3 months 2 weeks ago
2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு! 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1433574
3 months 2 weeks ago

2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த பணவீக்கத்தால் மக்கள் தற்போது பயனடைந்து வந்தாலும், 2021 உடன் ஒப்பிடும்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
https://athavannews.com/2025/1433574
3 months 2 weeks ago
28 MAY, 2025 | 10:39 AM தெற்கு கடற்பகுதியில், ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து 450 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/215871
3 months 2 weeks ago
28 MAY, 2025 | 10:39 AM

தெற்கு கடற்பகுதியில், ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை கடத்திய இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மாத்தறை தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து 450 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/215871
3 months 2 weeks ago
ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்! 2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார். பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர். https://athavannews.com/2025/1433587
3 months 2 weeks ago

ஹெரோயினுடன் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு விளக்கமறியல்!
2 கிராம் 350 மில்லிகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை ஜூன் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டி நீதிவான் ரந்திக லக்மல் ஜெயலத் உத்தரவிட்டுள்ளார்.
பன்னால பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மே 25 ஆம் திகதி மதுஷங்க போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
தற்போது 30 வயதாகும் மதுஷங்கா, முன்னதாக 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அன்றிலிருந்து அவர் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் பங்கெடுக்கவில்லை.
2018 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் அறிமுகப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.
https://athavannews.com/2025/1433587
3 months 2 weeks ago
கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா? பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு,கடலில் கவிழ்ந்த MSC_ELSA3 கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 26 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 27 மே 2025 அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது? மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் தனது பயணத்தை தொடங்கியது MSC ELSA 3 சரக்குக் கப்பல் . லைபீரிய நாட்டுக் கொடியுடன் ரஷ்யா, ஜார்ஜியா, யுக்ரேன், பிலிபினோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவுடன் கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. விழிஞ்சம் துறைமுகம் பெரும் சரக்குக் கப்பல்களை கையாள சமீபத்தில் தொடங்கப்பட்டதாகும். இது ஒரு ஆழ்கடல் கொள்கலன் சரக்கு ஏற்றும் துறைமுகமாகும். அங்கிருந்து புறப்பட்ட MSC ELSA 3 மே 24ம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு கப்பலிலிருந்து ஒரு அபாய அழைப்பு வந்தது. பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு அபாய அழைப்பு 640 கண்டெய்னர்களை ஏந்திக் கொண்டு கொச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, 184 மீட்டர் நீள கப்பலான MSC ELSA 3 சாயத் தொடங்கியது. கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் 38 நாடிக்கல் மைல் தூரத்தில் இருந்த போது தோராயமாக 26 டிகிரி அளவில் சாய தொடங்கியது சரக்குக் கப்பல். உடனடியாக இந்திய கடலோர காவல்படை அருகில் இருந்த கப்பல்களை மீட்புப் பணிகளுக்கு திருப்பிவிட்டது. நிலைமைகளை கண்காணிக்க வானில் விமானமும் வந்தது. கப்பல் தொடர்ந்து சாய்ந்துக் கொண்டே இருந்தது, சில கண்டெய்னர்கள் கடலில் விழத் தொடங்கின. மே 24ம் தேதி மாலையில் இந்திய கப்பற்படை மீட்புப் பணியில் இறங்கியது. கப்பலில் உள்ள 24 பேரை மீட்க INS Satpura, INS Sujata என இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன. INS Sujata இரவு 7 மணிக்கு வந்தது, INS Satpura எட்டு மணிக்கு வந்தடைந்தது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 24ம் தேதி தொடங்கியிருந்தது. எனவே கடலில் வானிலை மோசமாக இருந்தது. "நாங்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காற்று மணிக்கு 74.08 கி.மீ (40 நாட்ஸ்) வேகத்தில் வீசியது. கடலில் கழிவுகளும் கண்டெய்னர்களும் மிதந்தன. இதனால் இரவு நேரத்தில் கப்பலை நெருங்கிச் செல்வது கடினமாக இருந்தது" என்று INS Sujata கப்பலின் கேப்டன் அர்ஜூன் ஷேகர் ஏ என் ஐ செய்தி முகமைக்கு தெரிவித்தார். