Aggregator

மரப்பாவம்

6 hours 16 minutes ago
மிக்க நன்றி வில்லவன். அவரை கடைசியில் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது போல, ஆனால் பழைய சங்கதிகள் எதையும் மனதில் வைத்து அப்படிக் கேட்கவில்லை. 🤣............. எக் காலத்திலும் உங்களை அவருக்கு நான் அறிமுகப்படுத்தி வைப்பதாக இல்லை, அண்ணா................. நீங்கள் சொல்வதைக் கேட்டால், அவர் ஒரு வழக்கே தாக்கல் செய்துவிடுவார்..................🤣.

மரப்பாவம்

6 hours 27 minutes ago
சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

6 hours 54 minutes ago
நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இது நான் கண்ட அனுபவம். அது போல் கேம்பிரிச்,ஒக்ஸ்போர்ட்,இம்பிரியால் போன்ற யூனிகளில் படித்தவர்கள் சொல்வதெல்லாம் உண்மையுமல்ல.நியாயங்களும் அல்ல.

மரப்பாவம்

7 hours 5 minutes ago
மரங்கள் என்றாலே என்ன மரங்கள் என தெரியாதவர்களை கலாய்த்திருக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். மர கொப்புகள் அடுத்தவர் காணிக்குள் நின்றால் அதை தங்கள் சொத்தாக நினைக்கும் ஈழ மண்ணிலிருந்துதான் நாங்களும் வந்திருக்கின்றோம். எனவே வீட்டுக்கு வீடு வாசற்படி மருவி நாட்டுக்கு நாடு வாசற்படி என வந்து நிற்கின்றோம். இருந்தாலும் உள ரீதியாக தர்ம அடி வாங்கிய உங்களுக்கு என் அனுதாபங்கள்.😂

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை

7 hours 20 minutes ago
மண்டை தீவு டக்ளஸ் அண்ணனின் கட்டுப்பாட்டு பிரதேசம் அல்லவா? அங்கு எப்படி இப்படியான அக்கிரமங்கள்?

இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்

7 hours 24 minutes ago
இந்திய அரசியல் கொள்கையினால் அதிகம் பாதிக்கப்பட்டு பாரிய அழிவுகளை சந்தித்தவர்கள் என்றால் அது ஈழத்தமிழர் மட்டுமே. இன்று கூட தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாம் வாழ்க்கையே வாழ்கின்றார்கள். வெளியே வாழ்பவர்களுக்கு கூட சாதாரண மனித உரிமைகள் கூட இல்லை.காலம் காலமாக இந்திய உதவிக்கரத்தை நீட்டியவர்கள் ஈழத்தமிழர்கள். அதை அன்று தொடக்கம் இன்று வரைக்கும் உதாசீனம் செய்தது இந்தியா மட்டுமல்ல. தமிழ்நாட்டு சில பல அரசியல்வாதிகளும் தான்..... அவர்களின் அந்த வர்ம/ வன்மம் இன்றும் தொடர்வதால் அமெரிக்க தரையிறக்கத்தை ஆதரிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து. நெடுந்தீவிலும் புங்குடுதீவிலும் பருத்தித்துறையிலும் மன்னார் மற்றும் மட்டக்களப்பிலும் அமெரிக்க இராணுவ முகாம்களை அமைத்து மார்ஷல் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.🙏

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

7 hours 44 minutes ago
இதையெல்லாம் யார் எந்த கட்டமைப்புடன் தலையேற்று நடத்துவது? அதற்கான திட்டங்கள் உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா? யூத இனத்திற்கென்று ஒரு தனி பூமி இருக்குன்றது.அவர்கள் ஆட்சி செய்யும் பூமி அது. அவர்கள் ஏது செய்தாலும் தடை போட யாரும் இல்லை. உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் உள்ளே வாங்க முடியும். ஆனால் வடகிழக்கு தமிழர் பகுதி என நாங்கள் சொல்லத்தான் முடியும்.ஏனைய ஏனைய விடயங்களில் சிங்கள அனுமதியில்லாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதை சில நலன்புரி இயக்கங்கள் மீதான அழுத்தங்கள் உதாரணமாக அமைகின்றது. உங்களுக்குள் ஈழத்தமிழர்கள் நலன்புரி சம்பந்தமான நீண்ட வரைபடம் உள்ளது போல் தெரிகின்றது. வெளியே இழுத்து விடுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும். இதைத்தான் பிரதேசவாதம் என்கிறேன்.👆 தமிழீழம் சாத்தியம் என நிழல் அரசு அமைத்து காட்டியவர்கள் ஈழத்தமிழர்கள்.அங்கே பிரதேசவாதம் வரவில்லை. ஆனாலும் அதற்குள்ளும் பிரதேசவாதத்தை உட் புகுத்தியவர்கள் யார்...யார் என்பதை இந்த ஊர் உலகம் அறியும்.

