Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 day 11 hours ago
உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் ஒரு மைச் இர‌ண்டு த‌ட‌வை சூப்ப‌ர் ஓவ‌ருக்கு போன‌து இது தான் மித‌ல் முறை அடுத்த‌ சூப்ப‌ரோவ‌ரில் 24 ர‌ன்ஸ் அடிச்சால் அப்கானிஸ்தானுக்கு வெற்றி ஆனால் அடிக்க‌ சான்ஸ் மிக‌ குறைவு என்ன‌ ஒரு விளையாட்டு................................

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 day 12 hours ago
அரசியலே தமிழினத்தை அழிப்பதற்கு இனவாதிகளின் ஆசீர்வாதத்துடன் நடைபெறுவது பூரணச் சந்திரன்போல் பளிச்சிடுகிறது. இதற்கு இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இன்றுவரை இலங்கையை ஆட்சிசெய்யும், ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகளே ஆதாரம்.

ரஷ்ய எண்ணெய் நடவடிக்கைகள் தொடர்பாக மூன்றாம் நாடுகளின் துறைமுகங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக பொருளாதாரத் தடைகளை முன்மொழிகிறது - ராய்ட்டர்ஸ்

1 day 12 hours ago
உண்மையில் இண்ட தடையின் பரந்த தாக்கத்தை கதைக்க முதல் - சிறிது சிறிதாக மேட்ற்கு தனித்து போகிறது, விளைவுகள் விலைவாசி அதிகரிப்பு .. போன்ற கண்ணனுக்கு தெரியாதவை. உண்மையில் இந்த 2 நாடுகளிடம் eu க்கு, அமெரிக்காவுக்கு கறார். ஜோர்ஜியா இல் ஐ சொல்வதை போல ருஸ்சிய சார்புக்கு ஆட்சி அல்ல. ஜோர்ஜியா அதன் நலனுக்கு எது உகந்ததோ அதை செய்கிறது அதில் வசதியாக இருப்பது ருசியா, அத்துடன் ஜோர்ஜியா ஒருமுறை அமெரிக்கா. மேற்றுகின் சொல்லை கேட்டு ருசிஷ்யவை தாக்கி, (அதில் இஸ்ரேல் எக்காளமிட்டது அது கொடுத்த பயிற்றசியை கொண்டு ருசியா மீது ஜோர்ஜியா நடத்திய தாக்குதல் வெற்றி அளித்தது என்று, அதன் பைன் ருஸ்சிய இஸ்ரேல் மீது முதல் கொன்டு இருந்த கனிந்த , இரக்க பார்வை அகன்று,இஸ்ரேல் மீது கடிந்த போக்கை கடைபிடிக்க தொடங்கியது), அழிவு வந்தது, தென் ossetia இராணுவ அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் eu இந்த ஆத்திரம், உலோகவளங்களில் , இந்தநேசியா நிக்கல் இங்காட்கள், இரும்புத் தாதுக்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதை தடுத்து, இப்போது இந்தினேசியாவில் பதப்படுத்தி, க்கொய்ய விலைக்கு ஏற்றுமதி செய்கிறது,இதற்கு, சீனாவே இந்தோனேசியாவுக்கு பணமும், தொழில்சார் நிபுணத்துவமும் வழங்கி, இந்தினேசியாவை அதன் கால்களில் நிற்க வைத்தது. மற்ற மதீய ஆசிய நாடுகளிலும் இப்படியான தடுப்புகளை EU மீது வெளியே ஒன்றும் சொல்லாமல் செய்கின்றன.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 day 13 hours ago
அப்பாகிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் என்ன‌ அடி அடிச்சார் ஹா ஹா...............தென் ஆபிரிக்காவின் ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்........................

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 day 14 hours ago
இரண்டு நாளில் இரண்டு வயது கூடிவிட்டது, ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை அத்னால் உயிரிழந்து விட்டார்..

கனடாவில் துப்பாக்கிச் சூடு: உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு; 25 பேர் காயம்!

1 day 14 hours ago
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி adminFebruary 11, 2026 கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் (BC) டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 10, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், துப்பாக்கிதாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாற்றில் மிக மோசமான பள்ளித் துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாக இச்சம்பவம் கருதப்படுகின்றது. நேற்று மதியம் 1:20 மணியளவில், டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பா்சாலையில் (Tumbler Ridge Secondary School) துப்பாக்கித் தாரி ஒருவர் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளாா். மொத்தமாக 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் உள்ளே 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பாடசாலையுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் மேலும் இருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். துப்பாக்கிதார தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த நிலையில் பாடசாலையின் உள்ளே கண்டெடுக்கப்பட்டார். சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிதாரி ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பழுப்பு நிற முடி (Brown hair) கொண்டவர் என்றும், ஒரு ஆடை (Dress) அணிந்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினா் அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ள போதிலும், தற்போதைய விசாரணைக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிடவில்லை. பிரதமர் மார்க் கார்னி (PM Mark Carney) இச்சம்பவத்தால் தான் கடும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாகாண முதல்வர் டேவிட் ஈபி (Premier David Eby) டம்பிளர் ரிட்ஜ் சமூகம் முழுவதுமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார். டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/228864/

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 day 14 hours ago
நம்பிட்டோம் ,அதுவும் உங்கள் அரசாங்கம் செய்யாது 100% உண்மை ....ஆனால் உங்கள் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எனபது என்ன உத்தரவாதம்...? நீங்கள் தொடங்கிய திட்டங்கள் ஏனைய அரசாங்கம் இனவழிப்பு செய்ய உதவும்

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 day 14 hours ago
வட்ஸப்பில் இருந்து.. 🚨 Van துப்பாக்கிச்சூடு சம்பவம் – போலீஸ் விளக்கம் வெளியீடு யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வேன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளனர். ஆரம்பத்தில் 17 வயது ஓட்டுநர் சம்பந்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அது தவறான தகவல் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர் 19 வயதுடைய பயணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது: அல்லைப்பிட்டி சந்திப்பிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டது. ஆனால் வாகனம் நிற்காமல் சென்றதால் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

1 day 14 hours ago
முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது. https://athavannews.com/2026/1464258

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

1 day 14 hours ago

New-Project-6-5.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது.

https://athavannews.com/2026/1464258

மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

1 day 14 hours ago
மணிப்பூரில் தொடரும் கலவரம். 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு! மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில் புது பா.ஜ.க அரசு பதவியேற்றது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்துக்குள் புகுந்த கும்பலொன்று தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரொருவரை தாக்கி, வீடுகளுக்கும் தீ வைத்துள்ளதுடன் குறித்த கிராமத்தில் இன்று (10) அதிகாலை துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தபோதிலம் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464098