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள் கப்பலிலிருந்த 24 பேரில் 21 பேர் உயிருக்கு ஆபத்தில்லாமல் அன்று இரவு மீட்கப்பட்டனர். கப்பலில் இன்னும் கண்டெய்னர்கள் இருந்ததாலும், கப்பல் முழுமையாக கவிழாததாலும், அதில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, நிலைமைகளை கண்காணிக்க கப்பலின் மாஸ்டர், தலைமை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் கப்பலிலேயே இருந்தனர். இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையினரின் கண்காணிப்புகளுக்கு இடையே அன்றிரவை மூவரும் கப்பலிலேயே கழித்தனர். மே 25ம் தேதி அதிகாலை சரக்குகள் வைக்கப்படும் பகுதி ஒன்றில் கடல்நீர் வெள்ளம் போல் உள்ளே நுழைந்தது. கப்பல் "வேகமாக" ஒரு புறம் கவிழத் தொடங்கியது. "அவர்கள் மூவரும் மேலும் அந்த கப்பலில் இருந்தால் அவர்களுக்கு ஆபத்தாகும் என்று கருதப்பட்டது" என்று இந்திய கப்பற்படை செய்தி தொடர்பாளர் அதுல் பிள்ளை தெரிவித்தார். ரஷ்யாவை சேர்ந்த கப்பலின் மாஸ்டர் உட்பட மூன்று பேரும் கப்பலை விட்டு வெளியேறினர். INS Sujata கப்பலில் அவர்கள் மீட்கப்பட்டனர். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, INS Sujata கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டது கப்பலில் என்ன இருக்கிறது? MSC ELSA 3-ல் "640 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்கு இருக்கிறது, 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது. மேலும் கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் எண்ணெய் இருந்துள்ளது" என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்தை தவிர்க்க, கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் 'சக்ஷம்' மற்றும் 'சமர்த்' மாசு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு டார்னியர் விமானமும் இந்தப் பணியில் இறங்கியுள்ளது. இதையடுத்து, கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா கடற்கரை பகுதி முழுவதுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "எண்ணெய் கசிவு கேரள கரையில் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம். கண்டெய்னர்கள் கடலில் மணிக்கு 3 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. கண்டெய்னர்களில் இருக்கும் எண்ணெய் தவிர, கப்பலில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும் கசியத் தொடங்கியுள்ளது" என்று உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில் கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 26ம் தேதி கொல்லம் மற்றும் ஆலப்புழா கரை அருகே கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்குகள் இருக்கலாம் என்பதால் அவற்றை பொது மக்கள் தொட வேண்டாம் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. படக்குறிப்பு,MSC_ELSA3 கப்பல் கவிழ்ந்த இடம் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எந்த திசையில் செல்லும்? கடலில் காற்றின் திசை தெற்கு நோக்கியே வீசுவதால் கண்டெய்னர்கள் தெற்குப் பக்கமாகவே நகரக்கூடும் என்று மூத்த கடல்வள ஆராய்ச்சியாளரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் சுனில்குமார் முகமது கூறுகிறார். "கொச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல் 30 கி.மீ வரை தெற்கு நோக்கிச் சென்ற பின்பே கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்த இடத்திலிருந்து 60 கி.மீ தெற்கு திசையில் கொல்லத்தில் கண்டெய்னர் கரை ஒதுங்கியுள்ளது. எனவே வடக்கு திசையில் இது நகர்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்கிறார். இது குறித்து INCOIS (கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, "மே 25ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி எண்ணெய் தென்கிழக்கு திசையில் நகர்கிறது. மே 26ம் தேதி காலை 11 மணியளவில் கிழக்கு-தென் கிழக்கு திசையில் எண்ணெய் கசிவு தொடர்ந்து கரையை நோக்கி நகரும். சுமார் 12 மணி நேரங்களுக்குப் பிறகு மே 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஆலப்புழாவுக்கு அருகில் கரையை அடைந்து, 11.4 நாடிக்கல் மைல் அளவுக்கு கரையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மறு நாள் மே 27ம் தேதி பாதிப்புக்குள்ளான கரையின் நீளம் 23 நாடிக்கல் மைல்லாக அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு 80% வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுளது. INCOIS இயக்குநர் பாலகிருஷ்ணன் டி எம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவு கொல்லம், ஆழப்புழா தாண்டி திருவனந்தபுரம் வரை செல்லும் என்று கணிக்கிறோம். இப்போது வரை எண்ணெய் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே தமிழ்நாடு கரை வரை செல்லாது என்று நினைக்கிறோம்" என்றார். எனினும் கண்டெய்னர் மற்றும் கப்பலின் பாகங்கள் கன்னியாகுமரி வரை செல்லக்கூடும்" என்றார். ஆனால் உண்மையில் எவ்வளவு எண்ணெய் கசிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். "அதிக அளவிலான எண்ணெய் கசிந்திருந்தால் அது அதிக தூரம் செல்லக்கூடும். சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது 100 கி.