Different types of boats used by Tamils historically

8 hours 44 minutes ago
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:

இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்

8 hours 48 minutes ago
யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது. அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது. எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் நெடுந்தீவு என்பவை சக்திவாய்ந்த இடங்களாக மாறபோகின்றன. இலங்கையுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளாலேயே தற்போது அமெரிக்கா விமானங்கள் குறித்த பகுதிகளில் தரையிறங்குவதை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. Tamilwinஇந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணம...

இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்

8 hours 48 minutes ago

யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது.

தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது.

அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் நெடுந்தீவு என்பவை சக்திவாய்ந்த இடங்களாக மாறபோகின்றன.

இலங்கையுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளாலேயே தற்போது அமெரிக்கா விமானங்கள் குறித்த பகுதிகளில் தரையிறங்குவதை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது.

Tamilwin
No image previewஇந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...
யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணம...


மரப்பாவம்

9 hours 28 minutes ago
அடுத்ததாக 'உங்கள் பாவம்.......' என்ற தலைப்பில் ஒன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன்......................🤣. இதற்கு முன்னர் எழுதிய சில ஆக்கங்கள் இறுதியில் துயரமாக முடிந்து இருந்ததால், இந்த ஆக்கத்தை ஒரு இலகுவானதாக எழுத வேண்டும் என்று நினைத்தே இப்படியான ஒன்றை தெரிவு செய்திருந்தேன்..............

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

9 hours 59 minutes ago
சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல… மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது. ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்…. இது உங்களுக்கும் தெரியும். ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள். ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து. இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை. ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன். நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂. மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.

மரப்பாவம்

10 hours 1 minute ago
மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣. இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல. முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார். என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

10 hours 14 minutes ago
அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை. அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்… முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்… அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள். இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம். 2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—- 2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது. தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம். வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்… #இன்ன யாவிலும் புண்ணியம் கோடி புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂. அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

10 hours 28 minutes ago
எனக்கும் இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. 5-10 பேர் என்றால் பயத்தில் திரும்ப போகவில்லை என்று சொல்லலாம். கோசான் பொறுத்த நேரத்தில் இலங்கை பயணம் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எதுவித துன்பமும் இல்லாமல் சுகமாக திரும்ப வந்தது சந்தோசம். இந்த தடவை முக்கியமான பயணமாக இருந்திருக்கும். எனவே நேரமிருந்தால் உங்கள் பயணத்தை நேரடி அனுபவங்களை எழுதுங்கள்.

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

10 hours 35 minutes ago
பயணிகள் என்ன ஆனார்கள்? வீரகேசரி ஆதவனுக்கு தமிழ் திக்குவது போல டெய்லி மிரருக்கு ஆங்கிலம் திக்கி உள்ளது. இரண்டு பந்தியும் முதலாவது (திரும்பி வந்த) பறப்பைத்தான் சுட்டுகிறன. ஆனால் ஒரு இடத்தில் 202 என்றும் மற்ற இடத்தில் 51 எண்டு அடித்துள்ளனர். டைப்போ என நினைக்கிறேன்.

மரப்பாவம்

10 hours 42 minutes ago
வேற என்ன வாழைமரம் தான். காருக்கே இவ்வளவு சேதம் என்றால் வீட்டின் மேல் விழுந்தால் வீடே நசிந்திருக்கும்.