'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'
பெண் நிலவு உன்னைப் பார்த்து
வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ
கண்ணழகி உன்னைப் பார்த்த நானும்
வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ?
அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில்
அலைமோதுதே என்மனம் உன் விழிகளில்
அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம்
அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ?
வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும்
வாடாத மலராய் இருக்க மாட்டோமா
வாலிபம் தந்த காதல் மோகம்
வாசனை வீசி எம்மை அணைக்காதா?
மொழியும் உணர்வும் பின்னிய பந்தம்
விழியில் பேசிய அன்புச் சொந்தம்
வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம்
அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
'அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?'
https://www.facebook.com/groups/978753388866632/posts/32106754852306412/?
