Aggregator

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

3 days 22 hours ago
Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 03:11 PM குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219101

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

3 days 22 hours ago

Published By: DIGITAL DESK 3

03 JUL, 2025 | 03:11 PM

image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இன்று வியாழக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். 

இதற்கு முன்னரும் ஷானி அபேசேகர  இதே பதவியை வகித்து வந்த நிலையில், அரசியல் பழிவாங்களால் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்,  மீண்டும் அவருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்திற்கு முன்னர், ஷானி அபேசேகர  குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் பணிப்பாராக பதவி வகித்தார், அங்கு அவர் மூலோபாய புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/219101

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 days 22 hours ago
கில்லின் 2வது சதம், கைகொடுக்கும் ஜடேஜா: இந்திய அணி 400 ரன்களை கடக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 3 ஜூலை 2025, 02:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக நங்கூரமிட்டுள்ளனர். வலுவான ஸ்கோர் இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 3வது செஷனில் பல்வேறு முயற்சிகள் செய்தும் ஏதும் பலிக்கவில்லை. 125 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கில், 199 பந்துகளில் சதத்தை எட்டினார். லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த கில், தொடர்ந்து அடிக்கும் 2வது சதமாகும். தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் (25), நிதிஷ் குமார் ரெட்டி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால், கேப்டன் கில், ஜடேஜா ஜோடிதான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஹோம் ஓர்க்கில் வெற்றி சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர். கேஎல்.ராகுலை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் "ஹோம் ஓர்க்" செய்து வந்திருந்தனர். அவருக்குரிய வலையை சரியாக விரித்து அவரை தவறு செய்யத் தூண்டினர். ஆனால் ராகுல் அதற்குரிய வாய்ப்பை வழங்காமல் தவறு செய்யாமல் தவறான ஷாட்களை ஆடாமல் தவிர்த்தார். ஆனால், பவுன்ஸரில்தான் வலை விரிக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் கணிக்கவில்லை. வோக்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஆப்திசையில் போடப்பட்ட பவுன்ஸரை ராகுல் விளையாட முற்பட்டபோது பேட்டில்பந்து பட்டு க்ளீன் போல்டாகியது. ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால் கடந்த டெஸ்டில் 4வது வீரராகக் களமிறங்கிய கருண் நாயர், இந்த முறை 3வது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கருண் நாயர் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசினார். குறிப்பாக ஜோஷ் டங் ஓவரில் டி20 ஆட்டத்தைப்போன்று தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசி, ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான சராசரி வைத்திருக்கும் பிராட்மேனுக்கு அருகே 84 சராசரியில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது செஷனில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் இருவரும் கட்டுக்கோப்புடனே பேட் செய்தனர், தவறுகள் பெரிதாக செய்யாததால் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். ஆனால், கார்ஸ் பவுன்ஸரில் கருண் நாயர் அவ்வப்போது தடுமாறியதையும், பவுன்ஸரை ஹூக் ஷாட்டில் அடிக்காமல் திணறுவதையும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கண்டறிந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அரை சதம் அடித்ததை கொண்டாடுகிறார். கருண் நாயர் ஏமாற்றம் கருண் நாயரை பிரன்ட்புட் எடுத்து ஆடவைக்கும் வகையில் கார்ஸ் தொடர்ந்து பந்துகளை வீசினார், ஆனால் தனக்கு வலை விரிக்கப்பட்டுவிட்டது என்பதை கருண் நாயர் உணரவில்லை. கார்ஸ் திடீரென ஒரு பந்தை பவுன்சராக வீசவே, இதை கருண் நாயர் எதிர்பார்க்கவில்லை. இதனால் மார்புக்கு அருகே வந்த பந்தை பேட் வைத்து தடுக்கவே 2வது ஸ்லிப்பில் இருந்த ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கருண் நாயர் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கேப்டன் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் இருந்தது. 2வது செஷனில் கில், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். ஜெய்ஸ்வால் மெதுவாக ரன்களைச் சேர்க்க, கில் நிதானமாக பேட் செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்திய வீரர் கருண் நாயர் கில் பொறுப்பான பேட்டிங் முதல் டெஸ்டில்கூட கில், வேகமாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஷாட்களை அவ்வப்போது ஆடினார். ஆனால், இந்த டெஸ்டில் முதிர்ச்சியடைந்த டெஸ்ட் பேட்டர் போன்று மிகுந்த கவனத்துடன் டிபென்ஸ்ப்ளே செய்தார். இதனால் சுப்மன் கில் தவறு செய்யவைக்க இங்கிலாந்தின் திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது. 2வது சதத்தை நோக்கி நகர்ந்த ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கில்,ஜெய்ஸ்வால் கூட்டணி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். விக்கெட் சரிவு அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்தமுறை களமிறங்கியபோது, மிரட்சியுடனே இங்கிலாந்து வீரர்கள் பார்த்தனர். ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்புவரை சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு குறைவான ஓவர்கள் வழங்கப்பட்டநிலையில், பண்ட் வந்தபின் பஷீருக்கு கூடுதலாக ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் வழங்கினார். நிதானமாக பேட் செய்த சுப்மன் கில் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடக்கம். ரிஷப் பந்தை அடித்து ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் பஷீர் பந்தை நன்கு "டாஸ்" செய்து வீசினார். அதற்கு ஏற்றார்போல் ரிஷப் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பஷீர் வீசிய பந்தை லாங்ஆன் திசையில் ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கவே கிராலி அதை கேட்ச் பிடித்தார். ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். வோக்ஸ் பந்துவீச்சை சரியாகக் கணிக்காமல் பந்தை லீவ் செய்ய நிதிஷ் ரெட்டி முயன்றார். ஆனால் பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஆப்ஸ்டெம்பை பதம்பார்த்துச் சென்றது. நிதிஷ் ரெட்டியின் தவறான கணிப்பால்விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது. கில்-ஜடேஜா ஜோடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆனால், ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய கில், 3வது செஷசன் ஆட்டம் தொடங்கியதும் ரன் சேர்க்கும் விதத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடிக்க 125 பந்துகளை எடுத்துக்கொண்ட கில், அடுத்த 50 ரன்களை 74 பந்துகளில் எட்டினார். 6 பவுண்டரிகளையும் கில் அடித்து, ஸ்கோரை வேகமாக உயர்த்தி 199 பந்துகளில் சதம் அடித்தார். சுப்மான் கில்லுக்கு துணையாக ஆடிய ஜடேஜா, சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டினார், அவ்வப்போது இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தவறவில்லை. ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் களத்தில் உள்ளனர். புதிய பந்து நேற்று மாலை எடுக்கப்பட்டும் விக்கெட்டை இங்கிலாந்தால் வீழ்த்த முடியவில்லை, அதே பந்து 2வது நாளிலும் பயன்படுத்தப்படும் என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். இதில் கட்டுக்கோப்பாக பேட் செய்து 30 ஓவர்களை நகர்த்திவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்லக்கூடும். இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஜடேஜா, கில் கூட்டணி பேட் செய்தால், நிச்சயமாக 400 ரன்களை எட்டும். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் என இரு பேட்டர்கள் இருப்பதால், முதல் டெஸ்டைப் போன்று 400 ரன்களுக்கு மேல் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82z1zy600o

செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

3 days 22 hours ago
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்புகள் மைக்ரோசாப்டின் 228,000-க்கும் மேற்பட்ட உலகளாவிய பணியாளர்களில் 4%-க்கு சமமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று சுற்று பணிநீக்கங்களைத் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ளது. இதில் மே மாதத்தில் 6,000 பணியிடங்களைக் குறைப்பதாகக் கூறியது அடங்கும். அண்மைய ஆண்டுகளில், பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மைக்ரோசாப்ட் தரவு மையங்கள் மற்றும் சிப்களில் முதலீடு செய்வது உட்பட AI ஐ வளர்ப்பதில் தனது வணிகத்தை மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1437917

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

4 days 2 hours ago
இலங்கையில் புழுகும் அளவிற்கு இல்லை என்றே பாவிப்பவர்கள் கூறுகிறார்கள். ரெசிடென்ஷியல் பிளான் 15,000 ரூபாய் மாதக்கட்டணம் (118,000 இணைப்புக்கட்டணம்) வந்தாலும் வேகம் 75-150 Mbps இற்குள் மட்டுப்படுவதாகவே கூறுகிறார்கள் மழையாலும் interference வருகிறதாம் . Remote and suburb வாசிகளுக்கு பயனளிக்கலாம். SLT Fibre family 100Mbps unlimited (1000GB FUP ) 9,789ரூபாய்க்கும், SLT Fibre Boost 300 Mbps (2000 GB FUP) 19,600 ரூபாய்க்கும் இலங்கையில் கிடைக்கிறது. நான் boost தான் பாவிப்பது நல்ல வேகம். ஸ்டார்லிங்க்கின் வேகத்தையும் ஆரம்ப இணைப்புக்கட்டணத்தையும் பார்க்கும் போது அவ்வளவு பெறுமதியாக தெரியவில்லை

அர்ச்சுனாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

4 days 3 hours ago
அர்ச்சுனாவை நோக்கிப் பாயும் அம்புகள் அனைத்தும் மாலைகளாகி அவரை அலங்கரிக்கும் மர்மம் என்ன????🤔

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

4 days 3 hours ago
இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா! இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும். மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது. இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர். மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார். தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1437880

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

4 days 3 hours ago

New-Project-37.jpg?resize=750%2C375&ssl=

இலங்கையர்களுக்கு விசா இல்லாத நுழைவினை பரிசீலிக்கும் மலேசியா!