மீ வரை தெற்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று இதிலும் அதிக அளவிலான எண்ணெய் இருந்தால், அது தமிழ்நாடு கரையை தொடக்கூடும். இரண்டு மூன்று நாட்களில் கன்னியாகுமரி வந்தடையும் அங்கிருந்து இலங்கை வரை கூட செல்லும், இது தான் எண்ணெய் கசிவின் கணிக்கப்பட்ட பாதையாக இருக்கும்" என்றார். என்ன ஆபத்து ஏற்படலாம்? பட மூலாதாரம்,DR.BALAKRISHNAN படக்குறிப்பு,பாலகிருஷ்ணன் டி எம், INCOIS இயக்குநர் இந்தக் கப்பலில் 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்சியம் கார்பைட் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை துரிதமாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், இது மனித உட்கொள்ளுதலுக்கு உகந்தது அல்ல. இந்த விபத்தின் மூலம் கால்சியம் கார்பைட் கடலில் கசியலாம் என்று அஞ்சப்படுகிறது. "கால்சியம் கார்பைட் கடல்நீருடன் கலக்கும் போது, அது அசிடிலின் வாயுவாக மாறும். அது வாயுவாக மாறும் போது, ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் பெரும் பாதிப்புகள் எதுவும் இருக்காது" என்று கூறும் சுனில் முகமது இது குறுகிய கால பாதிப்பே, நாம் கவலைப்பட வேண்டிய நீண்ட கால பாதிப்புகள் பல இருக்கின்றன என்கிறார் சுனில்குமார் முகமது. எண்ணெய் கசிவால் நீண்ட கால பாதிப்புகளின் தாக்கமே அதிகமாக இருக்கும். "இப்போது ஆலப்புழா கரைப்பகுதிகளில் காற்று மற்றும் அலைகள் காரணமாக கடலுக்கு அடியில் மண் திட்டுகள் (mud banks) உருவாகும் காலம். இந்நேரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், நீர், மற்றும் மண்ணுடன் சேர்ந்து அது கலந்து கருப்பு உருண்டைகள் (tar balls) உருவாகும். அவை கடலில் மிதந்து கரையை வந்து சேரும். 80 டன் எரிபொருள் உள்ளது. அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்று தெரியாது" என்கிறார். இவை மட்டுமல்லாமல், "கப்பலில் 'ஆபத்தான சரக்கு' கள் உள்ளன என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது, அதில் என்னவுள்ளன என்று தெரிவிக்கப்படவில்லை. ரசாயனங்கள் இருக்கலாம், கதிரியக்கப் பொருட்கள் இருக்கலாம்"என்றார். பட மூலாதாரம்,DR.SUNILKUMAR MOHAMED படக்குறிப்பு, Dr. சுனில்குமார் முகமது, கடல்வள ஆராய்ச்சியாளர் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு கேரள கடற்கரை கடல்வளங்கள் அதிகமாக இருக்கும் வளமான பகுதியாகும். எனவே அப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்வளங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். "ஒரு மதிப்பீட்டின் படி பத்து ஆண்டு காலத்தில் இங்குள்ள மீனவர்கள் 1000 வகையான உயிரினங்களை பிடித்துள்ளனர். இந்த இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது உணவு சங்கிலியை வெகுவாக பாதிக்கும். எண்ணெய் கசிவினால் ஹைட்ரோ கார்பன்ஸ் வெளியாகும். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும், அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று சுனில் முகமது கூறுகிறார். "கேரள கரைப் பகுதியில் 'upwelling' ஆழத்தில் உள்ள சத்துகள் நிறைந்த நீர் கடற்பரப்பை நோக்கி மேல் எழும்புவது தீவிரமாக நடைபெறும். இதனால் அந்தப் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மிக முக்கிய பங்காற்றும் phytoplankton எனும் கடல் தாவர வகைகள் அதிகம் உள்ளன" என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். எண்ணெய் கசிவின் தீவிரத்தைப் பொருத்து இவை எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்த கண்டெய்னர்கள் மீனவர்களுக்கு பாதிப்பு மீன்பிடிக்க ஏதுவான இடம் குறித்த தகவல்களை INCOIS தினசரி மீனவர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த விபத்து ஏற்பட்டது முதல் எண்ணெய் கசிவு அபாயம் இருப்பதால் தெற்கு கேரள கரையோரம் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மீனவர்களை வெகுவாக பாதித்துள்ளது என்கிறார் சுனில் முகமது, "தென்மேற்கு பருவமழை தொடங்கிய நேரத்தில், கடல் அமைதியாக இருக்கும். அலைகள் பெரிதாக இல்லாத இந்த காலத்தை மலையாளத்தில் 'சாகரா' (இறந்த கரை) என்று அழைப்பார்கள், இது மீன்பிடிக்க மிகவும் உகந்த நேரமாகும்" என்கிறார். மீட்புப் பணிகளுக்கு சவாலாக இருக்கும் பருவமழைக் காலம் எண்ணெய் கசிவின் தீவிரத்தையும், வெளியே தெரிவிக்கப்படாத 'ஆபத்தான' சரக்குகளையும் கட்டுப்படுத்துவதே மீட்புப் பணிகளின் முக்கிய நோக்கமாகும். பருவமழை தொடங்கியுள்ளதால் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்புகின்றன. இதனால் எண்ணெய் கசிவு ஒரு இடத்தில் இல்லாமல் மற்ற இடங்களுக்கு எளிதாக பரவும் வாய்ப்புள்ளது. "MSC ELSA 3 பழைய கப்பல் என்பதால் கண்டெய்னர்களுக்கு ஒரு அடுக்கு பாதுகாப்பு (single hull) மட்டுமே இருந்துள்ளது. எனவே எண்ணெய் கசிவு எளிதாக ஏற்படலாம்" என்று இந்த விவகாரங்கள் குறித்து அறிந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். காற்று தெற்கு திசையில் வீசிக் கொண்டிருப்பதால் இந்த கசிவுகள் கரையை நோக்கியே வரும் என்றும் கடலுக்குள் செல்ல வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கரையை நோக்கி வரும் போது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவது எப்படி? எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. கடலோர காவல்படையின் விமானம் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் கசிவு எங்கு உள்ளது, எவ்வளவு தூரம் உள்ளது என்று கணிக்க முடியும். அதை பரவவிடாமல் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிறகு எண்ணெய்யை இலகுவாக்கும் ரசாயனங்கள் கலந்து அவை கரையை வந்து அடையாமல் தவிர்க்கப்படும். அல்லது, எண்ணெய்யை பம்ப் செய்து வெளியேற்றவும் முடியும். கடலோர காவல்படையின் கப்பல் ஒன்று மாசு கட்டுப்படுத்தும் பணிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, பணியில் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2ejdvr7gwo
