Aggregator

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1 hour 59 minutes ago
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்திய அரசு வழக்கம் போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438186

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்

6 hours 6 minutes ago
மன்னிக்கவும்! அவர்களுக்கு இப்போ இவற்றுக்கு நேரமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உட்கட்சிப்பூசல், குழி பறித்தல், உறுப்பினர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தல் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை

7 hours 20 minutes ago
அதே! இனியாவது சொல்வதை செய்வார்களா? இந்தப்போக்கு நிலைத்தால்; எதிர்காலத்தில் இவர்களின் பொருட்களை வாங்குவோருமில்லை, இவர்கள் உற்பத்திசெய்யும் தேவையுமில்லை.

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

7 hours 25 minutes ago
சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை - அருண் சித்தார்த்

7 hours 31 minutes ago
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் காலத்திலேயே அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு சாட்சிகளால், குற்றவாளிகளால் ஒப்புக்கொண்டு, அடையாளகாட்டி, அகழப்பட்டு,உறுதிப்படுத்தப்பட்டு பெயர் விவரங்கள் கொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு மேலும் கிளறினால் தங்கள் கொலைகள் வெளியே வருமெனப்பயந்து அகழ்தல், பொறுப்புக்கூறல் கைவிடப்பட்டு இப்போ, மீண்டும் தொடர்கிறது. இவை யாவும் சம்பந்தப்பட்ட காலத்தில் தொடங்கி தொடர்கின்றன, மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அவைக்கு சாட்சியாக விசாரணைக்கோப்புகள் இன்னும் உள்ளன. ஆனால் அருண் என்பவரோ, அவரின் மனைவி என காண்பிக்கப்படுபவரோ கூறப்படும் காலத்தில், அங்கே பிரசன்னமாகி இருந்தது, இந்திய இலங்கை இராணுவமும் இவர் போன்ற ஒட்டு ஆயுதக்குழுக்களும். நாலாயிரம் பேர் என்கிறார், அவர்களின் பெயர் விபரங்கிகள் வெளிவரவில்லை, ஆதாரங்கள் இல்லை, சாட்சிகளில்லை, முறைபாடுகளில்லை, விசாரணையேதும் நடைபெறவில்லை, காணாமற் போனவர்களை தேடி எடுக்கப்படும் போராட்டங்களில் கூட இவர்கள் யாரும் பங்குபற்றியதாக தகவலேதுமில்லை. சம்பவம் நடந்ததாகஇவர்கள் கூறும் காலப்பகுதியில் புலிகள் அதிகாரத்திலில்லை, அவர்களே மறைந்து வாழ்ந்த, வேட்டைடையாடப்படும் காலத்தில் அவர்கள் பிரபல்யமான இடத்தில், பகிரங்கமாக அலுவலகம் நடத்தினார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்தக்காலத்தில் யார் பிரசன்னமாகியிருந்தனர் என்று தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இவர்களின் வயதும் இருக்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்பது இவரது தர்க்கம். அந்த யாரோ என்பது யார்? அவர் ஏதும் ஒட்டுக்குழுவை சார்ந்து இந்தக்கொலைகளை நடத்தி தப்பிக்கும் நோக்கில் இவர்களை வழிநடாத்துகிறாரா? எந்த ஆதாரமுமில்லாமல் நடைமுறைகளுமில்லாமல் இப்போ திடுதிப்பென்று வந்து ஒரு குற்றச்சாட்டை வைப்பது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு காரணமே. இவரை கஷ்ரப்பட்டு படிக்க வைத்த தந்தையாரை தலைகுனியச்செய்யும் செயல். காரணம் சொல்லும் பொய்யை கூட பொருந்தச்சொல்லவே தெரியவில்லை இவரால். தன்னை சமுதாயம் தள்ளி வைத்தது என்பது இவரது கற்பனை. இவரது வக்கிரப்பேச்சு, செயலே அதற்கான காரணம். சம்பாதிக்க அப்பப்போ ஏதோ ஒன்றை தானே தேடிக்கொண்டிருக்கிறார். வயிற்றுக்கு வேணுமே! பாவம் ஏதோ கற்பனையில் வாழ்ந்து ஏமாற்றம் தாங்காமல் இப்படி ஒரு சம்பவத்திற்கு காத்திருந்து,பின்னால் ஓடிச்சென்று பிழைப்பு நடத்துகிறார். அதை உணரும் தன்மை கூட இல்லாத ஜென்மம் இது!

