்பது மிகவும் அரிதான ஒரு பந்துவீச்சு வகைமை. அரிது என்பதால், இந்த வகைமை பந்துவீச்சை பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடி இருக்க மாட்டார்கள். இந்த அனுகூலத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ள ஏன் தயங்குகிறது என்று புரியவில்லை. இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து கையில் சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா கிராலியை ஓர் அழகான பந்தின் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார். அதைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டக்கெட்டும் 94 ரன்களில் நடையை கட்டினார். போப், ரூட் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் நிலையில், ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓய்கியுள்ளது. இங்கிலாந்து அணி 133 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், நாளை விரைவில் டாப் ஆர்டர் விக்கெட்களை எடுக்க இந்திய வியூகம் வகுத்தாக வேண்டும். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா மீண்டு வருமா என்று பார்ப்போம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq8z8ewpv83o

கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல்

3 months 2 weeks ago
கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார். கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி வந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர், இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டதால் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அங்கு சத்தம்போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பக்ததர்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறினார்கள். ஆடி அமாவாசை தீர்த்தத்திற்காக தொல்லியல் திணைக்களத்திடம் முற்பகல் 11 மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில், சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=334170

கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல்

3 months 2 weeks ago

கன்னியா வெந்நீர் ஊற்று ஆலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு; காலக்கெடு விதித்தும் மிரட்டல்

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை,ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்ததுடன்,அங்கு பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார்.

கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதிர் தர்பண நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதிர் தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள்.

இந்த நிகழ்வானது நிறைவு பெறும் தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி வந்தபோது, அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவர், இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டதால் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அங்கு சத்தம்போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பக்ததர்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறினார்கள்.

ஆடி அமாவாசை தீர்த்தத்திற்காக தொல்லியல் திணைக்களத்திடம் முற்பகல் 11 மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில், சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்தனர்.

https://akkinikkunchu.com/?p=334170

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

3 months 2 weeks ago
புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை! July 25, 2025 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார். எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/புலிகள்-இயக்கத்தை-மீளுரு/

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

3 months 2 weeks ago

புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு: 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை!

July 25, 2025

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தரவை நேற்று (24) கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2017 முதல் 2020 வரை யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கவும் 2018 முதல் 2020 வரை ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் சேகரித்ததற்கும் 16 தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அவர்களுக்கெதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று  (24) இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், குற்றச்சாட்டுகள் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் நிகழ்ந்தவையென்பதால், கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என அவர்களின் வாதத்தை ஏற்ற நீதிபதி மகேஷ் வீரமன், குற்றச்சாட்டுகள் இருந்த போதும், நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்படாத நிலையில் வழக்கை தொடர முடியாதென்று தெரிவித்துள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த 16 இளைஞர்களையும் முற்றிலும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/புலிகள்-இயக்கத்தை-மீளுரு/

வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்

3 months 2 weeks ago
வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும் Published By: VISHNU 25 JUL, 2025 | 04:21 AM வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து. இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில் பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது. இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220886