இலங்கை குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குவது குறித்து மலேசியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், இருதரப்பு சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றத்தை அதிகரிப்பதற்கான சக்திவாய்ந்த ஊக்கியாக இந்த திட்டம் செயல்படும்.

மலேசியாவின் சுறுசுறப்பான நகரங்கள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் வசீகரம் பல இலங்கையர்களுக்கு மறுக்க முடியாதது.

இதையொட்டி, மலேசிய சுற்றுலா அதிகாரிகள் இலங்கையிலிருந்து அதிகமான பயணிகளை வரவேற்க ஆர்வமாக உள்ளனர்.

மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்பு மூத்த பணிப்பாளர் நுவால் ஃபாதிலா கு அஸ்மி, இலங்கையர்களுக்கான விசா இல்லாத நுழைவை ஆதரிக்கும் விரிவான திட்டங்கள் ஏற்கனவே மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாகவும், இது ஒரு சரியான நேரத்தில் மற்றும் மூலோபாய முன்னேற்ற நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சி நிறைவேறுவதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகரிக்க இலங்கை அரசாங்கத்திடமிருந்து முறையான இராஜதந்திர கோரிக்கையை அஸ்மி ஊக்குவித்தார்.

தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மீட்சிக்கு சேவை செய்யும் வகையில் பயணக் கொள்கையை மறுவடிவமைப்பதற்கான பரந்த மலேசிய உத்தியை அவரது கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

இதேவேளை, மலேசிய சுற்றுலாத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான சர்வதேச ஊக்குவிப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுல்ஹெல்மி மொஹமட், 2024 ஆம் ஆண்டில் 58,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மலேசியாவிற்கு வருகை தந்ததாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது 122% அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

https://athavannews.com/2025/1437880

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

4 days 3 hours ago
எலோன் மஸ்க்கிற்கு நன்றி; இலங்கையில் ஸ்டார்லிங்க் அறிமுகத்திற்கு ரணில் பாராட்டு! இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய படியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் அணுகலை அனுமதித்ததற்காக பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார். ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்த செய்தியை புதன்கிழமை (02) அதிகாலை எலோன் மஸ்க் உறுதிப்படுத்தினார். இந்த சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார். https://athavannews.com/2025/1437906

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

4 days 4 hours ago
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை. அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2025/1437903

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

4 days 4 hours ago

New-Project-41.jpg?resize=750%2C375&ssl=

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 43 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரவு முழுவதும் கொந்தளிப்பான கடலில் காணாமல் போன 43 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

கிழக்கு ஜாவாவின் கெட்டாபாங் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (02) இரவு புறப்பட்ட ‘The KMP Tunu Pratama Jaya’ என்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படகில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் 14 லொறிகள் உட்பட 22 வாகனங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு முதல் இருளில் இரண்டு மீட்டர் (6.5 அடி) உயர அலைகளுடன் போராட்டத்துக்கு மத்தியில் தேடல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு துயரங்கள் பொதுவானவை.

அங்கு போக்குவரத்துக்காக படகுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

https://athavannews.com/2025/1437903

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

4 days 4 hours ago
வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு July 3, 2025 8:30 am வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர். எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

4 days 4 hours ago

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

July 3, 2025 8:30 am

வவுனியாவில் புதிதாக உருவாகிய உடற்பிடிப்பு நிலையம்! பொதுமக்கள் எதிர்ப்பு

வவுனியாவில் புதிதாக உடற்பிடிப்பு நிலையம்(ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா கண்டிவீதி மூன்று முறிப்பு பகுதியில் குறித்த உடற்பிடிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இது பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே வவுனியா மாகநகரசபை தலையிட்டு உடனடியாக இந்த நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த நிலையத்திற்கு வவுனியா மாநகரசபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

எனவே, குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/public-protests-over-newly-established-spa-center-in-vavuniya/

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

4 days 4 hours ago
18, 19 வயதுகளில் உள்ளவர்களுக்கு.... அதிவேக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த பெற்றோரை என்னவென்று சொல்வது.

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

4 days 4 hours ago
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன் Published By: DIGITAL DESK 3 03 JUL, 2025 | 10:15 AM தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். https://www.virakesari.lk/article/219063

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

4 days 4 hours ago

வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்

Published By: DIGITAL DESK 3

03 JUL, 2025 | 10:15 AM

image

தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். 

https://www.virakesari.lk/article/219063