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

8 hours 18 minutes ago
நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

8 hours 48 minutes ago
நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣. George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

12 hours 17 minutes ago
தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.

ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!

12 hours 23 minutes ago
உலக அளவில் ஊடகங்கள் டிரம்ப் ஐயாவினை அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கின்றேன். கம்பி எண்ணப்போகின்றார். உள்ளே வைத்து போடப்போகின்றார்கள். மீள முடியாத சட்டப்பிடியில் அவரது சரிதம் முடிகின்றது என அவரவர் கற்பனை வளர்த்தார்கள். சிங்கம் சிலிர்த்து எழுந்தது. இப்போது உலகின் அதிகார பீடம் டிரம்ப் ஐயாவிடம். மாற்றம் ஒன்றே மாறாதது. 😁

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

12 hours 31 minutes ago
இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?

இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா?

13 hours 47 minutes ago
பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார். அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா? சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார். இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo

இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா?

13 hours 47 minutes ago

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்: சரணடைந்த 29 குழந்தைகள் புதைக்கப்பட்டார்களா?

பட மூலாதாரம், BBC SINHALA

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

    பிபிசி தமிழுக்காக

  • 5 ஜூலை 2025, 10:55 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன்

சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா?

சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா

இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே

எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா?

டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை.

அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை.

இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.

டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது.

யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது.

இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது.

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது.

அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது.

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா?

டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை.

அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை.

இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார்.

டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது.

இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது.

யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது.

இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது.

இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது.

அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்

சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது.

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

14 hours ago
செம்மணி மனித புதைகுழி : இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் : மற்றுமொரு புதிய குழியில் மண்டையோடு அடையாளம் 05 JUL, 2025 | 08:02 PM யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் இன்று சனிக்கிழமை (5) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன. செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/219259

சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம்.

14 hours 12 minutes ago
சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தில்லை தாய்வீடு சென்றாலும் அங்கு " அழைக்கும் பேர்வழி" என அவளை விட்டு வைக்க வில்லை .போய் நச்சரித்தார்கள் .பாவம் நொந்து போன maனம் என்ன செய்யும். . மிகவும் மன வேதனைப்படடாள் ஆறுதல்கூற எவரும் இல்லை ..ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என ஊருக்கா வாழ்ந்தீர்கள்?. வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியவில்லை. தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். எங்கே அந்த ஊரவர்கள் எங்கே அந்த உறவுகள் மாண்ட உயிரை மீண்டும் தர முடியுமா ? தாய் தந்தை சகோதரனுக்கு மாறாத துயரம்.சமூக வலைத்தளங்கள் கூவி கூவி செய்தி போடடன தங்களுக்கு "வியூஸ்" வர வேண்டும் என முக புத்தகம் யூயூ டுயூப் இன்ஸ்டா என்று அத்தனை வகைக்கும் மெல்ல அவல் கிடைத்தது போல, எல்லோர் வாயிலும் நுழைந்தது காற்றை பறக்கிறது. போதும் நிறுத்துங்கள் சட்ட்ம் தான் கடமையை செய்யுங்கள் அவர்கள் கர்மாவாழ்வு முழுதும் துரத்தட்டும் .ஆயிரம் காலத்துப்பயிர் என்பர் எவ்வ்ளவு தூரம் விசாரித்தார்கள்? .அவன் சைக்கோவாம் வேலையற்றவனாம் பூட்டிய அறைக்குள் இருபவனாம் ஆனால் தாய் தந்தைக்கு தெரியாதாம். என்ன பிள்ளை பெத்தது வளர்த்து வைத்திருக்கிறார்கள். அப்பாவியின் உயிரை எடுக்கவா அதுவும் இக்காலத்தில் இப்படி படட பிற போக்குத் தனமா ? தயவு செய்து மீண்டும் பெற்றவர்களைக் பேசி பேசியே காயப் படுத்தாதீர்கள்.மீடியாவுக்கு முகம் காட்டுவதை பேட்டி எடுப்பதை குறையுங்கள்.காலத்துக்கு காலம் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சடடமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றபடடால் நாடு சிறக்கும். தேவை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. பிரச்சினைகளுக்கு மரணம் தீர்வல்ல