Aggregator
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்
மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்
சர்வதேச விசாரணை ஒன்று முடிவடைந்ததா? என்பது சம்பந்தமாக நான் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் பொய்யான அவதூறுகள் கொட்ட வேண்டிய தேவையில்லை, அது ஒரு சட்டத்தரணிக்கு அழகுமல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
‘மக்களை நான் தவறாக வழி நடத்துவதாக நீங்கள் (சுமந்திரன்) குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது சாத்தான் வேதம் ஓதிய கதை நினைவுக்கு வந்தது.மக்களைத் தவறாக வழிநடத்துவது நானா?நீங்களா?’ என சுமந்திரனிடம் சுகாஷ் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,அதற்கு பதில் வழங்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
1) தேசியப் பட்டியல் ‘பின் கதவு’ என்றால் உங்கள் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் 2020 ஆம் ஆண்டு பின் கதவாலா பாராளுமன்றத்திற்குள் நுளைந்தார்? நான் எங்கேயும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தவறானது என்று கூறியதில்லை. அதற்கு மாறான எனது கருத்து பல இடங்களில் பதிவாகி உள்ளது. இதை மறுப்பதற்கு பத்திரிகை எடுத்து வர வேண்டாம். பத்திரிகைகள் வேண்டுமென்றே தவறான செய்திகளை வெளியிட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.
2) இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று நான் எங்கேயும் கூறியதில்லை. இனப்படுகொலையை குற்றவியல் ரீதியாக நிறுவுவதற்கு இன்னொரு கூறு (ingredient) தேவை என்றே கூறியிருக்கிறேன். Mens Rea இற்கும் Dolus Specialis இற்கும் உள்ள வித்தியாசம் சட்டத்தரணி என்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் தெரியாமல் இருப்பது துரதிஷ்டமே.
3) மேலே (2) இல் சொன்னது இதற்கும் பொருந்தும்
4) ஏக்கிய ராஜ்ஜிய ஒற்றையாட்சி அல்ல, ஏக்கிய ரஜய தான் ஒற்றையாட்சி என்ற வித்தியாசம் கூட ஒரு சட்டத்தரணிக்குத் தெரியாதா?
நீங்கள் கூறிய மற்றைய விடயங்கள் வெறும் அவதூறுகளே. அவற்றிற்குப் பதில் வழங்கத் தேவையில்லை. கலப்புப் பொறிமுறையை உள்ளக விசாரணை என்று கூறும் உங்களது கருத்தைக் குறித்து யாரை நொந்து கொள்வது? எமது நாட்டின் கல்விக் கட்டமைப்பையா? . மீண்டும் சொல்கின்றோம் ‘பேப்பர் கட்டிங்’அரசியல் செய்து மக்களைத் தவறாக வழிநடத்துவது தவறு என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இரசித்த.... புகைப்படங்கள்.
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கிருபன்
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!
இந்திய தூதுவருக்கும் ரெலோவுக்குமிடையே சந்திப்பு!
September 13, 2025
கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (11) இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர்.
அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார்.
அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
https://www.ilakku.org/meeting-between-indian-ambassador-and-telo/
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து நடை பயணம்
September 13, 2025
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர்.
அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.
பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர்.
https://www.ilakku.org/walking-tour-from-mullaitivu-in-support-of-mannar-wind-farm-protest/
சிரிக்க மட்டும் வாங்க
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
கொஞ்சம் ரசிக்க
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்தாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை: வட கொரியா குறித்து ஐ.நா. அறிக்கை
13 Sep, 2025 | 01:08 PM
வட கொரியாவில், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள், அந்நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளன.
தென்கொரியாவின் பிரபல 'கே-டிராமாக்கள்' (K-Dramas) உட்பட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களை விநியோகித்ததற்காக, பல வட கொரியர்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் ஜேம்ஸ் ஹீனன் தெரிவித்தார்.
இந்த 14 பக்க அறிக்கை, 2014 முதல் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அனுமதியளித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்; தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, வட கொரியாவில் மனித உரிமைகள் எந்த அளவுக்கு மீறப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்": இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு
13 Sep, 2025 | 12:06 PM
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடுகள் தீர்வை செயல்படுத்துவது குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், காசா போருக்கு அமைதியான தீர்வை ஏற்படுத்தும் "நியூயோர்க் பிரகடனம்" மீது வெள்ளிக்கிழமை (13) வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பின் முடிவுகளின் படி, தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்திருந்தன. எதிராக 10 நாடுகள் வாக்களித்திருந்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு, பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண "இரு- நாடுகள் தீர்வை" (Two-State Solution) செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இது காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், அதன் மூலமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியம் என்றும் கூறுகிறது.
அதேநேரம், இந்தத் தீர்மானம், ஒக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கிறது.
ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கவும், காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கவும் கோருகிறது.
ஐ.நா.வின் தகவலின்படி, 2023 முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் 64,750-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
அத்துடன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி : அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தார் கட்டார் பிரதமர்
13 Sep, 2025 | 09:48 AM
இஸ்ரேல் அண்மையில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் சந்திப்பு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலுக்குப், கட்டார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க்கில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்மொழிந்த புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிப்பதற்காக, டோஹாவில் நடைபெற்ற ஹமாஸ் சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல், காசாவில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்கா பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஏனைய நாடுகளுடன் இணைந்து கொண்டது.
டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தியடைந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் தனது கோபத்தை அவர் வெளிப்படுத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாது என்று கட்டாருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கட்டாரின் முக்கியப் பங்கையும் இந்தச் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக கட்டார் திகழ்வதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதன் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்கா கருதுகிறது.
ஹமாஸ் தலைவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தகர்க்கும் முயற்சி என கட்டார் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது.
இந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இராஜதந்திர சமநிலையைப் பேணுவதற்கான முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார இறுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கட்டாரை வளைகுடா பிராந்தியத்தில் ஒரு வலுவான நட்பு நாடாக வொஷிங்டன்கருதுகிறது, ஏனெனில் அமெரிக்காவின் அல் உதேத் விமானப்படைத் தளம் அங்கு அமைந்துள்ளது.
கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் காரணமாக அமெரிக்காவுக்கும் கட்டாருக்கும் இடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டார் பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
திருச்சியில் தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்யின் பிரசாரம்
13 September 2025
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மக்கள் பிரசாரம் இன்று திருச்சியில் ஆரம்பமாகியுள்ளது.
திருச்சி காந்தி சந்தை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை காண வந்த தொண்டர்கள் அவரது பிரசார பேருந்தை பின் தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார பேருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றுள்ளனர்.
https://hirunews.lk/tm/419953/vijays-campaign-is-flooded-with-volunteers