Aggregator

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் உயிர்மாய்க்க முயன்று வைத்தியசாலையில்

2 days 22 hours ago
பப்ஜி விளையாட்டு தோல்வியால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வலி கிழக்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அகிப் சிவகுமார் சிகிச்சை பலனின்றி மரணமானார். நம்ம யாழ்ப்பாணம் இவன் போன்றவர்களை உறுப்பினராக்கிய மக்கள் முட்டாள்கள். Ilango Mahendra

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 23 hours ago
இது இலங்கையில் ஏற்படும் மூளைவறட்சியால் ஏற்பட்டதாக இருக்காதா ....? இள வயது தொழில்முனைவோர் முதல் கல்விமான்கள் வரை வெளிநாட்டிற்கு ஓடித்தப்பிக்கொண்டிருக்க வெளிநாடுகளுக்கு பிரயோசனமற்ற முதியவர்கள் தப்பிக்க வழியேதும் இன்றி நாட்டில் தேங்குவதால் இந்த நிலை ஏற்படக்கூடுமல்லவா ....? சடுதியான அதிகரிப்பு என்பது குடிமக்களின் பாரிய அளவிலான இடப்பெயர்வால் நடந்துள்ளதாகவே தெரிகிறது

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 23 hours ago
இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு! ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1451563

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

2 days 23 hours ago

New-Project-334.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், 

2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். 

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1451563

ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!

2 days 23 hours ago
கரீபியன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய மெலிசா! கரீபியன் முழுவதும் மெலிசா சூறாவளி தனது பேரழிவைத் தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழித்தது, சுற்றுப்புறங்களை வெள்ளத்தில் மூழ்கடித்தது மற்றும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியது. ஐந்தாவது வகை சூறாவளியால் தீவு நாடு நேரடியாக குறிவைக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை (29) ஜமைக்காவில் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது. இது பிராந்தியத்தில் இதுவரை அளவிடப்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றாகும். அங்கு குறைந்தது ஐந்து பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹெயிட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 20 பேர் இறந்தனர், தற்போது இரண்டாம் வகை புயலாக இருக்கும் மெலிசா புயல் அந்தப் பகுதியைக் உருகுலைத்துள்ளது. ஜமைக்காவில், மக்கள் கூரைகள் கிளித்து ஏறியப்பட்ட வீடுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாமல் தீவு நாடு முழுவதும் பேரழிவனை சந்தித்துள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் குறிப்பிட்டார். மருத்துவமனைகள், நூலகங்கள், காவல் நிலையங்கள், துறைமுக வீடுகள் மற்றும் பிற நகர்ப்புற உள்கட்டமைப்புகளுடன் “80-90% கூரைகள் அழிக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். ஜமைக்காவின் அரச தலைவரான மன்னர் சார்லஸ், ஜமைக்காவிலும் கரீபியன் முழுவதும் மெலிசாவால் ஏற்பட்ட சேதத்தில் “ஆழ்ந்த கவலை” மற்றும் “மிகவும் வருத்தம்” அடைந்துள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தார். புயல் மண் சரிவுகளையும் ஏற்படுத்திய ஜமைக்காவில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பின்னர், மெலிசா வடக்கே கியூபாவிற்கு மூன்றாம் வகை புயலாக நகர்ந்து, மணிக்கு 115 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையைக் கொண்டு வந்து, தீவின் தென்கிழக்கைத் தாக்கியது. புதன்கிழமை இரவு, புயல் மத்திய பஹாமாஸிலிருந்து 105 மைல் (170 கிமீ) தொலைவில் இருந்தது, மேலும் இரவு முழுவதும் பஹாமாஸ் பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மெலிசா சூறாவளி மணிக்கு 100 மைல் (155 கிமீ/மணி) வேகத்தில் காற்றுடன் வடகிழக்கு நோக்கி நகர்ந்தது. அது பெர்முடாவை நோக்கி மேலும் வடக்கு நோக்கி நகரும் முன் அங்கு ஆபத்தான புயல் அலை எதிர்பார்க்கப்படுகிறது. டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளுக்கு வெப்பமண்டல புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. மேலும் மெதுவாக நகரும் சூறாவளியின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜமைக்காவில், மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. நாட்டின் முக்கால்வாசிப் பகுதி ஒரே இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெலிசா வட அமெரிக்காவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸை நெருங்கும்போது அது இன்னும் ஒரு வலிமையான வெப்பமண்டல சூறாவளியாக இருக்கும். சூறாவளியின் பின்னர் தேவையின் அளவை மதிப்பிடுவதற்காக அமெரிக்கா ஜமைக்காவிற்கு ஒரு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புவதாக கூறியுள்ளது. https://athavannews.com/2025/1451566

ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது!

2 days 23 hours ago
ஒக்டோபர் 19, பிரான்ஸ்... லூவர் அருங்காட்சியகத்தில் என்ன நடந்தது! 2025 அக்டோபர் 19 ஆம் திகதி உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத நாள். உலகம் முழுவதும் ஒரே விடயம் பேசுபொருளாக மாறியது. பிரான்சின் தலைநகர் பேரிசில் அன்று மக்கள் தொகையும் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் பேரிஸ் பிரான்சின் தலைநகரமாக இருப்பது மட்டுமல்ல அது வியாபார நகரமாகவும் சுற்றுலா தளங்கள் நிறைந்த இடமாகவும் காணப்படுவதாலாகும். அன்று மக்கள் கூட்டம் இன்னும் அதிகம், சாலையில் வாகனங்கள் ஒரு மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் மாத்திரம் பாதையை விட்டு விலகி அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் சுவருடன் இணைந்த வகையில் நிறுத்தப்படுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த கட்டிடத்தில் இருந்து அலாரம் ஒலி கேக்க அங்கிருந்த மக்கள் அங்கும் இங்குமாக ஓடுகின்றனர். பொலிஸார் , தீயணைப்பு படையினர் என அந்த இடமே பரபரப்பானது. இதை அடுத்து நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்படி அங்கு என்ன நடந்தது? அது என்ன கட்டிடம்? ஏன் இந்த விடயம் உலகம் முழுவது இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது? உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த பெறுமதியான பல பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்கட்சியம்தான் பிரான்ஸ் தலைநகர் பேரிசில் அமைந்துள்ள லூவர் அருங்காட்சியகம். கடந்த 19 ஆம் திகதி இங்கு ஒரு கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்த செய்தி தீயாக உலகமெங்கும் பரவியது. லூவர் அருங்காட்சியகம் ஏன் இவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது, கி.பி 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் பிலிப் எனும் மன்னன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒரு மிகப்பெரிய கோட்டையை உருவாக்குக்கிறார். ஆனால் அவருக்கு பின்னர் வந்த மன்னர்கள் அந்த கோட்டையை இடித்து மிகப்பெரிய மாளிகையை அந்த இடத்தில் உருவாக்குகின்றனர். அரசர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்ட இந்த மாளிகை, சில ஆண்டுகளின் பின்னர் கைவிடப்பட்டு வெறுமையாக காணப்பட்டது. அதன் பின் பிரான்சிய புரட்சியின் பின்னர் இந்த மாளிகை மத்திய கலை அருங்காட்சியம் எனும் பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்படுகிறது. அதிலிருந்து இன்றுவரை உலகிலேயே மிகப்பெரிய அருங்கட்சியாகமாக லூவர் அருங்கட்சியகம் காணப்படுகிறது. இதனை ஒரு சிறிய கிராமம் என்றும் சொல்லலாம். காரணம், இங்கு காணப்படும் பொருட்களை பார்வையிட நமக்கு 100 நாட்களுக்கும் அதிகமான காலம் தேவைப்படும். அந்தளவுக்கு அதிகமான பாரம்பரிய விலையுயர்ந்த பொருட்கள் இங்கு காணப்படுகின்றன. இங்குதான் உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் காணப்படுகிறது. அதுமட்டுமா? 9000 வருடங்கள் பழமையான மனித சிலை, அரசர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த ஆபரணங்கள் , உலகிலேயே மிக உயரமான ஒவியம் , வைர வைடூரியங்கள் இவ்வாறு விலைமதிப்பற்ற ஏராளமான பொருட்கள் இங்குதான் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு வளமிக்க அருங்கட்சியகத்தில் ஏற்கனவே மோனலிசா ஓவியம் களவாடப்பட்டு 2 வருடங்களின் பின்னர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தற்போது மீண்டும் அங்கு ஒரு பெரிய கொள்ளை சம்பவம் இடம்பெறுள்ளது. ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பார்வையாளர்களுக்காக லூவர் அருங்காட்சியத்தில் கதவுகள் திறக்கப்படுகின்றன. பார்வையாளர்கள் மெதுவாக உள்ளே நுழைகின்றனர். இதையடுத்து அரை மணிநேரத்தில் ஒரு பெரிய கனரக வாகனம் அந்த அருங்காட்சியத்தில் டெனோன் பிங் எனும் பகுதியில் அந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. அப்பகுதியில் கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த வாகனத்தில் இருந்து மெதுவாக ஒரு மின் உயர்த்தி நான்கு நபர்களுடன் மேலே நகர்கிறது. அந்த நான்கு நபர்களும் கட்டிட வேலை செய்யும் நபர்கள் அணியும் சீருடைகளை அணிந்திருந்தனர். இதனால் இவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அதன்பின்னர் முதலாம் தளத்திற்கு சென்றவர்கள் அங்கிருந்த கண்ணாடிக்கதவினை வெட்டி மெதுவாக உள்ளே நுழைகின்றனர். மெதுமெதுவாக அடுத்தடுத்த கதவுகளை உடைத்து உள் நுழைய அங்கிருந்த அலாரம் அடிக்க ஆரம்பிக்கிறது. அங்கிருந்த பாதுகாவலர்கள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடுகின்றனர். அலாரம் அடித்த அடுத்த நிமிடத்திலேயே அந்த பகுதிக்கு சென்ற பாதுகாவலர்கள் அங்கு கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் அங்கு இருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனையும் அவதானிக்கின்றனர். அதன்பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசரணைகள் நடைபெறும்போது அங்கிருந்த கொள்ளையர்களின் கனரக வாகனம் தீப்பிடித்து எறிகின்றது. என்னதான் நடந்தது என பார்ப்பதற்கு பொலிஸார் அங்கிருந்த cctv காட்சிகளை அவதானிக்கின்றனர். அருங்காட்சியகத்தில் ஏற்கனவே கட்டிட வேலைப்பாடுகள் இடம்பெறும் நிலையில் இதனை அறிந்துகொண்டு அவர்களைப்போலவே வந்த கொள்ளையர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த அரசர்களின் விலையுயர்ந்த ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பி செல்கின்றனர். அவர்கள் வந்த அந்த வாகனத்தை தீயில் எறிந்துவிட்டது, இவ்வாறிருக்க எவ்வாறு அவர்கள் தப்பி சென்றனர் என்ற கேள்வி எழுகிறது? ஆம், அவர்கள் வந்த அந்த வாகனத்திற்கு அவர்களே தீ வைத்துவிட்டு தமது ஆடைகளை மாறிவிட்ட அங்கிருந்த வேறு இரு மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுள்ளனர். அவர்கள் அருங்காட்சியகத்தில் இருந்த 8 நகைகளை மாத்திரமே கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அதில் மூன்றாம் நெப்போலியன் மனைவியின் முத்து கிரீடம், முதலாம் நெப்போலியனின் மரகத ஆபரங்கள் என சுமார் 100 மில்லையன் அமெரிக்க டொலர் பெறுமதியான நகைகளேயே அவர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். சுமார் 4 முதல் 7 நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வளவு பெரிய அருங்காட்சியகம் , ஆனால் அங்கு எவ்வாறு இப்படி ஒரு கொள்ள சம்பவம் இடம்பெற்றிருக்கும்? அருங்காட்சியத்தில் பார்வையாளர்கள் அதிமாக இருந்ததமையினாலும் பாதுகாவலர்கள் மிக குறைவாக இருந்தமையினாலுமே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த அருங்காட்சியக நிர்வாகம் கூறுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தை பார்க்கும் பொழுது இது மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் குறித்தும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டடுள்ளனர். இருப்பினும் கொள்ளையிடப்பட்ட ஆபரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே கொள்ளையிடப்பட்ட மோனலிசாவின் ஓவியம் போல கொள்ளையிடப்பட்ட இந்த நகைகளும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். https://athavannews.com/2025/1451534