3 months 2 weeks ago
அண்ணா பல்கலை பாலியல் வன்புணர்வு வழக்கு; ஜூன் 2 ஆம் தண்டனை விவரம்! தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று சென்னை மகிளா (மகளிர்) நீதிமன்றம் இன்று (29) அறிவித்தது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சென்னை நீதிமன்றம் தனது உத்தரவில் இன்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் சம்பவத்தை வீடியோ எடுத்து இருவரையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் சென்னை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டார். ஞானசேகரன் கைது செய்யப்பட்ட உடனேயே, அவர் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) நிர்வாகிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன. இது ஒரு அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் திமுக இவருடனான எந்தத் தொடர்பையும் மறுத்தாலும், எதிர்க்கட்சிகள் அவர் கட்சியில் ஒரு பதவியில் இருப்பதாகக் கூறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஆதாரங்களையும் வெளியிட்டன. ஞானசேகரன் திமுக மாணவர் பிரிவு நிர்வாகி என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் திமுக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இந்தக் கூற்றுக்களை மறுத்து, ஞானசேகரன் கட்சி நிர்வாகி அல்ல என்று கூறினார். முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலினும் சட்டமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் திமுக உறுப்பினர் இல்லை என்றாலும், அவர் உண்மையில் ஒரு ஆதரவாளர் என்று தெளிவுபடுத்தினார். ஞானசேகரன் முன்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார், அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறி இருந்தார். அதேநேரம், தமிழ்நாடு காவல்துறை எதிர் மனு தாக்கல் செய்தது, இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன. சென்னை மேல் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. பின்னர் SIT மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தனது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததைக் காரணம் காட்டி, தண்டனையில் கருணை காட்ட வேண்டும் என்று அவர் இப்போது கோரியுள்ளார். ஜூன் 2 ஆம் திகதி நீதிமன்றம் தண்டனை தொடர்பான விவரங்களை அறிவிக்கும். https://athavannews.com/2025/1433539
3 months 2 weeks ago
ஒலியை விட வேகமாகப் பயணிக்கக் கூடிய ஏவுகணையைச் சோதிக்கும் இந்தியா! இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவையாகும். அந்தவகையில் உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஹைப்பர்சோனிக் எஞ்சின் சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றும், முழுமையான அமைப்பு தொடர்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433508
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
ஆமாம் நீங்கள் வந்தான்வரத்தான் தான் ஏனென்றால் இலங்கை என்ற நாட்டிலிருந்து பிரித்தானியா என்ற நாட்டுக்கு குடியேற்றி உள்ளீர்கள்
3 months 2 weeks ago
அதிக தடவைகள் எவரெஸ்ட் சிகரம் ஏறி உலக சாதனை படைத்த காமி ரீட்டா ஷெர்பா! நேபாளத்தை சேர்ந்த காமி ரீட்டா (Kami Rita) என்ற 55 வயதான நபர் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் அதிக தடவைகள் ஏறியவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியான அவர் நேற்றைய தினம் குறித்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் 31தடவைகள் எவரஸ்ட் சிகரத்தில் ஏறி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். காமி ரீட்டா உட்பட 27 நேபாள ஷெர்பாக்கள் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக சிகரத்தை அடைந்தனர். இப் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி தொடங்கி 45 நாட்களில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433568
3 months 2 weeks ago

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும் என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1433527
3 months 2 weeks ago
எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து! ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும் என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433527
3 months 2 weeks ago