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 days ago
யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..! Vhg அக்டோபர் 30, 2025 யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம். நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது. ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.? அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது? இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும். அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும் ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர். இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு. தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு. இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார். இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள். இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது. அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர். இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர். எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது. -பா.அரியநேத்திரன்- https://www.battinatham.com/2025/10/35.html

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

3 days ago
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். https://www.battinews.com/2025/10/blog-post_800.html

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

3 days ago

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !

By SRI

October 30, 2025

571346790_1310014764501283_1280310826655287925_n.jpg

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

572097284_1310014724501287_2998601111796627541_n.jpg

https://www.battinews.com/2025/10/blog-post_800.html

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

3 days ago
சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். "ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். நாம் 800 - 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது. இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?" பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். "இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது. இது எங்கு வளர்ந்து வருகிறது? இப்போது அரசியல் கட்சிகளுக்குள் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். தலைவர்கள் வருகிறார்கள். தனிப் பட்டியல்களைத் தயாரித்துத் தேர்தல்களில் போட்டியிட்டு அது ஒரு அரசியல் பொறிமுறையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் இது அரசியலின் பாதுகாப்பாக இருந்தது. இப்போது அது அரசியல் ஆதிக்கம். ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு விதைகள் பரவியுள்ளன. இது நீண்ட காலமாக அரசியல் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்து வருகிறது." இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என்றும் கூறினார். பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார். அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார். ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார். "இது அவர்களுக்குச் சொந்தமான நாடு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்..." என்று கூறிய ஜனாதிபதி, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்கு மதத் தலைவர்களின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்த அபாயம் குறித்துச் சமூகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்றும், பொறுப்பான ஊடகவியலில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கும் இந்தப் பணிக்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஆதரவு தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்." போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார். "நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." https://adaderanatamil.lk/news/cmhd2egbk01auqplp01fasoid

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

3 days ago

சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். 

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

"ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். 

நாம் 800 - 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது. இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. 

எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. 

அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?" 

பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். 

"இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது. இது எங்கு வளர்ந்து வருகிறது? இப்போது அரசியல் கட்சிகளுக்குள் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். தலைவர்கள் வருகிறார்கள். தனிப் பட்டியல்களைத் தயாரித்துத் தேர்தல்களில் போட்டியிட்டு அது ஒரு அரசியல் பொறிமுறையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் இது அரசியலின் பாதுகாப்பாக இருந்தது. இப்போது அது அரசியல் ஆதிக்கம். ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு விதைகள் பரவியுள்ளன. இது நீண்ட காலமாக அரசியல் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்து வருகிறது." 

இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என்றும் கூறினார். 

பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார். 

அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். 

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார். 

ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். 

இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார். 

"இது அவர்களுக்குச் சொந்தமான நாடு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்..." என்று கூறிய ஜனாதிபதி, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்கு மதத் தலைவர்களின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

இந்த அபாயம் குறித்துச் சமூகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்றும், பொறுப்பான ஊடகவியலில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கும் இந்தப் பணிக்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஆதரவு தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

"நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்." 

போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார். 

"நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்."

https://adaderanatamil.lk/news/cmhd2egbk01auqplp01fasoid