"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி? அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு சிறிய தகவல் திருட்டு என நிறுவனம் குறைத்துக் காட்டினாலும், வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் தற்போது பெரிய அளவில் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையை அசைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும். அடிடாஸ் மீதான இந்த இணையத் தாக்குதல், சமீப வாரங்களில் மார்க்ஸ் & ஸ்பென்சர், கூப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தித்த பெரும் இடையூறுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் ஈஸ்டர் வார இறுதியில் இலக்கு வைக்கப்பட்ட பிறகு, இந்தத் தாக்குதலால் சுமார் £300 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அடிடாஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அங்கீகரிக்கப்படாத ஒரு மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் மூலம் சில நுகர்வோர் தரவுகளைப் பெற்றது என்பதை அடிடாஸ் சமீபத்தில் அறிந்தோம். நாங்கள் உடனடியாக இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, முன்னணி தகவல் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான ஒப்புதல் ஒருபுறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்தத் தகவல்கள் எப்படி திருடப்பட்டது, யார் இதற்குப் பொறுப்பு என்பது போன்ற முக்கிய கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் உள்ளன. பாதிக்கப்பட்ட தரவுகளில் கடவுச்சொற்கள், கடன் அட்டை அல்லது வேறு எந்த பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்கள் இல்லை என்றும், இது கடந்த காலத்தில் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புத் தகவல்களை முக்கியமாகக் கொண்டுள்ளது என்றும் அடிடாஸ் தெரிவித்துள்ளது. அடிடாஸ் நிறுவனம் பாதிக்கப்படக்கூடிய நுகர்வோருக்கும், பொருத்தமான தரவுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நடைமுறை சட்டத்திற்கு இணங்கத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. “எங்கள் நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட எந்தவொரு சிரமத்திற்கும் அல்லது கவலைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், வெறும் தொடர்புத் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டன என்பது ஒருவேளை உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம், வாடிக்கையாளர்களின் அடையாளம் அல்லது பிற தரவுகள் இந்தத் தாக்குதலால் சமரசம் செய்யப்படவில்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. இது சைபர் பாதுகாப்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது. Athavan Newsஅடிடாஸில் பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு...அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன...
3 months 2 weeks ago

"அடிடாஸில்" பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு! யார் அடுத்த குறி?
அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களின் “முக்கியமாக” தொடர்புத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அடிடாஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் “செயல்பாட்டு ரீதியாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார். கடவுச்சொற்கள், கடன் அட்டைத் தகவல் மற்றும் பணம் செலுத்துதல் தொடர்பான தரவுகள் இந்தத் திருட்டால் பாதிக்கப்படவில்லை என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது ஒரு சிறிய தகவல் திருட்டு என நிறுவனம் குறைத்துக் காட்டினாலும், வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் தற்போது பெரிய அளவில் உருவாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையை அசைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தயக்கத்தை ஏற்படுத்தும்.
அடிடாஸ் மீதான இந்த இணையத் தாக்குதல், சமீப வாரங்களில் மார்க்ஸ் & ஸ்பென்சர், கூப் மற்றும் ஹாரோட்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தித்த பெரும் இடையூறுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. மார்க்ஸ் & ஸ்பென்சர் நிறுவனம் ஈஸ்டர் வார இறுதியில் இலக்கு வைக்கப்பட்ட பிறகு, இந்தத் தாக்குதலால் சுமார் £300 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அடிடாஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அங்கீகரிக்கப்படாத ஒரு மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை வழங்குநர் மூலம் சில நுகர்வோர் தரவுகளைப் பெற்றது என்பதை அடிடாஸ் சமீபத்தில் அறிந்தோம். நாங்கள் உடனடியாக இந்தச் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து, முன்னணி தகவல் பாதுகாப்பு நிபுணர்களுடன் இணைந்து ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கினோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெளிப்படையான ஒப்புதல் ஒருபுறம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், இந்தத் தகவல்கள் எப்படி திருடப்பட்டது, யார் இதற்குப் பொறுப்பு என்பது போன்ற முக்கிய கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் உள்ளன.
பாதிக்கப்பட்ட தரவுகளில் கடவுச்சொற்கள், கடன் அட்டை அல்லது வேறு எந்த பணம் செலுத்துதல் தொடர்பான தகவல்கள் இல்லை என்றும், இது கடந்த காலத்தில் வாடிக்கையாளர் சேவை உதவி மையத்தைத் தொடர்பு கொண்ட நுகர்வோரின் தொடர்புத் தகவல்களை முக்கியமாகக் கொண்டுள்ளது என்றும் அடிடாஸ் தெரிவித்துள்ளது. அடிடாஸ் நிறுவனம் பாதிக்கப்படக்கூடிய நுகர்வோருக்கும், பொருத்தமான தரவுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கும் நடைமுறை சட்டத்திற்கு இணங்கத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. “எங்கள் நுகர்வோரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட எந்தவொரு சிரமத்திற்கும் அல்லது கவலைக்கும் நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம்,” என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், வெறும் தொடர்புத் தகவல்கள் மட்டுமே திருடப்பட்டன என்பது ஒருவேளை உண்மைக்குப் புறம்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம், வாடிக்கையாளர்களின் அடையாளம் அல்லது பிற தரவுகள் இந்தத் தாக்குதலால் சமரசம் செய்யப்படவில்லையா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை. இது சைபர் பாதுகாப்பில் நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களின் பாதுகாப்பு குறித்த தீவிரமான விவாதத்தை தூண்டியுள்ளது.

Athavan News

அடிடாஸில் பெரும் பிளவு! வாடிக்கையாளர் ரகசியங்கள் திருட்டு...
அடிடாஸ் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகி திருடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. விளையாட்டு ஆடை உலகின் ஜாம்பவானான அடிடாஸ், வாடிக்கையாளர் சேவைப் பிரிவுடன...
3 months 2 weeks ago
(பொதுவானது) முதலில் பெயரை சரியாக அறியவும். செல்லச்சன்னதி. (சந்நிதி சம்ஸ்கிருத மயப்படுத்தப்பட்ட வடிவம்) (செல்வச்சந்நிதி - எம்மவார்கள் திரித்தது) செல்லச்சன்னதி / செல்லச்சந்நிதி - சொல்லின் கருத்தே (பிரியாணிக்கும் போது) சென்ற அல்லது வந்தடைந்த இடத்தில் (முருகனுக்கு) சன்னதி (சந்நிதி). புராணா வரலாறு - வீரவாகுத் தேவர் சூரனிடம் தூது வந்து, அதிலும் சண்டை வந்து, (திருச்செந்தூர்) திரும்பும் போது சந்தி காலம் (மாலைக்கும், இரவுக்கும் இடைப்பட்ட காலம் - நாம் மைம்மல் பொழுது என்பது) ஆகிவிட்டது. (சந்தி காலம் - (பிரம்ம முகூர்த்த காலம் போல) மிகவும் சக்தி உள்ள காலம் இறைபணிகளுக்கு) வீரவாகுத்தேவர் முருகனுக்கு பூசை செய்ய வேண்டிய கட்டாயத்தில். அப்போது முருகனுக்கு வீரவாகுத்தேவர் சன்னதி (சந்நிதானம்) வைத்து பூசை செய்த இடமே செல்லச்சன்னதி, இலங்கைத்தீவில் (அப்படி புவியியல் இருந்து இருந்தால்) முருகனுக்கு உருவாகிய முதல் சன்னதி. ( சந்தி (காலம்) சன்னதி / சந்நிதியாக மருவியதாக ஓர் நம்பிக்கை இருக்கிறது), இப்போதும் அந்த இடத்தில் கல்லோடை (என்று அழைப்பது,), வீரவாகுத் தேவர் பாதச்சுவடுகள் என்று இருக்கிறது, பூசையும் செய்யப்படுவது.
3 months 2 weeks ago
LSG vs RCB: சேஸிங்கில் அதிரடி காட்டிய கோலி, ஜிதேஷ் - வீணான ரிஷப் பந்தின் சதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்சிபி அணியின் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா (வலது), லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த்( இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடைசியாக ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் எந்த இடங்களைப் பிடித்துள்ளன என்பது தெரிந்து, முதல் தகுதிச்சுற்றில் யார் விளையாடுவது என்பது முடிவாகியுள்ளது. இதன்படி, லக்னெள அணியை ஆர்சிபி வென்றதையடுத்து, முதல் தகுதிச் சுற்றில் விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்று, பஞ்சாப் அணியுடன் நாளை (29ஆம்தேதி) மோதுகிறது. எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இதில் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதில் தோற்கும் அணிக்கு 2வது வாய்ப்பாக, எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் மோதி அதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும். மூன்றாவது அதிகபட்ச சேஸிங் லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த லக்னெள அணி 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்தது. 228 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். 2024இல் பஞ்சாப் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸ் செய்துள்ளது. அதற்கு முன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2010ஆம் ஆண்டு 204 ரன்களை ஆர்சிபி சேஸ் செய்திருக்கிறது. இந்நிலையில், 228 ரன்கள் என்பது ஆர்சிபியின் 3வது அதிகபட்ச சேஸிங்காகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆட்டத்தின் முடிவில் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி அணியினர் ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா ஐபிஎல் சீசனில் லீக் போட்டிகளில் சொந்த மைதானம் தவிர்த்து வெளி மைதானங்களில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் வென்ற ஒரே அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. ஆர்சிபிக்கு இந்த சீசனில் 7 போட்டிகள் வெளி மைதானங்களில் நடந்தன. அவை அனைத்திலும் வென்றது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் விராட் கோலியின் 54 ரன்களும், கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் சேர்த்த 85 ரன்களும்தான். ஜிதேஷ் ஷர்மா 6வது வரிசைக்கும் கீழாகக் களமிறங்கி 3வது அதிகபட்ச ஸ்கோரை நேற்று பதிவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். கடந்த 2019இல் ஹர்திக் பாண்டியா எடுத்த 91 ரன்களையும், 2018இல் ரஸல் எடுத்த 88 ரன்களையும் 6வது வரிசைக்கு கீழாகக் களமிறங்கி அடித்துள்ளனர். கோலியின் மைல்கல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி அடித்த 8வது அரைசதம் இது. கோலி அரைசதம் அடித்த அனைத்துப் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது. அது மட்டுமின்றி 5வது சீசனாக கோலி 600 ரன்களுக்கும் மேலாகச் சேர்த்துள்ளார். கே.எல்.ராகுல் 4 முறை மட்டுமே 600 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். ஆர்சிபி அணிக்காக விராட் கோலி இதுவரை 9030 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக முதல்முறையாக 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் வீரராக கோலி இருக்கிறார். அடுத்ததாக மும்பை அணிக்காக ரோஹித் ஷர்மா 6 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார். ரிஷப் பந்த் லக்னெள அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இந்தப் போட்டி தவிர்த்து ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து லக்னெள ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ஆனால், ரிஷப் பந்தின் சதம் நேற்று வெற்றியாக மாறியிருந்தால் ஏதேனும் பலன் இருந்திருக்கும். ஜிதேஷ் அதிரடி ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ஜிதேஷ் ஷர்மா களமிறங்கும்போது ஆர்சிபி அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் கோலியை இழந்திருந்தது. அணி 123 ரன்களை எடுத்திருந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 105 ரன்கள் சேர்க்க வேண்டியிருந்தது. கோலி ஆட்டமிழந்த பின் மதில் மேல் பூனையாக ஆர்சிபி அணி இருந்தது. ஆனால் ஜிதேஷ் ஷர்மா களமிறங்கியவுடன் பவுண்டரியுடன் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். கடைசி 7 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 89 ரன்கள் தேவைப்பட்டன. மயங்க் அகர்வாலும் அவ்வப்போது பவுண்டரி அடித்து சுறுசுறுப்பாக பேட் செய்து ரன்ரேட்டை உயர்த்தினார். ரூர்கே வீசிய ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர், பவுண்டரி என 17 ரன்கள் சேர்த்து நம்பிக்கை பெற்றார். ஷாபாஸ் அகமது வீசிய 15வது ஓவரில் ஜிதேஷ் 2 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடித்தார். மயங்க் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபியின் ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக 22 பந்துகளில் ஜிதேஷ் அரைதம் விளாசினார். கடைசி 3 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டன. ரூர்கே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி வெற்றியை நெருங்க வைத்தார் ஜிதேஷ் ஷர்மா. ஆயுஷ் பதோனி வீசிய 19வது ஓவரில் ஜிதேஷ் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மன்கட் அவுட் - ரிஷப் பந்தின் ஸ்போர்ட்மேன்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES திக்வேஷ் ராதி வீசிய ஓவரில் அவர் பந்துவீசும் முன்பே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருந்த ஜித்தேஷ் ஷர்மா கிரீஸை விட்டு வெளியே சென்றார். இதைப் பார்த்த திக்வேஷ் ராதி மன்கட் ரன்அவுட் செய்து நடுவரிடம் அப்பீல் செய்தார். கள நடுவரும் 3வது நடுவருக்கு பரிந்துரைக்க டிவி ரீப்ளேவில் ஜிதேஷ் ஷர்மா மன்கட் அவுட்டில் ஆட்டமிழந்தார் என்பது தெரிந்தது. ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்து விடுவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் திடீரென நாட்-அவுட் என்று வந்தது. கேப்டன் ரிஷப் பந்த் அவுட் வழங்க வேண்டாம், மன்கட் அவுட்டில் கிடைக்கும் அவுட் வேண்டாம் என்று நடுவரிடம் கூறியது அதன் பிறகே தெரிய வந்தது. இதை அறிந்ததும், ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா ரிஷப் பந்தை கட்டி அணைத்து தோளில் தட்டிக்கொடுத்துச் சென்றார். ஒருவேளை ஜிதேஷ் ஷர்மா ஆட்டமிழந்திருந்தால் ஆர்சிபி நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும். ஆனால், ரிஷப் பந்த் தனது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்தி, கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தினார். கோலி, சால்ட் வலுவான தொடக்கம் விராட் கோலி, பில் சால்ட் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து 5.4 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார். விராட் கோலி 2வது ஓவரிலேயே 4 பவுண்டரிகளை விளாசியதால் ரன்ரேட் எகிறியது. 4 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 50 ரன்களை எட்டியது. ஆகாஷ் சிங் ஓவரில் சால்ட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். சேஸிங் மாஸ்டராக விளங்கிய கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரன்ரேட் 11க்கு குறையாத வகையில் கொண்டு சென்றார். தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளை விளாசியும், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தும் கோலியின் ஆட்டம் உற்சாகமாக இருந்தது. ஆனால், பட்டிதார் 14 ரன்னில் ரூர்கே ஓவரில் ஆட்டமிழந்ததும் அடுத்த பந்தில் லிவிங்ஸ்டோன் கால்காப்பில் வாங்கி வெளியேறியது ஆர்சிபி அணிக்கு சற்று அதிர்ச்சியளித்தது. மயங்க் அகர்வால், கோலி கூட்டணி அணியை அந்தச் சரிவிலிருந்து மீட்டு மீண்டும் வெற்றியை நோக்கி நகர்த்தினர். கோலி 54 ரன்களில் ஆவேஷ் கானின் ஸ்லோ பாலில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த், மார்ஷ் பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் பில் சால்ட் ஐபிஎல் சீசன் முழுவதும் 4வது அல்லது 5வது வீரராகக் களமிறங்கிய ரிஷப் பந்த் நேற்று 3வது வீரராகக் களமிறங்கி சதம் அடித்து 118 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடங்கும். அதிலும் ரிஷப் பந்த் சதம் அடித்தவுடன் மைதானத்தில் தலை குப்புற "பிரண்ட்ஃபிளிப் ஷாட்" அடித்துக் கொண்டாடினார். ரிஷப் பந்த் நேற்று தீர்மானத்துடன்தான் களமிறங்கினார், யஷ் தயால் முதல் ஓவரிலேயே சிக்ஸர், 2 பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்தார். புவனேஷ்வர் ஓவரில் சிக்ஸர், லிவிங்ஸ்டோன் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து 29 பந்துகளில் ரிஷப்பந்த் அரைசதம் அடித்தார். நிதானமாக ஆடிய மார்ஷ், 23 பந்துகளில் 33 ரன்களுடன் இருந்தவர், ரிஷப் பந்தின் அதிரடியைப் பார்த்து அடுத்த 8 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அரைசதம் அடித்தார். ரிஷப் பந்த், மார்ஷ் ஜோடி 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். மார்ஷ் 67 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பந்த் காட்டிய அதிரடி தொடர்ந்தது. 54 பந்துகளில் சதம் அடித்த அவர் மைதானத்தில் தலைகுப்புற பல்டி அடித்து தனது சதத்தைக் கொண்டாடினார். 'என்னால் நம்ப முடியவில்லை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சதம் அடித்ததைக் கொண்டாடும் லக்னௌ அணியின் ரிஷப் பந்த் ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா பேசுகையில், "என் கருத்துகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் இப்படி ஒர் ஆட்டம் ஆடுவேனா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. விராட் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தில் கடைசி வரை இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அனைத்து சுமைகளும் என் மீது இருந்தன. விராட், குர்னால், புவி ஆகியோருடன் ஒரு கேப்டனாக ஆடும் ஆட்டம் எனக்கு உற்சாகம் அளித்தது. இந்த தருணத்தை மகிழ்ச்சியாக்க விரும்பினேன்," என்று தெரிவித்தார். மேலும், "சரிவிலிருந்து அணியை மீட்கும் பணியைத் தொடங்கினேன். இதே ஆட்டம் அடுத்து வரும் போட்டிகளிலும் தொடரும், எனக்கு கேப்டன் வாய்ப்பளித்த பட்டிதாருக்கு நன்றி. நாக்-அவுட் சுற்றில் ஹேசல்வுட் விளையாடுவார், நாங்கள் மேட்ச் வின்னர்களாக உருவாகியுள்ளோம்," எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y84jvvxyko
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2025 | 01:51 PM திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது. திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/215899
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3
28 MAY, 2025 | 01:51 PM

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது.
திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
https://www.virakesari.lk/article/215899